சமீபத்திய பதிவுகள்

ஆ‌ஸி. டெஸ்ட் தொடரில் சச்சின் விளையாடுவார்: பி.சி.சி.ஐ!

>> Tuesday, September 23, 2008

ஆ‌ஸி. டெஸ்ட் தொடரில் சச்சின் விளையாடுவார்: பி.சி.சி.ஐ!
lankasri.comஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம்பெறுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த சச்சின், இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம் பெற்றிருந்தாலும், முழங்கை காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகினார்.

இதனால், ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 9ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் சச்சின் பங்கேற்பது சந்தேகம் என கடந்த சனியன்று செய்திகள் வெளியானதால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சி.ஐ. செயலர் நிரஞ்சன் ஷா, காயம் குணமடைந்துவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் ஒரு வார காலம் ஓய்வெடுக்க வேண்டும் என அணியின் உடற்கூறு நிபுணர் வலியுறுத்தியதால் சச்சின் இரானி கோப்பையில் இருந்து விலகினார், எனினும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் (சச்சின்) நிச்சயம் பங்கேற்பார் என்றார்.

வதோதராவில் புதனன்று துவங்க உள்ள இரானி கோப்பை (5 நாள்) போட்டியில், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி, ரஞ்சிக் கோப்பை பட்டம் வென்ற மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது. இப்போட்டிக்கு பின்னரே ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான பெங்களூருவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்படுகிறது.
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1222101268&archive=&start_from=&ucat=4&

 

 
 

StumbleUpon.com Read more...

2010 உலகக் கோப்பை கால்பந்து : அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு

2010 உலகக் கோப்பை கால்பந்து : அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு
வரும் 2010ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் இன்று வெளியிடப்பட்டது.

'ஷாகுமி' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சின்னம் கையில் கால்பந்தை ஏந்தியிருக்கும் ஒரு இளம் சிறுத்தையாகும். இளமை, துடிப்பு, தன்னம்பிக்கை, உறுதி, விடாமுயற்சி ஆகியவற்றின் அடûயாளமாக ஷாகுமி விளங்குகிறது என உலகக்கோப்பை அமைப்புக் குழுவின் தலைவர் டேனி ஜோர்தான் தெரிவித்திருக்கிறார்.

 

 

StumbleUpon.com Read more...

http://www.islamexplained.com/


 
شيوخ الإسلام ينادون بقتل الفئران ومن ضمنها ميكي ماوس أيضا
غضب غربي من فتوى داعية سعودي بـ"قتل" ميكي ماوس
قال إنه يجوز قتله في "الحل والحرم"..
 
مسلم نيجيري يواجه خيار الإبقاء على 4 فقط من 86 زوجة أو الإعدام
طلب المجلس الأعلى للشؤون الاسلامية فى نيجيريا الخميس 21-8-2008 من رجل (84 عاما) متزوج من 86 امراة أنجب منهن 170 طفلا خفض عدد زوجاته إلى أربع زوجات أو مواجهة عقوبة الإعدام
 
عائلة أحد أبرز قيادات حماس في الضفة تعيش صدمة بعد اعتناق أحد أبنائها المسيحية
ربما يحتاج الفلسطينيون وقتا أطول، ليصدقوا أن حمساويا سابقا أصبح فجأة، يدين بالمسيحية، ويبشر بدينه الجديد ويهاجم السابق.
 
اليمن.. إيقاف 9 أشخاص تحولوا إلى المسيحية خلال 2008
العقوبة تصل إلى حد الإعدام
 
الشرق الأوسط تقول أن عائلة مصعب حسن يوسف تنفي خبر اعتناق ابنهم للمسيحية
نفت عائلة النائب الأسير حسن يوسف، القيادي في حركة حماس، صحة الأنباء عن اعتناق ابنها مصعب حسن يوسف
 
نجل القيادي الحمساوي حسن يوسف يغير دينه من مسلم الى مسيحي
كشفت صحيفة هآرتس العبرية ان نجل القيادي الحمساوي حسن يوسف واسمه مصعب قد غيّر دينه من مسلم الى مسيحي.
 
مأذون جدة: يمكن الزواج برضيعة والدخول بها في التاسعة

تزايدت النقاشات داخل منتديات الدردشة الإلكترونية حول رأي مأذون مدينة جدة السعودية الشرعي أحمد المعبي بشأن "إجازة الزواج برضيعة والدخول بها عندما تبلغ التاسعة من العمر."

 
اجابتي على تعليقات المشاركين في الموقع
في تقييم عدد الطبقات في الديانة الزردشتية ، الباحثون لا يعتمدون على مرجع زردشتي واحد . فهناك ذكر لمنطقة البحر السماوي التي تحوي شجرة سدرة المنتهى حيث يعيش عدد كبير من النفوس الزردشتية التي انتقلت من الارض للسماء ويعبدون هناك النجم تستريا الذي يترائى عند تلك الشجرة العملاقة
  

تصفح الأرشيف

  

 
  

برامج
  

لقاء مع الدكتورة وفاء سلطان

لأول مرة نستضيف الدكتورة وفاء سلطان لنسمعها ونعرف أسباب تخليها عن الإسلام، ولماذا ثار العالم الإسلامي ضدها، وماهي الرسالة التي تود أن توصلها، وسنعطي فرصة لكل مشاهدي العالم العربي ليتواصلوا معها بأسئلة مباشرة.

  

حلقة الأخ كمال سليم
  

تسجيل للدكتور عبد السلام البلاجي

  

تسجيل للشيخ هيثم رباني

  

قناة الجزيرة تهاجم التبشير

  
http://www.islamexplained.com/

StumbleUpon.com Read more...

ஒரிஸ்ஸா வெள்ளம் : மீட்புப் பணிகளில் கடும் பாதிப்பு

ஒரிஸ்ஸா வெள்ளம் : மீட்புப் பணிகளில் கடும் பாதிப்பு
ஒரிஸ்ஸா மாநிலத்தில் மகாநதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ள அளவு சற்றே குறைந்தபோதிலும், ஆட்கள் மற்றும் படகுகளின் பற்றாக்குறை காரணமாக மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக, மகாநதியின் 61 கிளை நதிகளிலும் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், மற்ற ஆறுகளில் வெள்ள அளவு சற்று குறைந்துள்ளன.

கட்டாக், கேந்த்ரபாரா, ஜோகத் சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், மீட்புப் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் போதிய எண்ணிக்கையில் படகுகள் இல்லாத காரணத்தால், தொடர்ந்து மீட்புப் பணிகள் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

தேவாலய தாக்குதல்: கர்நாடகாவில் மத்திய குழு இன்று ஆய்வு

தேவாலய தாக்குதல்: கர்நாடகாவில் மத்திய குழு இன்று ஆய்வு
கர்நாடகாவில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தவதற்காக, மத்திய உள்துறை அமைச்சக உயர்மட்டக் குழு இன்று விரைகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் உத்தரவுபடி, உள்நாட்டு பாதுகாப்புக்கான சிறப்பு செய்லர் எம்.எல்.குமாவாத் தலைமையில் இந்தக் குழு பெங்களூர் வருகிறது.

குமாவத்துடன் இணைச் செயலர் ஏ.கே.யாதவும் இணைந்து, தலைமைச் செயலர் மற்றும் ஏனைய மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவர்.

கர்நாடகத்தில் மதமாற்றம் நடப்பதாக கூறி, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது மங்களூர், சிக்மகளூர், உடுப்பி, தும்கூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து கர்நாடக பாரதிய ஜனதா அரசுக்கு, மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது.

ஆயினும், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல் நேற்று முன்தினம் பெங்களூருக்கு பரவியது.

இதையடுத்து, நேற்று காலை அமைச்சரவை அவசர கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்தது. இதில், கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின், பெங்களூரில் பேராயர் பெர்னார்டு மோரஸை, அவரது இல்லத்தில் முதல்வர் எடியூரப்பா சந்தித்துப் பேசினார்.

அப்போது, மாநில அரசின் நடவடிக்கைகளில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக, பேராயர் பெர்னார்டு மோரஸ் தெரிவித்தார். அதற்கு, கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதல்வர் எடியூரப்பா உறுதியளித்தார்.
 
(மூலம் - வெப்துனியா)

 

 
 

StumbleUpon.com Read more...

முதல்வர் எடியூரப்பா,போப்பும்

http://broadband.indiatimes.com/videoshow/3513621.cms

StumbleUpon.com Read more...

DQStories-www.islamexplained.com

video-www.islamexplained.com

StumbleUpon.com Read more...

ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: தோனி முதலிடம்!

ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: தோனி முதலிடம்!
 
 
 
 
 
 
PTI Photo
FILE
ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) தரவரிசைப் பட்டியலில் இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது சிறப்பான ஆட்டம் மற்றும் செயல்பாட்டின் மூலம் இந்திய அணிக்கு தொடர் வெற்றியை அளித்தார். இதன் காரணமாக இலங்கை மண்ணில் முதன் முறையாக இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

இலங்கை ஒருநாள் தொடரில் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் தோனி 192 ரன் (சராசரி 48) குவித்துள்ளார். இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்தவரும் அவரே. இதன் மூலம் ஐ.சி.சி. ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தோனி 803 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக தென்ஆப்ரிக்காவின் கிரேம் ஸ்மித் 776 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்‌ட்ரேலியா வீரர் ரிக்கி பாண்டிங் 751 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

 

 

StumbleUpon.com Read more...

கர்நாடகா: தேவாலயங்கள் பாதுகாப்பு-மத்திய குழு ஆய்வு!

கர்நாடகா: தேவாலயங்கள் பாதுகாப்பு-மத்திய குழு ஆய்வு!
கர்நாடகாவில் தேவாலயங்களின் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதால், அவற்றின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்த குழு, கர்நாடகாவில் இன்று ஆய்வு நடத்தியது.

உள்துறை பாதுகாப்பு பிரிவின் சிறப்பு செயலர் எம்.எல்.குமவத் தலைமையிலான மத்திய குழு, தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அம்மாநில காவல்துறை அதிகாரிகளிடம் தகவல்களை திரட்டியது. ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, மத்திய குழு பதிலளிக்க மறுத்துவிட்டது.

கடந்த 14ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளான குலசேகரா தேவாலயம், மிலக்ரிஸ் தேவாலயம் ஆகியவற்றை உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் ஏ.கே.யாதவ் அடங்கிய மத்திய குழு இன்று பார்வையிட்டது. மேலும் பதட்டமான பகுதிகளில் உள்ள தேவாலயங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பையும் அவர்கள் ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஹுப்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, கர்நாடகாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஸ்திரமாக உள்ளதாக தெரிவித்தார்.

இங்கு (கர்நாடகா) பாதுகாப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பு அரசு, தொடர் குண்டு வெடிப்பால் அப்பாவி மக்களை பலிகொண்ட டெல்லியில் ஏன் இதுபோன்று பாதுகாப்பு சோதனை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

காஷ்மீர், டெல்லியில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான இந்து மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதால் தெருக்களில் அலைவதாக குறிப்பிட்ட எடியூரப்பா, அவர்களின் நலனுக்காக மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேட்டுள்ளார்.
http://tamil.webdunia.com/newsworld/news/national/0809/23/1080923067_1.htm

StumbleUpon.com Read more...

தேவாலயம் மீது தாக்குதல்: எடியூரப்பா ஆலோசனை!

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விவாதிப்பதற்காக, முதலமைச்சர் எடியூராப்பா தலைமையில் கர்நாடகா அமைச்சரவைக் கூட்டம் இன்று பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்துகிறது.

கர்நாடக மாநிலத்தில் கிறித்தவ தேவாலயங்கள் மீது கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கட்டாய மதமாற்றம் நடப்பதாகக் கூறி உடுப்பி, மங்களூரு ஆகிய இடங்களில் பஜ்ரங்தள் அமைப்பினர் தேவாலயங்கம் மீது தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தேவாலயம், மரியண்ணபாளையாவில் உள்ள தேவாலயம் ஆகியவற்றை விஷமிகள் நேற்று காலை தாக்கி சேதப்படுத்தினர்.

கர்நாடகாவில் கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இதுதொடர்பாக மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை கூடி அவசர ஆலோசனை நடத்துகிறது.

முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மத வன்முறைகள் ஏற்படாமல் தடுப்பது, தேவாலயங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
http://tamil.webdunia.com/newsworld/news/national/0809/22/1080922028_1.htm

StumbleUpon.com Read more...

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தலைமைத் தூதர், துப்பாக்கி முனையில் கடத்தல் கார் டிரைவர் சுட்டுக் கொலை


பாகிஸ்தானில்
ஆப்கானிஸ்தான் தலைமைத் தூதர், துப்பாக்கி முனையில் கடத்தல்
கார் டிரைவர் சுட்டுக் கொலை


இஸ்லாமாபாத், செப்.23-

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தலைமை தூதரை துப்பாக்கி முனையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். அவரது கார் டிரைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

டிரைவர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தலைமைத் தூதர் அப்துல் காலிக் பராகி. இவர், நேற்று வடமேற்கு நகரான பெஷாவர் அருகேயுள்ள உள்ள ஹயாபாத்தில் இருக்கும் தனது வீட்டில் இருந்து ஒரு தனியார் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, ஓரிடத்தில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத 3 பேர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறு பாராகியின் காரை வழிமறித்தனர். பின்னர், காரை ஓட்டி வந்த டிரைவரை அவர்கள் சுட்டுக் கொன்றனர்.

தூதர் கடத்தல்

அதன் பிறகு, அந்தக் காரில் 3 பேரும் திபுதிபுவென ஏறினார்கள். மின்னல் வேகத்தில் துப்பாக்கி முனையில் அங்கிருந்து பராகியை கடத்திச் சென்றனர்.

பெஷாவர்-இஸ்லாமாபாத் நகரங்களுக்கு இடையே அடிக்கடி பயணம் செய்யும் பராகி வழக்கமாக தனது பாதுகாப்பு வீரர்களுடன் செல்வது வழக்கம்.

ஆனால், நேற்று அவர் காரில் பயணம் செய்தபோது பாதுகாப்புக்கு வீரர்கள் யாரையும் உடன் அழைத்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தெரிந்து கொண்டு தீவிரவாதிகள் அவரை கடத்திச் சென்று விட்டனர்.

யாரும் பொறுப்பேற்கவில்லை

ஆப்கானிஸ்தான் தலைமைத் தூதர் கடத்தப்பட்டதை இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரக பொறுப்பு அதிகாரி மஞ்சூன் குலாப் உறுதி செய்தார். இதே போல் பாகிஸ்தான் உள்துறை மந்திரியும், பராகி கடத்தப்பட்டதை உறுதி செய்தார்.

அப்துல் காலித் பராகியை கடத்தியது யார் என்று தெரியவில்லை. அவரது கடத்தலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தான் தூதர் கடத்தப் பட்டதைத் தொடர்ந்து பெஷாவர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதே பகுதியில்தான் கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் தாரிக் அசிஸ்சுதின், தலீபான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=440284&disdate=9/23/2008

StumbleUpon.com Read more...

கிறிஸ்தவ ஆலயங்களை தாக்கினால் குண்டர் சட்டத்தில் கைது-கர்நாடக மந்திரி சபை முடிவு

 


பெங்களூர், செப்.23-

கிறிஸ்தவ ஆலயங்களை தாக்குவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கர்நாடக மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தாக்குதல்

கர்நாடகத்தில் மதமாற்றம் நடப்பதாக கூறி கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடந்தது. மங்களூர், சிக்மகளூர், உடுப்பி, தும்கூர் போன்ற மாவட்டங்களில் இந்த தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து கர்நாடக பா.ஜனதா அரசுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது.

ஆனாலும் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதான தாக்குதல் நேற்று முன்தினம் பெங்களூருக்கு பரவியது. இந்த தாக்குதலால் கர்நாடகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக விவாதிக்க நேற்று காலை மந்திரி சபை அவசர கூட்டம் முதல்-மந்திரி எடிïரப்பா தலைமையில் நடந்தது. கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பேராயர் கோபம்

மந்திரி சபை கூட்டம் முடிந்த பிறகு முதல்-மந்திரி எடிïரப்பா பெங்களூர் மறைமாவட்ட பேராயர் இல்லத்திற்கு சென்றார். பேராயர் பெர்னார்டு மோரசை சந்தித்து சமாதானம் செய்வதற்காக அவர் சென்றார். அதன்படி பேராயரை எடிïரப்பா சந்தித்தார். அப்போது போலீஸ் மந்திரி வி.எஸ்.ஆச்சாரியா, மந்திரி கட்டா சுப்பிரமணிய நாயுடு ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

முதல்-மந்திரியை பேராயர் பெர்னார்டு மோரஸ் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். ஆனால் முதல்-மந்திரி எடிïரப்பாவிடம் அவர் கடும் கோபம் அடைந்தார். வீட்டு வாசலில் நின்றபடியே எடிïரப்பாவிடம் பேராயர் கூறியதாவது:-

மனம் புண்பட்டு விட்டது

நீங்கள் எனது இல்லத்திற்கு வந்தற்காக நன்றி. நீங்கள் பதவி ஏற்றபோதும் இதே இல்லத்திற்கு வந்தீர்கள். அப்போது சிறுபான்மையின மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று என்னிடம் உறுதி அளித்தீர்கள். ஆனால் சமீப நாட்களாக கர்நாடகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களது மனம் மிகவும் புண்பட்டு உள்ளது. கிறிஸ்தவர்கள் அனைவரும் மனவேதனை அடைந்து உள்ளனர். இந்த வேதனைகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று கூட தெரியவில்லை.

தாக்குதலை தடுக்காமல் அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? உங்கள் அரசாங்கம் மீது எங்களுக்கு திருப்தி இல்லை.

இவ்வாறு பேராயர் பெர்னார்டு மோரஸ் கூறினார்.

அப்போது முதல்-மந்திரி எடிïரப்பா உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே கூறினார். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இருவரும் உள்ளே சென்றனர்.

அங்கு முதல்-மந்திரி எடிïரப்பாவுக்கு பேராயர் இளநீர் கொடுத்தார். அவர்கள் 20 நிமிடம் ஆலோசனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது பேராயர் பெர்னார்டு மோரஸ், எடிïரப்பாவிடம் சில கோரிக்கைகளை வைத்தார். அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எடிïரப்பா பதிலளித்தார்.

இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி எடிïரப்பா வெளியே வந்தார். அப்போது அவரது முகம் மிகவும் இறுக்கமாக காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து பேராயர் பெர்னார்டு மோரஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நம்பிக்கை

முதல்-மந்திரி எடிïரப்பாவுடன் பேசிய போது எனது முகத்தில் கோபம் இல்லை. மிகவும் வருத்தம் தொற்றி கொண்டு இருந்தது. இந்த வருத்தம் எனக்கு மட்டும் அல்ல. கர்நாடகத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரது முகத்திலும் உள்ளது. தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று முதல்-மந்திரி கூறியுள்ளார். அவரது உள்ளத்தில் நல்ல எண்ணம் ஏற்பட்டு இருப்பதை காட்டுகிறது. கிறிஸ்தவர்கள் இனியாவது பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு பேராயர் பெர்னார்டு மோரஸ் கூறினார்.

 
 

StumbleUpon.com Read more...

அணுகுண்டு தயாரிக்க ஈரான் அதிக ஆர்வம்:இஸ்ரேல் குற்றச்சாட்டு

lankasri.comஅணுகுண்டு தயாரிப்பதற்கு ஈரான் அதிக ஆர்வம் காட்டிவருவதாக இஸ்ரேல் இன்று குற்றம்சாட்டியது.அணுகுண்டு தயாரிக்க ஈரான் முயற்சிக்கக் கூடாது என பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடி அளிக்கப்பட்டுவருகிறது. எனினும் அந்நாடு இதற்கு மதிப்பளிக்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை பயனற்றதாக இருந்து வருகிறது.

ஈரான் இவ்வாறு நடந்து கொள்வது மேற்கத்திய நாடுகளிடம் கருத்துவேறுபாட்டை அதிகரித்துள்ளது என்று இஸ்ரேல் உளவுத் துறையின் தலைவர் யோஸி பைடாஸ் தெரிவித்தார்.

அணுகுண்டுகளை தயாரிக்கும் நோக்குடன் யுரேனியத்தை செறிவூட்டும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஈரான் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

உலகில் நமது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வலிமை யாருக்கும் இல்லை என்று ஈரான் கருதுகிறது. இதனால் அணுகுண்டு தயாரிப்பு என்ற இலக்கை நோக்கி அந்நாடு முனைப்புடன் செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1222097215&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

பாக்.,நட்சத்திர ஓட்டலில் 53பேரை பலி கொண்ட பயங்கரம்:துப்புத் தந்தால் ஒரு கோடி வெகுமதி

 
 
lankasri.comபயங்கரவாதம் என்ற புற்றுநோயை வேரோடு அழிப்போம் என, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் இரவு, லாரி நிறைய வெடிகுண்டுகளை ஏற்றி வந்த தற்கொலைப் படையினர், "மேரியாட்"என்ற ஐந்து நட்சத்திர ஓட்டல் மீது மோதியதில் 53பேர் உடல் சிதறி பலியாயினர்;270 பேர் படுகாயமடைந்தனர்.

ஐ.நா., பொது சபையில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா புறப்பட தயாராக இருந்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, "டிவி"யில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

எதற்கும் அஞ்சாத நாடு பாகிஸ்தான். பயங்கரவாதிகளின் இது போன்ற கோழைத்தனமான செயல்களுக்கெல்லாம் பயந்து விட மாட்டோம். பயங்கரவாதம் ஒரு தொற்றுநோய். புற்றுநோய் போன்ற இந்த பயங்கரவாதத்தை வேரோடு அழிப்போம். இதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். பயங்கரவாதிகளின் பயிற்சிக்களமாக பாகிஸ்தானை மாற்ற முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது.புனித ரம்ஜான் மாதத்தில் இது போன்ற நாசவேலையில் ஈடுபடுபவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது. பயங்கரவாதத்துக்கு என் மனைவி பெனசிர் புட்டோவும் பலியாகியுள்ளார். இதே போன்று ஏராளமானோர் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்துள்ளனர். உறவினர்களை இழந்தவர்களுக்கு என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். எங்கள் அரசு அவர்களை பாதுகாக்கும்.இவ்வாறு சர்தாரி பேசினார்.

பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ரெஹ்மான் மாலிக் கூறியதாவது:
அதிபராக பதவியேற்ற சர்தாரி, பாகிஸ்தான் பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் நேற்று உரையாற்றிக் கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. தற்கொலைப் படையினர் முதலில் பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்த வந்துள்ளனர். ஆனால், கடும் பாதுகாப்பு காரணமாக அவர்கள் மேரியாட் ஓட்டல் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பார்லிமென்ட் வளாகத்தில் அமைச்சர்களுக்காக சில கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக மணல், செங்கல் போன்றவற்றை லாரியில் ஏற்றி வருவது போல மணலுக்கு அடியில் வெடிமருந்தை ஏற்றி தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்த வந்துள்ளனர். மேரியாட் ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பால் சாலையில் 20 அடிக்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இங்கு வெடித்த குண்டு சத்தம் 30 கி.மீ., தொலைவுக்கு கேட்டுள்ளது. குண்டு வெடிப்பால் ஏற்பட்ட தீ விபத்தில் 290 அறைகளும் சேதமடைந்துள்ளன. ஜன்னல் கண்ணாடிகள் 100 மீட்டர் தூரத்துக்கு சிதறியுள்ளன.செக் நாட்டு தூதர் மற்றும் ஒரு அமெரிக்கர், ஜெர்மானியர் உட்பட 53 பேர் இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர். டென்மார்க், பிரிட்டன், சவுதி அரேபியா, ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்த 20 பேர் உட்பட 270 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இவ்வாறு ரெஹ்மான் மாலிக் கூறினார்.

பாகிஸ்தானில் ஜனநாயகத்தையும், பொருளாதாரத்தையும் சீர்குலைப்பதற்காகவே இத்தாக்குதல் நடந்துள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் கிலானி தெரிவித்துள்ளார்.குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பற்றி துப்புக் கொடுத்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் புஷ் உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் அல்-குவைதாவுக்கு தொடர்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP