சமீபத்திய பதிவுகள்

சிறிலங்கா கடற்படை தாக்குதல்: புலிகள் முறியடித்தனர்!

>> Thursday, November 20, 2008

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் உள்ள கறுப்புமுனை நோக்கி சிறிலங்கா கடற்படையினரின் கமாண்டோ பிரிவினர் இன்று நடத்திய தாக்குதலை தமிழீவிடுதலைப் புலிகளின் கடற்புலிகள் படை முறியடித்துள்ளது. இதில் கடற்படையினரினபடகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இத்தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு கூறியிருப்பதாவது, "கறுப்புமுனை நோக்கி சிறிலங்கா கடற்படையின் கொமாண்டோக்கள் தமது நவீன அதிவேக ஆரபடகுகளிலும் நீருந்து விசைப்படகுகளிலும் வந்து தாக்குதல் நடவடிக்கையை இன்றசெவ்வாய்க்கிழமை காலை 6:15 நிமிடத்துக்கு நடத்தினர்.

இரண்டு நீருந்து விசைப்படகுகளும் 12 ஆரோப் படகுகளும் இத்தாக்குதல் நடவடிக்கையிலஈடுபட்டன. இந்நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்கா தரைப்படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்த, வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகள் ஆகியஇணைந்து தாக்குதலை நடத்தின. இதற்கு மத்தியில் கடற்புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.

கடற்புலிகளின் எதிர்த்தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் கொமாண்டோக்களபெருமஇழப்புக்களை சந்தித்துள்ளனர். சுமார் 45 நிமிடம் வரை நடைபெற்ற மோதலையடுத்து மூன்று சிறப்பு படகுகள் சேதமாகிநிலையில் சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

கடற்புலிகள் எதுவித இழப்புக்களும் இன்றி தளம் திரும்பியுள்ளனர்" என்று விடுதலைபபுலிகள் தெரிவித்துள்ளனர்.
source:webduniya

StumbleUpon.com Read more...

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு தின ஆட்டம்:டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 16ரன்களில் இந்தியா வெற்றி

 
lankasri.comஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு தின ஆட்டத்தில் மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியா 16ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆடத்துவங்கிய இங்கிலாந்து அணி 48.4ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240ரன்களை எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி 5விக்கெட்டுகள் இழப்புக்கு 198ரன்கள் எடுத்திருந்த நிலையில் மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து ஆட்டம் இடையிலேயே நிறுத்தப்பட்டது.இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இரு அணியினரும் பெற்ற ரன்களின் விகிதாச்சாரத்தை கணக்கிட்டு இந்தியா 16ரன்களில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1227189540&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

பின்லேடனை உயிருடனோ பிணமாகவோ பிடிப்போம்: புதிய அதிபர் ஒபாமா சபதம்

lankasri.comஅமெரிக்க அதிபர் தேர்தலில் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அபார வெற்றி பெற்றார்.அவர் ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்கிறார்.

ஒபாமாவுக்கு பின்லேடனின் அல் கொய்தா தீவிரவாதிகளால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஒபாமா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அல்கொய்தா தீவிரவாதிகளை கூண்டோடு ஒழித்துக் கட்டுவோம்.இதுவே எனது முதல் கடமை.அல்கொய்தா இயக்க தலைவன் பின்லேடனை உயிருடன் பிடிப்போம்.முடியாவிட்டால் அவனை கொன்று பிணமாக பிடிப்போம்.இது மிகவும் கஷ்டமான காரியம்தான்.ஆனால் இதுவே எனது முதல்நிலை.அமெரிக்காவுக்கு எப்போதுமே ஆபத்தான பின்லேடனை விட்டு வைக்க மாட்டேன்.

அமெரிக்காவை எதிர் நோக்கியுள்ள பொருளாதார சிக்கல் எங்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறது.அந்த பொருளாதார சிக்கலை தீர்க்க முன்னுரிமை கொடுத்து இன்னும் 2மாதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

இந்த நிலையில் ஒபாமா நேற்று அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேனை சந்தித்து பேசினார்.

சிகா கோவில் ஒபாமா வின் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.எதிரும் புதிருமான அந்த இருவரும் கட்சி வேறுபாடுகளை மறந்து பொருளாதார பிரச்சினை,நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.சிரித்து சிரித்து பேசி அவர்கள் அரசியல் நாகரீத்தை நிலை நாட்டினார்கள்.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1226996283&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP