சமீபத்திய பதிவுகள்

அறிவியல் புதுமை

>> Monday, May 26, 2008

இசைக் கலைஞன் ரோபோ 
  
 
 
சமீப காலங்களில் வித விதமான, ரக ரகமான வேலைகளைச் செய்யும் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. நடனமாடும் ரோபா, விளையாடும் ரோபோ போன்ற ரோபோக்களும் இதில் அடக்கம். அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளது `இசைக் கலைஞன் ரோபோ'. இசை நிகழ்ச்சிகளை நடத்தும்போது, அதற்கு தலைமையாக இருக்கும் இசை வல்லுனர், இசையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப கைகளை அசைத்து உற்சாக மூட்டுவார். இசை நிகழ்ச்சி நடக்கும்போது இசை வல்லுனர் கைகளை அசைப்பது போல, புதிய ரோபோ கணக்கச்சிதமாக கைகளை அசைக்கிறது. அமெரிக்காவில் உள்ள இசைக்குழுவின் தலைவர் கைகளை அசைப்பதை போலவே, ரோபோவும் கைகளை அசைக்கும் படி உருவாக்கி உள்ளனர். `சாத்தியமில்லாத கனவு' என்ற தலைப்பில் ரோபோவை தலைவராக கொண்டு இசை நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இசை நிகழ்ச்சியின்போது, பார்வையாளர்களை நோக்கி மட்டுமின்றி இசைக் கலைஞர்களின் அருகில் சென்று, ரோபோ கைகளை அசைத்த விதம் அனைவரையும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது.

செங்குத்தான பகுதிகளில் எளிதாக ஏறுவது, மேடுபள்ளமான இடங்களில் தடுமாறாமல் ஓடுவது என இந்த ரோபோ கூடுதல் திறமைகளையும் பெற்றுள்ளது.

இனி வரும் காலங்களில், `அட்ராஅட்ரா நாக்குமொக்க, நாக்குமொக்க' ... என்று ரோபோக்கள் பாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
 

 http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=5/24/2008&secid=76
 
 
விண்வெளி சுற்றுலா! 
  
 
 
கோடை காலத்தில் ஊட்டி, கொடைக் கானல் என சுற்றுலா செல்வதைப் போல, விண்வெளிக்கும் சுற்றுலா செல்லும் காலம் விரைவில் வர இருக்கிறது. விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு சென்று வந்த நிலை மாறி, சாதாரண மனிதர்களையும் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று இதற்கான சோதனைக்காக ஆளில்லாத விண்வெளி ஓடம் ஒன்றை கடந்த வருடம் அனுப்பி இருந்தது. அந்த ஓடம் வெற்றிகரமாக விண்வெளியை சுற்றி வந்துள்ளது. 27 கோடி மைல்கள் தூரம் அந்த ஓடம் சுற்றி வந்துள்ளது.

4.4 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இந்த விண்வெளி ஓடம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டில் மனிதர்கள் செல்லக்கூடிய வகையிலான விண்வெளி ஓடங்களை பிரமாண்டமாய் வடிவமைத்து, மனிதர்களுடன் சேர்த்து அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த முயற்சியும் வெற்றி அடைந்தால், மனிதர்களுக்கு வானமே எல்லை என்ற வார்த்தை நிஜமாகும்.
 

 
 

StumbleUpon.com Read more...

நான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன், எளிதில் ஏமாந்துவிடுவான்

வெறும் பேச்சுதான்...! 
  
 
 
பெண்ணென்றால் பேயும்
இரங்குமாமே!
இங்கே இந்த வரதட்சணை பேய்கள்
வாய் பிளந்தல்லவா
பார்க்கின்றன!
அழகும் அந்தஸ்தும்
அங்கத்தில் அல்ல;
அகத்திலே என்று
மனம் பார்த்து
மணம் முடியாதவரை,
பெண்கள் முன்னேற்றம்
வெறும் பேச்சுதான்...!

செ.பூங்குழலி, காட்டுமன்னார் கோவில்.
 

 
 
 
கற்றுக் கொள்ளுங்கள்! 
  
 
 

"நான் அடிமையாக இருக்க மாட்டேன். ஆகவே நான் எஜமானாகவும் இருக்க மாட்டேன். இது ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படை தத்துவம்'' என்கிறார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.

பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.
 

 
 
 
பொன்மொழிகள் தரும் உண்மை 
  
 
 
* இன்று தலைகுனிந்து படிக்கும் படிப்பு, நாளை தலை நிமிர்ந்து வாழ வைக்கும்.

* உண்மையைப் பேசி கெட்டவரும் இல்லை, பொய் பேசி நிம்மதியாக வாழ்ந்தவரும் இல்லை.

* பொய் சொல்வதால் கிடைக்கும் வெற்றியை விட, உண்மையினால் வரும் தோல்வி மேல்!

* வாழ்நாளில் இனிய பருவம் இளமைப் பருவம் என்பதை பலர் முதுமையில்தான் உணர்கின்றனர்.

* நான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன், எளிதில் ஏமாந்துவிடுவான்.

* பிறரை மகிழ்விப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.

விக்டர்ஜான், சென்னை-99.
 

 
 
 
சான்றோர் வாக்கு 
  
 
 
"யாரையும் இழிவாக
பேசாதே!
நம்பிக்கை இழக்காதே!
அவ நம்பிக்கையானது அறிவு, ஒழுக்கம் இவற்றின் வீழ்ச்சியாகும்.''

-டாக்டர் அம்பேத்கார்.

எம்.எஸ்.மயில், சாத்தான்குளம்.
 

 
 
 
எழுவேன்...! 
  
 
 
வீழ்ந்துதான் கிடக்கிறேன்
சோர்ந்துவிடவில்லை!
முடியாதென்று
சொல்வதற்கு
என் மனம் இன்னும்
முடமாகவில்லை!
இதோ எழுகிறேன்
புதியதோர்
நம்பிக்கை கொண்டு
எனக்காக காத்திருக்கும்
அந்த சிகரத்தின் உச்சியை
அடைவதற்கு...!

ப.ஷேன் அலாவுதீன்,
பர்கூர்.
 

 
 
 
நம்பர்-7 
  
 
 
உலக அதிசயங்கள் எத்தனை என்று கேட்டால்? கேள்வியை முடிக்கும் முன்பே `ஏழு' என்று பதிலளிப்பீர்கள். உலக அதிசயங்களை 7 என்ற எண்ணிக்கையில் கணக்கிடும் வழக்கம் கி.மு.2-ம் ஆண்டிலேயே துவங்கிவிட்டது. அப்போது வாழ்ந்த ஆன்ட்டிப் பேட்டர் என்பவர், உலகின் பழங்கால அதிசயங்களை வரிசைப்படுத்தினார். 7-ம் நம்பர் கிரேக்கர்களின் புனித எண் என்பதால் அதனை அடிப்படையாகக் கொண்டு உலக அதிசயங்களைப் பட்டியலிட்டார்.

க.சக்திவேல், போழக்குடி.
 

 
 
 
குதிரைத் தூக்கம் 
  
 
 
குதிரைகள் நின்று கொண்டு தூங்குபவை. தரையில் படுத்து, கால்களை மடக்கி தூங்கினால் மூச்சுவிடுவதற்கு குதிரைகள் சிரமப்படுகின்றன. இதனால்தான் அவைகள் நின்று கொண்டு தூங்குவதை விரும்புகின்றன. அப்படி தூங்கும் போது கீழே விழாமல் இருக்க கால்களின் மூட்டுப் பகுதியில் உள்ள தசைகள் உதவுகின்றன. குதிரையைப் போன்று வேறு சில மிருகங்களும் நின்று கொண்டுதான் தூங்குகின்றன.

பா.விக்னேசுவரன், குட்டம்.
 

 
 
 
அப்படியா? 
  
 
 
பூமியின் மீதுள்ள அனைத்துப் பொருட்களின் மீதும் ஒரு ஈர்ப்பு விசை செயல்படுகிறது என்பதை நிரூபித்தவர் மாபெரும் விஞ்ஞானியான ஐசக் நிïட்டன். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் கி.பி.1642-ம் ஆண்டில் பிறந்தார்.

க.பத்மா, வெள்ளூர்.
 

 
 
 
ஓகோ! 
  
 
 
* 1850-ம் ஆண்டுகளில்தான் சாக்லேட் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டது.

* வருமானவரி வசூலிக்கும் முறையை முதன்முதலில் இங்கிலாந்துதான் உலகிற்கு அறிமுகப்
படுத்தியது.

* அமேசான் நதியுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை நதிகள் இணைகின்றன.

* நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களில் யுரேனியம், பொட்டாசியம், தோரியம் போன்றவை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கமலி வெங்கட், வெண்ணந்தூர்.
 

 
 
 
சர்ச்சிலின் பேச்சாற்றல் 
  
 
 
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரும், சிறந்த தலைவருமான வின்ஸ்டன் சர்ச்சில் அவருடைய, நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "ஒவ்வொரு மேடையிலும் நீங்கள் பேசும் போது அரங்கத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அந்த சமயத்தில், மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அபிமானத்தை எண்ணி பெருமைப் படுவீர்கள்தானே?'' என்று சர்ச்சிலிடம் அவரது நண்பர் கேட்டார்.

"அரங்கிற்கு வரும் கூட்டத்தை ஒருபோதும் நம்பி பெருமைப்பட்டுக் கொள்ள மாட்டேன். நான் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி மக்கள் மத்தியில் தண்டனை வழங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது எனக்கு வழங்கப்படும் தண்டனையை காண இதைவிடவும் அதிகமான கூட்டம் வர வாய்ப்புள்ளது'' என்று பதிலளித்தார் சர்ச்சில்.

இந்த புதுமையான பதிலைக் கேட்டு அவரது நண்பரும் அசந்து போனார்.

ரா.கமலவதி, திருச்சி. 
 
 
http://www.dailythanthi.com/irmalar/Home/second_page.asp?secid=14&artid=4915&issuedate=5/24/2008

StumbleUpon.com Read more...

தினத்தந்தி செய்தி உண்மையா?


ஜெய்ப்பூரில் 66 பேர் பலியான
குண்டு வெடிப்பு வழக்கில் மசூதி இமாம் கைது


பரத்பூர், மே.27-

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் சில நாட்களுக்கு முன் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. அதில் 66 பேர் பலியாகினர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, மசூதியின் இமாமாக இருக்கும் மொகமது இலியாஸ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ஜெய்ப்பூருக்கு கொண்டு வந்துள்ளனர். இமாம் இலியாசை ரகசிய இடத்தில் வைத்து சிறப்பு விசாரணை படையை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இமாமிடம் இருந்து ஒரு கம்ப்ïட்டர், செல்போன் மற்றும் சில டைரிகள் கைப்பற்றப்பட்டன.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=415172&disdate=5/27/2008
 

StumbleUpon.com Read more...

கர்நாடக தேர்தலில் முக்கிய பிரமுகர்கள் அதிர்ச்சி தோல்வி-வாட்டாள் நாகராஜ் டெப்பாசிட் இழந்தார்

கர்நாடக தேர்தலில் முக்கிய பிரமுகர்கள் அதிர்ச்சி தோல்வி-வாட்டாள் நாகராஜ் டெப்பாசிட் இழந்தார்

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் பல முக்கிய பிரமுகர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியைத் தழுவினர். தொடர்ந்து எட்டு முறை ஒரே தொகுதியில் வெற்றிபெற்ற முன்னாள் முதலமைச்சர் தரம்சிங் தோல்வியை சந்தித்தார். மேலும், அங்கு தமிழர்களுக்கு எதிராக அடிக்கடி போராட்டங்களை நடத்தி வரும் வாட்டாள் நாகராஜ் டெப்பாசிட்டை இழந்துள்ளார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நடிகர் அம்பரீஷ் மற்றும் முன்னாள் முதலமைச்சர் பங்கரப்பாவும் தோல்வி அடைந்தனர். மேலும், பங்காரப்பாவின் மகன்கள் குமாரபங்காரப்பா, மருபங்கரப்பா ஆகியோரும் படுதோல்வி அடைந்தனர்.  மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் சபாநாயகருமான கிருஷ்ணா  பரிதாபமாக தோல்வி அடைந்தார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிரபலங்களின் தோல்விகள் அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=121#121

StumbleUpon.com Read more...

தமிழ் ஈழ கோரிக்கையை பிரபாகரன் கைவிடவேண்டும்-அமெரிக்கா அறிவுரை

தமிழ் ஈழ கோரிக்கையை பிரபாகரன் கைவிடவேண்டும்-அமெரிக்கா அறிவுரை

கொழும்பு: தமிழ் ஈழ கோரிக்கையை விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாரகரன் கைவிடவேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறுகையில், தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டு, ஒருங்கிணைந்த இலங்கை என்ற கொள்கையை பிரபாகரன் முன்வந்து ஏற்றுக்கொள்வதுதான் பயனுள்ளதாக அமையும் என்று தாம் நம்புவதாக தெரிவித்தார். இதுகுறித்து தமிழ் மக்களிடம், தான், கருத்து கேட்டதாகவும், அவர்களில் 95 சதவீதம்பேர் ஒருங்கிணைந்த இலங்கை கொள்கையையே விரும்புவதாகவும் அவர் கூறினார். மேலும், தனி ஈழத்தை பிரபாகரன் மட்டுமே, விரும்புவதாகவும் அவர்கள் கூறியதாக தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதாகவும், வெளிநாடு சுற்றுலாபயணிகள், அவர்களது ஒற்றுமையைப் பார்த்து வியப்படைவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையைப் பொறுத்தவரை, ஒருங்கிணைந்த இலங்கையின்கீழ், அதிகாரப் பகிர்வு என்பது தான் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=121#121

StumbleUpon.com Read more...

ஆட்டோமேட்டிக் கூலிங்கிளாஸ்கள் எப்படி நிறம் மாறுகிறது? Photo Chromatic Glasses


 

 Sun Glass கண் கண்ணாடிகளில், லென்ஸ் உள்ள கண்ணாடிகளில் கூட இந்த ஆட்டோமேட்டிக் கண்ணாடிகள் மிகவும் சாதாரணமாகி விட்டன. போட்டோ க்ரோமாடிக் கிளாஸ்கள் என்ற பெயர் கொண்ட வெயிலில் நிறம் மாறும் கண்ணாடிகள் கண் கண்ணாடிகள் மட்டுமல்லாது சில கார்களின் 'சன் ரூஃப்' எனும் 'கூரைக் கண்ணாடிகளில்' கூட உபயோகப்படுத்தப்படுகிறது. இது நிறம் மாற ஒரு சில நிமிடங்களே எடுத்துக்கொண்டாலும் அந்த வேகம் போதாது என்பதாலும் கண்ணாடியின் கருமை அளவைத் தேவைக்கேற்ப கட்டுப்படுத்த இயலாது என்பதாலும் கார்களின் பக்கக் கண்ணாடிகளில் உபயோகத்திற்கு வரவில்லை.

உருவாக்கியவர்:
'கார்னிங் க்ளாஸ் ஒர்க்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டான்லி ஸ்டூக்கி என்பவர் அறுபதுகளில் உருவாக்கிய கண்ணாடி செய்முறை இது. இவருடைய இந்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்க தேசிய தொழில்நுட்ப மெடல் 1986ம் ஆண்டு வழங்கப்பட்டது.

உருவாகும் விதம்:
கண்ணாடிக் குழம்பில் 0.01 முதல் 0.1 சதவீதம் வரை சில்வர் க்ளோரைட் சேர்க்கப்படும். சிறு அளவு காப்பர் (I) க்ளோரைடும் சேர்க்கப்படும். இது மிகச் சிறிய சில்வர் க்ளோரைட் க்றிஸ்டல்களாக கண்ணாடிக்குள் அமையுமாறு குளிர்விக்கப்படுகின்றன.

இந்தக் க்றிஸ்டல்கள் மிகச் சிறியதாக இருப்பதால் பார்வைக்குத் தெரியாது. அதே சமயம் குறுகிய அலைநீளமுள்ள அல்ட்ரா வயலட் கதிர்களை ஈர்த்துக் கொள்ளும்.

கருமையாகும் விதம்:
Sun Glasses சில்வர் க்ளோரைட் க்றிஸ்டல்கள் பாஸிடிவ் சார்ஜ் கொண்ட சில்வர் அயான்களாலும் (Ag +) நெகடிவ் சார்ஜ் கொண்ட க்ளோரைட் அயான்களாலும் (Cl-) இணைந்தவை. புற ஊதாக் (Ultra Violet) கதிர்கள் இந்தக் க்றிஸ்டல்களைப் பிரித்து சார்ஜ் இல்லாத சில்வர் (Ag0) மற்றும் க்ளோரைட் (Cl0 ) அணுக்களாக மாற்றுகிறது. (போட்டோக்ராபிக் தாள்களிலும் இதே தான் நடக்கிறது).

Cl- + UV light --> Cl0 + e-
Ag+ + e- --> Ag0

சார்ஜ் இல்லாத சில்வர் அணுக்களின் இணைந்த தோற்றம் கண்ணாடியின் ஒளி ஊடுருவலைத் தடுக்காத அளவில் இருந்து கொண்டு கண்ணாடியை சாம்பல் அல்லது ப்ரௌன் நிறமாக காட்டுகிறது.

லென்ஸ் கண்ணாடிகளில் மிகுந்த தூரப்பார்வை உடையவர்களுக்கு இந்த போட்டோக் கண்ணாடிகள் ஒத்து வராது. இவர்களுடைய கண்ணாடியில் லென்ஸ் நடுவில் தடிமனாக இருப்பதால் போட்டோ கண்ணாடி உபயோகித்தால் அங்கு மட்டும் மிகக் கருமையாகவும் ஒளி குறைவாக புகுமாறும் இருக்கும்.

கருமை நீங்கும் விதம்:
சூரிய ஒளி குறையும் போது தான் கண்ணாடியில் சிறிதளவு சேர்த்த காப்பர் (I) க்ளோரைடுக்கு வேலை. புற ஊதாக் கதிர்கள் குறையும் போது காப்பர் (I) அயான்கள் (Cu+) சார்ஜ் இல்லாத க்ளோரின் அணுக்களை க்ளோரைட் அயான்களாக மாற்றுகிறது. அதே சமயம் அதுவும் காப்பர் (II) அயான்களாக (Cu ++) மாறுகிறது. இது பின்னர் சில்வர் அணுக்களை ஆக்ஸிடைஸ் செய்து சில்வர் அயான்களாக மாற்றிவிடுகிறது.

Cl0 + Cu+ --> Cl - + Cu++
Cu++ + Ag0 --> Ag+ + Cu+

பாஸிட்டிவ் சார்ஜ் கொண்ட சில்வர் அயான்கள் க்ளோரைட் அயான்களுடன் கூட்டுச் சேர்ந்து பழையபடி சில்வர் க்ளோரைட் க்றிஸ்டல்களாக மாறுகிறது. கண்ணாடியும் கருமை நீங்கி தெளிவாகிறது.

 

StumbleUpon.com Read more...

உங்கள் கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்ய - Build a PC

 PC கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வதற்கு முன்னதாக ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதைப்பற்றி விபரம் வேண்டுபவர்கள் கம்ப்யூட்டர் பாகங்கள் பக்கத்தை முதலில் பார்க்கவும்.

பாகங்கள் வாங்குதல்:
உங்கள் தேவை மற்றும் வசதிக்கேற்ப கம்ப்யூட்டரில் அமைக்கப் போகும் பாகங்களைத் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் அவற்றின் விலைகள். தற்போது போட்டி காரணமாகவும், மிக எளிதில் கிடைப்பதாலும் விலைகள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கின்றன. எனினும் விலையை விட, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் சுறுசுறுப்பை முக்கியமாக கவனித்து வாங்குதல் நல்லது. வாங்கும் பாகங்களுக்கு எவ்வளவு காலம் வாரண்டி என்பது போன்ற விபரங்களை தகுந்த அத்தாட்சியுடன் பெற்றுக் கொள்வது நல்லது.

பாகங்களை வாங்குமுன் நீங்கள் வைத்திருக்கும்/செய்யவிருக்கும் கம்ப்யூட்டருக்கு அது ஒத்துப் போகுமா என உறுதி செய்து கொள்ளவும். ஒரு கம்ப்யூட்டருக்கு வேண்டிய எல்லாப் பாகங்களும் ஒன்று சேர்த்த பின்னரே அசெம்பிள் செய்யத் தொடங்குவது, அதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் விரைவாகக் களைய உதவும். முக்கியமாக கம்ப்யூட்டருக்கு கிடைக்கும் மின்சக்தி சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள ஸ்டெபிலைஸர் அல்லது UPS அவசியம் தேவை.

தயாராகுதல்:
கம்ப்யூட்டரில் அசெம்பிள் செய்யப் போவது CPU எனும் பெட்டியை மட்டும் தான். மற்ற பாகங்களான மானிட்டர், கீஃபோர்ட், மௌஸ் முதலியவற்றை வாங்கி அப்படியே இணைக்க வேண்டியது தான். அசெம்பிள் செய்யும் போது சர்க்யூட் போர்டுகளைக் கையாள வேண்டியிருப்பதால் நம் கையில் (தலைமுடியைக் கோதுதல், உல்லன் பேன்ட் முதலியவற்றில் கையைத் துடைத்தல் முதலியவற்றால்) ஏற்படக்கூடிய ஸ்டேடிக் மின்சாரத்தை முதலில் எர்த் செய்ய வேண்டும். ஜன்னல் அல்லது இரும்பு மேஜைக்கால்களைத் தொட்டு எர்த் செய்யலாம். கையில் ஸ்டேடிக் மின்சாரத்தை எர்த் செய்யவென்றே உபயோகிக்கப்படும் கைப்பட்டையை முடிந்தால் அவசியம் பயன்படுத்தவும்.

அசெம்பிள் செய்ய உபயோகிக்கப்படும் மேஜை மரத்தாலனவையாக இருத்தல் நலம். மேஜை மீது பாலியஸ்டர் போன்ற துணிகளையோ அல்லது ப்ளாஸ்டிக் திரைச்சீலைகளையோ கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. சர்க்யூட் போர்டுகளில் இணைக்கும் பகுதிகளில் உள்ள செம்புப் பட்டைகளை எக்காரணம் கொண்டும் கையால் தொடக்கூடாது.

அசெம்பிளிங்:
CPUவில் எல்லா கருவிகளுக்கும் இணைப்புப் பாலமான 'மதர் போர்டை', கேபினட்டில் உள்ள பேஸ் ப்ளேட் டை எடுத்து அதிலுள்ள துளைகளுக்கு நேராக அத்துடன் கொடுக்கப்பட்ட ப்ளாஸ்டிக் ஆணிகளை உபயோகித்து ந ଡ଼'அ4லைபெறச் செய்ய வேண்டும். இதன் பின்னரே ப்ராஸஸர், மெமரி (RAM) உட்பட தேவைப்படும் பாகங்களை முறைப்படி இணைக்க வேண்டும். இந்த இணைப்பு முறைகள் தொழில்நுட்பம் மாறும் போது அவ்வப்போது மாறி வருவதால் அந்த பாகத்துடன் வரும் மானுவலைப் படித்து பார்த்து அதன்படி இணைக்கவும். முக்கியமாக மதர்போர்டில் செய்ய வேண்டிய செட்டிங்குகள் இருக்கின்றனவா என்று மதர்போர்டு மானுவலைப் பார்க்கவும்.

பயாஸ் செட்டிங் (BIOS‍ Settings):
அசெம்பிளிங் முடித்து, மானிட்டர், கீஃபோர்ட், மௌஸ் போன்றவற்றை CPU உடன் இணைத்து கம்ப்யூட் டர் தயாரானபின், தகுந்த பவர் சப்ளை அளித்து கம்ப்யூட்டரை உயிர்ப்பிக்கவும். திரையில் அது செல்ப் செக்கிங் வேலைகளை முடித்து ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் காணோம் என்பது போன்ற தகவலைச் சொன்னால் உங்களைத் தட்டிக் கொடுத்துக் கொள்ளவும். உங்களுடைய கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்து விட்டீர்கள்.

கம்ப்யூட்டரில் உள்ள பாகங்களின் விபரங்களை பயாஸ் பெரும்பாலும் தானாகவே குறித்துக் கொள்ளும். இருந்தாலும் மதர்போர்ட் மானுவல் உதவியுடன் நிச்சயித்துக் கொள்வது நலம்.

பின்னர் ஹார்ட் டிஸ்க் பார்மாட், ஆப்பரேடிங் சிஸ்டம் லோட் செய்தல் என்று மென்பொருள் வேலை தான் பாக்கி.

 

http://www.kalanjiam.com/computer/index.php?titlenum=101

StumbleUpon.com Read more...

365 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல் குத்தும் தங்க ஊசி




http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/26/016/26_05_2008_016_010.jpg

StumbleUpon.com Read more...

விசிலடித்த ஆண்களுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்த இளம்பெண்



http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/26/010/26_05_2008_010_009.jpg

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP