சமீபத்திய பதிவுகள்

என் பதிவுகளும்-ஆபாச தலைப்புகளும்

>> Wednesday, March 26, 2008

My Photo




அன்பான வாசக பெருமக்களுக்கு தெய்வமகன் எழுதுவது இம்மட்டும் நீங்கள் கொடுத்து வரும் தொடர் ஆதரவுக்கு நன்றி.இது வரை என் பதிவுகளுக்கு நான் ஆபாச தலைப்பு வைப்பதாக அநேகர் சொல்லி வந்தனர்.ஆனால் என்னுடைய நிலைப்படி தமிழ்மணத்தில் உலாவின பலர் தங்கள் பதிவுகள் சூடான இடுகையில் வர பல வழிகளில் முயற்சித்தனர்.ஆனால் எல்லாரும் கடைபிடித்த வழி தலைப்புகள் மற்றவர்களை ஈர்க்கும் படி வைத்தது.

என் பதிவை பொருத்த மட்டில் நான் என் கட்டுரைகள் எந்த பதிவரிடம் எடுத்தேனோ அந்த பதிவர் தன் கட்டுரையில் எழுதியிருந்த வரிகளை தலைப்பாக வைத்தேன்.அது படிப்பவர்களுக்கு ஆபாசமாக தெரிந்து இருக்கலாம்.ஆனால் என் கட்டுரைகளின் உள்ளே பெண்ணிய தக்குதல்கள்,திவிரவாதிகளின் முகமூடிகள்,சாதீய கொடுமைகள் ஆகியவற்றை பற்றியே எழுதப்பட்டு வந்துள்ளது.

சரி நீங்கள் கேட்பது தெரிகிறது இந்த மாதிரி கட்டுரைக்கு எதுக்கு ஆபாச தலைப்பு வைக்க வேண்டும் என்று.அதனால் இனி என் பதிவில் கட்டுரைக்கு சமந்தப்பட்ட வார்த்தைகள் மட்டுமே தலைப்பாக வைக்க முடிவு செய்துள்ளேன்.

ஆனால் எதற்கெடுத்தால்ம் ஆபாசம் என்று கத்தி நான் எழுதும் கருத்துக்களில் மற்றவர்கள் சிந்தை வைக்ககூடாது என்று ஒரு சில கும்பல் அலைந்து கொண்டிருக்கிரது.அவர்களை நான் மதிப்பதில்லை.

பெண் கற்பழிப்பு,தாகத உறவுகள்,உடலுறவு சம்மந்தமாக மார்க்க அடிப்படையில் பதில் என்று சொல்லி மாங்காமடையர்கல் இணையத்தில் எழுது கட்டுரைகளை ஆகியவற்றை பற்றி விமர்ச்சிக்கும் போது ஒரு சில வார்த்தைகள் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிரது.

தமிழ்மண்த்தின் சூடான இடுகைகள் நீக்கப்பட்டதில் இருந்து என் வலைபதில் வரும் எந்த கட்டுரைக்கும் அந்த மாதிரியான தலைப்புகள் வைப்பது இல்லை.ஆனால் தமிழ்மணம் அந்த மாதிரியான தலைப்புகளை விரும்பினார்களோ என்னவோ தெரியவில்லை.என் நிலையை மாற்றிக்கொண்ட பின் என் பதிவை தமிழ்மணத்தில் இருந்து எந்த விதமான முன் எச்சரிப்பும் இல்லாமல் நீக்கினார்கள்.

ஆனாலும் இந்த நிலைக்கு நான் மற்றவர்களுக்கு அறிமுகமாவதற்கு தமிழ்மணம் எனக்கு உதவியது என்பதில் தமிழ்மணத்திற்கு நன்றிக்கடன் உண்டு.

தமிழ்மணம் நீக்கியும் ,தொடர்ந்து என் இடுகைகளுக்கு ஆதரவளித்து பல ஹிட்கள் கொடுத்தும், alexa ரேங்கில் என்னை உயர்த்தியும் வருகிர வாசகப்பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் தேன்கூடு,திரட்டி,மற்றும் பல தன் நிலை திரட்டிகள் அனைத்துக்கும் என் நன்றி.

எனக்கு இவ்வளவு ஆதரவளிக்கும் உங்கள் மனவிருப்பப்படி இனி நல்ல சீரிய முறையில் பதிவுகள் கொடுக்க முனைகிறேன்.பிண்ணூட்டம் இடும் அனைவருக்கு நன்றி.மற்றும் என்னை திட்டி பிண்ணூட்டம் இடும் அனானிகள் கொஞ்சம் நாகரீகமாக திட்டினால் பிண்ணூட்டம் அனுமதிக்க வசதியாக இருக்கும்

இப்படிக்கு உங்கள் அன்பு

தெய்வமகன்

StumbleUpon.com Read more...

ஓசை செல்லாவும்,தமிழச்சியும் என் பதிவுகளில்

ஓசை செல்லாவும்,தமிழச்சியும் என் பதிவுகளில் என்ற தலைப்பை பார்த்து உள்ளே வந்துள்ள அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்.என் பிளக்கரில் இன்று முதல் rss மூலம் இரு பெறும் முன்னோடிகளின் கடைசி ஐந்து பதிவுகள் காட்டப்படுகிறது.தொடர்ந்து உங்கள் ஆதரவைத்தாருங்கள்.





ஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ!





தமிழச்சி

StumbleUpon.com Read more...

மற்ற திரட்டிகளில் ஓசை செல்லா

நன்றி அறிவிப்பு

என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத்

திரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு

மிக்க நன்றி! எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என்

பதிவுகளை தமிழ்வெளி மற்றும் தேன்கூடு திரட்டிகளின்

மூலம் இனிவரும் நாட்களில் படிக்கலாம் - ஓசை

செல்லா


நன்றி தமிழ்மணம்....

நான் வேறுயாரைப்போன்றவனும் அல்ல..முதுகில் குத்த... நேரடியாக மறமுகமாக மோத தயாராகவே இருக்கிறேன்... என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத் திரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி! எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என் பதிவுகளை தேன்கூடு தமிழ்வெளி , திரட்டி .காம் திரட்டிகளின் மூலம் படிக்கலாம்.

அன்புடன்...

post signature

என்ன நடந்தது தமிழ்மணத்தில்... படியுங்க

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_26.html

StumbleUpon.com Read more...

சகோதரர் சக்கரியா

சகோதரர் சக்கரியா

 

(தமிழ் மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல.ஆங்கிலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

சகோதரர் சகரியா  

 

என்னுடைய வாழ்க்கையில் நடந்த காரியங்களையும், என்னை இயேசுவைப் பின்பற்றுபவனாக மாற்றிய சம்பவங்களைப் பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

 

'தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும், நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."

 

'இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?"

                                                                        (1 யோவான் 5: 4,5)

 

என் பெயர் சகரியா நான் தமிழ்நாட்டில் ஒரு வைராக்கியமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு ஏழு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் இருக்கிறார்கள். சமுதாயத்தில் என் பெற்றோருக்கு நல்ல மதிப்பிருந்தது என்னை அவர்கள் மதச்சம்பந்தமான காரியங்களில் சிறப்பாக வளர்த்தினார்கள். எங்கள் குடும்பத்தி;ல் எல்லாரும் அரபி மொழயில் எழுதவும் படிக்கவும் தேறியிருந்தனர். நான் கிறிஸ்தவ பள்ளியில் படித்திருந்தாலும் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை.

  

 என்னுடைய சட்டக் கல்லூரிப் படிப்பை முடித்ததும் எனக்கு எல்ஷி ஃபாத்திமா என்ற முஸ்லீம் பெண்ணுடன் திருமணம் நடந்தது அவள் தன்னுடைய பள்ளி நாட்களிலிருந்தே ஒரு இரகசிய கிறிஸ்தவளாயிருந்தாள்.  பத்து வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் அவள் தன்னுடைய விசுவாசத்தை என்னோடு பகிர்ந்து கொண்டாள். நான் மிகவும் வெறுப்படைந்தவனாக தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அவளை குறைகூறி வந்தேன். ஆனால் அவள் தன்னுடைய உறுதியான விசுவாசத்தை விடவில்லை.

  

  கடந்த வருடம் ஏற்பட்ட மாரடைப்பினிமித்தம் நான் வியாதிப்பட்டவனாக படுக்கையிலே கிடந்தேன், அது எனக்கு

மூன்றாவது முறையாகும். என்னுடைய எல்லா நண்பர்கள்,உறவினாகள் எல்லாரும் இனி நான் உயிர்பிழைக்கவே மாட்டேன் என்று எண்ணினார்கள். ஆனால் என்னுடைய மனைவி என்னுடைய ஆத்தும விடுதலைக்காகவும், சரீர சுகத்திற்காகவும் கண்ணீரோடு ஜெபித்துவந்தாள்.

 மிகவும் சோதனையான நேரத்தில் என்னுடைய மேல் வழக்கறிஞர், அவருடைய தலைமையில் தான் நான் வழக்குகளை கையாண்டு பயிற்சி எடுத்து வந்தேன் .அவர் என்னைப் பார்த்து சொன்னார் ' இத்தனை வருடங்களும் அவருடைய கருணையிருந்தாலும் நீ உதவியற்றவனாகவே இருக்கிறாய் " என்று . அவருக்கு என்ன பதில் கொடுப்பது என்று தெரியாமல் நான் என் இருதயத்திலே மௌனமாக இருந்தேன் . 2003 செப்டம்பர் 13 ம் தேதி ஒரு நாள் இரவில் நான் திடீரென்று விழித்தேன், அப்போது என் மனைவி ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். 'ஒரு கேள்விக்கு பதில் வேண்டும் "  என்ற  தமிழ் புத்தகம் அது. அதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கும்படி என் மனைவி என்னை மிகவும் வேண்டினாள். நான் அந்த புத்தகத்தை அரைமணி நேரத்திற்குள் வாசித்து முடித்தேன், அது எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் என் மனைவிக்கு நான் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டவில்லை. மறுநாளிலே ' நான் ஏன் கிறிஸ்தவனானேன்"  என்ற மற்றொரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தாள்;

அப்படியே நான் அதின் எல்லா தமிழ் மற்றும் அரபி வாக்கியங்களை படித்துமுடித்தேன். முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு சிறுபிள்ளைப் போல ஆண்டவரை நோக்கி கதறிஅழுதேன்.  ஆண்டவராகிய இயேசுவை அறிக்கையிட்டு இனி அவரைத் தான் பின்பற்றுவேன் என்று என்னை அர்ப்பணித்தேன்.  நான் ஜீவ வார்த்தையாகிய வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கினதிலிருந்து அது என்னோடு தனிப்பட்ட முறையில் பேசினது. என்னுடைய குடும்பத்தார் அனைவரும் என்னை ஒதுக்கிவிட்டனர் ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை, அவருடைய முகத்தை மட்டுமே நான் நோக்கிப் பார்க்கிறேன்.நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன் ஏனென்றால் இந்ந உலகத்தின் பாவங்களிலிருந்தும், பாரம்பரியக் கட்டுகளிலிடருந்தும் நான் விடுதலையடைந்திருக்கிறேன். நாங்கள் திருமுழுக்கு பெற்று அவருக்கு சாட்சியாக இருக்கிறோம். எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

 

 

 
 
 
Brother . ZAKARIA

I am very glad to share my testimony with you all. What happened in my life and what made to follow lord Jesus Christ.

FOR WHATEVER IS BORN OF GOD OVERCOMES THE WORLD. AND THIS IS THE VICTORY THAT HAS OVERCOME THE WORLD OUR FAITH.

WHO IS he WHO OVERCOMES THE WORLD, but he who believes that Jesus is THE SON OF GOD ? ( 1 John's : 4,5)

I am zakaria, born in orthodox Islamic family, in 1959 at tamilnadu. I have seven brothers and four sisters. My parent are well to do in the society and they brought me in every realm of ceremonial and ritual laws. In my family, all are well-versed in Arabic reading and writing. Even though I have studies in Christian school, I did not have any friends.

After completing law degree course, I have married a muslim girl Elzi Fathima, who is secret believer from her school days. After ten years, One day she shared her faith with me. I was totally upset and criticized her down through six years. She did not give up any of her sound faith.

I was severely in sick bed due heart-attack last year, it was third time in my life. All of my relative friends and parents, they would thought that I might no more on earth. But, my wife, she has been shedding tears for my soul redemption and then next for physical recovery.

At my ordeal circumstances, my senior lawyer, under whom I have been practicing and attending cases, said to me that, " All through the years you are helpless even though under his mercy." I do not know what I should give answer to him. I kept silent in my heart. In, 2003 September, 13th, 2003, at night time I woke up suddenly. I

 

  saw my wife, she was reading a book, "A question that demands an answer "which is in Tamil. She requested me to read, " to see at least what is in it". I have read the book within half an hour. The book made certain impacts within me. But I did not express any thing to her. The next day, my wife gave another book, " why I became Christian".

Like wise, I have read all the literatures in Tamil and Arabic as well. In my life, first time I cried before the lord like a child. I confessed and committed my life the to follow Jesus Christ the lord. When I stared to read God's word, the living word spoke to me very specifically. Brother,  Ahamed, has taken me to meet many converts. All of my relatives, friends and parents rejected me, but I am never bothering anything, looking HIS face only. I am so happy because, I am released from bondage, tradition and clutches of sin of the world. I am having one daughter who is handy-capped, unable to walk since 16 years. My self and my took babtism one year back.

I have met my Junior lawyer, I said,' I know him, because of His grace I am living, this is the great miracle regarding to me." Please pray for my family and especially for my daughter.

 

 

http://unmaiadiyann.blogspot.com/2008/03/blog-post_1485.html

StumbleUpon.com Read more...

திருமணத்துக்கு முன்னும்,பின்னும் தலைகீழான நகைச்சுவைதான்

திருமணத்திற்கு முன்......

அவன்:ஆமாம்,கடைசியாக. காத்திருப்பது மிகவும் கடினமாக உள்ளது.

அவள்: நான் போகவேண்டுமென்று விரும்புகிறீர்களா?

அவன்: இல்லை அதைப்பற்றி நினைக்கவே வேண்டாம்!

அவள்: என்னை நேசிக்கிறீர்களா?

அவன்: ஆமாம்! அதிகமாக,அதிகமாக!

அவள்: என்னை எப்பொழுதாவ‌து ஏமாற்றியிருக்கிறீர்க‌ளா?

அவன்:இல்லை.மறந்தும் கூட இல்லை.

அவள்:என்னை முத்த‌மிடுவீர்க‌ளா?

அவன்:வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம்!

அவள்:என்னை அடிப்பீர்க‌ளா?

அவன்:உன‌க்கென்ன‌ ப‌யித்திய‌மா? நான் அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆளில்லை.

அவள்:உங்க‌ளை ந‌ம்ப‌லாமா?

அவன்:ஆம்.

அவள்:அன்பே!



திருமணத்திற்கு பின்......

just read bottom to top

paul
 



ஒன்னுமே புரியாட்டி மானிட்டரை திருப்பி தலைகீழாக படியுங்கள்

StumbleUpon.com Read more...

இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ? 2

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20304066&format=html

இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?

ஒரு விவாத கருத்தரங்கு


அபுஹாலில்: முதலாவதாக திரு.வராக் அமெரிக்கா போல கருத்து சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில் பொய்ப்பெயருடன் வாழும் ஒரு மனிதருக்கு பதிலளிப்பதே மடத்தனமாக எனக்குப்படுகிறது. அதெப்படியாயினும் சரி, எந்த மதத்திற்கும் சுத்தமான கரம் கிடையாது. எந்த மதமும் இல்லாத ஒரு உலகம் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட மதம் ஒழிந்து போவது அல்ல. மதச் சார்பற்ற மானுடவாதிகளும் இறை எதிர்ப்பாளர்களும் தத்துவார்த்த அடிப்படையில் சமயத்தை எதிர்ப்பவர்கள். ஆனால் ஒரு மதத்தை விட்டுவிட்டு ஒரு மதத்தை மட்டும் எதிர்ப்பது என்பது ஒன்று மதவெறி அல்லது குறுகிய கண்ணோட்டம் அல்லது இரண்டுமே.தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தில் மதச்சார்பற்று இருப்பவர்கள் என்றுமே எனக்கு வியப்பளிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மதம் சகிக்க முடியாததாகவும் மற்றொன்று சகிக்க முடிந்ததாகவும் உள்ளது. கிறிஸ்தவத்தின் வரலாற்றை பொறுத்தவரையில்: கடந்த நூற்றாண்டில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கிலான மக்கள் இஸ்லாத்தால் கொல்லப்படவில்லை. கிறிஸ்தவ மேற்கத்திய அரசுகளாலேயே கொல்லப்பட்டனர். கிறிஸ்தவம் அமைதியின் மதம் என்பது அமெரிக்க அரசிலேயே பலராலும் மறுக்கப்படும்.. ஜெரி பால்வெல் எவரையும் கொல்லவில்லையாயிருக்கலாம் (ஆனால் கருகலைப்பு மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட பல அமைதியற்ற ஆர்பாட்டங்களை அவர் தூண்டியிருக்கலாம்.) ஆனால் கிறிஸ்தவர்கள் நிச்சயமாக கொன்றிருக்கின்றனர்.

வராக்: திரு.அபுஹாலில் என் 'நான் ஏன் முஸ்லீம் அல்ல ' எனும் நூலை படிக்கவேண்டும். நான் அனைத்து மதங்களை குறித்தும் கண்டிக்கும் போக்கையே எடுத்துள்ளேன். எனவேதான் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு நூல்களைப் போல என் நூல் சிறந்த விற்பனை நூல் ஆகவில்லை. நிறுவன சமயத்தையும் அரசையும் முழுமையாக பிரிப்பதை தீவிரமாக ஆதரிக்கும் மதச்சார்பற்ற மானுடவாதியே நான். கிறிஸ்தவர்கள் நிச்சயமாக கொலைகளை கிறிஸ்துவின் போதனைகளுக்கு புறம்பாக புரிந்துள்ளனர்.

ஆனால் முஸ்லீம்கள் ஜிகாத் என்கிற பேரில் நடத்தும் கொலைகளுக்கு குர்ரான், ஹாடித் மற்றும் சுன்னா ஆகியவற்றில் போதுமான அளவு நியாயப்படுத்துதல் உள்ளது.

இச்சமயத்தில் திரு அபுஹாலின் வாதத்தன்மை ஆதிக்கத்தன்மையும் பிறரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவமானப்படுத்தும் விதமாகவே தன்வாதங்களை வைப்பதாக உள்ளது. மேலும் என் நெருங்கிய குடும்பத்தினர் அனைவருமே முஸ்லீம்களே. என்நூலின் முகவுரையிலேயே இதனை கூறியுள்ளேன். என் உடன் பிறந்த சகோதரனைப் போல ஒரு உயிரை கனவில் கூட துன்புறுத்த துணியாத ஒரு மனிதரை நான் கண்டதில்லை. எனவே எல்லா முஸ்லீம்களும் கொலைவெறியர்கள் என நான் கூறவில்லை. 9/11 துயரச் சம்பவத்திற்கு பின் நான் எழுதிய கட்டுரையில் (காண்க WWW.SECULARISM.ORG) எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் அல்ல என்றும் முஸ்லீம்களுக்கான பாதுகாப்பு

அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.முஸ்லீம்களிடையே அமைதிவாதிகள் இருந்தாலும் இஸ்லாம் சமரசப் போக்குடையதல்ல. இஸ்லாமுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் இடையேயான வேறுபாடு தரத்தினுடையதன்று அளவினுடையதே.

ஸ்பென்ஸர்: முஸ்லீம் வெறியர்கள் இஸ்லாமை விமர்சித்த முஸ்லீமான ரஷித் கலிஃபாவினை அரிசோனாவில் கொன்றது 1990 இல். எனவே இபின் வராக் தான் விரோதித்திருப்பது யாரை என நன்றாகவே அறிவார். எல்லா மதங்களிலும் மதவெறி சமமான தன்மையுடையது என்பது மடத்தனமானது.பால்வெல்லை கொலையுடன் இணைக்க உங்கள் கற்பனையை எவ்வளவுக்கு ஓடவிட வேண்டும் ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகளும் கொலையும் இணைவது எத்தனை எளிதான விஷயம். ஏனென்றால் இஸ்லாமின் மரபுப் போதனைகளிலேயே போரும் வன்முறையும் உள்ளடங்கி உள்ளன. ஜிகாத் குறித்த வரலாற்று பெரும்பான்மை பார்வை ஹன்பலி மெளலானாவான இபின் தாய்மியாவால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. சன்னி பார்வையினை ஏற்றுக்கொள்ளும் இவர் கூறுகிறார், 'நீதிக்குட்பட்ட போர் என்பது ஜிகாத்தான், ஏனெனில் ஏக இறைவனின் மதமே அதன் நோக்கமாகும். இறைவனின் வார்த்தையே அதன் முக்கிய விஷயமாகும்.இந்த நோக்கத்தின் பாதையில் நிற்போர் அனைவருடனும் போராட வேண்டியது ஒவ்வொரு முஸ்லீமினுடையவும் கடமையாகும்.. நம்மோடு போராட முடியாத பலஹீனர்கள் நமக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடும் வரை கொல்லப்படவேண்டியதில்லை. ' இது உண்மையில் முஸ்லீம், புகாரி மற்றும் அபு தாவுத் ஆகியவற்றில் இருக்கும் முகமதுவின் ஹாடித்தின் விரிவான விளக்கமே, 'அல்லாவைத்தவிர வேறு இறைவன் யாருமில்லை மற்றும் நானே அல்லாவின் தூதர் என்பதை மக்கள் ஏற்பது வரை நான் போராட கட்டளையிடப் பட்டிருக்கிறேன். அவ்வாறு நம்பிக்கை தெரிவிப்பவர்களின் இரத்தம் மற்றும் உடமைகள் என்பெயரால் பாதுகாப்பளிக்கப்படும். ' இத்தகையதோர் கோட்பாடோ அல்லது இதற்கு இணையான ஒன்றோ கிறிஸ்தவத்திலோ அல்லது இஸ்லாமைத் தவிர மற்ற மதத்திலோ கிடையாது.

அய்லோஷ்:இஸ்லாம் அமைதி விரும்பி மதமல்ல. இஸ்லாம் நம்பிக்கையாளர்களுக்கு தங்களையும் மானுடகுலம் முழுவதையும் ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிராக பாதுகாக்க

போராட வேண்டுமென விதிக்கிறது. இந்த நியாய போர்கூட கட்டுப்பாடான வரைமுறைகளுக்கு உட்பட்டது. குர்ரான் கூறுகிறது: 'உங்களுக்கு எதிராக போராடுவோருக்கு எதிராக இறைவனுக்காக போராடுங்கள் ஆனால் ஆக்ரமிக்காதீர்கள் ஏனெனில் இறைவன் ஆக்ரமிப்பாளர்களை அன்பு செய்வதில்லை ' (2:190) 'ஓ நம்பிக்கையாளர்களே!இறைவனுக்காக திடமாயிருங்கள்; நியாயத்தின் சாட்சியாயிருங்கள். ஒரு மக்களிடமான வெறுப்பு உங்களை நியாயமற்றவர்களாக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். நியாயவான்களாயிருங்கள். அதுவே நன்மைக்கு அருகாமையிலிருக்கிறது. மேலும் இறை அச்சத்துடனிருங்கள்; ஏனெனில் நீங்கள் செயவதனைத்தையும் இறைவன் அறிந்திருக்கிறான். ' (5:8) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பொறுத்தவரையில் இஸ்லாம் அவர்களை 'நூலின் மக்கள் ' என தனி அந்தஸ்து அளிக்கிறது. ஏனெனில் நாம் அனைவருமே ஆபிரகாமின் கடவுளாகிய ஒரே கடவுளை வழிபடுபவர்கள். மேலும் ஒரே இறைதூதர்களில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். மேலும் மத்திய இழக்கில் 14 நூற்றாண்டுகளுக்கு பின் பல மில்லியன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களுடன் பக்கத்து பக்கத்து வீடுகளில் கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்கின்றனர். இச்சகோதரத்துவத்துக்கு எதிரான சிற்சில சம்பவங்கள் நம் அனைவரையுமே சமமாக பாதிப்பவை. நபிகள் நாயகம் (சல்) ஒரு கிறிஸ்தவரையும் யூதரையும் மணந்தவர், அவர் கூறினார், 'கிறிஸ்தவனையோ யூதனையோ துன்புறுத்துபவன் என்னையே துன்புறுத்துகிறான். '

அபுஹாலில்: செவ்விய கிழக்கத்தியம் எனும் இன்று அறிவுலகத்தால் புறக்கணிக்கப்பட்ட கருத்தாக்கத்தையே ஸ்பென்ஸர் நம்பியிருப்பதை பாருங்கள்.21 ஆம் நூற்றாண்டு முஸ்லீம்களை பற்றிய விவாதத்தில் பல நூற்றாண்டுகள் முற்பட்ட முக்கியத்துவமற்ற இபின் தய்மிய்யா மூலம் அவர் முயற்சிப்பதை காணலாம்.கிறிஸ்தவர்களற்றவர்களுடனான கிறிஸ்தவ அரசுகளின் வெளியுறவு கொள்கையை புனித அகஸ்தீனின் கோட்பாட்டால் விளக்க முற்பட்டால் எப்படி மடத்தனமாக இருக்கும் ? இஸ்லாமின் பழம் வரலாறு இன்றைய முஸ்லீம்களுக்கு விட ஸ்பென்ஸருக்கு முக்கியமானதாக உள்ளது போலும். மேலும் ஜிகாத்தை பொறுத்தவரையில் அது பல பொருள்களை உள்ளடக்கியது. என் அண்மை நூலில் இது குறித்து ஒரு பகுதியையே ஒதுக்கி உள்ளேன். இராணுவ விளக்கத்தை தாண்டி பல பொருட்பதம் அது. பின்லாடன் போன்ற வெறியர்களும் ஸ்பென்ஸர் போன்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுமே அது புனித போர் மட்டுமே என பிரச்சாரம் செய்கின்றனர் என நான் அதில் விளக்கியுள்ளேன். இந்நூல் அராபியமொழியிலும் வெளியிடப்பட்டது. என் இந்த மதச்சார்பற்ற விளக்கத்திற்காக எந்த முஸ்லீம் மத வெறியனாலும் நான் கொல்லப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன். அல்லது ஸ்பென்ஸரின் 10 ஆம் நூற்றாண்டு கணக்கு படி நான் கொல்லப்பட்டுவிட்டேனா ?

வராக்கை பொறுத்தவரையில் எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் இல்லை என சொல்லும் அவரது தாராள மனதிற்கு நான் என்ன பரிசா அளிக்க முடியும் ? ஏன் ஹிட்லரின் வெளியுறவு அமைச்சர் வான் ரிபெந்த்தாராப் கூட நியூரம்பர்க் விசாரணையில் இவ்வாறுதான் அனைத்து யூதர்களையும் தான் வெறுக்கவில்லை என கூறினான்.

ஸ்பென்ஸர்: நான் இஸ்லாமின் தொடக்க கால வரலாறு முதல் இன்றுவரை பல்வேறு அதிகார பூர்வ ஜிகாத் குறித்த விளக்கங்களை முன்வைக்க முடியும். ஆனால் அபு காலில் அவை எல்லாம் இஸ்லாமிய பொது நீரோட்டம் சாராத விளிம்பு நிலை விளக்கங்கள் என ஒதுக்கிவிட கூடும். உண்மையில் ஆசாத், இன்றும் புனித அகஸ்தினை படிக்கும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.அதைப்போலவே தயிமியாவை பின்பற்றும் வன்முறை ஜிகாத்தை பின்பற்றும் இஸ்லாமியர்களும் உள்ளனர். நம்பிக்கையற்றோருக்கு எதிராக புனிதப்போர் தொடுப்பதே ஜிகாத் என கூறும் எஸ்.கே.மாலிக்கின் நூல் பாகிஸ்தானில் 1979 இல் வெளியிடப்பட்டது. பாகிஸ்தானிய அதிபர் ஜியா வுல் ஹக் ஜிகாத் ஒன்றேரொரு இஸ்லாமிய நாட்டிற்கான நியாயமான போர் வழிமுறை என்றார் . ஓ சரி சரி இதுவும் ஒரு விளிம்பு நிலை கண்ணோட்டம்தான். ஜியா வெறும் அதிபர்தான். ஜிகாத் எனும் பதத்திற்கு ராணுவரீதியான போர் என்பதற்கு அப்பால் பல பொருள்கள் உள்ளன என்பது உண்மையானதுதான். ஆனால் ஜிகாத் ராணுவரீதியான போருக்கான பதமே அல்ல என கூறினால் நீங்கள் மக்களை இஸ்லாமிய வரலாற்றின் பெரும் பகுதியை குறித்தும் இன்றைய சூழலை குறித்தும் ஏமாற்றுகிறீர்கள்.

அய்லோஷ்: எந்த மதத்தையும் அதன் புனித நூலிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சில மேற்கோள்கள் மூலம் மதிப்பிடக்கூடாது. எந்த புனித நூலிலும் பயங்கரவாதத்தை

நியாயப்படுத்தும் வாசகங்களை பயங்கரவாதிகள் தேடி எடுத்துக்கொள்ள இயலும். உதாரணமாக பைபிள் வசனங்கள் எவ்விதமாக சிலுவைப்போர்களை, கிழக்கத்திய கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் கொல்லவதை, புனித இன்க்விசஷன்களை, கறுப்பின மக்களினை அடிமைப்படுத்துதல் மற்றும் அவர்களை வெட்டிக்கொல்லுதலை, நாஸி போர்வீரர்களுக்கு ஆசிர்வாதம் அளித்தலை, ஐரோப்பாவில் கத்தோலிக்கர்களும் புரோட்டஸ்டண்ட்டுகளும் சுழற்சி முறையில் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தலை,

தென்னாப்பிரிக்காவில் இனவேற்றுமையை, கருகலைப்பு மருத்துவமனைகளை வெடிகுண்டு வைத்து தகர்த்தலை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டதென பாருங்கள். இவை எல்லாமே பொய்யாக இறைவனின் பெயரால் அல்லது ஏசுவின் பெயரால் நடத்தப்பட்டன.

'நான் சமாதானத்தை கொண்டுவர வந்தேன் என எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல போர்வாளையே கொண்டு வந்தேன் ' (மத்தேயு 10:34)

'வயதானவர்கள், இளைஞர்கள், பணிப்பெண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவரையும் கொல்லுங்கள் ' (எசேக்கியேல் 9:6)

'உங்களிடமிருக்கும் ஆண் பெண் அடிமைகளை பொறுத்தவரையில்: உங்களை சுற்றியிருக்கும் தேசங்களிலிருந்து ஆண் மற்றும் பெண் அடிமைகளை வாங்கிக்கொள்ளுங்கள்,அந்த அடிமைகளை உங்கள் சந்ததியினர் உங்களுக்கு பின் அதனை தங்களை சொத்தாக ஏற்றுக்கொள்வார்கள் ' (லேவியாகமம் 25:44ெ46)

ஆனால் முஸ்லீம்களாகிய நாங்கள் கிறிஸ்தவத்தையும் யூத மதத்தையும் இத்தகைய வாசகங்களால் தீர்ப்பிடுவதில்லை, மாறாக இறைவாக்கினரான மோசஸ் மற்றும் ஏசு (அவர்கள் மீது அமைதி நிலவுவதாக) ஆகியோரின் செய்தின் முழுமையான அமைதியின் மீதான எங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே முன்வைக்கிறோம். இஸ்லாமின் செய்தியின் இவ்வாறே அதன் 1.3 பில்லியன் நம்பிக்கையாளர்களால் பின்பற்றப்படும் நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றால் மதிப்பிட பட வேண்டும். எனவே வாசகர்களை முதலில் இஸ்லாமிய வெறுப்புத்தன்மை கொண்ட விமர்சகர்களால் ஏற்பட்ட முன்பார்வைகளற்று

குர்ரானை முழுமையாக வாசிக்க நான் அழைப்பு விடுக்கிறேன்.

வாராக்: பைபிள் கடவுளின் நேரடி வார்த்தை என நம்பும் கிறிஸ்தவர்கள் ஒரு சிறு கூட்டமே. ஆனால் அனைத்து முஸ்லீம்களும் குர்ரானை இறைவனின் நேரடி வார்த்தையாக ஏற்கின்றனர். பல கிறிஸ்தவர்களுக்கு பல பண்பாடற்ற வசனங்களை முழுமையாக மறுப்பதில் எந்த கஷ்டமும் கிடையாது ஆனால் ஒரு முஸ்லீம் அவ்வாறு செய்ய முடியாது. ஆனால் அத்தகைய வசனங்களை குர்ராருஷ் பல நூறு காட்டலாம்.

மேலும் குர்ரானே இஸ்லாமிய சட்டமான ஷரியத்தின் அடிப்படை, எனவே அதுவே பண்பாடற்ற தண்டனைகள் (கை,கால்களை ஊனப்படுத்துதல் போன்றவை), பெண்களுக்கான கீழான நிலை (ஆண்கள் அவர்களை சட்ட பூர்வமாக அடிக்க முடியும் போன்றவை), தீவிர யூத வெறுப்பு, முஸ்லீம் அல்லாதவர்கள் மீதான வெறுப்பு, மற்றும் இராணுவ பொருளிலான ஜிகாத் ( 'நம்பிக்கையற்றோரை காணுமிடங்களிலெல்லாம் கொல்லுங்கள் ') ஆகியவற்றின் மூலமாக விளங்குகிறது. ஜிகாத்தின் இராணுவ அடிப்படையிலான விளக்கமும் நடைமுறையும் செவ்விய முஸ்லீம் மறையியலாளர்களிடமிருந்தே நமக்கு வந்துள்ளன. உதாரணமாக இபின் தமியா, அவ்வெரோஸ், இபின் கால்துன் ஆகியோர் போன்ற கற்றறிந்த இஸ்லாமிய பெருமக்கள் ஏதோ குர்ரானால் புனித இரத்தம் சிந்தும் ஜிகாத்தை நியாயப்படுத்தும் விளிம்பில் உள்ள கூட்டம் அல்ல.சகிப்புத்தன்மையை போதிக்கும் மூன்று வசனங்கள் குர்ரானில் இருந்த போதிலும் அவை முஸ்லீம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லும் வாளின் வசனங்களால் மறுக்கப்பட்டு பின் தள்ளப்பட்டுவிட்டன.

இறுதியாக நான் ஒரு முஸ்லீமாக குர்ரானை கற்ற போது அதன் பண்பாடற்ற தன்மையை உணர்ந்ததாலேதான் நான் முஸ்லீமாக இன்று இல்லை.

அபுஹாலில்: நீங்கள் வரும் முடிவு உங்களுக்கு நன்மையை தரட்டும். ஆனால் நீங்களும் சரி ஸ்பென்ஸரும் சரி (உங்கள் இருவர் நூலையும் நான் படித்திருக்கிறேன்) யூத வெறுப்பாளர்கள் யூதர்களை நடத்தியது போன்றே முஸ்லீம்களை நடத்துகிறீர்கள். நீங்கள் முஸ்லீம்கள் ஒரு ஒற்றைத்தன்மை கொண்ட மக்கள் என கருதுகிறீர்கள். முஸ்லீம்கள் எல்லோருமே குர்ரானை கடவுளின் வார்த்தை என நம்பி செயல்படுவதாக கூறுவது மடத்தனமானது. அவ்வாறு நீங்கள் நம்பினால் ஒவ்வொரு முஸ்லீமும் இப்போது கொல்வதற்கு ஒரு நம்பிக்கையற்றவன் கிடைப்பானா என தேடித்திரிவதாகவும் ஒவ்வொரு முஸ்லீமும் தன் மனைவியை (அன் நிசா சுராவின் வரிகளின் அடிப்படியில்) அடிப்பதாகவும் எண்ணவேண்டும் . உண்மையில் எல்லா சமயங்களிலும் உள்ள மக்கள் அவர்கள் தங்கள் புனித நூல்களின் வரிகளுக்கு, அதை அவர்கள் கடவுளின் வார்த்தைகளாக மதிக்கிறார்களோ அல்லவோ, மிகுந்த நெகிழ்ச்சியான முறையில்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். குர்ரான் முத் 'தா எனும் தற்காலிக திருமணத்தை அனுமதிக்கிறது. ஆனால் முகமது நபியின் மரணத்திற்கு சில வருடங்களுக்கே பின் 'சன்னி ' முஸ்லீம்கள் அதனை தடை செய்தார்கள். இந்த மூன்று புனித மதங்களிலும் இருக்கும் சர்ச்சைக்குரிய, சகிப்புத்தன்மையற்ற வரிகளை நம்புபவர்கள் வன்முறைவாத வெறியர்கள்தான். அவர்களைதான் ஸ்பென்ஸரும் வாராக்கும் உலக முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என கூறிவருகின்றனர்.

ஸ்பென்ஸர்: ஆசாத், நீங்கள் வாசித்தறிதல் குறித்து வகுப்புக்களுக்கு போக வேண்டிய நிலையில் உள்ளீர்கள். நான் ஒரு போதும் வன்முறைவாத முஸ்லீம் வெறியர்கள்தான் உலக முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என கூறவில்லை. நான் கூறுவதெல்லாம் குர்ரானில் காணப்படும் தத்துவங்கள் இராணுவத்தன்மை கொண்ட கொலைவெறிக்கு ஒருவரை கொண்டு செல்வதாகவே உள்ளன. நீங்கள் கூட இதை ஏறக்குறைய ஏற்றுக் கொள்வது போல படுகிறது. இவ்வுண்மை எதிர்கொள்ளப்பட்டு குர்ரானும் சன்னாவும் மறு மதிப்பீடு செய்யப்படும்வரை பெருமளவில், ஒரு சிறிய அளவில் அல்ல, மத வெறியாலான வன்முறை இஸ்லாமின் ஒரு பகுதியாகவே இருக்கும். அதனை நீங்கள் நீக்க முடிந்தால் நான் பெ¢ரு மகிழ்ச்சி அடைந்து உங்களை பாராட்டுவேன். ஆனால் உங்களால் அது முடியுமென எனக்கு தோன்றவில்லை. எனவே குர்ரானின், 'நம்பிக்கையற்றோரை காணுமிடங்களிலெல்லாம் கொல்லுங்கள் ' (சுரா 9:5) எனும் வசனத்திற்கும் தற்போது மேற்கோள் காட்டப்பட்ட பைபிள் வசனங்களுக்குமான வேறுபாடென்னவென்றால்,அவை அங்குமிங்குமாக பொறுக்கி எடுக்கப்பட்டவை. ஆனால் குர்ரானிலோ அது அடிப்படையானது. மேலும் மரபிலும் இறையியலிலும் அது உறைந்துள்ளது. டாக்டர்.முகமது முஷின் கான் ஷாகித் புகாரி எனும் ஹாடித் தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர் கூறுகிறார், 'முதலில் போராடுதல் விலக்கப்பட்டிருந்தது; பின்னர் அது அனுமதிக்கப்பட்டது; பின்னர் அது கடமையாக்கப்பட்டது. '. எஸ்.கே மாலிக் 'The Qur 'anic Concept of War ' எனும் நூலில் விளக்குகிறார், 'அல்லா முஸ்லீம்களுக்கு புனிதப்போரை இறைக்கடமையாக செயலாக்கும்படியாக கட்டளை அளித்துள்ளார். ' சன்னி இஸ்லாமிய மரபின் நான்கு முக்கிய நீதியியல் மரபுகளாகிய ஷாஃபி, மாலிகி, ஹனாஃபி,ஹன்பலி ஆகிய நான்குமே, ஜிகாத் குறித்து விரிவாக விவரிக்கின்றன, வன்முறைக்கு அனுமதி அளிக்கின்றன. இபின் கல்துன் (1406) கூறினார், 'முஸ்லீம் சமுதாயத்தில் புனித போர் ஒரு இறைக்கடமையாகும். இஸ்லாமின் உலகளாவிய பணிநோக்கு அனைவரையும் புரியவைத்தோ அல்லது கட்டாயப்படுத்தியோ முஸ்லீம் ஆக்குவதாகும். மற்ற மதத்தினருக்கு ஒரு உலகளாவிய பணிநோக்கு இன்மையால் புனிதப்போர் எனும் தத்துவமும் இல்லை...இஸ்லாம் உலக நாடுகள் அனைத்தின் மீதும் ஆட்சி செய்வது என்பது அதன் கடமையாகும் '

இந்த முஸ்லீம்கள் எல்லாம், 'இஸ்லாமிய வெறுப்புத்தன்மை கொண்ட விமர்சகர்களா ' ? இஸ்லாத்திற்கு வன்முறையை இறையியல் ரீதியாக நியாயப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உள்ளது. நவீன காலத்திலும் முஸ்லீம்கள் மதத்தின் பெயரால் செய்யும் வன்முறைகளை நியாயப்படுத்த அந்த மரபு துணைபோகிறது. கிறிஸ்தவத்திற்கு அத்தகையதோர் மரபு இல்லை.

அபுஹாலில்: ஸ்பென்ஸரின் அறியாமை எந்த அளவு இருக்கிறதென்றால், ஒரு சாதாரண முஸ்லீம் அறிந்திராத சிலருக்கும் ஒரு முக்கிய இஸ்லாமிய பார்வைக்குமான வேறுபாடு கூட அவருக்கு தெரியவில்லை. ஸ்பென்ஸரை நான் அதிர்ச்சி அடைய செய்கிறேன். முஸ்லீம்கள் தங்கள் ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கும் ஒரு குர்ரான் வசனத்தை தேடிப்பிடித்து அதன் படி நடப்பதில்லை...

[தொடர்கிறது]

StumbleUpon.com Read more...

தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் தயவில் சில வாரங்கள் அதிகமாக உயிரோடு இருந்த பதிவர்கள்

நன்றிங்க இரமணிதரன்

தமிழ்மணம் குழுவினரின் செயல்பாடுகள் முழுக்க வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதன் முதற்கட்டமாக கூடுமான வரை எங்களுடைய மின்னஞ்சல்களும், இடுகைகளும் பணியாற்றுபவர்/எழுதுபவர் பெயர் தாங்கி இடப்படவேண்டும் என்று முடிவு செய்தோம். எடுத்துக்காட்டாக தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுபவர்கள், அவர்கள் செய்து முடித்த பணி குறித்து நேரடியாக பதிவர்களுக்கு அவர்களுடைய பெயர் தாங்கியே இடுகை எழுத வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்சசி அண்மையில் இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். அதுபோலவே இடுகை நிர்வாகப் பணிகுறித்த மின்னஞ்சல்களில் அப்பணியாற்றுபவர்கள் தங்கள் பெயரிட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தங்களுடைய பெயர்கள் வெளியிடப்படுவதனால் போலிகள் தங்களை அவதூறு செய்யக் கூடும் என்ற தயக்கம் எங்களிடம் இருப்பதும் உண்மையே. அதைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறோம். இருப்பினும் இந்த இடுகையையும் என்னுடைய பெயரில் எழுதுகிறேன். சில விசயங்களை பதிவர்களின் முன்பு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 
 
நேற்று தமிழ்மணத்திலிருந்து சில இடுகைகளும் பதிவுகளும் நீக்கப் பட்டிருகின்றன. அவை நீக்கப்பட்டதற்கு தமிழ்மண நிர்வாகத்தில் பணிபுரியும் இரமணியுடன் எற்பட்ட தனிப்பட்ட பிரச்னைதான் காரணம் என்று ஒருசிலரால் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையைச் சொல்வதென்றால் நேற்று நீக்கப் பட்ட பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பே நீக்கப் படவேண்டும் என்று எங்கள் குழுவில் விவாதத்துக்கு வந்தபொழுது அப்பொழுது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம், காத்திருந்து புரிய வைக்கலாம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் தற்பொழுது குற்றஞ்சாட்டப்படும் இரமணிதான். அதனாலேயே அப்பதிவுகள் இன்னும் சில வாரங்கள் நீடித்து நின்றன.
 
 

StumbleUpon.com Read more...

கிறிஸ்தவமும்,சாதீய கொடுமைகளும்-ஒரு விமர்ச்சனப் பார்வை

இது ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையல்ல என்பதை முதலில் குறிப்பிட்டுவிடுகிறேன்.

ஜாதி அமைப்பு இந்திய சமூகவியலின் ஒரு கெட்ட அடையாளமாகத் தோன்றுகிறது. இந்து மத மூலங்களிலிருந்து தோன்றினாலும் இன்று ஜாதி என்பது ஒரு சமூகம் சார்ந்த அமைப்பாகத்தான் இருக்கிறது. இந்துக்கள் மட்டும்தான் ஜாதி அமைப்பை பின்பற்றுகிறார்கள் என்பது உண்மையல்ல.

தமிழ் கிறித்துவர்கள் சாதீய அமைப்புகளுக்குட்பட்டே செயல்படுகிரார்கள். சாதாரண கிறித்துவர் முதல் கிறித்துவ மேலாண்மை அமைப்புகளும் ஜாதி அடிப்படையிலே நடைபெறுகின்றன.

கத்தோலிக்க கிறித்துவர்களின் கடைசி பிரதிநித்துவ குழுமம் 'பங்கு' என அழைக்கப்படுகிறது. ஒரு ஊரின் அல்லது சில சிறிய ஊர்களுக்குப் பொதுவான ஒரு கோவிலை மையமாக வைத்து அங்கு வாழும் கிறித்துவ மக்களின் பிரதிநிதிகள் சிலரோடு, அந்தக் கோவிலின் தலமை பாதிரியாரின் தலமையில் இயங்குவது ஒரு 'பங்கு'(Parish).

பல பங்குகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு மறைமாவட்டம்(Diocese). சாதி அடிப்படையில், அண்மையில், சில மறைமாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கோட்டாற்று மறைமாவட்டம் மொத்த கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள
பங்குகளின் கூட்டமைப்பாக இருந்து வந்தது . நாடார்கள் அதிகமான பகுதிகளையும் கடற்கரை ஊர்களில் வாழும் பரவர், முக்குவர் எனும் மீனவர்களின் இனங்களையும் பிரித்து இரு மறைமாவட்டங்கள் உருவாக்கப்படுள்ளன. இதுபோலவே தூத்துக்குடியிலும் பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாதிரியார்கள்கூட தங்களுக்குள்ளே சாதி வேற்றுமை பாரட்டுவதாக பல செய்திகள் வந்துள்ளன. தங்களுக்குள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் போது தலீத்துகளுக்கோ பிற சிறுபான்மை இனம் சார்ந்த பாதிரியார்களுக்கோ உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பது உண்மை.

இதையெல்லாம் எதிர்த்துக் கேட்பவர்கள் பல விதமான தொல்லைகளுக்கும் மேலிருப்பவர்களின் வெறுப்புக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

இதுபற்றி ரோமுக்கு பல முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன இருப்பினும் வழக்கம்போல ரோம் தன் பாதிரிமார்கள் எல்லோரையும் நல்லவர்கள் என்றே நம்பிக்கொண்டிருக்கிறது.

வேற்றுசாதியில் கிறித்துவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. இது நிச்சயம் மதம் சார்ந்த கொள்கை இல்லை, முற்றிலும் சமூக உளவியல் சார்ந்த முடிவு என்றாலும் இத்தகைய மனப்பாங்கை நீக்க கத்தோலிக்க குருமார்களும் மதமும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.

பல சமூகவியல் மாற்றங்களை கிறித்துவ மதம், கிறித்துவர்களிடத்தில் கொண்டுவந்துள்ளது என்பதும் அதற்கான பலமும் அமைப்பும் முற்றிலும் அதற்கு உள்ளது என்பதும் உண்மை. இருப்பினும் சாதி அமைப்புகளை எதிர்க்காமல் அவற்றை தத்தம் உபயோகத்துக்குள்ளாக்குகிறார்கள் கிறீத்துவர்களும், குருக்களும்.

கோவில்களில் தனித்தனியாக சாதிகளுக்கு இடம் ஒதுக்கும் வழக்கம் இன்னும் சில பங்குகளில் இருக்கிறது. இதில் சில சாதிக்காரர்களுக்கு இருக்கை வசதியும் செய்துதரப்படுகிறதாம்.

'சாதி கிறித்துவர்கள்' எனும் ஒரு பதம் இருப்பதே எனக்கு ஆச்சரியமாகப் படுகிறது.

'விரியன் பாம்பு குட்டிகளே' என இயேசு அன்று யூத மத தலைவர்களை திட்டினார்,'கடவுளின் கோவிலை வியாபாரக் கூடாரமாக்காதீர்கள்' என்று சாட்டை கொண்டு கோவிலில் கூடியிருந்த வியாபாரிகளை விரட்டினார். இன்று இயேசு வந்தால் தன் பெயரில் பணம் சம்பாதிதுக் கொண்டும், மக்களை துண்டுபோட்டுக்கொண்டுமிருக்கும் சிலரை என்ன செய்வாரோ.

இயேசுவுக்குத்தான் வெளிச்சம்.

உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.
 

நான் எழுதியிருந்த தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் பதிவுக்கு அடைக்கல ராசா என்பவர் எழுதியீருக்கும் பின்னூட்டங்கள். தனிப் பதிவுக்குத் தகுதியானது என்பதால் இதோ…

சாதி

சாதியின் கொடுமையை, தீண்டாமையின் கோரப்பிடியை உணர்ந்து வாழ்ந்தவன் நான். கடந்த ஐந்து ஆண்டுகால குருத்துவ பணிவாழ்வில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே வாழ்ந்து அனுபவித்த சாதியை, ஈழத்தமிழர்களிடேயும் கண்டபோது மனம் வெறுத்துப் போனேன். ஆனால் சற்று ஆறுதலான விடயம் தீண்டாமை என்னும் கொடிய அரக்கனை இந்தியாவில் மட்டுமே காணலாம். இருப்பினும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் இங்கும் காணக்கூடியதாக உள்ளது.

சில ஊர்களின் பெயர்களில் சாதி அடையாளம் காணப்படுவது சாதியத்தின் தொன்மையைக் குறிக்கும் என்று நினைக்கிறேன். உடையார்கட்டு, முதலியார்குளம், பறையனாலங்குளம் போன்ற ஊர்கள் தமிழீழத்தில் உண்டு. பெரும்பாலும் இரண்டு சாதிகள் இங்குள்ளன. ஒன்று பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் வேளாளர் சாதி. இந்துக்களிலும், கிறிஸ்தவர்களிலும் இவ்வகை சாதியினர் பெரும்பான்மையில் உள்ளனர். மற்றொன்று பரதவர். இந்தியாவிலிருந்து மீன் பிடி தொழிலுக்காக இலங்கையில் குடியேறியவர்களாக கருதப்படுபவர்கள். மன்னார் மாவட்டத்தில் பேசாலை, தாழ்வுபாடு, வங்காலை, அரிப்பு, முள்ளிக்குளம் போன்ற கடலோர கிராமங்களில் பரதவர்கள் அதிகமாக வாழ்வதைக் காணலாம்.

இவர்களுடைய வாழ்க்கைமுறை, உணவு, சமய வாழ்வு அனைத்துமே தமிழ்நாட்டில் பரதவர்கள் அதிகம் வாழும் தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. மன்னார் மாவட்டத்திலுள்ள மடு தேவாலயத்தின் மேல் கூரையை தூத்துக்குடியைச் சேர்ந்த திரு. குருஸ் மோத்தா என்னும் பரதவருடைய குழந்தைகள் நிதியுதவி செய்து அமைத்துக் கொடுத்துள்ளனர். தொழில் சார்ந்த வாணிபம், வர்த்தகம் மட்டுமல்லாமல் பெண் கொடுத்து பெண் எடுக்கும் குடும்ப உறவும் இந்திய தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் இருந்திருக்கிறது.

இங்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியில் பலரும் பொருளாதார முன்னேற்றம் கண்டு கல்வியில் மேன்மையடைந்து சாதிய ஒடுக்குமுறையிலிருந்து வெளியேறிவிட்டனர். சிலர் இன்னும் தங்களது குலத் தொழிலை செய்து சாதியின் பிடிக்குள் சிக்கி தவிக்கின்றனர்.

"பிறப்பினால் ஒரு மனிதரை ஒரு சாதிக்குள் தள்ளிவிடும் சமூதாய அமைப்பானது காட்டுமிராண்டி தனமானது, ஒடுக்குமுறை நிறைந்தது. யாழ்ப்பாண சமூகத்தின் பொருளாதார சமூகவாழ்வில் இது பின்னிப் பிணைத்ததாயினும், சாதி அமைப்பானது மனித உழைப்புக்குக் கண்ணியமும், மரியாதையும் வழங்கும் நவீன சிந்தனைக்கு முரணானது….கடுமையாக உழைத்து, தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளத்தக்கதும், வளம் மிக்கதும், சமூக உற்பத்தி திறன் கொண்டதுமான ஒரு சமூகத்தை தாழ்ந்தது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது" என்று வெள்ளைக்காரத் தமிழ்ப்பெண் அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை நூலில் வினவுகிறார்.

தமிழ்நாட்டைப் போன்று சாதியமைப்பு ஈழத்தில் இறுக்கமாக இல்லாது போனதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அவற்றில் பிரதானமாக நான் கருதும் விடயம் போர். போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால் எல்லா மக்களும்; எல்லா இடங்களிலும் கூடிவாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக மடுமாதா தேவாலயத்தைச் சுற்றியிருந்த அகதிகள் முகாமில் பல இடங்களிலுமிருந்து வந்த பலதரப்பட்ட மக்கள் ஒன்றுகூடி வாழ்ந்துள்ளார்கள். கற்றவன், கல்லாதவன், உயர்சாதி, தாழ்ந்த சாதி, பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல், ஊர், நகரம், கிராமம் என்று இல்லாமல் எல்லோரும் ஓரிடத்தில் தங்க நேரிட்டுள்ளது. அதுபோலவே புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மத்தியிலும் பெரிதாக இந்த வித்தியாசங்களை காணமுடியாமல் போயிற்று. போரினால் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய நன்மை இதுவென நான் நம்புகிறேன். தமிழர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி வந்தமையினால் தங்களிடையே சாதிய உணர்வை மறந்துவிட்டனர்.

இரண்டாவது விடயம், இங்கு காதல் திருமணங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவரையொருவர் அறிந்து, திருமணம் செய்து கொள்வதால் ஓரளவு சாதியின் இறுக்கம் இங்கு தகர்ந்துள்ளதாக எண்ணுகிறேன். 1994ம் ஆண்டு மே மாதம் தமிழ் நாட்டில் திருப்பத்தூரில் நாங்கள் நடத்திய இளையோர் மாநாட்டில் உரையாற்றிய திரு.தியாகு அவர்கள் இதே கருத்தை முன்வைத்தார்கள் என்பதை இப்போது நினைவுகூருகிறேன்.

மூன்றாவதாக கல்வியும் சாதியின் இறுக்கத்தை பெருமளவில் தகர்த்துள்ளது. கல்வி கற்று நல்ல வேலைவாய்ப்பினை பெற்று பொருளாதார ரீதியில் மேன்மையடைந்த மக்கள், சாதியின் கொடுமையை உணர்ந்து அதை விலக்கியுள்ளனர். பிறப்பால் உயர்வு தாழ்வு என்பதை பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மனிதர்களாக பிறந்த அனைவரும் சமம் என்ற கொள்கையே அனைவருக்கும் பொதுவானது.

இருப்பினும் சாதிரீதியாக ஈழத்தமிழர்களிடையேயும் சில பிரச்சனைகள் எழுந்துள்ளன. இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்பணி. மேரி பஸ்ரியன் அவர்களின் வாழ்க்கையை தீபங்கள் எரிகின்றன என்ற நூலாக கொணர்ந்த திரு. நாவண்ணன் அவர்கள், அப்புத்தகத்தில் சாதி பிரச்சனையைக் குறிப்பிட்டுள்ளார்.

"(யாழ்ப்பாணம்) இளவாலை புனித அன்னம்மாள் கோவிற் பங்கைச் சேர்ந்தவர் (அருட்பணி. மேரி பஸ்ரியன்) என்கிறபோது சமூகப் பிரச்சனை காரணமாகத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் (1971 – 1977) இன்னுமொரு சமூகத்துக்கு ஆலயத்தில் சமத்துவம் அளிக்க மாட்டோம் என்ற பிடிவாதத்தில் ஆலயக் கதவுகளைப் ப+ட்டிவைத்துச் சாதனை புரிந்தவர்களின் உயர்வகுப்பைச் சார்ந்தவர்". இந்நிகழ்வு அருட்பணி. பஸ்ரியன் அவர்களை வெகுவாக பாதித்த ஒரு விடயம் என்பதனையும் திரு. நாவண்ணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நிகழ்வைப் பற்றி அறிந்தபோது நான் தமிழ்நாட்டில் பணிசெய்த திண்டுக்கல் பெரிய கோயிலும் ஏறக்குறைய ஆறு மாதங்கள் (1995ம் ஆண்டு) சாதி பிரச்சனையால் மூடப்பட்டு கிடந்ததை நினைவு கூருகிறேன். தமிழ்நாட்டில் வேறு பல மாவட்டங்களிலும் இத்தகைய நிகழ்வுகள் நடந்துள்ளன என்பது வேதனைக்குரியது.

மேலும் நான் யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பருத்தித்துறையில் அருகருகே இரண்டு கோயில்கள் இருவேறு சமூகத்தால் கட்டப்பட்டிருப்பதையும் பார்த்தேன். அதே போன்றதொரு நிலை மன்னார் மறைமாவட்டத்திலும் இருப்பதாக உணர்கிறேன். இந்நிகழ்வை நான் தூத்துக்குடி மறைமாவட்டம், மணப்பாடு என்ற பங்கோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். எனதருமை தந்தை கலாநிதி தே. ஜாண் அவர்கள் தென்தமிழகத்தில் கிறிஸ்தவம் என்ற தனது ஆராய்ச்சி நூலில் விரிவாக இதை ஆராய்ந்துள்ளார். இதில் இன்னும் வேதனையான விடயம் என்னவெனில் ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களிடையே பட்டம் என்ற ஒரு பிரிவினை ஏற்படுத்தி அதிலும் ஏற்றத்தாழ்வு பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டிலும், இங்கும் காணப்படுகின்ற பரதவர் சாதியில் மட்டும் 63 உட்சாதி பிரிவுகள் உள்ளதாக அறிகிறோம். (கலாநிதி தே. ஜாண், தென்தமிழகத்தில் கிறிஸ்தவம், பக். 275) முள்ளிக்குளம் கிராமம் முழுவதும் ஒரே சாதி மக்கள் என்றாலும் அவர்களிடையே பட்டம் என்ற எட்டு பிரிவினையுண்டு. ஆகவேதான் காலம் காலமாக அச்சிறு கிராம மக்களிடையே உட்பகை இருந்து வந்துள்ளது. இடம்பெயர்ந்து 13 ஆண்டுகள் பல இடங்களிலும் வாழ்ந்து இன்று திரும்பி வந்துள்ள அவர்களிடையே இப்பிரிவினை, உட்பகை மாறாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.

ஒரு நாள் நான் இங்கு ஆற்றிய ஞாயிறு திருப்பலியில் மறையுரையில் இதைப்பற்றி நான் அவர்களிடம் பகிர்ந்து கொண்ட கருத்து என்னவெனில், முள்ளிக்குளத்தில் ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சாதி அமைப்பில் வாழும் 140 குடும்பங்கள் மத்தியில் பிரிவினையும், பகையும் இருந்தால், இரண்டு மொழி, மூன்று இனங்கள், நான்கு மதங்கள், பல சாதி அமைப்பில் வாழும் கோடிக்கணக்கான இலங்கை மக்களிடையே பரஸ்பரம் நம்பிக்கை, ஒத்துழைப்பு, புரிந்துணர்வு, சமாதானம் ஏற்படுமா என்பது மிகப்பெரிய கேள்வி. ஒரு நாள் நிச்சயம் தமிழீழம் மலரும். அந்த தமிழீழத்திலும் தமிழர்கள் பிரிந்து தமக்குள்ளே பகைமையோடுதான் வாழ்வார்களா?

"இனி உங்களிடையே யூதர் என்றும், கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை" (கலா 3:28) என்று முழங்கப்பட்ட திருச்சபையில் பிறப்பால், சமூக அந்தஸ்து ஏற்படுத்தி, பிளவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கி, கிறிஸ்தவராக சான்று வாழ்க்கை வாழ்வது எப்படி? மேற்சொல்லப்பட்ட கருத்துக்கள் யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல, மாறாக போராடி நாம் பெறும் சுதந்திர வாழ்வில் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடும், சமாதானத்துடனும் வாழ வழிவகுக்கப்பட வேண்டும் என்பதே என் நல்ல எண்ணம். சாதியம் ஒழிய வேண்டும். மனித மாண்பும், சமத்துவமும் மலர வேண்டும்.

Has Catholicism failed?

An Italian court is tackling Jesus - and whether the Roman Catholic Church may be breaking the law by teaching that he existed 2,000 years ago. An ex-seminarian turned atheist has sued his batch mate – a priest in Italy. This was in news last week. Has Catholicism failed is a question often asked in the history and is still relevent today rejuvenate the failing spirits of the catholics.

The church built on a good structured hierarchy is alien in a world of democracy. The Church built by the great emperor Constantine is still in place with a mass wealth and power among the majority of people in the world. The democratic voices within the church were choked with age-old doctrines and policies which are often irrelevent to the common people.

It is taught that the leaders of the church are the works of the Holy Spirit. But in truth, is it not money power and caste politics which are the deciding factors for the election of the Church leaders. This is often a scandal for the non-christians who live among us. The back door entry into the powers of the Church can not be the works of the Holy Spirit. At least in Tamilnadu, the appointments within the church starting from the major superiors to the appointment of the non-teaching staff in our educational institutions are done along the caste factor and then we call it as the work of the Holy Spirit. I believe that that is the greatest sin – sin against the Holy Spirit.

Though the church officially recognised the caste system in India in 17th centuary - "When India's founding Constituent Assembly debated making concessions for Outcaste-Christians, Jerome D'Souza S.J., representing the Christians, rejected them, claiming there is no caste in Christianity. No caste in Christianity? "Not only has the Church failed to eradicate caste; it has accommodated itself to caste, charges Fr Antoniraj S.J. Caste-consciousness has been part of Catholicism as long as the Church has been in India." "When priest-sympathesiers tried to help [the Dalits], they were disciplined. Fear dominated. Priests were afraid of caste-parishoners and bishops; bishops were afraid of caste reprisals." ("Dalit Means Broken: Caste and Church in Southern India" By John Francis Izzo S.J. In America, [the journal], February 14, pp 11-14, 2005. )

The early Christian community grew in numbers because they had everything in common and that there was no one in need. "Now the whole group of those who believed were of one heart and soul, and no one claimed private ownership of any possessions, but everything they owned was held in common. With great power the apostles gave their testimony to the resurrection of the Lord Jesus, and great grace was upon them all. There was not a needy person among them, for as many as owned lands or houses sold them and brought the proceeds of what was sold. They laid it at the apostles' feet, and it was distributed to each as any had need". (NRSV Acts 4:32-35)

Can the low growth rate of Christianity be attributted to the individual material possession of the few in the church? When the vast majority of the Christians in India are poor and the low caste, can the church as a collective institution be rich? Though they have eyes, yet the leaders of the Church fail to see a real life contradiction in this. Although the church as an institution has done a lot to allieviete material poverty in India through its dolloing out policies, social service commissions, yet the church grew rich than its members. Did all the money collected in the name of the poor reach the real poor of the society or to those who preach about divine poverty? There are few 'Priests of God' in India who are richer than the diocese in which they work.

Inhuman attitude of the American government against the victims of devastating storm Katerina, the beastly treatment against the Iraq prisoners of war, the failed war against terrorism in Iraq and Afganistan are all signs of diminishing faith in God by a government which was sworn in the name of God and by the people who were traditionaly faithful to God. Does God exist is the cry of the people in the third world developing countries in Africa, South Asia and south America and in the rest of the world where there is man made hunger, poverty, sickness? Will the Lord come to hear the cry of the people as He did with the Isrealites of the Old Testament, as announced by the prophets?

Will the Church of God come to the rescue of its fellowmen from the bondages of war, state atrocities, casteism, power mongers within the church and world wide man made poverty? Only then the Church can truly say that God exists and it can be true witness to God in truth and in spirit.

உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.
 

StumbleUpon.com Read more...

மாமனாரும்,மருமகளும்

நேசமுடனுக்கு பதில்: மருமகளின் மாமனாரின்(முகமது) கல்யாணம் அல்லாவின் சொர்க்கத்தில் நிச்சயமானது.




10. முகமது என்னும் மாமனார்: ஒரு சிறு குறிப்பு

இஸ்லாமியர்கள் யூதாவின் தாமாரின் இந்த கதை பைபிளில் இருப்பதினால், அது ஒரு வேதமல்ல என்றுச் சொல்கிறார்கள். பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் நமக்கு ஒரு எச்சரிக்கையாகவும், படிப்பினையாகவும் இருக்கும்படியாக எழுதப்பட்டுள்ளது, அதை அப்படியே பின்பற்ற அல்ல.

இஸ்லாமிலும் ஒரு மாமனார் வருகிறார், அவர் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும் அல்லவா? அவருடைய நடக்கைக்கும் குணத்திற்கும் உலக மக்கள் யாரும் ஈடு ஆகமுடியாது, அவ்வளவு நேர்மையாக பரிசுத்தமாக வாழ்ந்தார் என்று இஸ்லாமியர்கள் பெருமைபடுவார்கள். அவருடைய வாழ்வு எல்லாருக்கும் எடுத்துக்கட்டாக உள்ளதா என்பதை, இதைப் படிப்பவர்கள் முடிவு செய்யுங்கள். அவர் தான் முகமது.

முகமதுவிற்கு ஒரு வளர்ப்பு மகன் இருந்தான், அவனுக்கு முகமது ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஒரு நாள் அவர் தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்கிறார், ஆனால், தன் வளர்ப்பு மகன் அங்கில்லை. அவர் மருமகள் அவரை வீட்டிற்குள் வரும்படி அழைக்கிறார், இவர் வரமறுக்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி இஸ்லாமியர் சரித்திர ஆசிரியர் "டபரி" என்ன சொல்கிறார் என்றுப் பாருங்கள் .

Imam Tabari wrote (History of Tabari, vol 8):

"One day Muhammad went out looking for Zaid (Mohammed's adopted son). Now there was a covering of hair cloth over the doorway, but the wind had lifted the covering so that the doorway was uncovered. Zaynab was in her chamber, undressed, and admiration for her entered the heart of the Prophet".

The admiration was noticed by Zainab. She mentioned it to her husband Zaid later. He rushed to his father's house and offered Zainab to him. Mohammed worried about possible bad press and refused to accept it. But Allah will not take no for an answer and sent an instant revelation insisting on their union.



முகமது தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்லும் போது, வாசலில் போடப்பட்டிருந்த துணி சிறிது காற்றினால் நகர்ந்ததால், தன் மருமகளிடம் பார்க்கக்கூடாததை முகமது பார்த்துவிடுகிறார். தன் மருமகளின் அழகு இவர் உள்ளைத்திற்குள் செல்கிறது . இதை தன் கணவனுக்கு ஜைனப் தெரிவிக்கும்போது, அவன் முகமதுவிடம் சென்று "தான் தன் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் ஆசைப்பட்டதால், திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்றுச் சொல்கிறார்.

அதற்கு முகமது, "வேண்டாம், உன் மனைவியை நீயே வைத்துக்கொள்" என்று சொல்கிறார்(அந்த காலத்தில் இஸ்லாமுக்கு முன்பு, இப்படி மருமகளை திருமணம் செய்துக்கொள்வது, மிகப்பெரும் குற்றமாக கருதப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்று கூட அது குற்றம் தான்.), இதை பார்த்துக்கொண்டு இருக்கிற அல்லா, உடனே ஒரு வசனத்தை இறக்குகிறார், தன் நபியின் ஆசையை பூர்த்தி செய்ய, அது தான் குர்-ஆன் 33:37.

குர்-ஆன் 33:37

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)




அல்லா சொல்கிறார், முகமதுவிற்கு தன் மருமகள் மீது ஆசை இருந்தும், மனிதர்களுக்கு பயந்து, (ஏனென்றால், அப்படிப் பட்ட வழக்கம் இருட்டில் வாழ்ந்ததாகச் சொல்லும் மக்கா அரபி மக்களிடம் கூட இல்லை) அதை மனதிலே மறைத்து " உன் மனைவியை விவாகரத்து" செய்யவேண்டாம் என்றுச் சொன்னாராம். அதை அறிந்த அல்லா, வளர்ப்பு மகன் விவாகரத்து செய்துவிட்ட பிறகு உனக்கு உன் மருமகளோடு திருமணத்தை "நாம் செய்தோம் " என்றுச் சொல்கிறார்.

இப்படியெல்லாம் நடக்கவில்லை, சரித்திர ஆசிரியர் தவறாகச் சொன்னார் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். சரி சரித்திர ஆசிரியர் சொன்னது தவறு என்றே வைத்துக்கொள்வோம், குர்-ஆனில் அல்லா சொன்னது தவறாகுமா? இந்த வசனம் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள குர்-ஆனில் இல்லையா?

ஒரு வளர்ப்பு மகன் தன் தந்தையைப் பார்த்து, "நான் விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்றுச் சொன்னால் அதன் பொருள் என்ன? இதற்கு முன்பு என்ன நடந்துயிருந்தால் இந்த வார்த்தைகள் வெளிவரும்?

"உன் மனைவியை நீயே வைத்துக்கொள்" என்று முகமது சொன்னார் என்று குர்-ஆன் சொல்கிறது, சரித்திர ஆசிரியரை விட்டுவிடுவோம்.

முகமது சொன்னது பதில் என்றால், அதற்கு முன்பு தன் மகன் என்ன சொல்லியிருப்பான் என்று சுலபமாக யூகிக்கலாம். இதற்கு Ph.D பட்டம் படித்துவரவேண்டிய அவசியமில்லை.

எனவே, குர்-ஆன் வசனப்படி, முகமது தன் மகனின் வீட்டிற்குச் சென்று வரும் போது, ஏதோ நடந்துள்ளது, அதை தன் மனைவி மூலம் அறிந்த வளர்ப்பு மகன் தந்தையிடம் என்ன சொல்லியிருந்தால், முகமது இப்படி "உன் மனைவியை நீயே வைத்துக்கொள் " என்றுச் சொல்லமுடியும். சிந்தித்து பார்க்கவேண்டும்.

தன் மருமகளை வளர்ப்பு மகன் விவாகரத்து செய்தது உண்மையா இல்லையா?

முகமது தன் முன்னால் மருமகளை திருமணம் செய்தது உண்மையா இல்லையா? இதை யாரும் மறுக்கமாட்டார்கள்.

இந்த இரண்டு விவரங்கள் மட்டும் தவறு என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

இந்த கட்டுரையில் நாம் சிந்திக்கவேண்டியது:

ஒரு நபர் தன் மருமகள் வேசியாக வேடமிட்டு உட்கார்ந்து இருப்பதை அறியாமல் அவளிடம் வேசித்தனம் செய்ததால், அந்த நிகழ்ச்சி பைபிளில் இருப்பதால், அது வேதம் என்று அழைக்கப்படக்கூடாது என்றால்.....

தன் மருமகள் என்று தெரிந்தே அவள் மீது ஆசைப் பட்டு ( எப்படி ஆசை உருவானது என்று சரித்திர ஆசிரியர் சொல்வதை நாம் மறந்துவிடுவோம்), அதை அறிந்த மகன் அவளை விவாகரத்து செய்வதும், அதற்காகவே ஒரு வசனத்தை அல்லா இறக்குவதும் உண்மையானால். அப்படிப் பட்ட நபரை எப்படி ஒரு "நபி" இறைத்தூதர் என்றும், அவர் மூலமாக இறக்கிய வசனங்கள் இறைவேதம் என்றும் எப்படி நம்புவது?

எந்த ஆணாக இருந்தாலும் சரி, தற்செயலாக சில காட்சிகளை தெரியாமல் பார்த்துவிடுவது உண்டு, அதற்காக அல்லா ஒரு வசனத்தை இறக்கவேண்டுமா?

தன் தகப்பன் தன் மனைவியின் மீது ஆசைப்படுகிறான் என்றுச் சொல்லி தன் தந்தையை கொலை செய்த மனிதர்கள் பற்றி நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம், ஆனால் இங்கு ஒரு மகன் தன் தந்தைக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்கிறான் என்றால்..... என்ன சொல்வது?

இதற்குச் சரியாக அல்லாவும், இப்படிப் பட்ட திருமணங்கள் எல்லாரும் செய்யலாம் என்றுச் சொல்லி எல்லாருக்கும் அனுமதி அளிக்கிறார், இதை யாரிடம் சொல்லி முறையிடுவது?

யூதா தெரியாமல் பாவம் செய்தான், தெரிந்துவிட்ட பிறகு வேதனைப்பட்டான் பிறகு அதைச் செய்யவில்லை. ஆனால் முகமது ? முகமதுவை விட யூதாவே மிகவும் நல்லவன் என்றுச் சொல்லத் தோன்றுகிறது.

விவரம் 2: சிலர் இந்நிகழ்ச்சியை இப்படியும் சொல்கிறார்கள், முகமது முதலிலேயே ஜைனப்பை திருமணம் செய்ய ஜைனப் பெற்றோரிடம், கேட்டதாகவும், அதற்கு அவர்கள்(முஸ்லீம்களாக மாறியவர்கள்) வயது வித்தியாசம் முகமதுவிற்கும், ஜைபப்பிற்கும் அதிகமாக இருப்பதால், கொடுக்கமாட்டேன் என்றுச் சொன்னதாகவும், இதனால் ஏமாற்றமடைந்த முகமது, தன் வளர்ப்பு மகனை ஜைனப்பிற்கு மனமுடித்து கொடுத்ததாகவும், அவர்கள் இருவரும் அதிகமாக சண்டையிட்டுக்கொண்டு இருப்பதால், வளர்ப்பு மகன் விவாகரத்து செய்ததாகவும், ஜனப்பிற்கு வேறு வழியில்லாததால், கடைசியாக முகமதின் கோரிக்கையை அல்லாவின் வசனம் இறக்கியவுடன், ஜைனப் முகமதை திருமணம் செய்ததாகவும் சொல்கிறார்கள். Source : Read this Article

விவரம் 3: இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், ஜயத்(வளர்ப்பு மகன்), மற்றும் ஜைனப்(மருமகள்) இருவருக்கும் திருமணம் செய்து வைத்தது முகமது தான், அவர்கள் தாம்பத்திய வாழ்வில் சண்டைகள் அதிகமாக இருப்பதால், ஜையத் விவாகரத்து செய்யும் போது, அல்லாவின் கட்டளையின் படி, முகமது திருமணம் செய்தார் என்று.


மேலே சொன்ன மூன்று விவரங்களில் எது சரி என்று ஒரு தனி கட்டுரையில் பார்க்கலாம்., இந்த கட்டுரைக்கு இது போதும்.

சரித்திர ஆசிரியர் சொல்வதும், குர்-ஆன் வசனம் சொல்வதும் கவனித்தால், ஒரு உண்மை புரியும். அது என்ன? முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை விவாகரத்திற்கு பின்பு திருமணம் செய்துக்கொண்டார் என்பது. சொன்ன விவரங்களில் எது உண்மையாக இருக்கும், என்பதை கீழுள்ள் தொடுப்புகளை பார்க்கவும். மற்றும் இஸ்லாமிய தளங்களில் இதைப் பற்றிச் சொல்லும் விவரங்களையும் படியுங்கள்.

islam Watch | Muslim Hope | Islam Review | Daniel Piles | Faith Freedom | News FaithFreedom | News FaithFreedom | hadith Muslim from usc.edu |

11. வேதம் என்றால் அதில் என்ன என்ன இருக்கவேண்டும்? வேதம் என்பதின் அளவுகோல் என்ன? இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும்.

இனி இஸ்லாமியர்கள் தான் ஒரு பட்டியல் இடவேண்டும். வேதம் என்றால், என்ன என்ன இருக்கலாம்? ஒரு "நபி" அல்லது "தீர்க்கதரிசி" என்றால் எப்படி வாழவேண்டும் என்று?

யூதாவை பின்பற்றுங்கள் என்று பைபிளில் எங்கும் சொல்லவில்லை, எந்த சர்சிலும் இதைப் பற்றி பேசினால், யூதா செய்தது தவறு தான் என்றுச் சொல்லி, எல்லா பாஸ்டர்களும் மக்களை எச்சரிப்பார்கள். ஆனால், குர்-ஆன் முகமது செய்தது ஒரு வழிகாட்டி என்றுச் சொல்கிறது அதை மற்றவர்கள் பின்பற்றும்படி வாய்ப்பும் கொடுக்கிறது.

யூதாவை கிறிஸ்தவர்கள் எப்போதோ மறந்துவிட்டார்கள், ஆனால் இஸ்லாமியர்கள் இன்னும் வளர்ப்பு மகன்களை தத்து எடுக்க பயப்படுகிறார்கள்? ஏன் தெரியுமா? மாமனாருக்கு தன் மருமகள் மீது ஆசை வந்துவிடுமோ, அதனால், அவன் விவாகரத்து செய்யவேண்டி வருமோ என்று தான்.

முகமது எத்தனை மனைவிகளை திருமணம் செய்தாலும், யாரை திருமணம் செய்தாலும், கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, ஆனால், இப்படிப் பட்டவர் மூலமாக வந்த புத்தகம், பைபிள் திருத்தப்பட்டது என்றுச் சொல்வதனால் மற்றும் இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள நிகழ்ச்சிகளைப் பற்றி தவறாக விமர்சிப்பதனால் தான், நாங்கள் உண்மையை வெளியே சொல்லவேண்டி வருகிறது.

இஸ்லாமியர்களே இதற்கு பதில் சொல்லுங்கள் (முக்கியமாக இது தான் இஸ்லாம் நண்பர் இதற்கு பதில் சொல்லவேண்டும்)

வேதம் என்றால் அளவு கோல் என்ன?

அதில் என்ன என்ன விவரங்கள் இருக்கலாம்?

நபி என்றால் என்ன?

அவரிடம் மனிதர்கள் எதிர்பார்க்கும் குணங்கள் என்ன?

இறைவன் ஒரு மனிதனை நபியாக தெரிந்தெடுக்க அவர் எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன ?

என்று சொல்வார்களானால், எல்லாருக்கும் பிரயொஜனமாக இருக்கும்.

இதற்கு பதில் சொல்வீர்களானால், பைபிளில் வரும் நபிகள் (தீர்க்கதரிசிகள்), நீங்கள் சொல்லும் தகுதிகளை பெற்று இருக்கிறார்களா இல்லையா என்று நாங்கள் முடிவு செய்கிறோம். மற்றும் நாங்களும், "நபி" என்ற ஒருவருக்கு பைபிள் படி , யேகோவா தேவன் என்ன தகுதிகளை எதிர்பார்த்தார் என்றுச் சொல்கிறோம்.

12. இயேசுவின் வம்ச வரலாறு

யூதாவின் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட கி.மு. 1850ல் நடந்ததாகக் கொள்ளலாம். யூதாவிற்கும் இயேசுவிற்கும் தோராயமாக 1850 வருடங்கள் இடைவேளி உள்ளது. ஒரு வம்சத்திர்கு 25 அல்லது 30 வருடங்கள் எடுத்துக்கொண்டாலும், சுமார் 61 வம்சங்கள் உள்ளது (1850/30= 61.67).

இஸ்லாமியர்கள் எனக்கு ஒரு விவரத்தைச் சொல்லுங்கள். யூதா தாமார் நிகழ்ச்சி போன்று ஒரு தவறில் ஒரு மனிதன் பிறக்கிறான். அவன் அல்லாவை நம்பி, அல்லாவின் வழியில் தவறாது வாழ்கிறான். அவனை அல்லா ஏற்றுக்கொள்ளமாட்டாரா?

இன்னும் ஒரு விவரத்தை இஸ்லாமியர்கள் மறந்து போகிறார்கள். உலம மக்கள் எல்லாரும் முகமதுவோடு கூட பிறந்தது சாதாரண கணவன் மனைவி உறவுமுறையில், ஆனால், இயேசு மட்டும் தான் தந்தையில்லாமல் பிறந்தவர். இதை மறுக்கமுடியுமா உங்களால்?

ஒருவன் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவன் மன்னிப்பு கோரினால், மற்றும் அதன் பிறகு அவன் அப்படிப் பட்ட தவறுகள் செய்யாமல் இருந்தால், அல்லா மன்னிக்க மாட்டாரா? இந்த யுதாவும், தாமாரும் அப்படித்தான் தவறு செய்தார்கள்? பிறகு திருந்தினார்கள்.

இன்று உங்களுடைய மற்றும் இந்தியாவில் உள்ள எல்லா இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் யார்? விக்கிரகங்களை வணங்கியர்கள் தானே? அதனால் உங்களை அல்லா வெறுத்து தள்ளுவாரா?

இயேசு ஒரு இஸ்ரவேல் வம்சத்தில் பிறந்தவர் என்பதை காட்டவே, பைபிளில் வம்சவரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. இயேசு இந்த வம்சத்தில் பிறந்தார், அது சரியல்ல என்றுச் சொல்லும் நீங்கள். இயேசுவின் உண்மையான வம்சத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்? உங்களால் அந்த விவரத்தைச் சொல்லமுடியுமா?

13. முடிவுரை

தாவீது இப்படி விபச்சாரம் செய்த போது, அதன் மூலம் பிறந்த குழந்தையை மரிக்கச் செய்த யேகோவா தேவன், ஏன் யூதா மூலமாக பிறந்த இரண்டு பிள்ளைகளை மரிக்கச் செய்யவில்லை?

1.  ஆதாம் முதல் மோசே மூலம் 10 கட்டளைகள் கொடுக்கும் வரை முதல் காலகட்டம்.

2.  மேசேயின் கட்டளைகள் முதல் - இயேசுவரை இரண்டாவது காலக்கட்டம்.

3.  இயேசு முதல் - இன்று வரை மூன்றாவது காலக்கட்டம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனிடம் தேவன் எதிர்பார்த்த தகுதிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

முதல் காலக்கட்டத்தில் ஒரு குடும்பத்தை (ஆபிரகாம் மற்றும் அவர் வம்சம்) தேவன் தெரிந்தெடுத்தார். இரண்டாம் காலக்கட்டத்தில் ஒரு நாடாக (கானானுக்கு வந்த இஸ்ரவேல் நாடு) மாறினார்கள். எனவே தான், பத்து கட்டளைகள் கொடுக்கப்பட்டது, மற்றும் விபச்சாரம் செய்யவேண்டாம் என்ற கட்டளை, செய்தால் தண்டனை.

மூன்றாம் காலக்கட்டம், நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலே, அது விபச்சாரம் செய்த பாவத்திற்கு சமம்.


யூதா முதலாம் காலக்கட்டத்திற்கு சம்மந்தப்பட்டவன். அதனால், பாவம் செய்யலாம் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், கட்டளை வந்தபிறகு பாவம் செய்பவன் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்றுச் சொல்லவருகிறேன், தாவீதைப் போல.

தாவீது இரண்டாம் கால கட்டத்தில் வாழ்ந்தவன். மோசேயின் கட்டளைகள் அனைத்தும் தெரிந்தவன், மட்டுமல்லாமல் ஒரு அரசன், அவனே தவறு செய்தால், தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். பைபிள் தேவன் குர்-ஆனில் அல்லா போல அல்ல, தவறு செய்தவன் தன் தீர்க்கதரிசியே ஆனாலும், தண்டனை உண்டு.


இனி, நாம் மூன்றாம் காலகட்டம், எங்களிடம் தேவன் எதிர்பார்க்கும் தகுதிகள், குணங்கள் இன்னும் அதிகம். புதிய ஏற்பாட்டின் மற்றும் இயேசுவின் மலைப் பிரசங்கத்தின் முன்பு, எந்த பழைய ஏற்பாட்டு நபரும் நீதிமான் ஆகமுடியாது. எனவே காலகட்டத்தைப் மாற்றி நாம் நல்ல குணங்களை அவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது, கூடாது.

New International Bible Commentary, Page : 7 சொல்கிறது, "It is anachronistic to judge Joshua or David by the standards of the Sermon on the Mount". ("யோசுவாவையும், தாவீதையும் இயேசுவின் மலைப் பிரசங்க தகுதியோடு (Standard) ஒப்பிடுவது சரியானது அல்ல" )

எனவே, இஸ்லாமியர்கள் இனி ஏதாவது சொல்லவேண்டுமானால், புதிய ஏற்பாட்டில் இயேசுவைப் பற்றிப் பேசுங்கள். அவர் குணங்கள், நடத்தை, அற்புதங்கள், மன்னிக்கும் தன்மை, பொருமை போன்றவற்றைப் பற்றி கேள்வி எழுப்புங்கள். பழைய ஏற்பாட்டு நபர்கள் எங்களுக்கு ஒரு எச்சரிக்கையே தவிர, எங்கள் வாழ்விற்கு அடிப்படை இல்லை. எங்கள் அஸ்திபாரம் இயேசு மற்றும் எங்கள் கோட்பாடுகள் பெரும்பான்மையாக புதிய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்படுகிறது.

நீங்கள் பழைய ஏற்பாட்டு நபர் தவறு செய்தானே என்றுச் சொன்னால், நாங்களும் ஆமாம் என்றுச் சொல்லி இன்னும் சிலவிவரங்களை உங்களுக்கு சொல்வோம். அதனால், குர்-ஆன் வேதம் என்றும், முகமது ஒரு நபி என்றும் உங்களுக்கு சாதகமாக நிருபிக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

StumbleUpon.com Read more...

ஓசை செல்லாவின் பதிவு கட்

இன்று தமிழ்மணத்தில் வெளியான ஓசை செல்லாவின் பதிவு காட்டப்படவில்லை.சரியாக பாதி வெட்டப்பட்ட நிலையில் தமிழ்மணம் ஓடிக்கொண்டிருக்கிறது.
 
 
சரி தொழில்நுற்ப கோளாறாக இருக்கலாம்.அப்படித்தான் நம்மை திருப்திப்படுத்திக்கணும்.நன்றிங்க
 
photo loading...
 
 

ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

 

காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா... ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..


 

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_723.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP