சமீபத்திய பதிவுகள்

இராக்கில் கார் குண்டு தாக்குதல்: 13 பேர் பலி, 21 பேர் காயம்

>> Sunday, October 26, 2008

lankasri.comஇராக் தலைநகர் பாக்தாதில் அமைச்சருடன் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

ஷியா வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் மஹ்மூத் முகமது அல்-ரதி மத்திய பாக்தாதில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரைக் குறிவைத்து அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது காரில் நிரப்பிக் கொண்டு வந்த வெடிகுண்டுகளை தீவிரவாதி வெடிக்கச் செய்தார்.

இதில் அமைச்சர் காயமின்றித் தப்பினார். எனினும், அவரது பாதுகாவலர்கள் 3 பேரும், பொதுமக்கள் 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஓராண்டாக இராக்கில் வன்முறை குறைந்து வந்த நிலையில், தற்போது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1224849904&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ஆப்கானில் ,இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

ஆப்கானில் கடும் நிலநடுக்கம்
 
lankasri.comஆப்கானிஸ்தானின் வடகிழக்கே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 5.6என பதிவானதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மலைகள் சூழ்ந்துள்ள ஆப்கனில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

2002ஆம் ஆண்டு இந்துகுஷ் மலைத்தொடரில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தின் விளைவாக சுமார் 1,500பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

 
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்
lankasri.comஇந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டேர் அளவுகோலில் இது 6.4ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை.

எனினும்,சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.

StumbleUpon.com Read more...

ஒரிசா சம்பவம்;போலீசார் முன்னிலையில் என்னை கற்பழித்தனர்:கன்னியாஸ்திரி பரபரப்பு புகார்

 
 
lankasri.comஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 25ந்தேதி நடந்த கலவரத்தின்போது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டார்.அவர் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறியதாவது:-நான் திவ்யஜோதி சமூக சேவை மையத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தேன்.

சம்பவத்தன்று 50-க் கும் மேற்பட்டோர் எங்கள் அலுவலகத்துக்குள் புகுந்து என்னை இழுத்து சென்றனர்.

முதலில் எனது கழுத்தை பிடித்து கோடாரியால் தலையை வெட்டுவதற்கு முயன்றனர்.ஆனால் பின்னர் மனதை மாற்றிக் கொண்டனர்.எனது பாதி ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக அழைத்து சென்றனர்.ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இப்படி இழுத்து சென்ற அவர்கள் வழிநெடுக அடித்து உதைத்தனர்.

அப்போது அந்த பாதையில் ஏராளமான போலீசார் நின்றனர்.அவர்கள் என்னை பாதுகாக்க முயற்சிக்கவில்லை.நான் போலீசாரிடம் கெஞ்சினேன். அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.என்னை இழுத்து சென்றவர்களிடம் போலீசார் நட்பாக பேசினார்கள்.பிறகு அவர்கள் என்னை கற்பழித்தனர்.போலீசார் நினைத்திருந்தால் இதை தடுத்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1224933500&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP