சமீபத்திய பதிவுகள்

ஓசை செல்லவுக்கு ஓர் எச்சரிக்கை

>> Tuesday, March 25, 2008

நான்கு நாளுக்கு முன் தமிழ்மணம் என்னை  நீக்கின அதிர்ச்சியில் மீளும் முன் மடிப்பாக்கம் லக்கி அவர்கலின் பதிவு நீக்கம்.அது முடியும் முன் மனிதன் அவர்களின் பதிவு நீக்கம்,சரி அதுவும் முடியும் முன் தமிழச்சியின் நீக்கம் என்று தமிழ்மணம் அதிரடிகளை ஏற்படுத்தி வரும் வேளையில் உங்களின் இந்த இரண்டு பதிவுகள் பணிக்கட்டியாக உறைய வைத்துள்ளது.
 
 
 
 
 
2,
தமிழ்மணம் நம் தளம்! மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக்கொளுத்த மாட்டோம்!

 
http://osaichella.blogspot.com/2008/03/blog-post_723.html
 
 அன்பு நண்பர் ஓசை செல்லா அவர்களுக்கு இந்த நாளின் காலையில் கணிணியில் கைவைத்து உங்கள் பதிவுக்குள் வந்த நான் பனிக்கட்டியாக உறைந்து போய் உள்ளேன்.தமிழ்மண்த்தின் அராஜகத்திற்கு எதிர்த்து குரல் கொடுத்து அங்கே கூடாரம் அடித்த ஒரே மரத்தமிழன் நீங்கள் மட்டும் தான்.உங்களையும் இந்த பெயரிலிகள் ஏதாவதும் செய்து விடப்போகிரார்கள் என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிரேன்.ஜாக்கிரதையாக இருங்கள் ஓசை செல்லா அவர்களே

StumbleUpon.com Read more...

எழில் என்ற இந்து மத காவலனுக்கு!!!! பதில்

எழில் வலைபதிவருக்கு பதில்: கிறிஸ்தவத்தில் கல்லெரிந்து கொல்வது உண்டா?





ஏழிலாவிற்கு பதில்: கிறிஸ்தவத்தில் கல்லெரிந்து கொல்வது உண்டா?

முன்னுரை:

எழிலா என்ற தளத்தில் "இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவ மதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல் " என்ற தலைப்பில் ஒரு செய்தியைக் கண்டு மிரண்டுப்போனேன். எந்த நாட்டில் இப்படிப்பட்ட செய்தியை, எந்த சபை வெளியிட்டது என்று காணலாம் என்று ஆவலாக படித்துப்பார்த்தேன். பிறகு தான் கண்டுக்கொண்டேன், பொய்யின் காற்று இவர்கள் பக்கம் இப்போது வீசியுள்ளது என்று.

நான் ஏன் இப்படி சொல்கிறேன், என்பதை அறிய எழிலா வெளியிட்ட செய்தியை படியுங்கள்:


இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவமதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்

நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,

4. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,

5. அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.

17:3 And hath gone and served other gods, and worshipped them, either the sun, or moon, or any of the host of heaven, which I have not commanded;
17:4 And it be told thee, and thou hast heard of it, and enquired diligently, and, behold, it be true, and the thing certain, that such abomination is wrought in Israel:
17:5 Then shalt thou bring forth that man or that woman, which have committed that wicked thing, unto thy gates, even that man or that woman, and shalt stone them with stones, till they die.

http://ezhila.blogspot.com/2008/03/blog-post_5841.html

இந்த செய்தியில் வேண்டுமென்றே அவர்கள் மறைத்த உண்மை என்ன என்பதை காண்போம்.

1. இவர்கள் கொடுத்த தலைப்பின் முதல் பாகத்தை பாருங்கள்:

"இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவ மதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்"

இவர்கள் வேண்டுமென்றே செய்த தவறு, "இன்றைய கிறிஸ்த போதனை" என்று தலைப்பு வைத்தது.

நான் இவர்களிடம் கேட்கும் கேள்வி:

a) எந்த சபையில்(Church) இப்படி போதிக்கிறார்கள்?

b) எந்த நாட்டில் போதிக்கிறார்கள்?

c) புதிய ஏற்பாட்டில் எங்கு இப்படி சொல்லப்பட்டுள்ளது?

d) "இன்றைய கிறிஸ்த போதனை" என்று எப்படி உங்களால் சொல்லமுடிகிறது?
 
2. இவர்கள் கொடுத்த தலைப்பின் இரண்டாம் பாகத்தை பாருங்கள்:

"இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவ மதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்"

அதாவது, "கிறிஸ்த மதத்திலிருந்து வெளியேறினால்" என்று எழுதுகிறார்கள்.புதிய ஏற்பாட்டிற்கும் பழைய ஏற்பாட்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை என்பது புலனாகிறது.

இவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்:
 
a) இந்த வசனத்திற்கும் கிறிஸ்தத்திற்கும் என்ன சம்மந்தம் என்றுச் சொல்லுங்கள்

b) இந்த வசனம் எந்த புத்தகத்திலிருந்து எடுத்தீர்கள் என்று உங்களுக்கே தெரியுமா? ஒரு வசனத்தை மேற்கோள் காட்டும் போது, அது எங்கிருந்து எடுத்தீர்கள் என்று அதிகாரம் மற்றும் வசன எண்கள் கொடுக்கவேண்டும் என்பது கூட மற்றவர்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த வசனம் பழைய ஏற்பாட்டு வசனம் என்று தெரிந்தே மறைத்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

c) யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமா?
d) இந்த வசனம் புதிய ஏற்பாட்டில் உள்ளதென்று உங்களால் நிருபிக்கமுடியுமா?

e) கடைசியாக, பழைய ஏற்பாட்டையாவது நீங்கள் படித்ததுண்டா? குறைந்த பட்சம் இந்த வசனம் வரும் புத்தகத்தையாவது, அல்லது அதிகாரத்தையாவது படித்ததுண்டா?
இனி இந்த வசனம் பற்றிய என் பதிலைத் தருகின்றேன்:
 
1) இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் உள்ள  உபாகமம் என்ற  புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.


====================
உபாகமம் 17:2 - 7

உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,
நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,

அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படவன், ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது.
அவனைக் கொலைசெய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா ஜனங்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
====================

2) இந்த வசனத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்மந்தம் உண்டா?

யூதர்களுக்கு மோசே மூலமாக கொடுக்கப்பட்ட கட்டளைகளை மூன்று வகையாக பிரிக்கலாம்:

 a) ஆன்மீக (ஆவிக்குரிய) கட்டளைகள் (10 கட்டளைகள் போன்றவை)

 b) சமூகம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட‌ கட்டளைகள்

 c) தேவாலயத்திற்கு சம்மந்தப்பட்ட கட்டளைகள்


a) ஆன்மீக (ஆவிக்குரிய) கட்டளைகள் (10 கட்டளைகள் போன்றவை):

தேவன் மோசே மூலமாக கொடுத்த 10 கட்டளைகள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். அதாவது  நானே உன் தேவன், விக்கிரகங்களை வணங்க வேண்டாம், விபச்சாரம் செய்யவேண்டாம், திருடவேண்டாம், பொய் சொல்லவேண்டாம், மற்றவர்களின் பொருட்களின் மீது ஆசைப்படவேண்டாம், உன் பெற்றோரை கணம் செய்யவேண்டும் போன்ற கட்டளைகள் ஆகும்.

b) சமூகம் மற்றும் ஆரோக்கியம்  சம்மந்தப்பட்ட‌ கட்டளைகள்:

சமுதாயத்தில் நிகழும் பல குற்றங்களுக்கு என்னென்ன தண்டனைகள் தரவேண்டும், பற்றிய கட்டளைகள் இதில் அடங்குகிறது. திருடும் போது, விபச்சாரம் செய்யும் பொது, மற்றவனை ஏமாற்றும் போது என்ன தணடனை கொடுக்கவேண்டும், போன்ற கட்டளைகள் இதில் அடங்கும்.

இந்த கட்டளைகள் யூதர்களுக்கு மட்டும் தான், கிறிஸ்தவர்களுக்கு இல்லை. எப்படி என்று கேட்பீர்களானால், ஒரு முறை இயேசுவிடம் யூத ஆசாரியர்கள் வந்து இவரிடம் குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக, ஒரு விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை கொண்டு வந்து, மோசேயின் கட்டளைப்படி இவளை கல்லெரிந்து கொள்ளவேண்டும்,நீர் என்ன சொல்கிறீர் என்று கேட்கும் போது, "இது வரை ஒரு முறையும் பாவம் செய்யாதவன் முதல் கல்லை எரியக்கடவன்" என்று இயேசு சொல்கிறார். உடனே எல்லாரும் சென்றுவிடுகின்றனர். அதாவது, யூதர்கள் ஒரு நாடாக இருந்ததால், சமுக கட்டளைகளை தேவன் பழைய ஏற்பாட்டில் விதித்தார், புதிய ஏற்பாட்டில் அக்கட்டளைகள் கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாது. கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற கட்டளைகளை மாற்றி, எல்லாரையும் நேசியுங்கள் என்று இயேசு சொன்னார். இதை புதிய ஏற்பாட்டில் நீங்கள் படிக்கலாம்.


c) தேவாலயத்திற்கு சம்மந்தப்பட்ட கட்டளைகள்:

பழைய ஏற்பாட்டில் தேவாலயத்தில் பூசாரிகள் செய்யவேண்டியவை மிகவும் அதிகமான வேலைகள் இருந்தது, அவர்களுக்கென்று தனியான உடை இருந்தது, அதற்காக ஒரு வம்சம் அல்லது கோத்திரம் இருந்தது, பஸ்கா போன்ற பண்டிகைகள் அதற்குரிய வழிமுறைகள் இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை மக்களுக்காக பல ஆசாரங்களை அவர்கள் செய்யவேண்டும். அதையெல்லாம், புதிய ஏற்பாட்டில் இல்லை. பழைய ஏற்பாட்டின் எல்லா தேவாலய வழிமுறைகளும் புதிய ஏற்பாட்டுக்கு நிழலாக இருந்தது.

ஆக, பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டிற்கு வருவது ஆன்மீக கட்டளைகளே தவிர, யூதர்களின் தேவாலய பணிகள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள் இல்லை.

கிறிஸ்தவத்தில் அரசியல் மூலமாக ஒரு நாட்டை ஆளும் கட்டளைகள் இல்லை, இயேசு இதைப்பற்றிச் சொல்லும் போது, என் அரசு(இராஜ்ஜியம்) இந்த உலகத்திற்கு சம்மந்தப்பட்டது இல்லை என்றார். எனவே, நீங்கள் குறிப்பிட்ட பழைய ஏற்பாட்டு வசனங்கள், யூதர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது, கிறிஸ்தவர்களுக்கு அல்ல.


சரி, பழைய ஏற்பாடு மக்களுக்கு என்றாலும், ஏன் கொல்லவேண்டும் என்று கேட்பீர்கள்:

அதாவது, கி.மு. வில் வாழ்ந்த கிரேக்க மக்களிடையே இருந்த விக்கிர ஆராதனை பழக்கங்களில் சில தீய பழக்கங்கள் இருந்தன. அதாவது, விக்கிர ஆராதனைகளில் விபச்சாரம் என்பது ஒரு பகுதியாக இருந்தது, மற்றும் தங்கள் பிள்ளைகளை சிலைகளுக்கு பலி இடுவது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது. இதற்காகத் தான் தேவன அவர்களின் "அருவருப்புக்களுக்கு விலகி இருங்கள்" என்றுச் சொல்லி, கட்டளைகளையிட்டார்.

உங்கள் பிள்ளைகளை விக்கிரகங்களுக்கு பலி இடவேண்டாம் என்று கட்டளையிட்டார், இஸ்ரவேல் மக்களில் ஒருவரும் இப்படி விபச்சாரம் வேசித்தனம் செய்கிறவர்களாக இருக்கக்கூடாது என்றார்.


இந்த பகுதிக்காக "இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளும் பதில்களும்" என்ற கேள்வி பதில் கட்டுரையில் நான் கொடுத்த பதிலை இங்கு இணைக்கின்றேன். இந்த என் பதிலில் தேவதாசி முறையும், மற்றும் பழைய ஏற்பாட்டில் தேவன் இப்படிப்பட்ட விஷயங்களுக்கு விலகியிருங்கள் என்றுச் சொன்ன வசனங்களையும் நான் விவரித்துள்ளேன்.

 
7. தேவதாசி (Shrine Prostitute / Temple Prostitute / Devadasi - India) முறை

ஆனால், தாமார் அப்படிச் செய்யவில்லை. இதற்கு காரணம் "கானான்" தேசத்தில் உள்ள மக்களிடையே இருந்த "Shrine or Temple Prostitute முறையாகும்" - இந்தியாவில் இதையே "தேவதாசி" என்றுச் சொல்வார்கள். ஒரு பெண்ணை கோவிலுக்கென்று(God of Fertility) நேர்ந்துக்கொள்வார்கள், அவள் ஒரு பொது பொருளாக கருதப்படுவாள்.


Religious prostitution is the practice of having sexual intercourse (with a person other than one's spouse) for a religious purpose. A woman engaged in such practices is sometimes called a temple prostitute or hierodule, though modern connotations of the term prostitute cause interpretations of these phrases to be highly misleading.

It was revered highly among Sumerians and Babylonians. In ancient sources (Herodotus, Thucydides) there are many traces of hieros gamos (holy wedding), starting perhaps with Babylon, where each woman had to reach, once a year, the sanctuary of Militta (Aphrodite or Nana/Anahita), and there have sex with a foreigner, as a sign of hospitality, for a symbolic price. (Cf. Herodotus, Book I, para 199)

A similar type of prostitution was practiced in Cyprus (Paphos) and in Corinth, Greece, where the temple counted more than a thousand prostitutes (hierodules), according to Strabo. It was widely in use in Sardinia and in some of the Phoenician cultures, usually in honour of the goddess 'Ashtart. Presumably by the Phoenicians[citations needed], this practice was developed in other ports of the Mediterranean Sea, such as Erice (Sicily), Locri Epizephiri, Croton, Rossano Vaglio, and Sicca Veneria. Other hypotheses[specify] concern Asia Minor, Lydia, Syria and Etruscans.

It was common in Israel too, but some prophets, like Hosea and Ezekiel, strongly fought it; it is assumed that it was part of the religions of Canaan, where a significant proportion of prostitutes were male (roughly the same proportion as there were men in society at large, about 50%).[citations needed] [specify] speculates that the Canaanite peoples had a system of religious prostitution, inferring from passages such as Genesis 38:21, where Judah asks Canaanite men of Adullam "Where is the harlot, that was openly by the way side?". The Hebrew original employs the word "kedsha" in Judah's question, as opposed to the standard Hebrew "zonah". The word "kedsha" is derived from the root KaDeSh, which signifies uniqueness and holiness; thus it (according to his speculation) possibly represents a religious prostitute.

India

The practice devadasi and similar customary forms of hierodulic prostitution in Southern India (such as basavi),[1] involving dedicating adolescent girls from villages in a ritual marriage to a deity or a temple, who then work in the temple and act as members of a religious order. Human Rights Watch claims that devadasis are forced at least in some cases to practice prostitution for upper-caste members[2]. Various state governments in India have enacted laws to ban this practice. They include Bombay Devdasi Act, 1934, Devdasi (Prevention of dedication) Madras Act, 1947, Karnataka Devdasi (Prohibition of dedication) Act, 1982, and Andhra Pradesh Devdasi (Prohibition of dedication) Act, 1988.[3]


அந்த காலத்தில், சில நாடுகளில் ஒவ்வொரு பெண்ணும் வருடத்திற்கு ஒரு முறை, இப்படி தன் தெய்வத்திற்காக ஒரு நாள், தன் கணவரல்லாத ஒருவரோடு இருக்கவேண்டும், இதை அவர்கள் புனிதமாக எண்ணினர்.

8. பைபிள் எதிர்க்கும் Shrine or Temple Prostitute or "தேவதாசி" முறை:

நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கலாம், பல இடங்களில் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு "அந்நியர்களுடன் திருமண உறவுமுறைகளை" வைத்துக்கொள்ளவேண்டாம் என்று கட்டளையிடுகிறார். இதற்கு காரணம் அந்நிய ஜனங்களிடையே இருந்த இப்படிப் பட்ட பழக்கங்கள், மற்றும் இஸ்ரவேலர்களில் இப்படிப்பட்ட "தேவதாசியாக" ஒருவரும் இருக்கக்கூடாது என்று தேவன் கட்டளையிடுகிறார்


உபாகமம்: 23:17-18 ( Deuteronomy 23:17-18)

No Israelite man or woman is to become a shrine prostitute. You must not bring the earnings of a female prostitute or of a male prostitute into the house of the LORD your God to pay any vow, because the LORD your God detests them both. (NIV)

17. இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது.18. வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.


மூலமொழியில் இங்கு சொல்லப்படும் வார்த்தை " வேசியில்லை" அது "தேவதாசி"( Shrine Prostitute) என்பதாகும். எந்த ஒரு இஸ்ரவேல் பெண்ணும், ஆணும் இப்படி "தேவதாசியாக" இருக்கக்கூடாது என்பதாகும். அந்த கானானியரின் ஜனங்களில் ஆண்களும் இப்படி இருந்தனர். இப்படி Shrine Prostitute ஈடுபடுபவர்கள் அதற்காக சிறிது பணமும் பெறுவார்கள், அப்படிப்பட்ட பணம் கூட தேவனுடைய ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டுள்ளார். நாயின் கிரயம்(the Price of a Dog) என்றால், ஆண்கள் இப்படி வேசித்தனம் செய்து சம்பாதிக்கும் பணம் ஆகும்.

இப்படியாக தேவன் பலமுறை இஸ்ரவேல் மக்களுக்கு கானானியர் செய்ததுபோல செய்யவேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளார். பழைய ஏற்பாட்டு இராஜாக்கள் இப்படிப்பட்டவர்களை தங்கள் நாட்டிலிருந்து துரத்தி இருக்கிறார்கள்.


1 இராஜா 14:23-24, 15:11-12, 22:46 & 2 இராஜா 23:7

1 இராஜா 14:23 . அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.24. தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.

1 இராஜா 15:11. ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப் போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.12. அவன் இலச்சையான புணர்ச்சிக் காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,

1 இராஜா 22:46. தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான்.

2 இராஜா 23:7. கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்.


இஸ்ரவேலில் தேவனுக்கு பயந்த இராஜாக்கள் இப்படிப்பட்டவர்களை நாட்டிலிருந்து விறட்டிவிட்டார்கள்.

புதிய ஏற்பாட்டு காலத்திலும், பவுல் ஊழியம் செய்த "கொரிந்தி" பட்டணமும் இப்படிப்பட்ட அருவருப்புக்களால் நிறைந்திருந்தது. சுமார் இப்படிப்பட்ட ஆண், பெண் தேவதாசிகள் 1000 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது.

According to Nelson's Bible Dictionary Corinth was ancient Greece's most important trade city. At Corinth the apostle Paul established a flourishing church made up of a cross section of the worldly minded people who had flocked to Corinth to participate in gambling, legalized temple prostitution, business adventures, and amusements available in this first century navy town. The city soon became a melting pot for the approximately 500,000 people who lived there at the time of Paul's arrival. Source: http://www.christiangay.com/he_loves/corinth.htm

எனவே தான் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் கீழ்கண்டவாறு அவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். புதிதாக இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.


1 கொரி 6:9-11
9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜயத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் ,10. திருடரும், பொருளாசைக்காரரும்,வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.11. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.


மூலமொழியில், இந்த வசனத்தில் வரும் "வேசிமார்க்கத்தார், விபச்சாரக்காரர், ஆண்புணர்ச்சிக்காரர்" என்பது இந்த "Male/Female Temple Prostituttes " பற்றியே சொல்லப்பட்டுள்ளது.

ஆக, யேகோவாவிற்கு அருவருப்பை உண்டாக்கக்கூடியதாக இருந்தது அந்நியர்களுடைய இப்படிப்பட்ட செயல்கள்.

-----------------

முடிவுரை: இனி மேலாவது ஏதாவது வசனத்தை  குறிப்பிடுவதாக இருந்தால், மேற்கோள் காட்டி, புரிந்துக்கொண்டு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். "இன்றைய கிறிஸ்தவத்தில்" என்று எழுதி,  பழைய ஏற்பாட்டு வசனத்தை எடுத்து கிறிஸ்தவத்தை சம்மந்தப்படுத்தி இப்படியெல்லாம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

StumbleUpon.com Read more...

தமிழ்மணமும்-ஜனநாயக படுகொலைகளும்

தமிழ்மணமும்-ஜனநாயகமும்

தமிழ்மண நிர்வாகக்குழு கண்டிப்பாக யோசித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோம்
 
 
தமிழ்மணமும்-ஜனநாயகமும்

கடந்த ஒருவாரமாக தமிழ்மணத்தை உற்று பார்க்கும் நண்பர்கள் ஏதோ ஒருவித கிலி அடித்தே உள்ளனர்.ஏன் இந்த மாற்றம்.சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை இணையத்தில் உலாவ விட தமிழ்மணமே ஓர் உயர்ந்த அடைக்கலம் என்று இருக்கும் பதிவர்களை தமிழ்மணம் கடந்த நாட்களில் வெளியே தூக்கி எறிந்துள்ளது.

தமிழ்இஸ்லாம்டாட்கோம் என்ற ஒரு பதிவர் பகிரங்க மண்ணிப்புக்கடிதம் எழுதியும் அது நிராகரிக்கப்படுகிறது.இப்பொழுது இன்னொரு பதிவர் தன் பதிவை நீக்கியதற்காக சிலம்போடு வந்து நிற்கிறார்.

தமிழ்மணம் ஒரு ஜனநாயக புகலிடம் என்பது வாசகர்கள் அனைவரு அறிந்தது.பிறகு ஏன் இந்த படுகொலைகள்.

ஒரு பதிவர் தவறு செய்யும் பட்சத்தில் அவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரின் பதிவை நீக்குவது பிறகு எந்த காரணத்திற்கு நீக்கப்பட்டது என்பதை விளக்கி மற்றவர்களும் அவர் போல் பதிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுவதும் சரியான நடைமுறை.

ஒரு வேளை எச்சரிக்கப்பட்ட அந்த பதிவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை தற்காலிகமாக தளத்தில் ஒதுக்கி வைத்தல் இந்த நடைமுறைகளே தமிழ்மணத்தின் ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கும்.

வெளியேற்றப்படும் பதிவருக்கு அவரின் அடிப்படை உரிமைகள் கூட (அவரின் நியாயத்தை சொல்ல)மறுக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம் தமிழ்மண நிர்வாகிகள் யோசிபார்களா?

StumbleUpon.com Read more...

பெயரிலிக்கு ஊ போட்ட ஓசை செல்லா

 
 
 

மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க... உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க... இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை...

இப்படியெல்லாம் எழுத ஆசைதான்... ஆனா சில ஆதிக்கப்பண்ணாடைகளை நடுரோட்டுல விட்டு கொட்டைவடிநீரை (கோப்பி!) குடிக்கவைக்காமல் இந்த செல்லா போகமாட்டான் என்பது என்னைப்பத்தி தெரிஞ்ச எல்லாருக்கும் தெரியும்... காபரே டேன்ஸ் ஆரம்பம்... ஸ்டார்ட் மீசிக்! நோ டமிழ் ஸ்மெல்! ப்ளடி இடியட்ஸ்!

 

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_3938.html

StumbleUpon.com Read more...

தமிழ்மணத்தில் இருந்து தமிழச்சி நீக்கம்?

தமிழச்சியின் பதிவுகள் எங்கே?



ஒன்றுமே புரியலே உலகத்திலே... காலையில்தான் ஏதோ பிரச்சினை என்று உணர்ந்தேன். நேரமின்மையால் படிக்க இயலவில்லை. வந்து பார்த்தால் தமிழச்சியின் பதிவுகள் திரட்டியில் காணப்படவில்லை. என்ன நடக்கிறது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்?

post signature

 

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_9922.html




உண்மைதான் தமிழச்சியின் பதிவுகள் தமிழ்மணத்திஒல் இருந்து நீக்கப்பட்டு உள்ளது

Subject: Your Blog removed from www.thamizmanam.com
MIME-Version: 1.0

Content-type: text/html; charset=utf-8

From: www.thamizmanam.com listadmin@thamizmanam.com
Cc: listadmin@thamizmanam.com


Dear ,Your blog is Removed from listing by www.thamizmanam.com Administrator due to follwing reason,பதிவர் தமிழச்சி
உங்கள் பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது.

தொடர்ந்தும் நீங்கள் தமிழ்மணத்தின் எல்லைகளை மீறும் வகையிலே செயற்படுவதினாலே இப்பதிவு நீக்கப்படுகின்றது.



க. இரமணிதரன்

தமிழ்மணம், நிர்வாகி
www.www.thamizmanam.com.

StumbleUpon.com Read more...

தமிழ் மணத்தை கேள்வி கேக்காதிங்க மடிப்பாக்கம் அப்புறமா நீக்கிறுவாங்கோ




தமிழ் வலையுலக மக்களே தமிழ் மணத்தின் முன்னோடி பதிவர் மடிப்பாக்கம் அவர்கள் இன்றைக்கு ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.என்ன தெரியுமா?
 
 
அவர்டைய பதிவை நீக்கியதற்கு கண்டண பதிவு.ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் என் பிளக்கரை தமிழ்மணத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தமிழ்மண நிர்வாகம்.இதற்கு என்ன காரணம் என்றால் தளத்தின் நிபந்தனைகளை மீறினதாக செய்தி வந்தது.சரி எந்த நிபந்தனையை மீறினேன் என்று இது வரை தமிழ்மணம் சார்பில் ஒரு பதிலும் வரவில்லை.நானாகவே என்னை சமாதானம் செய்து ஒரு பதிவை வெளியிட்டேன்.
 
நான் பிண்ணூட்டம் இட்டதை கூட தமிழ்மணம் வெளியிடவில்லை.என் மேல் தமிழ்மணத்துக்கு என்ன கோபம்.
 
என் பதிவு ஏதாவதும் தமிழ்மணத்தின் நிபந்தனைக்கு எதிராக இருன்திருந்தால் உடனடியாக அதை நீக்கி இருக்கலாமே.அதை செய்யாமல் என் பிளக்கரை ஏன் தமிழ்மணத்தில் இருந்து தூக்க வேண்டும்.எனக்கு ஒரு எச்சரிக்கைகூட கொடுக்காமல் தமிழ்மணம் செய்த இந்த போக்கு சர்வாதிகார மனநிலையையே காட்டுகிறது. வீழ்தது நானாக இருந்தாலும் வெல்வது "தமிழ்மணமாக" இருக்கட்டும்.
 
தமிழ்மணம் வாழ்க

StumbleUpon.com Read more...

ஆங்கில கட்டுரையின் மொழியாக்கம்-1

ஒரு விவாத கருத்தரங்கு


இக்கருத்தரங்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பிரண்ட்பேஜ் ' பத்திரிகையால் நடத்தப்பட்டது. இன்று மேற்கினை அச்சுறுத்தும் பயங்கரவாதம் சில இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதால் அது இஸ்லாமிய பயங்கரவாதமா ? அல்லது 'பண்பாடுகளின் மோதலை ' தவிர்க்க இயலாததாக்கும் ஏதோ ஒன்று இஸ்லாமின் அடிப்படை கருத்தியல்பில் உள்ளதா ? என்பதை விவாதிப்பதே மார்ச் 4 2003 இல் நடத்தப்பட்ட இவ் விவாத கருத்தரங்கின் நோக்கம். இதில் பங்கு பெற்றோர்: ஜேமி கிளாசோவ்: வரலாற்றாய்வாளர், மற்றும் பிரண்ட்பேஜ் பதிரிகையின் மேற்பார்வை ஆசிரியர்

 

இஸ்லாம் :
அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?

ஒரு விவாத கருத்தரங்கு


இக்கருத்தரங்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பிரண்ட்பேஜ் ' பத்திரிகையால் நடத்தப்பட்டது. இன்று மேற்கினை அச்சுறுத்தும் பயங்கரவாதம் சில இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதால் அது இஸ்லாமிய பயங்கரவாதமா ? அல்லது 'பண்பாடுகளின் மோதலை ' தவிர்க்க இயலாததாக்கும் ஏதோ ஒன்று இஸ்லாமின் அடிப்படை கருத்தியல்பில் உள்ளதா ? என்பதை விவாதிப்பதே மார்ச் 4 2003 இல் நடத்தப்பட்ட இவ் விவாத கருத்தரங்கின் நோக்கம். இதில் பங்கு பெற்றோர்:

ஜேமி கிளாசோவ்: வரலாற்றாய்வாளர், மற்றும் பிரண்ட்பேஜ் பதிரிகையின் மேற்பார்வை ஆசிரியர். இவரது முக்கிய நூல் Canadian Policy towards Kurushchevாs Soviet Union மற்றும் 15 Tips on How to be a Good Leftist. இவ்விவாதக் கருத்தரங்கை வழிநடத்துபவர் இவரே. அவரும் அதில் பங்கெடுக்கிறார்.

இபின் வாராக்: பகுத்தறிவாளர், மதச்சார்பற்ற மானுடவாதி, 'நான் ஏன் முஸ்லீம் இல்லை ' எனும் நூலின் ஆசிரியர்.

ஹுசாம் அயலூஷ்: தென் கலிபோர்னியாவின் அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் மையத்தின் (Council on American Islamic Relations CAIR) இயக்குநர்.

ஆசாத் அபு ஹாலில்: ஸ்தனிஸ்தலாஸான் கலிபோர்னிய மாநில பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர். மத்திய கிழக்கு குறித்த பேராசிரியராக இதே பல்கலைக்கழகத்தின் பெர்க்லீ பிரிவில் பணியாற்றுகிறார். ாBin Laden, Islam, and Americaாs New War on Terrorismா எனும் நூலின் ஆசிரியர்.

ராபர்ட் ஸ்பென்ஸர்: Free Congress Foundation அமைப்பின் உறுப்பினர், ா Islam Unveiledா எனும் சர்ச்சைக்குரிய நூலின் ஆசிரியர்.

ஜேமி கிளாசோவ்: கனவான்களே இக்கருத்தரங்கில் நான் பெரிதாக ஏதும் பங்கு பெறப்போவதில்லை. ஒரு வினாவின் மூலம் விவாதத்தை தொடக்கி விட்டு மேடை இறங்கி விடுவதே என் பங்கு. எனவே தொடங்குவோம். மேற்கத்திய நாடுகளின் பார்வையில் ஒரு அபாயமாக கணிக்கப்படும் ஓர் நிகழ்வு இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களில் உள்ளதா அல்லது இஸ்லாமின் அடிப்படையிலேயே உள்ளதா ? இன்று ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றிற்கான ஆபத்துக்கள் சில தீவிரவாதிகள் ஏற்படுத்தக் கூடியதா அல்லது ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுடன் இணைந்து வாழ முடியாத தன்மை இஸ்லாமின் அடிப்படைகளில் உள்ளதா ? இதுதான் இந்த வன்முறைகளுக் கெல்லாம் காரணமா ?

ராபர்ட் ஸ்பென்ஸர்: எந்த ஒரு தனி நபரும் இஸ்லாம் அனைத்திற்குமாக என்று பேசிவிட முடியாது. முஸ்லீம்களில் ஒரு சாரார் இஸ்லாமின் அடிப்படை என கருதுவது மற்றொரு சாராரால் இஸ்லாமின் அடிப்படைக்கே விரோதமான ஒன்றானதென கருதப்படலாம். சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாத ஆலோசகன் ஷேக் ஒமர் அப்துல் ரக்மான் பின்வருமாறு கூறுகிறான், 'புனித போர் கடமை இஸ்லாத்தின் தலையாய கடமை ஆகும். புனிதபோர் இல்லாத இஸ்லாம் தலையில்லாத உடல் போன்றதாகும். ' சிறை தண்டனை

பெறும் முன்னர் ஷேக் ஒமர் நியூயார்க் மசூதிகளில் இமாம் சிராஜ் வகாஜான் அழைப்பின் பேரில் உரைகள் ஆற்றி வந்தான். இமாம் சிராஜ் வகாஜ் அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் மைய (CAIR) ஆலோசனை குழு உறுப்பினர் என்றாலும் இந்த கருத்தியலை ஹுசாம் அயலூஷ் மறுப்பார் என நம்புகிறேன். எனினும் இத்தகைய வன்முறைக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைப்பவர்கள் தம் கருத்தியலை குர்ரான் மற்றும் இஸ்லாமிய வரலாறு மற்றும் பாரம்பரியம் சார்ந்தே உருவாக்குகிறார்கள் என்பது மறுக்கமுடியாதது. இராணுவவாத இஸ்லாமின் ஆதரவாளர்கள் முகமதுவின் முக்கிய ஹதீஸானை 'அல்லாவையே தங்கள் இறைவனாகவும் என்னை(முகமதுவை) இறுதி நபியாகவும் மக்கள் ஏற்குமளவும் அவர்களுடன் போராடவே எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் ஏற்கும் போதே அவர்களது இரத்தமும் சொத்துக்களும் பாதுகாப்பு பெறும். ' மேற்கோள் காட்டுகின்றனர். எனவே இஸ்லாமிய பயங்கரவாதிகள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து விலகிவிட்டவர்கள் என்பது ஒரு பார்வையில் சரியாகவே இருக்கலாம்.

ஆனால் அவர்களது இஸ்லாம் அமைதியான இஸ்லாம் போன்றே ஒரு வேளை அதைக் காட்டிலும் உண்மையான வரலாற்றுப் பாரம்பரியம் உள்ள இஸ்லாமிய மரபென்பதே உண்மை.

ஆசாத் அபு ஹாலில்: ஸ்பென்ஸர் இஸ்லாம் குறித்த தன் அறியாமையை வெளிக்காட்ட எந்த சந்தர்ப்பத்தையும் தவறவிடுவதில்லை. அவரது இஸ்லாம் குறித்த அறிவினை பறைசாற்றுபவை எல்லாம் ஒன்று மேற்கத்திய பத்திரிகை செய்திகள் அல்லது ஏதாவது அமெரிக்க சிறையில் வசிக்கும் வெறி பிடித்த மெளல்வியுடையவை. டேவிட் க்வாரேஷ் அல்லது டெட் பண்டி ஆகியோரினை கிறிஸ்தவ இறையியலின் உதாரணங்களாக காட்டுவது போன்ற மடத்தனம் இது. இஸ்லாம், கிறிஸ்தவம் யூதம் ஆகிய மூன்று மதங்களின் வரலாறுகளுமே சமயப் பொறுமை மற்றும் மானுட சமத்துவம் ஆகிய விஷயங்களில் கறை படிந்தே விளங்குகின்றன. ஆனால் மறை நூல்களிலும் வரலாற்றிலும் மிகுந்த கொடுமைகளை செய்ததில் கிறிஸ்தவமே முன்னணியில் உள்ளது. இஸ்லாமை திட்டுகிற ஸ்பென்ஸர் அதே நேரத்தில் கிறிஸ்தவத்தின் வரலாற்றை கேள்விக்குள்ளாக்காமல் இருக்க முடியாது. முதலில் கேட்கப்பட்ட கேள்வியை பொறுத்தவரையில் எல்லா மதங்களிலுமே வெறியர்கள், பயங்கரவாதிகள், பித்துக்குளித்தனமானவர்கள் உள்ளனர். அதை வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, கலாச்சாரத்தையோ அல்லது மக்களையோ முத்திரை குத்துகிற போக்கு சரியில்லை.

ஸ்பென்ஸர்: ஒமர் அப்துல் ரக்மான் புகழ் பெற்ற அல் அசார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ஆனால் டேவிட் க்வாரேஷோ அல்லது டெட் பண்டியோ அந்த அளவு முக்கிய உயர் பொறுப்பினை மேற்கில் என்றும் அடைந்ததில்லை. எனது இஸ்லாமிய அறிவிற்கு ாமேற்கத்திய பத்திரிகை செய்திகள்ாதான் மூலம் என்பதை பொறுத்தவரை எனது இஸ்லாமிய அறிவு இபின் கால்துன், இபின் தாய்மியா,முகமது முஷான் கான், S. K.மாலிக், மற்றும் சாயித் ராஜாய் கோரசானி ஆகியோரது கூற்றுக்களின் அடிப்படையில் அமைந்தது என தெளிவு படுத்துகிறேன். நான் மேற்கூறிய நபர்கள் எல்லாம் எந்த மேற்கத்திய பத்திரிகைகளின் செய்தியாளர்கள் என அபு ஹாலில் தெரியப்படுத்துவார் என கருதுகிறேன். கூறும் மனிதனை குறை கூறி (ad hominem )கருத்துக்களை எதிர்கொள்வது

தன்னிடம் கருத்துக்கள் தீர்ந்துவிட்ட ஒருவரது வாதத்தன்மை. கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை விவாதிப்பதில் கருத்தை செலுத்தலாம். கிறிஸ்துவத்தின் குறைகளை சுட்டிக்காட்டி இஸ்லாமை பாதுகாக்க நினைப்பதும் அதைப்போலவே சரியான நிலைபாடல்ல. ஹிட்லருக்கோ ஸ்டாலினிக்கோ கிறிஸ்தவம் பொறுப்பேற்க முடியாது. இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்குமான அடிப்படை வேறுபாடு யாதெனில், இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையற்றோருக்கு எதிரான புனிதப்போரினை கடமையாக முன்வைக்கிறது. இஸ்லாமில் மட்டுமே அதன் செவ்விய நாட்களில் இருந்து இன்று வரை அதன் மிக முக்கிய

இறையிலாளர்களால் நம்பிக்கையற்றோருக்கு எதிரான வன்முறையும் போரும் நிறுவனப்படுத்தப்பட்டு நியாயப்படுத்தப்பட்டுள்ளது. புகழ் பெற்ற மாலிகி நீதிபதி இபின் அபி சாயீத் அல் க்ய்ராவானி கூறுகிறார், ' ஜாகாத் இஸ்லாமியரின் புனித நிறுவனமாகும். முஸ்லீம் அல்லதாவர்கள் இஸ்லாமுக்கு மாறலாம் அல்லது ஜாஸாயா வரியினை பணிவுடன் கட்டலாம். இரண்டும் இல்லையெனில் நம்பிக்கையற்றோர் மீது போர் தொடுப்பது அவசியமாகும். ' அபு ஹாலில் தாங்கள் தயை கூர்ந்து இக்கோட்பாட்டினை மறுக்கும் ஒரு முக்கிய இஸ்லாமிய மரபினை காட்டுவீர்களா ? உதாரணமாக ஏறத்தாழ அனைத்து கிறிஸ்தவ சர்ச்களும் சிலுவைப்போரின் மூல கருத்தியல்களை மறுக்கின்றனர்.

அபு ஹாலில்: மீண்டும் ஸ்பென்ஸர் தன் அறியாமையை வெளிக்காட்ட எந்த சந்தர்ப்பத்தையும் தவறவிடுவதில்லை என நிரூபித்துள்ளார். ஒமர் அப்துல் ரக்மான் என்றென்றும் அல் அசார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றவில்லை. மாறாக அதன் கிளை ஒன்றில் பகுதி நேர விரிவுரைக்கு வரவழைக்கப்பட்டார். அவரது வெறித்தன்மை வெளியானதும் அல் அசார் அதிகாரிகள் அவரை வெளியேற்றினர். ஆக இஸ்லாமிய உலகின் முக்கிய அல் அசார் பல்கலைக்கழகம் ஒமர் அப்துல் ரக்மானின் கருத்துக்களுக்கும் இஸ்லாமுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வெளீப்படையாக அறிவித்துள்ளது. இஸ்லாமிய உலகில் ஒமர் அப்துல் ரக்மானுக்கு ஆதரவாக எவ்வித ஆர்ப்பாட்டமும் நடைபெறவில்லை. ஆனால் ஸ்பென்ஸரோ எவ்வித இஸ்லாமிய உலகில் எவ்வித முக்கியத்துவமுமற்ற வார்த்தைகளை பிடித்துக்கொண்டு 'ஒமர் அப்துல் ரக்மான் அனைத்து இஸ்லாமின் பிரதிநிதி அனைத்து முஸ்லீம்களாலும் மதிக்கப்படுபவர் ' என கூறுகிறார். முஸ்லீம்களை விட ஸ்பென்ஸருக்குத்தான் ஒமர் அப்துல் ரக்மான் முக்கியமானவராக தோன்றுகிறார்.

ஸ்டாலின் வேண்டுமானால் கிறிஸ்தவத்துடன் உறவற்றவராக இருக்கலாம். ஆனால் ஹிட்லர் ? ஹிட்லர் தன்னை முழுக்க முழுக்க கிறிஸ்தவராகவே கருதியவர். ஆனால் ஸ்பென்ஸர் இதைவிடவும் ஒருபடி மேலே போகிறார், சிலுவைப்போர்களுக்கும் போப்களுக்குமான தொடர்பு, நிறுவனப்படுத்தப்பட்ட யூத வெறுப்பு, 3 லிருந்து 9 மில்லியன் பெண்களை சூனியக்காரிகளென எரித்தது, நீதியின் தோமிய கோட்பாடு ஆகிய அனைத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் தொடர்பு கிடையாது என கூறுகிறார் போலும். நம்பிக்கையற்றவர்களுக்கு எதிரான புனிதப்போர் இஸ்லாமில் மட்டுமே உள்ளது என ஸ்பென்ஸர் கூறுவது அறியாமையும் நேர்மையின்மையும் கலந்தது. தாமஸ் அகினாஸ் எழுதுயிருப்பதை படியுங்கள் பின் வாதத்திற்கு வாருங்கள்.

ஸ்பென்ஸர்: அல் அசார் பல்கலைக்கழக முன்னாள் மாணவன் ஒருவரின் வார்த்தைகள், 'ஷேக் ஒமர் அப்துல் ரக்மான் எனக்கு அல் அசார் பல்கலைக்கழகத்தில் குர்ரான் குறித்த விளக்கங்கள் என விரிவுரைகளாற்றினார். பின்னர் தன் பணியிலிருந்து விலகி 'ஜாகாத் ' மற்றும் 'கமா அல் இஸ்லாமியா ' எனும் இயக்கங்களில் பணியாற்றினார். ' 'அப்துல் ரக்மான் அனைத்து இஸ்லாமின் பிரதிநிதி அனைத்து முஸ்லீம்களாலும் மதிக்கப்படுபவர் ' என நான்கூறியதாக கூறுவது என் வார்த்தைகளை கவனிக்காததால் எழுந்த பிழை. நான் அவ்வாறு எவ்விடமும் கூறவில்லை.மாறாக நான் என்ன கூறுகிறேன் என்றால் அப்துல் ரக்மான் இஸ்லாமின் பாரம்பரியமிக்க செல்வாக்குள்ள ஒரு மரபினைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பல குற்றமற்றவர்களை கொல்லும் மானுட வெடிக்குண்டு தாக்குதல் 'இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் நியாயமானதோர் விஷயமாகும் ' என அண்மையில் கூறினார் அல் அசார் பல்கலைக்கழக முதன்மை ஷேக் முகமது சாயீத் தந்தாவி. ஏதோ ஓரிரு தீவிரவாதிகளின் குரலா இது ஆசாத் ? மாறாக அண்மையில் அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகத்தில் மானுட வெடிக்குண்டுகளுக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கத்தில் 2000 பல்கலைக்கழக மாணவர்கள் மானுட வெடிகுண்டுகளாக முன்வந்தனர். கத்தோலிக்க திருச்சபை குறித்த அவரது மடத்தனமான மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. திருச்சபையின் பாவங்களுக்கு மதம் காரணமில்லை என நான் கூறியதாக ஒரு பொய்யனோ அல்லது மடையனோ தான் கருத முடியும்.இஸ்லாமை பாதுகாக்க கிறிஸ்தவத்தை கீழ்மைப்படுத்த வேண்டும் என்கிற நிலையே மோசமானது. இதோ இன்றைய நிலையில் கிறிஸ்தவ வெறித்தன்மைக்கும் இஸ்லாமிய வெறித்தன்மைக்குமான வேறுபாடு. கனடாவைச் சார்ந்த ஜெரி பால்வெல் முகமதுவை பயங்கரவாதி என்கிறார். அதனால் இந்தியாவில் வெடிக்கும் கலவரத்தில் 8 பேர் மரணம் 90 பேர் படுகாயம். ஈரான் ஜெரி பால்வெல்லுக்கு மரண தண்டனை விதிக்கிறது. இந்த எதிர்வினைகள் அனைத்துமே இஸ்லாமிய அடிப்படை கொண்டவை.அதைப்போலவே ஹிட்லருக்கும் ஒசாமாவுக்குமான வேறுபாடு என்னவென்றால் ஹிட்லரின் சித்தாந்தத்திற்கு ஆதரவாக அவன் கிறிஸ்தவ விவிலிய மேற்கோள்களை காட்டவில்லை. மாறாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் தம் செயல்களை குர்ரானையும் ஹதீசையும் இஸ்லாமிய இறையியலையும் கொண்டு நியாயப்படுத்த முடிகிறது. ஈரானின் ஐ நா துதெராக விளங்கும் ஒருவரான சாயித் ராஜாய் கோரசானி 'மானுட உரிமைகள் என்பதே கிறிஸ்தவ யூதேய கருத்தமைப்புதான், அது இஸ்லாமுக்கு அந்நியமானது ' என கூறும் போது அதை ஒரு கணிசமான இஸ்லாமியரின் கருத்தியல் இல்லை என எப்படி கூறு முடியும் ?

ஹுசாம் அயலூஷ்: இத்தருணத்தில் நான் ஒன்றினை தெளிவாக்க விரும்புகிறேன். மற்ற மதத்தினரை அவர்களது நம்பிக்கைகளை இழிவாக பேசுவதென்பது இஸ்லாமுக்கு விரோதமான ஒன்று. உலகின் அனைத்து தீவிரவாதிகளும் தம் வெறுப்பினை பரப்ப மதங்களை தவறாக பயன்படுதியுள்ளனர். ஆம் ஹிட்லர் கிறிஸ்தவ மத நம்பிக்கையை அவ்வாறு பயன்படுத்தியுள்ளான். இதோ அவனது பேச்சிலிருந்தே, 'ஒரு கிறிஸ்தவன் என்னும் முறையில் என் உணர்ச்சிகள் என் தேவரை என் மீட்பரை ஒரு போர் வீரராகவே காட்டுகிறது. ஒரு தனி மனிதனாக தனிமையில் உண்மையை உணர்ந்து யூதர்களுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்த போராளியாக நான் அவரை காண்கிறேன். ' (ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ் வெளீயீடு) ஒரு இஸ்லாமியன் என்ற முறையில் வெறுப்பைத் துணெ¢டும் இவ்வார்த்தைகளுக்கும் நாங்கள் நேசிக்கும் இயேசு (அவருக்கு அமைதி உண்டாகட்டும்) வின் போதனைகளுக்கும் தொடர்பில்லை என நான் அறிவேன். ஆனால் எந்த மதமும் மனிதனின் தவறான பயன்பாட்டுக்கு விதிவிலக்கல்ல என்பதனை இது காட்டுகிறது . இஸ்லாம் கிறிஸ்தவம் மற்றும் உலகின் அனைத்து மதங்களும் அமைதியுடன் வாழ முடியும். அதற்கு உண்மையான மத நம்பிக்கையாளர்கள் தங்களுள் இருக்கும் சில வெறியர்களை சகிக்கும் போக்கை கைவிட வேண்டும். நம்மிடம் இருந்து வேறுபடும் மக்களின் நற்குணத்தை நிராகரிப்பவர்களை நாம் சகிக்ககூடாது. நான் ஒரு முஸ்லீம் எனவே இஸ்லாமை அறிவேன். அதேசமயம் நாம் பயின்ற பிராட்டஸ்டண்ட் பள்ளியிலிருந்தும் மேலும் என் நண்பர்கள் உறவினர்களிடமிருந்தும் நான் யூத கிறிஸ்தவ சமயங்களை அறிந்தேன். எனவே உசாமா பின்லேடனும் ஸ்பென்ஸரும் கருதும் வேறுபாட்டைக் காட்டிலும் நம் அனைவரிடமும் அதிகமான பொதுமை இருப்பதை நான் அறிந்துள்ளேன். தீவிரவாதத்தை பொறுத்தவரையில் அது ஒரு வளரும் அபாயம். மேற்கத்திய நாடுகளுக்கென்றில்லை உலகமனைத்திற்குமே அது ஒரு அபாயம் தான். அந்த அபாயம் மதத்தீவிரவாதம் தலை துகெ¢குவதுதான். இந்தியாவில் ஹாந்து தீவிரவாதம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்ரேலில் யூத தீவிரவாதம், செர்பியா ஏன் அமெரிக்காவிலும் கூட கிறிஸ்தவ தீவிரவாதம். ஐநாவில் டிசம்பர் 1999 இல் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது. 23 பக்க ஐநா அறிக்கை தெரிவிப்பதென்ன ? எந்த மதமும் தீவிரவாதத்திற்கு விதி விலக்கல்ல. மேலும் அந்த அறிக்கை இந்த மத தீவிரவாதங்கள் அவற்றை வளர்க்கும் சமுதாய பொருளாதார காரணிகளின் முழுமைத்தன்மையுடன் பார்க்கப்பட வேண்டுமென தெரிவிக்கிறது. குறிப்பாக அந்த அறிக்கை கூறுகிறது, ' இஸ்லாமை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வரும் சிறு எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளையும், இஸ்லாமை மார்க்கமாக பின்பற்றி வரும்

அமைதி, மதச் சகிப்புத்தன்மை மற்றும் பாகுபாடற்ற தன்மையுடன் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டியது அவசியம். ' கொசோவா மற்றும் போஸானியாவிலும் நடைபெற்ற படுகொலைகளுக்கு கிறிஸ்தவம் பொறுப்பினை ஏற்காதது போல் இஸ்லாமும் சில தனிமனிதர்களின் செயலுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை. கொசோவா மற்றும் போஸானியாவிலும் நடைபெற்ற படுகொலைகளை சில மில்லியன் கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு நடத்தி ஆதரித்திருந்தும் கூட.

இபின் வாராக்: எல்லா மதத்தீவிரவாதங்களும் ஒரே தன்மை கொண்டவைதான். அவை சமுதாய பொருளாதார காரணிகளால் வளர்ந்து வலு பெற்று வருவதும் உண்மைதான். கிறிஸ்தவ ஹாந்து யூத தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவை ஒரு நாடு சார்ந்தவை. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதமோ உலகப்பேரரசு கனவு கொண்டது.

உலகம் முழுவதும் ஒற்றை இறைச்சட்டத்தின் கீழ் ஷரியத்தின் கீழ் வரவேண்டும் எனும் நோக்கம் கொண்டது. யூதர்களும் ஹாந்துக்களும் மதம் மாற்ற நோக்கங்கள் கொண்டவர்களல்ல. கிறிஸ்தவர்கள் மதம் பரப்ப சர்வ தேச பயங்கரவாதத்தை கருவியாக்குவதில்லை.மதம் சார்ந்த வன்முறைக்கு ஏக இறைவணக்கத்தை வலியுறுத்தும் மதங்களே பெரும் காரணமாக இருக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் போல இஸ்லாம் தன்னை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி கொள்ளவில்லை. இரண்டாவதாக வன்முறை இஸ்லாமின் தன்னியல்பில் உள்ள ஒன்று. முகமது நடத்திய போர்கள், குர்ரானில் உறைந்திருக்கும் வாளின் சுராக்கள் இவை அனைத்திலும் அவ்வன்முறை உள்ளது. ஒரு கிறிஸ்தவன் செய்யும் வன்முறை ஏசுவின் மறு கன்னத்தை காட்ட சொன்ன வார்த்தைகளை மீறி செய்யும் வன்முறை. ஆனால் ஒரு இஸ்லாமியனின் வன்முறைக்கு குர்ரான், ஹதீஸ் மற்றும் மதக்குருக்களின் ஆசிர்வாதம் இருக்கிறது. 1992 இல் இருந்து 1,50,000 மக்களை அல்ஜீரியாவில் கொன்று குவித்துள்ள இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கும் என்ன தொடர்பு ? அல்லது அதற்கும் வறுமைக்கும் என்ன தொடர்பு ? இஸ்லாம் அரசியலுக்காக பயன்படுகிறதா ? இல்லை அரசியல், அரசியலற்றது என்கிற பகுப்புக்கள் எல்லாம் இஸ்லாம் அறியாதவை. இஸ்லாம் வாழ்க்கை முழுவதற்கும் ஆணைகள் கொண்டதோர் மார்க்கம்.

முதல் நாள் கருத்தரங்கின் மீதிப்பகுதி அடுத்த வாரம்

நன்றி: www.frontpagemagazine.com

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20303292&format=html

StumbleUpon.com Read more...

தமிழ்மணம் க.இரமணிதரன் அவர்களுக்கு சவால்





அன்பு நண்பர் தமிழ்மணம் க.இரமணிதரன் உங்களின் இந்த பதில் வேடிக்கையாக உள்ளது.நான் சவால் விடுகிறேன் மற்ற பதிவர்களின் பதிவுகளை ஒப்பிடும் போது ஒரு சதவீத தனிமனித தாக்குதல்களை என் பதிவில் இருந்து எனக்கு நீங்கள் பட்டியல் இட்டுக்காட்டுங்கள்.
 
சரி நானும் ஒரு தமிழ்மண பதிவராக இருந்தவன் தானே பின் ஏன் நீங்கள் கீழே உள்ளது போல் ஒரு தனி மடலை எனக்கு இதுவரை அனுப்பவில்லை.என் பதிவுகள் தனிமனித தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தது என்று அநியாயமாக குற்றம் சாட்ட உங்களுக்கு எப்படி மனது வந்தது.உங்களை எதாவது திட்டி உள்ளேனா?.அல்லது ஏதாவது தமிழ்மண பதிவர்களை திட்டி உள்ளேனா? என்று சொல்லுங்கள்.நான் எழுதிய அந்த பதிவை நீங்கள் நீக்கி விட்டு இது போல் எனக்கும் எச்சரிக்கை செய்து இருக்கலாம் அல்லவா? அதை ஏன் தமிழ்மணம் செய்யத்தவறியது.என் மேல் உங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம்.
 
இதற்கு தமிழ்மணம் சொல்லப்போகும் பதில் என்ன?
 
 
 
 
 
 
 
மனிதன் said...

Dear author,Your post தமிழ்மணமும்-ஜனநாயகமும்is removed by www.thamizmanam.com Administrator due to follwing reason,pபதிவர் மனிதன்





உங்களின் இப்பதிவும் தெய்வமகன் போன்றோரின் பதிவுகள் போல தொடர்ச்சியாக தனிமனிதத்தாக்குதலை மேற்கொள்ளப்பயன்படுத்தப்படுமெனில், நீக்கப்படும் என்று அறியத்தருகிறேன்

 
 
லக்கிலுக் said...

தமிழ்மணம் நிர்வாகத்திலிருந்து வந்திருக்கும் கடிதம் :

பதிவர் லக்கி லுக் உங்களின் இவ்விடுகையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ச்சியான தனிமனித்தாக்குதல் நிகழ்த்தப்படின், உங்கள் முழுப்பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்று இத்தால் அறியத் தருகிறேன். க.இரமணிதரன் தமிழ்மணம்

மாலை 5:05 , மார்ச் 25, 2008  

 

StumbleUpon.com Read more...

தமிழ்மணம் க.இரமணிதரன் அவர்களுக்கு சவால்

அன்பு நண்பர் தமிழ்மணம் க.இரமணிதரன் உங்களின் இந்த பதில் வேடிக்கையாக உள்ளது.நான் சவால் விடுகிறேன் மற்ற பதிவர்களின் பதிவுகளை ஒப்பிடும் போது ஒரு சதவீத தனிமனித தாக்குதல்களை எனக்கு நீங்கள் பட்டியல் இட்டுக்காட்டுங்கள்.
 
சரி நானும் ஒரு தமிழ்மண பதிவராக இருந்தவன் தானே பின் ஏன் நீங்கள் கீழே உள்ளது போல் ஒரு தனி மடலை எனக்கு இதுவரை அனுப்பவில்லை.என் பதிவுகள் தனிமனித தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தது என்று அநியாயமாக குற்றம் சாட்ட உங்களுக்கு எப்படி மனது வந்தது.உங்களை எதாவது திட்டி உள்ளேனா?.அல்லது ஏதாவது தமிழ்மண பதிவர்களை திட்டி உள்ளேனா? என்று சொல்லுங்கள்.நான் எழுதிய அந்த பதிவை நீங்கள் நீக்கி விட்டு இது போல் எனக்கும் எச்சரிக்கை செய்து இருக்கலாம் அல்லவா? அதை ஏன் தமிழ்மணம் செய்யத்தவறியது.என் மேல் உங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம்.
 
இதற்கு தமிழ்மணம் சொல்லப்போகும் பதில் என்ன?
 
 
 
 
 
 
 
மனிதன் said...

Dear author,Your post தமிழ்மணமும்-ஜனநாயகமும்is removed by www.thamizmanam.com Administrator due to follwing reason,pபதிவர் மனிதன்





உங்களின் இப்பதிவும் தெய்வமகன் போன்றோரின் பதிவுகள் போல தொடர்ச்சியாக தனிமனிதத்தாக்குதலை மேற்கொள்ளப்பயன்படுத்தப்படுமெனில், நீக்கப்படும் என்று அறியத்தருகிறேன்

 
 
லக்கிலுக் said...

தமிழ்மணம் நிர்வாகத்திலிருந்து வந்திருக்கும் கடிதம் :

பதிவர் லக்கி லுக் உங்களின் இவ்விடுகையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ச்சியான தனிமனித்தாக்குதல் நிகழ்த்தப்படின், உங்கள் முழுப்பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்று இத்தால் அறியத் தருகிறேன். க.இரமணிதரன் தமிழ்மணம்

StumbleUpon.com Read more...

தமிழ்மணமும்-ஜனநாயகமும்

தமிழ்மண நிர்வாகக்குழு கண்டிப்பாக யோசித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோம்
 
 
தமிழ்மணமும்-ஜனநாயகமும்

கடந்த ஒருவாரமாக தமிழ்மணத்தை உற்று பார்க்கும் நண்பர்கள் ஏதோ ஒருவித கிலி அடித்தே உள்ளனர்.ஏன் இந்த மாற்றம்.சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை இணையத்தில் உலாவ விட தமிழ்மணமே ஓர் உயர்ந்த அடைக்கலம் என்று இருக்கும் பதிவர்களை தமிழ்மணம் கடந்த நாட்களில் வெளியே தூக்கி எறிந்துள்ளது.

தமிழ்இஸ்லாம்டாட்கோம் என்ற ஒரு பதிவர் பகிரங்க மண்ணிப்புக்கடிதம் எழுதியும் அது நிராகரிக்கப்படுகிறது.இப்பொழுது இன்னொரு பதிவர் தன் பதிவை நீக்கியதற்காக சிலம்போடு வந்து நிற்கிறார்.

தமிழ்மணம் ஒரு ஜனநாயக புகலிடம் என்பது வாசகர்கள் அனைவரு அறிந்தது.பிறகு ஏன் இந்த படுகொலைகள்.

ஒரு பதிவர் தவறு செய்யும் பட்சத்தில் அவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரின் பதிவை நீக்குவது பிறகு எந்த காரணத்திற்கு நீக்கப்பட்டது என்பதை விளக்கி மற்றவர்களும் அவர் போல் பதிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுவதும் சரியான நடைமுறை.

ஒரு வேளை எச்சரிக்கப்பட்ட அந்த பதிவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை தற்காலிகமாக தளத்தில் ஒதுக்கி வைத்தல் இந்த நடைமுறைகளே தமிழ்மணத்தின் ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கும்.

வெளியேற்றப்படும் பதிவருக்கு அவரின் அடிப்படை உரிமைகள் கூட (அவரின் நியாயத்தை சொல்ல)மறுக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம் தமிழ்மண நிர்வாகிகள் யோசிபார்களா?

StumbleUpon.com Read more...

தமிழ் மணத்தை கேள்வி கேக்காதிங்க மடிப்பாக்கம் அப்புறமா நீக்கிறுவாங்கோ

தமிழ் வலையுலக மக்களே தமிழ் மணத்தின் முன்னோடி பதிவர் மடிப்பாக்கம் அவர்கள் இன்றைக்கு ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.என்ன தெரியுமா?
 
 
அவர்டைய பதிவை நீக்கியதற்கு கண்டண பதிவு.ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் என் பிளக்கரை தமிழ்மணத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தமிழ்மண நிர்வாகம்.இதற்கு என்ன காரணம் என்றால் தளத்தின் நிபந்தனைகளை மீறினதாக செய்தி வந்தது.சரி எந்த நிபந்தனையை மீறினேன் என்று இது வரை தமிழ்மணம் சார்பில் ஒரு பதிலும் வரவில்லை.நானாகவே என்னை சமாதானம் செய்து ஒரு பதிவை வெளியிட்டேன்.
 
நான் பிண்ணூட்டம் இட்டதை கூட தமிழ்மணம் வெளியிடவில்லை.என் மேல் தமிழ்மணத்துக்கு என்ன கோபம்.
 
என் பதிவு ஏதாவதும் தமிழ்மணத்தின் நிபந்தனைக்கு எதிராக இருன்திருந்தால் உடனடியாக அதை நீக்கி இருக்கலாமே.அதை செய்யாமல் என் பிளக்கரை ஏன் தமிழ்மணத்தில் இருந்து தூக்க வேண்டும்.எனக்கு ஒரு எச்சரிக்கைகூட கொடுக்காமல் தமிழ்மணம் செய்த இந்த போக்கு சர்வாதிகார மனநிலையையே காட்டுகிறது. வீழ்தது நானாக இருந்தாலும் வெல்வது "தமிழ்மணமாக" இருக்கட்டும்.
 
தமிழ்மணம் வாழ்க

StumbleUpon.com Read more...

தீமையை உண்டாக்கியது கடவுள்-அதனால் கடவுள் இல்லை?

தேவனா தீமையை உண்டாக்கினார்?

கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசுவதில் பேர்வாங்கின(பேர்போன) ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் இருந்தார். அவர் ஒவ்வொரு செமஸ்டரிலும் தனது முதல் வகுப்பில் இங்கு யாராவது கிறிஸ்தவ மாணவர்கள் இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டு அவர்களை எழுப்பி விட்டு அவர்களை கிண்டல் பண்ணி அவர்களின் கிறிஸ்தவ விசுவாசத்தை எள்ளி நகையாடுவார். இப்படியாக ஒரு செமஸ்டரில் யாராவது கிறிஸ்தவ மாணவர்கள் இருக்கிறீர்களா என்று அவர் கேட்ட போது ஒரு மாணவன் தன் கையை உயர்த்தி எழுந்து நின்றான்.

அவனைப்பார்த்து அந்த பேராசிரியர் 'தேவன் தான் எல்லாவற்றையும் உண்டாக்குகிறாரா?' என்று கேட்டார்.

அவன் அதற்கு' யெஸ் சார். அவரே உண்டாக்குகிறார்' என்றான்.

அப்போது அந்த பேராசிரியர், ' தேவன் தான் எல்லாவற்றையும் உண்டாக்குகிறார் என்றால் தீமையையும் அவர்தான் உண்டாக்கியிருக்க வேண்டும் . அப்படிதானே?' என்று கேட்டார்.

அந்த மாணவன் பதில் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தா. அந்த பேராசிரியர் மீண்டும் ஒரு முறை கிறிஸ்தவ விசுவாசத்தை கேள்விக்குறியாக்கிவிட்ட பெருமிதத்தில் இருந்தார்.

அப்போது வேறொரு மாணவன் எழுந்து நின்று, சார், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?' என்றான்.

சரி கேள் என்றார் பேராசிரியர்.

சார், குளிர்ச்சி என்று ஒன்று இருக்கிறதா? என்று அந்த மாணவன் கேட்டான்.

ஆம் இருக்கிறது. என்ன மடத்தனமான கேள்வி கேட்கிறாய். நீ ஒரு போதும் குளிர்ச்சியை உணர்ந்ததில்லையா என்று அவர் பதிலளித்தார்.

அந்த மாணவன் பதிலாக, சார், உண்மையில் குளிர் என்று ஒன்று இல்லை. வெப்பம் இல்லாத ஒன்றை தான் நாம் குளிர்ச்சி என்று கருதுகிறோம். முற்றிலும் வெப்பம் இல்லாமல் போகும் போது முற்றிலும் குளிர்ச்சியாகிவிடுகிறது. உண்மையில் குளிர் என்று ஒன்று இல்லை. வெப்பம் இல்லாதபோது நாம் எவ்வாறு உணருகிறோம் என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான் நாம் குளிர் என்ற ஒரு பதத்தை உண்டாக்கியிருக்கிறோம் என்று கூறிய அந்த மாணவன் தோடர்ந்து, சார் இருள் என்று ஒன்று இருக்கிறதா? என்று கேட்டான்.

அந்த பேராசிரியர் மீண்டுமாக, ஆம் இருக்கிறது என்றார்.

அதற்கு அந்த மாணவன், சார், உண்மையில் இருள் என்று ஒன்று இல்லவே இல்லை. வெளிச்சமின்மையைதான் நாம் இருள் என்று கூறுகிறோம். வெளிச்சம் இல்லாதபோது என்ன நடக்கிறது என்பதைக் குறிப்பிடுவதற்காக மனிதன் உருவாக்கிய பதமே இருள் என்பதாகும் என்றான்.

கடைசியாக அந்த மாணவன், சார் தீமை என்று ஒன்று இருக்கிறதா? என்று கேட்டான்.

அதற்கு பதிலளித்த பேராசிரியர், ஆம் இருக்கிறது.உலகமெங்கும் கற்பழிப்புகளும் கொலைகளும் மற்றும் வன்முறைகளும் நடக்கிறதே. இது தீமையானது அல்லவா? என்றார்.

இதற்கு பதில் கூறிய மாணவன், சார், உண்மையில் தீமை என்று ஒன்று இல்லை. ஒரு காரியத்தில் தேவனின்மையே தீமை ஆகும். தேவனின்மையைக் குறிப்பிடுவதற்காக மனிதன் உண்டாக்கிய பதமே தீமை ஆகும். தேவன் தீமையை படைக்க வில்லை. எப்படி வெப்பம் இல்லாமையால் குளிர் உண்டாகிறதோ அல்லது ஒளி இல்லாமையால் இருள் உண்டாகிறதோ அது போல தேவன் இல்லாத நிலையே தீமை என்று நாம் கூறலாம் என்று சொல்லி முடித்தான்.

அந்த பேராசிரியர் சொல்லுவதற்கு வகை தெரியாமல் மரமாய் நின்றார்.
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP