சமீபத்திய பதிவுகள்

இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள்

>> Saturday, December 13, 2008

 


 


முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை

 
Top ten reasons why Islam is NOT the religion of peace


Violence in Muhammad's life and the Quran


ஜேம்ஸ் அர்லண்ட்சன்(James M. Arlandson)
 
 
செப்ட‌ம்ப‌ர் 11 நிக‌ழ்வுக‌ளுக்குப் பிற‌கு நாட்டின் செய்தித் தொடர்பை பயன்படுத்துக் கொள்ளும் இஸ்லாமிய‌த் த‌லைவ‌ர்க‌ள், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்க‌மென்றும் முஹம்மதுவின் இந்த‌ மார்க்கத்தில் வ‌ன்முறைக்கு எந்த‌ அடிப்ப‌டையும் இல்லை என்றும் சொல்லி வ‌ருகிறார்க‌ள்.

 
அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் பிரிட்டனின் பிரதமர் பிளேர் ஆகியோரும் கூட இஸ்லாம் சில வன்முறை வெறியர்களால் "கடத்தப்பட்டுள்ளது" என இதே அறிக்கையை மறு மொழிந்துள்ளனர். இது உண்மை தானா?

 
இது உண்மையல்ல என்பது வருத்தத்திற்குரிய விஷயம். ஏனெனில், நடைமுறையில் நாம் காணக்கூடிய உண்மைகள் இஸ்லாம் அடிப்படையிலேயே - அதாவது முஹம்மதுவினுடைய வாழ்கையிலும் குர்‍ஆனிலுமே - வன்முறையினால் நிரப்பப்பட்டுள்ளது என்பதை ஐயமின்றி உறுதி செய்கின்றன‌.

 
எனவே இத்தகைய முஸ்லீம் ஆதரவாளர்கள், அவர்கள் மீது சந்தேகம் கொள்ளாத மேற்கத்திய நாட்டினரை தவறான வழியில் அவர்களை திசை திருப்பக்கூடாது, நேர்மையான முறையில் தங்களின் மார்க்கத்தினுடைய அடிப்படையைக் கருத்தில் கொண்டு எப்போதும் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும்.

 
இதோ இங்கு, இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அல்ல என்று விளக்கவல்ல, சரி பார்த்துக் கொள்ளத்தக்க‌, தெளிவான‌ பத்துக் காரணங்கள் உள்ளன‌ (Here are ten clear, verifiable reasons that explain why Islam is not the religion of peace).

 
தெளிவான காரணங்கள் என்றால் என்ன?(Clear?): முஸ்லீம் ஆதரவாளர்கள், வழக்கமான சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாத மறுப்புகளை வெளியிடுவார்கள், அதாவது அவர்கள், "இந்த வசனம் "Out of Context" க்கு வெளியே விளக்கியுள்ளார் என்று சொல்வார்கள். இதை தடுப்பதற்காகவே, நான் ஒவ்வொரு குர்‍ஆன் வசனத்தின் சூழ்நிலை(Context) என்ன என்பதை இந்த கட்டுரையிலேயே விளக்கியுள்ளேன் அல்லது அதைப் பற்றி விவரிக்கும் இதர கட்டுரைகளின் தொடுப்பை தகுந்த இடத்தில் கொடுத்துள்ளேன். நான் விளக்கும் எந்த வசனமும் சூழ்நிலைக்கு வெளியே(Out of Context) விளக்கப்படவில்லை. மற்றும் இக்கட்டுரையில் இஸ்லாமியர்களின் குர்‍ஆன் மொழி பெயர்ப்பையே நான் பயன்படுத்தியுள்ளேன்.

 
சரி பார்த்துக் கொள்ள முடியுமா? (Verifiable?) : வாசகர்கள் குர்‍ஆன் வசனங்களை பல வகையான ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் அடங்கிய‌ www.quranbrowser.com என்ற தளத்தில் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, வசனம் 61:10 - 12 ( 61 என்பது சுரா, 10 - 12 என்பது வசனங்க‌ள்) என்ற முறையில் டைப் செய்து பார்த்துக் கொள்ளவும். (தமிழில் http://chittarkottai.com/quran/tamil என்ற தளத்தில் குர்‍ஆன் மொழிபெயர்ப்பு கிடைக்கும்.)

 
முத‌லில் நாம் முஸ்லீம்க‌ளின் அணுகு முறைக்கு ஒரு பதில் சொல்லியாக‌ வேண்டும். இஸ்லாம் தான் உலகிலேயே தலைசிறந்த மார்க்கம் என நம்பி அதனை உலகம் முழுவதும் பரப்ப விரும்பும் ஒரு முஸ்லீம் ஊழிய‌ர் அல்ல‌து எதிர்வாத‌ எழுத்தாளர் இந்த 10 காரணங்களை ம‌றுக்க‌ முனைய‌லாம். ஆனால் இந்த‌ப் ப‌த்துக் கார‌ண‌ங்க‌ள‌ட‌ங்கிய‌ ப‌ட்டிய‌லை ம‌றுக்க‌ முய‌ர்ச்சித்தால், அது ஒரு புத்த‌க‌த்தை இறுதி அத்தியாய‌த்திலிருந்து ஆராய‌ முய‌ல்வ‌து போன்ற‌தாகும். இந்த‌ ஆய்வாள‌ர், எல்லா அத்தியாயங்களையும் ப‌டிக்கும் க‌டின‌ வேலையைத் த‌விர்க்கும் ப‌டியாக‌வே அவ்வாறு செய்த‌து போலாகும்.

 
இதுபோன்றே, முஸ்லீம் மறுப்பு எழுத்தாளர்களும், ஊழியர்களும் இக்கட்டுரைகளுக்கும் தொடுப்புகளுக்கும் பின்னால் உள்ள கடின உழைப்பைப் புறக்கணிக்கிறார்கள். இந்த முக்கியமான பத்துக் காரணங்கள் கொண்ட பட்டியல் பல கட்டுரைகளை ஆராய்ந்து வடித்த சாரமும், இதை எழுதியோனும் வேறு பல எழுத்தாளர்களும் செலவழித்த கடின உழைப்புமாகும். முஸ்லீம்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் இவைகளில் உண்டு. எனவே இதனை மேற்கூறியவாறு தவறாக ஆராய்பவர்களின் விமர்சனங்கள் கடின உழைப்பின்றி மேலோட்டமாக உள்ளதினால், வெறுமையானவையாயும் அவர்களின் ஆய்ந்துணர்தல் ஆழமற்றதாயும் உள்ளன. அவர்கள் பைபிளை நிச்சயமாகவே புரிந்துகொள்ள‌மாட்டார்கள் என்பதுடன் தங்களின் மறுப்புகளினால் இஸ்லாமுக்கு வெள்ளை சுண்ணாம்பு அடித்துக் காட்டுகிறார்கள். இக்கட்டுரையில் கொடுக்கபப்ட்ட அதிகபடியான இதர கட்டுரைகளை இதனை விளக்கும். எவ்விதம் அவர்கள் இஸ்லாமுக்கு வேண்டுமென்றோ அல்லது அறியாமையினாலோ வெள்ளையடிக்கிறார்கள் என்பது விளங்கும். அதாவது அவர்களுடைய மதத்தைப் பற்றியே அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை அல்லது தெரிந்திருந்தும் வேண்டுமென்றே உண்மையை மறைக்க விரும்புகிறார்கள் என்றே அர்த்தமாகிறது. எது எப்படியாயினும் இஸ்லாமைப் பற்றிய‌ உண்மை வெளிப்படுதல் அவசியம்.
 
 
10. முஹம்மது தம் ஆயுதங்களுக்கு புனைப் பெயரிடுகிறார்

Muhammad nicknames his weapons


 
த‌ப‌ரி (கி.பி. 839-923) என்ப‌வ‌ர் ஆராய்ச்சியாள‌ர்க‌ளால் இன்று மிக‌வும் ந‌ம்ப‌த்தகுந்த இஸ்லாமிய ச‌ரித்திர‌ ஆசிரிய‌ராய் க‌ருத‌ப்ப‌டுகிறார். உண்மையில், அவர் எழுதிய சரித்திரம் நியுயார்க் பதிப்பகத்தின் மாநில பல்கலைக் கழகத்தினால்(State University of New York Press ) 38 பாக‌ங்க‌ளாய் மொழிபெய‌ர்க்க‌ப்ப‌டத்‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌து. (Ismail K. Poonawala மொழிபெய‌ர்த்த‌ ந‌பியின் க‌டைசி வருடங்கள் 9:153-55 ஐ நாம் ப‌ய‌ன்ப‌டுத்துகிறோம்).

 
முஹம்மதுவின் இறுதி கால‌த்தில் தொகுக்க‌ப்ப‌ட்ட‌ ஆஸ்திக‌ளின் ப‌ட்டிய‌லில், (குதிரைக‌ள், ஒட்ட‌க‌ங்க‌ள், பால் கொடுக்கும் ஆடுக‌ள் போன்ற‌வைக‌ள்) த‌ப‌ரி, முஹம்மதுவின் ஆயுத‌ங்க‌ளின் புனை‌ப் பெய‌ர்க‌ளைப் ப‌திவு செய்கிறார்.

 
முஹம்மது, கெயின்கா(Qaynuqa) என்ற யூதக் கூட்டத்தை மதீனாவிலிருந்து ஏப்ரல் 624 ல் துரத்திவிட்டபோது எடுத்துக்கொண்ட மூன்று வாள்களுக்கு " பிடுங்குதல்" (Pluck Out), "மிகக் கூர்மை"(Very Sharp), "மரணம்"(Death) எனச் செல்லமாகப் பெயரிட்டிருந்தார். வேறு இரண்டு இடங்களிலிருந்து எடுத்த இரண்டு வாள்களுக்கு, " கூர்மை"(Sharp), "இது மிதக்காது" ("That is wont to sink" presumably into human flesh) எனப் பெயரிடப்பட்டது. அவரது ஹிஜராவிற்குப் பிறகு அல்லது 622ல் மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயற்தலுக்கு பிறகு அவரிடம், "கூர்மை" (Sharp) மற்றும் "முதுகெலும்புள்ளது" (Having the vertebrae of the back) என்றழைக்கப்படும் இரு வாள்கள் இருந்தன. இந்தக் கடைசி வாள் அவர், மார்ச் மாதம் 624 ல், பத்ரு போரில் (Battle of Badr) வெற்றியடைந்தபோது கொள்ளைப்பொருளாய் சேகரித்தது.

 
அடுத்து, முஹம்மது, கெயின்கா(Qaynuqa) கூட்டத்தினரிடமிருந்து மூன்று வில்களை எடுத்துக்கொண்டு அவைகளுக்கு "எளிதில் உபயோகிக்க ஏற்றது(Most conducive to ease) அல்லது அகலமானது(wide)", "வெண்மை(white)", மற்றும் "நாப் மரத்தினாலானது(of nab wood)" (வில் செய்ய பயன்படும் மரத்தின் வகை) எனப் பெயரிட்டிருந்தார்.

 
அவருடைய ஒரு மேலாடையின் பெயர் "போதுமானது"(ampleness) அல்லது "அளவுக்கதிகமான பகுதி"(redundant portions) என்று வைக்கப்பட்டு இருந்தது, முஹம்மது சற்று பருமனானவர் என்பதால் இப்பெயர்கள் வைக்கப்பட்டு இருக்கலாம். (cf. Ibn Ishaq, Life of Muhammad, trans. Guillaume, p. 383)

 
இறுதியாக‌,முஹம்மதுவுக்கும் கூட ஒரு புனைப்பெயர் இருந்தது. தபரி முஹம்மதுவை நல்லவராக காட்டும் பல பெயர்களை பட்டியலிட்டுவிட்டு, அவ்வளவாய் நல்லப்பெயர் என்று கருதமுடியாத‌ ஒரு பெயரையும் குறிப்பிடுகிறார், அந்தப்பெயர் "ஆதாரம் வைக்காமல் அழிப்பவர் -The obliterator" என்பதாகும், இதன் பொருள் ஒரு சுவடு கூட வைக்காமல் அழிப்பவர் என்பதாகும்.

 
இஸ்லாமிய ஆதரவாளர்கள் தபரியை அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்வதை ஆட்சேபிக்கலாம் (முஹம்மதுவை ஒரு வெற்றிச் சாதனையாளராகவும், வீரமிக்கவராகவும் அவ‌ர் காண்பிக்கும் போது தவிர). அவரின் ஆக்கம் குர்‍ஆனுக்கும் சில ஹதீஸ்களுக்கும் (குர்‍ஆனுக்கு அப்பாற்பட்டு, முஹம்மதுவின் வார்த்தைகளும் செயல்களும் அடங்கியவை) நிகராகக் கருதப்பட முடியாது என்றுச் சொல்வார்கள் இஸ்லாமியர்கள். இது உண்மையும் கூட. ஆனால், இஸ்லாமிய ஆதரவாளர்கள், முஹம்மதுவுடன் இத்தகைய ஆயுதங்களைப் பெயரிடுவதைக் குறித்த சம்பிரதாயங்களைத் தொடர்புபடுத்திக் கூறப்படுவது ஏன் என‌ விளக்கக் கடமைப்பட்டுள்ளனர். பிற்காலத்தில் இயேசுவைக் குறித்தும் கூட, ஆதாரபூர்வமற்ற, நடைமுறைகள் பற்றிய‌ செய்திகள் எழுந்தன. அவைகளும், அவர் ஆயுதங்களுக்குப் பெயரிட்டதாகக் கூட அல்ல, அவைகளை வைத்திருந்ததாகவே கூறவில்லை. முஹம்மதுவைப் பற்றிய இந்தக் கேள்விக்கு அடுத்த ஒன்பது காரணங்களில் பதில் உள்ளது.

 
இந்த‌த் தொடுப்பில் உள்ள‌ க‌ட்டுரையும் இது போன்றே இத்தொடுப்பில் உள்ள கட்டுரையும், வாள் ப‌ற்றிய‌ இயேசுவின் க‌ருத்தை மிகத் தெளிவாக விவரிக்கிறன‌. நிச்ச‌ய‌மாக‌வே அவ‌ர் வாளை உவகையுடன் கையாண்டோ, பெருமையாக அத‌ற்கு புனைப் பெயரிட்டு அழைத்தோ , அதினால் ம‌கிழ்வுற‌வோ இல்லை, வாள்களை பெருமையாக மற்றவர்களுக்கு காட்டி சந்தோஷப்பட்டதோ இல்லை.

 
இவ்வ‌ண்ண‌மாய், வ‌ன்முறை, முஹம்மதுவின் வாழ்க்கையிலும், ஆர‌ம்ப‌ம் தொட்டே, இஸ்லாமின் இதயத்திலும் அமர்ந்துள்ளது. அத‌னால் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அல்ல‌.
 
 
9. குர்‍ஆனில், முஹம்மது விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நூறு ச‌வுக்கடிகள் தண்டனையாகப் பெற வேண்டும் எனக் கட்டளையிடுகிறார்.

Muhammad commands in his Quran that adulterers and adulteresses should receive a hundred lashes.


 
 
குர்‍ஆன் சூரா: 24:2 விபசாரியும், விபசாரனும் இவ் விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

 
 
சரித்திர பூர்வமாக இந்த குர்‍ஆன் சூரா(வசனம்) கொடுக்கப்பட்டது, டிசம்பர் 627 அல்லது ஜனவரி 628ல் முஹம்மது, ஒரு கூட்டத்தின் மீது நடத்திய தாக்குதலின் போதுதான். இதில் தான் முஹம்மது அவரது வலது கரம் போன்றிருந்த தளபதி அபு பக்கரின் மகளும் தனது பிரியத்திற்குரிய மிகவும் இளையவரான மனைவி ஆயிஷாவையும் உடனழைத்து வந்திருந்தார். முஸ்லீம்களின் வெற்றிக்குப் பிறகு அவர்கள் நூற்றைம்பது மைல் தொலைவில் உள்ள மதீனாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் இறுதியாக இராத்தங்கிய இடத்தில், ஆயிஷா, தன் இயற்கை உந்துதலுக்காக அருகில் சென்றிருந்தபோது இருட்டில் தனது நெக்லஸைத்(Necklace) தொலைத்துவிட்டார். அந்தப்படை விடிகாலையில் தங்கியிருந்த இடத்தினின்று புறப்படும் வேளையில், ஆயிஷா, தனது நெக்லஸைத் தேடுவதற்காக தனது ஒட்டகத்தின் மீது இருக்கும் அம்பாரியினின்று இறங்கி, தேடி அதைக் கண்டுபிடித்துவிட்டார். இதற்கிடையில், அந்த ஒட்டகத்தை நடத்துபவன், ஆயிஷா அந்த திரையிடப்பட்ட அம்பாரியினுள் தான் இருக்கிறார் என எண்ணி ஒட்டகத்தை நடத்திச் சென்றுவிட்டான். திரும்பிவந்த ஆயிஷா, தான் தனித்து விடப்பட்டுப் போனதை உணர்ந்தார்.

 
எனினும், சஃப்வான் (Safwan) என்ற ஒரு அழகான முஸ்லீம் வாலிபன், ஆயிஷாவைப் பார்த்து, மதீனா வரை அவருடன் சென்றான். அந்த இரு இளையவர்களும் ஒன்றாக நகருக்குள் நுழைவதைப் பார்த்த முஸ்லீம்களும், முஹம்மதுவின் எதிர்ப்பாளர்களும் அவர்களுக்கெதிராக வார்த்தைகளை வீசினார்கள். இதன்பலனாக சிறிது நேரம் சென்று, ஆயிஷா எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் தவறான நடத்தை அவர்மீது சுமரப்படவில்லை என்றும் வெளிப்பாடு தோன்றியது.

 
குர்‍ஆன் சூரா24, விபச்சாரத்திற்கு எதிராக சில அடிப்படை விதிகளை நியமித்துள்ளது. அதில் நூறு சவுக்கடி தண்டனையாக கொடுக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு விதி. ஆச்சரியப்படும் விதமாக குர்‍ஆன் சூரா24:2 குற்றம் சாட்டுபவர்களும் தீர்ப்பிடுபவர்களும் கடவுளின் சட்டத்தை நிறைவேற்றுவதை இரக்கம் தடை செய்யலாகாது என வலியுறுத்துகிறது.

 
மேலும், ஆரம்பகால‌ நம்பிக்கைக்குரிய‌ பாரம்பரியங்கள், அதாவது மிகவும் நம்பத்தகுந்த ஹதீஸ்களை எழுதிய புகாரி (AD 810-870) மற்றும் முஸ்லீம் (AD 817-875) ஆகியோர் பதிவு செய்துள்ளபடி, முஹம்மதுவையும் அவரது முஸ்லீம்களையும் விபச்சாரம் செய்யும் ஆண்களையும் பெண்களையும் கல்லெரிந்து கொல்பவர்களாய்க் காண்பிக்கின்றன.

 
 
உமர் சொன்னது: இறைவன் முஹம்மதுவை சத்தியத்துடன் அனுப்பி, அவரிடம் புத்தகத்தை (குர்‍ஆன்) இறக்கினார். மகா மேன்மைபொருந்திய இறைவன் இறக்கியதில், கல்லெரிதல் என்கின்ற வசனமும் அடங்கியிருந்தது. இறைவனின் தூதர் (முஹம்மது) மக்களை சாகும்வரை கல்லெரியச் செய்தார். அவரின் மரணம் வரை நாங்களும் அதைச் செய்தோம். தகாத உறவில் ஈடுபடும் மணமான ஆண்களையும் பெண்களையும் அது நிரூபிக்கப்படும் பட்சத்திலோ, கர்ப்பம் தரித்தாலோ அல்லது அதனை ஒப்புக்கொண்டாலோ, கல்லெரிதல் நம் கடமை என‌ இறைவனின் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

 
 
Umar said: God sent Muhammad with the truth and sent down the Book [Quran] to him, and the verse of stoning was included in what God most high sent down.God's messenger [Muhammad] had people stoned to death, and we have done it also since his death. Stoning is a duty laid down in God's Book for married men and women who commit fornication when proof is established, or if there is pregnancy, or a confession.

Muslim no. 4194

 
 
உமர் என்பவர் முஹம்மதுவின் வலது கரத்தினைப் போன்ற தளபதியாவார் (அபு பக்கரும் கூட). முஹம்மதுவின் மரணத்திற்குச் சில காலம் பின்பும் கூட, குர்‍ஆனில் கல்லெரிவது தொடர்பான வசனங்களைப் பெற அவர் மிகவும் முயன்றார், ஆனால் அவர் அதில் வெற்றியடையவில்லை (Ibn Ishaq, Life of Muhammad, trans. Guillaume, p. 684). இப்படி இருப்பினும், கீழ்கண்ட ஹதீசும் அதற்கு அடுத்ததும் கல்லெறிவதை முஸ்லீம்கள் ஆதரிக்கப் போதுமானவைகளாய் இருக்கின்றன‌. [1], [2], [3], [4].

 
பின் விவ‌ரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து தான் அனேக‌மாக‌ அதிக‌ப‌ட்சக்‌ கொடுமையாக‌ இருக்கிற‌து:

 
ஒரு பெண் ந‌பியிட‌ம் வந்து, த‌ன்னைச் சுத்திக‌ரிக்கும்படி (அவ‌ள‌து பாவ‌த்திற்காக‌ த‌ண்ட‌னை அடைவதன் மூலம்) கேட்டாள். அத‌ற்கு அவ‌ர், அவள் சென்று இறைவனிடம் பாவ ‌ம‌ன்னிப்புக்காக‌ வேண்டிக் கொள்ளும்படிச் சொல்லி அனுப்பிவிட்டார். அவள் நான்கு முறை மறுபடியும் மறுபடியும் வந்து, த‌காத‌ உற‌வின் மூல‌ம் தான் க‌ர்ப்ப‌வ‌தியான‌தை ஒப்புக் கொண்டாள். அவ‌ர் அவ‌ளிட‌ம் குழந்தை பிற‌க்கும்வ‌ரை பொறுத்திருக்க‌ச் சொன்னார். அத‌ன் பின்பு, முஸ்லீம் ச‌முதாய‌த்தினரிட‌ம் அவ‌ள் குழந்தை பால் ம‌ற‌க்கும் ம‌ட்டும் காத்திருக்குமாறு கூறினார். அக்குழ‌ந்தை, திட‌ உண‌வு உட்கொள்ளும் கால‌ம் வ‌ந்த‌ போது, முஹம்மது குழ‌ந்தையை ச‌முதாய‌த்தின‌ரிட‌ம் கொடுத்து விட்டு அந்த‌ப் பெண்ணை கல்லெரிந்து கொல்ல‌ ஆணையிட்டார்.

 
 
அவர் அவளுக்காக‌ க‌ட்ட‌ளை கொடுத்து, அவ‌ள் அவளது மார்பு வ‌ரை குழியில் புதைக்க‌ப்ப‌ட்ட‌வுட‌ன், மக்கள் அவள் மீது க‌ல்லெரியும்ப‌டிக் க‌ட்ட‌ளையிட்டார். கலித் பி. அல்வலித் என்ப‌வ‌ர் ஒரு கல்லுடன் முன்வந்து, அதை அவள் தலையை நோக்கி எறிந்தார். இரத்தம் முகத்திலிருந்து வெளிப்பட்ட போது அவர் அவளைச் சபித்தார்…

 
 
And when he had given command over her and she was put in a hole up to her breast, he ordered the people to stone her. Khalid b. al-Walid came forwardwith a stone which he threw at her head, and when the blood spurted on his face he cursed her. (Muslim, no. 4206)

 
 
முஹம்மது, கலித்தை சற்று நிதானமாக(Gentle) இருக்க‌ச் சொன்னது உண்மைதான். ஆனால், மார்பு வரையிலும் புதைபட்டிருக்கும் ஒருபெண்ணை நோக்கி ஒரு கல்லை எறிபவர் எந்த அளவுக்கு நிதானமாக எறிய‌ முடியும்? நாற்பது மைல் வேகத்தில் செல்லவேண்டிய கல் முப்பது மைல் வேகத்தில் செல்ல வேண்டுமா? ஒருவேளை, முஹம்மது கலித்தை அவளைச் சபிக்காதிருக்கும்படிச் சொல்லியிருக்கலாம். எது எப்படியாயினும், நபி, அந்தப் பெண்ணினுடைய இறந்த சடலத்தின் மீது துவா(ஜெபம்) செய்து, பின்பு அடக்கம் செய்தார். முஹம்மதுவும் அவரது சமுதாயத்தினரும் அந்தப் பெண்ணை இரக்கமின்றிக் கொலை செய்துவிட்டுச் செய்த‌ அந்த துவா(ஜெபம்) உண்மையிலேயே எந்த அளவுக்கு பலனுள்ளதாய் இருந்திருக்கும்? அவர்கள் அவளை மன்னித்து தன்னுடைய குழந்தையை வளர்க்கச் செல்ல அவளை அனுமதித்திருக்க வேண்டும்.

 
 
இன்றுள்ள‌ முஸ்லீம் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் சில‌ர், இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளாத போதிலும், அவர்கள் ஏன் உண்மையான இறைவன் குர்‍ஆன் சூரா24:2ல் உள்ளபடி சவுக்கடி கொடுப்பது போன்ற ஒரு கொடிய தண்டனையை இறக்க வேண்டும் என்பதினை விளக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில், புதிய ஏற்பாடு இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. எனவே கிறிஸ்தவர்கள், இந்த வசனத்தை அவசியம் நிராகரிக்க வேண்டும். ஏனெனில், கிறிஸ்து, விபச்சரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணை மன்னித்து, இனிமேலும் பாவம் செய்யாதே எனக்கூறி அனுப்பிவிட்டார். ( யோவான் 8:1- 11). அவர் நமக்கு நல்லதொரு வழியைக் காண்பித்து உண்மையான இறைவனின் சித்தத்தை நமக்கு விள‌ங்க‌ப் ப‌ண்ணினார்.

 
 
முந்தின தண்டனைகள் பற்றியும் அவைகள் இன்றைய நாளில் எவ்விதம் வழங்கப்படுகின்றன என்பன குறித்த‌ கூடுதல் தகவலுக்கு இந்த தொடுப்புக்குச் செல்லவும். இது முஸ்லீம் ஆதரவாளர்களுக்குப் பதிலளிப்பதுடன் யோவான் 8:1-11 ஐ முழுவதுமாக விளக்குகிறது.

 
ஆக‌, கொடுமையான வன்முறை ஆரம்பகால‌ இஸ்லாமின் இதயத்தில் வீற்றிருந்தது - முஹம்மதுவின் வாழ்விலும் அவரது குர்‍ஆனிலும் வன்முறை காணப்பட்டது. எனவே இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அல்ல‌.
 
 
8. முஹம்மது அவரது குர்‍ஆனில் கணவன்மார்கள் அவர்களது மனைவிகளை அடிக்க அனுமதிக்கிறார்

Muhammad in his Quran permits husbands to beat their wives
 
 
சூரா 4:34 (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
 
 
உஹுத் போரின் (மார்ச் மாதம் 625) சரித்திர பூர்வமான சூழலில், இஸ்லாம் 70 புனிதப் போர்வீரர்களை இழந்திருந்த தருவாயில் எழுதப்பட்ட பல வசனங்கள் அடங்கிய தொகுப்பில், இந்த வசனமும் அடங்கும். இவை குடும்ப‌ங்க‌ள் குறித்த‌, அதாவ‌து சொத்துக‌ளைப் பங்கிடுவ‌து ம‌ற்றும் அனாதைக‌ளின் ஆஸ்திக‌ளை நிர்வ‌கிப்ப‌து போன்ற‌ ச‌ட்ட‌ங்க‌ளை விவ‌ரிக்கின்ற‌து(வசனங்கள் 1-35).

 
வெளிப்படையாகச் சொல்லப் போனால், குர்‍ஆன் சூரா4:34, கணவன்மார்கள் தங்களின் கீழ்ப்படியாத மனைவிகள் அத்துமீறினார்கள் என்று கருதினால் அவர்களை அடிக்கலாம் (அவர்கள் உண்மையிலேயே அத்துமீறினார்களா என்பது வேறு விஷயம்) என்று தெரிவிக்கிறது. இது மனைவிகளின் நடத்தை பற்றிய கணிப்பு கணவர்களின் தீர்ப்பையே சார்ந்து இருப்பதாகவே அமைகிறது. எனவே இது மனைவிகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு (துஷ்பிரயோகத்திற்கு) வழிவகுப்பதாக உள்ளது. இந்த வசனம் ஒரு மிகப்பெரிய பண்பாடு மற்றும் சமுதாயப் பின்னடைவினை உள்ளடக்கப்படுவதாய் உள்ளதால் சரியான நேர்மையான‌ சிந்தனையுள்ள மக்கள் எல்லாரும் இதனை நிராகரிக்க வேண்டும்.

 
முஹம்மதுவின் காலத்தில் இருந்த திருமணச் சட்டத்தினால் உண்டான குழப்பத்தினால், முஸ்லீம் பெண்கள், வீட்டில் நடக்கும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்று ஹதீஸ் கூறுகின்றது.

 
வினோதமான மறுமணச்சட்டமும் திருமணம் குறித்த குழப்பங்களும் நிறைந்த சந்தர்ப்பத்தில், ஆரம்பகால முஸ்லீம் சமுதாயத்தில் இருந்த மனைவிகள் குறித்த‌ இந்த நிகழ்ச்சி பற்றி புகாரி தெரிவிக்கிறார்.

 

 

ரிஃபா என்பவர் தன் மனைவியை விவாக ரத்து செய்தவுடன், அப்தூர்ரஹ்மான் பின் அஜ்ஜுபைர் அல்குராஜி அவளை மறுமணம் செய்தார். அந்தப் பெண் ஒரு பச்சை நிற முக்காட்டினைப் போட்டுக்கொண்டு ஆயிஷாவிடம் வந்து தன் உடம்பில் உள்ள அடித்ததினாலுண்டான ஒரு பச்சை நிற தடிப்பைக் காண்பித்து அவளது கணவனைப்பற்றி புகார் கூறியதாக ஆயிஷா தெரிவித்தார். பெண்கள் ஒருவரை ஒருவர் தாங்கி உதவுவது வழக்கம். எனவே இறைத்தூதர் வந்தபோது ஆயிஷா, " ந‌ம்பிகையாளராகிய இந்தப் பெண்போல ஒருவரும் துன்பப்பட்டிருக்க முடியாது. அவளது சருமம் அவளின் ஆடைகளைவிடப் பச்சையாக உள்ளது பாருங்கள்" எனக் கூறினார். (புகாரி)

 

Rifa'a divorced his wife whereupon 'AbdurRahman bin Az-Zubair Al-Qurazi married her. 'Aisha said that the lady (came), wearing a green veil (and complained to her(Aisha) of her husband and showed her a green spot on her skin caused by beating). It was the habit of ladies to support each other, so when Allah's Apostle came, 'Aisha said, "I have not seen any woman suffering as much as the believing women. Look! Her skin is greener than her clothes!" (Bukhari, emphasis added)


 
 
இந்த ஹதீஸ் முஹம்மது அவரின் வலது கரம் போன்றிருந்த தோழர் அபுபக்கரின் மகளும், தன் இள‌வயதுடைய‌ மனைவியுமான‌ ஆயிஷாவை (கீழ்கண்ட rule no.1ஐப் பார்க்கவும்) அடித்ததாகச் சொல்கிறது.

 
"அவர் எனக்கு (ஆயிஷா) வலி ஏற்படும்வண்ணமாக எனது மார்பில் அடித்தார்." (முஸ்லீம் 2127)

 
"He [Muhammad] struck me [Aisha] on the chest which caused me pain." (Muslim 2127)

 
 
வலி ஏற்படும் விதமாக அடிப்பது குறித்த இந்தப் பழக்கத்தினைப் பற்றிய முழு ஆய்வு இந்தத் தொடுப்பில் உள்ளது, இதில் இத்தலைப்புப் பற்றி புதிய விவாதங்கள் உள்ளன(இறுதிவரை செல்லவும்).

 
 
இந்த தொடுப்பில் உள்ள கட்டுரை நீண்டதாக இருப்பினும், இந்த ஹதீஸையும் ஆரம்பகால ஆவணங்களையும் ஆராய்ந்து மனைவியை அடிப்பது குறித்த தெளிவான விவரங்களை, அதனை எதிர்க்கும் இன்றைய‌ இஸ்லாமிய ஆய்வளர்களின் கருத்துடன் அறியத் தருகிறது. இந்த தொடுப்பில் உள்ள கட்டுரை இது குறித்த இஸ்லாமியரின் மறுப்பிற்கு பதிலளிக்கிறது. இத்தொடுப்பில் உள்ள கட்டுரை இந்த விஷயத்தை நன்கு ஆராய்ந்து குர்‍ஆன் சூரா4:34 ன் பல்வேறு மொழி பெயர்ப்புகளுடன் பதில் தருகிறது. அது இந்த ஹதீஸையும் முந்திய விளக்கங்களையும் குறிப்பிட்டு, சிறப்புமிக்க இஸ்லாமிய உரைகளை மேற்கோள் காட்டி, இன்றைய சமாளிப்புகளுக்கு மறுப்பளிக்கின்றது. இறுதியாக‌, ஒரு அரபி கிறிஸ்தவரால் எழுதப்பட்ட‌ இத்தொடுப்பில் உள்ள கட்டுரை குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், இஸ்லாமிய வல்லுனர்களின் கருத்துக்களையும் முற்றிலுமாக ஆய்வு செய்து, குர்‍ஆன் சூரா4:34ன் பல மொழிபெயர்ப்புகளை நமக்குத் தருகிறது.

 
இவ்விதமாக வீட்டில் நடக்கும் வன்முறைகள் ஆரம்பகால இஸ்லாமின் இதயத்திலும், குர்‍ஆனிலும், முஹம்மதுவின் வாழ்க்கையிலும் அமர்ந்துள்ளது என்பது விளங்குகின்ற‌து. எனவே இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கமன்று.
 
 
7. முஹம்மது தன் குர்‍ஆனில் ஆண் அல்லது பெண் திருடர்களின் கைகள் வெட்டப்பட வேண்டும் எனக் கட்டளை இடுகிறார்

Muhammad in his Quran commands that the hands of male or female thieves should be cut off
 
 
சூரா5:38 திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.

 
சூரா5:39 எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

 
 
ஹதீஸ்களின் மூன்று பத்திகள் முஹம்மதுவின் கொள்கைகளையும் அதன் சூழலையும் விவரிக்கின்றன. புகாரியிலிருந்தும் முஸ்லிமிலிருந்தும் சில பத்திகளை தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.

 

 

இறைத் தூதர் சொல்லியதாக ஆயிஷா (முஹம்மதுவின் பிரியமான மனைவி) தெரிவித்தார்: "கால் தினாருக்கும் அதற்கு மேற்பட்டவைகளுக்கு மட்டுமே ஒரு திருடனின் கை வெட்டப்பட வேண்டும்" (Bukhari Volume 8, Book 81, Number 782: இந்த தொடுப்பில் இதற்கு கீழுள்ள இரண்டு ஹதீஸ்களையும் படிக்கவும்,).

 
 
ஒரு தினார் என்ப‌து ரோம‌ரின் "தினாரியஸ்" என்பதிலிருந்து வரப்பெற்றது; இது ஒரு சிறிய தொகை அல்ல, அதே நேரத்தில் ஒரு பெரிய தொகையும் அல்ல. ஆயினும் கால் தினார் என்பது முஹம்மதுவின் பார்வையில் ஒரு கையை இழக்கத்தக்க அளவு மதிப்புள்ளது.

 

 

இறைத்தூதர், மூன்று திர்ஹம் மதிப்புள்ள ஒரு கேடகத்திற்காக ஒரு கள்வனின் கையை வெட்டச் செய்தார் என இபின் உமர் தெரிவித்தார். (Volume 8, Book 81, Number 788 புகாரியில் இதற்குக் கீழுள்ள மூன்று ஹதீஸ்களைப் பார்க்கவும்)

 
 
ஒரு கேடகம் சற்று விலையேறப்பெற்றது தான். முஹம்மதுவின் சேனையில் உள்ள ஏழையான ஒருவர் அதனை வாங்க இயலாது தான். ஆனாலும் ஒரு கேடகம் ஒரு கைக்கு இணையாகுமா?(http://debate.domini.org/newton/allah.html)

 

 

"ஒரு திருடன் ஒரு முட்டையைத் திருடி அவன் கை வெட்டப்பட்டும், ஒரு கயிற்றைத் திருடி, அதினால் அவன் கை வெட்டப்பட்டும் இருந்தால் அவன் கடவுளால் சபிக்கப் பட்டவன்" என இறைத்தூதர் சொன்னார் என்று அபூ ஹுரைரா தெரிவித்தார். (Volume 8, Book 81, Number 774, இதற்கு இணையான ஹதீஸ் இங்கு உள்ளது)

 
 
சில‌ உரையாளர்கள் ஒரு முட்டை என்ப‌து ஒரு த‌லைக்க‌வ‌ச‌ம் என்ப‌தாக‌வும், ஒரு க‌யிறு என்ப‌து க‌ப்ப‌லின் க‌யிறு என்ப‌தாக‌வும் கூறி, இவைகள் விலையேற‌ப்பெற்ற‌து என‌ச் சொல்கிறார்க‌ள். எனினும் மேலே க‌ண்ட‌ மொழிபெய‌ர்ப்பு பொதுவாக‌ ஏற்க‌ப்ப‌ட்டு சிறிய‌ திருட்டுக‌ளுக்கும் இத்த‌கைய‌ க‌டும் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌லாம் எனப் பொருள் கொள்ள‌ப்ப‌டுகிற‌து. ஆனால் அதிக‌ ம‌திப்புடைய‌ பொருட்க‌ள் என‌க் க‌ருத‌ப்ப‌ட்டாலும், அவைகள் கரங்களுக்கு சமமாக ஆகாது.

 
இந்தக் கொடிய வழக்கத்தினையும் அதனுடைய சரித்திரப் பின்னனியையும் பற்றிய கூடுதல் தகவலுக்கு இந்தத் தொடுப்பிற்குச் செல்லவும். இது இந்த வழக்கத்தினை ஆதரிக்கும் இஸ்லாமிய ஆதரவாளர்களுக்கு பதில் சொல்லி முஹம்மதுவினின்று இயேசுவை வேறுபடுத்திக் காட்டும். இயேசு இப்படிப்பட்ட தண்டனையை ஒருபோதும் ஆதரித்ததில்லை, இந்த விவரங்களே இப்போதைக்கு போதுமானது. அப்போஸ்தலனாகிய பவுல், " திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன் ." என‌ எபேசிய‌ர் 4:28ல் கூறி அவ‌னுடைய‌ கை வெட்ட‌ப்ப‌டுத‌ல் கூடாது எனச் சொல்கிறார். இதன் மூலம் முஹம்மதுவை விட பவுல் மேலானவர் என்பதை வெளிப்படுத்துகிறார் (So Paul excels Muhammad).

 
இவ்வண்ணம், கடுமையான தண்டனையின் மூலமான வன்முறை இஸ்லாமின் இதயத்தில், அதாவது முஹம்மதுவின் வாழ்விலும் குர்‍ஆனிலும் வீற்றிருப்பதனால் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமன்று எனபது திண்ணம்.
 
 
6. முஹம்மது ஆண் கவிஞர்களையும் பெண் கவிஞர்களையும் கொலை செய்கிறார்

Muhammad assassinates poets and poetesses
 
 
கீழ்கண்ட இரு கவிஞர்களையும் ஆரம்பகால‌ இஸ்லாமில் இருந்த மற்றவர்களின் சார்பாக உதாரணமாக‌ எடுத்துக்கொள்ளலாம்.
 
 
மார்ச் மாதம் கி.பி. 624: அக்பா பின் அபூமுயத்(Uqba bin Abu Muayt)

 
அக்பா மக்காவில் முஹம்மதுவை மதிப்புக் குறைவாக விமர்சித்து எழுதி கேலி செய்தார். அவ‌ர் பத்ரூ போரில் பிடிக்க‌ப்ப‌ட்ட‌போது முஹம்மது அவருக்கு ம‌ர‌ண‌ த‌ண்டனையை வழங்கினார். அப்போது அக்பா மிகுந்த ம‌ன‌ச்ச‌ஞ்ஞ‌ல‌த்துட‌ன் "முஹம்மதுவே! என் பிள்ளைக‌ளை யார் காப்பாற்றுவார்க‌ள்?" எனக் கதறினார். உனக்கு "நரகம்" தான் என்று நபி அமைதியாக கூறினார். அதன் பின்பு இறைத்தூதரின் அடியார்க‌ளுள் ஒருவ‌னின் வாள் அக்பாவின் கழுத்தை வெட்டியது.

 
மார்ச் மாதம் கி.பி. 624: அஸ்மா பின்ட் மர்வன் (Asma bint Marwan)

அஸ்மா (Asma) என்பவள் மதீனாவில் உள்ள ஒரு பழங்குடி மதக் கூட்டத்தினைச் சேர்ந்த பெண் கவிஞர் ஆவார். யாஜித் பி. ஜையத் என்பவன் அவளது கணவனாவார். அவள் மதீனாவின் தன் பழங்குடி மக்களை, அவர்கள் ஒரு புதியவரான முஹம்மதுவுக்கு அடிபணிந்து, அவர்மீது எதிபாராத தாக்குதல் நடத்தாமலிருந்ததாகக் குறை சொல்லி ஒரு பாடல் இயற்றினாள். அவள் சொன்னதைக் கேள்விப்பட்ட இறைத்தூதர், "எனக்காக அந்த மார்வானின் மகளை அழிப்பவர் யார்?" என்றார். அவளது கணவனின் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன், முன்வந்து, அன்றிரவு அவளின் வீட்டிற்குள் பதுங்கிச் சென்றான். அவளுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தன; அவர்களில் கடைக்குட்டி அவளின் மார்பில் உறங்கிக்கொண்டிருந்தான். தாக்குதலுக்குச் சென்றவன் அந்தக் குழந்தையை மெதுவாக அவளின் மார்பிலிருந்து விலக்கிவிட்டு, அவனது வாளை உருவி அவள்மீது பாய்ச்சி அவளைத் தூக்கத்திலேயே கொன்றான்.

மறுநாள் காலையில் அந்தக் கொலைகாரன், அவன் மீது பழிவாங்குபவர்கள் யாரேனும் உள்ளனரா எனச் சவாலிட்டான். அவளது கணவன் உள்ளிட்ட ஒருவரும் அந்த சவாலுக்கு மறுமொழி கூறவில்லை. உண்மையில், அவனது கூட்டத்தில் இஸ்லாம் வலுப்பெற்றிருந்தது. முன்பு இரகசியத்தில் மாறினவர்கள் கூட பகிரங்கமாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டனர் என்று அறிவித்தனர். இந்தத் தாக்குதலை விவரிக்கும் ஆரம்பகால‌ இஸ்லாமியத் தகவல் ஆதாரம் ஒன்று, "இஸ்லாமின் வலிமையை அவர்கள் கண்டார்கள் – because they saw the power of Islam" என சொல்கிறது.
 
 
தாக்குதல்களைப் பற்றி விளக்குகின்ற மேலே கண்ட விவரங்கள் தவிர‌, குர்‍ஆனும், கேலி செய்பவர்களுக்கும் குறைகூறுபவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படுவதை ஆதரிக்கிறது. (சூராக்கள் 3:186; 33:57; 33:59-61; மற்றும் 9:61-63).

 
குர்‍ஆனில் இல்லாத இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் பற்றிய குறிப்புகளை முஸ்லீம்கள் மறுத்தாலும், பின்வரும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

 
1) இணக்கமான இஸ்லாமியச் சூழ்நிலையில் இத்தகைய நடைமுறைகள் முஹம்மதுவச் சுற்றி ஏன் வளரவேண்டும்? (Why would such a tradition grow up around Muhammad in friendly Islamic sources?)

 
2) முஹம்மதுவைப்பற்றி இவ்வாறான குறிப்புகள் வருவதற்கான காரணம் என்ன? (What was it about Muhammad that produced such reports?)

 
3) இதுபோன்ற இஸ்லாமை ஆதரிக்கும் நட்பின் வட்டம் தங்களின் இறைத்தூதரை இவ்வாறான "முற்போக்கு" வழியினில் ஏன் எடுத்துக் காண்பிக்க ஆவலாய் இருக்க வேண்டும்? 9 Why are these friendly sources eager to present their prophet in a "positive" way?)

 
கவிஞர்கள் மீது முஹம்மதுவின் வன்முறைத் தாக்குதல்கள் பற்றிய ஆழ்ந்த அலசலுக்கும், இன்று அவர்கள் ட‌ச்சு சினிமா தயாரிப்பாளராகிய தியோ வான் கோ போன்ற கலைஞர்களின் மீது ஏவிவிட்ட வன்முறைகளை நியாயப்படுத்துவது குறித்தும் இந்தத் தொடுப்பில் உள்ள கட்டுரையில் வாசிக்கலாம். இது முஹம்மதுவின் பயங்கரவாதக் கொள்கைகளை நியாயப்படுத்த முயற்சிக்கும் இன்றைய முஸ்லீம் ஆதரவாளர்களுக்கு பதிலளிப்பதுடன் ஆரம்பகால கிறிஸ்துவம் எவ்விதம் ஆரம்பகால இஸ்லாமிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாயிருந்தது என எடுத்துக் காண்பிக்கிறது - இயேசு ஒருவரை யும் கொலை செய்யவுமில்லை, மற்றவர்களை கொல்லுங்கள் என்று நற்செய்தி நூலகளில் அவர் ஆணையிடவும் இல்லை.

 
இந்த நான்கு தொடுப்புகளில்(ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு) சென்று கவிஞர்கள் மீதான மூன்று தாக்குதல்கள் மற்றும் கவிஞர்களல்லாத‌ பிறர் மீதான தாக்குதல்கள் குறித்து மேல் விவ‌ரங்களை அறிந்து கொள்ளுங்கள். இந்தப் பக்கங்களில் முஹம்மது தன்னுடைய தனிப்பட்ட விரோதிகளை எவ்விதம் கையாண்டார் என்பன பற்றிய விவரங்களைத் தரும் தொடுப்புகள் உள்ளன‌.

 
அச்சுறுத்தலும் கொலை வெறியும் ஆரம்பகால இஸ்லாமிலும், முஹம்மதுவின் வாழ்விலும் குர்‍ஆனிலும் இருப்பதினால் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமன்று.
 
 
 
5. சண்டையிடுவோருக்கும், நாட்டைக் கெடுப்போர்க்கும் தண்டனையாக, கைகளை கால்களை வெட்டுதல் மற்றும் மரண தண்டனை விதித்தல் போன்றவற்றை முஹம்மது குர்‍ஆன் மூலம் கட்டளையிடுகிறார்

Muhammad in his Quran commands death or the cutting off of hands and feet for fighting and corrupting the land
 
 
குர்‍ஆன் சூரா5:33-34 அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்;. மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு. நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
 
 
ஹதீஸ்களின்படி சரித்திரபூர்வமாக இந்த வசனத்தின் அடிப்படையில் "சண்டையிடுதல்" மற்றும் "நாட்டைக் கெடுத்தல்" என்பவைகள் கீழ்க்கண்டவாறு விளக்கப்படுகின்றன‌.

 
சில அரபி இனமக்கள் முஹம்மதுவைச் சந்திக்க வந்தபோது மதீனாவின் சீதோஷ்ண நிலை அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாததினால் நோய்வாய்ப் பட்டனர். அப்போது அவர்களுக்கு பழைய வழக்கத்தின்படி முஹம்மது பரிகாரம் சொன்னார்: அவர்களுக்கு ஒட்டகப்பாலும், அதின் சிறுநீறும் கொடுக்கப்பட்டது. அதனால் அவர்கள் சற்றுக் குணமடைந்தனர். அதன்பின்பு ஏதோ ஒரு காரணத்தினால், அவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற பின்பு, முஹம்மதுவின் சீடர்களாயிருந்த சில மேய்ப்பர்களை அவர்கள் கொன்றுபோட்டு, அவர்கள் இஸ்லாமிலிருந்து வெளியேறிவிட்டனர். இறைத் தூதரின் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு போய் விட்டனர்.

 
இந்தச் செய்தி அவருக்குத் தெரிந்தபோது அவர்களைத் துரத்திப்பிடித்து தன் முன்பு கொண்டுவரப்பட அவர் ஆணையிட்டார். அவர்கள் கைகளும் கால்களும் வெட்டப்படவும், கண்கள் தோண்டப்பட்டு அவர்கள் உடல்கள் பாறையான தரையில் சாகும்வரையிலும் கிடத்தப்படவும் அவர் தீர்ப்பளித்தார்.

 
பலவீனர்களை ஆக்கிரமித்துச் சுரண்டுதல், சாதிப்பாகுபாடுகள், குடும்ப உறவில் உண்டாகும் விரிசல்கள் போன்ற‌ நிச்சயமற்ற குற்றச்சாடுக்களுக்காக குர்‍ஆன் சூரா5:33 ன் படி மக்களைத் தண்டிக்க ஏற்படுத்த்ப்பட்ட இத்தகைய கொள்கைகளைப் பற்றிய தகவல்களுக்கு இந்தத் தொடுப்பைப் பார்க்கவும். முஸ்லீம் ஆதரவாளர்களுக்கான பதில்களுக்கு இந்தத் தொடுப்பைப் பார்க்கவும். இது கிறிஸ்துவை முஹம்மதுவினின்று வேறுபடுத்திக் காட்டும். இந்த‌ சிறிய கட்டுரை இந்த வசனத்தின் பின்னணியில் இக்கொடூரமான சட்டத்தினை விள‌க்கும். முஹம்மது மக்களை சித்திரவதை செய்தார்.

 
இவ்விதமாகவே, கொடூரமான வன்முறை ஆரம்ப இஸ்லாமின் இதயத்திலும், அதாவது, முஹம்மதுவின் வாழ்விலும், குர்‍ஆனிலும் காணப்படுவதால் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் இல்லை.
 
 
 
4. முஹம்மது மக்காவின் வர்த்தகர் கூட்டத்தின் (caravans) மீது தீவிரத் தாக்குதல்கள் நடத்துகிறார்

Muhammad aggressively attacks Meccan caravans


 
கி.பி. 622ல் முஹம்மது மக்காவிலிருந்து மதீனா வரையிலான ஹிஜ்ராவிற்கு பிறகு சுமார் ஓராண்டிற்குப் பின்பு, அவர் மக்காவின் வர்த்தகர் கூட்டங்களின் (caravans) மீது ஆறு முறை தாக்குதல்க‌ள் நடத்தினார். மேலும் மதீனாவின் மேய்ச்சல் ஒட்டகங்களை (அல்லது கால் ந‌டைகளை) திருடிக்கொண்டு மூன்றுநாள் தொலைவில் சென்ற அரபுக் கூட்டத்தினரைத் தண்டிப்பதற்காக பின் சென்றதையும் சேர்த்து மொத்தம் ஏழு முறை தாக்குதல் நடத்தியுள்ளார்.

 
முஹம்மதுவிற்கு ஆதரவாக எழுதும் பிரபல மேற்கத்திய நாட்டினரும் இஸ்லாமின் சரித்திர ஆராய்ச்சியாளருமான W. Montgomery Watt என்பவர் எழுதிய இரு புத்தகங்கள் அடங்கிய சரித்திர நூல்கள் ஆரம்ப கால இஸ்லாம் பற்றியவை. பெரும்பாலானவர்களின் அங்கீகாரத்தினைப் பெற்ற இந்த சரித்திரம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது, "மக்காவில் முஹம்மது (1953) மற்றும் மதீனாவில் முஹம்மது (1956)" என்பனவாகும். இப்புத்தகங்கள் எவ்விதம் புவியியல் முக்கிய‌மாக அமைந்தது என்பதை விளக்குகின்றன‌.
 
 
இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் முஸ்லீம்கள்தான் முதலில் படையெடுத்தார்கள் என்பதே. ஏழு படையெடுப்புகளில் ஒன்றைத்தவிர மற்ற‌வை அனைத்தும் மக்காவின் வர்த்தகர் கூட்டத்தை (Caravans) நோக்கித் தான் ஏவப்பட்டன. மக்காவிலிருந்து சிரியா செல்லும் வர்த்தகர் கூட்டம் மதீனாவையும் கடற்கரையையும் கடந்துதான் செல்லவேண்டும். கூடுமான வரை செங்கடலை ஒட்டியே சென்றாலும், மதீனாவிலிருந்து சுமார் எண்பது மைல் தொலைவில்தான் கடந்துச் செல்ல வேண்டும். எதிரியின் முகாம் இந்தத் தொலைவில் இருந்தாலும் அவர்களின் சொந்த முகாம் இரு மடங்கு தூரத்தில் தான் இருக்கும்.(மதீனாவில் முஹம்மது பக்கம் 2, emphasis added )

 
The chief point to notice is that the Muslims took the offensive. With one exception the seven expeditions were directed against Meccan caravans. The geographical situation lent itself to this. Caravans from Mecca to Syria had to pass between Medina and the coast. Even if they kept as close to the Red Sea as possible, they had to pass within about eighty miles of Medina, and, while at this distance from the enemy base, would be twice as far from their own base. (Muhammad at Medina, emphasis added, p. 2)
 
 
இந்தக் காலத்தில் மக்காவினர் தங்களது படையினை ஒருபோதும் மதீனாவுக்கு அனுப்பியதில்லை என உறுதிபடக் கூறலாம். பின் நாளில் முஹம்மதுவின் ஆக்கிரமிப்புகளினால் வெறுப்படைந்து அவர்கள் படைகளை அனுப்பினர். மக்காவினர் அவர்களது வர்த்தகர் கூட்டத்தைப் பாதுகாக்க தங்கள் படைகளைத் திரட்டியது உண்மைதான். ஆனாலும் முஹம்மது அவர்களை எதிர்கொண்ட‌போது அவர்கள் மதீனாவிலிருந்து பல நாட்கள் பயண தூரத்தில் இருந்தனர். பெரும்பாலும் இந்த தூரம் எண்பது மைல்களுக்கு மேலாகவே இருந்தது. மதீனாவிலிருந்து மக்கா 200 - 250 மைல் தூரம் இருந்தது. கால் நடையாகவோ, குதிரை மீதோ அல்லது ஒட்டகத்தின் மீதோ இதனைக் கடக்க ஏழு முதல் பதினோறு நாட்கள் வரை ஆகும்.

 

 

எனவே இரு முஸ்லீம் ஆதரவாளர்களான ஆராய்ச்சியாளர்களின் கூற்று தவறான வழி காட்டுகிறது. இவர்களின் கூற்றுப்படி அந்த வர்த்தகர் கூட்டம் மதீனாவின் வழியாகச் சென்றார்களாம், அப்போது இஸ்லாமியர்கள் போர் தொடுத்து எவ்வளவு பொருட்களை பெறமுடியுமோ அவ்வளவு பொருட்களை பெற முயற்சி எடுத்தார்களாம், அதற்காக மக்கா வர்த்தர்கள் போர் தொடுத்தார்கள் என்பது நம்ப முடியாதவாறு உள்ளது.( Hence, two Muslim scholar-apologists are misleading when they assert that the caravans "passed through" Medina, adding that the Muslims haphazardly sought for whatever spoils they could get, whereas the Meccans mobilized for war (Isma'il R. al-Faruqi and Lois Lamya'al Faruqi, The Cultural Atlas of Islam, New York: Macmillan, 1986, 134). ஆகவே முஸ்லீம்கள் மக்காவினரை படையெடுப்பின் மூலம் துன்புறுத்தினார்கள் என்பதே சரியாக இருக்க முடியும்.



 

 

முஹம்மதுவின் வாழ்க்கையில் 622 ஆம் வருடம் முதல் 632 ஆம் ஆண்டு வரை நடந்த படையெடுப்புகள், திடீர் தாக்குதல்கள் மற்றும் போர்கள் பற்றிய முழு விவரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் வாட் (Watt), முஹம்மது செய்த அல்லது ஈடுபட்ட அனைத்து போர்கள், திடீர் தாக்குதல்களின் மொத்த எண்ணிக்கை எழுபத்து நான்கு எனக் குறிப்பிடுகிறார். (மதீனாவில் முஹம்மது பக்கம் 2:339 - 343). இதில் இந்த எண்ணிக்கையில் சில உடன்படிக்கை பேரங்களும் (இது வன்முறைத் தாக்குதல்களுடன் ஒப்பிட்டால் மிகக் குறைவானது தான்), அதிரடிக் கும்பலுடன் சிறிய அளவில் தாக்குதல்கள் நடத்தியவைகளும், 10,000 ஜிஹாதிகளுடன் மெக்காவைக் கைப்பற்றியதும், பைஜாண்டைன்(Byzantine ) கிறிஸ்தவர்களுடன் நடந்த மோதலும் (அவர்கள் பின்பு காணப்படவே இல்லை), Tabuk க்கு 30,000 புனிதப் போர்வீரர்களை அனுப்பியதும் அடங்கும்.(கீழே காணவும்)

 

மக்காவின் வணிகர் கூட்டத்தின் மீது நடந்த இந்த‌ ஆறு தீவிர‌ திடீர் தாக்குத‌ல்க‌ள் (வழிப்பறி கொள்ளைகள்) ப‌ற்றிய முழு விவ‌ர‌ங்க‌ளுக்கு இந்த‌த் தொடுப்பில் உள்ள கட்டுரையைப் பார்க்க‌வும். இது ஏன் இந்த‌த் தாக்குத‌ல்க‌ள் த‌ற்காப்புக்காக‌ செய்யப்பட்டவைகள் அல்ல என்பதை விள‌க்குகின்ற‌து.

 

இவ்வாறாக, தீவிரமான இராணுவ வன்முறை இஸ்லாமின் ஆரம்பத்திலேயும், முஹம்மதுவின் வாழ்விலும் குர்‍ஆனிலும் உள்ள படியால், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமே அல்ல‌.

 
 
3. முஹம்மது த‌ம்முடைய‌ குர்‍ஆனில் புனித‌மான‌ இராணுவ‌ப் போரில் ம‌ரித்த‌வ‌ர்க‌ளுக்கு ம‌கிழ்வுப் பூங்காவினை வாக்க‌ளிக்கிறார்

Muhammad in his Quran promises sensuous Gardens for martyrs dying in a military holy war


 
குர்‍ஆன் முழுவதிலும், முஹம்மது முஸ்லீம் இளைஞர்களுக்கு, அவர்கள் அல்லாவுக்காகவும் தனக்காகவும் போரில் மரணமடைவார்களாயின், அல்லா அவர்களுக்கு கன்னிப்பெண்கள் நிறைந்த சோலைவனத்தை பரிசாக தருவார் என‌ வாக்களிக்கிறார். (சூரா: 44:51-56; 52:17-29; 55:46-78).

 
கீழே தரப்பட்டுள்ள குர்‍ஆன் வசனங்களில், இதே போல உள்ள இதர வசனங்களிலும்(4:74, 9:111; 3:140-143), ஜிஹாத் என்பது ஒரு பொருளாதார வியாபார பேரம் போன்றது என்று சித்தரிக்கப்படுகிறது. அதாவது, இவ்வுலக வாழ்க்கையிலும், மரித்த பிறகு வாழும் வாழ்க்கையிலும் பயன்படும் செலாவணியாக/நாணயமாக‌ ஜிஹாத் கருதப்படுகிறது. (ஜிஹாத் என்ற வார்த்தைக்கு மூல வார்த்தை J-H-D என்பதாகும்.) In the following Quranic passage, representing others (Suras 4:74, 9:111; 3:140-143), the Arabic word "jihad" (root is j-h-d) is the means or currency to trade in this life for the life to come in an economic bargain.
 
 
குர்‍ஆன் சூரா 61:10 ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? குர்‍ஆன் சூரா 6:11 (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களா இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். குர்‍ஆன் சூரா 6:12 அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான், சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.

 
61:10 You who believe, shall I show you a bargain that will save you from painful punishment? 11 Have faith in God and His Messenger and struggle [j-h-d] for His cause with your possessions and your persons—that is better for you, if only you knew—12 and He will forgive your sins, admit you into Gardens graced with flowing streams, into pleasant dwellings in the Gardens of Eternity. That is the supreme triumph. (Haleem)
 
 
இந்த வசனங்கள் உஹுத் போரின் (625) சரித்திரப் பின்னனியில் சொல்லப்பட்டன. அதில் முஹம்மது 70 போர் வீரர்களை இழந்தார். இவ்விதம், அவர் உயிர் இழப்பை தியாகமாகக் கருதப்படவேண்டி, இந்த மரணங்களை வியாபாரச் சந்தைப் பேர‌ங்களாகக் காட்டுகிறார். இத்தகைய ஜிஹாதிகள் அவர்களின் உயிர்களை இச்சந்தையில் விற்பார்களானால் அவர்களுக்கு இஸ்லாமிய சொர்க்கம் வழங்கப்படும்- இது ஒரு வியாபார ஒப்பந்தம்.

 
இஸ்லாமிய தியாக மரணம் பற்றிய ஆழ்ந்த அலசலுக்கும் இத்தகைய தியாக மரணங்களை பைபிள் தியாக மரணத்திற்கு எவ்விதம் எதிராக உள்ளது என்கின்ற விளக்கத்திற்கும் இந்த‌ தொடுப்பைக் காணவும். கிறிஸ்துவின் சிலுவை மீதான தியாக மரணம் பரலோகத்தின் வாசல்களைத் திறக்கின்றது. எனவே கிறிஸ்தவர்கள் யாரும் பரலோகத்தினை அடைய

Wednesday, December 10, 2008

ஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும்(முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும் )




ஏகத்துவத்திற்கு பதில்



சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும்

 
முன்னுரை: பொதுவாக இஸ்லாமியர்கள் "கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர் இயேசு கிறிஸ்து அல்ல, பவுல் தான், இவர் இயேசுவின் செய்தியை திருத்திவிட்டார், சிலுவை, மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுதல் போன்ற கோட்பாடுகள் எல்லாம் பவுல் கண்டுபிடித்தது தான்" என்று மிகப் பெரிய பொய்யை ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

 
ஏகத்துவம் தளத்தில் வெளியான கட்டுரைகளுக்கு கீழ் கண்ட பதில்கள் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இயேசுவின் செய்தியும், பவுலின் செய்தியும் ஒன்று தான், வெவ்வேறானது அல்ல என்பதை புதிய ஏற்பாட்டின் துணையோடு எடுத்துக் காட்டியுள்ளோம். அதாவது சிலுவை மரணம், மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய விவரங்களை பவுல் தான் புகுத்தினார் என்று முஸ்லீம்கள் சொல்வது பொய், இயேசுவே பல சந்தர்பங்களில் இவைகளைப் பற்றி பேசியுள்ளார். கீழ் கண்ட நான்கு கட்டுரைகளில் இயேசுவின் போதனைக்கும், பவுலின் போதனைக்கும் இடையே உள்ள 133 ஒற்றுமைகளை நான்கு பகுதிகளாக காட்டியுள்ளோம்.
 
 
ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும்

பாகம் - 1 | பாகம் - 2 | பாகம் - 3 | பாகம் - 4
 
 
பவுலின் மனந்திரும்புதல் பற்றிய பதிலை கீழ் கண்ட இரண்டு தலைப்புகளாக பிரித்து நாம் காண்போம்.

 
1. சவுலின் மனந்திரும்புதல் நிகழ்ச்சியில் முரண்பாடுகள் இல்லை

 
2. முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும்


 
1. சவுலின் மனந்திரும்புதல் நிகழ்ச்சியில் முரண்பாடுகள் இல்லை
 
 
தமஸ்குவிற்கு போகும் வழியில் இயேசு சவுலை சந்தித்த நிகழ்ச்சியைப் பற்றிய‌ விவரங்களிலிருந்து பல கேள்விகளை இஸ்லாமியர்கள் கேட்கின்றனர். முக்கியமாக, ஏகத்துவம் தளம் "கிறிஸ்தவமும் பவுலும் பாகம் - 1" (http://egathuvam.blogspot.com/2008/11/1.html) என்ற கட்டுரையில் கீழ் கண்ட கேள்விகளை முன் வைத்துள்ளனர். இக்கட்டுரையில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலைக் காணலாம்.
 
 
1. சவுல் மட்டும் கீழே விழுந்தாரா அல்லது எல்லாரும் விழுந்தார்களா?

 
2. சவுல் மட்டும் சத்தத்தை கேட்டாரா அல்லது சவுலோடு இருந்த மனிதர்கள் எல்லாரும் "சத்தத்தை" கேட்டார்களா?

 
3. சவுலோடு பிரயாணம் செய்த மனிதர்கள் "யாரையாவது" கண்டார்களா? இல்லையா?

 
4. அப் 9ம் அதிகாரத்தில் அம்மனிதர்கள் "பிரமித்து நின்றார்கள்" என்றும், அப் 26ம் அதிகாரத்தில் "அவர்கள் கீழே விழுந்தார்கள்" என்றும் உள்ளதே, இதைப் பற்றிய விளக்கம் என்ன?

 
5. சொல்லப்பட்ட மூன்று விவரங்களில் ஒரு விவரத்தில் மட்டும் இயேசு சவுலிடம் அதிகமாக பேசியதாக உள்ளதே இதன் விளக்கம் என்ன?
 
 
அப்போஸ்தலர் நடபடிகளில் பவுலின் சாட்சி்:

 
தமஸ்குவிற்கு போகும் வழியில் இயேசு சவுலை சந்தித்த நிகழ்ச்சி அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் மூன்று இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

 
அப் 9ம் அதிகாரத்தில்: இந்த அதிகாரத்தில் லூக்கா, சவுல் தமஸ்கு வழியில் எப்படி இயேசுவால் சந்திக்கபட்டார் என்பதைச் சொல்கிறார்.

 
அப் 22ம் அதிகாரத்தில்: இந்த அதிகாரத்தில் பவுல் எருசலேமிலுள்ள யூதர்களிடம் தன் சாட்சியை பகிர்ந்துக் கொள்கிறார். இந்த யூதர்களுக்கு, பவுல் யார் என்று தெரியும், அவர் இதற்கு முன்பு எதை செய்துக்கொண்டு இருந்தார், இப்போது யாரைப் பற்றி பிரச்சாரம் செய்துக்கொண்டு இருக்கிறார் என்றும் தெரியும்.

 
அப் 26ம் அதிகாரத்தில்: எருசலேமில் தன் சாட்சியை சொன்ன பிறகு, பவுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ரோம இராஜ்ஜியத்தின் கவர்னர் "பெஸ்து"க்கும் மற்றும் இராஜா ஏரோது அகிரிப்பாவிற்கு (Roman Governor Festus and King Herod Agrippa) முன்பாக பவுல் தன் சாட்சியை பகிர்ந்துக்கொள்கிறார், மற்றும் தனக்காக வழக்காடுகிறார், அதாவது த‌ண்டனை அடையும் அளவிற்கு அரசாங்கத்திற்கு எதிராக எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்று தனக்காக தானே வழக்காடுகிறார்.
 
 
 
கேள்வி 1: சவுல் மட்டும் கீழே விழுந்தாரா அல்லது எல்லாரும் விழுந்தார்களா?

 
லூக்கா தான் எழுதிய முதல் இரண்டு விவரங்களில் "சவுலோடு வந்தவர்கள் விழவில்லை". என்றுச் சொல்லவில்லை, அதற்கு பதிலாக இரண்டு விவரங்களில் "சவுல் விழுந்தார்" என்றுச் சொல்லியுள்ளார். அவர்களும் விழுந்தார்கள் என்ற விவரத்தை குறிப்பிடாமல் விட்டுவிட்டார் அவ்வளவே. எனவே ஒரு விவரத்தை சொல்ல வில்லையென்றால், அது நடக்கவில்லை என்று பொருள் இல்லை அது முரண்பாடும் இல்லை. அப் 26ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, எல்லாரும் தரையில் விழுந்தார்கள்.
 
 
அப் 9:4 அவன் தரையிலே விழுந்தான்….

அப் 22:7 நான் தரையிலே விழுந்தேன்…

அப் 26:14 நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது:…
 
 
ஏன் மூன்று இடங்களிலும் (எல்லாரும் விழுந்தார்கள் என்று) சொல்லக்கூடாது என்று கேட்டால், நாம் ஒரு விவரத்தை அல்லது நிகழ்ச்சியைப் பற்றி விவரிக்கும் போது,

 
நாம் யாரிடம் அந்நிகழ்ச்சியை விவரிக்கிறோம்,

நமக்கு கொடுக்கப்பட்ட நேரம் எவ்வளவு? நாம் பேசும் சூழ்நிலை என்ன‌? மற்றும்

 
நாம் பேசுவதை கேட்கும் நபர்களின் புரிந்துக்கொள்ளும் தன்மை, போன்றவற்றை கருத்தில் கொண்டு தான் விவரிப்போம்.

 
உதாரணத்திற்கு: ஒர் நேர்க்காணலில்(Interview) ஒரு நபரிடன் உன் குடும்பம், படிப்பு மற்றும் பின்னனி பற்றி சொல் என்று கேட்பார்களானால், அந்த நபர் தன் குடும்பம் மற்றும் படிப்பு பற்றிய விவரங்களை சுருக்கமாக சில நிமிடங்களில் சொல்லி முடிப்பார். ஒரு நீண்ட சொற் பொழிவை அங்கு சொல்லிக் கொண்டு இருக்கமாட்டார். ஏனென்றால், தனக்கு அந்த வேலை தேவை என்ற கண்ணொட்டத்தில் தேவையான விவரங்களை மட்டுமே சொல்வார், சில விவரங்களை விட்டுவிடுவார்.

 
அதே நபரிடம், அவர் தன் வீட்டில் இருக்கும் போது, அவரிடம் அதிகமாக நேரம் இருக்கும் போது, அதே கேள்வியை மூன்றாவது நபர் ஒருவர் கேட்டால், அவரது பதில் எப்படி இருக்கும்?

 
அதே கேள்வியை அவரது புதிய நண்பர்கள் சிலர் (தன்னைப் பற்றி ஓரளவிற்கு தெரிந்தவர்கள்) கேட்டால் எப்படி பதில் இருக்கும்.

 
இந்த மூன்று முறையும் அவர் நேர்க்காணலில் சொன்னதையே சொல்வாரா? நேர்க்காணலில் எடுத்துக்கொண்ட நேரத்தையே எடுத்துகொள்வாரா?

 
நேர்க்காணலில் சொல்லும் போது தேவையில்லாத விவரங்களை அல்லது அந்த நேர்க்காணலில் தேவைப்படாத அதிக முக்கியத்துவம் இல்லாத விவரத்தைச் சொல்லமாட்டார். அதே நபர் தன் நண்பர்களிடம் சாவகாசமாக விவரிக்கும் போது, தனக்கு எத்தனை சகோதரிகள் இருக்கிறார்கள், அவர்களின் கணவர்மார்களின் வேலை என்ன, மற்றும் தன் பெற்றோர்கள் பற்றி விவரமாகச் சொல்வார்.

 
ஒரு வேளை நேர்க்காணலில் தனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் என்றுச் சொல்லியிருந்து, தன் நண்பர்களிடம் தன் சகோதரியின் கணவரைப் பற்றியும் அவரது தொழில் பற்றியும் சொன்னால், இது முரண்பாடாகுமா? ஆகாது.

 
நேர்க்காணலில் தன் சகோதரிக்கு திருமணமான விவரம் சொல்லாததால், உண்மையிலேயே தன் சகோதரிக்கு திருமணம் நடக்கவில்லை என்று புரிந்துக்கொள்ளமுடியுமா? ஆனால், அந்த நபர் நேர்க்காணல் அல்லாத நேரத்தில், அவர் சொன்னதால் அது முரண்பாடாக நாம் கருதமுடியுமா?

 
இதே போலத்தான், அப்போஸ்தலர் நடபடிகளில் 9, 22 மற்றும் 29ம் அதிகாரத்தில் தேவையானது மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.

எனவே, தமஸ்கு வழியில் எல்லாரும் விழுந்தார்கள் ஆனால், தேவைப்படும் போது தேவையான விவரங்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.

 
இந்த ஐந்து கேள்விகளுக்கும் என் பதிலை கொடுத்துவிட்டு, தமஸ்கு வழியில் நடந்த நிகழ்ச்சியை ஒரு வரிசைக் கிரமமாக நான் இக்கட்டுரையின் கடைசியில் விவரிக்கிறேன்.
 
 
கேள்வி 2: சவுல் மட்டும் சத்தத்தை கேட்டாரா அல்லது சவுலோடு இருந்த மனிதர்கள் எல்லாரும் "சத்தத்தை" கேட்டார்களா?
 
 
Act 9:7 அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள்.

Act 22:9 என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
 
 
இந்த இரண்டு இடங்களில், 9ம் அதிகாரம் சொல்கிறது, "அவர்கள் சத்தத்தை கேட்டார்கள்", ஆனால், 22ம் அதிகாரம் சொல்கிறது, "அவர்கள் என்னுடம் பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை" என்று. இந்த இடத்தில் "கேட்டல் – Hear - (akouō) " என்ற கிரேக்க வார்த்தையின் பொருளை நாம் காணவேண்டும்.
 
 
G191
ἀκούω
 
akouō
ak-oo'-o
 
A primary verb; to hear (in various senses): - give (in the) audience (of), come (to the ears), ([shall]) hear (-er, -ken), be noised, be reported, understand.

 
Outline of Biblical Usage

 
1) to be endowed with the faculty of hearing, not deaf
 
2) to hear
.....b) to attend to, consider what is or has been said
.....c) to understand, perceive the sense of what is said
 
 
3) to hear something
.....a) to perceive by the ear what is announced in one's presence
.....b) to get by hearing learn
.....c) a thing comes to one's ears, to find out, learn
.....d) to give ear to a teaching or a teacher
.....e) to comprehend, to understand
 
 
 
கிரேக்க வார்த்தை "akouō" என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன,

அதாவது, "கேட்டல் - Hear" என்ற பொருளும் உண்டு,

"புரிந்துக்கொள்ளுதல் - Understand" என்ற பொருளும் உண்டு.


இதன் படி, அப் 22:9ல் "என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை" என்றுச் சொல்லப்பட்டதின் அர்த்தம் அல்லது சரியான மொழிபெயர்ப்பு கிரேக்க மொழியில், "என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை" என்பதேயாகும். எனவே, இங்கு எந்த முரண்பாடும் இல்லை, கிரேக்க வார்த்தை "akouō" என்பதற்கு "கேட்டல்" மற்றும் "புரிந்துக்கொள்ளுதல்" என்ற அர்த்தங்கள் உள்ளன.

 
கொரிந்தியரிலிருந்து இன்னொரு உதாரணம்

 
 
கிரேக்க வார்த்தைக்கு(akouō) வெறும் "கேட்டல்- Hear" என்று தான் பொருள் வரும், புரிந்துக்கொள்ளுதல்(Understand or perceive or comprehend) என்ற பொருள் வராது என்று சிலர் சொல்லக்கூடும். அவர்களுக்காக, இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள இன்னொரு வசனத்தை காண்போம்.

 
 
கீழ் கண்ட வசனத்தை கவனிக்கவும்: 1 கொரிந்தியர் 14:2

 
 
ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே(akouō) அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

For he that speaketh in an unknown tongue speaketh not unto men, but unto God: for no man understandeth(G191-akouō) him; howbeit in the spirit he speaketh mysteries.
 
 
இந்த வசனத்தை கவனிக்கும் போது, ஒரு மனிதன் சபையிலே அந்நிய பாஷையிலே பேசும் போது, அதை கேட்பவனுக்கு அவன் பேசுவது கேட்குமே ஒழிய ஆனால், அதன் அர்த்தம் புரியாது. இந்த இடத்திலும் அதே கிரேக்க வார்த்தை(understandeth-akouo) பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இதன் பொருள் என்ன? சத்தம் காதில் விழும் ஆனால், அதன் அர்த்தம் புரியாது. இந்த வசனத்திலும் "Akouo" என்ற வார்த்தை வருவதினால், "அவன் பேசுகிறதை ஒருவனும் கேட்கமுடியாது" என்று மொழிபெயர்க்க முடியாது, ஏனென்றால், பக்கத்தில் இருப்பவனுக்கு ஒருவன் சத்தமாக தேவனை வேறு ஒரு மொழியில் துதிப்பது காதில் விழாமல் இருக்காது, கண்டிப்பாக விழும், ஆனால், பக்கத்தில் இருப்பவனுக்கு "புரியாது" அவ்வளவே. இந்த இடத்தியில் "அறிய மாட்டான் அல்லது புரிந்துக்கொள்ளமாட்டன்" என்ற வார்த்தைக்கும் இதே கிரேக்க வார்த்தைத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 
பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் குர்‍ஆனை படிக்கும் முறை இது தான், அதாவது அவர்களுக்கு சத்தம் போட தெரியும்(அதாவது அரபி எழுத்துக்களை படிக்கத்தெரியும்) ஆனால், அதன் அர்த்தம் புரியாது. மற்றவர்கள் அவர்களுக்கு குர்‍ஆன் வசனத்தின் பொருளைச் சொன்னால் தான் அவர்களுக்கு நாம் என்ன படிக்கிறோம் என்று புரியும் அல்லது அவர்களாகவே தங்களுக்கு தெரிந்த (தாய்) மொழியில் படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும்.

 
ஆக, சவுலோடு சென்ற எல்லா மனிதர்களும் சத்தத்தை கேட்டார்கள், அதாவது இயேசு பவுலோடு பேசுவதை கேட்டார்கள் ஆனால், அவர்களுக்கு இயேசு என்ன சொன்னார் என்பதின் அர்த்தம் புரியவில்லை. இதனையே ஒரு இடத்தில் விவரிக்கும் போது "அவர்கள் சத்தத்தை கேட்டார்கள்" என்றும், இன்னொரு இடத்தில் சொல்லும் போது "அவர்கள் அறிந்துக்கொள்ளவில்லை (புரிந்துக்கொள்ளவில்லை)" என்றுச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கிரேக்க மொழியில் இரண்டு இடங்களிலும் ஒரே வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 
இன்னொரு கேள்வி: ஒரு இடத்தில் எல்லாரும் இருக்கும் போது, பேசும் வார்த்தைகள் ஒருவருக்கு மட்டும் புரியும், இன்னொருவருக்கு எப்படி புரியாமல் போகும்: என்ற கேள்வி எழும்பும், அதாவது சவுலுக்கு புரிந்த வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஏன் புரியாது? இதற்கு பதில் மிகவும் சுலபம், அதாவது இறைவன் நினைத்தால், எதையும் எப்படியும் அவரால் செய்யமுடியும், அவரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை, இதனை இஸ்லாமியர்கள் கூட அங்கீகரிப்பார்கள்.

 
இருந்தாலும், இன்னொரு வசனத்தை பார்ப்போம், இங்கு பேசப்பட்டது வெவ்வேறு மனிதர்களுக்கு வித்தியாசமாக கேட்டுள்ளது அல்லது புரியவில்லை. கீழ் கண்ட வசனங்களைப் பாருங்கள்:
 
 
(யோவான் 12:28-29) பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. அங்கே நின்றுகொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்:இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
 
 
வானத்திலிருந்து வந்த ஒரு சத்தம், சிலருக்கு இடி முழக்கத்தின் சத்தம் போலவும், சிலருக்கு தேவதூதர் பேசியதாகவும் கேட்டுள்ளது. ஆக, தேவைப்படும் போது, தேவையானதை சரியாகச் செய்ய தேவனுக்கு எதுவும் தேவையில்லை.

 
இரண்டாம் கேள்விக்கு பதில் என்னவென்றால், சவுலும் அவரோடு வந்த எல்லாரும் சத்தத்தை கேட்டார்கள், ஆனால், சவுலுக்கு மட்டுமே கேட்ட வார்த்தைகளின் அர்த்தமும் புரிந்தது, அதனால் தான் அவர் மறுபடியும் நீர் யார் என்று கேட்கிறார் பதில் பெறுகிறார், இதனை கவனித்துக்கொண்டு இருந்த மற்றவர்கள், என்ன நடக்கிறது என்று புரியாமல் பிரமித்து நிற்கிறார்கள்.
 
 
 
3. சவுலோடு பிரயாணம் செய்த மனிதர்கள் "யாரையாவது" கண்டார்களா? இல்லையா?

 
சவுலோடு வந்தவர்கள் சத்தத்தை கேட்டார்களே ஒழிய அவர்கள் யாரையும் காணவில்லை. இங்கு முரண்பாட்டிற்கு இடமே இல்லை. அவர்கள் வெளிச்சத்தை கண்டார்கள், மற்றும் தங்களுக்கு புரியாத சத்தத்தை கேட்டார்கள், அவ்வளவே, அவர்கள் யாரையும் காணவில்லை.

 
இதே போல நடந்த இன்னொரு நிகழ்ச்சியை காணலாம் - தானியேல் கண்ட தரிசனம்:

 
இறைவன் விரும்பினால், ஒருவருக்கு மட்டுமே தரிசனம் தெரியும் படிச் செய்வார். எல்லாருக்கும் தன் சத்தம் கேட்கும் படிச் செய்வார் அல்லது ஒருவருக்கு மட்டும் கேட்கும் படிச் செய்வார். கீழே உள்ள வசனத்தை கவனிக்கவும், தானியேலுக்கு மட்டுமே தரிசனம் காணப்பட்டது, மற்றவர்கள் சத்தத்தை மட்டுமே கேட்டு, பயந்து ஒளிந்துக்கொண்டார்கள்.
 
 
(தானியேல் 10:4-7) முதலாம் மாதம் இருபத்துநாலந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன். அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது. தானியேலாகிய நான்மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷரோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுங்கி, ஓடி, ஒளித்துக்கொண்டார்கள்.
 
 
இன்னும் ஒரு சில முஸ்லீம்கள், இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம், ஒருவருக்கு கேட்டு, இன்னொருவருக்கு கேட்கப்படாமல் இருப்பது எப்படி சாத்தியம், ஒருவருக்கு தெரிந்து மற்றவருக்கு தெரியாமல் இருப்பது எப்படி சாத்தியம் என்று கேட்பார்கள், இப்படிப்பட்டவர்களுக்கு இந்த கட்டுரையின் கடைசியில் தரப்பட்ட விவரங்களைக் காணவும்(2. முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும்) . இஸ்லாமியரின் நபியாகிய முஹம்மது அவர்களுக்கு எப்படி வெளிப்பாடுகள் வந்தது, எந்த நேரத்தில் வந்தது என்பதைப் பற்றி ஒரு விவரத்தைத் தருகிறேன் அதனை படித்து அப்படிப்பட்டவர்கள் முடிவு செய்யட்டும், இறைவனுக்கு எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பதை.
 
 
 
கேள்வி 4: அப் 9ம் அதிகாரத்தில் அம்மனிதர்கள் "பிரமித்து நின்றார்கள்" என்றும், அப் 26ம் அதிகாரத்தில் "அவர்கள் கீழே விழுந்தார்கள்" என்றும் உள்ளதே, இதைப் பற்றிய விளக்கம் என்ன?

 
சவுல் மட்டும் விழுந்தாரா? அல்லது எல்லாரும் விழுந்தார்களா? எல்லாரும் விழுந்திருந்தால் ஏன் "பிரமித்து நின்றார்கள்" என்று வருகிறது என்ற கேள்வி எழும்புகிறது.

 
மேலோட்டமாக இந்த நிகழ்ச்சியை நாம் படித்தால், நமக்கு இப்படிப்பட்ட கேள்விகள் எழும்பும், ஆனால், நம்மையே அந்த இடத்தில் சவுலோடு வந்தவர்களில் ஒருவராக நினைத்து படித்தோமானால், இது ஒரு முரண்பாடே அல்ல என்பது விளங்கும்.

 
இந்த கட்டுரையின் முதல் கேள்வியில் நான் விளக்கினேன், சவுலோடு கூட எல்லாரும் விழுந்தார்கள். நாம் பேசும் இடம், நமக்கு தரப்பட்ட நேரம், மற்றும் நம்முடைய பேச்சில் நாம் சொல்லவேண்டிய முக்கியமான விவரம் போன்றவற்றை மனதில் கொண்டு, ஒரு நிகழ்ச்சியை ஒரே மாதிரியாக எப்போதும் நாம் சொல்லமாட்டோம், ஒரு சில விவரங்களை விட்டுவிடுவோம். ஆகையால் எல்லாரும் விழுந்தார்கள் என்பது தான் சரியாது.

 
அப்படியானால், அப் 9ம் அதிகாரத்தில் அவர்கள் பிரமித்து நின்றார்கள் என்று உள்ளதே அது எப்படி?

 
நீங்கள் சவுலோடு கூட சென்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள், அப்போது, வெளிச்சத்தினால் எல்லாரும் கீழே விழுந்தார்கள், அதில் நீங்களும் இருக்கிறீர்கள். விழுந்த உடன் என்ன செய்வீர்கள்? விழுந்த இடத்திலேயே அப்படியே இருப்பீர்களா அல்லது சில நொடிகளில் எழும்பி நிற்க முயற்சி செய்வீர்களா?

 
[நாம் கிரிக்கெட் பார்த்து இருப்போம், அதில் ஒரு பந்தை பிடிப்பதற்கு ஒரு விளையாட்டு வீரர் ஓடுவார் ஓடுவார், எல்லாரும் நினைப்போம், அவர் பிடித்துவிடுவார் என்று ஆனால், முயற்சி எடுத்தும் அவர் அந்த பந்தை தவறிவிடுகிறார், சில நேரங்களில் இப்படியாக தவறிவிடும் போது அவர் அப்படியே விழுந்த நிலையிலேயே இருப்பார், விளையாட்டை பார்த்துக்கொண்டு இருப்பவர்களாகிய நாம் நினைத்துக்கொள்ளவேண்டும், பாவம் இவர் பந்தை பிடிக்கவில்லையென்று வேதனை அடைகிறார் என்று. அதே விளையாட்டு வீரர் பந்து பவுண்டரியை நோக்கி செல்லும் போது அதை பிடித்துவிட்டால் உடனே சுதாரித்துக்கொண்டு எழுந்து சில நொடிகளில் அந்த பந்தை மற்ற வீரரிடம் வீசிவிடுவார்.]

 
ஒருவர் திடீரென்று ஒரு வெளிச்சம் கண்டு தடுமாறி விழும் போது, உடனே சுதாரித்துக்கொண்டு எழும்புவார், அப்படியே கிரிக்கெட் வீரர் போல விழுந்த ஸ்டைலிலேயே அப்படியே போஸ் கொடுக்கமாட்டார்கள். ஆக, சவுலோடு கூட சென்றவர்கள் எல்லாரும் விழுந்தார்கள், ஆனால், உடனே எழுந்திருக்க முயற்சி எடுத்து, சில வினாடிகள் ஆனாலும் எழுந்து நின்று இருப்பார்கள். விழுந்த எல்லாரும் விழுந்த நிலையிலேயே இருக்கமாட்டார்கள்.

 
அப்படியானால், ச‌வுல் மட்டும் ஏன் எழுந்திருக்கவில்லை?

 
சவுல் கூட எழுந்திருக்கவேண்டும், ஆனால், அவரால் முடியாத நிலை? ஏன்? அந்த வெளிச்சத்தினால், சவுலின் கண்கள் இருண்டுவிட்டது, மட்டுமல்ல, தன்னுடைய பெயரைச் சொல்லி ஒருவர் தன்னுடன் பேசுவதை அவர் கேட்டார்.

 
இப்படி சவுலே சவுலே என்று இரண்டு முறை கூப்பிட்டு, முள்ளில் உதைப்பது நல்லதல்ல என்றுச் சொன்னபோது, நீர் யார் ஆண்டவரே என்று சவுல் கேட்டபோது, அதற்கு நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்றுச் சொன்ன இந்த நேரத்தில் தான், மற்றவர்கள் குருடராக ஆகாத காரணத்தால், எழுந்திருந்து, சத்தம் மட்டும் வருகிறது, சவுலும் பேசுகிறார் ஆனால், யாரையும் காணவில்லையே என்று பயந்து பிரமித்து நின்றார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

 
சவுலும் இயேசு பேசும் அந்த ஒரு சில நிமிடங்கள் எல்லா மனிதர்களும் நம் கிரிக்கெட் வீரர்கள் போல விழுந்த நிலையிலேயே இருப்பார்கள் என்று எண்ணுவது அறிவுடமையாகாது.

 
ஆக, எல்லாரும் விழுந்தார்கள், உடனே எழும்ப முயற்சி எடுத்து எழும்பினார்கள், சவுலும் இயேசுவும் பேசும் அந்த நேரத்தில் பிரமித்து நின்றார்கள், இதில் எங்கும் முரண்பாடு இல்லை.

 
ஆக, எல்லாரும் விழுந்தார்கள், உடனே எழும்ப முயற்சி எடுத்து எழும்பினார்கள், சவுலும் இயேசுவும் பேசும் அந்த நேரத்தில் பிரமித்து நின்றார்கள், இதில் எங்கும் முரண்பாடு இல்லை. நான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, அப் 9ம் அதிகாரத்தில் லூக்கா இந்த நிகழ்ச்சியை தன் புத்தகத்தை படிப்பவர்களுக்காக சொன்னது, 22ம் அதிகாரத்தில் பவுல் எருசலேமில் யூதர்களுக்கு முன்பாக சாட்சியாகச் சொன்னது, மற்றும் இந்த 26ம் அதிகாரத்தில் பவுல் பெஸ்து என்ற ரோம ஆளுநருக்கு மற்றும் அகிரிப்பா இராஜாவிற்கும் சாட்சியாக சொன்னவிவரங்களாகும்.
 
 
(Act 26:13-19) மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. இப்பொழுது நீ எழுந்து, காலுன்றிநில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்படியாதவனாயிருக்கவில்லை.
 
 
நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, இங்கு தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் பவுல் ஒன்றுவிடாமல் சொல்லவில்லை, தேவையானதை மட்டுமே சொல்லியுள்ளார்.

 
மேலேயுள்ள‌ வசனங்களை படித்தோமானால், இந்த இடத்தில் மட்டும் பவுல் எந்த விவரங்கள் தேவையற்றது என்பதால் விட்டுவிட்டார் என்பது நன்றாக விளங்கும். 26ம் அதிகாரத்தில் பவுல்:

 
1. தனக்கு கண்கள் குருடானதை அவர் சொல்லவில்லை,

 
2. அன‌னியா என்ப‌வ‌ர் மூல‌மாக ம‌றுப‌டியும் க‌ண்க‌ள் வ‌ந்த‌ விவ‌ர‌த்தைப் ப‌ற்றி அவ‌ர் சொல்ல‌வில்லை.

 
3. தான் எப்ப‌டி த‌ம‌ஸ்குவிற்கு க‌ண்க‌ள் இல்லாம‌ல் ம‌ற்றவ‌ர்க‌ளின் உத‌வியோடு வ‌ந்தார் என்றுச் சொல்ல‌வில்லை,

 
4. எத்த‌னை நாட்க‌ள் க‌ண்க‌ள் இல்லாம‌ல் இருந்தார் என்றும் சொல்ல‌வில்லை.

 
5. அதற்கு பதிலாக, தன் சாட்சியை சுருக்கமாகவும், அதே நேரத்தில் யூதர்கள் தன் மேல் சாட்டும் குற்றங்களை அவர்கள் நிருபிக்கமுடியாது என்றும் சொல்கிறார். அதனால், தான் அனனியா தனக்கு சொன்னவிவரங்களையும், தான் ஞானஸ்நானம் பெற்ற விவரத்தையும் அவர் சொல்லவில்லை.

 
6. ஆனால், லூக்கா தான் நிகழ்ச்சிகளை விவரிக்கும் போது, ஞானஸ்நானம் (அப் 9:18) பற்றியும் இதர விவரங்களையும் சொல்கிறார்.

 
 
ஆக, இந்த 26ம் அதிகாரத்தில் பல விவரங்களை எடுத்துவிட்டு, அனனியாவை பவுல் சந்தித்த பிறகு தனக்கு இயேசுவிடமிருந்து கிடைத்த தரிசனங்கள் மற்றும் கட்டளைகள் போன்றவற்றை சுருக்கமாகச் சொன்னார். பவுலின் வார்த்தைகள் எப்படி இருந்தது என்றால், நியாயம் விசாரிக்க உட்கார்ந்து இருக்கும் அகிரிப்பா இராஜாவையே கிறிஸ்தவராக மாற்றும் அளவிற்கு, தீர்க்கதரிசிகளை நீர் நம்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன், உமக்கு யூதர்களின் அனைத்து விவரங்களும் தெரியும் என்று பலவாறுச் சொல்கிறார்.

 
இந்த 25 மற்றும் 26ம் அதிகாரங்களை முழுவதுமாக படித்துப்பாருங்கள், பவுல் கொடுத்த சாட்சியின் பின்னனி என்ன என்பது தெளிவாக புரியும். பவுல், தான் எப்படி இயேசுவை ச‌ந்தித்தார் என்ற ஒரு நிகழ்ச்சியை மட்டும் சொல்லவில்லை, அதற்கும் அதிகமாக பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள், மோசே என்று ஆரம்பித்து அனேக விவரஙகளைச் சொன்னார், அதற்கு பெஸ்து ஆளுநர் "உனக்கு பயித்தியம் பிடித்துள்ளது" என்று சத்தமிடுகிறார். அகிரிப்பா இராஜாவோ, "என்னை கிறிஸ்தவாக மாற்றிவிடுவாய் போல் இருக்கிறதே" என்றுச் சொல்கிறார்(புலம்புகிறார்).
 
 
(அப் 26:24-28) இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்த சத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகக் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. அகிரிப்பா ராஜாவே, தீக்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான். அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய் என்றான்.
 
 
ஆக, இஸ்லாமியர்கள் கேட்ட கேள்விக்கு பதில் என்னவென்றால், பவுல் தன் சாட்சியை சுருக்கமாகவும், பழைய ஏற்பாட்டு விவரங்களோடும், அதற்கு பின்பு நடந்த விவரங்களோடும், தனக்காக வழக்காடிய விவரங்களே 26ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 
பவுல் தரையிலே விழுந்து இருந்தபோதே இயேசு எல்லாவற்றையும் சொல்லவில்லை, பவுலை அனனியா சந்தித்து, கண்பார்வை அடைந்து, ஞானஸ்நானம் பெற்று, பிறகு தொடர்ந்து தனக்கு கிடைத்த இதர தரிசனங்களின் சுருக்கத்தையே பவுல் இங்கு சொல்லியுள்ளார். இது முரண்பாடோ அல்லது பிழையோ அல்ல.

 
முடிவுரை:

ஒவ்வொரு முறையும் நடந்த நிகழ்ச்சியை தேவையில்லாத இடங்களிலும் ஆதியிலிருந்து அந்தம்வரை யாரும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்கள். எதற்கு முக்கியத்தும் தரவேண்டுமோ அதற்கு தந்து சுருக்கமாகச் சொல்வார்கள். இதனை புரிந்து கொள்ளாமல், இஸ்லாமியர்கள், ஆகா, இது தான் முரண்பாடு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

 
 
நான் முஸ்லீம்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்,

உங்களிடம் உங்கள் ஐந்து வயது மகனோ அல்லது மகளோ வந்து "திருமணம் என்றால் என்ன? பிள்ளைகள் எப்படி பிறக்கிறார்கள்? செக்ஸ் என்றால் என்ன? " என்ற கேள்விகளை கேட்டால் உங்கள் பதில் எப்படி இருக்கும்?

இதே கேள்வியை, அதே மகன் அல்லது மகள் தனக்கு 15 வயதாகும் போது கேட்டால் உங்கள் பதில் எப்படி இருக்கும்?

இதே கேள்வியை 20 வயதாகும் போது கேட்டால் உங்கள் பதில் எப்படி இருக்கும்?

இதே கேள்வியை, உங்கள் நண்பர் (சமவயதுள்ளவர்) கேட்டால் உங்கள் பதில் எப்படி இருக்கும்?

எல்லாருக்கும் ஒரே மாதிரியாக பதிலைத தருவீர்களா? அல்லது கேட்கும் நபரை பொருத்து, இடத்தை பொருத்து, அவரது வயதைப் பொருத்து, சுருக்கியோ, விவரித்தோ, தேவையில்லாததை மறைத்தோ சொல்வீர்களா? அல்லது கிளிப்பிள்ளையைப் போல ஒரே மாதிரியாக எல்லாருக்கும் எல்லா சூழ்நிலைகளிலும் சொல்வீர்களா?
 
 
இயேசு பவுலை தமஸ்கு சாலையில் சந்தித்த விவரங்கள் வரிசை கிரமமாக:

 
1. சவுலும் மற்றவர்களும் பிராயாணம் செய்துக்கொண்டு இருக்கும் போது, தமஸ்குவிற்கு அருகாமையில் வந்த போது, பெரிய வெளிச்சம் அவர்களைச் சுற்றி பிரகாசித்தது, எல்லாரும் கீழே விழுகிறார்கள்.

 
2. விழுந்தவுடன் சுதாரித்துக்கொண்டு எல்லாரும் எழுந்திருக்க முயற்சி எடுத்து இருப்பார்கள், கண்கள் இருள் அடையாத அனைவரும் சில வினாடிகளில் எழுந்தும் இருப்பார்கள்,

 
3. சவுலினால் மட்டும் எழுந்திருக்க முடியவில்லை, காரணம் அதிக வெளிச்சத்தினால் அவரது கண்கள் இருளடைந்தது, மற்றும் அவரது பெயரை இரண்டு முறை கூப்பிட்டு இயேசு பேசியதால், அவர் பேச்சு எல்லாம் முடிந்தவுடன் எழுந்திருக்க வேண்டும், அதுவும் மற்றவர்களின் துணைக்கொண்டு.

 
4. இயேசுவின் மற்றும் சவுலின் உரையாடலின் போது, மற்றவர்கள் எழுந்து நின்று, சத்தத்தை மட்டுமே கேட்டு, சவுல் மட்டும் பேசுவதை புரிந்துக்கொண்டு, வேறு மனிதர்களைக் காணாமல், திகைத்துப்போய் நின்றுக்கொண்டு இருந்தார்கள்.

 
5. சவுலுக்கு கண்கள் தெரியாமல் போகவே, அவர் மற்றவர்களின் துணைக்கொண்டு எழுந்து ஊருக்குள் வந்தார்.

 
6. அனனியாவை இயேசு அனுப்ப, அவர் விவரத்தை சவுலுக்குச் சொல்லி, ஜெபிக்க, கண்கள் மறுபடியும் தெரியவர, சவுல் ஞானஸ்நானம் பெற்றார்.

 

2. முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும்

 
 
முஹம்மதுவிற்கு காபிரியேல் தூதன் 23 ஆண்டுகள் குர்‍ஆன் வசனங்களை சிறிது சிறிதாக இறக்கினார், முஹம்மதுவை காபிரியேல் தூதன் அனேக முறை சந்தித்தார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.

 
எல்லா நேரங்களிலும் குர்‍ஆன் வசனங்களை தூதன் சொல்லும்போது, முஹம்மது தனியாக இல்லை. அப்படி வெளிப்பாடு தனக்கு வரும் என்று அறிந்து எல்லாரையும் தான் இருக்கும் இடத்தை விட்டு சென்றுவிடுங்கள், தூதன் காபிரியேல் பேசுவது உங்கள் காதில் விழாதபடி அதிக தூரமான இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அவர் சொல்லியிருக்கமாட்டார். அதாவது முஹம்மதுவைச் சுற்றி அனேகர் இருக்கும் போதே சில நேரங்களில் அவருக்கு குர்‍ஆன் வசனங்களை தூதன் சொல்லியுள்ளார். விஷயம் இப்படி இருக்கும் போது:

 
மற்றவர்களின் கண்களுக்கு தெரியாத தூதன் இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தார்?

தூதர் பேசுவது மற்றவர்களுக்கு கேட்காமல், இவருக்கு மட்டும் எப்படி கேட்டது?

 
எப்போது தனக்கு வெளிப்பாடு வரும் என்று முஹம்மதுவிற்கே சரியாக தெரியாது, சரியான சமயத்தில் தேவைப்படும் போது அல்லா இறக்குவார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்கும் போது, கிட்டத்தட்ட 6000 க்கும் அதிகமான வசனங்கள் முஹம்மது, தனி அறையில் [யாரும் இல்லாமல்] இருக்கும் போதா, இவரின் காதுகளில் அவைகள் தொணித்தது அல்லது தூதன் இவரின் காதுகளில் தொணிக்கச்செய்தார்? இல்லை இல்லை, இவருக்கு வெளிப்பாடுகள் வெளிப்பட்டும் போது இதர மனிதர்களும் இருந்துள்ளனர். பலர் அவருக்கு குர்‍ஆன் வசனங்கள் வெளிப்பட்ட பிறகு அவரது முகம் எப்படி இருந்தது என்றுச் சொல்லியுள்ளார்கள். வஹி வந்த பிறகு அவருக்கு குளிர் காலத்திலும் வியர்வை வரும் என்று கூறியிருக்கின்றனர்.

 
வியர்வைத் துளிகள் வழியத் தொடங்குவதை கண்டவர்கள்
 
 
பாகம் 1, அத்தியாயம் 1, எண் 2

ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, 'சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்' என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார். மேலும்,

 
"கடும் குளிரான நாள்களில் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி(ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்" என ஆயிஷா(ரலி) கூறினார்.

 
பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2661

 
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

 
.... அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்துவிட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, 'ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்" என்று கூறினார்கள். ......
 
 
ஆயிஷாவோடு முஹம்மது படுக்கையில் படுத்து இருக்கும் போது கூட குர்‍ஆன் வசனங்கள் இறங்கியுள்ளன.
 
 
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2581

 
.....அவர்கள், மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிப்) பேசு என்று கூறினர். உம்மு சலமா அவர்களும் அடுத்து தமது முறை வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசினார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. மீண்டும் உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர், அவர்களிடம் (நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் சொன்னர்கள் என்று) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதில் எதுவும் கூறவில்லை என்று உம்மு சலமா அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள், அவர்கள் உனக்கு பதில் தரும்வரை நீ அவர்களிடம் (இது குறித்துப்) பேசிக் கொண்டேயிரு என்று கூறினார்கள். மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில், ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்.....
 
 
குர்‍ஆன் வசனங்கள் எப்போதெல்லாம் இறங்கும்: அல்லா குர்‍ஆன் வசனங்களை இறக்குவதற்கு ஒரு நேரம் காலம் பார்க்கவில்லை, முஹம்மது தனியாக இருக்கும் போது மட்டும் இறக்கவில்லை அனேக நேரங்களில் அவர் மற்றவர்களோடு இருக்கும் போதும், இன்னும் சொல்லப்போனால், ஆயிஷாவோடு முஹம்மது படுத்து இருக்கும் போது கூட வசனங்கள் இறங்கியுள்ளன.

 
[முஹம்மது சொல்கிறார், ஆயிஷாவோடு இவர் படுத்து இருக்கும் போது மட்டுமே அல்லா குர்‍ஆன் வசனங்களை இறக்குகிறாராம். மற்ற எந்த மனைவியோடும் படுத்திருக்கும் போது அப்படி வசனங்கள் வருவதில்லையாம். ஒரு வேளை ஆயிஷா 18 வயதிற்குட்பட்டவர் என்பதாலும், முஹம்மதுவின் மனைவிகளில் ஆயிஷாவிற்கு மட்டும் தான் "முஹம்மது" முதல் கணவர் என்பதாலும் அல்லா இறக்கினாரோ என்னவோ, அது நமக்குத் தெரியாது, அல்லா தனக்கு எப்போது விருப்பமோ அப்போது இறக்கிக்கொள்ளட்டும், அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. இந்த கட்டுரையின் கருப்பொருள் இதுவல்ல, இக்கட்டுரையின் கருப்பொருள் ஒரு கூட்ட மக்கள் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் புரியும் வண்ணம் வசனத்தை இறக்கவோ, பேசவோ இறைவனால் முடியுமா முடியாதா என்பது தான்.]

 
இங்கு நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், முஹம்மதுவிற்கு வஹி மூலம் வசனங்கள் இறக்கப்படும் போது அனேகர் இருந்துள்ளனர். பவுலின் மனந்திரும்புதல் நிகழ்ச்சியைப் பற்றி முஸ்லீம்கள் கேட்கும் அதே கேள்விகள் இங்கு கேட்கப்படுகின்றன.

 
1. காபிரியேல் தூதன் பேசுவது முஹம்மதுவிற்கு மட்டும் எப்படி கேட்கிறது, மற்றவர்களும் கூட இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படி கேட்கவில்லை?

2. ஆயிஷாவோடு ஒரே படுக்கையில் முஹம்மது படுத்து இருக்கும் போது கூட தூதன் சொல்லும் வசனங்கள் முஹம்மதுவிற்கு மட்டுமே கேட்கிறது. கணவன் மனைவி நேருக்கத்தில் இருக்கும் போது கூட முஹம்மதுவிற்கு மட்டும் வசனங்கள் கேட்கப்பட்டது. இது எப்படி?

இறைவனுக்கு எல்லாம் சாத்தியம்:

 
இங்கு நான் குறிப்பிட விரும்பியது, இறைவனால் எல்லாம் சத்தியம், அதாவது முஹம்மதுவோடு அனேகர் இருக்கும் போது, அவருக்கு மட்டுமே கேட்கும் படி தூதன் பேசுவது என்பது இறைவனுக்கு மிகவும் சுலபமான விஷயம், இதை எல்லா இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொள்வார்கள். அது போல, ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் புரியும் படி பேசுவதும் இறைவனுக்கு சுலபம் [ தமஸ்கு சாலையில் இயேசு பவுலுக்கு மட்டும் புரியும் படி பேசியது].

 
ஆக, தேவன் யாருக்கு தரிசனம் தரவேண்டும் என்று விரும்புகிறாரோ அவருக்கு மட்டுமே தரிசனங்களைத் தருகிறார்[தானியேலுக்கு மட்டும் தெரிந்த தரிசனம் போல]. மற்றவர்கள் அங்கு இருந்தாலும், அவர்களுக்கு அது தெரிவதில்லை, தேவன் விரும்பினால் எல்லாருக்கும் தெரியவைப்பார்[மத்தேயு 17:1-9 வரை பார்க்கவும்].

ஆக, அருமையான இஸ்லாமியர்களே, அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். தேவனுக்கு சாத்தியமில்லாத காரியம் ஒன்றுமில்லை.

 
உங்கள் நபியின் காதுகளில் மட்டுமே தொணித்த வசனங்கள் மற்றவர்களுக்கு ஏன் கேட்கப்படவில்லை? தன்னோடு படுத்துக்கொண்டு இருந்த தன் மனைவிக்கு ஏன் அவ்வசனங்கள் கேட்கவில்லை. ஆக, இறைவன் விரும்பியது அவர் விரும்பியபடி நடக்கும்.

 
ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொன்ன அல்லாவின் முரண்பாடுகள்:

பவுல் இயேசுவின் சத்தத்தைக் கேட்டு புரிந்துக்கொண்டது பொய் என்றுச் சொல்வீர்களானால், உங்கள் முஹம்மது கேட்டதும் பொய் தான், தூதன் அவரை சந்தித்தது கூட பொய் தான். முஹம்மதுவின் கற்பனையின் மொத்த வடிவமாம் குர்‍ஆனில் அனேக முரண்பாடுகள், பிழைகள், சரித்திர‌ நிகழ்வுகளின் முன்னுக்குப் பின் முரண்பட்ட விவரங்கள் மட்டுமல்ல, ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாக வித்தியாசமான சூழ்நிலைகளில் சொன்னதால், பைபிள் வேதம் இல்லை என்றுச் சொல்வீர்களானால், உங்கள் குர்‍ஆனிலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளன, அதற்கு உங்கள் பதில் என்ன?


படிக்கவும்: ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொன்ன அல்லாவின் முரண்பாடுகள்: பாகம் 1: (மோசேயும், எரியும் புதரும் - MOSES AND THE BURNING BUSH)

 
அல்லா ஒரு நிகழ்ச்சியை எப்படி வெவ்வேறாக தன் குர்‍ஆனில் சொல்லியுள்ளார் என்பதை அனேக குர்‍ஆன் வசனங்களைக் கொண்டு விளக்கியுள்ளோம். முஸ்லீம்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை கொண்டு இருப்பதால், அல்லாவிற்கு ஒரு நிகழ்ச்சியை ஒரே மாதிரியாக சொல்ல தெரியவில்லை என்ற முடிவிற்கு இஸ்லாமியர்கள் வரலாம். பைபிளுக்கு எந்த நிபந்தனையை இஸ்லாமியர்கள் வைப்பார்களோ அதே நிபந்தனையை சந்திக்க குர்‍ஆன் தோற்றுவிட்டது, அல்லது அல்லா தோற்றுவிட்டார்.



 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP