சமீபத்திய பதிவுகள்

உத்தபுரத்தில் உருவெடுக்கும் புதிய கலவரம்

>> Thursday, October 9, 2008

http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-09/pg3.phphttp://www.kumudam.com/magazine/Reporter/2008-10-09/pg3.php

 
 09.10.08  ஹாட் டாபிக்

தீண்டாமைச் சுவரை' அகற்றிய பிறகு உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறது என்று பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது, கோயில் சுவருக்கு வெள்ளையடிக்கும் சாதாரண விஷயத்தில் இரு சாதியினரிடையே பிரச்னை வெடித்து வெடிகுண்டு,  வீச்சரிவாள் என சகல ஆயுதங்களோடு ரணகளப்பட்டுக் கிடக்கிறது அந்த கிராமம்.  நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் கண்ணீர் புகைக் குண்டு வெடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றைக்கு போலீஸ் வளையத்தினுள் இருக்கிறது உத்தபுரம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது உத்தபுரம் கிராமம். இங்கு தலித், மூப்பர், தேவர், பிள்ளைமார், நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சாதியைச் சேர்ந்த இரண்டாயிரம் குடும்பத்தினர் வாழ்கிறார்கள். இதில் தலித்துகள்தான் மெஜாரிட்டி.  அடுத்து பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்தே உத்தபுரத்தில் கலவரமும் தொடர்கதையாக இருந்திருக்கிறது. 1948, 1964 ஆகிய ஆண்டுகளில் அங்கு சாதிக் கலவரம் நடந்திருக்கிறது. என்றாலும் உச்சகட்டமாக 1989-ம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்தில் தான் சுமார் எட்டுப் பேர் இறந்து போனார்கள். அப்போது போலீஸ் துப்பாக்கி சூடும் நடத்தியிருக்கிறது.

இதையடுத்துத்தான் தலித்துகளையும் மற்ற சாதியினரையும் பிரிக்கும் தடுப்புச்சுவர் கட்டப் பட்டது. இதனால் தலித்துகள் தங்கள் இடத்திற்கு ஊரைச் சுற்றிக்கொண்டு போகவேண்டிய நிலை. தடுப்புச்சுவர் கட்டப்பட்டு இருபது ஆண்டுகள் ஆன நிலையில், இந்தச் சுவரை `தீண்டாமைச்சுவர்' என சி.பி.எம். கட்சியினர் அடையாளம் காட்டினர். அதனைப் பார்வையிட சி.பி.எம். கட்சியின் அகில இந்திய செயலாளர் பிரகாஷ் காரத் வருகிறார் என்று அறிவித்தனர். உடனே உத்தபுரத்தைப் பரபரப்புப் பற்றிக்கொண்டது. 

இதனால் `அந்தச் சுவரை இடிக்கக்கூடாது' என்று பிள்ளைமார் சமூகத்தினர் ஊரை விட்டே வெளியேறி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவரின் பதினைந்து அடி அகலத்தை உடைத்து தலித்துகளுக்குப் பாதை உருவாக்கியது மாவட்ட நிர்வாகம். மலைக்குச் சென்ற பிள்ளைமார் சமுதாயத்தினர் பல்வேறு தரப்பினரின் சமாதானத்துக்குப் பின்னர் கிராமத்துக்குத் திரும்பினர்.

ஆனாலும் இருதரப்பினரின் பகை நீறுபூத்த நெருப்பாகப் புகைந்து கிடந்தது. இது அக்டோபர் முதல் தேதி மதியம் வெடித்தது. உத்தபுரத்தில் உள்ள முத்தாலம்மன் மாரியம்மன் கோயிலுக்கு வரும் 9, 10-ம் நாட்களில் குடமுழுக்கு நடத்த பிள்ளைமார் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஒன்றாம் தேதி மதியம் கோயிலின் சுவருக்கு வர்ணம் பூசி வெள்ளையடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தலித் வகுப்பைச் சேர்ந்த சிலர் அங்கு வந்து `இந்தச் சுவர் பொதுவான சுவர். எனவே நீங்கள் இந்தச் சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, இரு தரப்பினரிடையேயும் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதையடுத்து, அவர்கள் மோதலில் ஈடுபட்டார்கள்.  மோதலில் கற்களும் நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. ஜெலட்டின் குச்சிகளும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் வைத்து வீசப்பட்டன. அரிவாள், கம்பு ஆகியவற்றால் துரத்தித் துரத்தி ஒருவரையொருவர் தாக்கினர். இதனால் கலவரம் வெடித்தது.

தகவலறிந்ததும் போலீஸாரும் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்ல எச்சரித்தனர். ஆனால், அவர்கள் கட்டுப்படவில்லை. கலவரக்காரர்கள் வீசிய கற்கள் போலீஸாரையும் பதம் பார்த்தது.  போலீஸ் வாகனங்களும் நொறுங்கின. அதுமட்டுமில்லாமல் வீடுகளுக்குள் புகுந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் அங்கிருந்த பீரோ, டி.வி. களையும் சேதப்படுத்தினர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீஸார், கலவரத்தை ஒடுக்க கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகப்படுத்தினர். இதன் பின்னர் கலவரக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்தக் கலவரத்தில் மாணவன் அருள்முருகன் (வயது 16), வெள்ளைச்சாமி (வயது 60) உள்பட பதினைந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.  போலீஸ் கலவரக்காரர்களைப் பிடிக்க  முயன்றபோது, தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்கள் கிராமத்தில் இருந்து ஓடி மலைப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்தனர்.

சம்பவத்துக்கு மறுநாள் காலையில் நாம் உத்தபுரம் சென்றிருந்தோம். ஊரே காலியாகியிருந்தது. பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. கடைகள் மூடப்பட்டிருந்தன. உத்தபுரத்தில் நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். உத்தபுரம் வந்த காவல்துறை உயரதிகாரிகளுடன் வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்து ஆலோசனை நடத்தினர். காலையிலேயே அங்கு வந்திருந்த மதுரை மாவட்ட எஸ்.பி. மனோகரிடம் பேசினோம்.. "நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.

கிராமத்தை நாம் சுற்றி வந்தபோது வயதானவர் ஒருவர் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே எட்டிப்பார்க்க, நாம் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.. தயங்கித் தயங்கிப் பேசினார்.. "மாவட்ட நிர்வாகம் சுவரை இடித்து பாதை ஏற்படுத்தியதோடு சரி. அதன் பிறகு அதிகாரிகள் கிராமத்துப் பக்கம் வரவே இல்லை. அந்தப் பாதையை தலித்துகளும் மற்றவர்களும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் உறுதியாகச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை. அதனால் பாதை ஏற்பட்டதில் இருந்து பிரச்னைதான். அந்தப் பாதையில் தலித்துகள் நடந்து மட்டுமே போகலாம். டிராக்டரில் போகக்கூடாது என பிள்ளைமார் சமூகத்தினர் சொன்னார்கள். இதனால் பெரிய தகராறும் ஏற்பட்டது. அதுபோல  பிள்ளைமார் இடத்தை தலித்துகள் ஆக்கிரமிப்புச் செய்தது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு 178 பேர் மீது வழக்குப் பதிவு செய்து முப்பது பேர் கைது செய்யப்பட்டார்கள். கோயில் சுற்றுச் சுவர் யாருக்குச் சொந்தம் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. அதனால்தான் இப்போது  பிரச்னை வெடித்திருக்கிறது'' என்றார்.

கிராமத்தில் வெடிகுண்டு வீச்சு, டெட்டனேட்டர் வீச்சு போன்றவை காவல்துறையையே கொஞ்சம் அதிர வைத்திருக்கிறது. இவை அருகிலுள்ள  கிராமங்களில் இருந்துதான் சப்ளை ஆகிறது என்கிறார்கள்.  நடந்த கலவரத்தில் இரு தரப்பிலும் ஐநூற்று இருபது பேர் மீது வழக்குப் பதிவு செய்து 114 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஸீ ப. திருமலை
படங்கள் : ராமசாமி

http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-09/pg3.php

StumbleUpon.com Read more...

ஒத்திகை பார்த்து நடக்கிறது ஒரிசா காலவரம்!-நெஞ்சை உலுக்கும் நேரடித் தகவல்கள்

 

ரிசா கலவரத்தின் ஆரம்பப் புள்ளி ஒரு கொலைதான். லட்சுமணானந்தா சரஸ்வதி என்பவரை நக்சல் தீவிரவாதிகள் போட்டுத்தள்ள, இதற்காகவே காத்திருந்தது போல, சில மதவாத சக்திகள் அங்குள்ள பாணாஸ் என்ற கிறிஸ்துவப் பழங்குடி மக்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட, ஒட்டுமொத்த ஒரிசாவும் இன்றுவரைஆடிப்போய் நிற்கிறது. அந்தக் கலவரப் புயலின் `கண்' பகுதியாகக் கருதப்படும் இடம் கந்தமால் மாவட்டம்.

கலவரத்தால் கந்தர கோலமாகிக் கிடக்கும் கந்தமால் பகுதிக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அண்மையில் சென்று திரும்பியிருக்கிறது. தமிழகம் சார்பாக இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் இரண்டே பேர். ஒருவர் அ.மார்க்ஸ். மற்றவர் குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் இணைச்செயலர் வக்கீல் கே. கேசவன்.
நாம் வக்கீல் கேசவனைச் சந்தித்து அவரது ஒரிசா அனுபவங்களைக் கேட்டோம்.

``ஒரிசா மாநிலம் கந்தமால் பகுதிக்கு உண்மை அறியும் குழுவாக நாங்கள் சென்றோம். எங்கள் குழுவில் ஆந்திரா, கர்நாடகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் இடம்பெற்றிருந்தார்கள். ஒரிசாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேபரஞ்சன் சாரங்கியும் எங்களுடன் இணைந்து கொண்டார்.   வன்முறையால் நார்நாராகக் கிழிந்து போய்க் கிடந்த அந்தப் பகுதிகளில் கடந்த 20, 21 ஆகிய தேதிகளில்  நாங்கள் நேரடி ஆய்வு மேற்கொண்டு தகவல் திரட்டினோம்.

பாலிகுடா, பிரமானிகான், மிடியாகியா, புட்ருகியா, டாமிகியா, ஜகபாதூர், லேக்பாடி, ரெய்கியா, கட்டிவ்தியா உள்ளிட்ட பல பகுதிகளைப் பார்வையிட்டோம். இங்கே ஏறத்தாழ 40000 பேர் இருபது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் தாரங்கபாடி, ஜி.உதயகிரி ஆகிய முகாம்களுக்கு நாங்கள் சென்றபோது அங்கே பாதிக்கப்பட்டவர்களிடம்  உரையாட அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டார்கள். எனவே, சிறிது நேரம்தான் அந்த மக்களுடன் பேச முடிந்தது,  கண்களில் இன்னும் கலவர பயம் மிச்சம் இருக்க, அந்த மக்கள் எங்களிடம் வாய் திறக்கவே அஞ்சி நடுங்கினார்கள்.

குஜராத் கலவரத்தின்போது அங்கே பாதிக்கப்பட்டவர்களைச்  சந்தித்துப் பேச முதல்வர் நரேந்திர மோடி தடைவிதிக்கவில்லை. ஆனால், ஒரிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் ஆட்சியோ மோடியின் ஆட்சியை விட மோசமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களிடம் நாங்கள் பேசக் கூடாது என ஒரிசா அதிகாரிகள்  அனுமதி மறுத்தது மனித உரிமை மீறலின் உச்சம்.

உதயகிரி முகாமைப் பார்த்தபோது நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். காரணம், அங்கே கடும்மழையால் ஏற்பட்ட சேறுசகதியின் நடுவே நிவாரணக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாதிப்புக்குள்ளான மக்ளுக்காக உணவு தயாரிக்கும் இடத்தின் அருகே பன்றிகளும் மற்ற விலங்குகளும் உலா வந்தபடி இருந்தன. `சேறும் சகதியுமான இடத்தில் ஏன் இப்படி நிவாரண முகாம்கள்?' என்று நிவாரண கமிஷனர் சத்தியபாரத சாகுவிடம் நாங்கள் போனில் கேட்டபோது, அவர் சொன்ன பதில் அதிர்ச்சி ரகம். `இவர்களை  அரசு கட்டடத்தில் தங்க வைப்பதை மற்ற சமுதாயத்தினர் விரும்ப மாட்டார்கள்' என்று கூறி அவர் எங்களை அதிர வைத்தார்.

அது மட்டுமல்ல. அந்த முகாம்களில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்களை சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் செல்லும்படி சிலர் மிரட்டுவதைப் பார்க்க முடிந்தது. பாதுகாப்புக்காக ஒதுங்கிய இடத்திலும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாத நிலை.  போலீஸாரோ இதை, கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

பாதிப்புக்குள்ளான கிராமங்களில் தெருவில் நடந்து செல்வோர் கூட எங்களிடம் பேசத் தயங்கினார்கள். அப்படிப் பேசினால்  போலீஸார் மூலம் தேவையில்லாத தொல்லை ஏற்படும் என்ற பயம் அவர்களுக்கு. அங்கே அரசியல்வாதிகளே கூட வாய் திறக்கப் பயப்படுவதுதான் அதிசயம். அந்தப் பகுதியைச் சேர்ந்த  ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. கூட இரவு நேரத்தில் காட்டுப் பகுதியில் எங்களைச் சந்தித்துத்தான் மனம்விட்டுப் பேச முடிந்தது.

மிரட்டலுக்குப் பயந்து முகாமை விட்டு ஊர் திரும்பும் மக்களின் நிலைமையோ இன்னும் வேதனை. மீண்டும் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். தாக்கியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் புகார் கொடுத்தாலும் போலீஸார் அதை ஏற்பதில்லை. அதையும் மீறி, தாக்கியவர்களின் பெயர்களை எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்ய வற்புறுத்தினால் `அந்த நபர்களை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?' என போலீஸார் பீதியைக் கிளப்புகிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது என்று கிராம மக்கள் அமைதியானவுடன் `அடையாளம் தெரியாத சிலர்'  என போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விடுகிறார்கள்.

முன்கூட்டியே நிகழ்ச்சி நிரல் போட்டது போல  `இன்று இந்த கிராமத்தைத் தாக்கப் போகிறோம்' என்று வன்முறையாளர்கள் சவால்விட்டுத் தாக்குதல் நடத்தும் சூழ்நிலை அங்கே உள்ளது. லேக்பாடி கிராமத்தை அப்படித்தான் சூறையாடி இருக்கிறார்கள்.  தாக்குதல் நடக்கப் போவது முன்கூட்டியே தெரிந்தும், போலீஸார் அங்கே எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கையைக் கட்டிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் நாற்பது சதவிகிதத்துக்கு மேல் வாழும் ரெய்கியா பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.

இந்த வன்முறைக்கு என்ன காரணம்? என்று நாங்கள் விசாரித்தோம். `இங்குள்ள காட்டுப் பகுதியில் `கிறிஸ்துவ பாணாஸ்' என்ற சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் இவர்கள் அங்குள்ள பழங்குடியினர் பேசும் `குயி' என்னும் மொழியைப் பேசுகிறார்கள். இவர்கள் கிறிஸ்துவ மதத்தவராக இருக்கும் நிலையில் `இவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம்' என அங்குள்ள ஐகோர்ட் கூறியது. கிறிஸ்துவர்களாக இவர்கள் இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு என்பதால்தான் கலவரம் வெடித்தது' என்பது மாதிரி  இந்து மதவாத அமைப்புகள் கூறிவருகின்றன. ஆனால் இதில் உண்மையில்லை என்பது எங்கள் விசாரணையில் தெரிய வந்தது.

குயி மொழி பேசும் பழங்குடிகளும், கிறிஸ்துவ பாணாஸ்களும் காட்டில் சென்று சேகரிக்கும் பொருட்களை உயர்சாதி விவசாயிகள் இதுநாள் வரை குறைந்த விலைக்கு வாங்கி ஏமாற்றி வந்தார்கள். நீண்டகாலமாக நாம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம்  என்பது ஒருகட்டத்தில் பழங்குடிகளுக்கும் கிறிஸ்துவ பாணாஸ்களுக்கும் உறைக்க, அவர்கள் தங்களது பொருட்களுக்கு நியாயமான விலை தரவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது உயர் சாதியினருக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்க, இனி இவர்களைப் பிரித்தால்தான் அவர்களது உற்பத்திப் பொருளை அடிமாட்டு விலைக்கு வாங்க முடியும் என்ற முடிவுக்கு உயர்சாதியினர் வந்திருக்கிறார்கள். அதன்  தொடர்ச்சியாகத்தான் அங்கே மதக்கலவரத்தைத் தூண்டிவிட அவர்கள் தருணம் பார்த்திருந்தார்கள். 

இந்த நேரத்தில் நடந்த லட்சுமணானந்தா சரஸ்வதி கொலை இந்தக் கலவரத்துக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. அந்தக் கொலையை மதவாத அமைப்புகள் சாதகமாகப்  பயன்படுத்திக் கொண்டன.  லட்சுமணானந்தா சரஸ்வதியின் இறுதி  ஊர்வலத்தை சுமார் நூற்றைம்பது கிலோ மீட்டர் தூரம் எடுத்துச் சென்று கலவரத்துக்கான பொறியை மதவாதிகள் தூண்டினார்கள். அந்த இறுதி ஊர்வலம் சென்ற வழிநெடுகிலும் பல இடங்களில்  பழங்குடியினர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 

`லட்சுமணானந்தாவை நாங்கள்தான் கொன்றோம்' என மாவோயிஸ்டுகள் அறிவித்த பிறகும் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் தொடர்வது அதிசயமாகவே இருக்கிறது. இதிலிருந்தே இது திட்டமிட்ட வன்முறை என்பது தெளிவாகிறது. ஏதோ திடீர் ஆத்திரத்தில் இந்த வன்முறை தொடங்கியதாகக் கூறமுடியாது. இந்த வன்முறைக்காக மதவாதிகள் காத்திருந்தார்கள் என்றுதான் கூறவேண்டும். அங்கு வன்முறையில் இறந்தவர்கள் இருபத்தொன்பது பேர்தான் என அரசு சொன்னாலும் கூட அங்கே கலவரச் சாவு எண்ணிக்கை ஐம்பதைத் தொடும் என அங்குள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். இதில் காணாமல் போனவர்கள் கணக்கு தனி.

ஒரிசாவைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே முதல்முறையாக 1967-ம் ஆண்டு அங்கு மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரிசா மாநிலத்தில் 95 சதவிகிதம் பேர் இந்துக்கள். இந்த சூழலை குஜராத் போல தனக்கு சாதகமாக மாற்றும்   முயற்சியில் முதல்வர் நவீன்பட்நாயக் ஈடுபட்டிருக்கிறார் என்றே கருதவேண்டியிருக்கிறது.

தற்போது, `மதத்தின் பெயரால் கலவரத்தை ஏற்படுத்துகிறவர்கள் லட்சுமணானந்தா போல தண்டிக்கப்படுவார்கள்' என மாவோயிஸ்டுகள் அறிவித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால், இது மாவோயிஸ்டுகளின் முதல் தாக்குதல். அத்துடன்  `இது தொடரும்' என்றும் அவர்கள் மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், ஆதிவாசிகள் மற்றும் ஒவ்வொரு சமூகத்தினர் குறித்த தங்கள் நிலைப்பாட்டையும்  மாவோயிஸ்டுகள் அறிக்கை மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் ஒரிசாவில் வன்முறைக்கு ஆட்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை யார் வேண்டுமானாலும் தடையின்றிப் பார்த்துப் பேச அனுமதிக்க வேண்டும்.  அப்போதுதான் வெளியில் இருந்து வரும் நிவாரண உதவிகள் அவர்களுக்குக் கிடைக்கும். அதுபோல தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் தரும் புகார்களை போலீஸார் உடனடியாகப் பதிவு செய்யவேண்டும். எஃப்.ஐ.ஆரில் குற்றவாளிகளின்  பெயரையும்  எழுதவேண்டும். அதுமட்டுமில்லாமல், காவல்துறை பாரபட்சமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். இவைதான் எங்கள் பரிந்துரைகள். ஒரிசாவில் அமைதி திரும்பும் அந்த நல்ல நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்'' என்றார் கேசவன்.

மத்திய அரசு, தற்போது ஒரிசாவின் நவீன் பட்நாயக் அரசுக்கு அபாய மணி அடித்துவிட்ட நிலையில், இனியாவது அங்கே அமைதி திரும்பாதா என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. அந்த நாளும் வந்திடாதோ?

ஸீ ப. திருமலை
படங்கள்: ராமசாமி

source: http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-12/pg3.php?type=Reporter

StumbleUpon.com Read more...

ரோஜர் பேகன்: மதக் கூடத்தில் ஒரு மதி ஒளி

புகழ்பெற்ற மனிதர்கள்-3 - ரோஜர் பேகன்:
மதக் கூடத்தில் ஒரு மதி ஒளி - கு.வெ.கி. ஆசான்

 

இங்கிலாந்து வரலாற்றில் புகழ்பெற்ற இருவரின் பெயர்கள் பேகன் (Bacon) என முடிகின்றன. ஒருவர் ரோஜர் பேகன்; வரலாற்றின் இடைக்காலத்தில் வாழ்ந்தவர். இரண்டாமவர், சர்.ஃபிரான்சிஸ் பேகன்; நவீன வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந் தவர். இருவருமே அறிவியல் வளர்ச்சிக்குத் தொடக்கம் செய்த வித்தகர்கள் ஆவர்.

படிப்பு - பணி

இங்கிலாந்தில் சோமர்செட் எனும் பகுதியில் இல்செஸ்டர் எனும் இடத்தில் 1214 இல் பிறந்தவர், ரோஜர் பேகன். இவருடைய பெற்றோர்கள் வசதியாக வாழ்ந்தார்கள். ஆனால், இங்கிலாந்து மன்னன் மூன்றாம் ஹென்றியின் காலத்தில் அக்குடும்பத்தின் சொத்துகள் குலைக்கப்பட்டன; பலர் வெளிநாடுகளில் குடியேறினர்.

தமது 13ஆவது வயதில் ரோஜர் பேகன் (Roger Bacon) மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்ற அவர், அங்கு ஆசிரியர் பணியை ஏற்றார். பின்பு, பாரிஸ் பல்கலைக் கழகத்தில் 1237 முதல் 1245 வரை ஆசிரியராக இருந்தார். அதற்குப் பின்பு பத்து ஆண்டுக் காலம் அவர் செய்த வேலையைக் குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை.

சந்நியாசி

படிப்பது, பரிசோதனைகள் செய்வது, எழுதுவது ஆகியவற்றில் ரோஜர் பேகனுக்கு இயல்பான ஈடுபட்டிருந்தது. அந்தக் காலத் தில், அவர் வாழ்ந்த 13 ஆம் நூற்றாண்டில், படிக்கவும், எழுதவும் சாதகமான இடம் துறவிகள் வாழ்ந்த மடாலயங்கள் ஆகும். அதன் காரணமாகவோ, என்னவோ ரோஜர் பேகன் 1256 ஆம் ஆண்டு வாக்கில், கிறிஸ்தவ மதத்தில் உள்ள, ஃபிரான்சிஸ்கான் பிரிவைச் சேர்ந்த சந்நியாசி (Franciscan monk or friar) ஆனார்.

வித்தியாசமானவர்

அதே நேரத்தில் மற்ற சந்நியாசிகளைப் போல் அல்லாமல் ரோஜர் பேகன் வித்தியாசமாக நடந்து கொண்டார். பழைய நூல்களைப் படித்து, அவற்றை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வில்லை; பழைய முறையி லேயே சிந்திக்கவில்லை. நடைமுறை வாழ்வுக்கு அவை ஒத்துப்போகின்றனவா எனச் சிந்தித்தார். புதிய பரிசோதனைகள் செய்தார். ஒரு முறை வெடிமருந்துப் பரிசோதனை ஒன்றில், கிட்டத்தட்ட இவர் உயிருக்கே ஆபத்து நிகழ இருந்தது. இதை எல்லாம் கண்ட பிற துறவிகள், இவர் மதக் கொள்கைகளையும், துறவிகளுக்கான கட்டுப்பாட்டையும், மடங் களின் விதிகளையும் மீறுவதாகக் குற்றம் சுமத்தினார்கள். ஆகையால், இவர் நூல்களை எழுதக்கூடாது எனத் தடை விதித்தார்கள்.

இன்னல்கள் பல

தடையை நீக்கக் கோரி, ரோஜர் பேகன், போப் நாலாவது கிளிமண்ட் என்பவருக்கு வேண்டுகோள் விடுத்தார். மத இயலுக்குள் (theology), மெய் இயலின் (philosophy) இடம் எத்தகையது என்பது குறித்து விளக்கம் தருமாறு போப் பணித்தார். இவரும் அவ்வாறே செய்தார். ஆனால், போப் கிளிமண்ட் 1268 இல் மறைந்தார். இவருக்கு இருந்த பாதகமான சூழல் நீங்கவில்லை. நீண்ட காலம் தனிமையில் வைக்கப்பட்டார், பட்டினிக்கு ஆளானார், வன்முறைக்கு இலக்கானார், பிறருடன் இயல்பாகத் தொடர்புகொள்ள வழியில்லை, இவரைச் சுற்றிக் காவல் இருந்தவர்கள், இவர் எழுதியவற்றை வெளியாருக்குத் தெரிய விடவில்லை.

பரிசோதனை

முன்னோர் எழுதியவற்றை அடிப்படை உண்மைகளாக எடுத்துக்கொண்டு, அவற்றின் வழி சிந்திப்பதும், வாதிடுவதும் அவர் காலத்தில் இருந்த படிப்பாளிகளின் போக்கு ஆகும். இந்த முறைக்கு மாறாக, உற்று நோக்கியும், பரிசோ தனைகளைச் செய்தும் உண்மைகளை அறிய வேண்டும் என ரோஜர் பேகன் வலியுறுத்தினார்.

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நியூட்டன், ஒளிக்கற்றையைப் பட்டகத்தின் (prism) வழியே செலுத்தி நிறப் பிரிகையை (வண்ணச் சிதறலை) ஏற்படுத்தினார்; மற்றொரு பட்டகத் தின் வழியே அவற்றைச் செலுத்தி மீண்டும் வெண்மையான ஒளிக்கற்றையை வரச் செய்தார். இதே பரிசோதனையை, நியுட் டனுக்குச் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, நீர் நிரம்பிய கண்ணாடி டம்ளரைக் கொண்டு, ரோஜர் பேகன் செய்து காட்டினார்.

எழுத்துகள் தெரிவித்தன

பல மொழிகளைத் தெரிந்திருந்த ரோஜர் பேகன், விவிலியத்தையும், பிற நூல்களையும் அவற்றின் மூலமொழியில் படித்தார். தவறான மொழிபெயர்ப்புகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டினார். அவர் எழுதிய நூல்களில் ஒபஸ் மேஜஸ் (opus majus), ஒபஸ் மைனஸ் (opus minus), என்பவை குறிப்பிடத்தக்கவை. இவருடைய எழுத்துகள், பிற்காலக் கண்டு பிடிப்புகளை முன்கூட்டியே சொல் கின்றன : கப்பல்களைத் துடுப்புகளைக் கொண்டு உந்தாமல், எந்திரங்களைக் கொண்டு செலுத் தலாம்; பெரிய கப்பல்களை ஒரே மனிதன் வேகமாகச் செலுத்த முடியும். எந்த விலங் கையும் பூட்டி ஓட்டாமல் தானாக ஓடும் வண்டி களைச் செய்ய முடியும், அவற்றில் நிறையப் பேரை ஏற்றிச் செல்ல இயலும். அவை மிக வேகத்தில் ஓடும். பறக்கும் எந்திரங்களைச் செய்யலாம், மையத்தில் ஒருவர் அமர்ந்து கொண்டு, செயற்கை இறக்கைகளை இயக்கிப் பறந்து செல்லலாம், என எழுதியுள்ளார்.

கணக்குப் பாடம்

பார்வை, மற்றும் ஒளியைப் பற்றி, (optics) அறிவியல் முறையில் சோதனை செய்து, தாம் அறிந்ததையும் அரேபிய விஞ்ஞானிகள் எழுதியதையும் சேர்த்து விளக்கி எழுதினார், ரோஜர் பேகன். அனைவரும் கணக்குப் பாடத்தை நன்கு கற்கவேண்டும் என்றார். எல்லா அறிவியல்களுக்கும், நுழை வாயிலாகவும், திறவுகோலாகவும் இருப்பது கணக்கு, என எழுதினார்.

எண்பது ஆண்டுகள் வாழ்ந்து 1294 இல் மறைந்த ரோஜர் பேகன், இருண்டிருந்த மதக் கூடத்தில் ஒளியைப் பாய்ச்சினார். ஆனால், மற்றவர்களின் கண்கள் அந்த அறிவு ஒளியில் கூசின; ஆகையால், வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள்!
 

StumbleUpon.com Read more...

கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்:விஜயகாந்த் வற்புறுத்தல்

 
 
lankasri.comதே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.தமிழ்நாட்டில் சமீப காலமாக கிறிஸ்தவ மதத்தை சார்ந்த தேவாலயங்கள் சேதப்படுத்தப்படுவதும் கிறிஸ்துவ மக்கள் தாக்கப்படுவதும் இதுவரையில் இல்லாத,அதே நேரத்தில் கண்டிக்கத்தக்கச் செயல்களாகும்.

பலதரப்பட்ட மக்களும் ஒன்றுபட்டு காலம்காலமாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை அண்ணன் தம்பிகளாக, அக்காள்,தங்கைகளாக இன்றும் இருந்து வருகின்றனர்.

இந்த நல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் வகையில் சில சமூக விரோதிகள் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஒரிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முன் கூட்டியே நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சிறு தீப்பொறியாக இருந்த இந்த சம்பவங்கள் பெருந்தீயாக மாறியுள்ளதை நாம் பார்க்கிறோம்.

ஒரு தரப்பினரை ஆதரித்தால் மற்ற தரப்பினரின் வாக்குகள் போய்விடும் என்று அரசு, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தக் கூடாது. யார் குற்றம் செய்தாலும் பாரபட்சமின்றி அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதே போன்று காவல் துறையினரும் நடுநிலையோடு இயங்க வேண்டியது அவசியம். அரசியல் தலையீடு காரணமாக காலம் தாழ்த்துவதோ அல்லது அப்பாவி மக்கள் மீது வழக்கு போடுவதோ கூடாது. காவல் துறையில் கறுப்பு ஆடுகள் இருந்தால் அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை முழு சுதந்திரத்தோடு செயல்பட அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவர் களும் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்ற உணர்வு, எல்லாதரப்பு மக்களுக்கும் ஏற்படும்.

தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் வகுப்புக் கலவரங்களுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்பது கடந்த கால நிகழ்ச்சிகளிலிருந்து தமிழ்நாடு அரசுக்குத் தெரியும். அத்தகைய இடங்களில் கோவில்களானாலும், மசூதி களானாலும்,தேவாலயங்களானாலும் அரசு முன் கூட்டியே பாதுகாப்பு அளித்திருந்தால் இத்தகைய சம்பவங்களை தடுத்திருக்க முடியும். அரசின் உளவுத்துறை எதிர்க்கட்சியினரை கண்காணிக்கப்பயன் படுத்தப்படுகிறதே தவிர, மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. உயிர் என்பது விலை மதிக்க முடியாது ஒன்று. குடும்பத் தலைவர் போய்விட்டால் குடும்பமே தெருவில் நிற்க வேண்டி வரும்.

மதம் என்பது அவரவரது நம்பிக்கையைப்பொருத்தது. யார் எந்த மதத்தை கடை பிடித்தாலும் அவர்கள் அனைவரும் சமாதானமாக வாழக் கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிப்பது அரசின் கடமையாகும். எல்லோரும் இந்தியர்கள் என்பது வெறும் முழக்கமாக இருக்கக் கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படவும், எந்த சாராரும் புறக்கணிக்கப்படவில்லை என்ற உணர்வு பெற சமவாய்ப்பு அளித்தும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டும் பன்மைச் சமுதாயமாக இயங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமாதானத்தை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் மீது தயவு தாட்சணியமின்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌



(Sura 2:238 is not complete according to Aisha)

மாலிக்கின் முவாட்டா (Malik's Muwatta, Book 8, Number 8.8.26: )

ஆயிஷா அவர்களிடமிருந்தும், அபூ யூனுஸ் மூலமாக, அல்-ககா இபின் ஹகீம் மூலமாக ஜையத் இபின் அஸ்லம் மூலமாக மாலிக் மூலமாக யஹ்யா மூலமாக எனக்கு அறிவிக்கப்பட்டது (Yahya related to me from Malik from Zayd ibn Aslam from al-Qaqa ibn Hakim that Abu Yunus, the mawla of A'isha,) உம்-அல்-மூமினீன் கூறியதாவது,

ஆயிஷா தனக்கு ஒரு குர்‍ஆன் எழுதித் தரும்படி எனக்கு ஆணையிட்டார்கள். மேலும் "தொழுகையையும் மதியத் தொழுகையையும் கவனமாக கடைபிடித்து அல்லாவுக்கு கீழ்படிவாயாக" என்ற ஆயத்தை நீ அடையும்போது எனக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள். நான் அதை எட்டியபோது ஆயிஷா அவர்களிடம் கூறினேன், அவர்கள், "தொழுகையையும் மதியத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் கவனமாக கடைபிடித்து அல்லாவுக்குக் கீழ்படிவாயாக" என்று ஒப்புவித்து, இப்படி எழுதும் படி கூறினார்கள். மற்றும் "நான் இதை அல்லாவின் தூதரிடமிருந்து கேட்டேன் அல்லா அவருக்கு சமாதானம் அருளுவானாக. என்று கூறினார்கள்."

மாலிக்கின் முவாட்டா (Malik's Muwatta, Book 8, Number 8.8.27)

அமர் இபின் ரபி மூலமாக ஜையத் இபின் அஸ்லம் மூலமாக, மாலிக் மூலமாக, யஹ்யா மூலமாக அறிவிக்கப்பட்டது(Yahya related to me from Malik from Zayd ibn Aslam that Amr ibn Rafi said)

நான், உம்-அல்-மூமினீன், ஹப்ஸாவிற்காக ஒரு குர்‍ஆன் எழுதிக் கொண்டிருந்தேன், அவர்கள் என்னிடம், நீ "தொழுகையையும் மதியத் தொழுகையையும் கவனமாக காத்துக்கொண்டு அல்லாவுக்கு கீழ்படிந்து இரு" என்ற‌ ஆயத்தை எட்டும்போது எனக்கு தெரியப்படுத்து, என்றுச் சொன்னார்கள். நான் அதை எட்டினபோது அவருக்கு அறிவித்தேன், அவர்கள். "தொழுகையையும் மதியத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் கவனமாகக் காத்து அல்லாவுக்கு கீழ்படிந்திரு." என்று ஒப்புவித்தார்கள்.

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Quran/Text/2.238.html
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP