சமீபத்திய பதிவுகள்

வங்காளதேச அதிபர் குடும்பத்தோடு சுட்டுக்கொலை!!!!!!!!!!!!

>> Tuesday, May 6, 2008

வங்காளதேச அதிபர் முஜிபுர் ரகிமான் குடும்பத்தோடு சுட்டுக்கொலை
 

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசத்தை விடுவித்து சுதந்திர நாடாக ஆக்கிய முஜிபுர் ரகிமான் குடும்பத்தோடு சுட்டுக் கொல்லப்பட்டார்.

வங்காளதேசம் உதயம்

கிழக்கு பாகிஸ்தானின் சுயாட்சிக்காக முஜிபுர் ரகிமான் பாடுபட்டார். இதனால் 1970_ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 
இந்திரா காந்தியுடன் ரகிமான்.
இதைத்தொடர்ந்து, வங்காளதேசத்தில் சுதந்திரப்போர் மூண்டது. பாகிஸ்தான் படைகளை எதிர்த்து ரகிமான் அமைத்த சுதந்திர படை போரிட்டது. சுதந்திர படைகளுக்கு ஆதரவாக இந்திய படைகளும், வங்காள தேசத்துக்குள் புகுந்தன.

இந்திய படைகளும், சுதந்திர படைகளும் இணைந்து வீரப் போர் புரிந்தன. அதை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவம் 1971 டிசம்பர் 17_ந் தேதி சரணாகதி அடைந்தது.

இதற்கிடையே, ரகிமானை தூக்கில் போட்டு உடலை அடக்கம் செய்வதற்கு சிறைச் சாலைக்கு அருகிலேயே குழியும் வெட்டி வைத்திருந்தார், பாகிஸ்தான் அதிபர் யாகியாகான். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் படுதோல்வி அடைந்ததால், யாகியாகான் ஆட்சி கவிழ்ந்தது. பூட்டோ ஆட்சிக்கு வந்ததும் 7_1_1972_ல் ரகிமானை விடுதலை செய்தார்.

சுதந்திர வங்காளதேசத்தின் பிரதமராக ரகிமான் பதவி ஏற்றார்.

ராணுவ புரட்சி

முஜிபுர் ரகிமான் 1975_ம் ஆண்டு ஜனவரி 25_ந்தேதி எல்லா கட்சிகளையும் தடை செய்து விட்டு, "ஒரு கட்சி ஆட்சி"யை கொண்டு வந்தார். முழு அதிகாரங்களையும் கொண்ட அதிபர் (ஜனாதிபதி) பொறுப்பு ஏற்றார்.

15_8_1975 அன்று காலை 5_15 மணிக்கு வங்காள தேசத்தில், ரகிமானுக்கு எதிராக ராணுவ புரட்சி நடந்தது. இது வரை வர்த்தக மந்திரியாக இருந்த முஸ்தாக் அகமது (57) தலைமையில் இந்த ராணுவப்புரட்சி நடந்தது. வங்காளதேச தலைநகரான டாக்கா ரேடியோ நிலையம் வழக்கமான நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, இதை அறிவித்தது.

சுட்டுக்கொலை

"புரட்சியின்போது ரகிமான் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆட்சியை ராணுவம் கைப்பற்றிக்கொண்டது. முஸ்தாக் அகமது புதிய ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ளார். மக்கள் அனைவரும் புதிய ஆட்சிக்கு விசுவாசமாக கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும்" என்று ரேடியோவில் மேஜர் சலீம் என்ற ராணுவ தளபதி அறிவித்தார். (இவர், ராணுவத்தில் இருந்து ரகிமானால் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் ஆவார்.)

வங்காளதேசத்தில் ராணுவ புரட்சி நடந்ததையும், அதில் ரகிமான் இறந்து விட்டார் என்பதையும் டாக்கா ரேடியோ திரும்ப திரும்ப ஒலிபரப்பியது. 8 மணிக்கு பிறகு ரகிமான் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

பிரதமரும் கொலை

வங்காளதேசத்தின் பிரதமரான மன்சூர் அலியும் கொல்லப்பட்டார் என்று டாக்கா ரேடியோ பிறகு அறிவித்தது. ரகிமானின் 2 மருமகன்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ரகிமானின் நண்பர்

புரட்சியை தலைமை தாங்கி நடத்தியவரான முஸ்தாக் அகமது, ஒரு காலத்தில் ரகிமானின் வலது கைபோல் விளங்கியவர். வங்காளதேசத்தில் போர் நடந்தபோது ரகிமான் அமைத்த புரட்சி அரசாங்கத்தில் இவர் வெளிநாட்டு இலாகா மந்திரியாக பதவி வகித்தார். வங்காளதேசம் சுதந்திரம் அடைந்த பிறகு இவர் வர்த்தக மந்திரியாகவும், வெளிநாட்டு வர்த்தக மந்திரியாகவும் நியமிக்கப்பட்டார்.

புரட்சி நடந்தபோது ரகிமான் வீடு இருந்த பகுதியில் கடும் சண்டை நடந்தது. ரகிமான் ஆதரவு ராணுவத்தை புரட்சி ராணுவத்தினர் அடக்கி விட்டனர். அன்று பிற்பகலில் புதிய அதிபராக முஸ்தாக் அகமது பதவி ஏற்றார்.

புரட்சி ஏன்?

ராணுவ புரட்சி நடத்தியது ஏன் என்பதை விளக்கி, முஸ்தாக் அகமது ரேடியோவில் பேசினார். அவர் கூறியதாவது:_

வங்காளதேசத்தில் ஆட்சி நடத்தி வந்த முஜிபுர் ரகிமான் பதவியில் தொடர்ந்து நீடிக்க சதி செய்தார். இதனால் பொது மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் ஆதரவு பெற்ற ஒரு சிலரின் கையில் ஏராளமான செல்வம் சேர்ந்தது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான மக்களின் கனவுகள் நிறைவேற வில்லை. அதற்குப் பதிலாக ஆளும் கட்சியினர் பல்வேறு வகையான ஊழல்களில் ஈடுபட்டார்கள். நாட்டின் பொருளாதார நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. முக்கிய தொழிலான சணல் தொழில் நசிந்து போயிற்று. அரசாங்கத்துக்கு எதிராக யாரும் எதுவும் பேசமுடியாத நிலை ஏற்பட்டது. பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்பட்டது.

நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். இதனால் ராணுவம் தனது கடமையை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவசிய தேவை காரணமாகவே இந்த ராணுவப் புரட்சி நடத்த வேண்டி வந்தது."

இவ்வாறு முஸ்தாக் அகமது பேசினார்.

உடல் அடக்கம்

முஜிபுர் ரகிமானின் உடல், தலைநகர் டாக்காவில் இருந்து அவருடைய சொந்த கிராமமான துங்கிபாரா என்ற ஊருக்கு (பரீப்பூர் மாவட்டம்) எடுத்துச் செல்லப்பட்டது. அவருடைய குடும்பத்தினருக்கான தனி மயானத்தில் ரகிமான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

குடும்பமே கொலை

ரகிமான், அவரது 2 மருமகன்கள், பிரதமர் மன்சூர்அலி ஆகியோர் கொல்லப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 2 நாட்கள் கழித்து ரகிமானின் மனைவி பாத்திமா, சமீபத்தில் திருமணமான 2 மகன்கள், அவர்களுடைய மனைவியர், ரகிமானின் மூன்றாவது மகன் ரசல் (வயது 9), ஆகியோரும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ரகிமானின் மகள் ஹசீனா வெளிïரில் இருந்ததால் அவர் மட்டும் தப்பினார்.

(இவர் பின்னர் தேர்தல் மூலம் வங்காளதேச அதிபரானார்)
 
 

StumbleUpon.com Read more...

புகழின் சிகரத்தை தொட்ட முதல் எழுத்தாளர் "கல்கி"


 

சரித்திரக் கதைகளுக்கு முன்னோடி

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னராய் விளங்கியவர், "கல்கி". தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி.

"கல்கி"யின் இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில் 1899_ம் ஆண்டு செப்டம்பர் 9_ந்தேதி பிறந்தார். பெற்றோர் ராமசாமி அய்யர் _ தையல்நாயகி.

புத்தமங்கலத்தில் ஆரம்பக் கல்வி பயின்றபின், திருச்சி ஈ.ஆர். உயர்நிலைப்பள்ளியிலும், தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார்.

 
கல்கி_சிறுவயதில்.

L¥f_p¿YV‡¥.

 


சுதந்திரப் போர்

1921_ம் ஆண்டில், காந்திஜி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினார். நாட்டு விடுதலைப் போரில் பங்கு கொள்ள வேண்டு மென்று விரும்பிய கல்கி, படிப்பை விட்டு விட்டு, கரூரில் நாமக்கல் கவிஞர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தடையை மீறிப் பேசினார். போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். அவருக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.

சிறையில் இருந்தபோது "விமலா" என்ற தமது முதல் நாவலை எழுதினார். இந்த நாவல் பிறகு "வ.ரா" நடத்திய "சுதந்திரன்" பத்திரிகையில் வெளியாகியது.

விடுதலையான பிறகு, திருச்சியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். அப்போது, காங்கிரசுக்காக அவர் எழுதிய துண்டுப் பிரசுரங்களில் அவருடைய எழுத்துத்திறமை வெளியாகியது.

திரு.வி.க.

"கல்கி"யின் திறமையைத் தெரிந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், திரு.வி.க.வின் "நவசக்தி" பத்திரிகையில் சேரும்படி ஆலோசனை கூறி, சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். கல்கியின் எளிய இனிய தமிழ்நடை திரு.வி.க. வுக்குப் பிடித்துப் போக, உடனே துணை ஆசிரியர் பதவி கொடுத்தார்.

"நவசக்தி"யில் பணி புரிந்தபோது, கல்கியின் எழுத்துக்களில் மேலும் மெருகேறியது. "தேனீ" என்ற பெயரில் உலகச் செய்திகளை திரட்டிக் கொடுத்தார். முக்கிய மாநாடுகளுக்கு நவசக்தியின் சிறப்பு நிருபராகச் சென்று, நிகழ்ச்சிகளை தொகுத்து எழுதினார். இவை எல்லாம் திரு.வி.க.வின் பாராட்டைப் பெற்றன.

இந்த சமயத்தில் கல்கிக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் ருக்மணி.

.

B]‹R «LPÁ ÙTÖ¿ TÖp¡VŸ
ஆனந்த விகடன்

1928 பிப்ரவரியில், "ஆனந்த விகடன்" பத்திரிகை எஸ்.எஸ். வாசன் நிர்வாகத்தில் வெளிவரத் தொடங்கியது.

பாரதியாரின் நண்பரான பரலி.சு. நெல்லையப்பர், கல்கியை வாசனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி, "இவர் நவசக்தியில் பணிபுரிகிறார். எழுத்தாற்றல் மிக்கவர். இவருடைய எழுத்துக்கள் விகடனுக்கு மிகவும் பொருந்தும்" என்றார். கல்கியை, ஒரு கட்டுரை எழுதி அனுப்பும்படி வாசன் கேட்டுக்கொண்டார். "ஏட்டிக்குப்போட்டி" என்ற நகைச்சுவை கட்டுரையை "கல்கி" எழுதி அனுப்பினார்.

வரிக்கு வரி நகைச்சுவை இழைந்தோட எழுதப்பட்டிருந்த அக்கட்டுரையைப் படித்து, விழுந்து விழுந்து சிரித்தார், வாசன். தன் தாயாருக்கும் படித்துக்காட்டினார். அவர் ரசித்து மகிழ்ந்தார்.

 
ஆனந்த விகடன் பொறுப்பாசிரியர்
"கல்கி" என்ற புனைப்பெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய முதல் கட்டுரை இதுதான். தொடர்ந்து விகடனில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதலானார்.

ராஜாஜியின் ஆசிரமம்

இந்த சமயத்தில், திருச்செங்கோட்டில் "காந்தி ஆசிரமம்" நடத்திக்கொண்டிருந்த ராஜாஜி, "விமோசனம்" என்ற பெயரில் மதுவிலக்கு பிரசாரத்துக்காக ஒரு பத்திரிகை நடத்தப்போவதாகத் தெரிவித்தார். "நவசக்தி"யில் பெரும்பாலும் மொழிபெயர்ப்பு வேலைகளையே கல்கி செய்ய வேண்டியிருந்தது. பல்சுவை கதை_ கட்டுரைகளை எழுத விரும்பிய கல்கி, திரு.வி.க.விடம் பிரியா விடை பெற்று, திருச்செங்கோடு சென்று, "விமோசனம்" பத்திரிகையின் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

1930_ல் மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கினார். அதில் பங்கு கொண்ட ராஜாஜி, வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சி சிறை சென்றார். ராஜாஜியின் அனுமதியுடன், "விமோசன"த்தை நிறுத்திவிட்டு, கோபிசெட்டிபாளையத்தில் தடையை மீறிப் பேசி `கல்கி' கைதானார். அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப் பட்டது. தண்டனை முடிந்து வெளியே வந்த கல்கி, ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியர் ஆனார்.

"கல்கி"யின் எழுத்தாற்றலும், வாசனின் நிர்வாகத் திறமையும் சேர்ந்ததால், விகடனின் விற்பனை பல்லாயிரக்கணக்கில் உயர்ந்தது.

WÖ^ÖÈ, WpLU‚ "z.ÚL.p." BfÚVÖ£PÁ L¥f.

 

தொடர்கதை

விகடனில் "கல்கி" எழுதிய முதல் தொடர்கதை "கள்வனின் காதலி", தமிழ்நாடெங்கும் கல்கியின் புகழைப் பரப்பியது. பிறகு, திரைப்படத்திற்கென்றே கல்கி எழுதிய "தியாகபூமி" கதையை கே.சுப்பிரமணியம் படமாகத் தயாரிக்க, அந்த படத்தின் "ஸ்டில்" களுடன் விகடனில் "தியாகபூமி" தொடராக வெளிவந்தது.

புதுமையான அந்த முயற்சி, விகடனின் விற்பனையையும், கல்கியின் புகழையும் சிகரத்துக்கு கொண்டு போயிற்று.

அதுமட்டுமல்ல, "கர்நாடகம்" என்ற பெயரில் எழுதிய சினிமா விமர்சனங்களும், தலையங்கங்களும் விகடனை தமிழகத்தின் குடும்பப் பத்திரிகையாக்கின. இந்த நேரத்தில் கல்கி வாழ்க்கையிலும், விகடன் வரலாற்றிலும் எதிர்பாராத ஒரு திருப்பம்.

1940_ம் ஆண்டின் இறுதியில் தனிநபர் சத்தியாக்கிரகத்தை காந்தி தொடங்கினார். அதில் கலந்து கொள்ள விரும்புவதாக மகாத்மா காந்திக்கு கல்கி கடிதம் எழுதி, அதற்கு அனுமதியும் பெற்றார்.

இதை வாசனிடம் கல்கி தெரிவித்தபோது "காந்திஜியிடம் உங்கள் பெயரைக் கொடுத்தபோது, அதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும்" என்றார், வாசன். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்புடைய பத்திரிகைகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்த காலம் அது.

எனவே, போராட்டத்தில் இருந்து கல்கி விலகியிருக்கவேண்டும்; அல்லது ராஜினாமா செய்து விட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வாசன் கருதினார். அதன் விளைவாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கல்கி போராட்டத்தில் பங்கு கொண்டார். 3 மாதம் கடுங்காவல் தண்டனை அடைந்தார்.

சொந்தப் பத்திரிகை

சிறையில் இருந்து விடுதலையான "கல்கி", தன் நண்பர் டி.சதா சிவத்துடன் சேர்ந்து, சொந்தப் பத்திரிகை நடத்தத் தீர்மானித்தார்.

காங்கிரஸ் போராட்டங்களில் கலந்து கொண்டபோதே கல்கியும்,

 
ராஜாஜி, ரசிகமணி "டி.கே.சி." ஆகியோருடன் கல்கி.
சதாசிவமும் நண்பர்கள். ஆனந்த விகடன் விளம்பர மானேஜராக 3 ஆண்டு பணியாற்றினார் சதாசிவம். பின்னர் சுயேச்சையான விளம்பர ஆலோசகராக இருந்தார்.

சங்கீத உலகில் புகழ் பெற்றிருந்த தன் மனைவி எம்.எஸ்.சுப்பு லட்சுமியை திரை உலகிலும் பிரகாசிக்கச் செய்ய "சகுந்தலை" படத்தை சதாசிவம் எடுத்தார். அடுத்து "சாவித்திரி" படத்தில் நடிக்க சுப்புலட்சுமிக்கு அழைப்பு வந்தது. ஆண் வேடத்தில் நடிக்க முடியாது என்று சுப்புலட்சுமி மறுத்துவிட்டார். ஆனால், "கல்கி" பத்திரிகையை தொடங்க பணம் தேவைப்பட்டதால், "சாவித்திரி" படத்தில் நடிக்க சம்மதித்து, அதில் கிடைத்த பணத்தைக் கொடுத்து உதவினார்.

சொந்தப் பத்திரிகை ஆரம்பிப்பதால் கல்கிக்கு கஷ்டங்கள் ஏற்படலாம் என்று ராஜாஜியும், ரசிகமணி டி.கே.சி.யும் கவலை அடைந்தனர். ஆனால் பத்திரிகை வெற்றிகரமாக அமைந்தது. கல்கியின் எழுத்துத் திறமையும், டி.சதாசிவத்தின் நிர்வாகத்திறனும் சேர்ந்து, "கல்கி"யின் விற்பனையை வெகு விரைவில் பல்லாயிரக்கணக்கில் உயரச்செய்தன.

சரித்திரக் கதைகள்

தமிழின் முதல் சரித்திர நாவலான "பார்த்திபன் கனவு" கல்கியில் தொடராக வெளியாயிற்று. அதனை அடுத்து வெளிவந்த "சிவகாமியின் சபதம்" கல்கிக்கு இணையற்ற புகழைத் தேடித்தந்தது.

சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு "கல்கி" தீட்டிய "அலை ஓசை", அவருடைய சமூக நாவல்களில் புகழ் பெற்றது. தமது படைப்புகளில் இதுவே தலைசிறந்தது என்பது கல்கியின் கருத்து.

1952_53_ல் கல்கி எழுதத்தொடங்கிய "பொன்னியின் செல்வன்" மூன்றாண்டுகள் தொடராக வெளிவந்தது. கதையின் முடிவு பலருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு, கதாபாத்திரங்கள் பின்னர் என்ன ஆனார்கள் என்பதற்கு ஒரு முடிவுரையே எழுதினார், கல்கி. அத்தகைய நாவல், பின்னர் வாசகர்களின் பேராதரவைப் பெற்று "கல்கி"யில் பலமுறை மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் தன் பேனா மூலம் இலக்கிய உலகத்தை அரசாண்ட கல்கி, 1954 டிசம்பர் 5_ந்தேதி, தமது 55_வது வயதில் காலமானார்.

அப்போது அவர் "கல்கி"யில் "அமரதாரா" என்ற தொடர் கதையை எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக்கொண்டு, கதையை கல்கியின் மகள் ஆனந்தி எழுதி முடித்தார்.

மகன் ராஜேந்திரன் பின்னர் கல்கி ஆசிரியராகப் பொறுப் பேற்றார். இப்போது, பேத்தி சீதா ஆசிரியராக இருக்கிறார்.

"கல்கி"யின் நூற்றாண்டு விழா, தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் ஓராண்டு காலம் கொண்டாடப்பட்டு, 9_9_1999_ல் நிறைவடைந்தது. அப்போது கல்கி உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது. அடையாறு காந்தி நகரில் கல்கி வசித்த தெருவுக்கு அவர் பெயரைச் சூட்டினார், முதல்_அமைச்சர் கருணாநிதி.
 
 

StumbleUpon.com Read more...

இந்தியா முழுவதும் உள்ள முன்னனி நிறுவனங்கள்,வங்கிகள் அனைத்தின் Toll Free நம்பர்கள் உங்கள் விரல் நுனியில்

Some Useful Toll free phone numbers in India are here.It may be useful to you.

Airlines
Indian Airlines - 1800 180 1407
Jet Airways - 1800 22 5522
Spice Jet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
KingFisher - 1800 180 0101

Banks
ABN AMRO - 1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporatin Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655

Automobiles
Mahindra Scorpio - 1800 22 6006
Maruti - 1800 111 515
Tata Motors - 1800 22 5552
Windshield Experts - 1800 11 3636


Computers/IT
Adrenalin - 1800 444 445
AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004


Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/5/6/7/8/9
Couriers/Packers & Movers
ABT Courier - 1800 44 8585
AFL Wizz - 1800 22 9696
Agarwal Packers & Movers - 1800 11 4321
Associated Packers P Ltd - 1800 21 4560
DHL - 1800 111 345
FedEx - 1800 22 6161
Goel Packers & Movers - 1800 11 3456
UPS - 1800 22 7171

Home Appliances
Aiwa/Sony - 1800 11 1188
Anchor Switches - 1800 22 7979
Blue Star - 1800 22 2200
Bose Audio - 1800 11 2673
Bru Coffee Vending Machines - 1800 44 7171
Daikin Air Conditioners - 1800 444 222
DishTV - 1800 12 3474
Faber Chimneys - 1800 21 4595
Godrej - 1800 22 5511
Grundfos Pumps - 1800 33 4555
LG - 1901 180 9999
Philips - 1800 22 4422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 11 0101
Voltas - 1800 33 4546
WorldSpace Satellite Radio - 1800 44 5432

Investments/ Finance
CAMS - 1800 44 2267
Chola Mutual Fund - 1800 22 2300
Easy IPO's - 3030 5757
Fidelity Investments - 1800 180 8000
Franklin Templeton Fund - 1800 425 4255
J M Morgan Stanley - 1800 22 0004
Kotak Mutual Fund - 1800 222 626
LIC Housing Finance - 1800 44 0005
SBI Mutual Fund - 1800 22 3040
Sharekhan - 1800 22 7500
Tata Mutual Fund - 1800 22 0101

Travel
Club Mahindra Holidays - 1800 33 4539
Cox & Kings - 1800 22 1235
God TV Tours - 1800 442 777
Kerala Tourism - 1800 444 747
Kumarakom Lake Resort - 1800 44 5030
Raj Travels & Tours - 1800 22 9900
Sita Tours - 1800 111 911
SOTC Tours - 1800 22 3344 Healthcare
Best on Health - 1800 11 8899
Dr Batras - 1800 11 6767
GlaxoSmithKline - 1800 22 8797
Johnson & Johnson - 1800 22 8111
Kaya Skin Clinic - 1800 22 5292
LifeCell - 1800 44 5323
Manmar Technologies - 1800 33 4420
Pfizer - 1800 442 442
Roche Accu-Chek - 1800 11 45 46
Rudraksha - 1800 21 4708
Varilux Lenses - 1800 44 8383
VLCC - 1800 33 1262


Insurance
AMP Sanmar - 1800 44 2200
Aviva - 1800 33 2244
Bajaj Allianz - 1800 22 5858
Chola MS General Insurance - 1800 44 5544
HDFC Standard Life - 1800 227 227
LIC - 1800 33 4433
Max New York Life - 1800 33 5577
Royal Sundaram - 1800 33 8899
SBI Life Insurance - 1800 22 9090

Hotel Reservations
GRT Grand - 1800 44 5500
InterContinental Hotels Group - 1800 111 000
Marriott - 1800 22 0044
Sarovar Park Plaza - 1800 111 222
Taj Holidays - 1800 111 825

Teleshopping
Asian Sky Shop - 1800 22 1800
Jaipan Teleshoppe - 1800 11 5225
Tele Brands - 1800 11 8000
VMI Teleshopping - 1800 447 777
WWS Teleshopping - 1800 220 777

Others
Domino's Pizza - 1800 111 123

Cell Phones
BenQ - 1800 22 08 08
Bird CellPhones - 1800 11 7700
Motorola MotoAssist - 1800 11 1211
Nokia - 3030 3838
Sony Ericsson - 3901 1111
 
 
 
 by-paul222
 

StumbleUpon.com Read more...

இன்டர்நெட் பற்றிய அடிப்படை தகவல்கள்

 

 கணிப்பொறித்துறையிலே நாம் எவ்வளவோ மாற்றங்களை கண்டுவந்த போதிலும், இந்த இணையம் என்று அழைக்கப்படும் இன்டர்நெட் வந்த பிறகு மக்களிடம் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக் கிறது என்பது தான் உண்மை. ஒரு காலத்தில் கம்ப்ïட்டர் என்பது ஒரு காட்சிப்பொருளாகவும், மாயாஜாலம் செய்யும் ஒரு எந்திரமாகவும் கருதப்பட்டது. ஆனால், அதன் பிறகு மக்களிடம் சற்று அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்ட போதிலும் இந்த இன்டர்நெட் வந்த பிறகு தான் எந்தத்துறையைச் சார்ந்தவர்களும் கணிப்பொறித் துறையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இன்று பலரும் இந்த இன்டர்நெட் மூலம் பல வேலைகளைச் செய்துÖலும் இன்னும் சிலருக்கு இந்த இன்டர்நெட் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகின்றது என்பது போன்ற அடிப்படை விளக்கங்கள் தெரியாது. அதை மனதில் கொண்டு இன்னும் சில வாரங்களுக்கு இந்த இன்டர்நெட் பற்றிய அடிப்படைத் தகவல்களும், மின் அஞ்சல் (email) பற்றிய முக்கியமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஒரு இன்டர்நெட் இணைப்பை பெற்றவர் பல வேலைகளைச் செய்ய முடிந்தாலும், அதன் முக்கியமான வேலையாக கருதுவது மின் அஞ்சல்யாகும். இந்த வகை முறையின் மூலம் தகவல்கள், செய்திகள் (masage) உருவாக்கி மற்றொருவருக்கு அனுப்புவது, மற்றும் அந்த தகவல்களை பெற்ற பிறகு அதற்கு பதில் அனுப்புவது போன்ற வேலைகளைச் செய்வது இதன் சிறப்பம்சமாகும். அதுவும் இந்த வேலைகளை உடனுக்குடன் (send) செய்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இன்டர்நெட் பற்றிய அடிப்படை தகவல்கள்

 

இன்டர்நெட் என்ற கருத்தை பொறுத்தவரை, அதனை சரியாக புரிந்து கொள்ள இரண்டு முக்கியமான வகை புரோகிராம்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். 1. Client (கிளையன்ட்-வாடிக்கையாளர்) 2. Server (செர்வர்-சேவைகளை வழங்குபவர்). இந்த `கிளையன்ட்'மற்றும் `செர்வர்' என்ற இரண்டு கம்ப்ïட்டர்களை வைத்து தான் இணைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. குறிப்பாக `கிளையன்ட்'எனப்படும் பலவிதமான வாடிக்கையாளர் களை ஒரு `செர்வர்' எனப்படும் சேவைகளை வழங்கும் கம்ப்ïட்டருடன் இணைக்கலாம். இந்த `கிளையன்ட்' கம்ப்ïட்டரும் `செர்வர்'கம்ப்ïட்டரும் செய்து கொள்ளும் தொடர்பினை இங்கே உள்ள படம் விளக்குகிறது.

`செர்வர்'-'கிளையன்ட்' பரிமாற்றம் இந்த இன்டர்நெட் என்ற கருத்தைப் பொறுத்த வரை பலமில்லியன் கம்ப்ïட்டர்களை பலவிதமான வயர்களைக் கொண்டு, கேபிள்களைக் கொண்டு தொலைபேசி இணைப்பு களைக்கொண்டு அல்லது செயற்கைக்கோள் உதவியுடன் ஒன்றாக இணைத்து தகவல்களை பரிமாறிக்கொள் வதாகும். இந்த இணைப்பு ஏற்படுத்துவதன் முக்கிய நோக்கமானது ஒரு `கிளையன்ட்' கம்ப்ïட்டரையும், `செர்வர்' கம்ப்ïட்டரையும் ஒன்றுடன் ஒன்று உரையாடச் செய்வதாகும். உதாரணமாக, மின் அஞ்சல் என்றழைக்கப்படும் முறையை எடுத்துக் கொண்டோமேயானால், ஒரு `கிளையன்ட்' மற்றொரு `கிளையன்ட்' உடன் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக் கொள்வதாகும். அவ்வாறு தொடர்பு கொள்ளும் முறையில் `செர்வர்' எனப்படும் கம்ப்ïட்டர் `கிளையன்ட்' கம்ப்ïட்டருக்குத் தேவையான சேவைகளை வழங்குகின்றது.

இதுபோன்ற `செர்வர்' கம்ப்ïட்டர்களில் மின் அஞ்சல் முறை தொடர்பு ஏற்படுத்தி தகவல்களை சரியான முறையில் பராமரிப்பதற்கு மெயில் செர்வர் (ஙஹகூஙீ நக்சுஞீக்சு) என்று அழைக்கிறோம். அந்தவிதமான கம்ப்ïட்டரில் ((Mail Box-மெயில் பாக்ஸ்) எனப்படும் தகவல் பதிவு செய்யும் பெட்டி ஒன்றை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற `மெயில் பாக்ஸ்' என்பது ஒரு இடைப்பட்ட தகவல் மையமாக செயல்படுகின்றது. இது தகவல்களை பெறுகிறது. தகவல் சென்றடைய வேண்டியவரிடம், தகவல் வந்திருக்கும் செய்தியை தெரிவிக்கிறது. மேலும் தகவல் பெற்றவர் அனுப்பும் பதிலை பெற்று அதையும் சரியான முறையில் உரியவரிடம் சேர்க்கிறது.

இவ்வாறு மின் அஞ்சல் தகவல் அனுப்புவதற்கு மெயில் செர்வர் பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எவ்வாறு இந்த முறை செயல்படுகிறது என்ற கருத்தை மட்டும் நாம் அறிந்து வைத்திருத்தல் போதுமானது. இன்றைய சூழ்நிலையில் கணிப் பொறி பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பவர்களும் சரி அல்லது குறைவாக தெரிந்த வர்களும் சரி, அதிகம் இன்டர்நெட்டை உபயோகிப்பது இது போன்ற மின் அஞ்சல் அனுப்பும் வேலையைச் செய்வதற்குத்தான். மேலும், பலர் இன்று அதிகம் `சேட்டிங்' என்றழைக்கும் இன்டர் நெட் மூலம் மற்றொரு நபருடன் உரையாடல் வேலையைச் செய்வதற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

StumbleUpon.com Read more...

மியான்மர்: நர்கீஸ் புயலின் கோரதாண்டவம்-சாவு எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்வு

 

யாக்கூன்,மே.6-



நர்கீஸ் புயல் தாக்குதலி னால் மியான்மர் தெருக் களில் குவியல், குவியலாக பிணங்கள் கிடக்கின்றன.

தமிழ்நாட்டை மிரட்டி வந்த நர்கீஸ் புயல்திசைமாறி சென்று மியான்மர் நாட்டை நேற்று முன்தினம் தாக்கியது.

இதில் ராட்சத அள வில் கடல் அலைகள் எழுந்து ஊருக்குள் சென்றன. ஏரா ளமான மரங்கள் விழுந்தும் கட்டிடங்கள் இடிந்து விழுந் தன.

இவற்றில் ஏராளமா னோர் சிக்கி உயிர் இழந்த னர். தலை நகரம் யாப்கூன் மற்றும் இராவட்டி டெல்டா பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இராவட்டி டெல்டாவில் உள்ள ஒரு தீவு பகுதியே முற் றிலும் நாசமாகி விட்டது. அங்குள்ள பெகெலாய், லாபுட்டா ஆகிய நகரங்கள் முற்றிலும் அழிந்த நிலையில் காணப்படுகின்றன.

இதில் சிக்கி இறந்தவர் கள் உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இடிந்த கட்டிடங்கள், மரங்களுக்கு அடியில் ஏராளமானோர் பிணமாக கிடக்கின்றனர். தண்ணீரில் அடித்து வரப் பட்ட பிணங்கள் தெருக்க ளில் குவியல் குவியலாக கிடக்கின்றன.

மியான்மரில் மொத்தம் 5பகுதிகளில் புயல் தாக்கி உள்ளது. இதில் 2 பகுதி களில் இறந்தவர்கள் பற்றி கணக்கெடுப்பு எடுக்கப்பட் டுள்ளது. அதில் 3934 பேர் இறந்ததாகவும் 2879 பேர்காணாமல் போன தாகவும் தெரிய வந்தது. இன்னும் 3பகுதிகளில் கணக்கெடுப்பு நடக்க வேண் டிய உள்ளது. தற்போது உள்ள நிலையில் சாவு எண் ணிக்கை 13ஆயிரத்தை தாண்டி இருக்கலாம் என்று மியான்மர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராவட்டி பகுதியில் பல இடங்களில் இன்னும் மீட்பு குழுவினர் நுழைய முடியவில்லை. அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டு இருப்பதுடன் சாலைகள் முழுவதும் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. அதை தாண்டி மீட்பு குழுவினர் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் இறந்தவர்கள் பிணங்கள் மீட்க முடியாமல் அழுகி கிடக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்க ளில் தங்க வைத்தாலும் போதிய வசதிகள் இல்லை. எனவே அவர்கள் கோவில்க ளிலும், சேதம் அடைந்த கட்டிடங்களிலும் தங்கி உள் ளனர்.

மீட்பு பணிகளில் மியான் மர் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. அவர்களால் இந்த பணிகளை செய்ய முடியாததால் வெளிநாட் டினர் உதவிகளை கேட்டுள்ளனர்.

மியான்மர் நாட்டில் பக் கத்து நாடான தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் உணவு பொருட்கள் அனுப்ப பட்டுள்ளன. இந்தியா கப்பல் மூலம் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

செஞ்சிலுவை சங்க குழுவும் மியான்மருக்கு சென்று மீட்புபணி மற்றும் நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடப்பதால் அமெ ரிக்கா சில பொருளாதார தடைகள் விதித்து இருந்தது. இப்போது புயல் வீசி அந்த நாடு கடுமையாக பாதிக்கப்பட்ட இருந்தன. இந்த தடைகளை அகற்றி தேவையான அனைத்து நிவாரண உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளது. மீட்பு பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க குழு ஒன்றை தயா ராக வைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளது. மியான்மர் அனுமதித்தால் உடனடியாக மீட்பு குழுவினர் அங்கு செல்வார்கள் என்று கூறி யுள்ளனர். மியான்மரில் உடனடி உதவிக்காக அந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் ரூ.1கோடி வழங்கி உள்ளது.
 

StumbleUpon.com Read more...

தமிழ்நாடு முழுவதும் ரூ.100 கோடி தங்க காசு மோசடி10 ஆயிரம் பேர் ஏமாந்தனர்

 

சென்னை, மே. 6-

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வந்த "கொஸ்ட் நெஸ்ட் இண்டர்நேஷனல்'' என்ற நிறுவனம் தங்க காசு மோசடியில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந் துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் கடந்த 10 ஆண்டு களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தை சென்னை யில் தொடங்கி வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந் நிறுவனத்தில் சேர்ந்தனர். பின்னர் நடுத்தர மக்கள் பலரும் லட்சாதிபதியாகும் ஆசையில் அதிக அளவில் இந்நிறுவனத்தில் சேரத் தொடங்கினர்.

இதன் மூலம் தங்க காசு மோசடி திட்டத்தில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. இதையடுத்து ஏமாந்தவர்கள் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் இதில் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஓட்டேரி மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பலர் தங்க காசு நிறுவனத்தில் சேர்ந்து ஏமாந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டதால் பிரச்சினை பூதா கரமாக வெடித்தது. இத னால் பாதிக்கப்பட்டவர் கள் பலர் செம்பியம் போலீசில் புகார் செய்தனர்.

வடசென்னை இணை கமிஷனர் ரவி உத்தர வின் பேரில் துணை கமிஷனர் சம்பத்தங்க காசு மோசடி குறித்து நேரடி விசாரணையில் இறங்கினார்.

அப்போது தங்க காசு மோசடி பெரிய அளவில் நடந்திருப்பது தெரிய வந்தது. அந்நிறுவனத்தின் சென்னை மேலாளர் புஷ்பம் உள்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஹாங்காங்கில் உள்ள தங்க காசு நிறுவன உரிமையாளர் விஜய ஈஸ்வரனை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதற்காக சர்வதேச போலீஸ் உதவியை நாட உள்ளனர்.

தங்க காசு நிறுவன மோசடி வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை சேத்துப்பட் டில் உள்ள "கொஸ்ட் நெஸ்ட்'' நிறுவனம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 2 முறை சோதனை நடத்தியுள்ள போலீசார் 87 கிலோ தங்க நாணயங்கள், 900 கிலோ வெள்ளி நாணயங்கள் உள்பட ரூ. 50 கோடி மதிப்பி லான சொத்துக்களை பறி முதல் செய்தனர்.

இச் சொத்துக்கள் அனைத் தையும் விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க போலீ சார் திட்டமிட்டுள்ளனர். கோர்ட்டு உதவியுடன் பறி முதல் செய்யப்பட்ட பொருட் கள் அனைத்தையும் ரிசர்வ் பாங்கியிடம் ஒப்படைத்து பின்னர் படிப்படியாக அதனை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்போம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னையில் மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இம்மோ சடி கும்பலைச் சேர்ந்த வர்கள் சிறு சிறு குழுக் களாக பிரிந்து சென்று ஏமாற்று வேலையில் ஈடுபட் டுள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, கோவை, ஊட்டி, நீலகிரி ஆகிய பகுதிகளிலும் மோசடி நிறு வனத்தில் லட்சக்கணக் கில் பணம் கட்டி பலர் ஏமாந் துள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க காசு மோசடி நிறுவனத்தால் நடுத் தெருவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ. 100 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள்.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உளவு பிரிவு போலீசார் இந்த மோசடி குறித்து ரகசிய விசாரணையில் இறங்கி யுள்ளனர்.

சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஒரு பெண் தலைமையிலான கும்பல் சென்றுள்ளது. இக் கும்பலை சேர்ந்தவர்கள் கிராமப்புற மக்களை குறி வைத்து மூளைச்சலவை செய்துள்ளனர். இதன் மூலம் கடையநல்லூர் பகுதியில் 50 பேர் ஏமாற்றப் பட்டுள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளனர்.

இப்படி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்ற மோசடிக் கும்பல் குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகின் உயரமான குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்க ளில் கலக்கி வரும் நடிகர் ஒருவர் தங்க காசு மோசடி நிறுவனத்தில் சேர்ந்து பொதுமக்கள் பலரை தனது பேச்சால் மயக்கி சங்கிலி தொடர் திட்டத்தில் சேர்ந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது தவிர முன்னணி நடிகர்-நடிகைகள் பலரும் இம்மோசடி நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். இவர்கள் யார்-யார் என்ற பட்டியலும் தயாராகி வருகிறது.

முன்னணி நடிகைகளில் சிலர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்களது பெயர் வெளியில் வராமல் பார்த்துக் கொள் ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் தங்க காசு மோசடியில் முக்கிய பிரமுகர்கள் பலர் பின்னணியில் இருந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டி வருகிறார்கள்.

`கோல்டு கொஸ்ட்' நிறுவனம் ஆந்திராவிலும் தங்க காசு மோசடியில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள கடப்பா மாவட்டத்தில் மட்டும் 500 பேரிடம் மோசடி நடந்துள்ளது. ஏமாந்தவர்கள் கூறும்போது, "எங்களிடம் கடப்பாவைச் சேர்ந்த 4 போலீஸ்காரர்கள்தான் கோல்டு கொஸ்ட் நிறு வனத்தின் தங்க காசுகளை விற்றனர். ஒரு தங்க காசு மற்றும் 3 வெள்ளி நாணயங் களுக்கு ரூ. 30 ஆயிரம் வாங்கினார்கள். தங்க காசில் மகாத்மா காந்தி, அன்னை தெரசா, விநாயகர், வெங்கடாசலபதி, சீரடி சாய் பாபா ஆகியோரின் உருவங் கள் இருந்தன.

போலீஸ்காரர்கள் எங்களிடம் நாணயத்தை தந்த போது, "இந்த தங்க நாணயம் வெளிநாடுகளில் ரூ. 2 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஆனால் நாங்கள் இதை குறைந்த விலைக்கு தருகி றோம். அபூர்வமான இந்த தங்க நாணயத்தை நீங்கள் அடிக்கடி திறந்து பார்த்தாலோ அல்லது தொட்டு பார்த்தாலோ சீக்கிரம் நாசமாகி விடும்'' என்றனர்.

இதனால் நாங்கள் கண்ணாடி பெட்டியில் இருந்த நாணயத்தை திறந்து பார்க்க வில்லை.

இப்போது மோசடி நடந்த தாக தகவல் பரவியதால் நாணயத்தை ஆய்வு செய் தோம். அது வெறும் 3 கிராம் எடைதான் உள்ளது. அதிலும் அந்த நாணயத்தில் 70 சதவீதம் செம்பு சேர்க்கப் பட்டிருக்கிறது.

எங்களிடம் மோசடி செய்த கோல்டு கொஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த நிர் வாகிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண் டும். அவர்களிடம் இருந்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறினார்கள்.

இதுபற்றி அவர்கள் அங்குள்ள போலீசிலும் புகார் செய்துள்ளனர்.

ஆந்திராவில் கடப்பா தவிர மற்ற பகுதிகளிலும் தங்க காசு மோசடி நடந் திருக்கலாம் என்று சந்தேகிக் கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், வனத்துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம், மின்வாரிய துறை அலவல கங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

பணம் கட்டியவர்களில் பெரும் பாலானோர் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணம் கட்டியுள்ளனர். இந்த மோசடி வெளியே தெரியவந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் அரசு, தனியார் ஊழியர்களும் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். தற்போது மோசடி வெளியானதும் பணம் கட்டியவர்கள் புலம்பி வருகின்றனர்.

திருச்சியிலும் தங்ககாசு மோசடி நடந்து உள்ளது. இதில் போலீஸ்காரர்களும், ஏஜெண்டுகள் போல செயல்பட்டு உள்ளனர். மொத்தம் 50 ஏஜெண்டுகள் இருந்து உள்ளனர்.

மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டல், கே.கே.நகரில் அலுவலகங்கள் செயல்பட்டு வந்து உள்ளது. தற்போது சென்னையில் மோசடி வெளியானதை தொடர்ந்து திருச்சியில் பணம் கட்டி ஏமாந்தவர்கள், ஏஜெண்டு களிடம் பணத்தை திரும்ப கேட்டு வருகின்றனர்.

சேலம் 5 ரோடு உள்பட 3 இடங்களில் இதன் ஏஜெண்டுகள் செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களிடம் ஏராளமான பேர் ரூ.30 ஆயிரம் கட்டி தங்க காசுகள் பெற்று ஏமாந்துள்ளனர்.

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த பலர் ரூ. 28 ஆயிரம் கட்டி தங்க காசு பெற்று வந்துள்ளனர்.

இந்த திட்டத்தில் டாக்டர் கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொழில் அதிபர்களும் பணத்தை இழந்துள்ளனர்.
 

StumbleUpon.com Read more...

அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply
(* நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

முன்னுரை: அபூ முஹை என்ற இஸ்லாமிய சகோதரர், நான் எழுதிய "Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி?" கட்டுரைக்கு பதில் அளித்துள்ளார்( http://abumuhai.blogspot.com/2008/04/1.html) . இவரது கட்டுரைக்கு என் கருத்துக்களை இந்த கட்டுரையில் காணலாம்.
 
----------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:
மதம் மாறினால் மரண தண்டனை-1

ஒரு முஸ்லிம் மதம் மாறினால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற கருத்தில் பிறமத நண்பர்கள் சமீபமாக தங்களின் விமர்சனத்தை எழுதி வருகிறார்கள். உலகளவில் 80ஆயிரம் முஸ்லிம்கள் மதம் மாறியுள்ள தகவலையும் முன்பு எழுதியுள்ளனர். எங்கு முஸ்லிம்கள் மதம் மாறினாலும் அதைப்பதிவு செய்ய தாமதப்பதில்லை. அந்த அளவுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மீது பற்றுள்ளவர்கள்.
-----------------------

ஈஸா குர்‍ஆன்:
 
1. யாருடைய கட்டுரைக்கு பதில் தருகிறீர்கள் அபூ முஹை அவர்களே?

பொதுவாக, இஸ்லாமியர்களுக்கென்று ஒரு ஸ்டைல் உண்டு. அதாவது:

a) ஆயிரமாயிரமான கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று பொய்யை மூட்டை மூட்டையாய் அவிழ்த்துவிடுவார்கள், எங்கே ஆதாரம் என்றுக் கேட்டால், பதில் இருக்காது. அவர்கள் பல கட்டுரைகள் எழுதுவார்கள், ஆனால் நாம் நம் கருத்தை சொல்வதற்கு ஈமெயில் ஐடியை தரமாட்டார்கள் சிலர், நாம் பின்னூட்டம்  அளிப்பதற்கும் வசதி இருக்காது. (உதார‌ண‌ம்: நேச‌முட‌ன் த‌ள‌ம்)

b) "கிறிஸ்தவ கட்டுரைகளுக்கு பதில்" என்றுச் சொல்வார்கள், ஆனால், எந்த கட்டுரைக்கு பதில் தருகிறார்கள்? அந்த கட்டுரையின் தொடுப்பு என்ன? போன்றவற்றை தங்கள் கட்டுரைகளில் வெளிப்படுத்தமாட்டார்கள்(எங்கள் கட்டுரையை இஸ்லாமியர்கள் படித்தால் எங்கே இஸ்லாமைப் பற்றிய சந்தேகம் வந்துவிடுமோ என்ற பயமோ என்னவோ எனக்குத் தெரியாது).

இந்த இரண்டாம் வகையைச் சார்ந்தவர் தான் "அபூ முஹை" அவர்களும்(இந்த கட்டுரையை பொருத்தவரையில்). கிறிஸ்தவர்களின் கட்டுரைக்கு பதில் அல்லது விமர்சனம் என்று எழுதினார்களே தவிர, என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்கவில்லை. ஏன் அபூ முஹை அவர்களே?  எங்கள் கட்டுரையை நீங்கள் எந்த தளத்தில்  படித்தீர்கள் என்று ஒரு தொடுப்பை கொடுத்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா. மட்டுமல்ல, ஈஸா குர்‍ஆன் தளம் மூலமாக எழுதப்படும் கட்டுரைகள், தமிழ் கிறிஸ்டியன்ஸ், உண்மையடியான், கிறிஸ்து நேசன் போன்ற தளங்களில் பதிக்கப்படுகிறது. நீங்கள் பதில் சொல்லவந்த கட்டுரையின் தொடுப்பை குறைந்தபட்சம், ஒரு தளத்தின் தொடுப்பையாவது கொடுத்து இருக்கலாம். ஏன் நீங்கள் அதை உங்கள் பதிலில் பதிக்கவில்லை என்ற காரணத்தை தெரிந்துக்கொள்ளலாமா?

சரி போகட்டும், இனி நீங்கள் எழுதப்போகும் பதிலுக்காவது, கிறிஸ்தவ கட்டுரையின் தொடுப்பை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.


---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

மதம் மாறிய 80 ஆயிரம் முஸ்லிம்களுக்கும் மரண தண்டைனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதா? என்று நாம் கேட்க மாட்டோம். சமீபத்தில் பழனியில் மதம் மாறிய ராசிமுஹம்மது, நாசர்ஹஸன் இரு முஸ்லிம்கள் மதம் மாறியும், அவர்கள் தண்டனை பெறவில்லை என்பதை அனைவரும் அறிவோம்.
---------------

ஈஸா குர்‍ஆன்

பழனியில் இஸ்லாமை விட்டு வெளியேறினாலும் தண்டனை பெறவில்லை என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறீர்கள். உங்களிடம் நான் ஒரு சில கேள்வியை கேட்கட்டும்:

A) பழனி என்ன ஆப்கனிஸ்தானில் உள்ளதா, அல்லது எகிப்தில் உள்ளதா சொல்லுங்கள். இந்தியாவில் உள்ளது என்பதை மறக்கவேண்டாம். இஸ்லாமிய நாட்டில் பழனி இல்லை, ஜனநாயக இந்தியாவில் உள்ளது.என்னவோ, பழனி இஸ்லாமிய நாட்டில் உள்ளது போலவும், ஷரியா சட்டம் நடைபெறும் நாட்டில் உள்ளது போலவும், இருந்தாலும் மரண தண்டனை கொடுக்காதது போலவும் எழுதுகிறீர்களே.

B) மதமாற்றத்திற்கு தண்டனை கொடுப்பதற்கு? இந்தியாவில் ஷரியா சட்டம் இல்லையே! எனவே, இந்தியாவில் நாங்கள் யாருக்கும் மரண தண்டனையை கொடுப்பதில்லை என்றுச் சொல்லி நீங்கள் பெருமைப்படுவதற்கு வாய்ப்பு இல்லை.


---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

கொலைக்குக் கொலை எனவும் விபச்சாரத்துக்கும் இஸ்லாம் மரண தண்டனை விதிக்கிறது. இம்மரண தண்டனை அவ்வளவாக விமர்சிக்கப்படுவதில்லை.
ஆனால், மதம் மாறினால் மரண தண்டனை என்பதை ஆஹா, ஓஹோவென அபாரமாக விமர்சிக்கின்றனர். ஒருவேளை, மதம் மாறினால் மரண தண்டனை விதியைக் குறித்து அறிந்திராத முஸ்லிம்களை எச்சரிக்கும் நல்லெண்ணமாக இருக்கலாம், இருக்கட்டும்.
---------------

ஈஸா குர்‍ஆன்

அதாவது, "மதம் மாறினால் இஸ்லாமில் மரண தண்டனை உண்டு என்பதை அறியாத முஸ்லீம்கள்" என்று நீங்கள் சொல்வதிலிருந்து முஸ்லீம்களுக்கு உங்களைப் போன்ற அறிஞர்கள், இமாம்கள்  எதை எதை சொல்கிறீர்கள் என்று இப்போது தான் தெரிகிறது.

இப்பொழுதாவது ஒப்புக்கொண்டீர்களே, முஸ்லீம்கள் கூட "கிறிஸ்தவர்களின் கட்டுரைகள் மூலமாக இஸ்லாமை அறிந்துக்கொள்கிறார்கள்" என்று.

---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

இதில் இஸ்லாத்தின் கருத்து என்ன? என்பதை தொடர்ந்து எழுதுமுன், தர்க்க ரீதியாக இவர்கள் சொல்லும் கருத்து சரியா? என்பதைப் பார்ப்போம்.

கணினியில் மென் பொருள், கெட்டிப் பொருள் தரவிறக்கம் செய்யுமுன், அதை உருவாக்கியவர்கள் Agree - ஒப்புக்கொள், இணங்கு என நிபந்தனை விதிப்பார்கள். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே பொருளை பதிவிறக்கம் செய்ய முடியும். பெரும்பான்மையினர் நிபந்தனையை வாசிக்காமலேயே ஒப்புக்கொள்கிறேன் - Agree என்று சொடுக்கிவிடுவர். இதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்றாலும் நாளை பிரச்சனை என்று வந்தால் சிக்கலை ஏற்படுத்தும்.

வலைப்பூ திரட்டிகள், மன்றங்கள், இணையங்கள் இவைகளில் சேரும் போது அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை படிக்காமல் சம்மதம் தெரிவித்து, சேர்ந்தபின் நிபந்தனை என்னவென்று தெரியாமலேயே அதை மீற நேர்ந்தால் அங்கு வல்லு வழக்கு ஏற்படுவதை அனுபவமாக தெரிந்து கொள்கிறோம்.

இந்த அனுபவம் கணினித் துறையில் மட்டுமில்லை, எல்லாத் துறைகளிலும் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் Agree - ஒப்புக்கொண்டு சேர்ந்தபின் விதிகளை மீறுவதால் அங்கு பணியாற்றுபவர்கள் தற்காலிக நீக்கம், நிரந்தர நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது ராணுவம், நீதி, காவல், அரசு, அரசியல், தொழில் மற்றும் தனியார் துறைகளிலும் உள்ள அனுபவம்.
----------------

ஈஸா குர்‍ஆன்

ஆனால், இஸ்லாமைப் பற்றி முழுவதும் தெரிந்துக் கொள்ளாமல் இஸ்லாமியராக மாறுபவரின் "குடி" நிச்சயமாக முழ்கும். இதற்கு முழு பொறுப்பு இஸ்லாமிய அறிஞர்கள் புதிதாக வரும் முஸ்லீம்களுக்கு இவைகளைப்பற்றி சொல்லாமல், மறைப்பது தான்.

இராணுவத்தில் பின்பற்றவேண்டிய சட்டத்தையும், மீறினால் கிடைக்கும் தண்டனைகளையும் தெரிந்துக்கொள்ளாமல், யாரும் வேலையில் சேரமாட்டார்கள் என்பது என் கருத்து. குறைந்த பட்சம், மிகவும் கொடுமையான தண்டனையுள்ள நிபந்தனைகளையாவது ஒரு இராணுவ வீரன் தெரிந்துக்கொண்டுத் தான் வேலையில் சேருவான். கணினியில் நாம் படிக்காமல் "Agree" என்ற பொத்தானை அழுத்துவது போல வாழ்க்கையில் எல்லா நிலையிலும் செய்யமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதே போலத்தான், இஸ்லாமில் சேருவது என்பது கணினியில் ஒரு மென்பொருளை பதிக்கும் வேலை போன்ற ஒரு சுலபமான வேலையில்லை, ஒருவனின் முழுவாழ்க்கையையும் அது பாதிக்கும் அல்லது அழிக்கும்.

இன்னொரு உதாரணத்தைச் சொல்கிறேன், நாம் மருந்துகள் வாங்கும் போது, அந்த மருந்து மாத்திரைகளின் முடிவு தேதியை (Expiry Date)  பார்க்கிறோம். ஒரு வேளை அந்த மருந்தின் முடிவு தேதி (Expiry Date) முடிந்துவிட்டு இருந்தால், அந்த மருந்தை மாற்றித்தரும் படி கடைக்காரரிடம் கேட்கிறோம்.  ஆனால், அதே போல, அதிகமாக பாதிப்பு இல்லாத பொருட்களை வாங்கும் போது அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நாம் முடிவு தேதியை(Expiry Date)  பார்ப்பதில்லை.   உதாரணத்திற்கு, சோப்புக்கள், ஷாம்புக்கள் போன்றவைகளுக்கு பெரும்பான்மையாக மக்கள் முடிவு தேதியை மருந்து மாத்திரைகள் வாங்கும் போது பார்க்கும் வண்ணம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. (வாங்கும் எல்லா பொருட்களுக்கும் முடிவு தேதி பார்ப்பவர்களும் உண்டு)

எனவே, கண்களை மூடிக்கொண்டு நிபந்தனைகளை படிக்காமல் ஒரு சில "Agree" பொத்தானை அழுத்தலாம், ஆனால், உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் "இஸ்லாம்" என்ற பொத்தானை படிக்காமல், கேள்வி கேட்டு தெரிந்துக்கொள்ளாமல் அழுத்துவது என்பது சரியானது அல்ல என்பது என் கருத்து.


---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

இனி விஷயத்துக்கு வருவோம், ஒரு பிறமத நண்பர் இவ்வாறு எழுதுகிறார்...


இனி யாராவது முஸ்லீமாக மாறினால், ... நீங்கள் ஒரு ஸ்டாம்ப் காகிதத்தில்(Stamp Paper):

"ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய‌ மத்தேயு என்னும் பெயர் கொண்ட‌ நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக‌, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக‌ நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக‌ அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே"

இப்படிக்கு,

முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு

சாட்சி 1:

சாட்சி 2:

என்று எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டு இஸ்லாமில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வீர்களானால், இனி யாராவது "ஏன் இஸ்லாம் அவரை கொன்றது?" என்று கேள்வி கேட்டால், அந்த நபர் கையெழுத்து போட்ட காகிகத்தை காட்டலாம், உங்களுக்கு இஸ்லாமின் சட்டத்தின் தண்டனையை நியாயப்படுத்த‌ காபிர்களின் சட்டத்தில் உள்ள தண்டனையை எடுத்துக்காட்டாக காட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.

பிறமத நண்பரின் மேற்கண்ட விமர்சனம் புத்திசாலித்தனமாகத் தோன்றினாலும், ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்க அறிவுரை சொல்வது கவ்வைக்குதவாத வாதம். ஒருவன் எந்த மதத்தைத் தழுவினாலும், மதத்தில் இணையும் போதே அம்மதத்தின் விதிகளை Agree - மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட பின்பே அம்மதத்தைத் தழுவுகிறான்.
-----------------------
 

ஈஸா குர்‍ஆன்

இஸ்லாம் மதத்தில் என்ன விதிகள் உள்ளது என்று 40-50 வருடங்கள் இஸ்லாமியர்களாக இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களே புரியாமல் தலை பீய்த்துக்கொண்டு இருக்கும் போது, எப்படி சகோதரரே ஒரு புதிய முஸ்லீம் அனைத்து விதிகளையும் தெரிந்துக்கொண்டு தான் இஸ்லாமியர் ஆகிறார் என்றுச் சொல்கிறீர்கள்.  நீங்கள் சொல்வதை செய்யவேண்டுமானால், முஸ்லீமாக மாறுபவனுக்கு இஸ்லாமைப் பற்றிய படிப்பை சில‌ ஆண்டுகள் கற்றுக்கொடுத்துத்தான் முஸ்லீமாக மாற்றவேண்டும், அப்படி செய்ய உங்களுக்கு சம்மதமா?

(  ஒருவேளை, கிறிஸ்தவனாக மாறுபவனுக்கு இப்படித் தான் சில ஆண்டுகள் பைபிள் படிப்பை சொல்லிக்கொடுத்த பின்பு தான் ஒருவன் சேருகிறானா? என்று சிலர் கேட்கலாம், இதற்கு பதில் சுலபம், அதாவது ஆபத்தில்லாத  பொருட்களை வாங்கும் போது பெரும்பான்மையாக‌ யாரும் முடிவு தேதியை(Expiry Date) பார்ப்பதில்லை, ஆனால், உயிருக்கு ஆபத்துள்ள மருந்தை வாங்கும் போது நிச்சயமாக முடிவு தேதியை(Expiry Date) பார்ப்பார்கள்.

அது போல, கிறிஸ்தவம் என்ற மென்பொருளை நம் கணினியில் பதிக்க,  படிக்காமல் "Agree" பொத்தானை அழுத்தலாம், ஒரு வேளை நமக்கு இந்த மென்பொருள் எதிர் காலத்தில் தேவையில்லை, இதனால் பிரச்சனை என்று நினைக்கும் போது, அந்த மென் பொருளை நம் கணினியிலிருந்து நீக்கிவிடலாம். ஆனால், இஸ்லாம் என்ற மென்பொருள் அப்படி இல்லை, நிபந்தனைகளை தெரிந்துக்கொள்ளாமல், படிக்காமல் "Agree" பொத்தானை அழுத்தினால், அவ்வளவு தான் உங்கள் கதை, பிற்காலத்தில் இந்த மென்பொருளினால் நமக்கு பிரச்சனை என்று சொல்லி, அதை நீக்க முடியாது, அப்படி நீக்க முயன்றால், மரணம் நிச்சயம். இப்போது புரிகிறதா? ஏன் சில நேரங்களில் நிபந்தனைகளை தவறாமல் படிக்கவேண்டும் என்பது.)


நீங்கள் சொல்வது உண்மையானால், இந்தியாவிலும் அதாவது இஸ்லாமிய சட்டம் இல்லாமல், ஜனநாயக சட்டம் ஆட்சி செய்யும் நாட்டிலும், ஒரு கிறிஸ்தவன் அல்லது இந்து, முஸ்லீமாக மாறும் போதும், நீங்கள் சொன்னது போல, "நான் வரும் காலங்களில் இஸ்லாமிளிலிருந்து வெளியெறினால், என்னை கொல்ல நான் உங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்" என்று சொல்லித்தான் இஸ்லாமியனாக மாறுகிறானா? நீங்கள் சொல்வதைப்பார்த்தால், இந்தியாவில் முஸ்லீமாக மாறுபவன் தன் மரணத்தை தானே நிர்ணயித்து மாறுகிறான் என்று சொல்லவருகிறீர்கள்.

இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான குற்றமில்லையா? மாறுபவனையும், மாற்றுபவரையும் அரசாங்கம் கைது செய்யாதா?

-----------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவும் போது ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்'' என்று உறுதிமொழி எடுத்த பின்பே இஸ்லாத்தில் இணைகின்றனர். இங்கு இஸ்லாத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்படுகிறேன் என Agree - ஒப்புதல் தெரிவித்து, இஸ்லாத்தின் இணைந்தபின் மதம் மாறினால் மரண தண்டனை என்ற விதியையும் ஏற்றுக்கொண்டே இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். பிறகு எதற்கு ஸ்டாம்ப் பேப்பர்?
-----------------------

அதாவது, இந்த இரண்டு வரிகளைச் சொன்னால் போதும், ஒருவன் தன்னை இஸ்லாம் கொல்ல கூட அனுமதி கொடுத்ததாக அர்த்தம் என்று சொல்லவருகிறீர்கள். அடேங்கப்பா! என்னே அர்த்தம்!

நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால், ஒரு நிறுவனம் கீழ் கண்ட நிபந்தனைகளை தங்கள் மென்பொருளை தங்கள் கணினியில் பதிக்கும்போது ஒப்புக்கொண்டு பதிக்கவும் என்று சொல்லியுள்ளது என்று வைத்துக்கொள்வோம்.

எங்கள் மென்பொருளை உங்கள் கணினியில் பதிக்க நிபந்தனைகள் 1 லிருந்து 10 வரை நீங்கள் ஒப்புக்கொண்டு பதியுங்கள்.   நிபந்தனைகள் 1 லிருந்து 10..........

இந்த மென்பொருளை ஒருவர் தன் கணினியில் பதித்துக்கொள்கிறார். சில நாட்கள் கழித்து தன் கணினியிலிருந்து நீக்கி விடுகிறார். இவர் நீக்கி விட்ட மறுநாளில் இவருக்கு அந்த மென்பொருள் தயாரித்த நிறுவனத்திடமிருந்து ஒரு மெயில் கீழ் கண்ட செய்தியோடு வருகிறது:

"நீங்கள் எங்கள் மென்பொருளை நீக்கிவிட்டதால், உங்கள் கணினி இனி எங்களுக்குச் சொந்தம், எனவே, எங்கள் நிறுவனத்திடம் ஒரு வாரத்திற்குள் உங்கள் கணினியை ஒப்படைத்துவிடுங்கள்,  அப்படி ஒப்படைக்கவில்லையானால், உங்கள் மீது வழக்கு தொடரப்படும்"


இந்த செய்தியை படித்தவுடன், அந்த நபர் மிரண்டுப்போகிறார், உடனே, அந்த மென்பொருளின் 10 நிபந்தனைகளை எடுத்து படிக்கிறார், ஆனால், கணினி அந்த நிறுவனத்திற்கு சொந்தமாகும் என்பதைப்பற்றிய எந்த நிபந்தனையும்  இல்லை, எனவே, அந்த நிறுவனத்திற்கு மெயில் அனுப்புகிறார், இல்லாத நிபந்தனையை எப்படி நான் பின்பற்றும்படி கேட்கிறீர்கள் என்று கேட்கிறார். இந்த மெயிலை அந்த நிறுவனம் படித்துவிட்டு, "எங்கள் மற்ற நிபந்தனைகளை எப்போது நீங்கள் அங்கீகரித்தீர்களோ, அப்போதே நீங்கள் இந்த நிபந்தனைக்கு அங்கீகாரம் அளித்தீர்கள்  என்று பொருள்" என்று மறுபடியும் பதில் அனுப்புகிறது.

இந்த நபர் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்வீர்கள், எழுத்துவடிவில் இல்லாத நிபந்தனையை, எனக்கு சொல்லாத நிபந்தனையை மீறியதால், நான் எப்படி தண்டிக்கப்படுவேன் என்று கேள்வி எழுப்புவீர்கள்.

ஆனால், நம்முடைய இஸ்லாமிய சகோதரர் சொல்கிறார்: " அல்லவைத் தவிர யாரும் இறைவன் இல்லை, முகமது அல்லாவின் தூதர்" என்று சொன்னாலே போதுமாம், அந்த புதிய முஸ்லீமுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு! என்னே சட்டங்கள், கொள்கைகள். இதற்கு யாராவது உடன்படுவார்களா! இது நடைமுறைக்கு ஒத்துவருமா? சிந்தியுங்கள், எனக்கும் சிறிது விளக்குங்கள்.


உங்கள் இந்த வரிகள் மூலமாக:

1. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது சரியானது, அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறினால், சங்கு ஊதவேண்டியது தான்.அப்படித்தானே, (இப்படிப்பட்ட மதம் மனிதனுக்கு தேவையா?)

2. இதை நீங்கள் இஸ்லாமிய நாட்டில் அல்லாமல், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலும் பின்பற்றுகிறீர்களா? இல்லையா? அப்படி ஜனநாயக நாட்டில் பின்பற்ற முடியாமல் போனால், அது அல்லாவிற்கு கோபமூட்டாதா?  அல்லாவின் கட்டளையை நிறைவேற்ற முடியமாட்டேங்கிறதே என்றுச் சொல்லி நீங்கள் வேதனைப்படுவீர்களே! இந்தியாவில் இப்படி இஸ்லாமை விட்டு வெளியேறினால், உங்களின் அதே சட்டத்தின் படி அரசாங்கத்திற்கு தெரியாமல், வேறு விதத்தில் அவரது மரணத்திற்கு பாதிப்பு உண்டாக்குவீர்களா? அப்படியும் இல்லையானால், "இஸ்லாமிய நாடுகளின் இஸ்லாம்", "ஜனநாயக நாடுகளின் இஸ்லாம்" என்று இரண்டு இஸ்லாமிய சட்டங்கள் உண்டா?

3. உங்களின் இந்த வரிகளின்படி, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனைக் கொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது என்று இஸ்லாமியர் அல்லாத இந்தியர்கள் எல்லாரும் முடிவு செய்துக்கொள்ளலாமா?

உங்களின் வார்த்தைகளில் முரண்பாடு உள்ளது போல தோன்றுகிறதே. அதாவது, இஸ்லாமில் சேரும் போது, மரணத்திற்கும் டிக்கெட் வாங்கிக்கொண்டு தான் சேருகிறார் என்றுச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் உலகத்தில் இஸ்லாமை விட்டு வெளியேறும் ஆயிரமாயிரமான மக்களை இஸ்லாம் கொல்கிறதா என்று கேட்கிறீர்கள். இது முரண்பட்ட கருத்தாக உள்ளதே.

----------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

ஸ்டாம்ப் பேப்பர் பிற மதத்தைத் தழுவும் பிற மத நண்பர்களுக்கு வேண்டுமானால் தேவைப்படலாம். இஸ்லாத்துக்கு அவசியமில்லை. முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தில் நுழையும்போதே மதம் மாறினால் மரண தண்டனை என்ற பிரமாணத்தையும் ஏற்று மதம் மாறுகின்றனர். என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்.
------------------------
 

அதாவது, இந்த முனியாண்டியும், மத்தேயுவும், வாயாலேயே தங்கள் வாழ்க்கையை அழிக்க முடிவு செய்து தான் முஸ்லீமாக மாறுகிறார்களா! என்னே மதமய்யா? ரொம்ப நன்னாயிருக்கு. அப்போ, அந்த ஸ்டாம்ப் பேப்பர் பணமும் மிச்சம் தான்.

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களின் படி, இஸ்லாமுக்குத் தான் ஸ்டாம்ப் பேப்பர் தேவை, கிறிஸ்தவத்திற்கு தேவையில்லை.  இஸ்லாமுக்கு ஸ்டாம்ப் பேப்பர் தேவையில்லை என்பவர்கள், என் அறியாமையை போக்கும்படி மேலும் எனக்கு விவரியுங்கள்.

-----------------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

அடுத்து, மதம் மாறி மரண தண்டனை விதிக்கப்பட்டவனின் மனைவியின் நிலை என்ன? என்று மிகவும் அக்கறையோடு ஆலோசனை எழுதியுள்ளனர். முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவுமுன்பு இருவர் மனைவியின் நிலை என்ன? என்பதற்கான தீர்வையும் இவர்கள் எழுதியிருக்கலாம். எழுதியிருந்தால் சார்பற்றதாக இருந்திருக்கும்.

பரவாயில்லை, அடுத்த பதிவில் அது குறித்து நாம் விளக்குவோம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை
-------------------------
 

 நீங்கள் சொல்வதைப் பார்த்தால், முனியாண்டி, மற்றும் மத்தேயு இருவரின் மனைவிகளின் வாழ்க்கை, தங்கள் கணவர்கள் கூட இருக்கும் போது இருந்ததை விட, கணவர்கள் இஸ்லாமினால் கொலை செய்யப்பட்ட பிறகு, தாங்கள் விதவைகள் ஆனபிறகு இன்னும் சிறப்பாகவும், மேன்மையுள்ளதாகவும், அழகானதாகவும் எல்லாரும் கண்டு மெச்சிக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என்று சொல்வது போல உள்ளது.

ஒரு குடும்ப தலைவன் ஒரு மதத்தால் கொலை செய்யப்பட்ட பிறகு அக்குடும்பத்தின் வாழ்வு செழிப்பானதாக இருக்கும் என்றுச் சொல்லவருகிறீர்கள். இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.  முனியாண்டியும், மத்தேயுவும் இஸ்லாத்தை தழுவும் முன்பு, அப்பெண்களின் நிலை மிகவும் மோசமானதாக இருந்திருக்கும் என்று சொல்கிறீர்கள். 

உங்களின் அடுத்த பதிலுக்காக, இந்த முனியாண்டி, மத்தேயுவின் மனைவிகளின் வாழ்க்கையில் என்ன செழிப்பு வந்திருக்கும், என்று நீங்கள் எழுதுவதை படிக்க எனக்கு மிகவும் ஆவளாக உள்ளது. சீக்கிரமாக எழுதவும்.

முடிவுரையாக நான் சொல்லிக்கொள்வது:

இஸ்லாம் என்ற மென்பொருளை நம் கணினியில் பதிக்கும் முன்பு, நீங்கள் முதலாவது எல்லா நிபந்தனைகளையும் படியுங்கள், சில நிபந்தனைகளை அந்த மென்பொருளின் நிபந்தனை பட்டியலில் இடம் பெற்று இருக்காது, இருந்தாலும், அதை மீறினால், தண்டிக்கப்படுவீர்கள்(வேடிக்கையாக இருக்கே!). இது எப்படி நியாயமாக ஆகும் என்று கேட்கக்கூடாது,  அல்லாவையும், முகமதுவையும் உங்கள் வாயினால் அறிக்கையிட்டால் போதும், உங்களை அல்லாவிடம் அனுப்பவும் அந்த ஒரு நிபந்தனைக்கு அதிகாரம் உண்டு.


 ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்'' *

*Conditions Apply


சரி, இனியாவது இஸ்லாமியர்கள் இப்படி * Conditions Apply என்று எழுதினாலாவது நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் இதையாவது செய்யுங்கள்.

( Conditions Apply என்றால் என்ன என்று எல்லாருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். பெரும்பான்மையான நிறுவனங்கள் இப்படி வெளி உலகை கவரவேண்டுமென்பதற்காக‌ "கவர்ச்சி கரமான வார்த்தைகளை எழுதிவிட்டு, விளம்பரத்தின் கடைசியில் * Conditions Apply என்று எழுதியிருப்பார்கள்.).
 

StumbleUpon.com Read more...

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி நடிகை ஆகிறார்!

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி நடிகை ஆகிறார்!   
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

Muthulakshmi
சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி நடிக்க வருகிறார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. கடந்த 1990ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முத்துலட்சுமிக்கும், வீரப்பனுக்கும் தர்மபுரி மாவட்டம் நெருப்பூரில் கல்யாணம் நடந்தது. வீரப்பன், முத்துலட்சுமி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளிப் படிப்பில் உள்ளனர்.

வீரப்பனின் கதையை படமாக்க பலரும் முனைந்தனர். வீரப்பன் உயிருடன் இருந்தபோது அவரது வாழ்க்கையை திரைப்படமாக்க ராம் கோபால் வர்மா முயன்றார். ஆனால் அதுகுறித்த ஆய்வில் அவர் தீவிரமாக இருந்தபோதுதான் 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையடுத்து தனது திட்டத்தைக் கைவிட்டார் ராம் கோபால் வர்மா.

வீரப்பன் மறைவுக்குப் பின்னர் வேறு சிலர் வீரப்பன் கதையைப் படமாக்க முயன்றனர். ஆனால் முத்துலட்சுமி ஆட்சேபித்ததால் அவர்களும் அந்த முயற்சிகளை விட்டு விட்டனர்.

சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சியின் சார்பில் சந்தனக் காடு என்ற வீரப்பன் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் உருவாக்கப்பட்டது. முதலில் இதற்கு முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். கோர்ட்டுக்கும் சென்றார். பின்னர் மக்கள் தொலைக்காட்சி சார்பில் வீரப்பனை தவறாக சித்தரிக்க மாட்டோம் என உத்தரவாதம் தரப்பட்டது. அதன் பேரில் அத்தொடரை ஒளிபரப்ப முத்துலட்சுமி சம்மதம் கொடுத்தார். தற்போது சந்தனக்காடு மக்கள் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் வீரப்பனை அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் எந்த அளவுக்கு தவறாகப் பயன்படுத்தினர். அவரை வைத்து எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதை சித்தரிக்கும் வகையில் ஒரு படம் தயாராகவுள்ளதாம். அதில் முத்துலட்சுமி நடிக்க உள்ளார். முத்துலட்சுமியாகவே அவர் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முத்துலட்சுமி கூறுகையில், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் என்னை நடிக்க வேண்டும், இணைத் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். நடிக்க மட்டும் இப்போதைக்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன். இணைத் தயாரிப்பாளராக இருப்பதா, இல்லையா என்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்கவுள்ளேன்.

வேறு சில தயாரிப்பாளர்களும் எனது கணவரின் வாழ்க்கையை படமாக்க ஆர்வம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை.

எனது கணவரின் வாழ்க்கையை மற்றவர்கள் படமாக எடுத்தால் அதில் தவறுகள் நேரலாம். எனவே நானே எனது கணவரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க திட்டமிட்டுள்ளேன். இதுகுறித்து இன்னும் விரிவாகத் திட்டமிடவில்லை என்றார் முத்துலட்சுமி.

வீரப்பன் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜையும் முத்துலட்சுமி அணுகியதாக கூறப்படுகிறது.


http://thatstamil.oneindia.in/movies/specials/2008/05/04-bandits-widow-set-to-act-in-movie.html

StumbleUpon.com Read more...

கற்பழித்துக் கொல்லப்பட்ட இங்கிலாந்து பெண் ஸ்கார்லெட் கீலிங்கின் கொலை வழக்கு பாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கவுள்ளனர்.


ஸ்கார்லெட் கொலை வழக்கு படமாகிறது
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgets
Scarlett
கோவாவில் பரிதாபமான முறையில் கற்பழித்துக் கொல்லப்பட்ட இங்கிலாந்து பெண் ஸ்கார்லெட் கீலிங்கின் கொலை வழக்கு பாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கவுள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டீன் ஏஜ் பெண் ஸ்கார்லெட். கோவாவுக்கு சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் தனது உடன் வந்தவராலேயே கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார் ஸ்கார்லெட்.

ஸ்கார்லெட் மரணம், பெரும் சர்ச்சைகளையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தியது. ஸ்கார்லெட் மரணம் குறித்து கோவா போலீஸார் சரியான முறையில் விசாரிக்கவில்லை என்று அவரது தாயார் பியோனா குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் ஸ்கார்லெட்டின் மரணத்தை படமாக்க உள்ளனர். பிரபாகர் சுக்லா என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார். காத்ரீனா கைப், ஸ்கார்லெட் வேடத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

ஸ்கார்லெட்டின் மரணத்தை கருவாகக் கொண்டு பாலிவுட்டுக்கேற்றபடி பல விஷயங்களை சேர்த்து இப்படத்தை உருவாக்கவுள்ளாராம் பிரபாகர் சுக்லா.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP