சமீபத்திய பதிவுகள்

கலவரத்தை ஒடுக்க கூட்டு நடவடிக்கை:ஒரிசா அரசு கலைப்பு இல்லை-மத்திய அரசு முடிவு

>> Monday, October 6, 2008

lankasri.comஒரிசா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் விசுவ இந்து பரிஷத்தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி சுவாமி படுகொலை செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது.

மாவோயிஸ்ட் தீவிர வாதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த படுகொலையை செய்திருப்பது தெரிய வந்ததால் ஒரிசாமாநில பழங்குடி இன மக்கள் கிறிஸ்தவர்களை குறி வைத்து தாக்கினார்கள். இதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

ஒரிசாவில் உள்ள கந்தமால் மாவட்டத்தில் தான் கலவரம் அடக்க முடியாதபடி இருந்தது. வன்முறையில் ஈடுபட்ட சுமார் 900 பேர் கைதானார்கள். 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு துணை நிலை ராணுவத்தை அனுப்பியது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. என்றாலும் ஒரிசாவில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதான தாக்குதல் அடிக்கடி நடந்தபடி உள்ளது.

கலவரத்தை கட்டுப் படுத்தாவிட்டால் அரசியல் சட்ட பிரிவு 355 மற்றும் 356-ன் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஒரிசா மாநில அரசை மத்திய அரசு எச்சரித்தது. அதன் பிறகும் ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. கலவரக்காரர்களை அடக்க நவீன் பட்நாயக் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

இந்த நிலையில் வரும் 9-ந் தேதி கந்தமாலில் விசுவ இந்து பரிஷத்சார்பில் மாபெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கந்தமாலில் பதற்றம் நிலவுகிறது. அங்கு ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.

ஒரிசாவில் சில மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் இன்னமும் சகஜநிலைக்கு திரும்ப வில்லை. எனவே ஒரிசாவில் நவீன்பட்நாயக் ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தோழமை கட்சித்தலைவர்கள் லல்லுபிரசாத் யாதவ், ராம்விலாஸ் பஸ் வான் ஆகியோரும் ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இவர்கள் கடந்த சில தினங்களாக மத்திய அரசுக்குகடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஒரிசா அரசுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உயர் அதிகாரிகளை ஒரிசாவுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளது.

கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்ற போதிலும் ஒரிசா அரசு மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை. ஒரிசாவுக்கு மத்திய உள்துறை கடும் எச்சரிக்கை வார்த்தைகளுடன் எழுதிய கடிதமே போதும் என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே இப்போதைக்கு ஒரிசா அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது என்று தெரிகிறது.

இதற்கிடையே வரும் 13-ந் தேதி தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் கூட்டி உள்ளார். அதில் ஒரிசா கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைத் தொடர்ந்து ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தும் சூழ்நிலை வருமா என்பது தெரிய வரும்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223287826&archive=&start_from=&ucat=1&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP