சமீபத்திய பதிவுகள்

அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி-பராக் ஒபாமா பேச்சு

>> Wednesday, November 5, 2008

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பராக் ஒபாமா சிகாகோவில் நடந்த கூட்டத்தில் தனது லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-அமெரிக்கர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை இந்த உலகுக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தும் வகையில் எனது தேர்தல் வெற்றி அமைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் எங்களை உருவாக்கியவர்களின் கனவு நனவாகி இருக்கிறது.நான் எப்போதும் சவால்களை நேர்மையுடன் எதிர்கொள்வேன்.இனி அமெரிக்காவில் நிறைய மாற்றங்கள் வரும்.

இந்த வெற்றி அமெரிக்கா உண்மையாகவே ஒருங்கிணைந்த நாடு என்பதை காட்டுகிறது.இந்த வெற்றி அமெரிக்க மக்களின் குரல்.நான் எப்போதும் நேர்மையுடன் இருப்பேன்.எந்த சவாலையும் நேர்மையுடன் சந்திப்பேன்.இது சவால்களை சந்திப்பதன் தொடக்கம்.

என் மனைவியும்,குழந்தைகளும் இல்லாமல் இந்த வெற்றி இல்லை.நான் அமெரிக்காவை என் உயிராக நேசிக்கிறேன்.அதன் வளர்ச்சிக்காக தொடர்ந்து கடுமையாக உழைப்பேன்.

தற்போது நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.அதை சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பேன்.

இந்த நேரத்தில் நான் ஈராக் பாலைவனங்களிலும்,ஆப்கானிஸ்தான் மலைப் பகுதிகளிலும் நாள் முழுவதிலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் துணிச்சல் மிகுந்த அமெரிக்க வீரர்களை ஒரு கணம் நினைவு கூறுகிறேன்.அவர்கள் நமக்காக செய்து வரும் தியாகங்களுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.அவர்களின் நலன்களை மேம்படுத்தவும் விரிவான திட்டம் வகுக்கப்படும்.

இவ்வாறு பராக் ஒபாமா பேசினார்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1225875599&archive=&start_from=&ucat=1&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP