சமீபத்திய பதிவுகள்

தன்னம்பிக்கை இழக்காத தமிழ்ப் பெரியார்

>> Sunday, August 24, 2008

தன்னம்பிக்கை இழக்காத தமிழ்ப் பெரியார்
தர்மராஜ்
 
 


பழுத்த பழம்; சட்டை போடாத சந்தன வண்ண மேனி; வெண் தாடி; அவர்-தமிழ் இலக்கிய ஆய்வாளர்-பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம்.

விழிகள் உண்டு-பார்வை இல்லை. அது பற்றிச் சற்றும் கவலை கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார். நடுப்பகல் வெயிலிலும் உறங்குவதில்லை. வயதை மீறிய உற்சாகத்தோடு தூக்கத்தை விடத் தமிழ் இலக்கிய ஆய்வுகள் செய்வதில்தான் அதிகமான விழிப்புணர்வு.

''தமிழ் இலக்கியங்களில் உள்ள சிறப்புகள் தெரியாமல் எத்தனையோ பேர் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களைத் தட்டி எழுப்பவே நான் உறங்காமல் இருக்கிறேன்!'' என்கிறார் அந்தத் தமிழ்ப் பெரியார்.

தமிழைப் பற்றியும், நாயன்மார்களைப் பற்றியும் மற்றும் பல தமிழ் இலக்கிய வரலாறுகள் பற்றியும் அவர் பேசும்போது கை வெண் தாடியை மெல்ல நீவிக் கொண்டே இருக்கிறது! கண் பார்வையை பல ஆண்டுகளுக்கு முன்பே இழந்து விட்டாலும் அதை ஒரு பெரிய குறையாகக் கருதாமல் உற்சாகமாகவே பேசுகிறார். கேட்கக் கேட்கச் செவி பெற்ற பேறு என்ற பெருமிதம் எழுகிறது.

''என் கண் பார்வை பல ஆண்டுகளுக்கு முன்பே போய் விட்டது. பார்க்காத மருத்துவம் மீதமில்லை. அமெரிக்கா வரை சென்று பாடுபட்ட மருத்துவ முயற்சிகள் பயனற்றுப் போய்விட்டன'' என்று இந்தத் தமிழ்ப் பெரியார் பார்வையிழந்த வரலாற்றை சற்றுக்கூட சஞ்சலமில்லாமல் தடுமாறாத குரலில் கூறுகிறார்.

யாராவது வந்தால் நடையோசையைக் கொண்டே ''யார்?'' என்று வினவுகிறார். குரலைக் கொண்டு, வந்தவரை அடையாளம் கண்டுகொள்கிறார். அதன் தொடர்பில் பேச்சுகளும், பேட்டிகளும், வினாக்களும், விடைகளும் நடைபெறுகின்றன. பொருள் செறிந்த சுவையான விளக்கங்கள் கிடைக்கின்றன.

தினசரி செய்திகளை வானொலி வாயிலாக இவர் கேட்டு அறிந்து கொள்கிறார். ''வானொலிதான் எனக்கு ஒரு காலத்தில் வாழ்வு அளித்த ஒலிக்கூடம். என் இதய ஒலி ஒலித்த இடம். அதில் அன்றாடச் செய்திகளை அறிந்து கொள்கிறேன்''  என்கிறார்.

''இப்பொழுது என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று இவரைக் கேட்டதற்கு,

''திருவாசகம் பற்றி நீண்ட ஆராய்ச்சி நூல் எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்ல ஒருவர் எழுதி வருகிறார். ஆராய்ச்சி என்றால் வழக்கமான சில நூல்களில் காணப்பெறும் முன்னுரை, விரிவுரை, முகவுரை என்பது போன்றவை இதில் இடம்பெறவில்லை. 'சிந்தனைகள்' என்ற தலைப்பில் இந்த ஆராய்ச்சி நூல் எழுதப்பெற்று வருகிறது. இதற்குமுன் மற்றவர்கள் எழுதியிருக்கும் திருவாசக ஆராய்ச்சி நூல்களைப் போல இது அமைந்திராது. படிப்பவர்களுக்குப் புதிய சிந்தனைகளை உண்டாக்கக்கூடிய ஆய்வு நூலாக இருக்கும்''

இவர் இப்போது ஆய்வு அரங்கங்கள், தமிழ்த் தொடர்புள்ள கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்வதில்லை. உதவியாளருடன் சென்று பேசிவிட்டு வருவது தொல்லையாக இருப்பது மட்டுமின்றி வயதாகிவிட்டதும் மற்றொரு காரணம்.

ஆனால் ஆண்டுதோறும் சேக்கிழார் விழாவை மட்டும் இவர் சிறப்பாக நடத்தி வருகிறார். ''சேக்கிழாரிடம் எனக்கு ஏற்பட்டுள்ள ஈடுபாடு சிறுவயதிலிருந்தே ஊறிப்போன ஓர் உற்சாக உணர்வு. என் தந்தையின் காலத்திலிருந்தே அவரிடம் நான் சேக்கிழாரைப்பற்றிக் கேட்டறிந்த வரலாறுகள் என்னைப் பெரியளவில் ஈடுபாடு கொள்ளக் காரணமாக அமைந்திருக்கின்றன. எனவே என் வயதான தளர்வையும் பொருட்படுத்தாமல் சேக்கிழார் விழாவை நடத்தி வருகிறேன்'' என்று கூறும் அ.ச.ஞானசம்பந்தம் மேலும் குறிப்பிட்டார்.

''கண் பார்வை இல்லையே என்ற குறை என்னிடம் கறையாகப் படிந்து விடவில்லை. மற்ற சக்திகள் என்னிடம் மிகுந்து இருப்பதால் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகள் எவ்வித இடையூறுமின்றி நடைபெற்று வருகின்றன. என்னைச் சுற்றி உதவும் உள்ளம் படைத்தவர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள். பார்வை போனால் என்ன, பாசம் மிகுந்தவர்கள் உதவி வருகிறார்களே?'' என்கிறார். பெரிய புராணத்துக்குப் பெருமை சேர்த்த இந்தப் பெரியவர்.
 


 
http://www.ambalam.com/issues/catb/2000/may/catb28_01.html

StumbleUpon.com Read more...

'உலக அதிசயங்களைப் பட்டியலிட முடியுமா?'

உலக அதிசயங்கள்
'உலக அதிசயங்களைப் பட்டியலிட முடியுமா?'

இப்படி ஒரு கேள்விக்கணை உங்களைத் தாக்கியதுண்டா?

ஒருவேளை, சரியான விடை தெரியவில்லை என்றால் வருத்தப்பட வேண்டாம்.

உங்களுக்கு மட்டுமல்ல; இன்று நம்மில் பெரும்பாலோர் இந்த கேள்விக்கான விடையைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. காரணம் - உலக அதிசயங்கள் என்பவை, 'இவை'தான் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறிவிட முடியாத நிலை.

இந்தியாவின் மிக முக்கிய வரலாற்றுச் சின்னமான தாஜ்மகால், அண்டைநாடான சீனாவில் உள்ள சீனத்துப் பெருஞ்சுவர்... இப்படிச் சிலவற்றையும் உலக அதிசயங்கள் எனக் குறிப்பிடுகின்றனர். இதுபோக..., தற்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 'பெட்ரோனாஸ்' இரட்டை கோபுரம் முதல், அரபு தேசத்து சுயஸ் கால்வாய்வரை... இன்னும் சிலவற்றையும்கூட உலக அதிசயமாகக் குறிப்பிடுகிறார்கள். இதை 'தவறு' என்று முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளிவிடமுடியவில்லை.

என்றாலும், பெரும்பாலோரால் உலக அதிசயங்களாக ஏற்றுக்கொள்ளப்படுபவை,  நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் வரலாற்று ஆசிரியர்களால் பட்டியலிடப்பட்டுக் கூறப்படுபவைதான். வரலாற்று ஆசிரியர்களிடையேயும் பல்வேறு கருத்துகள். உலக வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த வெவ்வேறு நபர்கள் அந்தந்தக் காலத்தைப் பொறுத்து உலக அதிசயங்களின் பட்டியலைத் தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இதில், ஒன்று மற்றொன்றுடன் மாறுபட்டு - ஒருசில விடுபட்டோ..., வேறுசில புதிதாகச் சேர்க்கப்பட்டோ பட்டியலாகியுள்ளன.

வரலாற்று நிகழ்வுகளை அடையாளங்காட்ட அளவுகோலாக இன்றைக்குப் பயன்படுத்தப்படும் - ஏசு கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பிருந்தே, உலக அதிசயங்கள் பற்றி மக்கள் பேச, கருத்துச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள் எனத்தெரிகிறது.

ஏசு பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே உலக அதிசயம் உருவாகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலம்தொட்டு, இன்றுவரை உள்ள எல்லா வரலாற்று ஆசிரியர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலக அதிசயமும் உண்டு. கருத்து மாறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அந்த அதிசயம் - எகிப்து நாட்டில் இன்றும் தலைநிமிர்ந்து நிற்கும் அந்த உன்னதப் பிரமிடு.

உலகின் மிகமிக மூத்த அதிசயம் - இந்தப் பிரமிடுதான். இது உருவானதாகச் சொல்லப்படும் கி.மு. 2590-ம் ஆண்டிலிருந்து, இன்றுவரை - அதாவது கிட்டத்தட்ட 4580 ஆண்டுகள் வயது கொண்டது இந்த அதிசயம். உருவான காலத்தை வைத்தும், மற்ற விஷயங்களிலும் இதற்கு இளையதான பல அதிசயங்களைத் தாண்டி இது இன்றும் தொடர்ந்து வருகிறது. காணக் கிடைக்காமல், மண்ணோடு மண்ணாகிப் போன இதன் இளைய அதிசயங்களுக்கு மாற்றாகத்தான் வேறு சிலவற்றை..., தன் கண்ணால் கண்டவற்றை பிற்காலத்து வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் பட்டியலில் சேர்த்தனர். இப்படி அந்தந்தக் காலத்தில் இடைவெளியை இட்டு நிரப்ப பலரும் முயன்றதில் உலக அதிசயங்களின் பட்டியலில் குழப்பங்களும் கருத்து வேறுபாடும் உருவானது.

பிரமிடு உருவான காலம் முதல் இன்றுவரை - ஏதேனும் ஒரு கால கட்டத்தில், உலக அதிசயமாகப் போற்றப்பட்ட பலவற்றைப் பற்றியும், முடிந்தவரை தகவல்கள் திரட்டப்பட்டு இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.


1.பண்டைய அதிசயங்கள்.

2. மறக்கப்பட்ட, இடைக்கால அதிசயங்கள்.


மேற்கண்ட இவ்விரண்டும் மனிதனால், அவனது அறிவு, கற்பனை, கலை நயம், படைப்பாற்றல் போன்றவற்றால் உருவாகி மற்றவர்களை வியக்க வைத்தவை.

இவற்றையும் தாண்டி மனித ஆற்றலுக்குப் போட்டியாக, இயற்கையாகவே உருவாகி மனிதனைப் புல்லரிக்கச் செய்த அதிசயங்களும் உண்டு.
 

தொகுப்பு:சந்திரன்


  
 
 
  
http://www.ambalam.com/essay/wonder/introduction.html

StumbleUpon.com Read more...

ஒரிசா: வி.ஹெச்.பி. தலைவர்கள் படுகொலை

ஒரிசா: வி.ஹெச்.பி. தலைவர்கள் படுகொலை
ஒரிசாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.

கந்த்மால் மாவட்டம், புல்பானி என்ற இடத்தில் ஜலேஷ்பதா ஆஸ்ரமம் உள்ளது. இங்கு நேற்று நடந்த கோகுலாஷ்டமி பண்டிகை கொண்டாட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஸ்வாமி லட்சுமானந்த சரசுவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆஸ்ரமத்திற்குள் நுழைந்த 30 பேர் கொண்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அங்கு இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் முக்கியத் தலைவர்களான அரூபானந்தா, சின்மயானந்தா மற்றும் மாதாபக்தி மயி உள்ளிட்ட 5 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP