சமீபத்திய பதிவுகள்

அமெரிக்காவில் சீக்கியரின் தலைப்பாகைக்கு தீ வைப்பு

>> Tuesday, May 13, 2008


அமெரிக்காவில்
சீக்கியரின் தலைப்பாகைக்கு தீ வைப்பு


நிïயார்க், மே.14-

அமெரிக்காவில் நிïஜெர்சி மாநிலத்தில் ஹைட்ஸ்டவுன் என்ற நகரை சேர்ந்தபெண் சுக்ஜோத் கவுர். இவரது மகன் உள்ளூர் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வந்தான். அவன் பள்ளிக்கூடத்தில் சக மாணவன் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவன் பின்னால் வந்த மூத்த மாணவன் கர்ரெட் கிரீன், லைட்டரை பயன்படுத்தி அவன் அணிந்து இருந்த தலைப்பாகைக்கு தீ வைத்து விட்டான். இதில் தலைப்பாகை தீப்பிடித்து எரிந்தது. சீக்கிய மாணவனுக்கும் லேசாக காயம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அந்த நகர சீக்கியர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பள்ளி நிர்வாகத்தையும் சந்தித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியது. இதை தொடர்ந்து மாணவன் கிரீன் கைது செய்யப்பட்டான். பள்ளிக்கூடத்தில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டான்.


http://www.dailythanthi.com/article.asp?NewsID=412570&disdate=5/14/2008

StumbleUpon.com Read more...

பிரபல சினிமா நடிகையும் கதாநாயகியுமான சகோதரி நக்மா இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்

நக்மா மன(த)மாற்றம்!

''என் வேதனைக்குரிய பழைய நினைவுகளை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஏசு கிறிஸ்துவை மனதார நேசிக்க ஆரம்பித்ததில் இருந்துதான் அமைதி, சந்தோஷம், சமாதானம் இதெல்லாம் எனக்குள் நிறைந்திருக்கு. நான் கிறிஸ்துவ பிரசாரங்களில் ஈடுபடுவதால், சினிமா துறையில் தொடருவது கஷ்டமாக இருந்தாலும், எனக்குத் தேவையான பலத்தை ஏசு தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. என் அம்மா, முஸ்லிம். அப்பா, இந்து. நான் படித்ததெல்லாம் கிறிஸ்துவ நிறுவனங்களில்! ரவிசங்கரின் 'வாழும் கலை'யில்கூட ஆர்வமாயிருந்ததுண்டு. கடந்த இரண்டு வருடங்களாக நான் கிறிஸ்துவ மதத்தை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். 'ஏசுவின் இரண்டாம் வருகை' நிச்சயமாக நடக்கப்போகிறது. அதற்காக நாமெல்லாம் காத்திருக்க வேண்டும்'' இப்படி தன் எண்ணங்களை கொட்டியிருப்பவர் வேறு யாருமல்ல. நடிகை நக்மாதான். கடந்த மே 1-ம் தேதியன்று கீழ்ப்பாக்கம் ஏரியாவில் உள்ள ஒரு பள்ளியில் 'மியூசிக் கேர் 2008' என்கிற பெயரில் பிரபல சினிமா பாடகர் ஜாலி ஆப்ரஹாம் நடத்திய கிறிஸ்துவ பிரார்த்தனை கூட்டத்தில் தான் நக்மா இப்படிப் பேசினார். நக்மா மேடையில் ஏறும்வரை, யாருக்கும் சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தார் ஜாலி ஆப்ரஹாம்.

நன்றி : ஜூனியர் விகடன்


http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=12364

StumbleUpon.com Read more...

ராஜஸ்தானில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் ஜெய்ப்பூரில் 7 இடங்களில் சங்கிலி தொடர் குண்டு வெடிப்பு(போட்டோவுடன்)

ராஜஸ்தானில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்
ஜெய்ப்பூரில் 7 இடங்களில் சங்கிலி தொடர் குண்டு வெடிப்பு
60 பேர் உடல் சிதறி சாவு
150-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 7 இடங்களில் சங்கிலி தொடர் போல நேற்று மாலை குண்டுகள் வெடித்தது. தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் 60 பேர் பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

ஜெய்ப்பூர்,மே.14-

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் மக்கள் நெரிசல் மிகுந்த 7 இடங்களில் நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

தொடர் குண்டு வெடிப்பு

இரவு 7.40 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 12 நிமிடங்களில் மொத்தம் 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. சாந்த்போல், சங்கனேர் கேட், திரிபோலியா பஜார், ஜோகரி பஜார், மனாஸ் சவுக், பதி சவுபால், சோட்டி சவுபால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் வெடித்தன. வழிபாட்டு தலங்கள், மார்க்கெட் பகுதிகள் ஆகியவற்றை குறிவைத்து தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தினர்.

மாலை நேரம் என்பதால், இந்த பகுதிகளில் எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, நிறைய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இவற்றில் ஒரு குண்டு, காரில் வைக்கப்பட்டு இருந்தது. அனைத்தும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் ஆகும்.

60 பேர் பலி

திரிபோலியா பஜார் பகுதியில் புகழ்பெற்ற அனுமன் கோவில் உள்ளது. செவ்வாய்க்கிழமை, அனுமனுக்கு விசேஷ நாள் என்பதால், அனுமனை வழிபடுவதற்காக பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த கோவிலுக்கு வெளியில் குண்டு வெடித்ததால் பலர் உயிரிழந்தனர். அதனால் அந்த இடமே ரத்தமயமாக காட்சி அளித்தது.

சம்பவத்தின்போது, ஏராளமான மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக மார்க்கெட் பகுதிக்கு வந்திருந்தனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து, அவர்கள் பீதியில் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர். இதனால் தள்ளுமுள்ளு உருவானது. சில நிமிடங்களில் அந்த இடமே ஆள் நடமாட்டமின்றி காட்சி அளித்தது. மேலும் குண்டுகள் வெடிக்கும் என்ற பீதி நிலவியதால், அனாதையாக கிடக்கும் எந்த பொருளையும் தொடாதீர்கள் என்று போலீசார் பொதுமக்களை எச்சரித்த வண்ணம் இருந்தனர்.

இந்த குண்டு வெடிப்புகளில் 60 பேர் பலியானார்கள். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெடிக்காத குண்டுகள் சிக்கின

இந்த தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ராஜஸ்தான் மட்டுமின்றி நாடு முழுவதும் பதட்டம் எழுந்தது. போலீஸ் டி.ஜி.பி. கில் உள்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர். மீட்பு பணிகளை உடனடியாக முடுக்கி விட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடங்களில் சோதனை செய்ததில், வெடிக்காத 3 குண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை போலீசார் பத்திரமாக செயல் இழக்கச் செய்தனர்.

நாடு முழுவதும் உஷார்

இது தீவிரவாதிகளின் நாசவேலை என்று போலீஸ் டி.ஜி.பி. கில் நிருபர்களிடம் தெரிவித்தார். சக்திவாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். சைக்கிளில் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்து இருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு, இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்று உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில எல்லைகள் மூடப்பட்டன.

டெல்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய முக்கிய நகரங்கள் உள்பட நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ், ரெயில் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

முதல்-மந்திரி விரைந்தார்

ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே டெல்லி சென்றிருந்தார். குண்டு வெடிப்பு பற்றிய தகவல் அறிந்தவுடன் அவர் விமானப்படை விமானம் மூலமாக ஜெய்ப்பூருக்கு விரைந்தார். நிலைமையை சமாளிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் கண்டனம்

ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைதி காக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜஸ்தான் அரசுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=412535&disdate=5/14/2008&advt=1

StumbleUpon.com Read more...

ஒருவனுக்கு ஒருத்தி இந்தியாவின் போற்றத்தக்க கலாச்சாரமாக மாறி இருக்கிறது என்றால் அதுக்கு யார் காரணம்.

 

இப்படிக்கு ரோஸ் - ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !

சென்றவாரம் விஜய் டிவியில் 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியைக் கண்டேன். பாலியல் பற்றிய சுவையார்வமான கலந்துரையாடல்கள் (விவாதம்), அதில் கலந்து கொண்டவர்கள் அந்நிகழ்ச்சியை நடத்தும் திருநங்கை, சாரு, முன்பு பாலியல் தொழிலாளியாக இருந்த கேரளாவைச் சேர்ந்த ஜமிலா மற்றும் இன்னொரு பெண் பெயரைக் கவனிக்க வில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை நம்புகிறீர்களா ? என திருநங்கை கேட்க, சாரு அதனை மறுத்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் ஆண் அளவில் ஏமாற்றவது தான். ஆண்களில் பலர் ஒரு மனைவியுடன் திருப்திப் பட்டுக் கொள்வதில்லை. நமது இந்தியாவில் மூன்று தலைமுறைக்கு முன்பு வரை ஒரு ஆண் பலரை திருமணம் செய்துக் கொண்டிருந்தார்கள், தற்பொழுது சமூக சூழலில் பல திருமணங்கள் செய்து கொள்ளாவிட்டாலும், திருமணம் ஆன ஆண்கள் பலர் வேறு பெண்களை நாடிச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள் என்றார்.

அதையே ஜெமீலாவும் ஆமோதித்து, இந்தியாவில் ஒரு காலத்தில் தேவதாசிகள் என (கும்பகோணம்) கோவில்களில் பெண்களை வைத்து பாலியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டனர். இந்த பெண்களை பெரும்பாலும் (பாழாக்கியது) அரசர்கள், அவர்களின் கைக்கூலிகள், கோவில் தர்மகர்த்தாக்கள், கோவிலைச் சேர்ந்தவர்களே. அவர் மேலும் சொன்னார் 'எனது அனுபவ்தில் திருமணம் ஆன ஆண்களின் பெரும்பகுதியினர் வேற்று பெண்களை நாடுபவர்களாகவே இருக்கின்றன. சுகத்துக்காக அவர்களை நாடுபவர்கள் பலர், ஒரு சிலரே அதிலேயே விழுந்து கிடந்து குடும்பத்தையே மறந்துவிடுவார்கள்' என்றார்

மேலும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரமெல்லாம் வெள்ளைக்காரர்கள் நம்மீது திணித்தது, கிறித்துவ சமயத்தில் மட்டுமே ஒருவர் ஒரு சமயத்தில் ஒரு மனைவியைக் கொண்டிருப்பார், அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்றால் விவகாரத்து செய்துவிட்டு அடுத்து திருமணம் செய்து கொள்வார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை ஒரே நேரத்தில் கிறித்துவர்கள் மணந்து கொள்ள அவர்களின் சட்டத்தில் இடமில்லை. மேலும் அதை அந்த பெண்களும் சகித்துக் கொண்டு அனுமதிப்பதில்லை. இந்தியாவில் சுதந்திர போராட்டத்துக்கு முன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரமெல்லாம் இருந்ததே இல்லை. நம் இந்து கடவுள்களுக்கு இருக்கும் மனைவிகளே நமது இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகத்தானே இருக்கிறது. என்றெல்லாம் சொன்னார்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம்மீது திணிக்கப்பட்ட கலாச்சாரம் ஆகும், அந்த திணிப்பை ஏற்றுக் கொள்ளாதவனாக மன அளவில் இருப்பதாலேயே ஆண் வேலி தாண்டுபவனாக இருக்கிறான் என்று ஒரே போடாக போட்டார்.

சாரு மற்றும் ஜமீலா சொல்வதில் உண்மை இருக்கலாம், பலரின் தாத்தாக்கள் அந்த காலத்தில் வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டவர்களாகவும், பலதாரமணம் புரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

********

தென்னகத்தில் இராமயணமும், இராமரும் போற்றப்பட்டதற்கு காரணமே, வடமொழி இராமயணங்களில் இல்லாத ஒன்றாக, 'ஒருவனுக்கு ஒருத்தி' எனற மையக்கருத்தாக கம்ப ராமயணத்தை கம்பர் ஆக்கி காவியம் படைத்திருந்ததால் தான். அந்த மையக்கருத்து இல்லை என்றால் கம்பராமயணம், வில்லி பாரதம் போல் மற்றொமொரு மொழிப்பெயர் கதையாகவே இருந்திருக்கும். தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள், அவன் மகனுக்கு ஒண்ணே ஒன்ணு என்றாலும், தசரதனுக்கு இருந்த மனைவிகள் வெறும் செய்தி அளவிலும், இராமர் - சீதை பாத்திரம் கதையின் ஓட்டமாக இருப்பதால் தசரதனின் பலதாரம் பேசப்படாமல் இராமனின் ஒரே மனைவியுடன் நின்றான் என்பது உயர்வாகப் பேசப்படுகிறது. அப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கதைப் பாத்திரமே உயர்வென்றால் உண்மையில்யே ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்துவந்த கிறித்துவ சமூகமே போற்றத்தக்கது தானே ?

இந்திய கலாச்சாரத்தில் பெரும அளவில், ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்ததே இல்லை. தற்போதைய இந்திய திருமண கட்டுக்கோப்பு கிறித்துவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டவையே. பண்டைய காலத்தில் இந்திய ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்திருந்தது இல்லை. ஆனால் பெண்கள் கணவனே கண்டண்ட தெய்வமாக வாழ்ந்துவந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். இந்தியாவில் குடும்பம் என்ற அமைப்பே பெண்களால் கட்டிக்காக்கப்பட்டு வந்தது, ஆண் வெறும் பொருளியல் உதவி செய்பவனாகவும், பாதுகாவலனாகவும் இருந்துவந்தான். இது தெரிந்தாலும், இந்திய பெருமை, இந்து பெருமை பறைசாற்றும் நமது இந்துத்துவாக்கள், பல மனைவிகளை உடைய தெய்வங்களை போற்றிக் கொண்டே முகமது நபிக்கு 11 மனைவிகள் இருந்ததைப் பெரிய குறையாகவாகவும் இழிவாகவும் சொல்லி இஸ்லாமியர்களை பழித்துவருகின்றன.

ஒருவனுக்கு ஒருத்தி இந்தியாவின் போற்றத்தக்க கலாச்சாரமாக மாறி இருக்கிறது என்றால் அது இந்தியர்களுக்கு கிறித்துவர்கள் (வெள்ளைக்காரர்கள்) கொடுத்த கொடையே !

StumbleUpon.com Read more...

பரிணாமக் கொள்கையை திருப்பிப் போட்டால் என்ன கிடைக்கும்?

 

பரிணாமக் கொள்கையை திருப்பிப் போட்டால் என்ன கிடைக்கும்?

முட்டையில் செய்யப்படும் ஆப்பாயிலை திருப்பிப்போட்டால் புல்பாயிலோ அல்லது ஆம்லேட்டோ கிடைக்கும். பரிணாமக் கொள்கையை திருப்பிப் போட்டால் என்ன கிடைக்கும் என்ற கேள்வியே சற்று நூதனமானதாக இருக்கேன்னு நினைக்கிறீங்களா? கடுமையான வெயிலின் தாக்கத்துல சிலர் பேசுறதே நமக்கு புரியாது. அவங்களுக்கே புரியுமா என்பது சற்று சந்தேகம் தான். ஆனால் முழுக்க முழுக்க குழம்பியவர்கள் பேசுவது புலம்பலாக இல்லாமல் குழம்பலாகத்தானே இருக்கும். அப்படி குட்டையை குழப்பியவர்கள் கூறியதை கூறுகிறேன் சற்று கேளுங்கள்.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று பரிணாமக் கொள்கையாளர்கள் உளறிக்கொண்டு பலகாலமாக சுற்றித்திரிகிறார்கள்.ஆனால் இவர்களுக்கும் முன்பாகவே உள்ள அருமை இரத்தத்தின் இரத்தங்கள் அட போங்கடா புண்ணாக்குப் பயலுவலா, மனிதனிடம் இருந்துதான் குரங்கு வந்தது தெரியுமா என்று எழுதிவைத்திருக்கிறார்கள். எல்லாம் அந்த இல்லா அல்லாவோட கைங்கரியம்தான்றேன். ஆனா செய்தி என்ன தெரியுமோ? இது அந்த புத்தகத்தை அதான் குரானை வாசிக்கிறவகளுக்கே தெரியுமா என்பதை அவர்களிடம் தான் கேட்கனும். இவுக வாசிக்க மட்டும்தானே செய்வாக, அதின் அர்த்தம்தான் அவர்களுக்கு தெரியாதே! தெரிஞ்சா எல்லாம் புரிஞ்சிடுமே!அட்றா சக்கை....

இதனால் சகலமானவர்களுக்கும் இல்லா அல்லா தெரிவித்துக் கொள்வதை உங்கள் முன் படைக்க விரும்புகிறேன். நம்முடைய இன்றைய சிந்தனையின் ஆதாரமாக குஆனிலிருந்து ஸூரா2:65 மற்றும் ஸூரா7:163- 166 ஆகிய பகுதிகளை எடுத்துக் கொள்கிறேன்.

யாராவது வாசிங்க ப்ளீஸ்!

அட சற்று சத்தமாகத்தான் வாசிங்களேன்!

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி 'சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம (ஸூரா2:65 )

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்¢ ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம். (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், 'அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்¢ அதற்கு (அந்த நல்லடியார்கள்): 'எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்." அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்¢ வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, 'நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம். (ஸூரா7:163- 166)



இதை வாசிக்கும் சகோதரர்களே இங்கே குரங்குகளாகிவிடுங்கள் என்பது ஒரு உதாரணமாகக் கூறப்படவில்லை என்பதை சற்று கவனியுங்கள். ஆகவே பரிணாமக் கொள்கை பேசும் முட்டாள்களுக்கு நாங்களும் களத்துல இருக்கோம்ல என்று சொல்வதற்கு ஆட்கள் இருக்காங்கப்பா. இவங்களையும் அவங்கள விட நல்ல உயந்த இடத்தில உங்கள் லிஸ்ட்ல வச்சுக்கோங்க. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்பவர்கள் கூட மனிதன் சிறப்பானவன் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனா இவங்க பார்வையில குரங்குகள்தான் சிறப்பானது போல.யாருக்கு தெரியும்? அட இதுவும் அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

குரான் என்பது கட்டுக்கதைகள் நிறைந்த புத்தகம் மட்டுமல்ல, மக்களை எந்தளவுக்கு முட்டாளாக்க முடியுமோ அந்தளவுக்கு முட்டாள்களாக்கும் புத்தகமும் கூட. அதனாலதான் நம்ம முன்னோர்கள் இவர்களைப் பற்றி பழமொழியில கூட கரெக்டா சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.(சங்கீதம் 14:1 )

StumbleUpon.com Read more...

தலையை துணியால் மூடிக்கொண்டு போகும் இந்தப் பெண்கள் நீங்கள் நினைப்பது போல் எந்த தவறையும் செய்யவில்லை

 
 
 

StumbleUpon.com Read more...

கோடி ரூபாய் பரிசு- குரான் சவால்

கோடி ரூபாய் பரிசு- குரான் சவால்
இஸ்லாமுக்கு ஆதரவாக வாதம் செய்பவர்களில் மிதவாத இஸ்லாமியர் என்று அறியப்பட்ட ஜமால் பதாவி என்பவர் குஆனில் ஜிகாத் அல்லது சமயசார்பான யுத்தத்திற்கு ஆதரவான வசனங்களைக் காட்டுவோருக்கு 10 இலட்சம் அமெரிக்கன் டாலர்களை பரிசாக அறிவித்துள்ளார்.

பெர்ஜென் ரெக்கார்டு என்ற இந்த பத்திரிகை இதை மெலெழுந்தவாரியாக தெரியப்படுத்தியுள்ளது. எனவே பதாவி இந்த சவாலை விளையாட்டாக கூறியுள்ளார் என்ற போதிலும் பதாவி கூறவிரும்புவது தெளிவாக உள்ளது:குரான் சமய யுத்தத்தை கற்பிப்பதில்லை.பத்திரிகைகளே அப்படிப்பட்ட ஒரு தோற்றம் உருவாகும்படி திரித்துக் கூறுகின்றன.

பதாவி நிச்சயமாக உண்மையை அறீவார். ஆனால் அவரது விளையாட்டான சவால்ஜிகாத் யுத்தம் செய்பவர்கள் எப்படி குரான் வசங்களை உபயோகித்து தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள் என்ற உண்மையை மறைத்து விவரம் அறியாத அமெரிக்கர்களை இஸ்லாம் பள்ளிகள் கண்காணிக்கப்பட தேவையில்லை என்றும்,இஸ்லாமியர்கள் அநியாயமாக சட்டத்துறையினரால் வழக்குப் பதிவுசெய்யப்படுகிறார்கள் என்றும் சிந்திக்கச் செய்கிறது. இந்த வகையில் பதாவியின் சவால் வேடிக்கையானது அல்ல. அது ஒரு அரசியல் கூற்று. அது தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கும் -நமது முயற்சிகளை பாதிக்கிறது.

டாக்டர் பதாவி நான் கோடீஸ்வரன் ஆக விரும்புகிறேன்.இதோ குரானிலிருந்து சிலவசங்கள்:
(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும் அவர்களைக் கொல்லுங்கள் இன்னும் அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள் ஏனெனில் ஃபித்னா (குழப்பமும் கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும் மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில் நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள் ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.(2:190)

விசுவாசியாதவர்களைக் கொல்லுங்கள் என்ற சொல் எனக்கு சமய யுத்தம் போலவே தோன்றுகிறது.இதுவும் அப்படியே இருக்கிறது:
போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம் ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம் ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான் நீங்கள் அறியமாட்டீர்கள். (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும்: 'அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும் ஆனால் அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும் அவனை நிராகரிப்பதும் மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும் அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும் பித்னா (குழப்பம்) செய்வது கொலையைவிடக் கொடியது அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள் உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும் இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:216,217)


மேலும் இஸ்லாமியரின் எதிரிகளை விசுவாசியாதவர்கள் என்றும் சாத்தானின் நண்பர்கள் என்றும் குறிப்பிடும் இந்த பகுதி:எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி அல்லது வெற்றியடைந்தாலும் சரி அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். பலஹீனமான ஆண்களையும் பெண்களையும் சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) 'எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வுரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள் நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும். (4:74-76)



இதோ இங்கு சமய யுத்த வீரரும் அவரை பாதுகாக்க தேவ தூதரும் விசுவாசியாதவரின் தலைகளை வெட்டவேண்டும் என்று சொல்லும் பகுதி: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: 'நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.(8:12)





இந்தவசனம் யுத்தத்தின் சமய பண்பை தெரிவிக்கிறது: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: 'நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.[47:4]


இதுசண்டையின் நோக்கத்தை சமயம்சார்ந்த யுத்தம் இது என்று தெளிவாக்கும் வார்த்தைகளில் கூறுகிறது.
(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள் ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

இந்த வசனம் மற்றும் பல வசனக்கள் போல இந்த யுத்தம் ஆவிக்குரியதல்ல சரீரபிரகாரமானது என்பதை தெளிவுபடுத்துகிறது. இல்லாவிட்டால் விசுவாசிகள் பெரிய எதிர்ப்புகளை மேற்கொள்வர் என்ற வாக்குத்தத்தங்களுக்கு அர்த்தமிராது போய்விடும்.

இதுதான் புகழ்பெற்ற பட்டய வசனம் ஆகும்.

(போர் விலக்கப்பட்ட துல்கஃதா துல்ஹஜ்ஜு முஹர்ரம் ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள் அவர்களைப் பிடியுங்கள் அவர்களை முற்றுகையிடுங்கள் ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும் கிருபையுடையவனாகவும்[இருக்கின்றான்.9:5]


இதையும் ஆவிக்குரிய யுத்தமாக எடுத்துக் கொள்வது கடினம்.இந்த வசனம் யுத்தமானது வேதத்தின் மக்களென்று அழைக்கப்படும் யூதகளுக்கும்கிறிஸ்தவகளுக்கும் எதிரானது என்பதைஉறுதி செய்கிறது.பியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள் ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்.9:29]

இன்னமும் இப்படிப்பட்ட வசனங்கள் ஏராளமானவை இருந்தாலும் பதாவி இவர்களைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்பதை அறிய நான் அவரிடம் பேச வேண்டியதில்லை. நான் அந்த வசனங்களை தவறாகக் கையாளுகிறேன்.மூலாரபிய பாஷையில் தான் நான் அதன் சரியான பொருளை ஐயமுடியும்.னான் இவைகளைப் புஇந்து கொள்ள டாப்சி என்றழைக்கப்படும் குரானை விளக்கும் முறையை அறிந்திருக்கவேண்டும். இஸ்லாமியரின் விரோதி மட்டுமே இந்த வசனங்களை மேலுழுந்தவாரியாக அர்த்தம் கொள்வான்.

நல்லது. ஆனால் இந்த வசனங்களை மேலுழுந்தவாரியாக அத்தம் கொள்ளும் இஸ்லாமியரைப் பற்றி அவர் என்னச் சொல்லப் போகிறார்? உதாரணமாக செசன்யாவிலுள்ள இங்குஷேசியன் ஷீரா என்ற ஆலோசனைக் குழு சமீபத்திய அறிக்கையில் பிவருமாறு விளக்கியுள்ளது: அல்லா தான் தனியாக தொழுதுகொள்ளப்படுவதற்காக மனிதர்களை உருவாக்கினான், எனவே அவருக்கு கூட்டாளிகள் கிடையாது.அவர் ஜிகாத்தை நேர்வழியில் அனுமத்தித்துள்ளார்.இதன் மூலம் அல்லாவின் சமயம் மற்ற எல்லாவற்றிலும் மேற்பட்டதாயிருக்கவும் வாழ்க்கையின் எல்லாப்பகுதிகளும் இஸ்லாம் மூலமாக நடத்தப்படவும் பூமியிலிருந்து அவிசுவாசம் நீக்கப்படவும் வேண்டும்" இந்தக் கருத்திற்கு ஆதாரமாக ஸூரா.8:39ஐ மேற்கோள் காட்டியுள்ளார். அதேபோல சென்ற ஆண்டு அனேக ஜிகாத் இணைய தளங்களில் வெளியிடப்பட்ட "ஜிகாத்தின் உண்மையான அர்த்தம்" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில் சித்திக் அக்பர் என்பவர் மேற்கத்திய நாடுகளில் ஜிகாத் என்பது நமது ஆசைகளுக்கெதிரான யுத்தம் என்று கூறி ஜிகாத்தின் அர்த்தத்தை திரித்துக் கூறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் தாராளமாக குரானை மேற்கோள் காட்டி ஜிகாத் என்பது அவிசுவாசிகளுக்கெதிரான யுத்தம் என்று உறுதிப்படுத்தி குரானில்120க்கும் மேற்பட்ட வசனங்கள் ஜிகாத் என்பதுசண்டையிடுவதும் கொள்ளுவதும் என்ற பொருளில் உள்ளதாக கூறியுள்ளார்.அக்பர் மேலும் கூறுவதாவது: நான்கு முக்கிய சன்னி முஸ்லீம் பிரிவுகள் இந்தக் கருத்தில் ஒன்றுபட்டுள்ளன.இஸ்ளாமிய ஷாரியாவின் பொருளில் ஜிகாத் என்பது சண்டையிடுவதும், அவிசுவாசிகளை கொல்லுவதும் என்று சிறந்த படிப்பாளிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பதியா சானியா என்ற புத்தகத்தில் கனாபிபிரிவும் மன்கால்ஜலீல் என்ற புத்தகத்தின் மாலிகி பிரிவும் அல் இக்னா என்ற புத்தகத்தில் ஷபிபிரிவும் அல்-முக்னி என்ற புத்தகத்தில் ஹன்பலி பிரிவுமுள்ளது.

அக்பர் இப்படிப்பட்ட விசயங்களைக் கூறுவதில் தனித்திருக்கவில்லை. இத்தகைய வாதங்கள் உலகமெங்கிலும் உள்ள ஜிகாதிகளால் எதிரொலிக்கப்படுகிறது. அவகள் குரான் மற்றுமிஸ்லாமின் சட்டப்பகுதிகளை பிரயோகித்துபுது ஜிகாத் வீரரை உருவாக்கவுமிஸ்ளாமியரை அவர்ர்கள்மதமே உண்மையானது என்று நம்பச்செய்கின்றனர். பதாவிக்கு இதெல்லாம் தெரியாதா? இப்படி குரான் புனிதப் போரை ஆதரிக்கவில்லை என்று கூறி தனது பணத்தை செலவழிக்கிறதை விட ஜிகாத் வசனங்கள் குரானில் உண்டென்றும் அவை ஜிகாதிகளால் உபயோகிக்கப்படுகின்றது என்றும் ஒப்புக் கொண்டு கூடுமானால் இஸ்லாமிய சமுதாயத்தில் அவர்களதுசக்தி மழுங்கடிக்கப்பட என்னசெய்யலாம் என்றுவிளக்குவதன் மூலம் அவ உண்மையுள்ளவாக காணப்படமாட்டாரா?

9/11க்குப் பிறகு உள்ள சூழ்நிலையில் அமெரிக்காவிலுள்ள அடிப்படை தவறுகளில் இதுவும் ஒன்று. இஸ்லாமியப் பேச்சாளர்கள் மீண்டும் மீண்டும் ஆதாரம் கொடுக்காமல் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றூ எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று கூறுகின்றனர்.அதேசமயம் உலகம் முழுவதும் இஸ்ளாமியர் தங்கள் மதத்தின் பெயரால் வன்முஇறையில் ஈடுபடுகின்றனர்.பதாவி போன்றோரது வெற்றுவாதங்கள் அவற்றை தடைசெய்ய த்வறுவதோடல்லாமல் நாம் தீவிரவாதத்தின் மூலத்த அறியாதபடி தவறாகவழிகாட்டும் பொய்கூற்றுகளை உறுதிப்படுத்துகிறது.இது இவ்வாறு இருக்கும்வரையில் ஜிகாத் தீவிரவாதம் உலகமெங்கிலும் உள்ள இஸ்லாமிய பள்ளிகளில் அதிகரிப்பதைதடுக்கஎதுவும்செய்ய முடியாது.

டாக்டர் பதாவி சீக்கிரத்தில் உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். உங்களுடைய பத்து இலட்சம் டாலர் அறிவிப்பினால் நான் மிகவும் மகிழ்ந்து இதோ இப்போதே என்னுடையபணத்தை நான் செலவழிக்க ஆரம்பித்துவிட்டேன். நீங்கள் எனக்கு பணத்தைக்கொடுத்தப் பின்பு நாம் ஒன்றாக மதிய உணவு சாப்பிடலாம். ஜிகாத் வாட்ச் என்ற எங்கள் விமானத்தின் புதிய விமானத்தின் மூலம் நாமங்கே செல்லலாம்.

[இந்தக்கட்டுரையின் ஆசிரியர்ராபர்ட்ஸ்பென்சர் வாட்ச் என்ற அமைப்பின் இயக்குனர் ஆவார்.

StumbleUpon.com Read more...

பரிணாமக் கொள்கையை திருப்பிப் போட்டால் என்ன கிடைக்கும்?

பரிணாமக் கொள்கையை திருப்பிப் போட்டால் என்ன கிடைக்கும்?

முட்டையில் செய்யப்படும் ஆப்பாயிலை திருப்பிப்போட்டால் புல்பாயிலோ அல்லது ஆம்லேட்டோ கிடைக்கும். பரிணாமக் கொள்கையை திருப்பிப் போட்டால் என்ன கிடைக்கும் என்ற கேள்வியே சற்று நூதனமானதாக இருக்கேன்னு நினைக்கிறீங்களா? கடுமையான வெயிலின் தாக்கத்துல சிலர் பேசுறதே நமக்கு புரியாது. அவங்களுக்கே புரியுமா என்பது சற்று சந்தேகம் தான். ஆனால் முழுக்க முழுக்க குழம்பியவர்கள் பேசுவது புலம்பலாக இல்லாமல் குழம்பலாகத்தானே இருக்கும். அப்படி குட்டையை குழப்பியவர்கள் கூறியதை கூறுகிறேன் சற்று கேளுங்கள்.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று பரிணாமக் கொள்கையாளர்கள் உளறிக்கொண்டு பலகாலமாக சுற்றித்திரிகிறார்கள்.ஆனால் இவர்களுக்கும் முன்பாகவே உள்ள அருமை இரத்தத்தின் இரத்தங்கள் அட போங்கடா புண்ணாக்குப் பயலுவலா, மனிதனிடம் இருந்துதான் குரங்கு வந்தது தெரியுமா என்று எழுதிவைத்திருக்கிறார்கள். எல்லாம் அந்த இல்லா அல்லாவோட கைங்கரியம்தான்றேன். ஆனா செய்தி என்ன தெரியுமோ? இது அந்த புத்தகத்தை அதான் குரானை வாசிக்கிறவகளுக்கே தெரியுமா என்பதை அவர்களிடம் தான் கேட்கனும். இவுக வாசிக்க மட்டும்தானே செய்வாக, அதின் அர்த்தம்தான் அவர்களுக்கு தெரியாதே! தெரிஞ்சா எல்லாம் புரிஞ்சிடுமே!அட்றா சக்கை....

இதனால் சகலமானவர்களுக்கும் இல்லா அல்லா தெரிவித்துக் கொள்வதை உங்கள் முன் படைக்க விரும்புகிறேன். நம்முடைய இன்றைய சிந்தனையின் ஆதாரமாக குஆனிலிருந்து ஸூரா2:65 மற்றும் ஸூரா7:163- 166 ஆகிய பகுதிகளை எடுத்துக் கொள்கிறேன்.

யாராவது வாசிங்க ப்ளீஸ்!

அட சற்று சத்தமாகத்தான் வாசிங்களேன்!

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி 'சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம (ஸூரா2:65 )

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்¢ ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம். (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், 'அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்¢ அதற்கு (அந்த நல்லடியார்கள்): 'எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்." அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்¢ வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, 'நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம். (ஸூரா7:163- 166)



இதை வாசிக்கும் சகோதரர்களே இங்கே குரங்குகளாகிவிடுங்கள் என்பது ஒரு உதாரணமாகக் கூறப்படவில்லை என்பதை சற்று கவனியுங்கள். ஆகவே பரிணாமக் கொள்கை பேசும் முட்டாள்களுக்கு நாங்களும் களத்துல இருக்கோம்ல என்று சொல்வதற்கு ஆட்கள் இருக்காங்கப்பா. இவங்களையும் அவங்கள விட நல்ல உயந்த இடத்தில உங்கள் லிஸ்ட்ல வச்சுக்கோங்க. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்பவர்கள் கூட மனிதன் சிறப்பானவன் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனா இவங்க பார்வையில குரங்குகள்தான் சிறப்பானது போல.யாருக்கு தெரியும்? அட இதுவும் அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

குரான் என்பது கட்டுக்கதைகள் நிறைந்த புத்தகம் மட்டுமல்ல, மக்களை எந்தளவுக்கு முட்டாளாக்க முடியுமோ அந்தளவுக்கு முட்டாள்களாக்கும் புத்தகமும் கூட. அதனாலதான் நம்ம முன்னோர்கள் இவர்களைப் பற்றி பழமொழியில கூட கரெக்டா சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.(சங்கீதம் 14:1 )

StumbleUpon.com Read more...

ஒருவனுக்கு ஒருத்தி இந்தியாவின் போற்றத்தக்க கலாச்சாரமாக மாறி இருக்கிறது என்றால் அதுக்கு யார் காரணம்.

இப்படிக்கு ரோஸ் - ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !

சென்றவாரம் விஜய் டிவியில் 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியைக் கண்டேன். பாலியல் பற்றிய சுவையார்வமான கலந்துரையாடல்கள் (விவாதம்), அதில் கலந்து கொண்டவர்கள் அந்நிகழ்ச்சியை நடத்தும் திருநங்கை, சாரு, முன்பு பாலியல் தொழிலாளியாக இருந்த கேரளாவைச் சேர்ந்த ஜமிலா மற்றும் இன்னொரு பெண் பெயரைக் கவனிக்க வில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை நம்புகிறீர்களா ? என திருநங்கை கேட்க, சாரு அதனை மறுத்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் ஆண் அளவில் ஏமாற்றவது தான். ஆண்களில் பலர் ஒரு மனைவியுடன் திருப்திப் பட்டுக் கொள்வதில்லை. நமது இந்தியாவில் மூன்று தலைமுறைக்கு முன்பு வரை ஒரு ஆண் பலரை திருமணம் செய்துக் கொண்டிருந்தார்கள், தற்பொழுது சமூக சூழலில் பல திருமணங்கள் செய்து கொள்ளாவிட்டாலும், திருமணம் ஆன ஆண்கள் பலர் வேறு பெண்களை நாடிச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள் என்றார்.

அதையே ஜெமீலாவும் ஆமோதித்து, இந்தியாவில் ஒரு காலத்தில் தேவதாசிகள் என (கும்பகோணம்) கோவில்களில் பெண்களை வைத்து பாலியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டனர். இந்த பெண்களை பெரும்பாலும் (பாழாக்கியது) அரசர்கள், அவர்களின் கைக்கூலிகள், கோவில் தர்மகர்த்தாக்கள், கோவிலைச் சேர்ந்தவர்களே. அவர் மேலும் சொன்னார் 'எனது அனுபவ்தில் திருமணம் ஆன ஆண்களின் பெரும்பகுதியினர் வேற்று பெண்களை நாடுபவர்களாகவே இருக்கின்றன. சுகத்துக்காக அவர்களை நாடுபவர்கள் பலர், ஒரு சிலரே அதிலேயே விழுந்து கிடந்து குடும்பத்தையே மறந்துவிடுவார்கள்' என்றார்

மேலும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரமெல்லாம் வெள்ளைக்காரர்கள் நம்மீது திணித்தது, கிறித்துவ சமயத்தில் மட்டுமே ஒருவர் ஒரு சமயத்தில் ஒரு மனைவியைக் கொண்டிருப்பார், அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்றால் விவகாரத்து செய்துவிட்டு அடுத்து திருமணம் செய்து கொள்வார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை ஒரே நேரத்தில் கிறித்துவர்கள் மணந்து கொள்ள அவர்களின் சட்டத்தில் இடமில்லை. மேலும் அதை அந்த பெண்களும் சகித்துக் கொண்டு அனுமதிப்பதில்லை. இந்தியாவில் சுதந்திர போராட்டத்துக்கு முன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரமெல்லாம் இருந்ததே இல்லை. நம் இந்து கடவுள்களுக்கு இருக்கும் மனைவிகளே நமது இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகத்தானே இருக்கிறது. என்றெல்லாம் சொன்னார்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம்மீது திணிக்கப்பட்ட கலாச்சாரம் ஆகும், அந்த திணிப்பை ஏற்றுக் கொள்ளாதவனாக மன அளவில் இருப்பதாலேயே ஆண் வேலி தாண்டுபவனாக இருக்கிறான் என்று ஒரே போடாக போட்டார்.

சாரு மற்றும் ஜமீலா சொல்வதில் உண்மை இருக்கலாம், பலரின் தாத்தாக்கள் அந்த காலத்தில் வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டவர்களாகவும், பலதாரமணம் புரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

********

தென்னகத்தில் இராமயணமும், இராமரும் போற்றப்பட்டதற்கு காரணமே, வடமொழி இராமயணங்களில் இல்லாத ஒன்றாக, 'ஒருவனுக்கு ஒருத்தி' எனற மையக்கருத்தாக கம்ப ராமயணத்தை கம்பர் ஆக்கி காவியம் படைத்திருந்ததால் தான். அந்த மையக்கருத்து இல்லை என்றால் கம்பராமயணம், வில்லி பாரதம் போல் மற்றொமொரு மொழிப்பெயர் கதையாகவே இருந்திருக்கும். தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள், அவன் மகனுக்கு ஒண்ணே ஒன்ணு என்றாலும், தசரதனுக்கு இருந்த மனைவிகள் வெறும் செய்தி அளவிலும், இராமர் - சீதை பாத்திரம் கதையின் ஓட்டமாக இருப்பதால் தசரதனின் பலதாரம் பேசப்படாமல் இராமனின் ஒரே மனைவியுடன் நின்றான் என்பது உயர்வாகப் பேசப்படுகிறது. அப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கதைப் பாத்திரமே உயர்வென்றால் உண்மையில்யே ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்துவந்த கிறித்துவ சமூகமே போற்றத்தக்கது தானே ?

இந்திய கலாச்சாரத்தில் பெரும அளவில், ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்ததே இல்லை. தற்போதைய இந்திய திருமண கட்டுக்கோப்பு கிறித்துவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டவையே. பண்டைய காலத்தில் இந்திய ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்திருந்தது இல்லை. ஆனால் பெண்கள் கணவனே கண்டண்ட தெய்வமாக வாழ்ந்துவந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். இந்தியாவில் குடும்பம் என்ற அமைப்பே பெண்களால் கட்டிக்காக்கப்பட்டு வந்தது, ஆண் வெறும் பொருளியல் உதவி செய்பவனாகவும், பாதுகாவலனாகவும் இருந்துவந்தான். இது தெரிந்தாலும், இந்திய பெருமை, இந்து பெருமை பறைசாற்றும் நமது இந்துத்துவாக்கள், பல மனைவிகளை உடைய தெய்வங்களை போற்றிக் கொண்டே முகமது நபிக்கு 11 மனைவிகள் இருந்ததைப் பெரிய குறையாகவாகவும் இழிவாகவும் சொல்லி இஸ்லாமியர்களை பழித்துவருகின்றன.

ஒருவனுக்கு ஒருத்தி இந்தியாவின் போற்றத்தக்க கலாச்சாரமாக மாறி இருக்கிறது என்றால் அது இந்தியர்களுக்கு கிறித்துவர்கள் (வெள்ளைக்காரர்கள்) கொடுத்த கொடையே !

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP