சமீபத்திய பதிவுகள்

மனிதப் பேரவலப் பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான்

>> Friday, December 25, 2009

 

 


மக்கள் வாழ்வுக்கு அச்சுறுத்தல் நிறைந்த முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. எல்லைகளற்ற மருத்துவர்கள் (எம்எஸ்எஃப்) என்கிற சர்வதேசத் தன்னார்வ அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

1998-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரையான உலக மனிதப் பேரவலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உலகமெங்கும் உள்ள இந்த அமைப்பின் மருத்துவர் குழுக்கள் அனுப்பிய அறிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகிய நாடுகளில் உயிர்காக்கும் சேவைகளை வழங்க முன்வந்த அந்த நாடுகளின் அரசுகளே தடுத்துவிட்டதாக எம்எஸ்எஃப் குறைகூறியிருக்கிறது. யேமன், ஆப்கன், பாகிஸ்தான், காங்கோ போன்ற நாடுகளில் சேவை புரிந்தவர்கள் நேரடியாகத் தாக்கப்பட்டனர் என்றும் எம்எஸ்எஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source:dinamani

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP