சமீபத்திய பதிவுகள்

அமெரிக்க குடியரசுத் தலைவரான முதல் கருப்பர்

>> Thursday, December 4, 2008

 

உலகின் வல்லரசு நாடாகவும், பெரும் பணம் கொண்ட நாடாகவும் கருதப்படும் அமெரிக்காவின் 44ஆவது குடியரசுத் தலைவராக, கருப்பினத்தைச் சேர்ந்தவரான ஒருவர் அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவர்தான் பராக் ஹூசைன் ஒபாமா (வயது 47).

ஆப்ரிக்க அமெரிக்கர் என்று அழைக்கப்படும் அங்குள்ள கருப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். புராட்டஸ்டென்ட் கிறித்துவரான ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்த கருப்பினத்தவரான பராக் ஒபாமா ஆவார். ஒபாமாவின் தாய் அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளையினத்தவரான ஆன் சோய் டோரா. தனது குழந்தைப் பருவத்தில் இந்தோனேசியாவில் வசித்த ஒபாமா, 12ஆவது வயது முதல் அமெரிக்காவில் தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். கல்லூரிக் கல்வி முடித்து ஹாவர்டு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். மிச்செலி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட ஒபாமாவுக்கு மாலியா (10வயது), ஷாஷா (7 வயது) என்கிற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்டு 52 சதவிகித வாக்குகளைப் பெற்று ஒபாமா அமெரிக்க அதிபராகி உள்ளார். ஆப்ரிக்க கண்டத்திலிருந்து கருப் பினத்தவர் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டு அவர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்டதே அமெரிக்கா.

உரிமைகள் மறுக்கப்பட்ட கருப்பினத்தவர்களில் பிறந்த ஒபாமா அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நுழை வது வரலாற்றுப் புகழ்வாய்ந்த நிகழ்வு அல்லவா!

போருக்கு எதிரான கருத்துகொண்ட ஒபாமா, ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது தவறு என்று தெரிவித்தார். நம் எதிர்காலம் நம் தலையில் எழுதப்பட்டதல்ல; நம் தலையால் எழுதப்படப் போகிறது. வேற்றுமையை ஒதுக்கி ஒற்றுமையை வளர்ப்போம் என்று கூறிப் பிரச்சாரம் செய்த ஒபாமாவுக்கு அமெரிக்க மக்கள் பெரும் ஆதரவை அளித்துள்ளனர்.

அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்து ஆப்ரகாம் லிங்கன் எடுத்த முதல் முயற்சி இன்று அந்நாட்டின் முதல் குடிமகனாக ஓர் கருப்பினத்தவரைத் தேர்வு செய்துள்ளது.
 

StumbleUpon.com Read more...

தங்கப்பதக்கம் தட்டிவந்த எட்டுவயது குட்டிப்பையன்

 இன்றைய இந்தியச் சூழலில் பார்ப்பன வீட்டுக் குழந்தைகள் மட்டுமல்லாது தமிழர் களின் வீட்டுக் குழந்தைகளும் விளையாட்டு என்று வருகிறபோது கிரிக்கெட்டைத்தான் முதன்மையாக விளையாடுவார்கள். பார்ப்பனர் களிடம் இருந்து பரவிய ஜாதி என்னும் பார்ப்பனியம் நம்மிடம் பரவியது போலவே அவர்களின் விளையாட்டு என்றே ஆக்கப் பட்டுவிட்ட கிரிக்கெட் மோகத்திற்கு நம்மவர் களும் அமையாகி விட்டார்கள். ஆனால், பகுத்தறிவை துணையாக கொள்ளும் குடும்பங்களில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் சரண்ராஜ் என்னும் எட்டு வயதே நிரம்பிய பகுத்தறிவுக் குடும்பத்துச் சிறுவன் செய்த சாதனை தமிழரை பெருமை கொள்வதாக இருக்கிறது.

ஆம் குழந்தைகளே, சரண்ராஜ் சாதனை செய்திருப்பது கராத்தே என்னும் தற்காப்பு கலையில் என்றால் நமக்கு பெருமைதானே. கடந்த செப்டம்பர் 2008இல் கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்தியா கராத்தே போட்டி யில் கலந்து கொண்டு 7-9 வயதுக்குட் பட்டவருக்காக முதன்முறையாக நடத்தப் பெற்ற போட்டியில் தன் திறமையை வெளிப் படுத்தி அரங்கத்தில் அனைவரையும் அசர வைத்து முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை வென்று நம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் வசிக்கும் இராசசேகரன் - ஜோதிப்பிரியா ஆகியோரின் மகனாகிய சரண்ராஜைப் பற்றி அவர்கள் கூறும் பொழுது, மற்ற குழந்தைகள் விளை யாட்டில் காட்டும் ஆர்வத்தையும், வேகத் தையும் விட அதிக ஈடுபாட்டுடன் இருந்த தால் சரண்ராஜை கராத்தே கற்றுக் கொள்ள மாஸ்டர் ஜே.எஸ்.கலைமணி அவர்களிடம் சேர்த்துவிட்டோம். அங்கும் தனது நினை வாற்றல் மற்றும் வேகத்தோடும் பயிற்சிகளை கற்றுத் தேர்ந்தான். அதனால், மாஸ்டர் கலைமணி அவர்கள் 2007ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் நடைபெற்ற கராத்தே போட்டி யில் கலந்து கொள்ள வைத்தார். அந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தான். அதோடு, 2008 ஆகஸ்ட்டில் கறுப்பு பட்டை (பிளாக் பெல்ட்) தேர்ச்சி பெற்றான். தற்பொழுது இந்தியா அளவில் முதன்முறையாக எட்டு வயதிலே தங்கம் வென்றது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றனர். மேலும் அவர்கள் சரண்ராஜின் தங்கை கராத்தே கலையில் ஆர்வம் செலுத்துகிறார் அவரையும் இதுபோல தற்காப்பு கலையில் சிறந்து விளங்க வைக்க வேண்டும் என்று கூறினர்.

கற்பனைச் சண்டை எனக்கூறும் கட்டாஸ் நடைகளை சரண்ராஜ் நமக்கு செய்து காட்டும் போது நம்மையறியாமல் அந்த தற்காப்பு கலையில் ஒரு ஈடுபாட்டை காட்டுகிறது. நமக்காக சில கட்டாஸை செய்து காட்டிய சரண்ராஜ், தனது லட்சியமாக கொண்டிருப் பது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்பதை கூறும் பொழுது, இவர் ஒலிம்பிக் மட்டுமல்ல உலக அளவிலான கராத்தே போட்டியிலும் கலந்து நமக்கு பெருமை சேர்ப்பார் என்றே தோன்று கிறது.

கராத்தே என்னும் தற்காப்பு கலை சிறந்த உடற்பயிற்சி முறையாகும். முறையான உடல் அசைவுகளை வெகு நேர்த்தியாக செய்யும் பொழுது பெரும்பாலான நோய்களை விரட்டி யடிக்க முடியும். சர்க்கரை நோய் என்னும் நீரழிவு நோய், மாரடைப்பு மற்றும் நெஞ்சுருக்கு நோய் மட்டுமல்லாது எப்படிப்பட்ட உடல் எடை கொண்டவரையும் இந்த தற்காப்பு கலை பயிற்சி மூலமாக ஆரோக்கியமானவராக மாற்ற முடியும் என்பது இந்த கராத்தே கலையின் சிறப்பாகும். இப்படிப்பட்ட தற்காப்பு கலை யான கராத்தே இந்திய அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த நமது சுட்டிப் பையன் சரண்ராஜை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நாம் அனைவரும் வாழ்த்துவோம்.
 

StumbleUpon.com Read more...

பழைய செய்திகள்; புதிய உண்மைகள்

 



 
 

StumbleUpon.com Read more...

ராக்கெட் மனிதன்

 

மண்ணெண்ணையினால் இயங்கும் உந்து ஆற்றல் கொண்ட இறக்கைகளின் உதவியுடன் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆங்கிலக் கால்வாயின் மேல் பறந்து சென்று சுவிட்சர்லாந்து நாட்டின் விமானி யூவிஸ் ரோஸி (Yves Rossy) என்பவர் சாதனை படைத்துள்ளார்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள் செல்லும் இந்த ஆங்கிலக் கால்வாயின் மேல் பறந்து சென்ற இந்த 49 வயதான விமானி, டோவர் துறை முகத்தில் வெள்ளைக் குன்றின் மேல் உள்ள கலங்கரை விளக்கின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கினார்.

இவ்வாறு பறந்து வந்தது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. பறப்பதற்கு முன்பு இருந்ததை விட நான் இப்போது அதிக அமைதியை உணர்கிறேன். இவ்வாறு பறப்பதற் கான அனைத்து சூழ்நிலைகளும் அருமையாக அமைந்தன என்று, தரை இறங்கியதும் அவரைச் சூழ்ந்த பத்திரிகையாளர்களிடம் பெருஞ் சிரிப்புடன் அவர் கூறினார்.
 

StumbleUpon.com Read more...

அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு

  
                            To Kill and To Die In The Name of Allah

 
கீழே கொடுக்கப்பட்ட மேற்கோள்கள் கடந்த சில ஆண்டுகளாக செய்தித் தாள்களில் வெளியான செய்திகளாகும்.
 
 
அக்டோபர் 19, 1994

"அரப்‍ இஸ்ரேலிய அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் இடத்திற்கு அருகாமையில், இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஒரு பேருந்தில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததால், 22 பேர் மரித்தார்கள் மற்றும் 48 பேர் காயமடைந்தார்கள், இந்த சம்பவம் இஸ்ரேலில் உள்ள டெலவீவ் என்ற இடத்தில் நடந்தது".


ஜூலை 18, 1995

"யூதர்களின் ஏழுமாடி குடியிருப்பில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததால், 26 பேர் மரித்தார்கள் மற்றும் 127 பேர் காயமடைந்தார்கள். இச்சம்பவம் அர்ஜன்டைனா பெவுனோஸ் ஐர் என்ற இடத்தில் நடந்தது".
 


பிப்ரவரி 26, 1993

"பூமிக்கடியில் வெடித்த ஒரு குண்டினால், நியூயார்க்கில் 110 மாடி கட்டிடமாகிய மான்ஹாட்டன் உலக வர்த்தக மையம் ஆட்டம் கண்டதால், 5 பேர் மரித்தனர் மற்றும் 1000 பேருக்கு அதிகமானவர்கள் காயமடைந்தார்கள், அனேகமாயிர மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள புகை பிடித்த படிகட்டிலிருந்து தப்பி ஓடினார்கள்."
 


மே 4, 1992

"எகிப்தில் மன்ஷிட் நசர் என்ற இடத்தில், 13 எகிப்திய கிறிஸ்தவர்கள் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். பத்து கிறிஸ்தவ உழவர்கள் தங்கள் வயல்களில் வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது கொலை செய்யப்பட்டார்கள். பத்து வயது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொண்டு இருந்த ஒரு கிறிஸ்தவ ஆசிரியை சுட்டு கொலை செய்யப்பட்டாள். ஒரு கிறிஸ்தவ மருத்துவர் தன் வீட்டிற்கு வெளியே கொல்லப்பட்டு கிடந்தார்".
 
 
மேலே சொல்லப்பட்ட செய்திகள் தீவிரவாதிகளால் நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றிய ஒரு சில விவரங்கள் மட்டுமே. இந்த எல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே இருக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை என்னவென்றால், "அவர்கள் அனைவரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக இருக்கிறார்கள்". மற்ற மத அடிப்படைவாதிகளும் வன்முறையில் அவ்வப்போது ஈடுபடுகிறார்கள், ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் "வன்முறை" மற்ற எல்லா மத அடிப்படை வாதிகளின் ஒட்டுமொத்த வன்முறையை விட மிஞ்சிவிடுகிறது.
 
 
 
இஸ்லாமியர்கள் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறார்கள்?

WHY DO MUSLIM FUNDAMENTALISTS ACT THIS WAY?


 
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பிறப்பிலிருந்தே மனிதாபமானம் அற்றவர்களாகவும், தீயவர்களாகவும் இருக்கிறார்களா? என்று கேட்டால், நிச்சயமாக பதில் "இல்லை" என்பது தான். இஸ்லாமியர்கள் மற்றவர்களைப்போல சாதாரண மக்களே. அவர்களில் தகப்பன்மார்கள் இருக்கிறார்கள், சகோதரர்கள் இருக்கிறார்கள், நல்ல மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளராகவும், மற்றும் வழக்கறிஞர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களோடு பணிபுரியும் சக ஊழியர்களாகவும் அதே நேரத்தில் உங்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்பானவர்களாகவும் இருக்கிறார்கள்.

 
அவர்கள் இப்படிப்பட்ட வன்முறையில் நடந்துக்கொள்ளும் போது அவர்கள் மனதில் என்ன நினைவுகள் ஓடிக்கொண்டு இருக்கும்? ஒருவர் இதனை புரிந்துக்கொள்ளவேண்டுமானால், ஒரு முக்கியமான மற்றும் மிகவும் ஆபத்தான இஸ்லாமிய போதனையாகிய "ஜிஹாத் (JIHAD – HOLY WAR)" பற்றி நாம் அறிந்துக்கொள்ளவேண்டும்.

 
நாம் ஒரு முக்கியமான விவரத்தையும் புரிந்துக் கொள்ள வேண்டும், அதாவது:

 
எல்லா அரபியரும் இஸ்லாமியர் அல்லர்

எல்லா இஸ்லாமியரும் அரபியர் அல்லர்

மற்றும்

எல்லா இஸ்லாமியரும் "இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அல்லர்".

 
நாங்கள் ஒரு மதத்தை தாக்க முயற்சி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, எல்லா சமுதாயங்களையும் சீரழிக்கும் அந்த மதத்தில் உள்ள ஒரு ஆபத்தான கோட்பாட்டை வெளிச்சத்திற்கு கொண்டுவர முயற்சி எடுக்கிறோம், அவ்வளவே.

 
ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி, தான் ஜிஹாதில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது, தன் மூலமாக மற்றவர்கள் கொடூரமாக காயப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை, அதற்கு பதிலாக "தான் தன் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுகிறான்" என்பதை மட்டுமே நினைக்கிறான். இப்படி வன்முறையில் ஈடுபடுவதினால், தனக்கு சொர்க்கத்தில் இடம் நிச்சயம் கிடைக்கும் என்று கருதிவிடுகிறான்.
 
 
ஜிஹாத் (JIHAD – HOLY WAR)

 
இஸ்லாமியர்களின் புனிதமான கடமைகளில் ஜிஹாதும் ஒன்று. "ஜிஹாத்" என்ற வார்த்தை ஒரு அரபி வார்த்தையாகும், இதன் பொருள் "போராடுதல் (Struggle)" என்பதாகும். ஆக, ஜிஹாத் என்பது இஸ்லாமுக்காக போராடுவதாகும், அதாவது எதை தியாகம் செய்தாவது, எப்படியாவது போராடுவதாகும், இதில் வன்முறையும் உள்ளடக்கமே. இப்படிப்பட்ட ஜிஹாதை "புனிதப் போர்" என்றுச் சொல்வார்கள்.

 
வ‌ன்முறையை நியாய‌ப்ப‌டுத்த‌ குர்‍ஆனில் வ‌ச‌ன‌ங்க‌ளை தேட‌ இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு பிர‌ச்ச‌னையே இருப்ப‌தில்லை. அதே போல‌, ஹ‌தீஸ்க‌ளில் இத‌ற்கான‌ வ‌ரிக‌ளைத் தேட‌ இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு க‌டின‌ம் ஒன்றுமில்லை. இந்த‌ குர்‍ஆனும் ஹ‌தீஸும் வ‌ன்முறையைப் ப‌ற்றி சொல்வ‌தோட‌ல்லாம‌ல், அவைக‌ளை செய்ய‌ தூண்டுவ‌தாக‌வும் இருக்கின்ற‌ன‌.[குர்‍ஆன் என்ப‌து இறைவ‌னின் வேத‌ம் என்று இஸ்லாமிய‌ர்க‌ள் ந‌ம்புகிறார்கள். முஹ‌ம்ம‌து சொன்ன‌து, செய்த‌து என்றுச் சொல்லி அவ‌ர‌து செயல்க‌ளை ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ தொகுப்பையே ஹ‌தீஸ்க‌ள் என்பார்கள்.]
 
 
குர்‍ஆனில் ஜிஹாத் (JIHAD IN THE QURAN)

 
"இஸ்லாமியர்கள் அல்லாத" மக்களை தனக்கு பதிலாக பயப்படவைக்கவேண்டும் என்று அல்லா இஸ்லாமியர்களுக்கு கட்டளை தருகிறார்.

 
 
"Strike terror (into the hearts of) the enemies of God and your enemies."

 
… இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; ….(8:60)

 
Fight (kill) them (non-Muslims), and God will punish, (torment) them by your hands, cover them with shame."

 
நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.(9:14)

 
"I will instill terror into the hearts of the unbelievers, smite ye above their necks and smite all their finger-tips off them. It is not ye who slew them; it was God."

 
நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும். (8:12)
 
 
ஹதீஸ்களில் ஜிஹாத்(JIHAD IN THE HADITH)

 
இஸ்லாமியர்கள் ஜிஹாத்தில் ஈடுபடவேண்டுமென்று முஹம்மது ஹதீஸ்களில் சொல்கிறார்.

 
முஹம்மதுவிடம் ஒரு முறை இவ்விதமாக கேட்கப்பட்டது: ஒரு முஸ்லீமுக்கு அல்லாவின் மீதும் அவரது தூதரின் மீது நம்பிக்கை வைக்கும் செயலுக்கு அடுத்துள்ள நல்ல செயல் எது? அதற்கு அவர் பதில் அளித்தார்: "அல்லாவிற்காக ஜிஹாதில் ஈடுபடுவது தான்". (Al Bukhari vol 1:25)

 
ஒரு முறை முஹ‌ம்ம‌து சொன்னார்: "அல்லாவைத் த‌விர‌ தொழுதுக் கொள்வ‌த‌ற்கு வேறு யாருமில்லை என்று ம‌க்க‌ள் சொல்லும் வ‌ரை அவ‌ர்க‌ளோடு போரிட‌ நான் க‌ட்ட‌ளையிட‌ப்ப‌ட்டுள்ளேன்".(Volume 9, Book 84, Number 59 )

 
இதே போல‌ இப்ப‌டியும் அவ‌ர் சொல்லியுள்ளார்: அல்லாவின் மிது ந‌ம்பிக்கை வைப்ப‌தினாலும், அவ‌ர‌து தூத‌ரை ந‌ம்புவ‌தாலும் ஒருவ‌ர் ஜிஹாத்தில் ஈடுப‌ட‌ வேறு எதுவும் அவ‌ரை க‌ட்டாய‌ப்ப‌டுத்தாது. இது போல‌ ஜிஹாதில் ஈடுப‌டுவ‌ருக்கு அல்லா ப‌ரிசு அளிப்பார் அல்ல‌து போரில் கிடைத்த‌தில் ப‌ங்கு கிடைக்கும் அவ‌ர் உயிரோடு இருந்தால், ஒருவேளை ம‌ரித்துவிட்டால், சொர்க்க‌த்தில் அவ‌ர் அனும‌திக்க‌ப்ப‌டுவார். (Al Bukhari vol 1:35)
 
 
 
முஹம்மது: ஒரு எடுத்துக்காட்டு (MOHAMMED: AN EXAMPLE)

 
இஸ்லாமிய‌ ந‌பி தான் ம‌க்காவில் த‌ன் புதிய‌ ம‌த‌த்தை பிர‌ச்சார‌ம் செய்யும் போது, கிறிஸ்தவ‌ர்க‌ள் ம‌ற்றும் யூத‌ர்க‌ளிட‌ம் ச‌ம‌ர‌ச‌த்தோடு ந‌ட‌ந்துக்கொண்டார். அவர் இவ்விதமாக கூறினார்: ….; "எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - …. (29:46). ஆனால், அவரின் இப்படிப்பட்ட மனப்பான்மை அவருக்கு வலிமை வந்தவுடன் மாறிவிட்டது. இப்போது அல்லா அவருக்கு இவ்விதமாக‌ச் சொல்கிறார்:

 
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.( 9:29)

 
 
கிறிஸ்தவர்களை விட யூதர்களை முஹம்மது அதிகமாக வெறுத்தார் என்று தெரிகிறது. முஹம்மது தான் வாழ் நாட்களில் யூதர்களை அழித்துவிட வேண்டுமென்றே அதிக‌ முயற்சிகளை மேற்கொண்டார்.

 
 
 
முஹம்மது கூறுகிறார்: "யூதர்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ளுங்கள், இந்த பூமி அல்லாவிற்கும் அவரது தூதருக்கும் சொந்தமானது. இந்த நாட்டை விட்டு(அரேபியா) உங்களை துரத்தப்போகிறேன், ஆகையால், உங்களிடம் ஏதாவது சொத்துக்கள் இருந்தால், அவைகளை விற்றுவிடுங்கள்".

 
 
முஹம்மதுவின் காலத்தில் மதினாவில் மூன்று யூத வம்சங்கள் (குழுக்கள்) இருந்தன. இவைகளில் "கயின்கா - Qaynqa " மற்றும் "பனி அல்-நதிர் (Bani-al-Nudair)" என்பவர்கள் இரண்டு யுத வம்சங்களாகும். இந்த இரண்டு பிரிவினர்களை முஹம்மதுவின் மனிதர்கள் முற்றுகையிட்டு பிடித்துக்கொண்டார்கள். உணவுப் பொருட்கள் அவர்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டார்கள். அவர்கள் உயிர் பிழைக்கவேண்டுமானால், முஹம்மது சொல்வது போல செய்யவேண்டுமென்று கட்டளையிட்டார்கள். ம‌ற்றும் அவ‌ர்க‌ள் ம‌தினாவை விட்டு வெளியேற‌ வேண்டுமென்றும், முஸ்லீம்கள் தங்களுக்கிடையில் பகிர்ந்துக்கொள்வதற்காக‌, த‌ங்க‌ள் உட‌மைக‌ளை ஒரு குறிப்பிட்ட‌ இட‌த்தில் வைத்துவிட்டு செல்ல‌வேண்டுமென்றும் க‌ட்டாய‌ப்ப‌டுத்தினர்.

 
மூன்றாவது யூத இனமான "பனி குரைஜா" ஒன்றும் தப்பவில்லை. அபூ சுஃப்யான் தலைமையில் குரைஷிகளோடு நடந்த போரில் முஹம்மது முற்றுகையில் மாட்டிக்கொண்டார். இந்த பனி குரைஜா குழு அபூ சுஃப்யானுக்கு உதவி செய்யவேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டார்கள். இந்த‌ முற்றுகை ஒரு முடிவிற்கு வ‌ந்த‌வுட‌ன், இவர்கள் தன் எதிரியான அபூ சுஃப்யானுக்கு உதவுவதாக ஒப்புக் கொண்டதால், முஹ‌ம்ம‌து இந்த‌ யூத‌ இன‌த்தை ம‌ன்னிக்க‌வே இல்லை.

 
முஸ்லீம்கள் இந்த பனி குரைஜா இனத்திற்கு எதிராக வந்தனர், இவர்களின் வீதிகளை 25 நாட்கள் முற்றுகையிட்டனர்.

இதற்கு முன்பு இரண்டு யூத இனத்திற்கு முஹம்மது இட்ட நிபந்தனையைப் போல, தங்கள் உடமைகளை கொடுத்துவிட்டு, அமைதியாக நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக இவர்கள் தங்கள் விருப்பத்தைச் சொன்னார்கள்.

 
 
ஆனாலும், முஹம்மது இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இவர் சைத் இபின் மோஅஜ்(Saad iben Moaz) என்ற ஒருவரை நியமித்தார். இந்த சைத் என்பவர் பனி குரைஜா இனத்தின் ஆண்கள் அனைவரின் தலைகள் துண்டிக்கும்படியும், பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்கும்படியும் மற்றும் இவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் முஸ்லீம்கள் பங்கிட்டுக்கொள்ள கட்டளையிட்டார்.

 
 
மதினாவின் முக்கிய இடத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, அவைகளில் முஹம்மது இரவெல்லாம் கஷ்டப்பட்டு வெட்டிய தொல்லாயிரம் மனிதர்களின் உடல்களை போட்டு மூடினார்கள். . (See Ibn Hisham: The Propeht's Biography: vol 2 pages 40&41. 0- பார்க்கவும், இபின் இஷாமின் முஹம்மதுவின் சரிதை, பாகம் 2 பக்கங்கள் 40 மற்றும் 41)

 
 
அன்பான நண்பர்களே:
 
 
இவைகள் அனைத்தும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சரித்திர நிகழ்வுகள். இப்படிப்பட்ட வன்முறை நிகழ்வுகள் தான் இஸ்லாமிய மனப்பான்மையாக உருவாகியுள்ளது. இதில் மிகவும் ஆபத்தானது என்னவென்றால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இதே போல நிகழ்ச்சிகளை, வன்முறையை இந்த 21ம் நூற்றாண்டில் காட்ட முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுங்கள். நம் நாட்டில் இயேசுவின் சகிப்புத்தன்மை மற்றும் அஹிம்சை வசனங்கள் ஆளட்டும்.

 
உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்(மத்தேயு 26:52)


 
உண்மையை அறிந்துக் கொள்ளுங்கள்

உண்மையை பின்பற்றுங்கள்

உண்மையை பரப்புங்கள்

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

" You shall know the truth and the truth shall make you free" (யோவான் 8:32)

Source: http://www.answering-islam.org/NonMuslims/die_kill.htm
 
 
இஸ்லாம் மற்றும் தீவிரவாதம் பற்றிய தமிழ் கட்டுரைகள்:

அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம்

நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல் (Open Letter to Our Muslim Friends)

இஸ்லாம் மற்றும் அமைதி (Islam and Peace)

முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

ஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்

 
சில ஆங்கில கட்டுரைகள்:

Where is the Gandhi of Islam?

The Root of the Problem

The Two Faces of Islam

Is Islam a peace-loving Religion?

The Myth of Islamic Tolerance

Islam and Violence

Top ten reasons why Islam is not the religion of peace

The Mind of an Islamic Terrorist

 
Back - Islam & Terrorism Index Page

StumbleUpon.com Read more...

திரித்துவமும் நீங்களும் - The Trinity and You

 

 



திரித்துவமும் நீங்களும்


The Trinity and You

 
ஆசிரியர்: சாம் ஸ்க்ளார்ப் (By Sam Schlorff)
 
 
கேள்வி: நான் ஒரு முஸ்லிம். கிறிஸ்த்துவ மதத்தைப் பற்றி நான் மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். திரித்துவக் கொள்கையைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன், ஆனால், அதை என்னால் சரிவர விளங்கிக் கொள்ள முடியவில்லை, விளக்குங்களேன். நன்றி.
 
 
 
பதில்: கிறிஸ்துவ நம்பிக்கை மற்றும் வாழ்வு பற்றிய சுருக்கமான ஒரு மேலோட்டத்துடன் ஆரம்பித்து அதன் அடிப்படையில் திரித்துவக் கொள்கையினை விளக்குகிறேன். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்; வெளியரங்கமாக கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் ஒரே மாதிரியாக இருந்து, நம்பிக்கை மற்றும் அதனைக் கடைப்பிடித்தலில் ஒற்றுமை இருப்பது போலக் காணப்பட்டாலும், உண்மையில் அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்களே. ஏனெனில், உலகினைப் பற்றிய‌ பார்வையில் அவர்கள் வெவ்வேறு வகையிலான‌ உந்துதலை உடையவர்கள்.

 
கிறிஸ்தவ நம்பிக்கையும் வாழ்வும் பைபிளை அடிப்படையாகக் கொண்டவை. பைபிள், தேவனையும் அவர் இயேசுவின் (al-masih) வழியாக‌ நமக்குச் செய்தவைகளை - அதாவது‍ அவரது வாழ்க்கை, போதனைகள், அவரின் மரணம் மற்றும் மரித்தோரினின்று உயிர்த்தெழுதல் ஆகியவற்றை மையப்படுத்துகிறது. "கிறிஸ்தவன்" என்ற‌ வார்த்தை "கிறிஸ்து" என்பதினின்று உருவாகிறது. "கிறிஸ்து" என்பதின் அர்த்தம் "அபிஷேகிக்கப்பட்டவர்(anointed one)" என்பதாகும். இந்த "கிறிஸ்து" என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையாகும், இதற்கு இணையான அரபி வார்த்தை "மஸீஹா(Masih)" என்பதாகும்(இதற்கு இணையான எபிரேய வார்த்தை(பழைய ஏற்பாடு) "மேசியா-Messiah" என்ற வார்த்தையாகும்). அவர் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு ந‌ம்மை இர‌ட்சிக்கும் பொருட்டு பூமிக்கு அனுப்ப‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்ப‌தினால் "al-Masih" என்ற‌ழைக்க‌ப்ப‌டுகிறார் (லூக்கா 4:18-21). கிறிஸ்த‌வ‌ உல‌கின் அனைத்துப் ப‌ரிமாண‌ங்க‌ளையும் த‌ழுவும் ஒரு உன்ன‌த‌ப் பார்வை "கிருபை"(ni`mah - Grace) என்னும் வார்த்தையில் அட‌ங்கியுள்ள‌து. இது நம்மை நரகத்தின் நித்திய அழிவினின்று காப்பாற்ற, எள்ளளவும் தகுதியற்ற நமக்கு தேவன் காட்டும் ப‌ரிவு அல்ல‌து உத‌வி என்ப‌த‌னைக் குறிக்கும். தேவ‌னின் வார்த்தை யோவான் 1:17 ல் சொல்கிற‌து :

 
"நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின."

 
மேலும் எபேசிய‌ர் 2 : 8,9ன் ப‌டி,

 
"கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல".

பின்பும், "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." என ரோமர் 5:8 ல் நாம் வாசிக்கிறோம்.
 
 
பைபிளில் தேவன் தம்மை மூவொரு தேவனாக வெளிப்படுத்துகிறார் - அதாவது பிதா, குமாரன் (இயேசு‍ al-Masih), மற்றும் பரிசுத்த ஆவியாக வெளிப்படுத்துகிறார். பிதாவும், குமாரனும் பரிசுத்த ஆவியும் அடிப்படையிலும், நோக்கத்திலும் மனித குலத்திற்கான தேவ திட்டத்தின்படியும் ஒன்றானவர்களே(Father, Son and Holy Spirit are one in essence, in will, and in their plan for mankind.) . இது தான் நீங்கள் கேட்ட திரித்துவம் என்கின்ற கிறிஸ்தவக் கொள்கையாகும். துரதிஷ்டவசமாக, பலர் இக்கொள்கையினைப் பற்றி அனேகம் தவ‌றான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். எனவே இவைகளை நாம் ஆராய முயல்வோம். உதாரணமாக, நாம் என்ன தான் எடுத்துக் கூறினாலும் திரித்துவம் என்பதற்குப் பலர் என்ன பொருள் கொள்கிறார்கள் என்றால் "கிறிஸ்தவர்கள் உண்மையாகவே மூன்று கடவுள்களை நம்புகிறார்கள் என்பதே". அதிலும் கொடுமையானது என்னவெனில், தந்தைக் கடவுள், தாய்க் கடவுள் (sahiba) மற்றும் மகன் என்ற கடவுள் இருப்பதாக‌ இப்படிப்பட்டவர்கள் சொல்வது தான். எந்த ஒரு கிறிஸ்தவனும் அவன் எந்த திருச்சபையைச் சார்ந்தவனாக இருப்பினும் இவ்வண்ணமாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்த எண்ணமே நமக்கு பாவத்திற்கும் சாபத்திற்கு முரியது, மற்றும் இது தேவதூஷணமாகும். நாம் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் மக்கள் இவ்வாறான மாறுபாடான கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தியும் அதனடிப்படையில் மீண்டும் மீண்டும் தவறான கணிப்புகளைக் கொண்டும் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், வார்த்தையின் பொருளினால் இக்கொள்கை முரண்பாடாக இல்லையா என நீங்கள் கேட்கலாம். இது நியாயமான கேள்வி தான். ஆனால், இதற்கு பதில் உறுதியாக "வார்த்தையின் பொருளினால் இக்கொள்கை முரண்பாடாக இல்லை"என்பதே. நாம் மூன்று வித்தியாசமான, அமைப்பினாலும் நோக்கத்தினாலும் வேறுபட்ட மூன்று கடவுள்களைப் பற்றிப் பேசாமல், அடிப்படையில் மூன்றும் ஒன்றாகவும், ஒரே தன்மையில் இணையப்பெற்றுள்ள மூவொரு தெய்வத்தினைப் பற்றியே சொல்கிறோம்(You may be asking, but is not the doctrine a contradiction in terms, however? That is a fair question. But the answer is still no; we are not speaking of three gods, each with a different being and will, but of one essence with three persons and three persons in one essence.)

 
அப்படியானால் "திரித்துவம்" என்பதன் விளக்கம் என்ன‌? இங்கு பிரச்சனை இக்கொள்கையில் இல்லை, ஆனால், மனித மனங்களின் எல்லையில் உள்ளது. கடவுளின் இயல்புகள் மனித மனங்க‌ளின் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. பைபிள் இவ்வாறாக அறிவிக்க‌வில்லையா? "தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன? அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது. (யோபு 11:7-9)." குரானும் கூட"laisa ka-mithli-hi shai'un" என்று சொல்கிறது "அவனைப் போன்று எப்பொருளும் இல்லை" – (சுரா 42:11). திரித்துவம் என்பது"bi-la kaif wa-bi-la tashbih (without asking how and without anthropomorphism)" என்று அரபியில் சொல்வதற்கு சமமாகும். இதை விஞ்ஞான அறிவினால் நிருபிக்கவோ அல்லது அதே விஞ்ஞான அறிவினால், "தவறானது" என்று நிராகரிக்கவோ முடியாது. இது விஞ்ஞான அறிவிக்கு முரணானது என்று வாதிடுவது என்பது, "இறைவன் எதைச் செய்வார் அல்லது எதைச் செய்யமாட்டார்" என்ற விவரங்கள் பற்றி மனிதன் தீர்ப்பு வழங்க உட்கார்ந்துக் கொள்வதற்கு சமமாகும், ஒரு வரியில் சொன்னால், இப்படி செய்வது தெய்வ நிந்தனைக்கு சமமானது. சுருக்க‌மாக‌ சொல்லவேண்டுமானால், தேவ‌னின் இய‌ல்பை நாம் முற்றிலும் புரிந்து கொள்வ‌து ந‌ம‌து அறிவிற்கும் அனுப‌வ‌த்திற்கும் அப்பாற்ப‌ட்ட‌து (Quite simply, we will never be able fully to understand God's nature because it lies outside our experience and knowledge.).

 
சுருங்கக் கூறின் மெய்யாகவே, தேவன் திரித்துவத்தைப் பற்றிய எல்லா விவரங்களை நமது அறிவுபூர்வமான ஆவலை பூர்த்தி செய்யும் பொருட்டு வெளிப்படுத்த வில்லை அல்லது அவரது தன்மையினை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ளும்படியாக வெளிப்படுத்த வில்லை. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய ஒவ்வொருவரும் நம் இரட்சிப்பிற்காகச் செய்தது என்ன? மற்றும் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ளும் அவசியத்திற்காகவே அவர் இவ்வாறு செய்தார். நம்மீதான கிருபையினை அனுபவிக்கும் முன்பாக இக்கிருபையின் மூலமாக‌, நம் வாழ்வில் இவ்வொவ்வொன்றின் இயக்கங்களையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். பைபிள் இவ்வாறாக போதிக்கிறது:
 
 
பிதாவின் திட்டம்: முதல் மனுஷனும் மனுஷியும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாள் தொடங்கி, நாம், அதாவது மனித குலம், நமது "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும்" மரித்தவர்களானோம் (எபேசியர் 2:1). ஏனெனில் நாம் "தேவனுடைய‌ ஜீவனுக்கு அன்னியராகி" பிரிக்கப்பட்டுப் போனோம் (எபேசியர் 4:18). மேலும் ரோமர் 3:23 சொல்கிறது, "எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகிவிட்டோம்". ஆனால் பிதாவாகிய தேவன் நாம் அதே நிலையில் இருப்பதைக் கண்டு அவர் திருப்தியடைய‌வில்லை என வேதம் காண்பிக்கிறது. அவர் தேவனை விட்டு வெகு தொலைவில் இருந்த நம்மை, "முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்" (எபேசியர் 2:13) என்னும்படிக்கு ஒரு திட்டத்தை வைத்து இருந்தார். திரித்துவத்தின் ஒவ்வொருவரும் நமக்காகச் செய்த, செய்து கொண்டிருக்கும் மற்றும் செய்யப்போகும் காரியங்கள் இதோ:

 
குமாரனின் பங்கு: நமது பாவங்களினாலுண்டாகும் நித்திய மரணத்தினின்று நம்மை நாமே காத்துக் கொள்ள முடியாதபடியினால், தேவன் வெறுமனே தமது சட்டங்களையும், தம்மைப் பற்றிய பிரஸ்தாபஙளையும் அனுப்பிக்கொண்டு நம்மால் அறியப்படாமலும், தனித்தும் இருக்க விரும்பவில்லை. அவர் இரட்சகராக‌ இயேசு கிறிஸ்துவின் வழியாய் மனித குலத்தை மீட்கும் பொருட்டாக‌ "இறங்கி வந்தார்". இயேசு தம்மைப் பற்றி,
 
 
"என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்" (யோவான் 6:38) எனச் சொல்கிறார்.

 
மேலும், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப் படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று"(யோவான் 3:16-18)
 
 
பரிசுத்த ஆவியானவரின் பங்கு: உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசு நமக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து தேவனிடத்தில் இரட்சிப்பை வேண்டிக் கொள்ளும்போது தேற்றரவாளன் எனப்படும் தேவனின் பரிசுத்த ஆவியானவர் நம்முள் இறங்கி வாசம் செய்யவும் தேவனுக்காய் நாம் வாழவும் உதவி செய்வார்.
 
 
"நான் பிதாவை வேண்டிக் கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." (யோவான் 14:16-17)

 
"என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்."(யோவான் 14:26)

 
"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்கு உட்பட்டவர்களாயிராமல் ஆவிக்கு உட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." (ரோமர் 8:9)
 
 
பிதாவின் பங்கு: நான் பாவி என்று தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுத்து இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் பிரவேசித்து தேவனுக்காய் நாம் வாழ உதவி செய்கிறார். தேவன் நம்மை அவரின் புதல்வருள் ஒருவராய் ஏற்றுக் கொள்கிறார்.

 
"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்."(யோவான் 1:12-13)

 
"அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனே கூட நாம் மகிமைப்படும் படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்(ரோமர்8:15-17)
 
 
நான் எழுதியவைகளைச் சிந்தித்து அதனைப் புரிந்துகொள்ள தேவனை வேண்டிக் கொள்ளுங்கள். நீங்களும் தேவனின் பிள்ளைகளாகலாம்.




 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP