சமீபத்திய பதிவுகள்

செய்தியும் 'பொய்'தியும்

>> Tuesday, September 30, 2008

   

1. இரயில்வே பட்ஜெட்டில் தென்மாவட்டப் புறக்கணிப்பைக் கண்டித்து போராட்டம் - டாக்டர் கிருஷ்ணசாமி

 

அடடே!... அட!!.....ஆமா!!!  இவரு ஒருத்தரு இருக்காருல்ல!?

 

2. அரசியல் கட்சிகளில் உள்ள ரவுடிகளை வெளியேற்ற வேண்டும் - தா.பாண்டியன்

 

அப்போ கட்சிகளையே களைக்கச் சொல்றீங்களா!?

 

3. காய்கறிகள் அதிகம் சாப்பிட்டால் 'ஸ்ட்ரோக்' வராது

 

ஆனா காய்கறி விலையைக் கேட்டா நிச்சயம் வரும்ங்க...

 

4. கற்பழித்த பெண்ணுக்கு வழங்க 7 லட்சம் இல்லை - மன்சூர் அலிகான்

 

லட்சியம் வேண்டுமானால் நிறைய உள்ளதாம்

 

5. ஒரு காலியிடத்துக்கு ஐந்து பேருக்கு பணி நியமன அழைப்பு விடப்படும்

 

ஏலம் கீலம் விடப்போறாகளோ!?

 

6. செக்ஸ் பற்றிய கிறிஸ்தவ தேவாலய வழிகாட்டி ஏடு

 

பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே! இவர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னித்தருளும். ஆமென்!

 

7. பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் பயங்கர குண்டு வெடிப்பு பலி 28 பேர்

 

அதென்ன! பாகிஸ்தானா? பாம்'கிஸ்தானா?

 

8. மேக்கப் உமன் எனக்கூறி அமெரிக்கா கூட்டிச் செல்ல முயன்ற நடிகை மீது புகார்

 

அரிதாரம் கலைந்துவிட்டதோ!?

 

9. குளத்தை ஆக்கிரமிப்புச் செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டு -  செய்தி

 

நல்லவேள அந்தம்மா மெரீனா பீச் பக்கம் வரல!

- பாரதி கல்யாண்

 
செய்தியும் 'பொய்'தியும்
http://www.adhikaalai.com/index.php?/en/?????????-???????/

StumbleUpon.com Read more...

பெண்கள் எடை குறைய தாய்ப்பால் கொடுங்கள்

     
 

 

 

Image`பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி மாதிரி' என்று சொல்வார்கள். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஏராளமான சக்தி தேவைப்படுவதால், சத்துள்ள உணவுகளை பெண்கள் சாப்பிடுவார்கள்.

Imageகர்ப்ப கால உணவு முறையால், தாயின் உடல் எடை அதிகரித்து விடுகிறது. இதனால் குழந்தை பெற்றவுடன் பெரும்பாலான பெண்கள், உடல் எடை குறைப்பிற்காக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது. `உடற்பயிற்சி எல்லாம் வேண்டாம், குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தாலே போதும்', பெண்கள் எடை குறைந்து மெலிதாக மாறி விடுவார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

தாய்ப்பால் மூலம் தாயின் உடலிலுள்ள பெரும்பாலான சக்தி வெளியேறுவதே இதற்கு காரணம். முதல் 14 வாரங்களுக்கு குழந்தைக்கு அதிக அளவு தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் கணிசமான அளவு எடையை இழக்கிறார்கள்.

தாய்ப்பால் அதிகம் அளிக்காத பெண்களுக்கு இந்த எடை இழப்பு ஏற்படுவது இல்லை. எனவே எடை இழக்க, பெண்கள் தாய்ப்பால் அளிப்பது நல்லது.

தொகுப்பு:-
திருமதி.சங்கீதா
வழக்கறிஞர்

http://www.adhikaalai.com/index.php?/en/??????????/????-????-/???????-???-?????-??????????-?????????

StumbleUpon.com Read more...

ஜோத்பூர் ஜாமுண்டா கோவில்;நெரிசலில் சிக்கி 179 பேர் பலி

அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
Imageராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மெக்ரன்கார் என்ற இடத்தில் புகழ் பெற்ற ஜாமுண்டா தேவி மலைக் கோவிலில் இன்று நடைபெற்ற நவராத்திரி விழாவில் நெரிசலில் சிக்கி 179 பேர் பலியானர்கள்.மேலும் 400 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
Imageராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மெக்ரன்கார் என்ற இடத்தில் புகழ் பெற்ற ஜாமுண்டா தேவி மலைக் கோவில் உள்ளது.புகழ் பெற்ற சுற்றுலா தலமான மெக்ரன்கார் கோட்டை அமைந்துள்ள மலையில் இந்த கோவில் இருக்கிறது.
இங்கு நவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். நாடு முழுவதும் வாழும் ராஜஸ்தான் மக்கள் குடும்பத்தோடு வந்து இந்த விழாவில் கலந்து கொள்வது வழக்கம்.
நவராத்திரியின் முதல் நாள் இன்று தொடங்கியதை அடுத்து ஜாமுண்டா தேவி கோவிலில் நேற்று இரவு சிறப்பு திருவிழா நடந்தது. இதில் ராஜஸ்தான் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டபக்தர்கள் கலந்து கொண்டனர். விடிய, விடிய திரு விழா நடந்தது.
இன்று அதிகாலை5.30 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கோவில் உள் வளாகத்துக்குள் சென்றனர். அந்த பாதை குறுகியதாக இருந்தது. முன் பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்து உள்ளே நுழைந்தனர்.
இதன் நுழைவு வாயில் பகுதியில் மதில் சுவர் உள்ளது. அதை உரசி தள்ளிபடி பக்தர்கள் சென்றனர். அப்போது பாரம் தாங்காமல் அந்த சுவர் இடிந்து விழுந்தது. இதனால் பீதி அடைந்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
இதை பார்த்த சிலர் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பி விட்டனர். இதனால் இன்னும் பீதி அதிகரித்தது.
அந்த இடத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு நெரிசலில் இருந்து தப்பிக்க முயன்றனர். இதனால் நெரிசல் மேலும் அதிகமாகியது. ஏராள மான பெண்களும், குழந்தைகளும் பக்தர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவர் களும் நெரிசலில் சிக்கி கொண்டனர். இதில் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு மற்றவர்கள் ஓடினார்கள்.
கீழே விழுந்தவர்கள் மிதி பட்டே செத்தனர். பலர் மூச்சுத் திணறி கீழே சாய்ந்தனர். அவர்களும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்த இடத்திலேயே பலியானார் கள். 250 பேர் காயம் அடைந்தனர். அங்கு ஒரே கூச்சலும் மரண ஓல முமாக இருந்தது. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் அலறி யடித்து அங்கும் இங்கும் ஓடி னார்கள்.
15 நிமிடத்துக்கு பிறகு நெரிசல் ஏற்பட்ட இடத்தில் நிலைமை சீரானது. உடனே போலீசாரும் பொதுமக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஜோத்பூரில் உள்ள மது ராதாஸ் ஆஸ்பத்திரி, மகாத்மா காந்தி ஆஸ்பத்திரி ஆகியவற்றில் சேர்க்கப் பட்டனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலும், சிகிச்சை பலன்னிறியும் மேலும் பலர் செத்தனர். இத்துடன் சாவு எண்ணிக்கை 170 ஆனது. சிகிச்சை பெறுப வர் களில் 26 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகளும், மருத்துவ குழுக்களும் விரைந் தனர். முதல்-மந்திரி வசந்தராஜே சிந்தியாவும் அங்கு விரைந்தார்.
மாநில உள்துறை மந்திரி குலாப்சர்த் கதாரியா கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். பாதுகாப்பு குறைபாடுகள் தான் நெரிசலுக்கு காரணமா என்று கேட்டதற்கு பதில் அளித்த அவர் "போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது'' என்றார்.
விபத்து ஏற்பட்டது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கோவிலில் ஏற்பட்ட நெரிசலுக்கு கோவில் சுவர் இடிந்தது தான் காரணம் என்று ஒரு தகவல் தெரிவித்தது.
ஆனால் பக்தர்கள் சிலர் கூறும்போது, "கோவிலில் வெடி குண்டு இருப்பதாக புரளி ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பயந்து ஓடியதால் நெரிசல் ஏற்பட்டது'' என்றனர். மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட தாக புரளி கிளம்பியதாகவும் சில பக்தர்கள் கூறினார்கள்.
மலைப்பாதையில் சென்ற போது சிலர் தவறி கீழே விழுந்ததாகவும் இதனால் தான் நெரிசல் ஏற்பட்டதாகவும் இன் னொரு தகவல் தெரிவிக் கிறது.
இந்தியாவில் கோவில் கூட்டங்களில் இதேபோல அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகின்றன.
மராட்டிய மாநிலத்தில் உள்ள கோவிலில் 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் நெரிசல் ஏற்பட்டு 265 பக்தர்கள் பலியானார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள நைனாதேவி மலைக் கோவிலில் நெரிசல் ஏற்பட்டு 130 பேர் பலியானார்கள். கடந்த ஜுலை மாதம் ஒரிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலில் நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலியானார்கள்.
நெரிசலில் சிக்கி உயிர் இழந்தவர்களில் பலர் உடலில் எந்த காயமும் இல்லை. அவர்கள் மூச்சு திணறியே இறந்திருப்பது தெரிந்தது.பலியானவர்களில் பெண்கள், குழந்தைகளே அதிகம் பேர் இருந்தனர்.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP