சமீபத்திய பதிவுகள்

தசரா ஊர்வல மோதல் எதிரொலி 2 குழந்தைகள் உள்பட 6 பேர் எரித்துக்கொலை ஆந்திராவில் பதற்றம்

>> Sunday, October 12, 2008



அடிலாபாத், அக்.13-

ஆந்திர மாநிலத்தில் தசரா ஊர்வல மோதலை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. இதில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.

ஊரடங்கு உத்தரவு

ஆந்திர மாநிலம், அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பைய்ன்சா நகரில் கடந்த 10-ந்தேதி அன்று தசரா விழா ஊர்வலம் நடைபெற்றது. ஒரு வழிபாட்டு தலம் அருகே ஊர்வலம் சென்றபோது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து பைன்சா நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

6 பேர் எரித்துக்கொலை

இந்த மோதல் எதிரொலியாக, அடிலாபாத் மாவட்டம் ஒட்டோலி பகுதியில் நேற்று இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். கலவரம் நடைபெற்ற நிர்மல் மற்றும் ஆசிபாபாத் ஆகிய இடங்களில் நிலைமை தற்போது கட்டுக்கு அடங்கி இருந்தாலும் பைன்சா நகரில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது.

அங்கு நிலைமை சீரானதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். கலவரம் நடைபெற்ற இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட தலைநகரில் இருந்து கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு உள்ளது.

சி.பி.ஐ. விசாரணை

6 பேர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்ட ஆந்திர உள்துறை மந்திரி ஜனா ரெட்டி இந்த தகவலை தெரிவித்தார்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=444026&disdate=10/13/2008

StumbleUpon.com Read more...

பஜ்ரங்தளத்துக்கு தடை விதிக்கப்படுமா?தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதில்


 


புதுடெல்லி, அக்.13-

பஜ்ரங் தளத்துக்கு தடை விதிப்பது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் டி.வி. நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "பஜ்ரங் தளத்துக்கு தடை விதிக்கலாம். ஆனால் அதை தொடர்ந்து நீடிக்கும் வகையில் சட்டப்பூர்வமாக ஆக்க முடியாது. சிமி இயக்கத்துக்கு விதித்த தடையை போல் இதுவும் சட்டப்பூர்வமாக செல்லாது என்ற நிலை உருவாகலாம்'' என்று குறிப்பிட்டார்.

"பஜ்ரங் தளம், சிமி போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு திறமையான அணுகுமுறை அவசியம். ஏனென்றால் அடுத்தடுத்து அதன் கிளை அமைப்புகள் புதிதாக உருவாகலாம்'' என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த இரு அமைப்புகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களை போன்றது என்ற கருத்தையும் அவர் ஏற்க மறுத்தார்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=444041&disdate=10/13/2008

StumbleUpon.com Read more...

Fwd: இந்தியாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் போப் ஆண்டவர் வழங்கினார்



 


வாடிகன், அக்.13-

இந்தியாவைச் சேர்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு போப் ஆண்டவர் 16-ம் பெனடிக் நேற்று புனிதர் பட்டம் வழங்கினார். வாடிகனில் நேற்று நடந்த விழாவில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

1986-ல் தூயவர்

கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள குடமலூர் என்ற கிராமத்தில் ஜோசப்-மேரி தம்பதிக்கு மகளாக 1910-ம் ஆண்டு பிறந்தவர் அல்போன்சா. கத்தோலிக்க கன்னியாஸ்திரியாக தவ வாழ்க்கை மேற்கொண்ட அவர், பரநங்கனம் என்ற பகுதியில் பல்வேறு சமூக நலச் சேவைகளை செய்தார். உடல்நலக் குறைவு காரணமாக 1946-ம் ஆண்டு இறந்தார்.

இறந்த பின்பும், அவருடைய சமாதியில் ஜெபம் செய்தவர்களுக்கு பல அற்புதங்களை செய்ததாக நம்பப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, கடந்த 1986-ம் ஆண்டில் அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் இந்தியா வந்தபோது புனிதர் பட்டம் பெறுவதற்கு முதல்நிலை தகுதியான `தூயவர்' (ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்) பட்டத்தை அல்போன்சாவுக்கு வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, அல்போன்சாவுக்கு நேற்று `புனிதர்' பட்டம் வழங்கப்பட்டது.

4 பேருக்கு புனிதர் பட்டம்

இதற்காக வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் இந்திய நேரப்படி நேற்று மதியம் 12 மணிக்கு விழா தொடங்கியது. முதலில் லத்தீன் மொழியில் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்திய நேரப்படி 2.40 மணிக்கு அல்போன்சாவுக்கு `புனிதர்' பட்டம் வழங்குவதாக போப் ஆண்டவர் அறிவித்தார்.

அப்போது பைபிளில் உள்ள சில வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார். மேலும் அல்போன்சாவின் வாழ்க்கைக் குறிப்பையும் அவர் வாசித்தார். புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அல்போன்சா பெயரில் தேவாலயங்கள் தொடங்கலாம்.

அல்போன்சா தவிர இத்தாலியை சேர்ந்த கியாடெனோ எரிகோ, சுவிட்சர்லாந்தை சேர்ந்த மேரி பெர்னார்டு, ஈகுவடார் நாட்டை சேர்ந்த நார்சிசா டி ஜீசஸ் ஆகியோருக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. நான்கு பேரில், அல்போன்சாவுக்கு மூன்றாவதாக `புனிதர்' பட்டம் அளிக்கப்பட்டது.

மத்திய மந்திரி தலைமையில் குழு

இந்த விழாவில் இந்தியாவில் இருந்து கத்தோலிக்க பிஷப்புகள், கார்டினல்கள் உட்பட 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பாக மத்திய மந்திரி ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலைமையில் 15 பேர் குழு கலந்து கொண்டது.

புனிதர் பட்டம் அறிவித்தபோது, அல்போன்சாவின் புகழை துதிக்கும் பாடல்கள் அடங்கிய தொகுப்பை கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி செலியா போப் ஆண்டவரிடம் வழங்கினர். அப்போது அவருடன் வாடிகனுக்கு வந்திருந்த கேரளா குழுவினர் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்திக் கொண்டு இருந்தனர்.

கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு கண்டனம்

இந்த விழா முடிந்ததும் இந்திய குழுவினரை போப் ஆண்டவர் சந்தித்தார். அப்போது இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தார்.

அப்போது அவர், "இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் கடினமான தருணத்தில் உள்ள போதிலும், தங்களுடைய முதல் மகளை புனிதர் ஆக்கியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் அனைவரும், கடினமான தருணத்தில் இருந்து மீள வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை ஆகும். வன்முறையில் ஈடுபடும் அனைவரும் தங்களுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் சேர்ந்து அன்பு என்னும் நாகரீக வாழ்க்கையை கட்டமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

முன்னதாக கடந்த ஆகஸ்டு மாதத்தில் போப் ஆண்டவர் கண்டன அறிக்கை வெளியிட்டார் என்பதும், ரோமில் உள்ள இந்திய தூதரை இத்தாலி அரசு அழைத்து கண்டனம் தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் இந்திய பெண்மணி

உலகம் முழுவதும் 10 ஆயிரம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், `புனிதர்' பட்டம் பெற்று இருக்கின்றனர். ஆனால், இந்தியாவில் இருந்து `புனிதர்' பட்டம் பெற்ற இரண்டாவது நபர் அல்போன்சா ஆவார். அதே நேரத்தில், முதல் இந்திய பெண்மணி என்ற பெருமை அவரையே சேரும்.

முன்னதாக 1862-ம் ஆண்டில் மும்பையை சேர்ந்த புனித. கான்சலோ கார்சியா என்பவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. அவர் போர்த்துகீசிய தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர். மேலும், அல்பேனியாவில் பிறந்து இந்தியாவில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அன்னை தெரசாவுக்கும் புனிதர் பட்டத்துக்கு முந்தைய நிலையான `தூயவர்' பட்டம் கடந்த 2003-ம் ஆண்டில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

கேரளாவில் விழாக்கோலம்

அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை தொடர்ந்து கேரளா மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. அங்குள்ள தேவாலயங்கள் அனைத்திலும் மணிகள் ஒலித்தன. சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. பக்தர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

அல்போன்சா கன்னியாஸ்திரியாக பணியாற்றிய பரநங்கனம் பகுதியில் அவருடைய பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அங்குள்ள சிறிய தேவாலயம் மற்றும் பள்ளிகளில் அவர்கள் கூடினர். அந்த ஊரை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் அல்போன்சா படம் வைக்கப்பட்டு இருந்தது. அவருடைய சமாதியிலும் ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

நாகர்கோவிலில் நேரடி ஒளிபரப்பு

நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள தூய அல்போன்சா ஆலயத்தில் நேற்று கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் அல்போன்சா சிறப்பு நவ நாள் ஜெபம் நடந்தது. கூட்டு திருப்பலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது.

ஆலய வளாகத்தில் 2 டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு, வாடிகன் நகரில் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பு செய்யப்பட்டது.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=444029&disdate=10/13/2008

StumbleUpon.com Read more...

இந்தியாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் போப் ஆண்டவர் வழங்கினார்


வாடிகன், அக்.13-

இந்தியாவைச் சேர்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு போப் ஆண்டவர் 16-ம் பெனடிக் நேற்று புனிதர் பட்டம் வழங்கினார். வாடிகனில் நேற்று நடந்த விழாவில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

1986-ல் தூயவர்

கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள குடமலூர் என்ற கிராமத்தில் ஜோசப்-மேரி தம்பதிக்கு மகளாக 1910-ம் ஆண்டு பிறந்தவர் அல்போன்சா. கத்தோலிக்க கன்னியாஸ்திரியாக தவ வாழ்க்கை மேற்கொண்ட அவர், பரநங்கனம் என்ற பகுதியில் பல்வேறு சமூக நலச் சேவைகளை செய்தார். உடல்நலக் குறைவு காரணமாக 1946-ம் ஆண்டு இறந்தார்.

இறந்த பின்பும், அவருடைய சமாதியில் ஜெபம் செய்தவர்களுக்கு பல அற்புதங்களை செய்ததாக நம்பப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, கடந்த 1986-ம் ஆண்டில் அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் இந்தியா வந்தபோது புனிதர் பட்டம் பெறுவதற்கு முதல்நிலை தகுதியான `தூயவர்' (ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்) பட்டத்தை அல்போன்சாவுக்கு வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, அல்போன்சாவுக்கு நேற்று `புனிதர்' பட்டம் வழங்கப்பட்டது.

4 பேருக்கு புனிதர் பட்டம்

இதற்காக வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் இந்திய நேரப்படி நேற்று மதியம் 12 மணிக்கு விழா தொடங்கியது. முதலில் லத்தீன் மொழியில் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்திய நேரப்படி 2.40 மணிக்கு அல்போன்சாவுக்கு `புனிதர்' பட்டம் வழங்குவதாக போப் ஆண்டவர் அறிவித்தார்.

அப்போது பைபிளில் உள்ள சில வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார். மேலும் அல்போன்சாவின் வாழ்க்கைக் குறிப்பையும் அவர் வாசித்தார். புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அல்போன்சா பெயரில் தேவாலயங்கள் தொடங்கலாம்.

அல்போன்சா தவிர இத்தாலியை சேர்ந்த கியாடெனோ எரிகோ, சுவிட்சர்லாந்தை சேர்ந்த மேரி பெர்னார்டு, ஈகுவடார் நாட்டை சேர்ந்த நார்சிசா டி ஜீசஸ் ஆகியோருக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. நான்கு பேரில், அல்போன்சாவுக்கு மூன்றாவதாக `புனிதர்' பட்டம் அளிக்கப்பட்டது.

மத்திய மந்திரி தலைமையில் குழு

இந்த விழாவில் இந்தியாவில் இருந்து கத்தோலிக்க பிஷப்புகள், கார்டினல்கள் உட்பட 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பாக மத்திய மந்திரி ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலைமையில் 15 பேர் குழு கலந்து கொண்டது.

புனிதர் பட்டம் அறிவித்தபோது, அல்போன்சாவின் புகழை துதிக்கும் பாடல்கள் அடங்கிய தொகுப்பை கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி செலியா போப் ஆண்டவரிடம் வழங்கினர். அப்போது அவருடன் வாடிகனுக்கு வந்திருந்த கேரளா குழுவினர் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்திக் கொண்டு இருந்தனர்.

கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு கண்டனம்

இந்த விழா முடிந்ததும் இந்திய குழுவினரை போப் ஆண்டவர் சந்தித்தார். அப்போது இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தார்.

அப்போது அவர், "இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் கடினமான தருணத்தில் உள்ள போதிலும், தங்களுடைய முதல் மகளை புனிதர் ஆக்கியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் அனைவரும், கடினமான தருணத்தில் இருந்து மீள வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை ஆகும். வன்முறையில் ஈடுபடும் அனைவரும் தங்களுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் சேர்ந்து அன்பு என்னும் நாகரீக வாழ்க்கையை கட்டமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

முன்னதாக கடந்த ஆகஸ்டு மாதத்தில் போப் ஆண்டவர் கண்டன அறிக்கை வெளியிட்டார் என்பதும், ரோமில் உள்ள இந்திய தூதரை இத்தாலி அரசு அழைத்து கண்டனம் தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் இந்திய பெண்மணி

உலகம் முழுவதும் 10 ஆயிரம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், `புனிதர்' பட்டம் பெற்று இருக்கின்றனர். ஆனால், இந்தியாவில் இருந்து `புனிதர்' பட்டம் பெற்ற இரண்டாவது நபர் அல்போன்சா ஆவார். அதே நேரத்தில், முதல் இந்திய பெண்மணி என்ற பெருமை அவரையே சேரும்.

முன்னதாக 1862-ம் ஆண்டில் மும்பையை சேர்ந்த புனித. கான்சலோ கார்சியா என்பவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. அவர் போர்த்துகீசிய தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர். மேலும், அல்பேனியாவில் பிறந்து இந்தியாவில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அன்னை தெரசாவுக்கும் புனிதர் பட்டத்துக்கு முந்தைய நிலையான `தூயவர்' பட்டம் கடந்த 2003-ம் ஆண்டில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

கேரளாவில் விழாக்கோலம்

அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை தொடர்ந்து கேரளா மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. அங்குள்ள தேவாலயங்கள் அனைத்திலும் மணிகள் ஒலித்தன. சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. பக்தர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

அல்போன்சா கன்னியாஸ்திரியாக பணியாற்றிய பரநங்கனம் பகுதியில் அவருடைய பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அங்குள்ள சிறிய தேவாலயம் மற்றும் பள்ளிகளில் அவர்கள் கூடினர். அந்த ஊரை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் அல்போன்சா படம் வைக்கப்பட்டு இருந்தது. அவருடைய சமாதியிலும் ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

நாகர்கோவிலில் நேரடி ஒளிபரப்பு

நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள தூய அல்போன்சா ஆலயத்தில் நேற்று கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் அல்போன்சா சிறப்பு நவ நாள் ஜெபம் நடந்தது. கூட்டு திருப்பலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது.

ஆலய வளாகத்தில் 2 டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு, வாடிகன் நகரில் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பு செய்யப்பட்டது.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=444029&disdate=10/13/2008

StumbleUpon.com Read more...

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு 3 ஆயிரம் பேர் ஊரை விட்டு ஓட்டம்


ஈராக்கில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு
3 ஆயிரம் பேர் ஊரை விட்டு ஓட்டம்


பாக்தாத், அக்.13-

ஈராக்கில் உள்ள மோசூல் நகரில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து உள்ளது. இதனால் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கிறிஸ்தவர்கள் ஊரை விட்டு தப்பி ஓடினார்கள்.

கிறிஸ்தவர்களை கடத்தி பணம் பறிப்பது

ஈராக்கில் முஸ்லிம்கள்தான் அதிக அளவில் வசித்து வருகிற போதிலும், கிறிஸ்தவர்களும் கணிசமாக வசிக்கிறார்கள். ஈராக்கின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 60 லட்சம் ஆகும். அவர்களில் 3 சதவீதம் பேர் அதாவது 8 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். ஈராக்கின் வடபகுதியில் உள்ள நினேவா மாநிலத்தில் கணிசமாக கிறிஸ்தவர்கள் வசிக்கிறார்கள். இந்த மாநிலத்தில் உள்ளதும், ஈராக்கின் 3-வது பெரிய நகரமுமான மோசூலில் 1800 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் பல்வேறு வகையில் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார்கள். தொடக்கத்தில் கிறிஸ்தவர்களை கடத்தி அவர்களிடம் இருந்து பணம் சம்பாதித்து வந்தனர்.

இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களை கொலை செய்வது, அவர்களை விரட்டி அடித்து விட்டு அவர்களின் வசிப்பிடங்களை கைப்பற்றிக் கொள்வது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த செயல்களை அல்கொய்தா ஆதரவு பெற்ற சன்னி தீவிரவாதிகள் தான் செய்து வருகிறார்கள்.

குண்டு துளைக்கப்பட்ட உடல்கள்

மோசூல் நகரில் குண்டு துளைக்கப்பட்ட 7 கிறிஸ்தவர்களின் உடல்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் பற்றி மார் அப்ரம் சர்ச்சின் பங்குத்தந்தை பொலிஸ் ஜேக்கப் கூறுகையில், "கிறிஸ்தவர்கள் சமீபகாலமாக கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. எங்களை ஏன் தாக்குகிறார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் இஸ்லாமிய மதத்தையும், இஸ்லாமிய மதகுருக்களையும் மதிக்கிறோம்'' என்று குறிப்பிட்டார்.

தப்பி ஓட்டம்

மோசூல் நகரை கைப்பற்றுவதற்காக ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நடக்கும் யுத்தத்தை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது. இதனால் மோசூல் நகரை விட்டு கிறிஸ்தவர்கள் தப்பி ஓட்டம் பிடித்து உள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கிறிஸ்தவர்கள் மோசூலை விட்டு தப்பி ஓடினார்கள். இந்த தகவலை இந்த மாநில கவர்னர் முகமது கஷ்மூலா தெரிவித்தார். அவர்கள் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்து உள்ளனர். சிலர் பக்கத்து நகரங்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் புகுந்து உள்ளனர் என்றும் கவர்னர் தெரிவித்தார்.

பாதியாக குறைந்தது

மோசூல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ஜோசப் ஜேக்கப் கூறுகையில், "யுத்தத்துக்கு முன்பு அதாவது 2003-ம் ஆண்டுக்கு முன்பு மோசூலில் 20 ஆயிரம் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். இப்போது அவர்களில் பாதிப்பேர் கூட இப்போது மோசூலில் இல்லை'' என்று தெரிவிக்கிறார்.

இஸ்லாமிய தீவிரவாதிகள், நூர் பகுதியில் உள்ள என் வீட்டுக்கு வந்து ஊரை காலி செய்து விட்டு ஓடிவிடு என்று துப்பாக்கி முனையில் என்னை மிரட்டினார்கள் என்று பஷீர் அசோஸ் என்ற 45 வயது தச்சர் தெரிவித்தார். இதுபோன்ற குற்றங்களை பார்க்கும்போது, அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா? ராணுவம் எங்கே இருக்கிறது என்று கேட்கத்தோன்றுகிறது என்கிறார் பஷீர்.

அவர் ஊரை காலிசெய்து விட்டு அங்கு இருந்து 40 கி.மீ.தொலைவில் உள்ள குவார்கோஷ் நகரில் மனைவி, குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார். இந்த நகரம் கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக உள்ளதாகும்.

மோசூல் நகரில் கிறிஸ்தவர்கள் காலி செய்த வீடுகளை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்ததாக போலீசார் கூறினார்கள்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=444074&disdate=10/13/2008

StumbleUpon.com Read more...

ரவுடிப் படை-The rogue army


                  

விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.இ.ப) அதிரடைப் படையான 13லட்சம் தொண்டர்களைக் கொண்ட பஜ்ரங்தளம் இந்த வாரம் தனது 25 ஆண்டு விழாவை கொண்டாடுவிருக்கிறது. ஆனால் கொண்டாட்டங்கள் கடந்த மாதமே ஆரம்பமாகிவிட்டது என்று n;சால்லலாம். மெழுகுவர்த்திகள் கேக்குகளுக்குப் பதிலாக ஒரிசா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் சர்ச்சுகளுக்கு தீ வைத்தும் கிறிஸ்தவர்களை பீதிக்குள்ளாக்கியும் விழா கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்த வன்முறைப் போரையும் அடாவடித்தனத்தையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கண்டுகொள்ளாத நிலையில் மத்தியில் ஆளும் ஐ.மு.கூ அரசு கடுமையாக எச்சரித்தது. தே.ஜ.கூ- பா.ஜ.க ஆளும் ஒரிசா, கர்நாடகா, மற்றும் மத்தியப் பிரேதச அரசுகள் சர்ச்சுகளுக்கு எதிரான பஜ்ரங்தளத்தின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அரசியல் சாஸனம் 355 வது பிரிவின் கீழான அவசர அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டியிருக்கும் என்றது.

  இருந்தபோதிலும், கிறிஸ்தவர்களின் 4000 வீடுகளுக்கு தீ வைத்து 50, 000க்கும் அதிகமான கிறிஸ்தவர்களை துரத்தியடித்திருக்கும் பஜ்ரங் தளத்தின் தலைவர்கள் இதிலிருந்து பின்வாங்கும் மனநிலையில் இல்லை. 'மத்திய அரசுக்கு இந்த அமைப்பை தடை செய்யும் துணிச்சல் இருந்தால் அதற்கான விளைவை சந்திக்க வேண்டும்." என்றார் பா.ஜ.க வின் தீப்பொறி தலைவரும் பஜ்ரங் தளத்தின் நிறுவனவருமாகிய வினய் கட்டியார்.

   பஜ்ரங் தளம் தங்களை 'இந்துத்துவ புரட்சியின் போராளிகள்" என்று சொல்லிக் கொள்கிறது. பொதுத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ' கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு" 'புரட்சி" என்கிற புதிய வார்த்தைகள் இந்தப் பிரச்சினைக்கு வெடிக்கும் அரசியல் பரிமாணத்தை சேர்க்கிறது. இந்நத் தாக்குதல் குறித்து பா.ஜ.க பெரும்பாலும் அமைதி காக்கிறது.
 
Members at a protest in Delhi

 பஜ்ரங் தளம் தங்களது கனவான இந்து சமூகத்தை ஏற்படுத்த வலுவான பயிற்சி பெற்ற தீவிரவாத தாக்குதல் படையாக பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது. வாள், திரிசூலத்திலிருந்து துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகளை பயன்படுத்தும் வகையில் அது பயிற்சி பெற்றிருக்கிறது. சங்க்ப் பரிவாரின் போராட்ட அமைப்பாக 1946ல் வி.இ.ப உருவானது. இது 1984ல் கட்டியார் தலைமையில் அயோத்தி - லக்னோ ராமர் - ஜானகி யாத்திரைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பயங்கரவாத போக்கு கொண்ட இளைஞர்கள் குழுவை அமைத்தது. இந்தத் குழு பின்னர் பஜ்ரங் தளமாக (ஹனுமானின் படை) மாறியது. இந்தக் குழுவிடம் ஆரம்பத்தில் மூன்று பணிகளுக்கான பொறுப்பு அளிக்கப்பட்டது. ராம ஜென்ம பூமி (அயோத்தி) கிருஷ்ண ஜன்ம பூமி (மதுரா), காசி விஸ்வநாதர் கோவில் (வாரணாசி) ஆகியவற்றை விடுவிப்பது, கிறிஸ்தவ மிஷினிரிகளால் நடத்தப்படும் மதமாற்றத்தை றிறுத்துவது, பசுவதையை தடுக்கும் சட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசை நிர்பந்திப்பது ஆகியவைதான் அந்தப் பணிகள். ஆனால் அந்தப் பணிகளுக்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பட்டு சிறுபான்மையினருக்கு குறிப்பாக எதிராக தாக்குதல் நடத்துவதில்n கவனம் செலுத்தப்படுகிறது.


 இஸ்லாம் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாதத்தை முறியடிக்க பஜ்ரங் தளம் அதிதீவிர போக்குடன் நடந்துகொள்கிறது. அதன் உறுப்பினர்கள்ஸசிலர் குண்டுகள் தயாரிப்பது, நிழல் உலக நெட்வொர்க்கை உருவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ந் தேதியன்று கான்பூரில் தனியார் விடுதி ஒன்றில் வெடிகுண்டு தயாரிக்கையில் அது வெடித்து இரண்டு பேர் பலியானார்கள். அவர்களில் புபிந்தர் சிங் (32) என்பவன் கான்பூர் பஜ்ரங் தளத்தின் முன்னால் தலைவர் என்பதை போலீஸ் கண்டறிந்தது. இந்தச் சம்பவத்தால் மத்திய உள்துறை அமைச்சகம் இந்ந அமைப்பை தீவிரமாகn கண்காணிக்க வேண்டி நிலைக்கும் தள்ளப்பட்டது. உடனே பஜ்ரங் தளம் குண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் தங்கள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் அல்ல என்றது. 
  
 

A church on fire

இருந்தாலும் பஜ்ரங் தளத்;தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் 'சிமியை தடை செய்யும் போது பஜ்ரங் தளத்தை ஏன் தடை செய்யக் கூடாது" என்று கேட்கிறார். காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.  கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை சி.பி.ஐ(எம்) சி.பி.ஐ (எம், எல்), லோக் ஜனசக்தி கட்சியின் ராம விலாஸ் பாஸ்வான் ஆகியோரை பஜ்ரங் தளம் மற்றும் வி.இ.ப ஆகியவ தடை செய்யப்பட வேண்டும் என்று கோர வைத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கை குறித்து பஜ்ரங் தள தலைமை வெகுண்டெழுந்துள்ளது. ' எங்களை சிமியுடன் ஒப்பிட என்ன துணிச்சல் இருக்க வேண்டும்? நாங்கள் தேசியவாதிகள். அவர்கள் தேசவிரோத பயங்கரவாதிகள் " என்று ஆவேசப்படுகிறார் பஜ்ரங்தளத்தின் தேசிய கன்வீனர் பிரகாஷ் ஷர்மா.


   அனைந்திந்திய கத்தோலிக்க யூனியனின் மதிப்பீட்டின்படி ஒரிசாவில் இரண்டு பிராடஸ்டன்ட் மத குருக்களையும் சேர்த்து 37 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மத குருக்களும் கிறஸ்தவர்களாக மாறியவர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தெற்கிலும் இது பரவி பெங்களுருவிலும் சர்ச்சுகள் தாக்கப்பட்டிருக்கின்றன. கேரளாவி; இரண்டு தொன்மையான சர்ச்சுகள் தாக்கப்பட்டன. கர்நாடக முதல்வர் பி.எஸ் எடியூரப்பாவிடம் பெங்களுரு ஆர்ச் பிஷப் பெர்னார்டு மோரஸ் சர்ச்சுகள் மீதான தாக்குதலால் கிறிஸ்தவ சமூகத்தினர் 'மிகவும் காயம்பட்டிருப்பதாகவும்" 'மதத்தை பாதுகாக்க ரத்தம் சிந்தவும் தயார்" என்றும் சொன்னார்.

 அறிகுறிகள் பயங்கரமாகவே இருக்கின்றன. ஜி.உதய்கரி மற்றும் திகாபலி பகுதிகளில் செப்டம்பர் 29ந் தேதிக நடந்ந வன்முறையில் ஒரு பெண் பலியானார் ஏழு பேர் காயமடைந்தார்கள். அதற்கடுத்து மூன்று நிவாரண முகாம்களில் குண்டுகள் வெடித்தன. இதன் மூலம் அந்த சமுதாயத்தினருக்கு எதிராகவும் அவர்களை பழிவாங்கவும் பஜ்ரங் தளம் புதிய பயங்கரமான வியூகத்தை எடுத்திருக்கலாம் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது வகுப்புவாதம் தூண்டப்படுதற்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்தவே செய்யும். இத்தனை நான் இது ஜிகாதிகளின் வேலையாக மட்டுமே இருந்தது.

 

 நன்றி:இந்தியா டுடே
 
The rogue army

This week, the 1.3-million-strong Bajrang Dal, stormtroopers of the Vishwa Hindu Parishad (VHP), will celebrate their 25th anniversary.

In a sense, the celebrations had already begun in typical fashion last month, except, instead of candles and cake, it was torching of churches and terrorising Christians across Orissa, Karnataka and Madhya Pradesh-events that are more fitting to its calling and character.

The current anti-Christian crusade, often violent, always intimidating and brazen in the face of a lacklustre response from the states concerned, evoked a sharp reaction from the UPA Government.

The Centre warned the NDA-BJP ruled states of Orissa, Karnataka and Madhya Pradesh that emergency powers under Article 355 of the Constitution would be invoked if they failed to put a break on the outfit's current anti-Church campaign.

The official statement read: "The Government is very carefully and actively watching activities of Bajrang Dal and we will take appropriate action at appropriate time."

Fuelled by the "success" of their destructive crusade which has led to 4,000 homes belonging to Christians being razed and more than 50,000 forced to flee, the Bajrang Dal leaders have literally smelled blood and are in no mood to relent.

"If the Centre dared ban the organisation, it will be forced to lick the dust," said Vinay Katiyar, firebrand BJP leader and founder of the Bajrang Dal. For the Centre, already under pressure from Islamic terror groups, it's a tricky call.

Article 355 aims at protecting states from external aggression and internal disturbances but it gives the Government powers to impose President's rule if internal disturbances pose a serious threat to security. That point may have already come.

Members at a protest in Delhi
Members at a protest in Delhi
The spate of attacks on Christians in Orissa and Karnataka have continued unabated since August 23 and, last week saw a church being attacked in Tamil Nadu-the fourth state to witness the organisation's mindless carnage.

The Bajrang Dal call themselves "warriors of Hindutva revolution" and the fact that the new anti-Christian 'revolution' has come with general elections round the corner adds an explosive political dimension to the issue.

The BJP has largely been silent on the attacks which started in Orissa and then quickly swept through Madhya Pradesh, a state it rules, Kerala and Tamil Nadu.

The real danger is that the Bajrang Dal is pretty much a loose cannon, their extreme militancy fuelled by being largely rudderless and under the influence of fanatics like Katiyar, Praveen Togadia and its National Convenor Prakash Sharma, who declared that his organisation was prepared to do anything, sacrifice anything for the protection of Rashtra (nation) and Dharma (religion).

"We are Lord Hanuman's bhaktas. Remember what happened when Ravan had tried to ban him-his Lanka of gold was burnt down," says Sharma.

A church on fire
A church on fire
Such mythological parallels are part of the VHP youth wing's confused ideological mindset, which it uses to justify the periodic assaults by the powerful, trishul-wielding army trained in 'nationalism'.

They led the assault on the Babri Masjid and a group of their activists led by Dara Singh were convicted for the horrific murder of Australian missionary Graham Staines and his two minor children in 1999.

This incident happened in Keonjhar, Orissa, where the latest anti-missionary attacks have taken place. Since then, it acquired the title of 'rogue child of the VHP-RSS', which was reinforced by its open participation in the 2002 communal carnage in Gujarat.

In September 2003, the organisation was credited with cleansing a village named Mishroli in Rajasthan of its Muslim population and giving it a new tag of an "Ideal Hindu Village". Armed activists had driven nearly 25 Muslim families from their homes, ransacking their houses and setting them on fire.

Soon after, all the 70 Muslim families from seven villages in the Aklera area migrated to neighbouring districts and states. Such acts have added a new sinister meaning to its triple-S motto: "Seva, Suraksha, and Sanskriti" (service, security and culture).

The Bajrang Dal has evolved-if that is the right word-into a potent, militant strike force, trained in handling weapons ranging from trishul and swords to guns and bombs to operate as security squadrons for their vision of the Hindu Society.

 
 
 


                 

StumbleUpon.com Read more...

வீரமாமுனிவர்

 

FR CONSTANTINE JOSEPH BESCHI (VEERAMAAMUNIVAR)

வீரமாமுனிவர்
 

வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டன்டைன் Joseph பெஸ்கி என்பதாகும். அவர் 8.11.1680 அன்று இத்தாலியில் காஸ்திகிலியோன் என்ற இடத்தில் பிறந்தவர். 1709ல் சேசுசபைப் பாதிரியாரானபின் -1710ல் தமிழகத்துக்கு வந்தார். இவர் காவியம், பிரபந்தம், உரைநடை அகராதி, இலக்கணம், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். சதுரகராதி கொண்டு நிகண்டுக்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தவர். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.

கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிருத்துவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.

எனினும் இன்றைய கிருத்துவத் தமிழ் தனக்கென ஒரு வகை முறைமையை வகுத்துக் கொண்டு வழக்கில் இருக்கும் பேச்சுத் தமிழும் அல்லாத எழுத்துத் தமிழும் அல்லாத ஒரு வகைத் தமிழைக் கொண்டிருப்பது குறித்துக் கிருத்துவ நிறுவனங்கள் மறுமதிப்பீடு செய்தல் கிருத்துவத்துக்கும் தமிழுக்கும் நலன் பயக்கும் என்பது எனது கருத்து.

திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த ஹாஷ்ய இலக்கியம் என்பதைச் சொல்லத்தானாக வேண்டும்.

திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.

பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும்

வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்

முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும்

நகரினை ஒக்கும் வீடே


இந்தப் பாடல் ஜெருசலேம் நகரை வர்ணிக்கிறது. காப்பியத் தலைவர் வருணணை வளவனாரை வர்ணிக்கும் இந்தப் பாடலின் பாங்கில் வெளிப்படுகிறது.

அன்பு வைத்த உயிர்நிலை அ·திலார்க்

கென்பு தோலுடல் போர்த்ததென றன்புடை

இன்பு தோய்த்த நிலையெனத் தானிவன்

துன்பு காய்ந்த உயிர்த்துணை யினான்


ஒலிக்குறிப்புகளைத் தம் பாடலில் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.

வளனார் தேவத்தாயார் திருமணம் குறித்தது இந்தப் பாடல்.

முடுகு முரசொலி முடுகு முழவொலி

முடுகு முருகொலி முடிவிலாக்

கடுகு பறையொலி கடுகு கலமொலி

கடுகு கடலொலிக னிவெழாத்

தொடுகு குழலொளி கொடுகு குரலொலி

தொடுகு துதியொலி தொடுதலாற்

படுகு முகிலொலி படுகு கடலொலி

படுத லிலமண மாயதே.


எழுதியவர்: Dr.Ramani Naidu
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP