சமீபத்திய பதிவுகள்

மீட்பர் அவசியம் கடவுளாகத் தான் இருக்க வேண்டுமா? - Is the Savior necessarily God?

>> Wednesday, January 21, 2009

 



 

பொதுவான கேள்விகளுக்கு தொடர் பதில்கள்

 

மீட்பர் அவசியம் கடவுளாகத் தான் இருக்க வேண்டுமா?



Is the Savior necessarily God?

 

சாம் ஷமான்(Sam Shamoun)

 
கேள்வி:
 
இயேசுவை "மீட்பர் – Saviour" எனச் சொல்லப்பட்டுள்ள‌தினால், கிறிஸ்துவர்கள் அவரைக் "கடவுள்" என வாதிடுகின்றனர். ஆனால், பழைய ஏற்பாட்டில் யேகோவா தேவன் ஒருவ‌ரே "மீட்பர்" எனச் சொல்லப்பட்டுள்ளது (ஏசாயா 43:11, 45:21, ஓசியா 13:4). இந்த வாதம், யேகோவா தேவன் ஒருவரே மீட்பராக இருப்பினும் அவர் தம் சித்தத்தை நிறைவேற்றுகையில் தமது பிரதிநிதியாக இன்னொருவரை நியமித்து அனுப்புகிறார் என்கின்ற விவரத்தை காணத் தவறுகிறது. உதாரணமாக, பழைய ஏற்பாட்டில், ஒத்னியேல் என்கின்ற ஒரு இஸ்ரவேலரை, இஸ்ரவேல் மக்களை மீட்க யேகோவா தேவன் பயன்படுத்தினார் எனப் பார்க்கிறோம். அவரும் கூட "மீட்பர்" என்றே அழைக்கப்படுகிறார்! (நியாயாதிபதிகள் 3:9, ஓபதியா 1:21). யேகோவா தேவன் ஒருவரே மீட்பர் எனச் சொல்லும் போது, அது, அவர் ஒருவரே மீட்பின் பிறப்பிடமாய் இருக்கிறார் என்றே உண்மையில் அர்த்தமாகின்றது. வேறு எவரையும் மீட்பினைக் கொண்டுவர தேவன் பயன்படுத்த முடியாது என இதனைப் பொருள் கொள்ளலாகாது. இதன் அடிப்படையில், இயேசு, தேவனின் பிரதிநிதியாக தேவனால் "மீட்பர்" எனப் அழைப்பட்டிருந்தால், அவரைக் "கடவுள்" என‌ அழைப்பது எவ்விதத்தில் நிரூப‌ண‌மாகும்?
 
பதில்:

யேகோவா தேவனுக்கு இணையாக வேறு எந்த இரட்சகரும் இல்லை எனச் சொல்லும் வேத வசனங்கள் இவைகளே:
 
"நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்து கொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப் பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை"(ஏசாயா 43:10-11).

 
"நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வந்தது முதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறிய வேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை"(ஓசியா 13:4).
 
 
ஆனால் இந்தக் கேள்வியிலேயே உள்ளபடி "இரட்சகர்/ மீட்பர்" என அழைக்கப்படும் வேறு நபர்களும் உண்டு எனவும் இது அவர்களை கடவுளாகவோ அல்லது தெய்வீகத் தன்மை உள்ளவர்களாகவோ ஆக்கவில்லை எனவும் காண்கிறோம்.
 
 
"கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோப மூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப் போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்ட போது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும் படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப் பண்ணினார்"(நியாயாதிபதிகள் 3:8-9).

"ஏசாவின் பர்வதத்தை நியாயந் தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்" (ஒபதியா 1:21).
 
 
இவ்வாறு ஒப்பிடுவதில் பிரச்சினை என்னவென்றால், இயேசுவை இரட்சகர் என்று அழைப்பதற்கும் ஏனையோரை அவ்வாறு அழைப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான். முதலாவதாக, தேவன் இந்த மனிதர்களை "இஸ்ரவேலை அதன் பகைவர்களிடமிருந்து மீட்பதற்காக" பயன்படுத்தினார். அவர்கள் இஸ்ரவேலின் நெருக்கத்தினின்று அதைக் காப்பாற்ற அனுப்பப்பட்டனர். அவர்களின் பாவத்தினின்று அவர்களை மீட்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு நித்திய வாழ்வினை வழங்கவோ அவர்கள் அனுப்பப்படவில்லை. அது தேவனால் மட்டுமே முடியும்.

 
இரண்டாவதாக, இந்தக் கேள்வியிலேயே அமைந்துள்ளபடி, இரட்சிப்பு யேகோவா தேவனிடமிருந்து மட்டுமே வர முடியும்; அது அவருக்கே உரியது என பழைய ஏற்பாடு வேத வசனங்கள் போதிக்கிறது.
 
"இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின் மேல் இருப்பதாக" (சங்கீதம் 3:8).

"நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்" (யோனா 2:9).
 
 
இங்கு தான் இயேசுவின் தெய்வீகத் தன்மைக்கான நிரூபணம் வெளிப்படுகிறது. இரட்சிப்பு ஆண்டவராகிய இயேசுவுக்கே உரியதாகி அவரிடமிருந்தே புறப்படுகிறது என புதிய ஏற்பாடு கூறுகிறது.
 
 
"அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்" (வெளி 7:10).
 
 
மேலும், யேகோவா தேவன் அவர் தம்மக்களை அவருக்கே உரியவர்களாக்கும் பொருட்டு அவர்களை பாவத்தினின்று மீட்டுக் கொண்டாரென எபிரேய வேதமாகிய பைபிள் தெரிவிக்கின்றது‌.
 
 
"இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக் கொள்வீர்களானால்,சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது" (யாத்திராகமம் 19:5).

"நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்து கொண்டார்"(உபாகமம் 7:6).

"நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்து கொண்டார்"(உபாகமம் 14:2).

"கர்த்தரும் உனக்கு வாக்குக் கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக் கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்.."(உபாகமம் 26:18).

"இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு. அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக் கொள்வார்"(சங்கீதம் 130:7-8).

"அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்களினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப் படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவஞ் செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம் பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் "(எசேக்கியேல் 37: 23).
 
 
எனினும், ஆண்டவராகிய இயேசு, யேகோவா தேவன் செய்தது போன்றே செய்தார் என புதிய ஏற்பாடு போதிக்கிறது. சான்றாக, அவர் பாவிகளை அவர்களது பாவங்களினின்று மீட்டு அவர்களை அவரது சொந்த ஜனமாக்கிக் கொள்ளவே இவ்வுலகிற்கு வந்தார் என வாசிக்கிறோம்.
 
"அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.."(மத்தேயு 1:21).

"நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கிய முள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்."(தீத்து 2:13-14).
 
இறுதியாக, விசுவாசிப்போர் தங்களது அடைக்கலத்தையும் பரிசுத்தமாகுதலையும் சகல முழங்கால்களும் முடங்கும் யேகோவா தேவனிடம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என தீர்க்கதரிசிகள் அறிவித்தார்கள்.
 
"நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனை பண்ணுங்கள்; இதைப் பூர்வகால முதற் கொண்டு விளங்கப் பண்ணி அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத் தவிர வேறொருவரும் இல்லை. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள். இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்" (ஏசாயா 45: 21-25).
 
 
மேலும், பழைய ஏற்பாட்டின் படி யேகோவா தேவனுக்கே உரித்தான குறிப்பிடப்பட்ட காரியங்கள் இயேசுவுக்கும் குறிப்பிடப்பட்டன என புதிய ஏற்பாட்டில் காண்கிறோம்.
 
 
"நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்."(I கொரிந்தியர் 1:30-31).

"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும் படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்"(பிலிப்பியர் 2:9-11).
 
 
மேலே சொன்னவைகள் ஒரு விவரத்தை தெளிவாக்குகிறது. இயேசுவை, ஒத்னியேல் போன்றவர்களின் வரிசையில் இரட்சகராகக் கருதப்படலாகாது. ஏனெனில், அவர் இஸ்ரவேல் மக்களை அவர்களின் பகைவர்களினின்று இரட்சிக்க அனுப்பப்பட்ட பிரத்தியோகமான மனிதத் தூதர் அல்லர். மாறாக, அவர் தேவன் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தை செய்யும் படிக்கு பிதாவினால் அனுப்பப்பட்டு இரட்சிப்பின் ஊற்றாகச் செயல்பட்டார். அதாவது அவரை விசுவாசிக்கும் சகல மனிதரையும் அவர் தம் பாவக்கறை நீங்க அவரது மாசற்ற தூய இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து நித்திய மீட்பை அவர்களுக்கு அவரது கீழ்படிதலாலும் தியாகத்தினாலும் பெற்றுக் கொடுத்தார்.
 
 
"கிறிஸ்துவானவர் வரப் போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார். அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள் மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீர சுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு உங்கள் மனச் சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்தி செய்யும் பொருட்டு அவர் மரண மடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்து கொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்" (எபிரெயர் 9:11-15).

"தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும் படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்"(I யோவான் 4:9,10,14).
 
 
மேலே சொன்னவைகளின் அடிப்படையில், புதிய ஏற்பாட்டின் வேத வசனங்கள் இயேசுவே ஜீவனை உண்டாக்குபவர், அவரே நித்திய மீட்பின் ஊற்றுக்கண், அவரே நமது தேவன் மற்றும் நமது மீட்பர் என புதிய ஏற்பாடு அழுத்தமாக வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்டுகொள்வதில் சற்றும் வியப்பில்லை.(In light of the above it is not surprising to discover that the NT documents emphatically proclaim that the Lord Jesus is the Author of life, the very Source of eternal salvation, our great God and Savior: )
 
"அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது" (யோவான் 1:4).

"பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்"(யோவான் 6:37-40).

"இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த் தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்"(யோவான் 11:23-27).

"பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலை பாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு, ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்" (அப்போஸ்தலர் 3:14,15).

"ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபவத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. எப்படியெனில், பரிசுத்தஞ் செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்"(எபிரெயர் 2:10,11).

"அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்"(எபிரெயர் 5:8-10).

"...விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி… அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்"(எபிரெயர் 12:1-2).

"நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப் போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:" (II பேதுரு 1:1).

 
த‌ர்க்க‌ சாஸ்திர‌த்தின்(syllogism) அடிப்ப‌டையில் பார்ப்போமானால்:
 
1. யேகோவா தேவ‌ன் ஒருவ‌ரே இர‌ட்சிப்பின் ஊற்றும் ஜீவ‌னுமாய் இருக்கிறார்(Yahweh God alone is the Source of salvation and life).

2. இயேசு இர‌ட்சிப்பின் ஊற்றும் ஜீவ‌னுமாய் இருக்கிறார்(Jesus is the Source of salvation and life).

3. என‌வே இயேசுவே யேகோவா தேவனாவார்(Therefore, Jesus is Yahweh God).
 

StumbleUpon.com Read more...

பாக்.ராணுவம் குண்டுவீச்சு 60-தீவிரவாதிகள் பலி

 
 
lankasri.comபாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்துள்ளனர்.இந்த முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2-நாட்களாக பீரங்கி தாக்குதல் நடத்தியது.

விமானங்களும் சரமாரியாக தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது குண்டு வீசின. இதில் 60-தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் முகாம்கள்,ஆயுத கூடங்கள் தகர்க்கப்பட்டன.

அமெரிக்க ராணுவ தளபதி டேவிட் பெட்ராயஸ் 2-நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அதிபர் சர்தாரி,பிரதமர் கிலானி ஆகியோரையும் அவர் சந்தித்து பேசுகிறார்

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1232538263&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ஒபாமாவை தீர்த்துக்கட்டுவதே பயங்கரவாதிகளின் இலக்கு:அமெரிக்க பத்திரிகை அபாய எச்சரிக்கை

ஒபாமாவை தீர்த்துக்கட்டுவதே பயங்கரவாதிகளின் இலக்கு:அமெரிக்க பத்திரிகை அபாய எச்சரிக்கை
 
lankasri.comவெள்ளையர்கள் ஆதிக்கம் நிறைந்த அமெரிக்க வல்லரசின் முதல் கருப்பின அதிபராக பராக் ஒபாமா (47)பதவியேற்றுக்கொண்டுள்ளார்.இது உலகம் முழுவதும் வாழும் கருப்பின மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

எனினும்,பராக் ஒபாமாவை தீர்த்துக்கட்டுவதுதான் தங்களின் பெரும் இலக்காக பயங்கரவாதிகள் சபதம் ஏற்றுள்ளதாக அமெரிக்காவின் டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது உலகம் முழுவதும் வாழும் கருப்பின மக்களை கடும் வேதனையில் ஆழ்த்தாமல் இல்லை.

இருந்தபோதிலும்,எங்களது முன்னாள் அதிபர் கென்னடியை இழந்தது போல் நாங்கள் ஒபாமாவை இழந்திடமாட்டோம்;இரும்பு அரண் அமைத்து அவரை பாதுகாப்போம் என்பதில் அமெரிக்க பாதுகாப்புப் படைகள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளன.

இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதத்திலேயே வாஷிங்டனில் நடந்த ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒபாமாவின் பதவியேற்பு விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடனும்,அவரது முதல் உரையைக் கேட்க ஆவலுடனும் குழுமியிருந்தனர்.

இந்த விழா அரங்கைச் சுற்றி போலீஸார்,தேசிய பாதுகாப்புப் படையினர்,உளவுத் துறையினர் உள்பட 45-ஆயிரம் பேர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.காற்றுகூட தங்களிடம் அனுமதி பெறாமல் விழா அரங்குக்குள் நுழைந்திட முடியாது என்ற விதத்தில் பாதுகாப்பு வீரர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்கொள்ளத் தயார்:பயங்கரவாதிகள் எந்த வழியில் வேண்டுமானாலும் தங்களது தாக்குதலை தொடுக்கலாம் என்பதை நினைத்து அதைச் சமாளிக்கும் வகையில் பாதுகாப்பு வீரர்கள் ஆயத்தமாக இருந்தனர்.ரசாயன ஆயுதத்தின் மூலமும் பயங்கரவாதிகள் ஒபாமாவை குறிவைக்கலாம் என்று நினைத்து அதை எதிர்கொள்வதற்கும் பாதுகாப்பு வீரர்கள் தயாராக இருந்தனர்.

வான்வழித்தாக்குதல் நடத்துவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது என்று கருதி,விழா அரங்கின் வான் பகுதியில் போர் விமானங்கள் வட்டமிட்ட வண்ணம் இருந்தன.

ஒபாமாவுக்கு எந்த அளவுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்.அதுகுறித்து நாங்கள் பலகட்டமாக விரிவான ஆலோசனைகளும் மேற்கொண்டுவிட்டோம் என்று அமெரிக்காவின் தேசிய புலனாய்வு உதவி இயக்குநர் ஜோய் பெர்ஸிசினி தெரிவித்தார்.

 

 

StumbleUpon.com Read more...

இலங்கை விமானப்படை வைற்றர் ஜெற் ரக விமானம் வன்னி போர்முனையில் காணாமல் போயுள்ளது

 
 
இலங்கை விமானப்படையினரின் மிக் வைற்றர் ஜெட் ரக  போர்  விமானம் ஒன்று இன்று புதன்கிழமை வன்னிப் போர்முனையில் பறப்பில் ஈடுபட்டிருந்த சமயம் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னி வான்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அவர்கள் இந்த தகவலுக்கு வன்னியில் உள்ள வன்னிபடைத் தலைமையகத்தை கோடிட்டுள்ளனர்.
 
எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பு இது தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை
 
சம்பவம் இடம்பெற்ற வேளையில் மூன்று விமானப்படையினர் விமானத்தில் இருந்துள்ளனர்.
 
ரஸ்ய தயாரிப்பான இந்த குண்டு வீச்சு விமானம் குரொக்கடைல் நோஸ் என்ற லேசர் கருவியையும் கொண்டுள்ளது.
 
அத்துடன் ரொக்கட், ஏவுகணைகள்  மற்றும் பல்வகைப்பட்ட பெருந்தொகையான குண்டுகளையும் எடுத்துச் செல்லக்கூடியது.
 
அண்மையில் வன்னியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீதும், விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீதும் நடத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுவீச்சுகளும் இந்த விமானத்தின் மூலமே நடத்தப்பட்டுள்ளது.

 

 

 

StumbleUpon.com Read more...

இலங்கையின் இன்றைய நிலை: 'ஒரு கண்துடைப்பு நாடகம் சிறப்பாக அரங்கேற்றப்பட்டிருக்கிறது' - ஜுனியர் விகடன்

இலங்கையின் இன்றைய நிலை: 'ஒரு கண்துடைப்பு நாடகம் சிறப்பாக அரங்கேற்றப்பட்டிருக்கிறது' - ஜுனியர் விகடன்
 
இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை காட்டுவதாக இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனனும், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும் மிக அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியிருக்கின்றனர்.

 இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் கடந்த 16-ம் தேதி இலங்கைக்குப் போனது குறித்து இப்படி ஆத்திரமும், ஆதங்கமுமாகச் சொல்கின்றன இலங்கைத் தமிழர் கட்சிகள். இந்த விஜயம் பற்றி இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள் வட்டாரத்தில் பேசினோம்.

அதிபர் மகிந்தவின் சகோதரர்கள் பசிலும், கோத்தபாயவும் தான் தமிழர்களுக்கு எதிரான நடவடிக் கைகளைத் தற்போது வேகமாக முடுக்கி விடுபவர்கள். மேனன், இலங்கையில் இறங்கியதுமே இவர்களைத் தான் முதலில் சந்தித்தார். முதல்நாள் பசிலை சந்தித்து, இரண்டாம் தவணையாக 1,800 தொன் நிவாரணப் பொருட்களும், 1.40 கோடி ரூபாய் நிவாரண உதவிகளும் வழங்குவதாகத் தெரிவித்தவர்,  போர்நிறுத்தம் தொடர்பான எந்த விஷயத்தையும் வலியுறுத்தவில்லை. 

அன்று மாலையே கோத்தபாயவை சந்தித்து, அவரிடம் தமிழர்களின் நலன் குறித்து வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். தமிழர்களின் அழிவு ஒன்றையே குறிக்கோளாக வைத்திருக்கும் அவரிடம் தமிழர் நலன் பற்றிப் பேசுவதால் என்ன பலன்? அத்துடன் 'உடனடியாகப் போரை நிறுத்தும்படி எந்தவித அழுத்தத்தையும் இந்தியா தராது!' என்று தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல இருக்கிறது.

அடுத்த நாள் கண்டியில் மகிந்தவை சந்தித்தார். அப்போது மேனனை வைத்துக்கொண்டே, இராணுவ நடவடிக்கைகள் முடிந்த பிறகே  அமைதித் தீர்வை இலங்கை அரசு கையிலெடுக்கும்!' என மகிந்தா ஊடகவியலாளர்களிடம் சொல்லியிருக்கிறார். அதற்கும் மேனன் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. மொத்தத்தில் போர்நிறுத்தம் பற்றிப் பேச வந்ததாகச் சொல்லப்பட்ட மேனன், இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்காக அவர்களை ஊக்குவிப்பதுபோலவே பேசிவிட்டுப் போயிருக்கிறார்!'' என்று வேதனைப்பட்டார்கள்.

இதற்கிடையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி-க்கள் மேனனை சந்திக்க விரும்பி அனுமதி கேட்டபோது, ரொம்ப யோசித்துத் தாமதமாக அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்த்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, தமிழீழ விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலாளர் நாயகம் ஸ்ரீதரன் ஆகியோரும் மேனனை சந்தித்திருக்கிறார்கள். ''இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வே முடிவு. ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது. சமஷ்டி முறையிலான தீர்வே நிரந்தரத் தீர்வாக இருக்கும்!'' என்று இவர்கள் மேனனிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் பேசினோம். ''இலங்கைப் பிரச்னையில் அரசியல் தீர்வு குறித்துப் பல தரப்பட்டோரிடம் அபிப்பிராயங்களைப் பெறுவதே மேனனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவருடைய வருகையால் இந்திய நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத்தான் கருதுகிறோம். இலங்கையைப் போன்று இந்தியாவிலும் காஷ்மீர், நாகலாந்து போன்ற பல மாநிலங்களில் இனப்பிரச்னைகள் உள்ளன. அந்தப் பகுதிகளில் எல்லாம் இலங்கை அரசைப் போன்று கொடூரமான அணுகுமுறையை இந்தியா கடைப்பிடிக்கிறதா என வினவினோம். முடிவில் மேனன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை டெல்லிக்கு அழைத்திருக்கிறார். விரைவில் இந்திய பிரதமரை சந்திப்போம்...'' என்றார்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கையிலுள்ள நடுநிலையான அரசியல்வாதிகள் சொல்லும் சில விஷயங்கள் இந்தியாவுக்கு சாதகமானதாக இல்லை. ''நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவம் இந்தளவுக்கு மேலோங்கக் காரணமே இந்தியாவின் மறைமுக உதவிகள்தான். ஆனால், கடந்த வாரம் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான நேர்காணல் நிகழ்ச்சியொன்றில், 'பாகிஸ்தான் மற்றும் சீன அதிபர்களுடன் அதிபர் மகிந்தா பலமுறை தொடர்புகொண்டு பேசி உதவி, ஒத்தாசைகளைப் பெற்றதன் மூலமாகவே புலிகளுக்கு எதிராக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற முடிந்தது!' என்றும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ.

ஒரு பக்கம் இந்தியாவைப் பயன்படுத்தி புலிகளை அழித்த பின்னர் சீனா, பாகிஸ்தானுடன் நிரந்தர நட்புப் பேணுவதையே தங்களுடைய இராஜதந்திரமாக இலங்கை கருதுகிறது. இந்த சமயத்தில் திருமலை துறைமுகத்தில் ஜப்பான் அரசு பெருமளவு முதலீடு செய்வதற்கு அனுமதித்திருக்கிறது அரசு. இதற்காக ஜப்பானின் விசேஷ பிரதிநிதி யசூகி அகாசி, இலங்கைக்கு வரவிருக்கிறார்.

முதலில் இந்தத் துறைமுகத்தில் சீனா முதலீடு செய்வதாக இருந்தது. அந்த சமயத்தில் புலிகளுக்கு எதிராக இந்தியா பல உதவிகளை அரசுக்கு அளித்து வந்தது. சீனா கால்பதிப்பதைக் கண்டு 'ஒருவேளை இந்தியா புலிகளுடனான போருக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுமோ?' என்கிற பயத்தில்தான் சீனாவுக்கு பதிலாக ஜப்பானை அனுமதித்திருக்கிறது இலங்கை. ஆசிய சமூகத்தில் அமெரிக்கா ஆதிக்கத்துக்கு எதிரான கூட்டமைப்பில் சீனா தலைமையில் ஜப்பான், தென்கொரியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுடன் இணைவதற்குத்தான் இலங்கை விரும்புகிறது.

புலிகளின் அழிப்புக்குப் பிறகு முல்லைத்தீவு பகுதியில் சீனா முதலீடு செய்வதற்கு வேறொரு திட்டத்தையும் இலங்கை வைத்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகமிக மோசமான அபாயக் காரணிகள் இவை. இதெல்லாம் தெரிந்திருந்தும் இந்தியா, இலங்கைக்கு உதவுவதை என்ன விதமான இராஜதந்திரமாக எடுத்துக்கொள்வது என்பதுதான் புரியவில்லை!'' என்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தற்காப்புப் பாணி தாக்குதல்களையே மேற்கொண்டு வந்த புலிகள் இயக்கம், சிவசங்கர் மேனன் இலங்கையில் இருந்தபோதுதான் முதன் முறையாக எதிர்த்தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இதுபற்றி புலிகள் தரப்பில் சிலரிடம் பேசியபோது, ''

இலங்கைக்கு இந்தியா பல்வேறு வகையில் இராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இன்னொரு புறம் இந்திய உளவு அமைப்பான 'றோ'வும் எங்களைப் பற்றி புரளிகளைக் கிளப்பிவிடுகிறது. இந்த சமயத்தில் சிவசங்கர் மேனன் இலங்கையில் இருக்கும்போது... ஒரு எதிர்த்தாக்குதலை நடத்தி எங்களை ஒருக்காலும் அழிக்க முடியாது என இந்தியாவுக்கு உணர்த்த விரும்பினோம். அதனால்தான் தருமபுரம் பகுதியில் மும்முனையில் இராணுவம் தாக்குதல் நடத்தியபோதும் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டோம். அதுவுமில்லாமல் முதன்முறையாகத் தற்போது நடைபெறும் போரில் கவச பீரங்கியையும் பயன்படுத்தினோம். இதில் 51 இராணுவ வீரர்கள் பலியானதோடு, 150 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டிருக்கிறது.

அடுத்தடுத்து வரும் நாட்களில் இது மாதிரியான எதிர்த்தாக்குதலை இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். இப்போது நாங்கள் அழிந்துவிடவில்லை என்பது மேனன் மூலமாக இந்தியாவுக்குத் தெரிந்திருக்கும். பாய்வதற்கு ஏதுவாகத்தான் பதுங்கியிருக்கிறோம் என்பதை இன்னும் சில தினங்களில் வெளிக்காட்டுவோம்!'' என்கிறார்கள்.

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dHj0q0ecQG7r3b4F9EW4d2g2h3cc2DpY3d426QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP