சமீபத்திய பதிவுகள்

எழுத்தறிவு நாடு'

>> Sunday, June 1, 2008

ஆஸ்திரியாவுக்கும், சுவிட்சர்லாந்திற்கும் இடைப்பட்ட நாடு லிச்டென்ஸ்டெயின். வடக்கு தெற்காக 24 கி.மீ., கிழக்கு மேற்காக 9 கி.மீ. உடைய மேல் ரைன் நதிக் கரையில் உள்ள சிறிய நாடு. இது ஒரு முடியரசு நாடு. இதன் தலைநகர் வடுஸ்.

இந்த நாட்டின் பரப்பளவு 160 சதுர கிலோ மீட்டர். இங்கு கிட்டத்தட்ட 33 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பெருமையான விஷயம் இங்குள்ள நூறு சதவீதம் பேரும் எழுத்தறிவு பெற்றவர்கள். ஜெர்மன் மொழியில் இங்குள்ளவர்கள் பேசுகின்றனர். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர்.

சுவிஸ் பிராங்க் நாணயம் புழக்கத்தில் உள்ளது. 1866 ஆம் ஆண்டில் சுதந்திரத் தனி முடியர சாகியது. பல பன்னாட்டுக் கூட்டு நிறுவனங்கள் தலைமையிடத்தை இங்கு அமைத்துள்ளன. மக் கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அயல் நாட்டுப் பணியாளர்கள்.

1868ஆம் ஆண்டில் இருந்து நடுநிலை வகித்து வரும் நாடாக இந்த நாடு உள்ளது. உலகப் போர்கள் உள்பட எந்த ஐரோப்பியப் போர்களா லும் பாதிப்படையாத நாடு. 1984ஆம் ஆண்டில் ராணுவம் ஒழிக்கப்பட்ட போது பெண் களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

பொருளாதாரம் தொழில் வளத்தைச் சார்ந்தது. கால்நடை வளர்ப்பு, எந்திரம் மற்றும் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முக்கியமானவை. துணி, தோல் பொருட்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. ரசாயனங்கள், மரச்சாமான்கள், மண் பாண்டங்கள் ஆகிய வையும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

 http://www.dailythanthi.com/magazines/nyaru_kudumpa_article_D.htm

StumbleUpon.com Read more...

தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் ஒடுக்க வேண்டும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் மத தலைவர்கள் வேண்டுகோள்


புதுடெல்லி, ஜுன்.2-

தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் ஒடுக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் மதத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

மதச் சகிப்பு நாடு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லியில் `தீவிரவாத எதிர்ப்பு மாநாடு' நடைபெற்றது. அதில் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து மத தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தலாய்லாமா பேசும்போது, `இந்தியாவின் மதச் சகிப்பு தன்மை என்ற சிறப்பு உலக நாடுகளுக்கு சிறந்த உதாரணமாக உள்ளது. உலகில் உள்ள இந்து, புத்தம், ஜைனம், சீக்கிய என்று அனைத்து மதங்களும் இந்தியாவில் தோன்றியவையாகும். தற்போது அனைத்து மதங்களுக்கும் சிறந்த பாதுகாப்பாக இந்தியா இருக்கிறது' என்றார்.

மதரஸாக்களில் பயிற்சி

ஐக்கிய ஜ×ம்மா மசூதி கூட்டமைப்பு தலைவர் செய்யது யாக்யா புகாரி கூறுகையில், `எந்த ஒரு நபராலும், எந்த காரணத்துக்காகவும் தீவிரவாத செயல்கள் நடைபெற்றால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தீவிரவாதத்தின் கொள்கைகள் கண்டிக்கத்தக்கது. தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் நாம் ஒடுக்க வேண்டும்' என்றார்.

பாகிஸ்தான் அவாமி தேசிய கட்சி தலைவர் முகமது உசேன் பேசுகையில், `பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள மதரஸாக்களில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோன்ற மதரஸாக்களை எதிர் கொள்ள நவீன பள்ளிகளை நாம் நிறுவ வேண்டும்' என்றார்.

எய்ட்ஸ் போன்றது

மத்திய மந்திரி கபில் சிபல் பேசும்போது, `தீவிரவாதம் என்பது எய்ட்ஸ் நோயைப் போன்றது. அதற்கு எந்த வரையறையும் கிடையாது. தீவிரவாதத்தை தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம். தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பணம் சப்ளை செய்யப்படுவதை உலக நாடுகள் தடுக்க வேண்டும்' என்றார்.

காஷ்மீர் முதல்-மந்திரி குலாம் நபி ஆசாத் பேசுகையில், `தீவிரவாதத்துக்கு சில நாடுகள் ஆதரவும் உதவியும் செய்து வருகின்றன. பிற நாடுகளுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவவும் செய்கின்றன. தீவிரவாதம் பல்வேறு வசதிகளை தருவதாக கூறி, ஏராளமான இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர்' என்றார்.

கண்டன தீர்மானம்

சமூகநல ஆர்வலரான தீஸ்தா செடால்வாட், `அரசியல் ஆதாயத்துக்காக வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது வழக்கமாகி விட்டது' என்று குறை கூறினார்.

மேலும், தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டுக்காக வந்த பாகிஸ்தான் முன்னாள் மந்திரி புர்னேயை திருப்பி அனுப்பி வைத்ததற்காக மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது தவிர, மத்திய அரசை கண்டித்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டில் இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலத்தீவு, ஜோர்டான், லிபியா, இலங்கை, உஸ்பெகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=416461&disdate=6/2/2008

StumbleUpon.com Read more...

ஐ.பி.எல். இறுதிப்போட்டி:கடைசி பந்தில் வெற்றி பெற்று ராஜஸ்தான் `சாம்பியன்' பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது

ஐ.பி.எல். இறுதிப்போட்டி:
கடைசி பந்தில் வெற்றி பெற்று ராஜஸ்தான் `சாம்பியன்'
பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது


மும்பை, ஜுன்.2-

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இறுதிப்போட்டி

இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப்போட்டி மும்பை டி.ஒய்.பட்டேல் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சந்தித்தன. நேற்று முன்தினம் இரவு ஸ்டேடியத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு தியேட்டரில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், இறுதிப்போட்டியின் பாதுகாப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டு இருந்தது. 1500 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக 45 நிமிடங்கள் நிறைவு விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் இந்தி நடிகர், நடிகைகளின் குத்தாட்டம், சாகச நடனங்கள் இடம் பெற்றன.

சென்னை பேட்டிங்

நிறைவு விழா நிகழ்ச்சி முடிவடைந்ததும் போட்டி தொடங்கியது. சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் அணியில் சுமித், ராவத் ஆகியோருக்கு பதிலாக கம்ரன் அக்மல், நீரஜ் பட்டேல் சேர்க்கப்பட்டிருந்தனர். டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் வார்னே முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி பார்த்தீவ் பட்டேலும், வித்யுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். முதல் 3 ஓவர்கள் சற்று தடுமாற்ற கண்ட இந்த ஜோடி, அடித்து ஆட ஆரம்பித்த நேரத்தில் பிரிந்தது. ஸ்கோர் 39 ரன்களாக உயர்ந்த போது, வித்யுத் (16 ரன், 14 பந்து, ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி) ïசுப் பதான் பந்து வீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார்.

ரெய்னா 43 ரன்

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, தனக்கே உரித்தான பாணியில் வேகம் காட்டினார். பார்த்தீவ் பட்டேலும் தன்னால் முடிந்தவரை ஆடினார். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சும் மற்றும் பீல்டிங்கும் கட்டுக்கோப்பாக இருந்தது. இதனால் சென்னை அணியால் மெகா வேடிக்கை காட்ட முடியவில்லை. ஸ்கோர் 64 ரன்களை எட்டிய போது, பார்த்தீவ் பட்டேல் (38 ரன், 33 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார்.

இதன் பின்னர் வந்த அல்பி மோர்கல் அதிக நேரம் நீடிக்கவில்லை. 16 ரன்களில் (14 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி ஆட வந்தார். சென்னை அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தன. சென்னை அணியை பொறுத்தவரை, ஒன்று, இரண்டு ரன்களே அதிகமாக எடுக்கப்பட்டன.

சென்னை அணியின் ரன் உயர்வில் முக்கிய பங்கு வகித்த ரெய்னா 43 ரன்களிலும் (30 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்து சொதப்பிய கபுகேதரா 8 ரன்னிலும் (12 பந்து) ஆட்டம் இழந்தனர்.

163 ரன்கள் சேர்ப்பு

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டோனி 17 பந்துகளில் 29 ரன்களும் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), பத்ரிநாத் 6 ரன்களும் (2 பந்து) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் மொத்தம் 9 பவுண்டரிகளும், 7 சிக்சரும் விளாசப்பட்டன.

அடுத்து 164 ரன்கள் எடுத்தால் `சாம்பியன்' கோப்பை என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நீரஜ் பட்டேல் (2), அஸ்னோட்கர் (28 ரன்), அக்மல் (6 ரன்) ஆகியோர் 42 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தனர். இதனால் சரிவை சந்தித்த ராஜஸ்தான் அணி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. 4-வது விக்கெட்டுக்கு இணைந்த வாட்சனும், யுசுப் பதானும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.



ïசுப் பதானுக்கு 13 ரன்னில் சுரேஷ் ரெய்னாவும், 33 ரன்களில் கோனியும் விட்ட எளிதான கேட்சுகள் சென்னை அணிக்கு படுபாதகமாக அமைந்தது. இந்த வாய்ப்புகளை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். ஸ்கோர் 107 ரன்களை எட்டிய போது, அச்சுறுத்திக்கொண்டிருந்த வாட்சன் 28 ரன்களில் (19 பந்து) போல்டு ஆனார். இதன் பின்னர் கïப் (12 ரன்), ஜடேஜா (0), ïசுப் பதான் (56 ரன், 39 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் சாம்பியன்

கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்த நிலையில் கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் அணிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டன. இதில் 19-வது ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதையடுத்து கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டன. இறுதி ஓவரை பாலாஜி வீசினார். இதில் முதல் பந்தில் தன்விர் ஒரு ரன் எடுத்தார். 2-வது பந்தை தவற விட்ட வார்னே 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் பாலாஜ் வைடு பந்து வீசியதால் சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. தவிர இதில் ஒரு ரன் ஓடியும் எடுக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் வீசப்பட்ட 4-வது பந்தில் ஒரு ரன்னும், 5-வது பந்தில் தன்விர் 2 ரன்னும் எடுக்க ஆட்டம் `டை' ஆனது.

இதை தொடர்ந்து கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற உச்சக்கட்ட டென்ஷனுக்கு இடையே பாலாஜி பந்து போட்டார். இதில் தன்விர் எளிதாக ஒரு ரன் எடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று `சாம்பியன்' கோப்பையை தட்டிச் சென்றது.

ரூ.4.8 கோடி பரிசு

ஏற்கனவே லீக்கில் 2 முறை தோற்றிருந்த சென்னை அணி தொடர்ந்து 3-வது முறையாக ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்து கோப்பையையும் பறிகொடுத்து இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு வைரம், பவழம், மாணிக்க கற்கள் பதித்த தங்க கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. அந்த அணிக்கு ரூ.4.8கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது. 2-வது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ.2.4 கோடி வழங்கப்பட்டது.

ஸ்கோர் போர்டு

சென்னை சூப்பர் கிங்ஸ்

பார்த்தீவ் (சி) அக்மல் (பி) ïசுப் பதான் 38

வித்யுத் (சி) ஜடேஜா (பி) ïசுப் பதான் 16

ரெய்னா (சி) ஜடேஜா (பி) வாட்சன் 43

மோர்கல் (சி) அக்மல் (பி) ïசுப் பதான் 16

டோனி (நாட்-அவுட்) 29

கபுகேதரா (சி) அஸ்னோட்கர்(பி) தன்விர் 8

பத்ரிநாத் (நாட்-அவுட்) 6

எக்ஸ்டிரா 7

மொத்தம் (20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு) 163

விக்கெட் வீழ்ச்சி: 1-39, 2-64, 3-95, 4-128, 5-148

பந்து வீச்சு விவரம்

தன்விர் 4-0-40-1

வாட்சன் 4-0-29-1

முனாப் 2-0-14-0

ïசுப் பதான் 4-0-22-3

திரிவேதி 2-0-21-0

வார்னே 4-0-34-0

ராஜஸ்தான் ராயல்ஸ்

நீரஜ் பட்டேல் (பி) கோனி 2

அஸ்னோட்கர் (சி) ரெய்னா (பி) மோர்கல் 28

அக்மல் (ரன்-அவுட்) 6

வாட்சன் (பி) முரளிதரன் 28

ïசுப் பதான்(ரன்-அவுட்) 56

கïப் (சி) டோனி (பி) முரளிதரன் 12

ஜடேஜா (சி) கபுகேதரா (பி) மோர்கல் 0

வார்னே (நாட்-அவுட்) 9

தன்விர் (நாட்-அவுட்) 9

எக்ஸ்டிரா 14

மொத்தம் (20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 164

விக்கெட் வீழ்ச்சி: 1-19, 2-41, 3-42, 4-107, 5-139, 6-139, 7-143

பந்து வீச்சு விவரம்

நிதினி 4-1-21-0

கோனி 4-0-30-1

மோர்கல் 4-0-25-2

பாலாஜி 4-0-42-0

முரளிதரன் 4-0-39-2

தொடர் நாயகன் வாட்சன்

ராஜஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வாட்சன் தொடர் நாயகன் விருது பெற்றார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. அவர் 472 ரன்கள் குவித்து இருப்பதோடு, 17 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.

ஆட்டநாயகன் ïசுப் பதான்

அதிரடியாக அரைசதமும், 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி ராஜஸ்தான் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ïசுப் பதான் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=416476&disdate=6/2/2008&advt=1

StumbleUpon.com Read more...

பெட்ரோல் விலை உயர்வு முடிவு தள்ளிவைப்பு

பெட்ரோல் விலை உயர்வு முடிவு தள்ளிவைப்பு
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயு உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்துவது குறித்த முடிவு எடுப்பதை மத்திய அரசு ஒரு வார காலத்திற்கு தள்ளி வைத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், இந்திய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த இழப்பை ஈடு செய்வதற்காக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயு உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவை நேற்று மாலை கூடி முடிவு செய்வதாக இருந்தது.

ஆனால் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் இப்பிரச்சனையில் ஐக்கியமுற்போக்கு கூட்டணியில் நிலவும் கருத்து வேறுபாடு ஆகியவை காரணமாக விலை உயர்வு குறித்த முடிவு எடுப்பதை மத்திய அரசு ஒரு வார காலத்திற்கு தள்ளி வைத்துள்ளது.

இபிரச்சனை தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியுடன் பிரதமர் மன்மோகன் சிங் மூன்று முறை ஆலோசித்தார்.ஆனால் இதில் முடிவு ஏதும் எடுக்க முடியாமல் போனது.

இதன் காரணமாக விலை உயர்வு குறித்து முடிவு செய்வதற்காக நேற்று நடைபெறுவதாக இருந்த மத்திய அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP