சமீபத்திய பதிவுகள்

முகமதுவின் செக்ஸ் பலம் (Muhammad's Sexual Prowess)

>> Wednesday, September 10, 2008

முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)




 

முகமதுவின் பாலியல் பலம்

(Muhammad's Sexual Prowess)

பாலியல்(செக்ஸ்) விஷயங்களில் முகமது ஒரு மனிதத் தன்மைக்கு மிஞ்சிய பலமுள்ளவர்(Superman) என்று இஸ்லாமிய பாரம்பரியம் தெரிவிக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். 'அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ் (ரலி) கூறினார்" என கதாதா அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பஇஸ்லாம்,அல்லா,குரான்,முகமது,செக்ஸ்,காமம்து மனைவியர் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது. (Sahih al-Bukhari: பாகம் 1, அத்தியாயம் 5, எண் 268).

இந்த பாரம்பரியங்கள் எப்படி நம்பத்தகுந்ததாகும்? கவனிக்கவும் - அந்த காலகட்டத்தில் முகமது 20 அல்லது 25 வயது இளைஞராக இல்லை - இந்த வயதினரால் கூட இது முடியாத காரியமாக இருக்கும் - தன்னுடைய ஒன்பது மனைவிகளையும் அவர் அடையும் போது அவர் சுமார் 60 வயதுடைய மனிதராக இருந்தார். மேலும் இந்த பாரம்பரியங்களின் படி இது ஏதோ ஒருமுறை நடந்த நிகழ்வு இல்லை இது முகமதுவின் வழக்கமான செயலாக இருந்ததாம்.

இந்த பாரம்பரியங்களை எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்று விளக்கமளிக்கும் மற்றொரு ஹதீஸ் இப்படிக் கூறுகிறது:

ஆயிஷா (ரலி) அறிவித்தார்

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள் (Sahih al-Bukhariபாகம் 6, அத்தியாயம் 76, எண் 5765)
.

முகமது உடலுறவில் ஈடுபடுவதாக கற்பனை செய்து கொண்டிருந்தார் என்று இந்த ஹதீஸ் கூறினாலும், உண்மையில் அவர் அப்படி செய்யவில்லை - முதலில் நாம் மேலே படித்த ஹதீஸ்களுக்கு இந்த ஹதீஸ் வர்ணணையா அல்லது விளக்கமா?

கவனிக்கவும் - மேலும் இந்த பாரம்பரியம் (முகமதுவின் விருப்பமான மனைவி மூலமாக கொடுக்கப்பட்டது), ஒரு தடவையல்ல தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வு என்று வலியுறுத்துகிறது.

முகமது பற்றியும், மற்றும் அவர் எப்படி இந்த சூன்யத்திற்கு கீழ் ஆட்கொள்ளப்பட்டார் என்பதை பற்றியும் விளக்கமாக அறிய கீழ் கண்ட அகராதி தொடுப்பில் சென்று படிக்கவும்: Muhammad and Satan.

தான் ஈடுபட்டதாக எண்ணிக் கொண்டிருந்த அநேக உடலுறவில் அவர் உண்மையில் ஈடுபடவில்லை என்றாலும், மேலேயுள்ள பாரம்பரியங்கள் முகமதுவின் மனதில் உடலுறவு(sex) முக்கியமான விஷயமாக இருந்தது என்பதற்கு பல ஆதாரப் பகுதிகளை வழங்குகிறது. பார்க்கவும்: Muhammad, Islam, and Sex.

இதன் விளைவுகள்:

இந்த சிறிய ஆய்வின் பயன் வெறும் முகமதுவின் செக்ஸ் வாழ்க்கையை பற்றிய விவரங்கள் மட்டுமே நமக்கு அறியத் தருகின்றன என்று இல்லாமல், அதற்கும் மேலாகச் சென்று அதிகமான விவரங்களை கொடுக்கின்றன. வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், 'ஆதாரப்பூர்வமான, மற்றும் நம்பத்தகுந்த உண்மையான" ஹதீஸ்கள் என்றழைக்கப்படும் இந்த ஹதீஸ்கள், முகமது ஏதோ ஒரு மாயையிலும், மனப்பிரம்மையிலும் பீடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கின்றன.

இதுவரை நாம் பார்த்த விவரங்கள் உண்மையென்றால், உடனே மற்றொரு கேள்வி எழும்புகிறது: இஸ்லாமியப் பாரம்பரியத்தின் இன்னும் எத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இந்த வகையைச் சார்ந்தவை?

இறையியல் மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கான இஸ்லாமுடைய பெரும்பாலான போதனைகள் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே முஸ்லீம்கள் தங்கள் நம்பிக்கையையும், வாழ்க்கையையும் முகமதுவின் ஏதோ மனப்பிரம்மை என்று சொல்லப்படுவதன் மீதுதான் கட்டிக்கொண்டிருக்கிறார்களோ?

முகம்மதுவின் மாயை அல்லது பிரம்மைதான் ஹதீஸ்களில் உண்மைகளாக தொகுக்கப்பட்டுள்ளது என்றால், இது குரானைக் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. மேலும் பலரும் ஏற்றுக்கொள்ளுகிறபடி 'காபிரியேல் தூதன் வந்தார், வெளிப்பாடு அவர் மூலம் கொண்டுவரப்பட்டது" என்பதெல்லாம் ஒரு புத்திமாறாட்டமுள்ள மனதின் படைப்புகளா! உண்மைக்குப் பதிலாக மாயைகளாக இருந்தவைகளா? (If it is established that Muhammad's illusions are narrated as facts in the hadiths, this also raises doubts in regard to the Qur'an. What if some or all of the alleged "visitations of the angel Gabriel" and the "revelations that were brought down" by him were creations of an unstable mind, and have really been an illusion instead of a fact?)

ஜோசன் கட்ஜ் (Jochen Katz)

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Muhammad/sex_superman.html


முகமது பற்றிய இதர கட்டுரைகள்

முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

Source: http://www.answering-islam.org/tamil/authors/jochenkatz/sex_superman.html
 

StumbleUpon.com Read more...

ஐக்கிய அரபு அமீரகங்களில் தினமலரின் இணைய தளம் தடை செய்யப் பட்டுள்ளது

[Dinamalar_blocked.jpg] 

StumbleUpon.com Read more...

முட்டை,சிக்கன்,மீன்,பிராந்தி,விநாயகருக்கு வழங்கி வழிபடும் மக்கள்

 

StumbleUpon.com Read more...

அமீரகத்தில் லேசான நிலநடுக்கம்

   
 
Image
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பகல் மூன்று மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் துபாய்,அபுதாபி, ஷார்ஜாமற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டது.
 
 
 
இதனையடுத்து பல்வேறு அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ரமலான் மாதம் ஆகையால் பல்வேறு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை
 
3 மணி வரையிலும், சில அலுவலகங்கள் ஆறு மணி நேரம் வேலைநேரத்திற்கு ஏற்ப செயல்படுவதால் மாலை 3 மணிக்கு முன்னரேமுடிந்து விடுகிறது.
 
 
 
இதன் காரணமாக பாதிப்பு குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை.

 

 

StumbleUpon.com Read more...

பூமிக்கு கீழே மிகபெரிய அணு சோதனை:"இன்று உலகம் அழியும் என்று யாரும் பீதி அடைய வேண்டாம்";விஞ்ஞானிகள் அறிவிப்பு

lankasri.comபூமியில் முதன் முதலில் ஏற்பட்ட பெரிய பிரளயம் காரணமாக உயிரினங்கள் தோன்றியதாக கருதப்படுகிறது. அவை பரிணாம வளர்ச்சி அடைந்து நிலத்தில் வாழும் உயிரினங்களும், நீரில் வாழும் உயிரினங்களும் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இது போன்ற செயற்கையான பிரளயத்தை ஏற்படுத்த ஐரோப்பிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

அதற்காக பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைப்பகுதியில், 300 அடி ஆழத்தில் ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நீள்வட்ட வடிவில் உள்ள அந்த நிலையத்தில் 85 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரம் அணு விஞ்ஞானிகள் (இயற்பியலாளர்கள்) பணியாற்றி வருகின்றனர். ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு முனைக்கும், அடுத்த முனைக்கும் இடையிலான தூரம் மட்டும் 27 கி.மீ.

கடந்த 1994-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சி திட்டத்தின் மொத்த செலவுத்தொகை ரூ.36 ஆயிரம் கோடி (8 பில்லியன் டாலர்). பெரிய தூண் போன்ற அளவில் உள்ள இரண்டு அணுக்களை மணிக்கு ஆயிரத்து 600 கி.மீ. வேகத்தில் மோதச்செய்து ஆராய்ச்சி நிலையத்துக்குள் பிரளயம் ஏற்படுத்துவதே இந்த ஆராய்ச்சியின் முக்கியப்பணி.

இதன் மூலம் ஏராளமான அணுக்கள் தோன்றி பரிணாம வளர்ச்சியின் முதல் கட்டம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக பெரிய உயிரினங்கள் எப்படி தோன்றுகின்றன என்று ஆராய்வதே இதன் நோக்கம். அதாவது, பூமிக்கு அடியில் மிகப்பெரிய அளவிலான அணுகுண்டு சோதனை நடத்தப்பட இருக்கிறது.

அணுக்களை மோதச்செய்யும் சோதனைக்கு விஞ்ஞானிகள் குறித்திருக்கும் நாள், இன்று (செப்டம்பர் 10). இந்த சோதனையால் நிலத்துக்கு மேலேயும் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையின் விளைவாக உலகமே அழிந்து விடும் என்றும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனவே, ரூ.36 ஆயிரம் கோடியை செலவு செய்து "ரிஸ்க்"கான ஆராய்ச்சி செய்வதை கைவிடுங்கள்' என்று எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் விஞ்ஞானிகள் மறுத்து விட்டனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "செப்டம்பர் 10, புதன்கிழமை (இன்று) அன்று பூமிக்கு கீழே அணு சோதனை நடத்துவதால், பேரழிவு ஏற்படாது. இதன் விளைவாக உலகம் அழிந்து விடும் என்ற கருத்தை யாரும் நம்ப தேவையில்லை. ஆராய்ச்சி நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதை, 2003-ம் ஆண்டிலேயே விஞ்ஞானிகள் குழு உறுதி செய்துள்ளது. சுருக்கமாக கூறினால், இந்த ஆராய்ச்சியால் மனித குலத்துக்கு ஏராளமான பயன்களே ஏற்படும். புற்று நோய் போன்ற சில முக்கிய வியாதிகளுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கலாம். வேறு சில கதிரியக்க பயன்களையும் பெற முடியும்'' என்கின்றனர்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1221034310&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

தீவிரவாதத் தாக்குதல் அச்சத்தில் அமெரிக்கா!

lankasri.comஅமெரிக்காவில் 2001-ம் ஆண்டு உலக வர்த்தக மையம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட அச்சம் அந்நாட்டு மக்கள் மத்தியில் இன்னும் அகலவில்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அணுகுண்டுகள் மற்றும் உயிரி ரசாயன ஆயுதங்கள் மூலம் தீவிரவாதிகளால் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படாலும் என்ற அச்சத்தில் அமெரிக்க மக்கள் மூழ்கி யிருப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

புஷ் நிர்வாகம் தவறிவிட்டது: நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் அதிபர் புஷ் தலைமையிலான நிர்வாகம் தவறவிட்டதே இதுபோன்ற நிலைக்குக் காரணம் என்றும் அந்த அறிக்கையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது மோசமான சூழ்நிலைக்கே வழிவகுக்கும் என்று அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் லீ ஹேமில்டன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்கு ஹேமில்டன்தான் தலைமை வகித்தார்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1221059524&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP