சமீபத்திய பதிவுகள்

பொம்மைக்கு தடை

>> Wednesday, June 11, 2008

 
 
 
 
ஷன்டாவ்: தொழிற்சாலை ஊழியர்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொம்மை கார்களை பேக் செய்வது சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஷன்டாவ் நகரில்.

சீனாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பொம்மைகள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாக புகார் எழுந்ததுடன் சில நாடுகள் அத்தகைய பொம்மைகளை சீனாவுக்கே திருப்பி அனுப்ப நேரிட்டது.

இது சீன தயாரிப்புகள் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளதாகக் கூறி, சீன அரசு 700 பொம்மை தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதி உரிமத்தை ரத்து செய்துள்ளது.

StumbleUpon.com Read more...

சிங்கள கடற்படை தளம் அழிப்பு; 10 வீரர்கள் பலி; விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல்

 

கொழும்பு, ஜுன் 11-

விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தி சிங்கள கடற்படை தளத்தை அழித்தனர்.

இலங்கையின் வட பகுதி யில் உள்ள மன்னார் தீவில் சிங்கள கடற்படை மற்றும் தரைப்படை தளம் உள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் விடுதலை புலிகளின் கடற்புலிகள் கமாண்டோ படையினர் படகுகளில் அங்கு வந்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் சிங்கள படையினர் நிலை குலைந்து போனார்கள். 10 நிமிடத்தில் கடற்படை தளம் முழுவதையும் விடு தலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த சண்டையில் 10 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த ராடார் கருவி உள்பட ஏராள மான ஆயுதங்களை விடு தலைப்புலிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

இதுபற்றி விடுதலைப் புலிகள் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரை யன் கூறும் போது "கடந்த மாதம் வீர மரணம் அடைந்த கடற்புலிகள் சிறப்பு எந்திர பொறி யாளர் கேனால்காயு நினை வாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 10 நிமிடத்தில் வெற்றிகரமாக படைத்தளம் கைப்பற்றப்பட்டது. மன்னார் தீவில் பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள இந்த தளத்தை வெற்றி கரமாக தாக்கி இருக்கிறார்கள். என்றார்.

ராணுவம் தரப்பில் இது பற்றி கூறும் போது "விடு தலைப்புலிகள் 6 படகுகளில் வந்து இந்த தாக்குதலை நடத்தினார்கள். இதில் விடுதலைப்புலிகள் தளபதி ஸ்ரீ மாறன் உள்பட 4 பேரை கொன்று விட்டோம் ராணுவம் தரப்பில் 3 பேர் மட்டும் பலியானார்கள். என்றார்.
 
 

StumbleUpon.com Read more...

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக 14 வயது சிறுவன்; ராணுவத்திடம் சிக்கினான்

 

காபூல், ஜுன் 11-

ஆப்கானிஸ்தானில் தலி பான் தீவிரவாதிகள் ஒன்றும் அறியாத சிறுவர்களை கூட மூளை சலைவை செய்து மனித வெடி குண்டாக பயன்படுத்தி வந்தார்கள்.

அப்படி அனுப்பப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவன் ராணுவத்திடம் சிக்கி இருக் கிறான். அவனது பெயர் சாகிருல்லா யாசின் அலி.

பாகிஸ்தான் வர்சிஸ்தான் பகுதியில் உள்ள தொண் டாலா கிராமத்தை சேர்ந்த வன். அவனை 2 தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து சென்று மனித குண்டாக பயன்படுத்த முயற்சித்துள்ளனர்.

இவன் மூலம் கார் வெடி குண்டை வெடிக்க செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவனுக்கு கார் ஓட்ட பயிற்சியும் அளித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் ஒரு வீட்டில் அவனை அடைத்து வைத்து இருந்தனர். அப்போது அங்கு வந்த அமெரிக்க கூட்டு படையினர் அவனை கண்டு பிடித்து மீட்டனர்.

தற்போது அவனை ஆப்கானிஸ்தான் ஜெயிலில் அடைத்துள்ளனர். மனித வெடி குண்டாக மாறியது குறித்து சாகிருல்லா யாசின் அலி நிருபர்களிடம் கூறிய தாவது:-

நான் ஊரில் இருந்த போது முல்லா சலேப் என்ற தீவிரவாதியும் மற்றும் ஒரு வரும் என்னை சந்தித்தனர்.

அவர்கள் என்னிடம் நீ கடவுளுக்கு சேவை செய்யும் நேரம் வந்து விட்டது. வெளி நாட்டுக்காரர்கள் கடவுளுக்கு எதிரிகள். அமெரிக்கர் மற்றும் இங்கிலாந்து காரர்களை கொன்று மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். அவர்களை குண்டு வைத்து கொல்வதன் மூலம் நீதியை வழங்கலாம். நீ அதற்கு தயாராக வேண்டும் நீ செய்யும் செயலுக்காக உன் குடும்பத்துக்கு நாங்கள் உதவி செய்வோம்.

கடவுளுக்கு சேவை செய்வது உன் கடமை. அதில் இருந்து தவறக் கூடாது. உன்னை கடவுள் காப்பாற்றுவார் என்று கூறி னார்கள்.

அதை நம்பி அவர்களுடன் சென்றேன். எனக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்து மனித குண்டாக பயன்படுத்த முயற் சித்தார்கள்.

குண்டு வெடித்தால் நான் செத்து போவேன் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்.

இவ்வாறு அவன் கூறினான்.
 
 
 
 
 

StumbleUpon.com Read more...

சூடான் நாட்டில் தரை இறங்கும் போது விமானம் தீப்பிடித்து :120 பயணிகள் பலி

சூடான் நாட்டில் தரை இறங்கும் போது விமானம் தீப்பிடித்து :120 பயணிகள் பலி

கார்டூம், ஜுன். 11-

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானுக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜோர்டான் தலை நகர் அம்மானுக்கு சென்று விட்டு மீண்டும் சூடானுக்கு திரும்பி கொண்டிருந்தது. "ஏர்பஸ் ரக 310'' வகையை சேர்ந்த இந்த விமானத்தில் 14 விமான ஊழியர்கள் உள்பட 217 பேர் பயணம் செய்தனர்.

வழியில் விமானம் சிரியா நாட்டில் உள்ளcநகரில் இறங்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப் பட்டது. சூடானில் உள்ள கார்டூம் நகர் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது வானிலை மோசமாக இருந்தது. ஆனா லும் விமா னத்தை பைலட் தரை இறக்கினார்.

விமானம் ஓடு தளத்தில் இறங்கி சிறிது தூரம் ஓடியது. அப்போது திடீ ரென விமானத்தில் ஒரு என்ஜின் வெடித்தது. இதனால் விமா னத்தில் தீப்பிடித்தது. தீ மள மளவென விமானம் முழுவதும் பரவியது. பய ணிகள் அலறினார்கள். உடனே விமான ஊழியர்கள் அவசர கதவை திறறந்து விட்டனர்.

விமான நிலையத்தில் இருந்த மீட்பு படையினரும் விரைந்து வந்து விமானம் மத்தியில் உள்ள வாசலில் ஏணிப்படியை பொருத் தினார்கள். அதன் வழியாக பயணிகள் வெளியே இறங்கி ஓடி வந்தனர். பலர் விமானத்தில் இருந்து கீழே குதித்தனர்.

ஆனால் பல பயணிகள் விமானத்துக்குள் சிக்கி கொண்டனர். அவர்கள் கருகி பலியானார்கள். மொத்தம் 120 பயணிகள் பலியாகி விட்டதாகவும், 97 பேர் காப்பாற்ற பட்டதாகவும் விமான நிலைய மருத்துவ அதிகாரி முகமது உஸ்மான் தெரிவித்தார்.

உயிர் தப்பியவர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியானவர்களில் பல ரின் உடல்கள் எரிந்து விமானத்தோடு சாம்பலாகி விட்டது. சில உடல்கள் கரிக் கட்டையாக கிடந்தன. அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தன. 9 பேர் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.

விமானத்தில் தீப் பிடித் ததும் அங்கிருந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன் றனர். ஆனால் அந்த முயற்சி பலனிளிக்கவில்லை. முற்றிலும் எரிந்து நாச மாகி விட்டது. விமான பயணிகளை வரவேற்க ஏராளமான உறவினர்கள் விமான நிலையத்தில் வந்து காத்திருந்தனர். விமானம் தீப் பிடித்தது தெரிந்தவுடன் அவர்கள் கதறி அழுதனர்.

சூடான் நாட்டில் பயன் படுத்தப்படும் பயணிகள் விமானங்கள் மிகவும் பழமை யானவை அவற்றை சரியாக பராமரிப்பது இல்லை. இது தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சூடானில் 2003-ம் ஆண்டு இதே போல ஒரு விமானம் விழுந்து நொறுங்கி 115 பயணிகள் பலியானார்கள். கடந்த மாதம் குட்டி விமா னம் ஒன்று விழுந்து நொறுங் கியதில் சூடான் ராணுவ மந்திரி உள்பட 22 ராணுவ அதிகாரிகள் பலியானர்கள்.
 
 

StumbleUpon.com Read more...

இன்டர்நெட்டில் விபச்சாரியாக சித்தரிக்கப்பட்ட குடும்ப பெண்-காதலன் வக்கிர புத்தி




செய்தி முழுமையாக தெரிய இங்கே கிளிக் பண்ணுங்க

http://epaper.dinamalar.com/Web/Article/2008/06/10/002/10_06_2008_002_006.jpg

StumbleUpon.com Read more...

ஹதீஸ் போதனை:போதை தரும் மதுவை அருந்தியவன் திருந்தி தவ்பா செய்க

 

1303. எவனொருவன் போதை தரும் மதுவை அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
புஹாரி : 5575 இப்னு உமர் (ரலி).

StumbleUpon.com Read more...

ஹதீஸின் அறிவுறை:மாலை நேரம் பிள்ளைகளை வெளியில் விடாதே.

முஸ்லீம்கள் இணைய தளங்களில் பைபிளுக்கும்,இயேசு கிறிஸ்துவுக்கும் விரோதமாக அதிகமான அவதூறுப் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.ஆனால் அவர்களின் இறைத்தூதர் முகமது சொன்ன கோமாளித்தனமான அறிவுறைகளை பற்றி மூச்சு விடுவதில்லை.நான் உங்களுக்கு அவற்றை இந்த பகுதியில் அறிமுகப்படுத்துகிறேன்.

மாலை வேளையில் பிள்ளைகளை வெளியே விடக்கூடாதாம்.ஏன் என்று காரணம் சொல்லுகிறார்,சைத்தான்கள் பரவுகின்றனர்களாம்.இன்றைக்கு இந்த அறிவுறை கேட்டு எத்தனை முஸ்லீம்கள் உலகில் உள்ளனர்.இதற்கு மேலும் ஒரு படி சென்று மாலையில் வீட்டுக் கதவை பூட்டி விட வேண்டும்.இல்லை என்றால் ஷைத்தான் உள்ளே போய் விடுவானாம்.கதவை மூடி விட்டால் ஷைத்தான் திறக்க முடியாதாம்.இது எப்படி இருக்கு.

நல்ல நகைச்சுவை என்று சொல்கிறீர்களா?இன்னும் இது போன்ற நகைச்சுவைகள் தொடரும்






 

1310. இரவின் முற்பகுதி வந்துவிட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.

புஹாரி :3307 ஜாபிர் (ரலி).

StumbleUpon.com Read more...

சாப்பிட்டவுடன் மனைவி போன்றவர்களிடம் விரல் சூப்பக்கொடுக்க வேண்டும்.

 

1320. உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ளவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5456 இப்னு அப்பாஸ் (ரலி).

StumbleUpon.com Read more...

முகமதுவின் கண்டுபிடிப்பு:இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் உண்ணுகிறான்.

 

1334. இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; 'இறைமறுப்பாளன்' அல்லது 'நயவஞ்சகன்' ஏழு குடல்களில் சாப்பிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5394 இப்னு உமர்(ரலி).

1335. ஒருவர் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றார். (அதிலிருந்து) குறைவாக உண்பவராகிவிட்டார். இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அவர்கள், 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்'' என்று கூறினார்கள்.

புஹாரி :5397 அபூஹூரைரா (ரலி).

StumbleUpon.com Read more...

ஹதீஸ் விஞ்ஞானம்:நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்

 

1358. நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5855 அபூஹுரைரா (ரலி).


1359. நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5856 அபூஹூரைரா (ரலி).

StumbleUpon.com Read more...

நாய் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள். -இஸ்லாம் மூடநம்பிக்கை

 

1363. நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3225 அபூ தல்ஹா (ரலி).


1364. ''(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என என்னிடம் அபூ தல்ஹா (ரலி) தெரிவித்தார்கள். புஸ்ர் இப்னு ஸயீத் (ரஹ்) அறிவித்தார்.

(ஒரு முறை ஸைத் இப்னு காலித் (ரலி) நோய் வாய்ப்பட்டார்கள். அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது நாங்கள் அவர்களின் வீட்டில் ஒரு திரைக்கு அருகே அமர்ந்திருந்தோம். அந்தத் திரையில் உருவப் படங்கள் (வரையப்பட்டு) இருந்தன. எனவே, நான் (என்னுடன் இருந்த) உபைதுல்லாஹ் அல் கவ்லானீ அவர்களிடம், 'இவர்கள் (ஸைத் (ரலி)), 'இவர்கள் (ஸைத் (ரலி)) நமக்கு உருவங்களைப் பற்றிய நபிமொழியை அறிவிக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம். ஆனால், ஸைத் (ரலி) (அதை அறிவிக்கும் போது) 'துணியில் பொறிக்கப்பட்ட (உயிரினமல்லாதவற்றின் படத்)தைத் தவிர' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'கேட்கவில்லை'' என்றேன். அதற்கு அவர்கள், 'ஆம்; அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3226 புஸ்ர் பின் ஸயீத் (ரலி).

1365. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, 'மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்'' என்று கூறினார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம்.

புஹாரி : 5954 ஆயிஷா (ரலி).

1366. நான் உருவங்கள் வரையப்பட்ட ஒரு தலையணையை விலைக்கு வாங்கினேன். அதை நபி (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?' என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் 'இது என்ன தலையணை?' என்று கேட்டார்கள். 'நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், 'இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே வானவர்கள் வர மாட்டார்கள்!'' எனக் கூறினார்கள்.

புஹாரி : 2105 ஆயிஷா (ரலி).

1367. இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)'' என (இடித்து)க் கூறப்படும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5951 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1368. 'அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் செவியேற்றதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.

புஹாரி : 5950 இப்னு மஸ்ஊத் (ரலி).

1369. நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), 'நபி (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். 'யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார்.

புஹாரி : 2225 ஸயீத் இப்னு அபூஹஸன் (ரலி).

1370. நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைவபவர் ஒருவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூஹுரைரா (ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்'' என்றார்கள்.

புஹாரி: 5953 அபூஜூரா (ரலி).

StumbleUpon.com Read more...

காஷ்மீர்

காஷ்மீர் பொது விபரங்கள்
12-ம் நூற்றாண்டில் இருந்து நன்கு அறியப்பட்டது காஷ்மீர். 19-ம் நூற்றாண்டின் மத்தியில் மன்னராட்சி ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. டோக்ரா வம்சம் 1947 வரை ஆண்டது. கடைசி மன்னரான ஹரிசிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார்.

Maharaja Harisinghபரப்பளவு : 860.24 சதுர மைல்கள் (1947-க்கு முந்தையது)


பெரிய பகுதிகள்:

 

காஷ்மீர் பள்ளத்தாக்கு 1,639 சதுர மைல்கள்
லடாக் 33,554 சதுர மைல்கள்
ஜம்மு 12,378 சதுர மைல்கள்
 

மக்கள் தொகை 70 லட்சம் (2000 ஆண்டு மதிப்பீடு)

 

Nehru

வரலாற்றில் எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டாலும் தாங்கள் காஷ்மீரிகள் என்கிற அடையாளத்தைக் காஷ்மீர் மக்கள் இழக்க விரும்புவதில்லை என்கிறார் ஒரு ஆங்கில வரலாற்றாசிரியர். 1948-லும் இதே நிலைப்பாடுதான். அப்போது காஷ்மீர் இஸ்லாமியர் பாகிஸ்தானுடன் இணையவோ அல்லது தனி நாடாகவோ மாற விரும்பியபோது இந்து பண்டிட்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். இந்திய அரசியல் நிர்ணய சட்டசபை உறுப்பினராக இருந்த ஷேக் அப்துல்லா இந்தியாவுடன் இணைவதையே விரும்பினார். காஷ்மீர் மன்னரும் ஒப்புக்கொள்ளவே தில்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஒப்புதலும் பெறப்பட்டது.

ஆனால் காஷ்மீரை தன்னுடன் இணைக்க விரும்பியது பாகிஸ்தான். இதற்காக 1969, 71, 99 ஆகிய ஆண்டுகளில் நேரிடையாகப் போரில் குதித்தது. மூன்றிலும் தோல்விதான்.
 

பொது கருத்துக் கணிப்பு
 
 

இந்திய பிரதமர் நேரு காஷ்மீர் மக்களுக்கும் ஐ.நா.வுக்கும் பொதுக் கருத்துக்கணிப்பு நடத்துவதாக வாக்குறுதியளித்தார். இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தது சரியா? தவறா? என்பதுதான் அதன் சாராம்சம். இதை ஐ.நா.சபையில் தீர்மானமாகவும் கொண்டு வந்தனர். அதன்படி கருத்து கணிப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் இதுவரை கருத்துக் கணிப்பு பல்வேறு காரணங்களால் நடத்தப்படவேயில்லை.

ஆனால் பலமுறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அவற்றிலெல்லாம் 50% மக்களுக்கு மேல் வாக்களித்துள்ளனர். இதையே இந்தியா காரணங்காட்டி இந்தியாவுடனான காஷ்மீரின் இணைப்பு இறுதியானது என்கிறது. இருப்பினும் சில வருடங்களுக்கு முன்பு நடந்த 'அவுட்லுக்' பத்திரிகையின் கருத்துக் கணிப்பு வேறு கதையைக் கூறுகிறது. பெரும்பாலான மக்கள் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கிறார்கள் என்கிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட அரசியல் பிரிவு 370 தனி அந்தஸ்து மூலம் காஷ்மீர் மக்கள் தங்களை தாங்களே ஆள உரிமையளிக்கிறது. இராணுவம், நிதி, தொலைத்தொடர்பு, அயல் நாட்டு கொள்கை போன்றவை தவிர மற்றவை காஷ்மீர் அரசே வைத்துக் கொள்ளும். இதையே 'மாநில சுயாட்சி', 'முழுமையான கூட்டாட்சி' முறை என்ற பெயர்களில் தமிழ் நாடு, பஞ்சாப் மாநிலங்களும் கேட்கின்றன.
 

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு
 
 

இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிக்கப்பட்டபோது, இந்தியாவின் மேற்குப்புற மாநிலங்களான குஜராத்,
 

இராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீரின் ஒரு பகுதி போன்றவை சர்வதேச எல்லைப் பகுதியை கொண்டவைகளாக விளங்கின.  இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டபோது வடமேற்கு காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் போனது. இப்பகுதி காஷ்மீர் போன்று இந்தியாவின் பகுதியே. எனவே, இப்பகுதியில் எது எல்லைக் கோடு என்பதில் சிக்கல் எழுந்தது. பாக் ஆக்ரமித்த பகுதிக்கு கீழுள்ள இந்திய எல்லைப் பகுதிகளே  எல்லைக் கட்டுப்பாட்டு கோடாக அங்கீரிக்கப்பட்டது.

1949 கராச்சியில் ஐ.நா. உதவியுடன் பிரிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளை எல்லைக் கட்டுப்பாடு கோடு என்றழைத்தனர்.   
 
 

StumbleUpon.com Read more...

எங்கள் எல்லைக்குள் நுழைந்தால் கடுமையான விளைவை சந்திப்பீர்கள்'; சிங்கள ராணுவத்துக்கு விடுதலைப்புலிகள் எச்சரிக்கை

 

கொழும்பு, ஜுன்.11-

இலங்கையில் தனி நாடு கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்த ஆண்டு துவக்கத்தில் இலங்கை அரசு விலக்கி கொண்டது.

இதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை சிங்கள ராணுவம் தீவிரப்படுத்தியது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்கடந்த சில வாரங்களாக விடுதலைப்புலிகளும் சிங்கள ராணுவத்தின் மீது அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இதில் ராணுவத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் அந்நாட்டில் வலுத்து வருகிறது.

இதுபற்றி விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் பொதுச்செயலாளர் புலித்தேவன் நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வடக்கு இலங்கை பகுதியில் எங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்துடன் தாக்குதல்களை நடத்த முயற்சித்தால் சிங்கள ராணுவம் கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும். ஏற்கனவே அவர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலுக்காக இலங்கையின் வீரர்கள் அதிக அளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் பெரும் உயிர்ச் சேதத்தை அடைவார்கள்.

சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்றால் எங்களுடன் சமாதான முயற்சியில் ஈடுபடுபவர்களிடம் முதலில் நாங்கள் பேசவேண்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிந்தால்தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும்.

ஆனால் சமாதான பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு தயாராக ள வடக்குப் பகுதியில் ராணுவம் ஊடுருவித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானங்கள் மூலம் குண்டு வீச்சு நடத்துகிறது.

இல்லை. அதுதான் பிரச்சினையே.

மேற்கண்டவாறு புலித்தேவன் கூறினார்.
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP