சமீபத்திய பதிவுகள்

இஸ்லாம்கல்வி இணையமும் பைபிளின் வரலாற்றுத் தகவல்களும்

>> Wednesday, July 9, 2008

அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்

கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா

பாகம் - 3


[அப்துல்லாவும் அப்ரஹாமும் நெருங்கிய நண்பர்கள், இவர்கள் அடிக்கடி தங்கள் மார்க்க விவரங்களைப் பற்றி பேசுக்கொள்வதுண்டு. இப்படி இவர்கள் பேசிய ஒரு உரையாடலே இந்தக் கட்டுரை. அப்துல்லா தன் நண்பன் அப்ரஹாமுக்கு இரவு 9 மணிக்கு போன் செய்து பேசுகிறார்.]

அப்துல்லா: ஹலோ, அப்ரஹாம் எப்படி இருக்கே?


அப்ரஹாம்: ஹலோ, அப்துல்லாவா, நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே, என்ன இந்த சமயத்திலே போன் செய்யரே?


அப்துல்லா: ஒன்னுமில்லே, ஒரு கட்டுரையை படிச்சேன், அதைப் பற்றி உன் கருத்து என்ன என்று கேட்கலாம் என்று தான் போன் செய்தேன்.


அப்ரஹாம்: அப்படியா, சொல்லுடா, என்ன கட்டுரை, எதைப் பற்றியது?


அப்துல்லா: நீ அந்த கட்டுரையில் எழுதியிருப்பதை படித்தால், அவ்வளவு தான் ஆடிப்போயிடுவே.


அப்ரஹாம்: அப்படி என்னடா, அந்த கட்டுரையில் எழுதியிருக்கு, சீக்கிரம் சொல்லுடா, சஸ்பண்ஸ் வேண்டாம்.


அப்துல்லா: சரி, சொல்றேன் கேளு, கட்டுரையின் பெயர், திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு". இஸ்லாம் கல்வி என்ற தளம் அதை வெளியிட்டு இருக்கு, உனக்கு நான் நாளைக்கு அதை அனுப்புறேன், அதை படிச்சு, உன் பதில் என்ன என்று நீ சொல்லனும்.


அப்ரஹாம்: ஓஹோ, அந்தக் கட்டுரையா, நான் ஏற்கனவே, அதை படிச்சுட்டேனே. நேரம் கிடைக்கும் போது, உன்னோடு பேசலாம் என்று நினைத்தேன், நீயே கேட்டுட்டே.


அப்துல்லா: நல்லதாப் போச்சு, சரி சொல்லு, உன் கருத்து என்ன? அந்தக் கட்டுரையில் பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டுள்ளது, மனிதர்கள் பைபிளின் வசனங்களை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது? அல்லா யூதர்களுக்கு இறக்கிய வேதத்தை அவர்கள் மாற்றிவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது, அதைப்பற்றி நீ என்ன சொல்றே? உன்னால், இப்போதைக்கு ஏதாவது பதில் சொல்ல முடியுமா? இல்லே உனக்கு இன்னும் அவகாசம் தேவையா? சொல்லுடா சொல்லு பார்க்கலாம்.


அப்ரஹாம்: அப்போ, நான் பதில் சொல்லித்தான் ஆகனும் அப்படித்தானே?


அப்துல்லா: உன்னால் முடிந்தால்! பதில் சொல்லுடா பார்க்கலாம்.

அப்ரஹாம்: சரி, நான் பதில் சொல்கிறேன், அதற்கு முன்பு ஒரு கதை சொல்றேன் கேளு, பிறகு அந்த கதையின் அடிப்படையில் நான் சில கேள்விகளை நான் கேட்பேன், நீ பதில் சொல்லு, அந்த பதிலில் தான், இந்த கட்டுரைக்கு என் பதில் அடங்கியிருக்கு. என்ன கதையை ஆரம்பிக்கட்டுமா?

அப்துல்லா: என்னடா எப்போ பாத்தாலும், கதை, எடுத்துக்காட்டு என்று சொல்றே. சரி, சொல்லு கேட்கிறேன்.


அப்ரஹாம்: கவனமாக கேட்கனும், கடைசியில் நான் கேள்வி கேட்பேன். ஒரு ஊரிலே ஒரு இராஜா இருந்தான், அவன் மிகவும் அறிவாளி, அவனைப்போல உலகத்தில் வேறு யாரும் அவ்வளவு அறிவாளி கிடையாது. அவருக்கு பல இலட்ச போர் வீரர்கள் இருக்கிறார்கள். அவன் தன் கோட்டையைச் சுற்றி தண்ணீர் விட்டு, முதலைகளை அதில் விட்டுவைப்பான், யார் வந்தாலும் சரி, முதலைகள் திண்றுவிடும். அந்த கோட்டைக்குள்ளே போகனும் என்றால், ஒரே வாசல் தான், அந்த வாசலின் முன்பும், பின்பும் பல நூறு காவலாளிகள் 24 மணி நேரமும் காவல் காப்பார்கள்.


அப்துல்லா: சரிடா, சீக்கிரமாக விஷயத்துக்கு வாடா


அப்ரஹாம்: இதோ வரேன்.அந்த இராஜாவிற்கு உள்ள ஒரு வினோத சக்தி என்னவென்றால், தன்னை யார் எதிர்க்க வந்தாலும், அதை அவர் தன் சக்தியால் கண்டுபிடித்துவிடுவார். தன்னுடைய கோட்டைக்குள் எந்த ஒரு மனிதன் வரவேண்டுமானாலும், பல பரிசோதனைகள் செய்துவிட்டுத் தான் வரவேண்டும். மட்டுமல்ல, இராஜாவை எதிர்க்க, அல்லது கொல்லவதற்காக ஒரு வேளை யாராவது நல்லவர்கள் போல நடித்து உள்ளே வரமுடியாது, ஏனென்றால், மனதில் உள்ளதை அறியும் சக்தியும் அவருக்கு உள்ளது.


அப்துல்லா: ரொம்ப நல்லா இருக்கே, கண்டினியூ பண்ணு.


அப்ரஹாம்: அதாவது, எப்படி இறைவனுக்கு முன்பாக எதுவும் மறைக்கமுடியாதோ, இறைவனை தோற்கடிக்கமுடியாதோ அது போல, இந்த இராஜாவும். இந்த இராஜா ஒரு புத்தகத்தை எழுதினார், அதில் தன் சட்டங்களை எழுதிக்கொண்டு இருக்கிறார். மற்றும் அந்த சட்டப்புத்தகம், தன் அரண்மனையிலேயே தன்னிடமே வைத்துக்கொண்டு இருக்கிறார். மட்டுமல்ல, அந்த புத்தகத்தில் உள்ள விவரங்களை, மக்களுக்குச் சொல்லி, இவர் பெருமைப்பட்டுக்கொண்டு இருப்பார், மக்களும் இவரின் ஞானத்தை மெச்சிக்கொள்வார்கள். இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த புத்தகத்தை இந்த இராஜா தவிர மற்ற யார் தொட்டாலும், உடனே, அம்மனிதர், கல்லாக மாறிவிடுவார். இராஜாவின் அனுமதி இல்லாமல், யாரும் கோட்டைக்குள் வரமுடியாது, மற்றும் அப்புத்தகத்தை தொடவும் முடியாது. இராஜா அனுமதி கொடுத்தால், அப்புத்தகத்தை தொடலாம், படிக்கலாம்.


அப்துல்லா: அடேங்கப்பா! ரொம்ப வினோதமாக உள்ளதே. சரி, மேலே சொல்லு.


அப்ரஹாம்: இப்படி இருக்கும்போது, அந்த ஊரிலே இருக்கும், ஒரு ஏழை விவசாயிக்கு இந்த இராஜா மீது பொறாமை வந்தது. எப்படியாவது, அந்த கோட்டைக்குள் நிழைந்து, அவர் எழுதிய புத்தகத்தை கிழித்துவிட்டு வரவேண்டும் என்று இவரது ஆசை. இதற்காக, சமயம் பார்த்துக்கொண்டு இருக்கிறான், இந்த ஏழை விவசாயி.


அப்துல்லா: அப்படியானால், இந்த திட்டத்தை அந்த இராஜா தெரிந்துக்கொண்டு இருப்பாரே?


அப்ரஹாம்: கண்டிப்பாக, இந்த விஷயம் இராஜாவிற்கு தெரியும், ஏனென்றால், இப்படிப்பட்ட வினோத சக்தி அந்த இராஜாவிற்கு இருக்கிறதே


அப்துல்லா: சரி, பிறகு என்ன ஆச்சு, அந்த ஏழை விவசாயி, எப்படி பலத்த பாதுகாப்பு உள்ள கோட்டைக்குள் நிழைந்தார், இராஜாவின் சட்ட புத்தகத்தை கிழித்தாரா இல்லையா? சொல்லடா? சஸ்பண்ஸ் வேண்டாம், சீக்கிரம் சொல்லு.


அப்ரஹாம்: திடீரென்று ஒரு நாள், அந்த இராஜா ஒரு அறிக்கையிட்டார், அது என்னவென்றால், தன்னிடம் உள்ள புத்தகத்தை யாரோ ஒரு மனிதர் கிழித்துவிட்டு சென்று விட்டதாக சொன்னார். மக்கள் எல்லாம் அதிர்ந்துப்போனார்கள், ஆச்சரியப்பட்டார்கள்.


அப்துல்லா: நிறுத்துடா, அது எப்படி சாத்தியமாகும்? இந்த இராஜாவிற்கு தான் சகல அதிகாரமும், சக்தியும் பாதுகாப்பும் உண்டே, பின் எப்படி ஒரு மனிதன் நிழைந்து இராஜாவிற்கு தெரியாமல் அப்புத்தகத்தை கிழிக்கமுடியும், மட்டுமல்ல, இராஜாவின் அனுமதி இல்லாமல் அதை தொடுபவன் கல்லாக மாறிவிடுவானே? இது எப்படி முடியும்?


அப்ரஹாம்: ஆனால், அந்த இராஜா மிகவும் நம்பிக்கையாகச் சொல்கிறார், தன்னிடம் உள்ள சட்டபுத்தகம் கிழிக்கப்பட்டதாம். ஒரு மனிதன் கோட்டைக்குள் நுழைந்து இதைச் செய்தானாம். இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த இராஜா பொய் கூட சொல்வதில்லை. எனவே, எல்லாருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இப்படி இருக்கும் போது, இது எப்படி சாத்தியம் சொல்லு?


அப்துல்லா: வாய்ப்பே இல்லை, NO CHANCE.


அப்ரஹாம்: என்னை பொருத்தவரையில் இதற்கு வாய்ப்பு உள்ளது. இது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.


அப்துல்லா: முட்டாள்தனமாக பேசாதேடா! இவ்வளவு திறமையுள்ள அரசனை ஏமாற்றி, கோட்டைக்குள் நிழைந்து செல்வது என்பது முடியாத காரியம். சரி, சொல்லு, என்ன வாய்ப்பு இருக்கு?


அப்ரஹாம்: நான் சொல்வதை கவனமாக கேளு. இதற்கு இரண்டு வாய்ப்புக்கள் உள்ளதாக நான் நினைக்கிறேன்.

1) ஒரு ஏழை அல்லது தன்னைவிட பலவீனமானவன் தன் கோட்டைக்குள் நிழையும் போது, அதை அறிந்து இராஜாவே, அம்மனிதனை உள்ளே வர அனுமதி அளித்தால், அந்த மனிதன் உள்ளே வர வாய்ப்பு இருக்குமல்லவா? மற்றும் அந்த புத்தகத்தை தொட்டால் அம்மனிதன் கல்லாக மாறிவிடுவான், எனவே, இராஜாவே அந்த ஏழைமனிதனுக்கு தன் சட்டபுத்தகத்தை கிழிக்க அனுமதி அளித்தால், அந்த ஏழை அதை கிழிக்கலாம் அல்லவா?

ஆக, முதலாம் வாய்ப்பாக நான் சொல்லவருவது, அந்த இராஜாவே தன் சுயவிருப்பத்தின் படி தன் சட்டபுத்தகத்தை அந்த ஏழை விவசாயி கிழிக்க அனுமதி வழங்கி விட்டுக்கொடுப்பது தான். இப்படி விட்டுக்கொடுக்க வில்லையானால், காவலாளிகள் அவனை கோட்டையின் கதவுக்கு முன்பே அவனை கொன்று இருப்பார்கள், அப்படியே அவன் உள்ளே வந்தாலும், அப்புத்தகத்தை தொட்ட மாத்திரத்தில் கல்லாக மாறியிருப்பான்.


அப்துல்லா: இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதாவது, தன் சக்தியை பிரயோகம் செய்யவில்லையானால், தான் அந்த பலவீனமான ஏழை விவசாயி இப்படிப்பட்ட செயலை செய்யமுடியும். சரி, இரண்டாவது வாய்ப்பு என்ன?


அப்ரஹாம்: இரண்டாவது வாய்ப்பு என்னவென்றால், அந்த ஏழை விவசாயி, அந்த இராஜாவை விட சக்தியுள்ளவனாக இருக்கவேண்டும், அதாவது, கோட்டைக்கு முன்பாக உள்ள பல நூறு பேரை கொன்றுப்போடும் சக்தி உடையவனாக அவன் இருக்கவேண்டும். மற்றும் உள்ளே செல்லும் வரையில் வரும் அனேக எதிர்ப்புக்களை சமாளித்து வெற்றியுள்ளவனாக அவன் இருக்கவேண்டும்.

இன்னும் அந்த புத்தகத்தை தொட்டால் கல்லாக மாறவேண்டும் என்ற இராஜாவின் சக்தியை மிஞ்சி, அப்படி நடக்காமல் பார்த்துக்கொண்டு ஒரு புது சக்தியை பயன்படுத்தி அந்த சட்டபுத்தகத்தை கிழிக்கவேண்டும். அதாவது, இராஜாவின் சக்தியைவிட இந்த ஏழை விவசாயி சக்தியுள்ளவனாக இருக்கவேண்டும்.



அப்துல்லா: இதுவும் சரியாகத் தான் தோன்றுகிறது.


அப்ரஹாம்: அதாவது, இராஜாவிற்கு நான் சொன்ன தகுதிகள், சக்திகள் இருப்பது உண்மையானால், அந்த இராஜா, தன் புத்தகத்தை யாரோ கிழித்துவிட்டார்கள், என்றுச் சொன்னதும் உண்மையானால், இந்த இரண்டு வாய்ப்புக்கள் தவிர வேறு எந்த செயலாலும், இக்காரியத்தை செய்யமுடியாது? நீ என்ன நினைக்கிறே?

1) இராஜாவே தன் சுய விருப்பத்தின்படி தன் சட்டப்புத்தகம் கிழிக்கப்பட விட்டுக்கொடுக்கவேண்டும்

அல்லது

2) அந்த ஏழை இந்த இராஜாவை விட சக்தியுள்ளவனாக, பலசாளியாக இருக்கவேண்டும்.



அப்துல்லா: சரி, இதை நான் அங்கீகரிக்கிறேன், இப்போ இந்த கதைக்கும், யூதர்களுக்கு அல்லா இறக்கிய வேதங்களை மனிதர்கள் மாற்றினார்கள் என்று நாங்கள் சொல்வதற்கும் என்ன சம்மந்தம்? கொஞ்சம் விவரமாகச் சொல்லுடா?


அப்ரஹாம்: சில கேள்விகள் கேட்கிறேன், அதற்கு பதில் சொல்லு. குர்‍ஆனை இறக்கியது யாரு?


அப்துல்லா: அல்லா தான் குர்‍ஆனை இறக்கினார்.


அப்ரஹாம்: குர்‍ஆனை யாராவது மாற்ற முடியுமா?


அப்துல்லா: முடியவே, முடியாது, குர்‍ஆனை பாதுகாப்பதாக அல்லாவே சொல்லியுள்ளார், அவரே பொருப்பேற்று உள்ளார், எனவே, மனிதனால் எந்த ஆபத்தும் வராது?


அப்ரஹாம்: ஏன் மனிதனால் முடியாது?


அப்துல்லா: ஏனென்றால், மனிதனை விட அல்லா மிகவும் சக்தியானவர், மனிதன் ஒன்றும் செய்யமுடியாது


அப்ரஹாம்: சரி அடுத்த கேள்விக்கு வருகிறேன். முந்தைய வேதங்கள் என்று குர்‍ஆன் சொல்லும் வேதங்களை யார் இறக்கியது?


அப்துல்லா: முந்தைய வேதங்களை இறக்கியது அல்லா தான்.

Quote:
குர்-ஆன் 3:84 "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(இன்னும் பார்க்க‌ குர்-ஆன் 2:4, 2:285)




அப்ரஹாம்: அல்லா இறக்கிய முந்தைய வேதங்களில் அல்லா என்ன சொல்லியிருந்தார்?


அப்துல்லா: முந்தைய வேதங்களில் நேர் வழியும், ஒளியும், நல்லுபதேசங்களும் இருந்தன மற்றும் அது நேர் வழிகாட்டியாகவும் இருந்தது. இதில் எந்த சந்தேகமுமில்லை.

Quote:
குர்-ஆன் 5:44 நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

குர்-ஆன் 21:105 நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

குர்-ஆன் 5:46 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
(குர்-ஆன் 5:44, 21:105, & 5:46 )



அப்ரஹாம்: சரி, ரொம்ப சந்தோஷம், அல்லா இறக்கிய முந்தைய வேதங்கள் இப்போது அப்படியே உள்ளதா? அல்லது மனிதர்களால் மாற்றப்பட்டதா?


அப்துல்லா: முந்தைய வேதங்களின் வசனங்களை யூதர்கள், கிறிஸ்தவர்கள் மாற்றிவிட்டதாக அல்லா தெள்ளத்தெளிவாகச் சொல்கிறான். இதோ அந்த வசனம், குர்-ஆன் 5:41.

Quote:
குர்-ஆன் 5:41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. ( இந்த வசனங்களையும் பார்க்கவும்: குர்-ஆன் 3:78, 2:79, 4:46 5:13)




அப்ரஹாம்: ஆக, அல்லா இறக்கிய வேதத்தை மனிதர்கள் மாற்றினார்கள், அப்படித்தானே?


அப்துல்லா: அப்படித்தான், இதில் துளியளவும் சந்தேகமில்லை.


அப்ரஹாம்: குர்‍ஆனில் சொல்லப்பட்டதை அப்படியே முஸ்லீம்கள் நம்புகிறீர்களா? அதாவது, குர்‍ஆன் வசனம் சொல்வது உண்மைத் தான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?


அப்துல்லா: 100 சதவிகிதம் நம்புகிறோம், குர்‍ஆனின் வசனங்கள் உண்மை, அதில் சொல்லப்பட்ட விவரங்களும் உண்மைத் தான்.


அப்ரஹாம்: இப்போது, நான் உனக்கு இதற்கு முன்னால் சொன்ன அந்த இராஜாவின் கதையோடு இந்த விவரங்களை சம்மந்தப்படுத்தி சில கேள்விகள் கேட்கிறேன். அல்லா சக்தியுள்ளவரா?


அப்துல்லா: ஆமாம்.


அப்ரஹாம்: அப்படியானால், அந்த இராஜாவைப் போல அல்லாவும் சக்தியுள்ளவர், அதாவது அந்த இராஜாவை விட வல்லமையுள்ளவர்.

இப்பொழுது நான் சொன்ன கதைக்கும், அல்லாவின் அறிக்கைக்கும் உள்ள சம்மந்தத்தைச் சொல்கிறேன் கேள்.

நான் இந்த கதையில் சொன்ன இராஜா தான் "அல்லா".

அந்த இராஜாவின் சட்டபுத்தகமே அல்லா இறக்கிய‌ முந்தைய வேதங்கள்.

அந்த ஏழை விவசாயி தான், யூதர்களும், கிறிஸ்தவர்களும்.

அந்த இராஜா சொன்னது போலவே, அல்லாவும் குர்‍ஆனில், என் முந்தைய வேதங்களை யூதர்களும், கிறிஸ்தவர்களும் மாற்றிவிட்டார்கள் என்றுச் சொல்கிறார்.


இப்போது என் கேள்விகள் என்னவென்றால்,

அல்லாவின் வேதங்களை மண்ணுக்கு சமமான மனிதர்கள் திருத்தவேண்டுமானால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கவேண்டும்.

முதலாவதாக, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாவை விட சக்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும். அப்போது தான் அல்லாவே இறக்கிய வேதத்தை அவர்கள் திருத்தமுடியும். ஒரு பலவானை கட்டி அவனை செயலிழக்க செய்யாமல் எப்படி ஒரு பலவினமானவன் அந்த பலவானுடைய வீட்டில் உள்ள பொருளை திருடமுடியும்?

இரண்டாவதாக‌, மனிதர்கள் தன் வேதத்தை திருத்த தானே அனுமதி அளித்து இருந்திருக்க வேண்டும், ஏனென்றால், குர்‍ஆனை எப்படி அல்லா பாதுகாத்தாரோ அப்படி முந்தைய வேதங்களை அல்லா பாதுகாக்கவில்லை.



என்ன அப்துல்லா கேட்டுக்கொண்டு இருக்கிறாயா?



அப்துல்லா: சொல்லுடா, கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.


அப்ரஹாம்: ஆகா, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்று குர்‍ஆன் சொல்வதால், இரண்டு குற்றச்சாட்டை நான் அல்லாவின் மீது வைக்கிறேன்.

a) அல்லா மிகவும் பலவீனமானவர், அதாவது சக்தியில்லாதவர், தன் படைப்பின் மீது வல்லமை இல்லாதவர், அதனால், தான் மனிதர்கள் திருத்தும் போது, தடுக்க திராணியில்லாமல், கையாளாகாதவராக இருந்துவிட்டார்.

b) அப்படி இலலை, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம், அல்லாவிற்கு சக்தி இருக்கிறது என்று முஸ்லீம்கள் சொன்னால், அல்லா வேண்டுமென்றே மக்கள் தன் வேதத்தை திருத்த அனுமதி அளித்துள்ளார்? மட்டுமல்ல, தன் முந்தைய வேத்ததை மனிதர்கள் கெடுக்க அனுமதி அளிக்கும் போது, குர்‍ஆனை மனிதர்கள் கெடுக்க அனுமதி அளித்து இருக்கமாட்டார் என்று எப்படி நம்புவது?


நண்பா, அப்துல்லாவே, உனக்கு நான் இரண்டு தெரிவுகளை தருகிறேன், நீ ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

1) முதலாவது, அல்லா பலவீனமானவர், சக்தியற்றவர். ம‌ற்றும் யூத‌ர்க‌ளும் கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் அல்லாவை விட‌ ச‌க்தியுள்ள‌வ‌ர்க‌ள்.

அல்ல‌து

2) அல்லா ஒரு அநீதிக்கார‌ர், அநியாய‌க்கார‌ர், அவ‌ரிட‌ம் நீதி நியாய‌ம் இல்லை, த‌ன் முந்தைய‌ வேத‌த்தை அழிக்க‌விட்டு, பிந்தைய‌ வேத‌த்தை பாதுகாக்கிறார்.


இதில் நீ எதை தெரிந்தெடுத்தாலும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு எந்த‌ பிர‌ச்சனையும் இல்லை.

ஒரு வேளை, இரண்டாவது தெரிவை நீ தெரிந்தெடுத்தால், இன்னும் ஒரு பிரச்சனை முளைக்கும், அதாவது, தன் முந்தைய வேதம் அழிக்க அனுமதி அளித்த ஒரு இறைவனிடம், அதாவது அல்லாவிடம் எப்படி நாம் நியாயம் நீதியை எதிர்ப்பார்ப்பது, அதே நேரத்தில், குர்‍ஆனை அவர் பாதுகாத்தார் என்று எப்படி நம்பமுடியும்? இதையும் அவர் திருத்தப்பட அனுமதி அளித்து இருக்கலாம் அல்லவா?

அந்த இராஜாவின் கதைக்கும் அல்லாவின் கதைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டும் ஒன்று தான்.
உன் பதில் என்ன சொல்லு?



அப்துல்லா: ....


அப்ரஹாம்: என்ன சத்தத்தை காணோம்


அப்துல்லா: இல்லேடா, இது ஒரு யோசிக்க வேண்டிய விஷயம் தான். யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.


அப்ரஹாம்: நீ யோசித்து முடிவு சொல்லு பரவாயில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் அப்துல்லா, அது என்னவென்றால், உன்னைப்போல யார் யாரெல்லாம் முந்தைய வேதங்களை மனிதர்கள் மாற்றிவிட்டார்கள் என்று பொய்யான தகவலைச் சொல்வார்களோ, அவர்கள் முதலாவது இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்.

அல்லாவிற்கு சக்தியில்லையா அல்லது அவர் ஒரு அநியாயக்காரரா? சொல்லுங்கள்.

அவரே அனுமதி அளித்துவிட்டு, அவரே இப்போது மனிதர்கள் மீது குற்றப்படுத்தினால், நாங்கள் என்ன காதில் காலிப்பிளவர் பூவா வைத்துள்ளோம். அவர் சொல்வதையெல்லாம் கேட்டு தலை ஆட்டுவதற்கு?

முதல்லே, இறைவன் கொடுத்துள்ள மூளையை பயன்படுத்தி கொஞ்சம் யோசித்துப் பாரு. அந்த இராஜாவின் செயல்களைப் பார்த்தால், உனக்கு என்ன தோனுது, அவன் ஒரு பொய்யன் அல்லது அநியாயக்காரன். அது போல, குர்‍ஆன் வசனங்களின் படி அல்லா ஒரு பொய்யான் அல்லது அநியாயக்காரன். ஏன் பொய்யன் என்றுச் சொல்கிறேன், தனக்கு சக்தி இல்லாதிருந்தும், தான் ஒரு பலசாளி என்று சொல்லிக்கொண்டான் அல்லவா அந்த இராஜா, அப்படியானால், அந்த இராஜா(அல்லா) பொய்யன் தானே. இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாயானால், அவர் ஒரு அநியாயக்காரர், தானே அழிக்கவிட்டு, தானே இப்போது ஒப்பாரி வைத்தால் என்ன அர்த்தம்.


அப்துல்லா: அல்லா பொய்யனும் இல்லை மற்றும் அநியாயக்காரரும் இல்லை. அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.


அப்ரஹாம்: அப்படியில்லையானால், இந்த அல்லாவின் பிரச்சனையை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் நீங்கள்.


அப்துல்லா: சரிடா, நான் உனக்கு நாளைக்கு போன் பண்றேன். இப்போ குட் நைட்.


அப்ரஹாம்: குட் நைட், பாய்.


--------------------------------------------------------------------------------
அப்துல்லாவின் மற்றும் அப்ரஹாமின் இதர உரையாடல்கள்:

1. அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல், பாகம் 1( ஏன் அரபியில் மட்டும்.... )

2. அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல், பாகம் 2(குர்-ஆன் தொகுப்பு, அபுபக்கர் காலத்தில்...)

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/AbdulandAbraham/aapart3.html

StumbleUpon.com Read more...

மனிதன் குரங்கில் இருந்து வந்தானா என்பதை இந்த வீடியோவை பார்த்த பின் சொல்லுங்கள்

StumbleUpon.com Read more...

அனைத்து முன்னனி தளங்கள்(வெப் சைட்கள்)web sites

 
 

 Weekly Faves
  Wix.com - Create a free website | Free Myspace layouts | Flash Myspace layouts PC Games, Game Downloads, Demos, Patches, HD Trailers, Mods and News - Big DownloadThe Big Picture - News stories in photographsI Dose, the perfect Binaural Beats experience!The PlanetAbbreviations and acronyms dictionary: Find definitions for over 4,219,000 abbreviations, acronyms, and initialismsWay Of The Sheep - Interesting ArtInstant OrigamiTour de France 2008Rapid Fire 2
 
E-mail
  list of email websites
 
Video
  in video you can find hours of entertainment
 
Maps
  maps
 
Search
  search engines GoogleYahooLiveAskAlexaAnswersMahalo.com: Human-powered SearchSputtr. A refreshingly clean way to searchChaCha Search - People powered search engine with option for live guide assistanceaftervote - The social search engine
 
Sports
 
major sports website
 
Weather
  a list of weather sites  
 
Community
  community - where you can meet new interesting people
  Shopping   top shopping sites Over StockKmartMacy'sSearsBuy.comWalmartBestTargeteBayAmazon - Online shoppingOn-Sale
 
Wiki
  wikipedia, wiki, all wikimedia sites Wikipedia - The free encyclopediaWiktionary - Dictionary and thesaurusWikiquote - Collection of quotationsWikinews - Free-content newsWikibooks - Free textbooks and manualsWikisource - The free libraryWikispecies - Directory of speciesWikiversity - Free learning toolsCommons - Shared media repositoryMeta Wiki - Wikimedia project coordination
  Banks   major banks in the US Bank Of AmericaCiti BankChaseWashington MutualUS BankWachoviaHSBCUBSCredit SuisseWells Fargo
  Finance   financial news The Motley FoolBloombergMarket WatchBusiness WeekYahoo FinanceThe Wall Street JournalForbesThe Financial TimesMerrill LynchCNN MoneyThe Street
 
Brokers
  etrade, e-trade Options XpressTD Ameritrade - Online TradingScottradeE*Trade FinancialFidelity InvestmentsForex TradingZecco
 
Cellular
  major cellular providers in the US CingularT-mobileVirgin MobileSprintVerizon WirelessSure WestNextelUS CellularalltelCellular one
 
Magazines
  AllMyFaves Magazines Time MagazinePeople MagazineTimeOutOprah MagazineEntertainment WeeklyCosmopolitanRolling StoneVarietyVogueLife & StyleMaxim Online
  News   News from all across the world CNNDiggMSNBCGoogle NewsCBS NewsYahoo NewsThe New York TimesBBC NewsUSA TodayReutersFox News
  Compare   comparison sites, for the best shopping experience shopping.comPricescan - Compare pricesPriceGrabberBizrateBestwebBuysElectronics Price ComparisonBest-PriceShopzillaPronto.com
 
Photo
  Share your photos with your friends
 
Movies
  movie related websites
 
Music
 
music related websites
 
Web Radio
 
the best way to discover new music is with web radio
 
Astrology
 
a list of the best astrology website and information
  Dating  
  Chat  
  Blog  
  Voip  
Voip Skype - Internet CallsJajah - Web activated telephonyInternet Phone RevolutionPacket 8 - VoIpGizmo - A free phone for your computerGlobal IPLingo VoIP Phone ServiceCall EveryoneCalldaddy - Talk more pay less
  Instant Msg  
  Insurance  
  Courier  
  Health  
  Info  
Info
  Translation  
Babel Fish TranslationFree translation and professional servicesFree TranslationWorld Lingo - Free TranslationAmikai Demo TranslationOnline Translation tools - Including Speller, VkeyboardGoogle Language ToolsOn-Line DictionaryApplied Language Free TranslatorWiktionary - the free dictionary
  Tech  
PC MagazineZDnetCNETPC WorldComputer WorldExtremeTechWebopedia - Online Computer Dictionary
 
Download
 
  Jobs  
Jobs
  Games  
 
Gaming
 
  On-line Games  
online games doof.com - All about playing games, meeting people, competition and expressing yourself.GSN - The Network For GamesGame FudgeArcaplay | Free Online GamesChannel4GamesFind Free Online Games and other fun games at Pogo.comPopCap Games - Fun, Free, Addictive GamesMiniclip Games - Play Free GamesPlay Free & Fun Online Games – Card, Strategy, Word & More
  Kids  
Yahoo! Kids: Games, music, movies, videos and fun for kidsFunBrain.com - The Internet's #1 Education Site for K-8 Kids and TeachersBrainPOP - Animated Educational Site for KidsPBS KidsKids' Games, Animals, Photos, Stories, and More--National Geographic KidsNASA - NASA Kids' Club Home PageKids WBDisney Kids IslandActivities for Blue's Clues, Dora, Diego, LazyTown, Wonderpets -- Games, Printables and More - Nick JrNick.comCartoon NetworkN O G G I NKids games, chat rooms for kids, plant babies, safe site for kids - KidsCom, fun site for kidsBarbie.com - Activities and Games for Girls Online!
  Car Rental  
  Cars  
  Travel  
travel
http://www.allmyfaves.com/

StumbleUpon.com Read more...

குடியரசு‌த் தலைவ‌‌ரிட‌ம் இடதுசா‌ரிக‌ள் ஆதரவு ‌வில‌க்க‌ல் கடித‌த்தை கொடு‌த்தன‌ர்!

ம‌த்‌தி‌யி‌லஆளு‌மகா‌ங்‌கிர‌ஸதலைமை‌யிலாஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அர‌சி‌ற்கு‌ததா‌ங்க‌ளஅ‌ளி‌த்தவ‌ந்ஆதரவை ‌வில‌க்‌கி‌க்கொ‌ள்வத‌ற்காகடித‌த்தகுடியரசு‌ததலைவ‌‌ரிட‌மஇடதுசா‌ரி‌கக‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ளகொடு‌த்தன‌ர்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌ததலைமை‌யி‌லஇ‌ன்று ‌பி‌ற்பக‌லகுடியரசு‌ததலைவ‌ரமா‌ளிகை‌க்கு‌சசெ‌‌ன்இடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளி‌னதலைவ‌ர்க‌ள், குடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லிட‌மஆதரவு ‌வில‌க்க‌லகடித‌த்தை‌ககொடு‌த்தன‌ர்.

"நா‌ங்க‌ளகுடியரசு‌ததலைவரை‌சச‌ந்‌தி‌த்து, ம‌த்‌திஅர‌சி‌ற்கஅ‌ளி‌த்தவ‌ந்ஆதரவை ‌வில‌க்‌கி‌க்கொ‌‌ள்வத‌ற்காகடித‌த்தநா‌ன்கஇடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளி‌னசா‌ர்பாக‌ககொடு‌த்து‌ள்ளோ‌ம்.

ம‌க்களவையை‌‌ககூ‌ட்டி ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்பை‌சச‌ந்‌தி‌க்குமாறு ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌ககுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌‌லகே‌ட்டு‌க்கொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்கடித‌த்தையு‌மநா‌ங்க‌ளகொடு‌த்து‌‌ள்ளோ‌ம்." எ‌ன்று ‌பிரகா‌ஷகார‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ம‌க்களவை‌யி‌‌ல் 59 உறு‌ப்‌பின‌ர்களை‌ககொ‌ண்டு‌ள்இ‌டதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளி‌னஆதரவு ‌வில‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல், ஆளு‌ம் ஐ.ு.கூ‌. அர‌சி‌ற்கஆதரவ‌ளி‌க்கு‌மஎ‌ம்.‌ி.‌க்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 230 ஆக‌ககுறை‌ந்து‌ள்ளது.

ம‌க்களவை‌யி‌‌ல் 39 உறு‌ப்‌பின‌ர்களை‌ககொ‌ண்டு‌ள்சமா‌ஜ்வாடி‌கக‌ட்‌சி ம‌த்‌திஅர‌சி‌ற்கஆதரவ‌ளி‌ப்பதாஅ‌றி‌வி‌த்‌திரு‌ந்தாலு‌ம், ம‌த்‌திஅர‌சதனதபெரு‌ம்பா‌ன்மையை ‌‌‌நிரூ‌பி‌க்இ‌ன்னு‌ம் 3 எ‌ம்.‌ி.‌க்க‌ளி‌னஆதரவதேவை.

இ‌த்தேவையஎ‌ளி‌தி‌லசமா‌ளி‌த்தபெரு‌ம்பா‌ன்மையை ‌நிரூ‌பி‌‌‌ப்போ‌மஎ‌ன்றம‌த்‌திஅரசகூ‌றியு‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ற்காத‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்தஇறு‌தி செ‌ய்வத‌ற்காப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமை‌யிட‌மசெ‌ல்வத‌ற்கமு‌ன்பம‌க்களவை‌யி‌லபெரு‌ம்பா‌ன்மையை ‌நிரூ‌பி‌ப்போ‌மஎ‌ன்றம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி ‌பிரதம‌ரிட‌மஆலோ‌சி‌த்து ‌வி‌ட்டு‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர
http://www.tamil.webdunia.com/newsworld/news/national/0807/09/1080709025_1.htm

StumbleUpon.com Read more...

மண்ணறைகளை வணக்கத்தளமாக்கிய முஸ்லிம்கள்

 
WD
உ‌ஜ்ஜை‌னி‌ல் உ‌‌ள்ள ‌கிரா‌ம் ஒ‌ன்‌றி‌ல் இரு‌க்கு‌ம் மசூ‌தி‌யி‌ல் இரு‌க்கு‌ம் மர‌த்‌தி‌ல் ஏ‌றினா‌ல் ஆ‌விக‌ள் ‌விலகுவதாக ந‌ம்‌பி‌க்கை ‌நிலவு‌கிறது.

 

 
 
WD
மசூ‌தி‌க்கு வ‌ந்‌திரு‌க்கு‌ம் ஏராளமான பெ‌ண்க‌ள்

 

 
WD
உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இஸ்லாமிய முனிவர் ஒருவரின்.
 
WD
மர‌த்‌தி‌ன் ‌மீது ஏ‌றி மய‌க்க ‌நிலை‌க்கு‌ச் செ‌ன்று‌வி‌ட்ட பெ‌ண்
 
 
WD

இஸ்லாமிய முனிவர் ஒருவரின் சமாதி‌யி‌ன் நுழைவா‌யி‌ல்

 

 

WD
மரத்தில் ஏறி முடித்து வந்த பெண்களைபூசாரி அவர்களது முடியைப் பிடித்து ஒரு சுவற்றுக்குக் கொண்டு சென்று அங்கு ஒரு எலுமிச்சைப் பழத்தை வைத்து ஆணி அடித்துவிடுகிறார்.
 
WD
சேறுபோல் கிடக்கும் குளத்தில் மூழ்கி எழுந்து பாபாவின் சமாதியில் வணங்கிவிட்டு இந்த மரத்தில் ஏறி இறங்குவதன் மூலம் ஆவிகளின் பிடியில் இருந்து பெண்கள் விடுபடுவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

 

http://www.tamil.webdunia.com/

StumbleUpon.com Read more...

மசூதி மரத்தில் ஏறினால் ஆவி விலகும்

http://www.tamil.webdunia.com/

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP