சமீபத்திய பதிவுகள்

தமிழ்மணம் சூடான இடுகைக்கு நேற்று மூனாவது நாள் பால்!மரண வாழ்த்துக்கள்

>> Thursday, March 20, 2008

தமிழ்மண்ம் சூடான இடுகைக்கு நேற்று பால் தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு பாக்கறீங்கலா.இது ஒன்னும் இல்லை முதல்ல சொன்ன "தமிழ்மண்ம் சூடான இடுகைக்கு நேற்று பால்" இந்த தலைப்புக்கு அர்த்தம் நேற்று தமிழ் மணத்தில் இருந்து சுடான இடுகை நீக்கப்பட்டா மூனாவது நாள்.அதனால நேற்று அதுக்கு பால்.
 
சரி அது என்ன "மரண வாழ்த்துக்கள்"அப்படின்னு கேட்டா எப்பவும் பிறந்த வாழ்த்து சொல்லுவோம் ஆனால் பிறந்ததே மணிதனுக்காக மரிக்கும்படி வந்தவர் இயேசு கிறிஸ்து.அவர் மரணித்த நாளும்,அவர் உயிர்த்தெழுந்த நாளும் உன்மையயக வாழ்த்த வேண்டிய நாட்கள்.சரி அதெல்லாம் இருக்கட்டும் இயேசு சாகவே இல்லை அவர் அப்படியே உயிரோட சொர்கத்துல கடவுளிடம் இருக்கார்ன்னு முஸ்லீகளில் ஒரு சில பிரிவினர் நம்பறாங்க.அவங்க நம்பறது சரியா அப்படின்னு இப்ப பாக்கலாமா?
 
 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1கொரிந்தியர்.1:1

தமிழ் முஸ்லீம்களுக்கு புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்

 

தமிழ் முஸ்லீம்களுக்கு புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்
 
ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா

இயேசுவின் மரணம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபாரம். இந்த அஸ்திபாரத்தைப் பற்றி குர்-ஆன் வித்தியாசமான விவரங்களை தருகிறது, அதை அலசுவது தான் இக்கட்டுரை. தமிழில் சில வரிகள் புரியவில்லையானால், ஆங்கிலத்தில் படிக்கும்படி வேண்டுகிறேன். இக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்.

ஆசிரியர் சிறுகுறிப்பு: டேவிட் உட் (David Wood) என்ற இவர் ஒரு முன்னாள் நாத்தீகர். ஆனால், இப்போது இயேசுவை விசுவாசிப்பவர். இவரின் சிறப்பம்சம் "நாத்தீகர்களோடு வாதம் புரிவது". முக்கியமாக infidels.org என்ற நாத்தீக தளத்தின் கட்டுரைகளுக்கு இவர் பதில்(http://answeringinfidels.com/) எழுதுகிறார். தற்போது, "Problem of Evil" என்ற தலைப்பில் இவர் Ph.D செய்துக்கொண்டு இருக்கிறார். இவர் சில இஸ்லாமிய காட்டுரைகளும் எழுதியுள்ளார். இந்த தற்போதைய கட்டுரை Answering Islam.Org என்ற தளத்தில் படித்து, அதை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டேன். அவர் உடனே கொடுத்ததுமன்றி, Answering-islam.org   தளத்தில் உள்ள அவர் எல்லா கட்டுரைகளுக்கும் அனுமதி அளித்துள்ளார். அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் ஒரு இஸ்லாமியரோடு
முகமது யார் – Who is Muhammad" என்ற தலைப்பில் புரிந்த விவாத DVD amazon ல் கிடைக்கிறது. மற்றும் அவருடைய மற்ற விவாதங்கள், இஸ்லாமிய கட்டுரைகள், மறுப்புக்கள், நாத்தீகரோடு புரிந்த நேரடி விவாதங்கள் வீடியோக்களை கீழ்கண்ட தளங்களில் காணலாம்.

1. http://www.answering-islam.org/Authors/Wood/index.htm
2. http://www.problemofevil.org/
3. http://answeringinfidels.com/
4. http://www.answeringmuslims.com/




ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா

அல்லாவைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் உண்மையில் இஸ்லாம் என்ன போதிக்கிறது


ஆசிரியர்: David Wood


கிட்டத்தட்ட் இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணம் மற்றும் அவர் உயிர்த்தெழுதலைப் பற்றி சொல்லிக் கொண்டுவருகிறார்கள். இந்த இரண்டு கோட்பாடுகளையும் இஸ்லாம் தள்ளிவிட்டது மற்றும் சிலுவை நேரத்திலும், அதன் பிறகும் என்ன நடந்தது என்று வேறு வகையான நிகழ்ச்சி நிரலை சொல்கிறது. எப்படி இருந்தாலும், இஸ்லாம் தன் சொந்த விளக்கத்திகாக அதிக விலை செலுத்தியுள்ளது. அவர்களின் இந்த விளக்கம் "இறைவனை ஒரு கொடுமையான ஏமாற்றுக்காரராக காட்டுகிறது" மற்றும் தீர்க்கதரிசிகளின் சரித்திரத்திலேயே இயேசு "படுதோல்வி" அடைந்தவராக காட்டுகிறது. இப்படி இருந்தும், "அல்லா உண்மையுள்ளவர்" மற்றும் இயேசு அல்லாவின் தீர்க்கதரிசிகளில் எல்லாம் மிகச்சிறந்தவர் என்று மதிக்கப்படுகிறார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அவர்களின் இந்த வாதங்கள் அனைத்தும் குறையுள்ளது, ஏனென்றால், இஸ்லாமிய கோட்பாடுகள் அனைத்தும் பெரும்பான்மையாக வாய்வழி மரபுகளாகவே வருகிறது.

Allah starts Christianity…. By Accident

(அல்லா தற்செயலாக உருவாக்கிய கிறிஸ்தவம்)



இஸ்லாமிய போதனைகளை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், கிறிஸ்தவத்தை அல்லா உருவாக்கியதாகவும், மட்டுமல்ல, கிறிஸ்தவத்தை உலகத்தின் மிகப்பெரிய அதிகாரமுடைய மதமாக மாற்றியதாகவும் நாம் கவனிக்க முடியும். இந்த உண்மை எல்லாருக்கும் ஏதோ புதுமையாக தோன்றும், நான் சொல்வதை நம்புங்கள், இஸ்லாமியர்களோ "கிறிஸ்தவம் ஒரு தவறான மதம்" என்று சொல்கிறார்கள். கிறிஸ்தவம் மனிதர்களால் மாற்றப்பட்டதால், அது ஒரு பிழையான மதம் என்று இஸ்லாமியர்கள் பதில் சொல்கிறார்கள். இதே செய்தியைத்தான் அல்லா மரியமின் மகனான இயேசுவிற்குச் சொன்னார்.

இயேசுவை பின்பற்றியவர்கள்(சீடர்கள்) இப்போதுள்ள இஸ்லாம் போல ஒரு கோட்பாட்டை நம்பியதாக ஒரு சிறு ஆதாரமும் இல்லை. இது ஒரு புறமிருக்க, இஸ்லாம் படி, கிறிஸ்தவத்தை திருத்தியதே அல்லா தான் (According to Islam, Christianity was corrupted by Allah himself) இஸ்லாம் ஏன் நம்மை இப்படி நம்பச்சொல்கிறது என்று புரிந்துக்கொள்ளவேண்டுமானால், நாம் சில உண்மைகளை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

FACT #1: இயேசு அல்லாவின் தூதர் என்றும், இஸ்லாமின் தீர்க்கதரிசி(நபி) என்றும் குர்-ஆன் கூறுகிறது:

இயேசு பிறந்த குழந்தையாக இருந்த நாளிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை(Islamic Theology) போதித்துவந்தார் என்று குர்-ஆன் அதிகாரம்(சூரா) 19 சொல்கிறது.

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்று கூறி(அரற்றி)னார். (19:23) (அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து "(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்" என்று அழைத்து கூறினான். (19:24) "இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். (19:25)

"ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்" என்று கூறும். (19:26)

"நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (19:30)

"இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். (19:31)

"என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (19:32)

"இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது. (19:33) [2]


இயேசு தன் வாழ்நாள் முழுவதும், அதாவது அல்லா தன்னை தன் அளவில் உயர்த்திக்கொள்ளும்வரை இந்த இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்துவந்தார். குர்-ஆன்படி இயேசு கொண்டுவந்த இஞ்ஜில் என்ற வேதத்தின் செய்தியும், தனக்கு முன் வந்த தீர்க்கதரிசிகள் கொண்டுவந்த செய்தியும் வெவ்வேறானவை அல்ல. இயேசு அல்லாவின் ஊழியனாகவும், நபியாகவும் இருந்து இஸ்லாமை போதித்தார்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.(42:13) [3]

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (43:59) இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது "மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்" என்று கூறினார். (43:63) நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி). (43:64) [4]

ஆக, இயேசு தான் பிறந்ததிலிருந்து, வானத்திற்கு அல்லாவிடம் எடுத்துக்கொள்ளப்படும் காலம் வரை, கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் இஸ்ரவேல் மக்களுக்கு இஸ்லாமை போதிப்பதில் செலவழித்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு கொண்டுபோகப்படும் முன்பு வரை அவருடைய இஸ்லாமிய பிரச்சாரம் ஓரளவிற்கு வெற்றிப்பெற்றதாக இருந்தது என்றுச் சொல்லலாம். ஏனென்றால், அவரை பின்பற்றுகிற பல சீடர்கள் அவருக்கு இருந்தார்கள் என்பதை நாம் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

FACT #2: இயேசு பல சீடர்களை சம்பாதித்தார் என்று குர்-ஆன் சொல்கிறது.

இயேசு தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாமை போதித்தபடியால், அவருடைய ஆரம்பகால சீடர்களுக்கு அவர் கொடுத்த செய்தி, இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளைச் சுற்றியே இருந்திருக்கும். இப்போதுள்ள முஸ்லீம்கள் போல அவருடைய சீடர்கள் போதிக்கப்பட்டு(அ) கற்றுக்கொடுக்கப்பட்டு இருப்பார்கள். இதைத் தான் இஸ்லாம் (குர்-ஆன்) இயேசுவைப்பற்றி கீழ்கண்டவாறுச் சொல்கிறது:

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர். (3:52) [5]

"என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்" என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், "நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள். (5:111) [6]

அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர். (57:26)[7]

குர்-ஆன் சொல்வது உண்மையானால், இயேசு குறைந்தபட்சம் சில இஸ்ரவேல் மக்களையாவது இஸ்லாமுக்கு மாற்றியிருப்பார். ஆனால், இப்படிப்பட்ட மாற்றம் நடந்தது என்று ஒரு சரித்திர ஆதாரமும் இல்லை. இருந்தாலும் விவாதத்திற்காக வேண்டி, இயேசுவின் இஸ்லாமிய போதனைகளை விசுவாசித்த முதல் நூற்றாண்டு யூதர்கள் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று நாம் எண்ணிக்கொள்வோம். இப்படிப்பட்ட கருத்து (Assumption), இஸ்லாமுக்காக வாதாடுபவர்களுக்கு எதிராக பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்று இனி நாம் பார்க்கப்போகிறோம்.

FACT #3: இயேசுவின் போதனையைக்கேட்டு முதல் நூற்றாண்டு யூதர்கள் இஸ்லாமியர்களாக மாறியிருந்தாலும், அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

இயேசுவின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் ஒரு தெளிவான கேள்வியை எழுப்பக்கூடியதாக உள்ளது. முதல் நூற்றாண்டில் முஸ்லீம்கள் இருந்தார்கள் என்பதை ஏன் நாம் ஒரு முறைகூட கேள்விப்பட்டதே இல்லை? இயேசுவை முதல் நூற்றாண்டில் பின்பற்றியவர்ககளைப்பற்றி அதிகபடியான சரித்திர விவரங்கள் இன்று நம்மிடம் உள்ளது, ஆனால், முஸ்லீம்கள் பற்றிய ஒரு ஆதாரமும் ஏன் நம்மிடம் இல்லை? இயேசுவை பின்பற்றிய கிறிஸ்தவ அல்லாத மார்க்க(இஸ்லாம் சம்மந்தப்பட்ட) எல்லா விவரங்களையும் கிறிஸ்தவம் துடைத்துவிட்டது என்று இஸ்லாமுக்காக வாதாடுபவர்கள் இதற்கு பதிலாக சொல்வார்கள். ஆனால், அவர்களின் இந்த பதில் வெறும் அறிவீனமான வாதமே ஒழியவேறில்லை. கிறிஸ்தவத்திற்கு முந்தைய நம்பிக்கைகளைச் சொல்லக்கூடிய கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவம்-அல்லாத நிறைய ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், இந்த இரண்டு விதமான ஆதாரங்களிலும்(Christian and Non-Christian Source), ஒரு "முஸ்லீம்-கிறிஸ்தவன்" இருந்ததாக ஒரு தகவலும் இல்லை. ஒன்று மட்டும் நாம் நிச்சயமாகச் சொல்லலாம், அதாவது "இயேசுவின் மரணம்" பற்றிய விவரம் அந்த காலத்து அதிகாரிகளுக்கு தெரிந்தவிவரமாக இருந்தது. மற்றும் இயேசுவின் ஆரம்பகால சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் போன்றவர்களுக்கு கூட இயேசு தங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்றும் பிறகு உயிர்த்தெழுந்தார் என்றும் அவர்கள் நம்பினர். (இது மட்டுமல்ல இயேசுவின் சீடர்கள் இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்பினர், இது இப்போதைக்கு என் கட்டுரையின் கருப்பொருள் அல்ல) இயேசு மரித்தார் மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நம்பினார்கள் என்று புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களிலிருந்தும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலிருந்தும் நாம் தெரிந்துக்கொள்கிறோம். பவுல் எழுதிய கடிதங்கள் கூட இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதல் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதை காணலாம். மட்டுமல்ல, இயேசுவிற்கு பிறகு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை நாம் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் காணலாம். எனவே இயேசுவின் சீடர்கள்(அப்போஸ்தலர்கள்) காலத்தில் நிலவிய அவர்களின் நம்பிக்கைக்கு இது ஒரு அத்தாட்சியாகக் கொள்ளலாம்.

நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்[8]

இயேசுவின் சீடர்களின் நம்பிக்கையைப் பற்றிச் சொல்கின்ற புதிய ஏற்பாடு அல்லாத மற்ற கிறிஸ்தவ ஆதாரங்களும் (Early Christian Writings) இன்று நம்மிடம் உள்ளது.

உதாரணத்திற்கு: அப்போஸ்தர் பேதுரு "ரோம பேராயராக" நியமித்த "ரோம் கிளமண்ட்(Clement of Rome)" என்பவர் கூட பல முறை அப்போஸ்தர்களின் நம்பிக்கையாகிய "இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல்" பற்றி பலமுறை எழுதியுள்ளார்[9]. அப்போஸ்தலர் யோவான் நியமித்த போலிகார்ப்(Polycarp), என்பவரும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பலமுறை எழுதியுள்ளார் [10]. இன்னும் பல "கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்கள்(Non-Christian Writings)" இயேசுவைப் பற்றியும், அவரது அப்போஸ்தலர்கள் பற்றியும் மிக முக்கியமான விவரங்களைச் சொல்கின்றன. யூத சரித்திர ஆசிரியர் "ஜோசபாஸ் (Josephus)" மற்றும் ரோம சரித்திர ஆசிரியர் டாசிடஸ்(Tacitus) இவர்களின் விவரங்களின்படி, இயேசு பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilate) என்பவர் ஆட்சிசெய்யும் போது சிலுவையில் அறையப்பட்டார்[11]. ஒரு கிரேக்க நகைச்சுவை(Satirist) எழுத்தாளர் "Lucian of Samosata" என்பவர் இவ்விதமாகச் சொல்கிறார், "இன்று கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஒரு மனிதனை வணங்குகிறார்கள், இவர்களுடைய எல்லா நம்பிக்கைக்கும் அவர் தான் காரணர் மற்றும் இதனாலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டார் "[12]. அவ்வளவு ஏன், யூதர்களின் தல்மட் (Talmud) கூட இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலைப் பற்றிச் சொல்கிறது[13].

எனவே, குர்-ஆன் சொல்லும் (1) இயேசு மரிக்கவில்லை, (2) இயேசுவின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் தவறானது என்று நாம் நிச்சயமாகச் சொல்லலாம்.

உண்மை இப்படி இருந்தாலும், வாதத்திற்காக வேண்டி, முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அவர்களுடைய விவரங்கள் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், பின்பு வந்த கிறிஸ்தவர்கள் அழித்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்வோம் . நாம் மேலே சொன்னது போல வித்தியாசமான கற்பனையை(Outlandish Assumption) நினைத்துக்கொண்டாலும், இதனால், முஸ்லீம்களுக்கு நிறைய பிரச்சனைகள் எழுகின்றன:

1. இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?

2. ஏன் இயேசுவின் தியாக மரணம் மற்றும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை, இஸ்லாம் நம்பிக்கையை மாற்றிவிட்டது?

3. ஏன் இயேசுவின் 33 வருடகால இஸ்லாமிய போதனை ஒரு நம்பிக்கையாக மதிக்கப்படாமல் அழிந்துவிட்டது?



இந்த கேள்விகளுக்கு வழக்கம் போல "கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனையை மாற்றிவிட்டார்கள், மற்றும் கிறிஸ்தவ குருக்கள் இயேசுவின் இஸ்லாமிய போதனையை மொத்தமாக அழித்துவிட்டார்கள்" என்று இஸ்லாமியர்கள் பதில் சொல்வார்கள். ஆனால், ஒரு உண்மையான முஸ்லீம் இதை ஏற்றுக்கொள்ளமாட்டான், காரணம் இது இயேசுவிற்கு என்ன நடந்தது என்று குர்-ஆன் சொல்வதை மறைத்துவிடுகிறது.

FACT #4: "இயேசு சிலுவையில் மரித்தார்" என்று மக்கள் அனைவரும் நம்பும்படி அல்லா எல்லா மக்களையும் ஏமாற்றினார்(Deceive) என்று குர்-ஆன் சொல்கிறது

குர்-ஆனின் கூற்றுப்படி, இயேசு சில யூதர்களை முஸ்லீம்களாக மாற்ற அவரால் முடிந்தது என்று அறியலாம். ஆனால், இயேசுவின் சீடர்கள் அல்லது அவரை பின்பற்றியவர்கள், அவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நம்பினார்கள் என்று சரித்திரத்தின் மூலமாக நாம் அறிந்துக்கொள்ளலாம். இருந்தாலும், இயேசு வானத்திற்கு எடுத்துக்கொண்ட பிறகு ஏன் "ஒரு முஸ்லீம் கூட" இல்லை? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் என்னவென்றால், இயேசுவை பின்பற்றிய எல்லாரும் "இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் அவர் மறுபடியும் மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார்" என்றும் நம்பினார்.

சரி, இவர்களுக்கு "இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற ஐடியாவை(விவரத்தை) யார் கொடுத்தது? இஸ்லாம் கூற்றுப்படி, "இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற ஐடியாவை ஆரம்பித்தவரே(கொடுத்தவரே) அல்லா தான்.

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157) ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (4:158) [14]

இயேசுவை கொல்ல நினைத்தவர்களை மட்டும் ஏமாற்ற வேண்டும் என்பது தான் அல்லாவின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும் என்று நாம் நினைத்தாலும், இயேசுவின் சீடர்களும் அல்லாவால் ஏமாற்றப்பட்டனர் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்துக்கொள்ளலாம். அப்படியானால்,

இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார் பொறுப்பு? ( So who is responsible for the Christian belief that Jesus died on the cross?)

இஸ்லாம்(குர்-ஆன்) சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், இயேசுவின் எதிரிகள் அவரை கொன்றுவிட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லா அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தார். அதனால், " இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற ஐடியா அல்லது நம்பிக்கை வருவதற்கு காரணமே அல்லா தானே! இது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். இயேசுவின் சீடர்கள் ஏமாற்றப்பட்டது "தற்செயலாக(unintentional) அல்லது ஒரு விபத்தாக நடந்தது" என்று சொல்வீர்களானால், நாம் இந்த முடிவுக்கு வரலாம், அது என்னவென்றால், "உலகத்தில் மிகப்பெரிய ஒரு பொய்யான மதம் உருவாகப்போகிறது" என்பதை அல்லா அறியாமல் இதை செய்தார் என்று நாம் முடிவு செய்யலாம். இல்லை, அல்லா இதை தெரிந்தே வேண்டுமென்றே செய்தார் என்று சொன்னால், அல்லாவிற்கு பொய்யான மதங்களை உலகத்தில் உருவாக்கும் வியாபாரம் உள்ளது என்று முடிவு செய்யலாம். ஆக, இஸ்லாமின் இறைவனாகிய அல்லா, ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக செய்யத்தெரியாத "அறியாமையில்" இருக்கிறார் என்று முடிவு செய்யலாம், அல்லது "அவர் தெரிந்தே ஏமாற்றக்கூடியவர்" என்ற முடிவிற்கு வரலாம். (If the deception of the disciples was unintentional, then we must conclude that God didn't realize that he was about to start the largest false religion in the world. If it was intentional, then God is in the business of starting false religions. Therefore, the God of Islam is either dreadfully ignorant or maliciously deceptive.)

முகமதுவின் கூற்றுப்படி தீர்க்கதரிசிகளின் சரித்திரத்திலேயே இயேசுவின் ஊழியம் ஒரு மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. இயேசு 33 ஆண்டுகள் இஸ்லாமிய போதனையை போதிப்பதில் கழித்தார் (அதிலும், அவர் குழந்தையாக இருந்ததிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்தார் என்று இஸ்லாம் கூறுகிறது), அப்படியிருந்தும், அவர் மரித்த சில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர். முதல் பிரிவு மக்கள் இயேசுவின் போதனை கேட்டவர்கள் "கிறிஸ்தவர்களாக" மாறிவிட்டனர், இவர்கள் கற்பனைகூட செய்யமுடியாத பாவமான "ஷிர்க் - SHIRK"[15] என்ற பாவத்தை செய்தவர்களாயினர். இரண்டாம் பிரிவு மக்களாகிய இவர்கள் "இயேசுவின் போதனைக்கு" கீழ்படியாததினால், இவர்களும் "இறைவனின் மிகப்பெரிய தீர்க்கதரிசியை" தள்ளிவிட்ட அல்லது நம்பாத பாவத்திற்கு ஆளானார்கள். ஆக, இயேசுவை நம்பினவர்கள், இயேசுவை நம்பாதவர்கள் இந்த இரு பிரிவினரும் கடைசியில் நரகநேருப்பில் பங்கடைய அல்லாவால் தண்டனைக்கு உட்பட்டார்கள். இப்படியிருந்தும், முஸ்லீம்கள் "இயேசு தீர்க்கதரிசிகளிலேயே சிறந்தவர்" என்றுச் சொல்வது மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. அதாவது, இயேசு, கடைசி வரை முஸ்லீமாக இருக்கக்கூடிய ஒருவரையாவது "சம்பாதித்து" இருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிப்பட்ட ஒருவரையும் இஸ்லாமுக்கு மாற்றவில்லை. மட்டுமல்ல, ஒரு இஸ்லாம் தீர்க்கதரிசியாக, இயேசு, அல்லாவின் ஏமாற்றும் செயலில் தன் சீடர்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது என்று அவர்களை எச்சரித்து இருந்திருக்கலாம். ஆனால், இயேசு தன் ஊழிய நாட்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்தியை அல்லாவிடமிருந்து பெறவில்லை, அதனால், தன்னை பின்பற்றியவர்களுக்கு இதைப் பற்றி சொல்லவில்லை. இதன் பலனாக, உலகத்தின் கோடான கோடி மக்கள், இப்போது இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர், ஏனென்றால், இயேசு தங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று அவர்கள் நம்புகின்றனர். ஏன் இவர்கள் இப்படி நம்புகின்றனர் என்றால், இந்த செய்தியை முதலாவது பரப்பியதே "ஏமாற்றும் இறைவனாகிய" அல்லாவும், படுதோல்வி அடைந்த மஸிஹாவுமே.

Allah Spreads the False Religion He Accidentally Started

தற்செயலாக ஆரம்பித்த பொய்யான மதத்தை, அல்லா பெருகச்செய்தார்


இஸ்லாமின் போதனையை நாம் கூர்ந்து கவனித்தால், அல்லா "கிறிஸ்தவ மார்க்கத்தை" தெரிந்தோ அல்லது தேரியாமலோ(intentionally or unintentionally) துவக்கினார் என்ற முடிவிற்கு வரலாம். அதோடு மட்டும் குர்-ஆன் நின்றுவிடவில்லை. தான் செய்த குழப்பத்தை சரி செய்வதை விட்டுவிட்டு, அல்லா "கிறிஸ்தவ மார்க்கத்தை" அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்கிறார்.

FACT #5: கிறிஸ்தவ மார்கம் வளர்ச்சி அடைய அல்லா உதவியதாக குர்-ஆன் சொல்கிறது

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் அல்லா அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த பொய்யான செய்தியை(False Message) கிறிஸ்தவர்கள் பரப்புவதற்கும் மிகவும் நேர்த்தியாக அல்லா உதவினார்.

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராம?ீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள். (61:14) [16]

இந்த வசனம் மிகவும் முக்கியமான வசனம். இயேசுவின் போதனையை தள்ளிவிட்ட யூதர்களுக்கு எதிராக, அல்லா இயேசுவை பின்பற்றியவர்களுக்கு(சீடர்களுக்கு) உதவி செய்ததாக இந்த வசனம் சொல்கிறது. மற்றும் இந்த வசனத்தின்படி "இயேசுவின் சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்" என்று குர்-ஆன் சொல்கிறது. எனவே, யூதர்களை விட மிகவும் வலிமைவாய்ந்தவர்களாக மாறிய மற்றும் இயேசுவை பின்பற்றியவர்களாகிய இவர்கள் யார்? இந்த விவரத்திற்கு சரியாக பொருந்துகிறவர்கள் சரித்திரத்தின் படி "ஆதி கிறிஸ்தவர்கள் - orthodox Christians" தான், இவர்களின் நம்பிக்கை "இயேசுவின் மரணத்தின் மீதும், அவர் உயிர்த்தெழுதலிலும், அவருடைய தெய்வீக தன்மையின்" மீதும் இருந்தது. இயேசுவின் போதனை மாற்றப்பட்டது என்றும், உண்மை சுவிசேஷம்(இஞ்ஜில் Gospel) துடைக்கப்பட்டது என்றும் இஸ்லாமியர்கள் இப்போது வாதிக்கமுடியாது, ஏனென்றால், இந்த மக்கள் கூட்டம் குர்-ஆன் வசனம் சொல்லும் மக்கள் அல்ல. ஒருவேளை குர்-ஆன் சொல்வது படி, முதல் நூற்றாண்டில் "முஸ்லீம்-கிறிஸ்தவ" கூட்ட மக்கள் இருந்ததாக ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் மற்றவர்களின் மீது வெற்றியுள்ளவர்களாக இருக்கவில்லை . அவர்கள் மிக சீக்கிரமாக துடைத்துவிடப்பட்டார்கள். இயேசுவை பின்பற்றியவர்களில், யூதர்களை விட அதிகமாக வலிமையானவர்கள், பிரகாசித்தவர்கள் கிறிஸ்தவர்களே. ரோம சாம்ராஜ்ஜியத்தில் அதிகமாக பரவியது இந்த கிறிஸ்தவமே. இந்த கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை, இன்று உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் போலவே இருந்தது. ஆக, குர்-ஆன் வசனத்தின் படி இந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர அல்லா உதவியாக இருந்தார் அதாவது வெற்றியாளர்களாக மாற்றினார்.

பின் எப்படி, கிறிஸ்தவம் வளர்ந்து, உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறியது? இது அல்லாவின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது! மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய "இயேசு சிலுவையில் மரித்தார்" என்ற செய்தியை உருவாக்கியது யார்? இறைவன்(அல்லா) தான் இந்த செய்தியை கண்டுபிடித்தார்(Invented). கிறிஸ்தவம் அல்லாத சரித்திர ஆசிரியர்கள் (non-Christian historians) கூட இயேசுவின் மரணம் ஒரு நிருபிக்கப்பட்ட ஆதாரமாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு, இந்த செய்தி பரவியிருக்கிறது[17]. இந்த சரித்திர ஆசிரியர்களுக்கு இந்த செய்தி எப்படி கிடைத்தது? அவர்கள் இதை இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பல மக்கள் "இயேசு சிலுவையில் மரித்தார்" என்று நம்பும்படி செய்ய அல்லா தான் காய்நகர்த்தினார். அதனால், இந்த நிகழ்ச்சியைப் பற்றிய பல ஆதாரங்கள் நம்மிடம் உள்ளது. தற்போதுள்ள கணக்குப்படி, கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் கிறிஸ்தவர்கள் இப்போது உலகத்தில் இருக்கிறார்கள். இஸ்லாமின் மீது அதிகாரம் செலுத்தும் உலக மதமாக கிறிஸ்தவம் ஆரம்பித்ததற்கு பொறுப்பு இயேசுவும், அல்லாவுமே வகிக்கவேண்டும்.

If Islam Is True . . .

(இஸ்லாம் உண்மையாக இருந்தால்...)


இஸ்லாமின் கருத்து பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். இறைவன் பல பில்லியன் மக்களை ஏமாற்றினார் என்று இஸ்லாம் நம்மை நம்பச் சொல்கிறது. இது மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களும் "இயேசு சிலுவையில் மரித்தார்" என்று நம்பும்படிச்செய்து அவர்கள் இறைவனின் வழியைவிட்டு விலக அல்லா காரணமானார். அல்லா மக்களை ஏமாற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டாமல் இருந்திருந்தால், இதை தவிர்த்து இருந்திருக்கலாம். அதனால், இது நிறைய கேள்விகளை எழுப்புகிறது:

உண்மையில் "இயேசு சிலுவையில் மரிக்காமல் இருக்கும்போது" ஏன் இயேசு சிலுவையில் மரித்தார் என்று மக்கள் நம்பவேண்டும் என்று அல்லா நினைத்தார்?

இயேசுவை யூதர்களின் மற்றும் ரோம அதிகாரிகளின் கைகளிலிருந்து காப்பாற்றவே இப்படி அல்லா செய்தார் என்று முஸ்லீம்கள் வாதம் புரியமுடியாது, ஏனென்றால், அல்லா "இயேசுவை பாதுகாப்பாக" தன் அளவில் எடுத்துக்கொண்டு அவருக்கு பாதுகாப்பு அளித்துவிட்டாரே. ஏன் இயேசுவின் எதிரிகள் "இயேசு மரித்துவிட்டார்" என்று நம்பி நிம்மதியடைய அல்லா அனுமதித்தார்? ஏன் அல்லா யாரையும் ஏமாற்றாமல், இயேசுவை அப்படியே எல்லாருக்கும் முன்பாக தன் அளவில் உயர்த்திக்கொள்ளவில்லை? இப்படி இயேசுவை எடுத்துக்கொண்டு இருந்தால், இப்படி பல மக்களை ஏமாற்றவேண்டிய அவசியமே இருந்திருக்காதே? ஆனால், அல்லாவின் இந்த ஏமாற்றுச் செயல், கிறிஸ்தவம் உருவாக காரணமாகி விட்டதே!

கிறிஸ்தவம் இப்படித் தான் ஆரம்பித்தது என்று இஸ்லாம் நம்மை நம்பச் சொல்கிறது, இது நம்மால் ஜீரணிப்பதற்கு மிக கடினமாக உள்ளது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், தன் தீர்க்கதரிசிகளை நம்பின மக்களை அல்லா ஏமாற்றினார் என்பது தெளிவாகிறது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், அல்லா ஒரு தவறான செய்தியை(கிறிஸ்தவ செய்தி) ஆரம்பித்து, அது உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாகும் வரை அதை வளர்த்தார் என்பது தெளிவாகிறது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், இயேசு மஸிஹா, திறமையில்லாதவராகவும் இறைவன் அனுப்பாதவராகவும் இருக்கிறார், ஏனென்றால், அவரது வாழ்க்கை யின் முடிவு, பல மக்களை இறைவனின் வழியிலிருந்து விலகச் செய்தது. இப்படி வழிவிலகச் செய்தவர் இயேசுவைத் தவிர ஒருவரும் உலக சரித்திரத்தில் இருக்கமுடியாது. ஏனென்றால், இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் இஸ்லாமின் இறைபார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரி சிந்திக்ககூடிய மனிதன் தள்ளிவிடுகிற அளவிற்கு இஸ்லாமின் கோட்பாடுகள் குழப்பமாக உள்ளது. கிறிஸ்தவத்தின் ஆரம்பம் என்று இஸ்லாம் சொல்லும் விவரங்கள் மிகவும் வெறுக்கத்தக்கதாக உள்ளது, மற்றும் அறிவுடமை உள்ளதாக இல்லை. இஸ்லாம் என்பது உண்மையானால், கிறிஸ்தவம் இப்போது இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை - If Islam is true, the existence of Christianity makes no sense at all.

(If Islam is true, Jesus, the Messiah, was completely incompetent and should never have been sent by God, since Jesus' life ended up leading more people astray than any other life in history. Because the Muslim view is at odds with any traditional understanding of God's nature (including the Islamic understanding), Islam is an incoherent religious system, which should be rejected by all rational people. Islam has a poor and contemptible explanation for the origin of Christianity. If Islam is true, the existence of Christianity makes no sense at all.)

If Christianity Is True . . .

(கிறிஸ்தவம் உண்மையானதாக இருந்தால்...)


அதே நேரத்தில், இஸ்லாம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்று கிறிஸ்தவம் தெளிவாகச் சொல்கிறது. ஒரு வேளை கிறிஸ்தவம் உண்மையான மார்க்கமாக இருக்குமானால், இஸ்லாம் ஏன் உருவானது என்பது தெளிவாகப் புரியும்.

ஏன் இப்படிப்பட்ட இஸ்லாம் போன்ற மதம் உருவானது என்று இப்போது உடனே உங்களுக்கு புரியவில்லையானால், கீழே உள்ள சில வரிகளை படியுங்கள், அப்போது புரியும்.

கிறிஸ்தவம் உண்மையாக இருக்குமானால், கீழ் கண்ட வாக்கியங்களும் உண்மையாக இருக்கும்:

(1) மக்கள் இயேசு மூலமாகத் தான் இறைவனிடம் வருகிறார்கள்.

(2) சாத்தான் என்ற ஒரு தீயசக்தி மக்களை இறைவனிடமிருந்து பிரித்துவிடுகிறான்.


மேலே உள்ள வரிகளை மனதிலே வைத்துக்கொண்டு, "சாத்தான்" பற்றி ஏதாவது ஒரு சில விவரங்களை கண்டுபிடிக்க முடியுமா என்று நாம் இப்போது சிந்திக்கலாம்.

சாத்தான் மக்களை இறைவனிடமிருந்து தூரப்படுத்தவேண்டும் என்று விரும்பினால், மற்றும் இறைவனிடம் செல்வதற்கு இயேசு வழி என்று அவன் தெரிந்துக்கொண்டால், சாத்தானுடைய குறி எதுவாக இருக்கும்? மக்களை அதிகமாக கெட்டவர்களாக மாற்றுவது அவனின் மிக மிக முக்கிய நோக்கமாக இருக்காது (அவன் இறைவனிடமிருந்து மக்களை பிரிக்க, இப்படியும் மக்களை அதிகமாக தீயகாரியங்கள் செய்யச் செய்வான்), இதற்கு பதிலாக, மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது தள்ளிவிடவேண்டும் என்ற எண்ணத்தை அவன் மக்களின் மனதில் பாய்ச்சுவான். இதனால், மக்கள் உண்மை இறைவனிடம் சேராமல் இருக்க வாய்ப்பு உண்டாகும்.

ஆனால், எப்படி சாத்தான் மக்கள் இயேசுவை மறுத்துவிட அவர்கள் நம்பும்படிச் செய்வான்? நாம் ஒன்றை இங்கு கவனிக்கவேண்டும், அது என்னவென்றால், இந்த உலகத்தில் "இறைவன்" பற்றி அக்கரைக் கொள்ளாத அனேகமாயிர மக்கள் உள்ளனர். சாத்தான் அவர்களைப் பற்றி கவலைப்படமாட்டான், ஏனென்றால், இறைவன் மூலமாக வரும் இரட்சிப்பு அல்லது முக்தி பற்றி அவர்களுக்கு அக்கரை இல்லை. சாத்தான் முடிந்த அளவு எவ்வளவு மக்களை இறைவனுக்கு தூரமாக பிரிக்கமுடியுமோ என்று முயற்சி செய்கிறான். முக்கியமாக, ஓர் அளவிற்கு இறைவன் விஷயங்களில் அக்கரை காட்டும் மக்கள் மீது அவன் கண் எப்போதும் இருக்கும் என்று நாம் சொல்லமுடியும். மக்களை இறைவனிடமிருந்து வேறுபடுத்த சாத்தான் இரண்டுவகையான முறையை கையாள்வான்:

ஒன்று "இறைவன் நம்பிக்கை" ஒரு முட்டாள்தனம் என்று நம்பவைப்பான் (இப்போது நாம் உலகத்தில் காண்கின்ற "சமயசார்பற்ற - secularism" கொள்கையை பரப்புவான்)

அல்லது அவன் உண்மைக்கு பதிலாக வேறு ஒரு மார்க்கத்தை கொடுப்பான் (இரட்சிப்பு அல்லது முக்தி அடைய தடையாக இருக்கும் ஒரு மார்க்கம்)

கிறிஸ்தவம் உண்மையானதாக இருக்குமானால், சாத்தான் இயேசுவின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் மறுக்கும்படி மதங்களை நம்பும்படிச் செய்வான். சில நேரங்களில் இப்படிப்பட்ட மதங்கள் கிறிஸ்தவத்தைப் போல சில கோட்பாடுகளைக் கொண்டு இருக்கக்கூடும். கிறிஸ்தவம் உண்மையான மார்க்கமாக இருக்குமானால், என்ன நடக்க வாய்ப்பு உள்ளது என்று நாம் இப்போது சரியாக ஊகிக்கமுடியும். இப்போது "இஸ்லாம்" நம்முடைய ஊகத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்று பார்க்கலாம்.

இஸ்லாமுடைய போதனை இப்படியாக இருக்கும்: "இறைவனை நம்பு, நன்மைகளைச் செய்". நீ அதிக நன்மைகள் செய்தால், உனக்கு சொர்க்கம் நிச்சயமாக கிடைக்கும். இயேசுவை மதிக்கவேண்டும், ஏனென்றால், அவர் அல்லாவினுடைய சிறந்த நபியாக (தீர்க்கதரிசியாக) இருக்கிறார், அவர் அல்லாவின் செய்தியை இஸ்ரவேல் மக்களுக்கு போதித்தார். மட்டுமல்ல, இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்றும், அவர் அனேக அற்புதங்கள் செய்தார் என்றும், அவர் தான் "மஸிஹா - Messiah " என்றும் நம்பவேண்டும். ஆனால்,நீங்கள் எதை நம்பினாலும், அவர் உன்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்பதை மட்டும் நம்பவேண்டாம். மற்றும் அவர் மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார் என்றும் நீங்கள் நம்பவேண்டாம். முக்கியமாக நீங்கள் செய்யும் மிகப்பெரிய பாவம் என்னவாக இருக்கும் என்றால், இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்புவதாகும். இங்கு கவனிக்கவும், இஸ்லாம் இயேசுவின் மற்ற எல்லா காரியங்களையும் ஏற்றுக்கொள்கிறது, ஆனால், மனிதன் இரட்சிக்கப்பட தேவையான முக்கியமான விஷயத்தை மறுக்கிறது. முஸ்லீம்கள் இறைவனை நம்பவேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளனர், ஆனால், சாத்தானும் அவன் கூட்டமும் இறைவனை நம்புகின்றன (For instance, Muslims are commanded to believe in God, but even Satan and his demons believe in God). நல்ல காரியங்களை செய்யும் படி முஸ்லிம்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர், மற்ற மதங்களிலும் இதே கட்டளை உள்ளது. முஸ்லீம்கள் இயேசுவின் பிறப்பு அற்புதத்தையும், அவர் ஒரு நபி என்றும் இஸ்லாம் நம்பும்படிச் சொல்கிறது, ஆனால், இந்த நம்பிக்கை ஒரு மனிதனை இரட்சிக்காது. ஆக, எப்போது நாம் இயேசுவின் மரணம் உயிர்த்தெழல் போன்ற மனிதன் இரட்சிக்கப்ட தேவையான விவரங்களை சொல்கிறோமோ, அவைகளை மிகவும் கடினமாக இஸ்லாம் எதிர்க்கிறது[19]. Islam, then, looks exactly like the religion we predicted that Satan would form, for it denies what is necessary for people to come to God.

எனவே, கிறிஸ்தவத்தை நம்புகிறவர்கள் இஸ்லாம் போன்ற மார்க்கம் உருவாக வாய்ப்பு உள்ளது என்பதை சுலபமாக எதிர்பார்க்கலாம். பைபிளில் சொல்லப்பட்ட சில தீர்க்கதரிசன வசனங்களை(எதிர் காலத்தில் நடக்கும் என்று சொல்லப்பட்ட வசனங்கள்) நாம் பார்க்கலாம்:

இயேசு சொன்னார்: அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்[20], பவுல் கூட இப்படி சொல்கிறார் :"…சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள் ."[21] (The phrase "deceitful spirit" is reminiscent of the Qur'anic claim that Allah deceived people about the death of Jesus.) உண்மை சுவிசேஷத்தை கெடுக்க பொய் போதகர்களும், தீர்க்கதரிசிகளும் வருவார்கள் என்று, பைபிள் அடிக்கடி போதிக்கிறது. இந்த எச்சரிக்கையை முகமதுவின் காலத்தில் சிலர் கவனித்ததாக தெரிகிறது.

முடிவுரை

Final Thoughts



சரித்திரத்தை சிறிது திரும்பிபார்ப்போமானால் அனேகர் தங்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம். உண்மையில் இன்று கூட தங்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள், நாளைக்கும் சிலர் வரவாய்ப்பு உள்ளது. ஒரு வேளை எதிர்காலத்திலே ஒரு தீர்க்கதரிசி எழும்பி, தனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்று சொல்வார் என்று வைத்துக்கொள்வோம்[22]. நிச்சயமாக முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒரு வேளை இந்த தீர்க்கதரிசி முஸ்லீம்களைப் பார்த்து கீழ்கண்டவாறு சொல்கிறார் என்று நினைத்துக்கொள்வோம்.

"சகோதரர்களே, நீங்கள் முகமதுவின் போதனையை நம்புகிறீர்கள், இதோ நான் சொல்கிறேன், இஸ்லாம் என்பது மக்களை ஏமாற்றுவதற்கு இறைவனால் உருவாக்கப்பட்டது". ஏனென்றால், இஸ்லாமுக்கு முன்பு இருந்த அரேபியர்கள், மிகவும் கொடுமையான பழக்கங்களை கொண்டு இருந்தனர், அதாவது தங்கள் மகள்களை கொன்றுபோட்டனர், மற்றும் நூற்றுக்கணக்கான பெண்களை திருமணம் செய்தனர். இறைவன் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முடிவுசெய்தார், எனவே, அவர்களை வழிவிலகச் செய்தார், உண்மையை விட்டு பொய்யானவற்றை நம்பும்படிச் செய்தார். இதோ நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் இறைவனின் மிகப்பெரிய நபியாவேன், தீமையிலிருந்து உங்களை காப்பாற்ற வந்துள்ளேன்.

முஸ்லீம்கள் இவரை நம்புவார்களா? நிச்சயமாக நம்பமாட்டார்கள். ஏன் முஸ்லீம்கள் இந்த புதிய நபியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்? முஸ்லிம்கள் அவர் சொல்வதை நம்பமாட்டார்கள் ஏனென்றால், இறைவன் தெரிந்தே பல மில்லியன் மக்களை ஏமாற்றினார் என்று அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதே போலத்தான் இயேசுவின் மரணத்தின் செய்தியை நம்பினார்கள் முஸ்லீம்கள். ஆக, மக்களை மற்றும் தன் நபியை பின்பற்றிய சீடர்களையும் ஏமாற்றும் இறைவனின் மீது தங்கள் நம்பிக்கையை வைத்தால், தங்களுக்கு நிச்சயமாக உண்மை சொல்லப்பட்டிருக்கும் என்று எப்படி நம்புகிறார்கள். (So if Muslims believe in a God who deceives people, even those who follow his prophets, how can Muslims be confident that they have been given the truth?)

முஸ்லீம்கள் தங்கள் இறைவனைப்பற்றியும், தங்கள் தீர்க்கதரிசிகளைப் பற்றியும் அதிகமாக பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். ஆனால், நாம் சரியாக ஆராய்ந்துபார்ப்போமானால், இஸ்லாம் மிகப்பெரிய மதத்தின் இறைவனாகிய அல்லாவை ஏமாற்றுபவன் என்று குற்றம் சாட்டுகிறது. இப்போது நாம் சிறிது நின்று நிதானித்து சிந்திக்கவேண்டும். ஏன் தன்னைப் பற்றி கவுரவமாக பெருமைப்படும் மதம், தன் இறைவன், ஒரு பொய்யான மதத்தை ஆரம்பித்தார் என்று பறைசாற்றுகிறது. ஏன் இயேசுவை மதிக்கிறோம் என்று சொல்லும் மக்கள், அவர் மிகப்பெரிய படுதோல்வி அடைந்தார் என்று சொல்லிக்கொள்கிறார்கள்? இஸ்லாம் மிகவும் வேகமாக கிறிஸ்தவத்தை அழித்துவிட முயற்சி செய்ததாக தெரிகிறது, ஆனால், அதனால், தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறது. வேறு வகையில் சொல்லவேண்டுமானால், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலைப் பற்றிச் சொல்லும் போது, இஸ்லாம் இறைவனை(அல்லாவை) ஒரு "ஏமாற்றுபவர்" என்று சுட்டிக்காட்டுகிறது. இது இஸ்லாமிய கோட்பாடு இறைவனுக்கு பொருந்தக்கூடியது அல்ல. This desperation only makes sense if Christianity is true, and if Islam was designed by Satan to keep people from being saved.

முஸ்லீம்கள் இவைகள் அனைத்தையும் மறுக்கக்கூடும். அவர்கள் தங்கள் இறைவனுக்கு காட்டும் மதிப்பும், தங்கள் தீர்க்கதரிசிக்கு காட்டும் மரியாதையும் தொடரக்கூடும். ஆனால், அவர்கள் கிறிஸ்தவத்தை விவரிப்பதிலே சில விபரீதங்களைச் சொல்கிறார்கள். இறைவன் உலகத்தை திசைதிருப்பிவிட்டான்(astray) என்று அவர்கள் சொல்வது தான், புதுமையாக உள்ளது. இஸ்லாம் உண்மையாக இருக்குமானால், அல்லாவும், இயேசுவும் தோல்வி அடைந்தவர்கள் என்பது நிச்சயம். ஆனால், கிறிஸ்தவம் உண்மையாக இருக்குமானால், இறைவனும், இயேசுவும் வெற்றிப்பெற்றவர்கள். சிலுவையிலே இரட்சிகப்படுவதற்கான வாசல் திறந்தே இருக்கிறது, தங்கள் கதவுகளை திறக்கமாட்டோம் என்று மூடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் சேர்த்து.

பொய்யான தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்று இயேசு தன்னை பின்பற்றினவர்களுக்கு எச்சரித்தார். அவர்களை நம்பவேண்டாம் என்று கட்டளையும் கொடுத்துள்ளார். அவர்களை எப்படி நாம் கண்டுபிடிப்பது என்றுச் சொன்னால், அவர்களுடைய போதனைகள் இறைவனுக்கு தகுதியில்லாத குணத்தை இறைவனுக்கு உள்ளது போல காட்டக்கூடியதாக இருக்கும். இறைவன் உண்மையுள்ளவர், மற்றும் அன்புள்ளவர். இஸ்லாமை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், இந்த இரண்டும் இறைவனுக்கு இல்லை என்று நம்மை நம்பச்சொல்லும்.

Contact Author David Wood : wood_apologetics@hotmail.com

Notes:
1 See Qur'an, 24:25
2 Qur'an 19:23-26, 30-33,
3 Qur'an 42:13.
4 Qur'an 43:59, 63-64.
5 Qur'an 3:52.
6 Qur'an 5:111.
7 Qur'an 57:26.
8 1 Corinthians 15:3-5.
9 See 1 Clement 42:3.
10 See Polycarp, To the Philippians 1:2, 2:1-2, 9:2, 12:2.
11 See Josephus, Antiquities 18.64, and Tacitus, Annals 15.44.
12 Lucian of Samosata, The Death of Peregrine, 11-13.
13 Talmud, Sanhedrin 43a.
14 Qur'an 4:157-158. According to Muslim tradition, Allah made Judas Iscariot look like Jesus, so that Judas was crucified in Jesus' place.
15 To associate partners with God is to commit the sin of shirk.
16 Qur'an 61:14.
17 For instance, John Dominic Crossan, of the notoriously anti-Christian "Jesus Seminar," says "That [Jesus] was crucified is as sure as anything historical can ever be" (Jesus: A Revolutionary Biography [San Francisco: HarperCollins, 1991] p. 145).
18 This spirit being is not to be confused with the popular image of a harmless red figure with a pointy tail and a pitchfork!
19 One may wonder why I have not included belief in God among the doctrines necessary for salvation. I'm certainly not denying the necessity of belief in God. However, I do draw a distinction between a necessary doctrine and a necessary and sufficient doctrine. Belief in God is necessary for salvation, but it is not sufficient to produce it. In contrast, the Christian doctrines of confession of the lordship of Christ and belief in his resurrection from the dead are necessary and sufficient. That is, these doctrines are sufficient to guarantee the salvation of the Christian. Yet it is these doctrines that Islam most vehemently opposes.
20 Matthew 24:11.
21 1 Timothy 4:1.
22 Even Islam has had its share of self-proclaimed new prophets. Most notably, Mirza Ghulam Ahmad announced his prophethood towards the end of the 19th Century. He also claimed to be the second coming of Jesus. Millions of people have followed him. However, the vast majority of Muslims consider these "Ahmadiyyas" to be a heretical sect. The Ahmadiyyas, though they profess to be Muslims, aren't even allowed to take the pilgrimage to Mecca. The Ahmadiyya movement is significant in that Ahmadiyyas say that true Islam was corrupted, just as Muslims claim that Christianity was corrupted. Hence, Ahmadiyyas claim that God sent another prophet to restore the true message of God. Muslims reject this, because they don't believe that Islam has been corrupted. They conclude that Mirza Ghulam Ahmad must have been a false prophet. But this is the same reason Christians reject Muhammad. We don't believe that Christianity has been corrupted, so Muhammad must have been a false prophet.




Isa Koran Home Page Back - Author David Wood's Page page

http://unmaiadiyann.blogspot.com/2008/03/blog-post_20.html

StumbleUpon.com Read more...

காப்பியில் ஈ விழுந்தால்

காப்பியில் ஈ விழுந்தால்

ஈமானுள்ள நல்லடியார்களே,

இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வது ஃபர்ஸ். அது ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கடமை. இஸ்லாமிய மார்க்க அறிவை பெற்று பயன் பெறுவோமாக.

இன்றைய பாடம் முக்கியமானது. இன்று ஒரு முக்கியமான முட்டாள்தனத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன்.

நம் அன்றாட வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சியை குறித்து நம் ஸல் முகம்மது சொன்னது என்ன தெரியுமா...

" நீ பருகும் பானத்தில் ஒரு ஈ விழுந்துவிட்டால், அந்த ஈயை முழுதுமாக பானத்தில் தோய்த்தெடுத்து விட வேண்டும். ஏனென்றால், ஈக்களின் ஒரு இறக்கையில் நோயும், மற்றொரு இறக்கையில் அந்த நோய்க்கான மருந்தும் இருக்கின்றன'

Narrated Abu Huraira:

The Prophet said "If a house fly falls in the drink of anyone of you, he should dip it (in the drink), for one of its wings has a disease and the other has the cure for the disease." (Sahih Al-Bukhari: Volume 4, Book 54, Number 537)




பார்த்தீர்களா, இறைநேசர்களே!!!

இறைவசனத்தில் எத்தனையோ அறிவியல் விஞ்ஞானங்கள் தோய்ந்து கிடப்பது தெரியுமல்லவா. அதுபோலவே, எல்லாமரிந்த நம் முகம்மதுவும் விஞ்ஞான அறிவியல் நுணுக்கங்களை ஆயிரத்து நானூறு ஆண்டு முன்பே சொல்லிவிட்டார் பார்த்தீர்களா?

சரி, நான் முன்பு சொன்ன இன்னொரு விஞ்ஞான வழியையும் நீங்கள் இடைவிடாது பின்பற்றுகிறீர்கள் தானே? அதுதான், ஒட்டக மூத்திரத்தை தினசரி குடித்தால் எல்லா நோயும் நீங்கும் என்பது. அதோடு சேர்த்து இந்த மார்க்க அறிவையும் கடைபிடியுங்கள், அன்பர்களே.

எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!

StumbleUpon.com Read more...

கேமரா மொபைலில் குடும்ப நபர்கள் போட்டோ வைத்திருப்பவரா நீங்கள்?உஷார்

கேமரா மொபைல் வைத்திருப்பவர்கள் உஷார்.

ஒரு

கால கட்டத்தில் மொபைல் என்பது நடுத்தர வர்க்கம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஆடம்பர பொருளாக இருந்த நிலை மாறி இன்று அத்தியாவசிய பொருளாக மாறியது மட்டுமின்றி , அனைவரும் வாங்க கூடிய விலையில் கிடைக்கவும் செய்கிறது.


அனைத்து தரப்பினரும் மொபைல் வைத்திருப்பதும், அது தொடர்பாக நடைப்பெறும் நகைச்சுவை விஷயங்களும் ஏராளம். அது பற்றி மிக பெரிய பதிவே போடலாம்.

இந்த பதிவு கேமரா பொறுத்தப்பட்ட மொபைல் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய ஒரு ஆபத்து பற்றியே.

கேமரா பொருத்தப்பட்ட மொபைல்கள் இப்போது ஒரு fashion ஆக மாறிவிட்டது, மொபைல் வாங்குவோரில் 75% பேர் கேமராவுடன் தான் வாங்குகிறார்கள். வாங்கிய புதிதில் ஆர்வமுடன் கேமராவை பயன்படுத்தி கண்ணில் படுவதை எல்லாம் சுட்டுத்துள்ளுவது, சிறிது காலத்திற்கு பிறகு மொபைலில் கேமரா இருப்பதையே மறந்துவிடுவதும் தனிக்கதை.

மொபைல் கேமராவில் புகைப்படம் எடுப்போர் மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமிது. உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் கேமராவில் இருக்கும் படங்களை கையாடல் செய்யும் நவின திருட்டு ஒன்று சத்தமில்லாமல் பரவி வருகிறது. அதிலும் நீங்கள் எடுத்து, பின்பு அழித்துவிட்ட படங்கள் கூட திருடப்படுகிறது என்பது சற்று அதிர்ச்சியான செய்தி.

எப்படி திருடப்படுகிறது என்று பார்பதற்கு முன்னால் , எத்தகைய படங்கள் திருடப்படுகிறது என்று பார்க்கலாம்.

சாதாரணமாக எடுக்கப்பட்ட இயற்கை காட்சிகள், விலங்குகளின் படங்கள் திருடப்படுவதில்லை , அவை திருடப்பட்டாலும் நாம் பெரிதும் வருத்தப்படவேண்டியதில்லை. மாறாக இந்த திருட்டுக்கு இலக்காவது உங்கள் மொபைலில் இருக்கும் உங்கள் வீட்டு பெண்களின் புகைப்படங்கள்.

அனேகமாக பலரும் ஆசை ஆசையாக தங்கள் மனைவியையோ, காதலியையோ, அல்லது அக்கா , தங்கை, அண்ணி, மாமி என எந்த உறவு முறைப்பெண்களையும் மொபைல் கேமராவில் படமெடுப்பது வழக்கம்.

குறிப்பாக கேமரா மொபைல் வாங்கிய புதிதில் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களையும் , உறவினர்களையும் ஒருமுறையாக கேமராவில் சுட்டுவிடுவது என்பது எழுதப்படாத விதி. இது ஒரு ரகம்.

மற்றொரு ரகம் சற்று வித்தியாசமானது, காதலி , மனைவியுடன் அந்தரங்கமான சில நிகழ்வுகளையும் மொபைலில் எடுப்பவர்களும் உண்டு. வேறு தவறான எண்ணம் எதுவுமின்றி , நமக்குள்தானே, ஜஸ்ட் பார்த்துவிட்டு அழித்துவிடலாம் என்று எடுப்பவர்களும் உண்டு.

எடுத்தபின்பு ,பார்த்துவிட்டு அழித்தும் விடுவர். அழித்துவிட்டோம் , என்ன பிரச்சனை என்று மெத்தனமாக இருப்பார்..

ஆனால் இங்கே தான் பிரச்சனை, இப்படிப்பட்ட புகைப்படங்கள் தான் திருடுபவரின் இலக்கு.

எப்படி திருடப்படுகிறது? யார் திருடுவது?

தொலைந்துப்போவது தவிர்த்து, 2 காரணங்களுக்காக நம் மொபைலை நமக்கு அறிமுகமில்லா நபரிடம் கொடுப்போம்.

1.
மொபைல் கோளாறு , சரி செய்ய கொடுப்போம்.

2.
மொபைலில் உள்ள மெமரி கார்டில் பாட்டு, கேம்ஸ் , அல்லது ஏதேனும் புது மென்பொருள் சேர்க்க கடைக்காரர் ஒருவரிடம் கொடுப்போம்.

இப்படி கொடுக்கும் போது தான் இந்த திருட்டு நடக்கிறது. நாம் மொபைல் மெமரியிலோ அல்லது மெமரி கார்டிலோ வைத்திருக்கும் புகைப்படங்கள் இங்கே பிரதி எடுக்கப்படுகிறது.

அட போப்பா, நாங்க எல்லாம் உஷார் உலகநாதன்ஸ், அப்படி கொடுக்கறப்போ எல்லா மேட்டரையும் அழித்துவிட்டு (Delete) தான் கொடுப்போம் என்று சொல்கிறீரா?? அப்பவும் நீங்க உண்மையிலேயே உஷார் உலகநாதன் இல்லைங்க.. உஷார்னு நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பாவபட்ட ஜென்மம் தான்.

இப்படி அழிக்கப்படும் படங்களை மீட்டெடுக்கவே (Restore) பல மென்பொருட்கள் உள்ளது. அந்த மென்பொருட்கள் இப்படிபட்ட ஆசாமிகளிடன் நிறையவே உள்ளது. அவற்றை பயன்படுத்தி அழிக்கபட்ட படங்களை சுலபமாக மீட்டெடுக்கின்றனர்.

உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் மொபைலில் உள்ள படங்கள் / ஆவணங்கள் திருட்டுப்போகிறது.

அப்படி திருடப்படும் படங்கள், இதற்காகவே அலையும் ப்ரோக்கர்களுக்கு நல்ல காசுக்கு விற்கப்படுகிறது. அப்படி கை மாறும் படங்கள் எங்கெங்கு போகும், எப்படியெல்லாம் உபயோகப்படுத்தப்படும் என நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா??

எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புக்கும் எதிர்மறையான விஷயங்கள் இருப்பது இயல்பு, கேமரா மொபைல் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆக மக்கள்ஸ் உஷாராக இருக்கவேண்டியது நாம் தான். இனி உங்கள் மொபைல் கேமராவில் புகைப்படம் எடுக்கும் போதும், உங்க மொபைல் சர்வீஸ் கொடுக்கும் போதும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

நான் கேட்டத சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம். நம் அந்தரங்கம் அடுத்தவர் அனுபவிக்கவும், காசு பார்க்கவும் என்றாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

குறிப்பு: மொபைல் பழுது பார்க்கும் கடை வைத்திருப்பவர் அனைவரும் இப்படி என்று சொல்லவில்லை, இப்படியும் பலர் இருக்கிறார்கள் , காசு பார்க்கிறார்கள், நமக்கு கவனம் தேவை என்பதே இந்த பதிவின் கருத்து.

முரளி

 

 

StumbleUpon.com Read more...

கணவன்,மனைவி "அந்த" நேரத்தில் எப்படி இருப்பாங்கன்னு நான் எப்படிங்க சொல்றது,அவரே சொல்றார் படிச்சுக்குங்கோ(நான் சொன்னா இவன் ஆபாசமா சொல்றான்ன்னு சொல்லுவாங்க)

கணவன்,மனைவி "அந்த" நேரத்தில் எப்படி இருப்பாங்கன்னு நான் எப்படிங்க சொல்றது,அவரே சொல்றார் படிச்சுக்குங்கோ(நான் சொன்னா இவன் ஆபாசமா சொல்றான்ன்னு சொல்லுவாங்க)
 

இன்றைய இணைய இஸ்லாமிய புரட்டு பதிவு பரங்கிப்பேட்டை ஃபக்ருதீன் அவர்களிடமிருந்து வந்திருக்கிறது.

இப்போதெல்லாம், தினசரி இணையத்தில் இஸ்லாமிய பதிவர்களின் ஜல்லி மிகவும் அதிகமாக ஒலிக்கிறது. பொதுவாக, இது ஒரு நல்ல பொழுதுபோக்கும் நகைச்சுவையாக இருக்கிறது.

சில சமயம், இவர்கள் உண்மையிலேயே இதையெல்லாம் நம்புகிறார்களா என்று தோன்றும்? ஆனால், பல சமயம், இவர்கள் நம்மையெல்லாம் இவ்வளவு முட்டாளாக நினைத்து முழு பூசணிக்காயை பிரியாணியில் மறைக்கிறார்களே என்று கோபம் வருகிறது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன்!

அல்லாஹ் என்பது முகம்மதுவின் புரட்டுகளுக்கு சப்பைகட்ட கற்பனையில் உதித்த ஒரு பாத்திரம். இதை நான் படித்து தெறிந்து அனுபவித்திலும் உணர்ந்தேன்.

அல்லாஹூ அளித்த இரைவசன புத்தகம் என்பது ஒரு பெரிய அசிங்கம். இது அரபியில் இருப்பதால் நம் முஸ்லிமாக்கள் அவமானப்படாமல் இதை ஓதுகிறார்கள் என்று நினைக்கிறேன். குரானை குடைந்தால் அதில் வன்முறை, காழ்ப்பு, ஏமாற்றம், கொலை, கொள்ளை என்று எல்லாம் கொட்டிக்கிடக்கின்றன.

அதையும் மீறி குரானில் காணக்கிடைப்பவை கொக்கோக சாத்திரங்கள்தாம்.

உண்மையில், நான் குரானை ஆராய்ந்த போது என் மனதில் எழுந்த முதல் அருவருப்பே இந்த விஷயங்கள் பற்றித்தான். குரானில் எங்கு பார்த்தாலும் அல்லாஹூ பெண்களைப் பற்றியும், அவர்கள் உடலுறவு பற்றியும் பேசுகிறான். அடிமை பெண்கள், சுவன ப்பெண்கள் என்று பலவகைப் படுத்தி விளக்குகிறான்.

முகம்மதுவின் மனைவிமார்களுக்கு ஸ்பெஷல் தகுதி குரானில் பேசப்படுகிறது. முகம்மது எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கட்ட ஸ்பெஷல் சட்டம் குரானில் வைக்கப்படுகிறது.


முகம்மது தன் வளர்ப்பு மகனின் மனைவிக்கு ஆசைப்பட்டபோது, உடனே அல்லாஹ் ஒரு வசனத்தை இறக்கி அதற்கு ஓகே சொல்கிறான். இன்னும் பல...

ஒரு இறைவன் பெண்கள் விஷயத்திலும், கணவன்-மனைவி உறவு விஷயத்திலும் ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று புரியவில்லை. அல்லாஹ் ஏன் பெண்கள் விஷயத்தில் இத்தனை நாட்டம் காட்ட வேண்டும் என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

அந்த மாதிரி ஒரு கொக்கோக சாத்திர சட்டத்தை எடுத்துக்கொண்டுதான் இன்று என் இணைய சக பதிவர் பரங்கிப்பேட்டை ஹ. பஃக்ருத்தீன் சவுதியிலிருந்து எழுதுகிறார்.

ஒரு கொக்கோக சாத்திர சட்டத்தை அல்லாஹூ 2.187 ல் வழங்குகிறான்.

இந்த வசனம், இஸ்லாமியர்களுக்கு அல்லா கொடுக்கும் ஒரு ஸ்பெஷல் சலுகை. அதாவது, முஸ்லிம்கள் முப்பது நாட்கள் நோன்பில் பொண்டாட்டியை தொடாமல் ரொம்ப கஷ்டப்பட்டார்களாம். உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது என்கிறான் அல்லாஹ். நீங்கள் இத்தனை நாள், எப்படி பெண்டாட்டியை தொடாமல் இருப்பீர்கள்? (உண்மையில் பெண்டாட்டியை மட்டுமல்ல, அடிமைகளையும் கேட்காமல் புணரலாம் என்பது இஸ்லாமிய சட்டம்) குரானுக்கு முன், அரபியர்கள் இன்னும் சுய கட்டுப்பாட்டோடு இருந்திருக்கிறார்கள். நோன்பு இருந்த போதெல்லாம், அரபியர்கள் பெண்களுடன் கூடுவதையும் தவிர்த்து வந்தார்கள்.

இந்த மாதிரி முஸ்லிம்கள் கஷ்டப்படுவதை கண்டு சகியாத முகம்மது, அல்லாஹூவின் பெயரால் இந்த வசனத்தை எழுதுகிறார்.

2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

இது பதிந்துள்ள தமிழ் இஸ்லாமிய தளம் இதோ. http://tamilislam.com/tamilquran/the_cow.htm


இந்த வசனம் எதற்காக ஏற்பட்டது என்று இஸ்லாமிய நூல்கள் சொல்வதை பாருங்கள். இதில் "ஆடை" எங்கே இருக்கிறது?

http://www.quran-islam.org/167.html

During the fasting hours (explained in 2:187), all sexual contact between married couples is also prohibited:

" .... You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid (during the last ten days of Ramadan). These are God's laws; you shall not transgress them. God thus clarifies His revelations for the people, that they may attain salvation." 2:187

Prior to revelation of the Quran, sexual intercourse was prohibited throughout the fasting period. This rule has been alleviated with the revelation of the Quran (2:187) to allow intercourse between married couples during the nights of Ramadan.

அப்படியே, தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த "ஆடை"க்கும் என்ன பொருள் கொள்ளலாம் என்று பாருங்கள்.

இதை மறைத்து, இந்த வரிகள் என்னவோ அல்லாஹ் பெண்ணுரிமைக்கும், சமத்துவத்துக்கும் வக்காலத்து வாங்குவதாக அவர் எழுதுகிறார். இந்த நண்பர், அவ்வாறு ஒரு பட்டிமன்றத்தில் பேசினாராம். கவிக்கோவும் அவ்வாறு எழுதியிருக்கிறாராம். இருக்கலாம்!

ஆனால், இவை உண்மையை மறைக்காது. உண்மையை நாம் அறியவில்லை என்று நினைத்து இந்த நண்பர் எங்களை ஏமாற்ற வேண்டாம்.

நண்பரின் ஜல்லியை இங்கு பாருங்கள்...

//// சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் "அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!" என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!

................

திருமணம் என்பதை ஆணும் பெண்ணும் 'ஆடை' அணியும் நிகழ்வாகச் சொல்லப்பட்டிருப்பது சிந்தனைக்குரியது!

////

முதலில், இந்த சுராவில் "ஆடை" என்கிற வார்த்தையே இல்லை.

இது தமிழில் குரானில் அழகுக்காக சேர்த்திருக்கிறார்கள்.

தமிழில் குரான் வெளியிட்ட பல பதிவுகளில் குரானில் இருக்கும் பல அசிங்கங்களுக்கு முலாம் பூசி எழுதியிருக்கிறார்கள். மனைவியை அடியுங்கள் என்ற வசனத்தில் "லேசாக" என்று சேர்க்கிறார்கள்.

(காபிர்களை நீங்கள் கொன்றுபோட்டால்....) கன்னிகளை சுவனத்தில் கொடுக்கிறேன் என்று அல்லாஹ் வாக்குறுதி தரும் வசனத்தில் "கன்னியர்கள்" என்பதற்கு பதில் 'குறையற்ற' என்று எழுதுகிறார்கள். இன்னும் எத்தனையோ!

அது போல ஒரு புரட்டே இந்த "ஆடை' வசனமும்.

குரானின் இஸ்லாம் ஏற்றுக்கொண்ட ஒரு ஆதாரமான ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து இந்த வசனத்தை பாருங்கள்..

[2:187] Permitted for you is sexual intercourse with your wives during the nights of fasting. They are the keepers of your secrets, and you are the keepers of their secrets. GOD knew that you used to betray your souls, and He has redeemed you, and has pardoned you. Henceforth, you may have intercourse with them, seeking what GOD has permitted for you. You may eat and drink until the white thread of light becomes distinguishable from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid (during the last ten days of
Ramadan). These are GOD's laws; you shall not transgress them. GOD thus clarifies His revelations for the people, that they may attain salvation.

http://www.submission.info/quran/noframes/ch2.html

இங்கு எங்குமே "ஆடை' என்கிற வார்த்தை இல்லை.

அப்படியே, "ஆடை" என்று வைத்துக்கொண்டாலும், அது எந்த பொருளில் சொல்லப்பட்டது என்பது அந்த வசனத்தை முழுதுமாக பார்த்தால் தெரிகிறது.

இதோ அந்த தமிழ் குரான் வசனம் இஸ்லாமியர்களால் இணையத்தில் பதிந்துள்ளது...

2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

http://tamilislam.com/tamilquran/the_cow.htm

இங்கு அல்லாஹ் ஆண், பெண் உடலுறவை பற்றி பேசுகிறான். அதில் அவன் நீங்கள் இரவில் கூடலாம் என்று அனுமதி வழங்குகிறான். அப்போது அவள் உனக்கு ஆடை, நீ அவளுக்கு ஆடை என்று கிளுகிளுப்பாக பேசுகிறான்.

இதை எப்படி அல்லாஹ் பெண்களுக்கு சமத்துவம் வழங்குகிறான் என்று சொல்கிறார்கள். இது முழு பொய்.

இஸ்லாமிய அறிஞர்கள் இந்த மாதிரி ஜல்லிகளை ஏற்றுக்கொள்வதில்லை.

அவர்கள் கோட்பாட்டில், பெண்கள் ஆண்களுக்கு எப்போதும் கட்டுப்பட்டவர்கள். பெண்களை இழிவுபடுத்தும், வெளிப்படையாக கட்டுப்படுத்தும் எத்தனையோ வசனங்கள் குரானில் இருக்கிறதே!

அதையெல்லாம் படிக்க வெட்கப்பட்டுக்கொண்டு, சம்பந்தமில்லாத இந்த உடலுறவு சட்டத்தை பிடித்துக்கொண்டு ஏன் தொங்குகிறீர்கள்?

குரானின் மற்ற வசனங்களை கொண்டு நீங்கள் அல்லாஹ் பெண்களை இழிவுபடுத்தவில்லை, பெண்களை அடிமைப்படுத்தவில்லை என்று சொல்லத்தயாரா?

நான் பரங்கிப்பேட்டை அய்யாவை கேட்கிறேன்? ஏன் இப்படி தானும் ஏமாந்து பிறரையும் ஏமாற்றிக்கொள்கிறீர்கள்? இந்த வசனத்தில் 'திருமணத்தில்' என்று எங்கிருந்து பொருள் வந்தது?

ஆதலால், "ஆடை' என்றெல்லாம் இங்கு சொல்லப்படுவது கணவன், மனைவியின் (உடல் சம்பந்தமான) அந்தரங்க நெருக்கத்தையே. இது இஸ்லாமிய அறிஞர்களால் நிறுவப்பட்ட ஒன்று. இணையத்தில் இங்கு பார்க்கவும்.

http://www.parvez-video.com/quran/summary/surah_al_baqarah/index.asp


Take note that fasting is only from dawn to dusk [*2] During other hours, eating, drinking or having sexual intercourse with your wife is not prohibited. The relationship between the two spouses is a most intimate one. Monasticism engendered the concept that celibacy is a means of attaining closeness to Allah Almighty , but He is well aware of the importance of the intimate relationship between spouses in fulfilling human needs, and also the perversions, fantasies and self-deception to which renunciation of marital relationships lead (57/21). Human beings may set unnatural limits upon themselves, but Allah Almighty 's Law rising above all such limits, dispels your doubts and anxieties and makes it clear that in the hours from dusk to dawn you are permitted to cohabit with your wives, as well as partake of food and drink.

இந்த எடுத்துக்காட்டிலிருந்து, இவை தெளிவாகின்றன.

1. குரானின் 2.187 வசனம் கணவன், மனைவி உடலுறவு சம்பந்தமானது. "ஆடை" என்பது உடல் நெருக்கத்தை குறிக்கிறது. இதற்கும் பெண் சமத்துவத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
2. குரானில் பல மொழிபெயர்ப்புகள் இஸ்லாமிய ஜல்லிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இஸ்லாமியர் அல்லாத திம்மிகளுக்கு இவை ஒரு ஏமாற்று வேலையாக காட்டப்படுகின்றன. இது "தக்கியா" என்ற மத ஏமாற்று வேலை, அல்லாஹூவால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு டெக்னிக். ஆதலால், திம்மிகள் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.

http://ayemarathavan.blogspot.com/2007/03/blog-post.html

 

StumbleUpon.com Read more...

இது ஒன்னுதான் இல்லாம இருந்தது,இப்ப அந்த குறையும் தீர்ந்தது,இதுல வேற கண்ண இழுக்கற மாதிரி போட்டோ வேற.

 


இங்கே படத்தில் காட்டப்படுபவை போட்டோசாப் மூலம் பெறப்பட்ட மேஜிக் அல்ல.

நிஜம்தான். ரஸ்யாவில் ஒரு நிறுவனம் 'ஜிமெயில்' சோப்பை 'சுத்தமான சோப்' என்று கூவிக் கூவி விற்பனை செய்கிறது.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP