சமீபத்திய பதிவுகள்

விண்வெளியில் விருந்தினர் மாளிகை

>> Thursday, October 22, 2009


இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் நிலவில் தண்ணீர்இருப்பதை கண்டுபிடித் துள்ளதுஇது விண்வெளி ஆராய்ச்சின் புதியபரிணாமம்போல அமைந்துவிட்டதுஇதையடுத்து நிலவை மையமாக வைத்துபல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறதுஅதாவது நிலவு ஒரு விருந்தினர்மாளிகைபோல செயல்பட இருக்கிறது.

முதல்கட்டமாக நிலவை ஒரு மினி ஆராய்ச்சி கூடம்போல பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளதுவிண்வெளி ஓடங்களில் எரிபொருளாகபயன்படுவது ஹைட்ரஜன்தான்எனவே விண்கலங்களின் எரிபொருள்தேவையை பூர்த்தி செய்யும் இடமாக நிலவை பயன்படுத்த திட்ட மிடப்பட்டுஇருக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சி பயணத்தில் எரிபொருள் தீர்ந்துவிடும்போது நிலவில்இறங்கி எரிபொருளை நிரப்பிக் கொள்ளப் போகிறார்கள்இதனால் மற்றகிரகங்களைப் பற்றிய ஆராய்ச்சியையும் வேகமாகச் செயல்படுத்த முடியும்.

மேலும் ஏற்கனவே நடந்த ஆய்வின்படி குறிப்பிட்ட ரசாயனத்தை நிலவின்பாறைகள் மீது தெளிப்பதால் ஆக்சிஜன் வெளிப்படும் என்று அமெரிக்கவிஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர்தற்போது நிலவில் ஆக்சிஜனும்,ஹைட்ரஜனும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதால் இதே முறையில்கூடுதலாக ஆக்சிஜனை வெளிப்படச் செய்து செயற்கை முறையில் நீர்உற்பத்தியை பெருக்கவும் முடியும்இதன் மூலம் உயிரினங்களின் தோற்றம்உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும்மேலும் மனிதர்களின்புதிய குடியேற்றத் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.

இது குறித்துஆய்வாளர் குழுவைச் சேர்ந்த லாரி டெய்லர் கூறும்போது, "நிலவில் காணப்படும் சாதகமான சூழல் சில ஆயிரம் ஆண்டுகளில்உயிரினங்கள் வசிக்கக்கூடிய நிலைமையை அடையும்அங்குள்ளஹைட்ரஜன்விண்கலங்களின் எரிபொருள் தேவையை 85 சதவீதம் பூர்த்திசெய்யும்" என்றார்.


source:paranthan


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP