சமீபத்திய பதிவுகள்

வீடியோ: இஸ்ரேலிய விமானங்கள் காஜா பகுதி மசூதியை அழிக்கும் காட்சி

>> Wednesday, January 7, 2009

StumbleUpon.com Read more...

இஸ்ரேலுக்கு ஆதரவாக மாபெரும் ஊர்வலம்: படங்கள்

 










வாழ்க இஸ்ரேல்.
 

StumbleUpon.com Read more...

சத்யம் நிறுவன தலைவர் திடீர் ராஜினாமா: பங்குசந்தை கடும் சரிவு

 

 
 
 
 
 
Imageசத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்  தலைவர் ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனை அடுத்து  பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 600 குறைந்தன.சத்யம்  நிறுவன பங்குகள் ரூ.188-லிருந்து ரூ.50 ஆக குறைந்தது.
முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களில் சத்யம்மும் ஒன்றாகும்.இதில் கடந்த சில மாதங்களாக நிர்வாகப் பிரச்சினை நிலவி வந்தது.இதனால் பெரும் பாதிப்புக்கு சத்யம் நிறுவனம் உள்ளாகலம் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில்  சத்யம் நிறுவனத்தின்  நிறுவனரும்,தலைவருமான ராமலிங்க ராஜூ இன்று அப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
சத்யம் நி்ர்வாகப் பதவியிலிருந்து விலகுவதாக நிவாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். .மேலும் இதுவரை சத்யம் நிறுவனத்திடம் கையிருப்பாக இருப்பதாகக் கூறப்பட்ட ரூ. 5,040 கோடி உண்மையில் கையிருப்பில் இல்லை என்றும், அது நிறுவனத்தின் கணக்கில் திரித்துக் காட்டப்பட்ட பணம் என்றும் ராமலிங்க ராஜு ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சத்யம் நிறுவனம் ரூ. 2,700 கோடி கையிருப்பில் உள்ளதாகக் காட்டியது. ஆனால், உண்மையில் இருந்த பணம் ரூ. 2,112 கோடி தான். இந்த உண்மை போர்ட் உறுப்பினர்களுக்குக் கூட தெரியாது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சத்யம் நிறுவனத்தின் இடைக்கால செயல் அதிகாரியாக ராம் மையாபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சதயம் நிறுவனத்தின் நிர்வாகிகள் கூட்டம் வரும் 10-ந் தேதி நடை பெற உள்ள நிலையில் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்ப்டத்தக்கது.

 

 

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை : இலங்கை அரசு அறிவிப்பு

 
 
 
 
 
 Imageதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை இன்று முதல் தடைசெய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்படுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
 
இலங்கை மத்திய அமைச்சரவை இன்று கூடிய போது இதற்கான ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.  இலங்கை மந்திரி சபையின் அவசர கூட்டம் கொழும்பு நகரில் அதிபர் ராஜபக்சே தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்வது குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த தகவலை வெளியிட்டார்.
 
ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு முறை புலிகளிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
தற்போது முல்லைத்தீவு பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கில்,புலிகள் மீதான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விடுதலைப்புலி அமைப்பு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9508&Itemid=52

StumbleUpon.com Read more...

ஒபாமாவுக்கு அல்கொய்தா தலைவன் எச்சரிக்கை: பாலஸ்தீனம் மீது தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்

 

கெய்ரோ, ஜன. 7-

பின்லேடனின் அல்- கொய்தா இயக்கத்தின் 2-ம் நிலை தலைவனாக இருப்பவர் அய்மான் அல்சவாகிரி.

எகிப்து நாட்டை சேர்ந்த சவாகிரி இணைய தளம் மூலம் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளான். பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வரு கிறது. அமெரிக்காவின் போக்கையும் அராஜகத்தை யும் மாற்றப்போவதாக கூறி மக்களை ஏமாற்றுகிறார் ஒபாமா.

இஸ்லாமிய நண்பர்கள் கொன்று குவிக்கப்படுகிறார் கள். அதை தடுத்து நிறுத்தும் எண்ணம் ஒபாமாவுக்கு இல்லை. அமெரிக்கா ஒரு போதும் தனது போக்கை மாற்றிக் கொள்ளாது.

எகிப்து அதிபர் முபாரக் ஒரு துரோகி. இஸ்ரேலின் தாக்குதலை தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. காசாவில் போராடும் ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கை களை அவர் எடுத்து வரு கிறார்.

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை தடுக்க ஒபாமா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அல்சவாகிரி கூறியுள்ளார்.
 

StumbleUpon.com Read more...

கிளிநொச்சியை மீண்டும் பிடிப்போம்: விடுதலைப்புலிகள் அரசியல்பிரிவு தலைவர் நடேசன் பேட்டி

 

கொழும்பு, ஜன. 7-

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் ப.நடேசன் அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

ஈழத்தமிழர்கள் யாரு மற்ற அனாதைகள் அல்ல. அவர்களுக்கு துன்பம் ஏற்படும் போது 7 கோடி தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்துகுரல் கொடுப்பார்கள்.

கிளிநொச்சியை ராணு வம் பிடித்துள்ளதை விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக நாங்கள் பார்க்க வில்லை. போரில் இழப்புகளை குறைப்பதற்காக பின் வாங்கி செல்வது என்பது ஒரு தந்திரம். கிளி நொச்சி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்றது இது முதல்தடவை அல்ல. கிளிநொச்சியை பல தடவை ராணுவத்திடம் இருந்து மீட்டுள்ளது. நீண்டகாலம் அதை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்.

இது தான் வரலாறு. கிளிநொச்சியை மீண்டும் பிடிப்போம். தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கவே இலங்கை அரசு நினைக்கிறது.

கிளிநொச்சியில் உள்ள மக்கள் இப்போது வன்னி பகுதியில் பாதுகாப் பான இடத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இழந்த பகுதிகளை விடுதலைப் புலிகள் மீண்டும் கைப்பற்று வார்கள்.

இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவிக ளை நிறுத்தி எங்கள் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். உலக தமிழினம் ஒன்றுபட்டு எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதையே காட்டுகிறது.

இவ்வாறு நடேசன் கூறினார்.
 

StumbleUpon.com Read more...

பிரியாத மதிவதனி. போர்முனையில் சார்ள்ஸ். ஜூனியர் விகடன்

பிரியாத மதிவதனி. போர்முனையில் சார்ள்ஸ். ஜூனியர் விகடன் 
தம்பி இன்று ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்? இந்து மகாசமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும்போது நான் எப்படியம்மா நிம்மதியாகத் தூங்க முடியும்?
சிங்கள துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஓர் இரவில், அவன் தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக சிங்கள காவியமான மகாவம்சம் சொல்கிறது.
நூற்றாண்டுகளைக் கடந்து காலம், நிம்மதியில்லா நித்திரையை இடம் மாற்றிப் போட்டிருக்கிறது. இந்து மகாசமுத்திரமும் இலங்கைப் படைகளும் இப்போது தமிழரை நெருக்குகிறது. தூக்கமில்லாமல் தவிக்கிறார் பிரபாகரன். இதுவரை தமிழன் படை நடத்திய இந்து மகாசமுத்திரம், சிங்களவர் கையில். கடல் வழி உதவிகள் எல்லாம் தடுக்கப்பட்டு, கிளிநொச்சி நகரம் இப்போது சிங்களப் படைகளிடம்.

'சத்ஜெய' என்ற பெயரோடு கிளிநொச்சியைக் கைப்பற்ற சிங்களப் படைகள் போர் தொடங்கிய 1996-லும் கிளிநொச்சி இவ்விதமாகப் படையினர் வசமாகியிருக்கிறது. ஆனால், கிளிநொச்சிக்குள் நுழைந்த இராணுவத்தினரில் பெரும்பாலானோரால் கொழும்புக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை. இரண்டே ஆண்டுகளில் கிளிநொச்சி மீண்டும் புலிகளின் வசமானது. 'ஓயாத அலைகள்' என்ற பெயரில் தாக்குதல் தொடுத்த புலிகளின் வெற்றி, ஆனையிறவு முகாமில் புலிக்கொடி ஏற்றப்படும் வரை தொடர்ந்தது. அதிலிருந்து தொடங்கியதுதான் சமாதான நடவடிக்கைகள். இன்றைய புலிகளின் பின்னடைவு, சமாதான காலத்திலிருந்தே தொடங்குகிறது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு எந்தப் பெயரும் வைக்காமல், மக்களுக்கு அரசியல் தீர்வையும் புலிகளுக்கு இராணுவத் தீர்வையும் கொடுக்கப் போகிறோம் என்று சொல்லி வன்னி மீட்புப் போரில் இறங்கி, கிளிநொச்சியை மீட்க இலங்கை அரசு இது வரை இழந்த படைவீரர்களின் எண்ணிக்கை பத்தாயிரம்

இங்கே குறிப்பிடத் தக்க விஷயம். முப்பத்தைந்தாயிரம் போராளிகளைக் கொண்ட புலிகள், கிளிநொச்சியைக் காக்க அனுப்பிய வீரர்கள், வெறும் இருநூறு பேர் மட்டுமே!

கிளிநொச்சி தமிழீழத்தின் வரவேற்பறை. பிரபாகரனின் கனவு நகரம். கடந்த பத்து வருடத்தில் அந்த நகரத்தின் விசாலமான வீதிகள் பிரபாகரனின் நேரடித் திட்டமிடலில் உருவானது. தங்களுக்கென்று ஒரு தாய்நாடு. அது வளம்பெற வேண்டும் என்று புலம்பெயர் தமிழர்கள் கொட்டிக்கொடுத்த கோடிகளில் இருந்து உருவானது அந்த அழகான விவசாய பூமி.
புதிய கட்டடங்கள், புதிய தொழில்நுட்பங்கள், தேவைக்கு ஏற்றதை சொந்தமாக விளைவிக்கும் விவசாய நிலங்கள் என பத்தாண்டுகளில் கிளிநொச்சியை ஓர் உல்லாசபுரியாகவே உருவாக்கியிருந்தார் பிரபாகரன். உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத பாதுகாப்பு கிளிநொச்சியில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

பத்து ஆண்டுகளாக பிரபாகரன் கண்ட கனவை, பத்து மணிநேரத்தில் கிழித்துப் போட்டு விட்டார்கள் சிங்களப் படையினர். ஆனால், கிளிநொச்சிக்குள் படைகள் நுழைந்தபோது புலிகளிடமிருந்து எவ்விதமான எதிர்ப்பும் இல்லை. நகரங்கள் காலியாகக் கிடந்தன. புலிகளின் விடுதிகளில் ஒரு டேபிள், சேர்கூட இல்லை. பழைய கலிபர் துப்பாக்கியைக்கூட இலங்கைப் படைகளால் அந்த நிர்வாக நகரத்தில் இருந்து மீட்டெடுக்க முடியவில்லை. மக்கள் தங்களுடைய வீடுகளின் கதவுகள், ஜன்னல்களைக்கூட பெயர்த்தெடுத்துக்கொண்டு புலிகளோடு போய் விட்டார்கள். கிளிநொச்சியில் ஒருவர்கூட இல்லாதபடி அத்தனை புலிகளும் அவ்வளவு மக்களும் எங்கு போனார்கள் என்றால், அவர்கள் எங்கும் போகவில்லை. எங்கிருந்து புலிகள் தங்கள் போரைத் தொடங்கினார்களோ அங்கேயே போயிருக்கிறார்கள். திரும்பிவரும் ஆவேசத்தோடு! நான்காம் கட்ட ஈழப்போர் இனித்தான் தொடங்கப் போகிறது.

பிரபாகரன் இப்போது எங்கு இருக்கிறார்? அவர் மனைவி மதிவதனி, பிள்ளைகள், வயதான பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்?
பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், தாயார் பார்வதி அம்மாவும் தமிழகத்தின் திருச்சியில் தங்கியிருந்தனர். நீண்ட காலமாக பெற்றோரைப் பார்க்காமல் கள முனையில் இருந்த பிரபாகரன், நோர்வே முன்னெடுத்த சமாதான காலத்தில், பெற்றோரை வன்னிக்கு அழைத்திருந்தார். வயதான காலத்தில் தன் அருகில் வைத்துப் பெற்றோரை கவனித்துக்கொள்ளும் ஆசையில் மகன் அழைக்க, அவர்களும் தமிழகத்திலிருந்து கிளிநொச்சிக்குப் போனார்கள்.

ரணில் ஆட்சி மாறி, ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபோது, சமாதானத்துக்கு உலைவைக்கும் சூழல் ஏற்பட்டதும் பிரபாகரன் தன் பெற்றோரைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்க விரும்பினார். ஆனால், பெற்றோரோ மகனை விட்டு விலகிச்செல்ல மறுத்துவிட்டனர். அந்தப் பெற்றோர் வன்னியில் இருந்த காலத்தில், அவர்களை மரியாதை நிமித்தமாகச் சென்று சந்தித்து, அடிக்கடி ஆசிவாங்கி வந்த ஒருவர் கருணா. துன்பம் சூழ்ந்த வேளையில் கருணாவின் துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பிரபாகரனை விடவும் அதிகம் தவித்தது, அவரின் பெற்றோர்தான். இப்போதும் அவர்கள் பிரபாகரனுடனே இருக்கிறார்கள். 'வாழ்வா? சாவா?' என யுத்தத்தின் விளிம்பில் நிற்கும் தன் மகனுக்கு ஆறுதலாக அவர்கள் முல்லைத்தீவில் இருக்கிறார்கள். மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் தன் தலைவனின் பெற்றோரை தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றார்கள் புலி வீரர்கள். இப்போது மிக பாதுகாப்பான சூழலில், போராளிகளுக்கு மத்தியில் மகனோடு வாழ்கிறார்கள் அவர்கள்.

பிரபாகரனின் மனைவி மதிவதனி

அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மதிவதனி குறித்து தன்னுடைய 'சுதந்திர வேட்கை' என்ற நூலில் குறிப்பிடும் போது,
''மதியைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுத்தது, தலைவர் பிரபாகரனுக்குக் கிட்டிய மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். திருமணம் ஆன இத்தனை ஆண்டுகளில், மிகவும் சோதனையான இடர் படிந்த காலங்களில்கூட நிலையான மற்றும் ஆழமான அன்பையும், இனிமையான குடும்ப வாழ்வையும் பிரபாகரனுக்கு மதி வழங்கியிருந்தார். எனினும், திருமண வாழ்வு என்பது மதிவதனிக்கு மலர்ப்படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும் பொறுமையும் கொண்ட மதி, எத்தனையோ தடவை மிகவும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பிரபாகரனின் போராட்டப் பணிகள் காரணமாக, இருவருக்கும் இடையில் நீண்டகாலப் பிரிவுகள் ஏற்பட்டதுண்டு. திருமணமான புதிதில் தனிமைத் துயரை அனுபவிக்கும் கொடுமைக்கு உள்ளானார் மதி. இந்திய இராணுவம் புலிகளுடன் பெரும் போரைத் தொடங்கிய காலத்தில் மதி இவ்விதமான துன்பங்களுக்கு ஆளானார். இந்தியாவுக்கும் புலிகளுக்கும் போர் தொடங்கியதும், நல்லூர் கந்தசாமி கோயிலில் தன் பிள்ளைகளுடன் அகதியாகத் தஞ்சமடைந்தவர்களுள் மதியும் ஒருவர். பின்னர் பிள்ளைகளை தன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, முல்லைத்தீவின் அளம்பில் காடுகளுக்குள் களமாடிக் கொண்டிருந்த தன் காதல் கணவர் பிரபாகரனுடன் இணைந்தார்.

அளம்பில் முகாமின் மீது தொடர்ந்த ஷெல்லடிகள், பீரங்கித் தாக்குதல்கள், விமான குண்டு வீச்சுகளுக்கு மத்தியில், பிள்ளைகளைப் பிரிந்த ஓர் இளம் தாய், பிரிவுத் துயரிலும் கணவனோடு அந்தப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார். துன்பச் சூழலில் ஆறுதலாக இருந்த தன் தம்பி பாலச்சந்திரனையும் அந்தப் போரில் இழந்த மதி, குழந்தைகளோடு சுவீடனுக்குப் பயணமானார். முன்பின் அறிமுகமில்லாத கலாசாரம், இடையறாத ஆபத்து நிறைந்த போர்க்களத்தில் நிற்கும் கணவனைப் பிரிந்த சோகம், சென்ற நாட்டிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள இயலாத சூழலில் நேர்ந்த துன்பமான தனிமையுடன் பிரபாகரனுக்கும் அவருக்குமான பிரிவு முடிவுக்கு வந்தது.

பிரேமதாசாவுடன் 1989-ல் புலிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியபோது, மதி இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை பாலா (அன்டன் பாலசிங்கம்) செய்தார். மதி கொழும்பு சென்றடைந்ததும், அங்கிருந்து அளம்பில் காடுகளுக்குச் செல்ல உலங்குவானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார் பிரேமதாசா. 1989-ல் மதி கணவரோடு சேர்ந்து கொண்டார்.

திருமணமான நாளில் இருந்து மதிக்கு நிரந்தரமான ஒரு வீடும் இல்லை. பாதுகாப்பான குடும்ப வாழ்வும் இல்லை. இருந்தபோதிலும், ஒரு கெரில்லாப் படைத் தளபதியின் மனைவிக்கு உரிய கண்ணியத்தோடும் துணிச்சலோடும் ஒரு நிலையான வாழ்வுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்! என விரிவாக சொல்லியிருக்கிறார்.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு பிரபாகரனோடு சேர்ந்த மதி, இந்த இருபதாண்டுக் காலத்தில் பிரபாகரனை விட்டு எங்குமே விலகியதில்லை! புலிகளின் பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி, சில நிகழ்வுகளைக்கூட அவர் முன்னெடுத்திருக்கிறார். 1984 அக்டோபரில் திருப்போரூரில் மணமுடித்து, தங்கள் முதல் மகனைக் கருவுற்றபோது, ஜெயவர்த்தன அரசாங்கம் 'ஓபரேஷன் லிபரேஷனை' தொடங்கியிருந்தது.

சுற்றிவளைப்புகளுக்கு மத்தியிலும், பீரங்கி விமானத்தாக்குதலுக்கு மத்தியிலும் முதல் மகன் பிறந்த நேரத்தில் பிரபாகரன் தன் தளபதிகளோடு களத்தில் நின்றார். சில நாட்கள் கழித்தே மகனைத் தொட்டுப் பார்க்க முடிந்தது. அந்தப் பிள்ளைக்கு இலங்கை இராணுவ மோதலில் கொல்லப்பட்ட தன் தொடக்க கால நண்பனான சார்ள்ஸ் அன்டனி (சீலன்) யின் பெயரையே சூட்டினார்கள் இருவரும். அடுத்து பிறந்த பெண் குழந்தைக்கு வீரச்சாவடைந்த துவாரகாவின் பெயரை வைத்தார்கள். கடைசியாக பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறந்த மகனுக்கு இந்திய இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்ட தன் தம்பி பாலச்சந்திரனின் பெயரை வைத்து அழகு பார்த்தார் மதிவதனி.

இந்த இருபதாண்டுகளில் போருக்கும் சமாதானத்துக்கும் இடையில் வதைபட நேர்ந்த வாழ்க்கை குறித்து மதிவதனி கவலைகள் எதுவும் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளதெல்லாம் ஒரே ஒரு வருத்தம்தான். இப்போதும் அவர் பிள்ளைகளைப் பிரிந்து இருக்கிறார். மூத்த மகன் சார்ள்ஸ் அன்டனி (சீலன்)யை மட்டும் களமுனையில் நிறுத்திவிட்டு, மற்ற இரண்டு குழந்தைகளையும் பிரிந்திருக்கிறார். புலிகளின் விமானப் படைக்கு முதல் வித்திட்ட சங்கரின் மரணத்துக்குப் பிறகு, பிரபாகரன் அந்தக் கனவை ஈடேற்ற மகனை நம்பியிருந்தார். இன்று அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. கொழும்பில் புலிகளின் விமானங்கள் காட்டியது ஒரு பகுதி வித்தையைத்தான். இன்று அவர்களிடம் ஆளில்லா உளவு விமானங்கள் இருக்கின்றன. தாக்குதல் விமானங்களும் இருக்கின்றன. இதை எல்லாம் சாத்தியமாக்கியது, சார்ள்ஸ் அன்டனி தலைமையிலான விமானப் படைதான் என்றும் சொல்லப்படுகிறது.

இன்று மதிவதனி தாய்லாந்தில் இருப்பதாகவும், அங்கிருந்தபடியே கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாகவும் அல்லது ஆசிய நாடொன்றில் தஞ்சம் கோரியிருப்பதாகவும் சொல்லப்படும் சூழலில், இக்கட்டான எந்தச் சூழலிலும் அவர் பிரபாகரனைப் பிரிந்ததில்லை என்பதுதான் அந்தப் போராளிப் பெண்ணின் குணம்.

யுத்தமோ ஆக்கிரமிப்புகளோ அவரை வேதனைப்படுத்தவில்லை. துன்பம் சூழ்ந்த வேளைகளில் எங்கிருந்து பிரபாகரன் படை நடத்தினாரோ, அந்த முல்லைத்தீவின் மணலாறுப் பகுதியிலுள்ள அளம்பில் காடுகளும் இப்போது இராணுவத்தின் வசம். புலிப் பாய்ச்சலில் பெரும் வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த அளம்பில் காட்டில் எடுக்கப்பட்டதுதான் புலிக்குட்டியோடு பிரியமாக இருக்கும் பிரபாகரனின் படம். அந்தப் படத்தை எடுத்த கிட்டு இப்போது இல்லை. அளம்பில் காடுகளும் பிரபாகரன் வசம் இல்லை. விமானம் இருக்கிறது. போராடப் புலிகள் இருக்கிறார்கள். வரவேற்பறை வழியாக வீட்டின் கொல்லைப்புறத்துக்கே வந்து விட்டார்கள் சிங்கள இராணுவத்தினர். கிளிநொச்சியைக் கைப்பற்றும் முயற்சி குறித்து சிங்கள தலைவர் ஒருவர் இப்படிச் சொன்னார்,

இந்தப் போர் துட்டகைமுனுவின் இறுதிப் போரான விஜிதபுர யுத்தத்துக்கு சமமானது! என்றார்.

ஆமாம், நான்காம் கட்ட ஈழப் போர் என்றழைக்கப்படும் இந்தப் போரில், தமிழ் மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் முடிவை ஈழமக்கள் பிரபாகரனிடமே விட்டு விட்டார்கள்.

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1231323080&archive=&start_from=&ucat=&

 
 

StumbleUpon.com Read more...

போர் நிறுத்தம் என்ற பேச்சே இல்லை;இஸ்ரேல் கண்டிப்பு

 
 
"ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதலை நிறுத்தும் வரை,போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என,இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இதற்கிடையே,காசா அருகே நடந்த சண்டையில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 54-பேர் கொல்லப்பட்டனர்.

ஒரு வாரத்திற்கும் மேலாக,ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது,இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. துவக்கத்தில் விமானங்கள் மூலம் குண்டு வீச்சு நடத்திய இஸ்ரேல் ராணுவம்,சில நாட்களாக தரை வழி தாக்குதலையும் துவங்கியுள்ளது.

இதுவரை நடந்துள்ள தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 550க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில்,காசா அருகே உள்ள பகுதிக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தினர்.இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் கடும் சண்டை நீடித்தது.இச் சண்டையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் நடத்திய பீரங்கி மற்றும் விமான தாக்குதலில் 12-குழந்தைகள் உட்பட 54-பேர் கொல்லப்பட்டனர்.காசா மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குண்டு வீச்சு காரணமாக புகை மூட்டம் காணப்பட்டது.

30-க்கும் அதிமான முறை விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.இதற்கிடையே,உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. "ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதலை நிறுத்தும் வரை, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என,இஸ்ரேல் கூறியுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

பெங்களூரில் 5-கம்ப்யூட்டர் நிறுவனங்களை தகர்க்க மிரட்டல்:அமெரிக்காவில் இருந்து "இ.மெயில்"

 
 
lankasri.comமத்திய அரசுக்கு அமெரிக்காவில் இருந்து 2-இ.மெயில் கடிதம் வந்துள்ளது.அதில் பெங்களூரில் உள்ள இன்போசிஸ், விப்ரோ, அக்சென்டர், கேப்கெமின், கிரேன்ஸ் சாப்ட்வேர் ஆகிய கம்ப்யூட்டர் நிறுவனங்களை தகர்க்கப் போவதாக கூறப்பட்டுள்ளது.இதையடுத்து மத்திய உளவு துறை கர்நாடக அரசுக்கு தகவல் கொடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும்படி கூறியது.

எனவே அந்த கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீவிரவாதிகள் பெங்களூருக்கு குறி வைத்து இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தது.இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர்.

இப்போது இ.மெயின் மிரட்டல் வந்து இருப்பதால் மிகவும் உஷார் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து இ.மெயிலை அனுப்பியவர்கள் யார்? என்று கண்டுபிடிக்க மத்திய உளவுத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1231084927&archive=&start_from=&ucat=1&

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP