சமீபத்திய பதிவுகள்

ஹாலிவுட்"லவ்குரு" படம் இந்து அமைப்ப்புக்கள் எதிர்ப்பு

>> Monday, April 7, 2008




http://epaper.dinamalar.com/Web/Article/2008/04/08/012/08_04_2008_012_015.jpg

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகள் அமேரிக்காவில் தளம்




StumbleUpon.com Read more...

புராணங்கள் உருவானதன் ஆபாசக் காரணங்கள்!

புராணங்கள் உருவானதன் ஆபாசக் காரணங்கள்!

பார்ப்பன மதக் கோட்பாடுகளில் ஆண் - பெண் வக்கரித்த உறவுகள்! - 2

இன்றைய இந்துமத கடவுள்களில் சில முன்கூட்டியே சிறுவழிபாட்டுத் தெய்வங்களாக இருந்து பின்னால் இந்துமயமானவை.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன.

உதாரணமாக நற்றிணையில், (பாடல்-82)
"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல...
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின்"

காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றித் தெரியாதநிலை காணப்படுகின்றது.

இதுபோல அப்பருடைய தேவார வரிகள், இதற்குச் சான்று தருகின்றது.
"செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார்
மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"

தாய்த் தெய்வமான செல்வி, முருகன், சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது.

நாம் இனி இந்த வளர்ச்சியின் ஆபாசத்தையும், வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.

இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது. இந்த இராமாயணம் உருவாகக் காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!

இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம்;. இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன். மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான். இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களைப் பிடித்து உண்ணக் கொடுத்ததால் மூவரும் கர்ப்பமாகிக் குழந்தை பெற்றனர் என்கிறது, இராமாயணம்.

இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது. தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன், பெண்களைக் கொச்சைப் படுத்துகின்றான்.

 

http://unmaiudaiyaan.blogspot.com

StumbleUpon.com Read more...

Nokia 8800

Nokia 8800

StumbleUpon.com Read more...

படுக்கைக்குப் பயன்படுத்தப்பட வேண்டியவர் பெண்-மனுதர்மம் சாஸ்திரம்

`படுக்கை, ஆசனம், அகங்காரம், காமம், பொய், துரோகச் சிந்தனை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்'' (மனுதர்மம் சாஸ்திரம் அத்தியாயம் 9 சுலோகம் 17) இதன் மூலம் அறியப்படுவது என்ன? படுக்கைக்குப் பயன்படுத்தப்பட வேண்டியவர் பெண் என்பது மட்டுமல்லாமல், கீழான குணங்களின் வடிவம்தான் பெண் என்று சித்திரிக்கப்படுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

http://idhuthanunmai.blogspot.com/2008/02/blog-post_9812.html

StumbleUpon.com Read more...

சூத்திரன் என்றால் யார்?

சூத்திரன் என்றால் யார்? இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில் சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்
 

StumbleUpon.com Read more...

சிறுமியை பலாத்காரம் செய்த போலி சாமியாருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த போலி சாமியாருக்கு 10 ஆண்டு சிறை

திருவண்ணாமலை: செய்யாறு அருகே சிறுமியை பலாத்காரம் செய்த போலி சாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செய்யாறு அடுத்த புதுப்பாளையம் நெமிலி பகுதியை சேர்ந்தவர் ராமு (40). இவர் தன்னை சாமியார் என்று சொல்லி கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார்.

கடந்தாண்டு மார்ச் 10ம் தேதி இவர் அங்குள்ள திருநல்லூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி பிரேமா (சிறுமியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் பலாத்காரம் செய்தார்.

செய்யாறு மகளிர் போலீஸார் விசாரித்து, போலி சாமியார் ராமுவை கைது செய்தனர். இந்த வழக்கு செய்யாறு நீதிமன்றத்தில், நீதிபதி சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, போலி சாமியார் ராமுவுக்கு 10 ஆண்டு தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

http://www.dinamalar.com/2008MAR21/district/thiru.asp

StumbleUpon.com Read more...

சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?


சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?

லட்சுமண பகவான் ஒருநாள்....
அய்யர்: ஆகாயம் படைச்சார் பூமியும் படைச்சார்வாயு அக்கினி ஜலமும் படைச்சுட்டு...கடைசியாகத்தானே மனுஷாளப் படைச்சார் கடவுள் உலகத்தப் படைச்சார்

ராமசாமி(பெரியார்): இருக்கட்டும். கடவுள யாரு ஓய் படைச்சார்?
லட்சுமணன்: கடவுள யாரு படைக்கமுடியும் ஓய். அவா சுயம்பு தானா உண்டானவா - தான்தோன்றி
ராமசாமி: கண்காணா உன் கடவுள்தான் தோன்றி ஆகிறப்போ -கண் கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?

லட்சுமணன்: அசுரகுணம் உள்ளவாதான் - இப்படி அபஸ்வரமாக் கேள்வி கேப்பா...தேவகுணம் இருந்தா இப்படிக் குதர்க்கமாப் பேசமாட்டா ஒம்ம அசுர குணம் அழிகநீர் தேவகுணம் பெறுக...

ராமசாமி: இந்திரன் யாரு ஓய்...
லட்சுமணன்: தேவர்குலத் தலைவன்
ராமசாமி: இராவணன் யாரு ஓய்
லட்சுமணன்: அசுரர் குல அரசன்

ராமசாமி: காட்டில் இருந்த முனிவன் மனைவியின் கற்பைக் கெடுத்தவன் இந்திரன்.கவர்ந்து சென்ற மாற்றான் மனைவியைக் கற்போடு விட்டவன் இராவணன் இப்பச் சொல்லும் குணத்தில் உயர்ந்தவன் யார்?தேவனா?அசுரனா?

லட்சுமணன்: அசுரகுலத்திலயும் அப்பப்போ நல்லவா இருந்திருக்காளே!நந்தனுக்கு மோட்சம் கொடுக்கலியோ நடராஜப் பெருமான்?

ராமசாமி: நந்தனுக்கு மோட்சம் கொடுத்தீரோ தீயிட்டு எரிமூட்டி மோசம் புரிந்தீரா? மோட்சம் தந்தது மோட்சம் தந்தது முற்றிலும் உண்மையென்றால் - அவன்சந்ததியெல்லாம் சந்நிதி இழந்து சந்தியிலே ஏன் நின்றான்?

லட்சுமணன்: மனுஷாளா இருந்தாமடியா இருக்கணுமோ இல்லியோ? தீட்டுன்னு பெரியவா தெரியாமலா சொன்னா?

ராமசாமி: தீட்டு என்னய்யா தீட்டு... குடிக்கிற தண்ணியத் தொடப்படாது குளத்துலயும் கால் படப்படாது எப்படிய்யா வரும் சுத்தம்? ஒங்க மேலதான் குத்தம் குளிக்காத பசுவக் கும்புடுறீங்க - அதக் குளிப்பாட்டும் மனுசன ஏனய்யா கொல்றீங்க?

ராமசாமி: புராணம் இதிகாசம் - வெறும் பொய் மோசம் பொய் பேசிப் பேசியே பொய்யாப் போச்சே தேசம்!!

லட்சுமணன்: புராணம் இதிகாசம் பொய்யில்லேங்காணும்

ராமசாமி: அப்படியாங்காணும் ஆதாரம் கூறும்!
லட்சுமணன்: அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்டகோடு மூணும் அப்படியே இருக்குது ஓய் அழியலையே பாரும்
ராமசாமி: ஓகோ! முதுகத் தொட்டதும் மூணுகோடு விழுந்திருச்சோ? ஏங்காணும்! சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா - இல்ல சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா? http://unmaionline.com/20070101/20.htm

StumbleUpon.com Read more...

கொக்கு எப்படி இருக்கும்?

கொக்கு எப்படி இருக்கும்?

ஒரு ஊர் கோடியில் மக்கள் கூட்டம் அழுகுரலோடு அலைமோதிக்கொண்டிருந்தது.அந்த வழியே போன குருடன் ஒருவன் ஒரு மனிதனை அழைத்து இந்த அழுகையின் சத்தத்துக்கு காரணம் என்ன என்று வினவினான்.

அந்த மனிதன் சொன்னான் ஐயா ஒரு குழந்தை செத்து போய்விட்டது அது தான் இந்த சத்தத்துக்கு காரணம் என்ரு சொன்னான்.

உடனே குருடன் கேட்டான் எப்படி குழந்தை செத்தது என்று?

அந்த மனிதர்:பால் குடிக்கும் போது விக்கி செத்துப்போனது என்றான்.

குருடன்:ஐயா பால் குடிக்கும் போதா?அப்படின்னா அந்த பால் எப்படி இருக்கும்.?

அந்த மனிதர்:யோவ் பால் வெள்ளையாய் இருக்கும்

குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க,வெள்ளை எப்படி ஐயா இருக்கும்?

அந்த மனிதர்<img (மிகவும் சலித்துக்கொண்டு)கொக்கு மாதிரி இருக்கும்யா.

குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க நான் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக்கறேன்.

அந்த மனிதர்:சரி கேட்டுத் தொலையா.

குருடன் :ஐயா அந்த கொக்கு எப்படி ஐயா இருக்கும்?

அந்த மனிதர்:மிகவும் கோபமாக தன் கையை வளைத்து இந்த இப்படித்தான் இருக்கும் என்று சொன்னார்.

அந்த குருடன் அந்த மனிதரின் கையை தடவிபார்த்து விட்டு ஐயா இவ்வளவு பெரிசு குழந்தை வாயில் போனா குழந்தை சாகாமல் இருக்குமா என்று கேட்டுவிட்டு நடையை கட்டினான்

பதில் சொன்ன மனிதர் தலையில் அடித்துக்கொண்டார்.

 

http://aanthaiyaar.blogspot.com/2008/03/blog-post_7971.html

StumbleUpon.com Read more...

எல்லாக் குழந்தைகளும் முஸ்லிமாய்ப் பிறக்கிறதா?




இந்த வார திண்ணை இதழில், திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் சிறப்பானதொரு கட்டுரையை திண்ணைப் பேச்சில் எழுதியுள்ளார்.

இக்கட்டுரையின் மூலம் மிகவும் வலுவான அடியை கோ.ராஜாராம் அவர்கள் இஸ்லாமிஸ்டுகளுக்கு கொடுத்துள்ளார். காரணம், கோ.ராஜாராம் வஹ்ஹாபியை எதிர்கொள்ளவில்லை, 'பிறக்கும் குழந்தைகளை கிறித்துவர்களாகவோ யூதர்களாகவோ மாற்றிவிடுகிறார்கள், அவர்களின் இயல்பான மதம் இஸ்லாமே, உலகில் எல்லாமே இஸ்லாமாகவே (அதாவது கல், மண், மரம், செடி, கொடிகள், விலங்குகள்) கடவுளுக்கு கட்டுப்பட்டு (அதன் நீட்சியாக கடவுளின் தூதர்களுக்கு, அவர்கள் நியமித்த ஆட்சியாளர்களுக்கு) இயங்குகின்றன' என்பது முஹம்மதுவின் கருத்து, இஸ்லாத்தின் மிகவும் முக்கியக் கோட்பாடு'. எனவே இது இஸ்லாமியர்களுக்கு பெரும் அவமதிப்பாக தென்படும் (ஆனால், அவர்களது கருத்துக்கள் எப்படி மற்றவர்களை அவமதிக்கிறது என்பது என்றும் அவர்களுக்கு புரிவதில்லை).

எப்படியோ, நல்ல விஷயங்கள் தமிழில் நடைபெறுகின்றன. எனது மலையாளி நண்பர் ஒருவர் (தமிழ் தெரிந்தவர்) இந்த விவாதங்களையெல்லாம் பார்த்துவிட்டு அயர்ந்துபோனார் - இந்த நிலை மலையாளத்தில் என்று வரும் என்ற வேட்கையோடு.

ஆங்கிலத்தில் மட்டுமே இஸ்லாம் பற்றிய இப்படியான விவாதங்கள் நடைபெறுகின்றன (குறைந்தபட்சம் நான் காணும் வரையில், மற்ற மொழிகளிலும் நடைபெறலாம் - எனக்கு தெரியவில்லை). இந்திய மொழிகளில் தமிழில் இந்த அளவுக்கு ஆழமாக இஸ்லாத்தின் அடிப்படை குறித்த விழிப்புணர்வு பரவுவதை நினைத்தால் மகிழ்சியாக இருக்கிறது.

நே.கு


***


Thursday March 27, 2008

திண்ணைப் பேச்சு - அன்புள்ள வஹாபி

கோபால் ராஜாராம்






எல்லாக் குழந்தைகளும் முஸ்லிமாய்ப் பிறக்கிறது என்று எனக்குத் தெரியாத அரபி மொழியில் ஏதோ, சொல்லியிருக்கிற வஹாபியின் கடிதம் கண்டு நான் மனமாரச் சிரித்தேன். நான் பிறந்தது நிர்வாணமாக. அம்மா-அப்பா குரொமோசோம்களின் கலவையும், முன்னோர்களின் மரபணுப் பதிவின் கலவையுமாகப் பிறந்த நான் ஒரு எழுதப் படாத சிலேட் தான். அதற்குப் பின்பு என் பெற்றோர், என் சூழல், என் ஆசிரியர்கள், படித்தது, கேட்டது என்று ஐயப் பாடுகளும், சிந்தனைகளும் பெற்று வளர்ந்து நிற்கிற ஒருவன் நான். எல்லோருமே அப்படித்தான், வஹாபி உட்பட. பிறக்கும்போதே சாதி, மதம், சொல்லப்போனால் பாலின உணர்வு கூடப் பெறுவதில்லை என்று அறிவியல் சொல்கிறது. எனவே தான் கிருஸ்துவ மதத்தில் ஓரளவு சிறுவர் சிறுமியர் வளர்ந்த பிறகு அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்கப் படுகிறது. யூத மதத்திலும் அவ்வாறே. இப்படி வஹாபி எழுதுவது இஸ்லாமியராய் அல்லாத 400 கோடி மக்களை அவமதிப்பது மட்டுமல்ல, இஸ்லாம் என்ற மதத்தையும் அவமதிப்பது போலத்தான். அறிவு பெற்றபிறகு பகுத்தறிவால் ஆய்ந்து உணர்ந்து தேர்வு செய்துகொள்கிற நம்பிக்கை தான் உண்மையானதாய் , ஒரு மனிதனின் இயல்பிற்குத் தக்கதாய் இருக்க முடியும். மிரட்டலாலும், இப்படி பிறக்கும்போதே இஸ்லாமியனாய்ப் பிறந்தாய் என்றெல்லாம் பொய் சொல்லி ஆள் சேர்க்கிற அளவு இஸ்லாம் பலவீனமானது என்று நான் நம்பவில்லை.


இஸ்லாம் பற்றிய புகழுரையை வழங்கியுள்ள அநேகம் பேரை மேற்கோள் காட்டுவதன் மூலம் வஹாபி என்ன சொல்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. இஸ்லாம் பற்றி விமர்சனங்களை முன்வைத்த பலநூறு பேரையும் என்னால் மேற்கோள் காட்ட முடியும். ஆனால் வஹாபி காட்டும் மேற்கோள்களும் சரி, இஸ்லாமை விமர்சனம் செய்பவர்களின் மேற்கோள்களும் சரி எதனுடைய நிரூபணமும் அல்ல. ஒரு குறிப்பிட்ட பார்வையிலிருந்து செய்யப் படுகிற பாராட்டு அல்லது விமர்சனம், அதன் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளத் தக்கதே தவிர சீர்தூக்கிய முடிவல்ல. அதை வேதவாக்காய்க் கொண்டு இஸ்லாமைப் புகழ்வதோ, இகழ்வதோ தவறு. இது இஸ்லாமிற்கு மட்டுமல்ல, எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.


அமெரிக்காவில் மிக வேகமாக வளர்கிற மதம் இஸ்லாம் என்ற புள்ளி விவரம் தவறு என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் கூட அது இஸ்லாமின் தகுதியைக் காட்டிலும், அமெரிக்காவின் பல்கலாசாரப் பண்பிற்கு ஒரு பாராட்டாகத் தான் அமையுமே தவிர வேறில்லை. இதே சுதந்திரம் இஸ்லாமியர் பெரும்பான்மையாய் உள்ள நாடுகளிலும் வழங்கப் படவேண்டும் என்று வஹாபி பிரார்த்தனை செய்யட்டும். பெரும்பான்மை வாதத்தால் மற்ற மதங்களின் உரிமைகள் நசுக்கப்படாத அமெரிக்கா போன்றே இரான், அரேபியா , எகிப்து போன்ற நாடுகளிலும் மதச்சுதந்திரம் வழங்கப் படவேண்டும் என்பது நம் கோரிக்கையாய் இருக்கட்டும். வஹாபி இதற்குப் பாடுபடுவார் குரல் கொடுப்பார் என்று நம்புவோம்.

****


பிறக்கும்போதே ஒரு மதத்தைப் பச்சை குத்திக் கொண்டு எல்லோரும் பிறக்கிறார்கள் என்ற வாதம் ஒரு தத்துவப் பிரசினையின் தொடக்கம். மனிதனின் இருப்பு முன் கூட்டியே நிர்ணயிக்கப் பட்டுவிட்டால், அவனுடைய சுயம் என்பது என்ன? சுதந்திரத் தேர்வு என்பது என்ன? அப்படித் தேர்வு இல்லையென்றால் அவன் செயல்களுக்கு அவன் எப்படி பொறுப்பாவான்? சொர்க்கம் நரகம் என்ற கருத்தாக்கம் எப்படி பொருள் கொள்ளும் என்பது ஒரு தத்துவப் பிரசினை. கிருஸ்துவ தத்துவத்தில் சுதந்திரத் தேர்வு மனிதனுக்கு உண்டா இல்லையா என்பது பற்றி பெரும் தத்துவ விசாரங்கள் நடந்து வந்திருக்கின்றன.


ஆனால் வஹாபி போன்றவர்களுக்கு இந்தத் தத்துவப் பிரசினையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தயாராக உள்ள பதில்களைப் பதிவு செய்தால் போதும்.


****

1400 வருடங்கள் முன்பு இஸ்லாம் தோன்றவில்லை என்று வஹாபி சொல்வதும் எனக்கு விளங்கவில்லை. முகம்மது கார்ட்டூன்களுக்குத் தானே முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மோசஸ், ஏசு பற்றி காமெடியும், கார்ட்டூன்களும் வழமையாய் எல்லா மேற்கு நாடுகளிலும் உண்டே அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே. முகம்மது தோன்றியிராவிட்டால் எப்படி இஸ்லாம் என்ற மதம் தோன்றியிருக்கும்?


****





திண்ணையில் கோபால் ராஜாராம்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20803272&format=html

http://islaamicinfo.blogspot.com/2008/03/blog-post.html

StumbleUpon.com Read more...

வாயைத் திறக்காமல் பாட்டு பாட முடியுமா?இதோ இவர் பாடுகிறார்

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP