சமீபத்திய பதிவுகள்

சீனாவில் செல்போன் வெடித்து ஒருவர் பலி

>> Thursday, February 5, 2009

 
 
lankasri.comசீனாவில் குவாங்ஸு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர்,தனது சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் உயிரிழந்தார்.பாட்டரி வெடித்த வேகத்தில் அவருடைய கழுத்தில் உள்ள ரத்தக் குழாய் வெடித்துச் சிதறியது.

இறந்தவர் தனது செல்போனில் உள்ள பாட்டரியை எடுத்துவிட்டு புதிய பாட்டரியை பொருத்தியபோது வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் அவர்,தனது பாட்டரியை சார்ஜ் செய்துவிட்டு செல்போனை சட்டைப்பையில் வைத்தபோது வெடித்ததாக மற்றொருவர் கூறினார்.சீனாவில் இதுபோன்று செல்போன் வெடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளதாக"தி டெய்லி டெலிகிராப்"செய்தி வெளியிட்டுள்ளது.

எது இருப்பினும்,செல்போன் உபயோகிப்பாளர்கள் கவனிக்க வேண்டியவை:

தரமான பாட்டரியை பயன்படுத்துங்கள்,சூரிய வெப்பம் நேரடியாக புகாத வகையிலும்,உயர் வெப்பம் படாதவகையிலும் வைத்திருக்க வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக செல்போனில் நீண்ட நேரம் தொடர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1233832166&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

வேட்டியை அவிழ்த்து தீ வைத்தார் அதிமுக தொண்டர்

ஈழத்தமிழர் அவலத்திற்கு அதிமுக மௌனம் தொண்டர் ஆவேசம்
 
ஈழத்தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் தம் கட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றுக் கூறி அ.தி.மு.க கரை வேட்டியை தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக தொண்டர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 
தூத்துக்குடி போல்டன்புரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு வயது 40. அ.தி.மு.க தொண்டரான இவர் சிவந்தாகுளம் சந்திப்பில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். சக்திவேல் தனது நண்பர் ராமசாமிபுரம் 2வது தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (50) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

 

 
அப்போது ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவது பற்றி பேச்சு வரவே திடீரென்று ஆவேசமடைந்த சக்திவேல் தான் அணிந்திருந்த அ.தி.மு.க கட்சி வேட்டியை அவிழ்த்து வீசினார். பின்னர் வேட்டியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

 
ஈழத்தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் தம் கட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கதறியபடியே கோஷம் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தென்பாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் விரைந்து சென்று சக்திவேல், அவரது நண்பர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

 

 

 

 

 

 

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1808&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

StumbleUpon.com Read more...

இலங்கையின் ‘இறுதிப் பசி’ திட்டம்… எமர்ஜென்ஸி?!

 

p47bகிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவின் எல்லை வரை கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் முக்கால்வாசி ஏரியாக்களை தங்கள் வசமாக்கி விட்டது சிங்கள அரசு. தமிழர் பகுதிகள் மீது நடக்கும் அடுத்தடுத்த தாக்குதல் களைக் கண்டித்து, உலகவாழ் தமிழர்கள் கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளும் இலங்கையின் போர்வெறியைக் கண்டிக்கின்றன.

ஆனால், இதற்கெல்லாம் கொஞ்ச மும் செவிசாய்க்காத சிங்கள அரசோ, 4-ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நடத்தி முடித்த பிறகு, போர் நடவடிக்கைகளைக் குரூரமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறதாம். அதற்காக ராஜபக்ஷே எடுக்கப் போகும் அதிரடித் திட்டங்கள் குறித்து குலை நடுங்கச் சொல்கிறார்கள், இலங்கையின் தமிழ் எம்.பி-க்கள் பலரும்.

இலங்கையில் எமர்ஜென்ஸி!

"பன்னாட்டு ராணுவ உதவிகளுடன் சிங்கள அரசு தீவிரமான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வல்லிப்புனம், சுதந்திராபுரம், மூங்கிலாறு, உடையார்கட்டு உள்ளிட்ட தமிழர்வாழ் பகுதிகளில்

பீரங்கித் தாக்கு தல்களை நடத்தி தமிழர்களை உயிர்பயத்தோடு ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், புலிகளைப் பூண்டோடு அழிக்க தமிழர்வாழ் பகுதிகள் இடைஞ்சலாக இருப்பதால், ராணுவத்தின் கோபம், குரூரமாகி விட்டது. எனவே, தமிழர்களைக் கொத்துக்கொத்தாக வீழ்த்தத் திட்டம் வகுத்து விட்டது. இஸ்ரேல், சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு போர்களில் பயன்படுத்தக் கூடாத ஆயுதங்களை எல்லாம் கொண்டுவந்து குவித்திருக் கிறது.

இதற்கிடையில் ராணுவ அதிகாரிகளை அழைத்து, அடுத்தகட்டத் தாக்குதல் திட்டங்கள் குறித்துப் பாது காப்புத் துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே பேசியிருக்கிறார். திடீரென எமர்ஜென்ஸியை அறிவித்து… எஞ்சியிருக்கும் மீடியாக்கள், தூதரகங்களை எல்லாம் முற்றிலுமாக வெளியேற்றிவிட்டு, உலகத்தின் பார்வையே படாதபடி இலங்கைத் தீவை இருண்ட கண்டமாக்கி… கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் கோத்தபய ராஜபக்ஷே. அதற்கான ஆரம்ப மாகத்தான், 'நார்வே, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களை இழுத்து மூட வேண்டியிருக்கும்' என அவர் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். முக்கியச் செய்தி சேனல் களை மிரட்டும்படியான அறிக்கையையும் வெளியிட்டார்.

அதோடு மட்டுமல்லாமல், 'முல்லைத்தீவில் தற்போது தங்கி இருக்கும் தமிழர்கள், புலிகளிடத்தில் பயிற்சி பெற்றவர்கள். அவர்களைப் பொதுமக்களாகக் கருத முடியாது. அதனால், இனியும் எங்களின் தாக்குதல்களைத் தாமதப்படுத்த மாட்டோம்' எனக் கொக்கரித்திருக்கிறார். எமர்ஜென்ஸி அறிவித்து, ஒரு வார காலத்துக்குள் முல்லைத்தீவை மண்ணோடு மண்ணாக்க வேண்டும் என்பதுதான் தற்போது கோத்தபய வைத்திருக்கும் இறுதித் திட்டம். உலகின் பார்வைக்கே தெரியாமல் அப்பாவி மக்களைக் கொன்றுமுடித்துவிட்டு, புலிகள் மீது எல்லா பழியையும் போட்டுவிட சிங்கள ராணுவத் தரப்பு தயாராக இருக்கிறது!" என அச்சத்தோடு சொல்கிறார்கள், தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி-க்கள்.

திட்டம் வகுப்பதே 'ரா'?!

p46இலங்கையின் எமர்ஜென்ஸி திட்டம் குறித்துத் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர் களிடம் பேசினோம். "இப்போதே அங்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸிதான். இதற்கெல்லாம் முக்கியக் காரணகர்த்தா இந்தியாதான். இலங்கைக்கு வெளிப்படையாக ஆயுத உதவிகளை வழங்கி வரும் இந்திய அரசு, முக்கியமான ராணுவ அதிகாரிகள் மூலமாக புலிகளை அழிக்கும் வியூகங்களையும் வழங்கி வருகிறது. அதிநுட்பமான தாக்குதலை நடத்தக்கூடிய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள், சிங்கள ராணுவத்தோடு கைகோத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதற்குள் புலிகளுக்கு முடிவு கட்டிவிட நினைக்கிறது சிங்கள அரசு. இதன் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான 'ரா'வின் பங்களிப்பு நிறைய இருக்கிறது. அடுத்தடுத்த திட்டங்களை இலங்கைக்கு வகுத்துக்கொடுப்பதே 'ரா' அமைப்புதானோ என்கிற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது…" என்கிறார்கள், இங்கிருக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிலர்.

காங்கிரஸ் கைங்கரியங்கள்!

விடுதலைப்புலிகளை வீழ்த்துவதில் சிங்கள அரசைக் காட்டிலும், காங்கிரஸ் கட்சித் தலைவியான சோனியா காந்தி தீவிரமாக இருக்கிறார் என புலிகளுக்கு ஆதரவான இணைய தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப் பட்டு வருகின்றன. இதுகுறித்து தீவிர புலி ஆதரவுப் பிரமுகர்கள் பேசுவது என்ன தெரியுமா?

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியை, பிரியங்கா காந்தி சந்தித்தபோதே ஏதோ நடக்கிறது என்று நினைத்தோம். ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நளினி, முருகன் ஆகியோரை மன்னித்ததன் மூலமாக தன்னை சாத்வீகப் பெண்மணியாகக் காட்டிக்கொண்டார் சோனியா. ஆனால் தன் கணவர், பிரபாகரனால் கொல்லப்பட்டது குறித்த அவருடைய ஆதங்கமும் கோபமும் கொஞ்சமும் குறையவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. உரிய தருணத்துக்காகக் காத்திருந்து பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதற்கான எல்லா உதவிகளையும் இந்தியா தற்போது அளிக்கிறது. இதுகுறித்து தனக்கு மிகநம்பகமான பிரணாப் முகர்ஜியையும், ராஜபக்ஷேவின் நண்பரான மணிசங்கர் ஐயரையும் கலந்து பேசியிருக்கிறது காங்கிரஸ் மேலிடம். அதன் பிறகுதான் 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்பது போல புலிகளை ஒழிக்கத் துடிக்கும் ராஜபக்ஷேவுக்கு அனைத்து விதமான உதவிகளையும் இந்தியா வழங்குகிறது.

தமிழகத்தில் உள்ள பல கட்சித் தலைவர்கள் ஆவேசக் குரல் எழுப்பியும் அவற்றைச் சட்டையே செய்யாமல் ராடார்கள், டாங்கிகள் என இலங்கை அரசுக்கு உதவி வழங்கப்பட்டு வருவதன் பின்னணியை வேறு என்ன வென்று புரிந்துகொள்வது?" என்பதே இவர்களின் கேள்வியாக இருக்கிறது.

களத்தில் குதிக்கும் பி.ஜே.பி.!

இலங்கையில் எமர்ஜென்ஸி கொண்டுவரப் போவதாகக் கிளம்பி இருக்கும் செய்தி, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களை ஈழத்தின் பக்கமாகத் திருப்பி இருக்கிறது. இதுகுறித்துப் பேசும் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சிலர், "இலங்கையில் எமர்ஜென்ஸியைக் கொண்டு வருவதன் மூலமாக தமிழினத்தைப் பூண்டோடு அழிக்கப் பார்க்கிறது காங்கிரஸ் கட்சி. இன அழிப்புக்கு காங்கிரஸ் கைகொடுக்கும் போக்கை, எங்கள் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. 'ராஜீவ் காந்தி கொலை குறித்து சி.பி.ஐ. மூலமாக விசாரணை நடத்தப்பட வேண்டும்' என ஜெயின் கமிஷன் ஏற்கெனவே உத்தரவு போட்டிருக்கிறது. அதனை விரைவாகச் செயல்படுத்தி, கொலைக் காரணம் குறித்து அறிந்திருக்கவேண்டிய காங்கிரஸ் அரசு, ஐந்தாண்டு காலமாக அமைதி காத்துவிட்டு, ஆட்சி முடிகிற தருணத்தில் ராஜீவ் படுகொலைக்கான பழிவாங்கலை சமயம் பார்த்து தற்போது நிறைவேற்றிக்கொள்ள முயல் கிறது.

இலங்கையில் யுத்தம் மிக மோசமான நிலையை எட்டியுள்ள சூழலில் எங்களின் தேசியத் தலைவர்களான அத்வானி, நரேந்திர மோடி ஆகியோர், இந்தியாவின் முக்கியமான சில மாநில முதல்வர்களை ஒன்றுகூட்டி இலங்கை நிலவரம் குறித்து விவாதிக்கும் யோசனையில் இருக்கிறார்கள். காங்கிரஸ் அரசின் கபட நாடகங்களை அம்பலமாக்குவதற்கு, இந்திய அளவிலான ஒரு கூட்டமைப்பை பி.ஜே.பி-யின் பெரிய தலைவர்கள் விரைவில் உருவாக்கப் போகிறார்கள்!" என்கிறார்கள்.

இதற்கிடையில், தங்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கோடு வெளிநாடுகளில் பயணித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்களை அவசர அவசரமாக இலங்கைக்குத் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டிருக்கிறதாம் புலிகள் தரப்பு.

'பிரபாகரனை ஒப்படையுங்கள்'!

p47aகாங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் ஐயரிடம் கேட் டோம். "இலங்கையில் வாழும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் பெரிய அளவில் சிரத்தை எடுத்து ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தார் ராஜீவ். அவர்களின் விடிவுக்கு காங்கிரஸ் துணை நின்ற அளவுக்கு வேறு எந்த அரசும் நின்றதில்லை. இப்போதும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலமாக இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதபடி காங்கிரஸ் அரசுதானே கவனித்துக் கொண்டிருக்கிறது! இதில் தனிப்பட்ட கோபதாபத்தைக் காட்டவேண்டிய அவசியம் எங்களுக்கு எங்கிருந்து வந்தது? ராஜீவ் கொலைக்குக் காரணமான பிரபாகரனை இலங்கை அரசு பிடித்தால், உயிரோடு எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றுதான் எங்கள் அரசு சொல்லி இருக்கிறதே தவிர, பிரபாகரனைப் பிடிக்கிற வேலையை சிங்கள அரசுக்கு உத்தரவாகப் போடவில்லை. நளினியை, பிரியங்கா காந்தி சந்தித்தது பற்றியோ, நளினி யிடம் விசாரிக்கப்பட்ட விவரங்கள் குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இலங்கையில் போர் தீவிரம் அடைந்திருப்பதற்கு பின்னால் இந்தியாவின் தூண்டுதல் கிடையவே கிடையாது என்பதை மட்டும் அடித்துச் சொல்ல முடியும்!" என ஆவேசப்பட்டார் அமைச்சர்.

எப்படி சமாளிப்பார்கள் புலிகள்?

ltte_rpg_force_3_27874_435எமர்ஜென்ஸி மூலம் ஏற்படப்போகும் கடுமையான இருட்டடிப்புகளைப் பற்றி உணர்ந்து வைத்திருக்கும் புலிகள் தரப்பு, உலகவாழ் தமிழர்களின் மூலமாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தைத் திருப்பும் திட்டத்தில் இருக்கிறது. ஏற்கெனவே இலங்கையின் அராஜகங்களை கவனித்துக் கொண்டிருக்கும் ஐ.நா-வும் அமெரிக்காவும் தங்களின் விடிவுக்கு உதவுவார்கள் என்பது புலிகளின் நம்பிக்கை.

"எமர்ஜென்ஸி அபாயத்தைத் தடுக்க எல்லா விதங்களிலும் மெனக்கெடுகிறோம். அதையும் தாண்டி இலங்கையின் எமர்ஜென்ஸி திட்டம் அரங்கேற்றப் பட்டால், இழப்பு சிங்கள அரசாலும் ஜீரணித்துக்கொள்ள முடியாததாகத்தான் இருக்கும்…" என்கிறார்கள் புலிகள் தரப்பில்.

 
 

StumbleUpon.com Read more...

பதவி சுகமா? அல்லது இனமானமா?

 

 காஞ்சி வரதராசப்பெருமாள் கோயில் புகழ் பெற்ற கோயில். அங்கே வீற்றிருக்கும் பெருமாள் ஒவ்வொரு நாளும் வீதி உலா வருவார். அப்போது பக்தர்கள் உரத்த குரலில் 'காஞ்சி வரதப்பா! காஞ்சி வரதப்பா! என உரத்த குரலில் முழக்கம் எழுப்புவார்கள். இப்படி பக்தர்கள் முழக்கம் எழுப்பும் போது கோயிலுக்கு வெளியே பசியால் வாடிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் காதில் அது 'கஞ்சி வரதப்பா! கஞ்சி வரதப்பா!" என விழுமாம்!

karunaஇந்தப் பிச்சைக்காரர்கள் போலவே இந்திய அரசின் வெளியுறவு செயலர் அண்மையில் ஸ்ரீலங்கா சென்ற போது தமிழ்நாடு சட்டமன்றமும் தமிழக முதல்வரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அங்கே போர் நிறுத்தம் ஏற்பட்டு சிங்களப் படைகள் தங்கள் பழைய நிலைக்குத் திரும்புவார்கள் என தமிழ்மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அங்கே, சென்று மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்திய சிவசங்கர் மேனன் இந்திய - சிறிலங்கா உறவு முன் எப்பொழுதும் இல்லாதவாறு நெருக்கமாகவும் நட்பாகவும் இருப்பதாக செய்தியாளர்களிடம் சொன்னார்.

போர் நிறுத்தம் பற்றிக் கேட்ட போது அது தனக்குத் தரப்பட்ட பொறுப்புக்கு அப்பாற்பட்டது எனக் கையை விரித்து விட்டார். சென்னை வழியாக டில்லி திரும்பிய சிவசங்கர் மேனன் அண்ணா விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு பின்னர் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டார்.

அதன் பின்னர் நீண்ட நாட்களாக இதோ போகிறார் அதோ போகிறார் எனச் சொல்லிக் கொண்டிருந்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதல்வர் கருணாநிதியுடன் பேசிவிட்டு ஸ்ரீலங்கா சென்ற போது மீண்டும் தமிழ்மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இயற்கையாகவே எழுந்தது.

ஆனால், போன மச்சான் வெறும் கையோடு திரும்பி வந்தார். அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ச கொடுத்த விருந்தை உண்டு படைத்தளபதி சரத் பொன்சேகா சிங்களப் படையின் வீரதீர பிரதாபங்களைப் பற்றி போட்டுக்காட்டிய ஒளிப்படங்களைப் பார்த்து புழகாங்கிதம் அடைந்து டில்லி திரும்பினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரணாப் முகர்ஜி இந்திய - ஸ்ரீலங்கா உறவு பலமாக இருப்பதாகவும் வன்னியில் சிக்கியுள்ள தமிழ் மக்களது பாதுகாப்புக்கு மகிந்த ராஜபக்ச உறுதி அளித்துள்ளதாகவும் அந்த மக்களுக்கான இந்தியா மனிதாபிமான உதவி வழங்கும் எனவும் தெரிவித்தார்.

ஆனால், போர் நிறுத்தம் பற்றியோ வி.புலிகளோடு பேச்சுவார்த்தை பற்றியோ அமைச்சர் வாயே திறக்கவில்லை. இது எதிர்பார்த்ததுதான். டில்லியில் இருந்து சிறிலங்கா புறப்படும் முன்னர் பிரணாப் முகர்ஜி வி.புலிகளுக்கு இந்தியா கருணை காட்டமாட்டாது எனச் சொல்லியிருந்தார். திரும்பி வந்தும் அதே கருத்தினை மீண்டும் வலியுறுத்திச் சொன்னார்.

வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்படி மொட்டையாகப் பேசுவார் என்றோ எகத்தளமாக நடந்து கொள்வார் என்றோ தமிழக முதல்வர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அதன் காரணமாக பெப்ரவரி 15 இல் திமுக வின் செயல் குழுவைக் கூட்டி இறுதி முடிவு எடுக்கப்படும் என்ற காலக்கெடுவை மாற்றி இப்போது பெப்ரவரி 3 இல் திமுக செயல்குழு கூடும் என திமுக வின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

மத்தியில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் கட்சியின்; ஆட்சியல்ல. பல கட்சிகளை உள்ளடக்கிய சனநாயக முற்போக்கு கூட்டணியே (னுநஅழஉசயவiஉ Pசழபசநளளiஎந யுடடயைnஉந) அங்கு பதவியில் இருக்கிறது.

2004 இல் நடந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் திமுக தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 மக்களவைத் தொகுதியிலும் வெற்றி பெற்றது. அதனால் மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 12 அமைச்சர்கள் இருக்கிறார்கள். நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் திமுக 20 உறுப்பினர்களையும் பா.ம.க. 6 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

ஒரு குறைந்தபட்ச நிகழ்சி நிரலின் கீழ்தான் மத்திய அரசு ஆட்சி செய்கிறது. அந்த குறைந்தபட்ச நிகழ்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு பிரணாப் முகர்ஜி தலைமையிலான ஒரு குழு இயங்குகிறது.

அதில் திமுக சார்பாக கப்பல் மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் டி.ஆர்.பாலுவும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் என இரண்டு தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

சனநாயக முற்போக்கு கூட்டணியின் குறைந்த பட்ட நிகழ்சி நிரலில் தமிழீழ தமிழ் மக்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஒன்றுபட்ட ஸ்ரீலங்காவில் தமிழ்மக்களினதும் சிறுபான்மை மதத்தவரினதும் நியாயமான வேட்கைகளையும் நிறைவு செய்யும் வண்ணம் ஸ்ரீலங்காவில் நடைபெறும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு சனநாயக முற்போக்கு கூட்டணி ஆதரவு நல்கும்."

"The UPA will support peace talks in Sri Lanka that fulfil the legitimate aspirations of Tamils and religious minorities within the territorial integrity and solidarity of Sri Lanka." (UPA's Common Minimum Programme)

ஆனால், நடைமுறையில் இந்திய மத்திய அரசு பேச்சுவார்த்தையில் இருந்து ஒதுங்கியே இருந்தது. அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கிய மகிந்த ராஜபக்ச அந்தப் பேச்சுவார்த்தைக்கு அடிகோலிய போர் நிறுத்த உடன்பாட்டை கடந்த ஆண்டு சனவரி மாதத்தில் கிழித்தெறிந்த போது இந்தியா அதுபற்றி மூச்சே விடவில்லை. அதுமட்டுமல்ல அதன்பின்னர் மகிந்த ராஜபக்ச தமிழீழத்தின் மீது மேற்கொண்ட படையெடுப்பிற்கு இந்தியா எல்லா வகையிலும் ஆதரவு நல்கியது.

ஆயுத தளபாடங்கள், போர்க்கப்பல்கள், ராடார்கள், தொழில்நுட்பாளர்கள், புலனாய்வு, கண்காணிப்பு, பாகிஸ்தானிடம் இருந்த ஆயுதங்கள் வாங்க கடனுதவி வழங்கியது.

எனவே தமிழீழ மக்கள் ஒரு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் போது வி.புலிகளுக்கு இந்தியா கருணை காட்டாது என்று சொல்லிக் கொண்டு அந்த மக்களின் இனப்படுகொலைக்கு இந்திய மத்திய அரசு துணை போவது மிகப் பெரிய இரண்டகமாகும்.

மேலும் தமிழக சட்டமன்றம் ஒன்றுக்கு மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றியும் அவை பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாது மத்திய அரசு நடந்து கொள்வது தமிழக முதல்வரை அவமானப்படுத்தியதோடு அவரை ஒரு இக்கட்டான அரசியல் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தமி;ழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்குத் தலைமை தாங்கும் வி.புலிகளையும் மனம், மொழி இரண்டினாலும் முக்காலமும் ஆதரிக்கும் வைகோ தலைமையிலான மதிமுக, மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பாமக, தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள், தா.பாண்டியன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பழ.நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்ம் ஆகியன 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கியுள்ளார்கள். முதல் நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் உண்ணா நோன்பு இருக்க முடிவு செய்துள்ளார்கள்.

அண்மைக்காலமாக 1983 ஆம் ஆண்டளவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக வீசிய அலைக்கு ஒப்ப ஒரு ஆதரவு அலை தமிழகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது. இந்திய மத்திய அரசு ஏதாவது செய்யும் என்ற அரைகுறை நம்பிக்கையை வைத்திருந்தவர்களும் இப்போது ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டம் வலுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவ - மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை அரசைக் கண்டித்தும் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும் ஈழத் தமிழர்களை பாதுகாக்கக்கோரியும் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள்; வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆங்காங்கே உண்ணா நோன்புப் போராட்டம் நடத்துகிறார்கள். தியாகராயர் கல்லூரி மாணவர்கள், நியூ கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர்களை பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மன்றோ சிலை முன்பு சாலை மறியல் செய்தனர். பாரிமுனையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல் கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், ஈரோடு, வேலூர், தஞ்சை மாணவ - மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவ -மாணவிகள் குதித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்றக் கோரி கும்பகோணத்தில் நேற்று சட்டவாதிகள் தொடர் வண்டி மறியல் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். மயிலாடுதுறையில் இருந்து நெல்லை சென்று கொண்டு இருந்த பயணிகள் தொடர்வண்டியை அவர்கள் மறித்தனர். இதையொட்டி, 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சில மாணவர்கள் ராஜபக்சவின்; உருவப்பொம்மையை எரிப்பதற்காக எடுத்து வந்தனர். காவல்துறை அந்த உருவபொம்மையைப் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இருந்தனர். ஆனால் சட்டக்கல்லூரிக்கு நேற்று திடீர் என விடுமுறை விடப்பட்டு அது மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பை கல்லூரி முதல்வர் வெளியிட்டு இருந்தார்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை வளாகத்தில் சட்டவாதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென நீதிமன்ற வளாகம் அருகே சிலர் சோனியா காந்தியின் கொடும்பாவியை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மக்களின் கோபம் இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவி மீதும் பாய்ந்திருப்தை இந்தப் போராட்டம் காட்டுகிறது. இது ஒரு முக்கிய திருப்பமாகும்.

அண்மையில் வைகோ தலைமையிலானன மதிமுக ஆட்சியாளர்களின் அலுவலகம் முன்பு நாடு தழுவிய போராட்டம் நடத்தியது.

மதுரை சட்டக்கல்லூரியில் நேற்று 20 மாணவர்கள் கூடித் தேசியக் கொடியை அகற்றி விட்டு கருப்புக் கொடியை ஏற்ற முயன்றனர். முதல்வர் இராதாகிருஷ்ணன் நாயர் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வர் சின்னப்பா தலைமையில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்கபப்ட்டது. கல்லூரி வளாகத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் வலுத்து வரும் மாணவர் போராட்டம் காரணமாக பல கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆங்காங்கே மாணவர்கள் உண்ணாவிரதமும் இருந்து வருவதால் தமிழகத்தில் ஒரு பதட்ட நிலை உருவாகியுள்ளது.

இதன் உச்சகட்டமாக தமிழ் உணர்வாளர் முத்துக்குமார் இன்று தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அந்தச் செய்தி தமிழகத்தைக் கொதிநிலைக்குத் தள்ளியுள்ளது.

அவரது சாவை விட அவர் தன் கைப்பட எழுதிவைத்துச் சென்றுள்ள அவரது சாவுப் பட்டயம்தான் தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முத்துக்குமார் வீசியுள்ளார். இந்த சாவுப் பட்டயத்தை ஒவ்வொரு தமிழின உணர்வாளர்களும் படித்து மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்.

முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தை நாம் விரும்பாவிட்டாலும் அதன் பின்னால் உள்ள தமிழின உணர்வை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அது சொல்லும் செய்தியை மறந்துவிடக் கூடாது. 1965 ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முத்துக்குமாரைப் போலப் பலர் தீக்குளித்தனர்.

எப்பக்கம் வந்திடும் இந்தி எத்தனை பட்டாளம் அது கூட்டி வரும் என 1965 இல் எழுப்பிய முழக்கந்தான் 1967 இல் திமுக ஆட்சியைக் கைப்பற்றியதற்கு வழிகோலியது. இதனை நிச்சயம் தமிழக முதல்வர் அசை போட்டுப் பார்ப்பார் என நம்புகிறோம்.

தமிழீழ விடுதலை போராட்டம் பற்றியும் தமிழீழத்தில் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் செய்யாத சனநாயக முற்போக்குக் கூட்டணியிலும் அதன் ஆட்சியிலும் தொடர வேண்டுமா? இல்லையா? என்ற முடிவை தமிழக முதல்வர் எடுக்கும் காலம் இன்று கனிந்துள்ளது.

திமுக சனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டால் மத்திய அரசு பெரும்பான்மைப் பலத்தை இழந்து விடும். அதனால் அது கவிழும் வாய்ப்பு எழும். அத்தோடு தமிழகத்தில் அந்தக் கூட்டணி காணாமல் போய்விடும். அதனால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இல்லையேல் அதிமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டி நேரிடும்.

இதே சமயம் திமுகவுக்கு சட்ட மன்றத்தில் வழங்கும் ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்ளலாம். அப்படி விலக்கிக் கொண்டாலும் திமுக ஆட்சி கவிழும் வாய்ப்புக் குறைவாகவே இருக்கும். காரணம் பா.ம.க. கட்சியின் நிறுவனர் திமுக அரசுக்கு கொடுக்கும் ஆதரவு தொடரும் எனக் கூறியுள்ளார்.

எங்கே தான் தனித்துப் போக நேரிடுமோ என்ற அச்சம் காரணமாகமே மாங்கொல்லைப் பொதுக் கூட்டமும் (ஒக்ரோபர் 06) அதனைத் தொடர்ந்து கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டமும் (ஒக்ரோபர் 14) மனித சங்கிலிப் போராட்டமும் (ஒக்ரோபர் 24) இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இறுதித் தீர்மானம் உட்பட மூன்று தீர்மானங்களை முதல்வர் சட்டசபையில் முன்மொழிந்தார். மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியை டில்லி சென்று நேரிலும் வற்புறுத்தினார். ஆனால் அவரது முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்துவிட்டன.

தமிழீழ மக்கள் தொடர்பாக மட்டுமல்ல திமுகவின் நட்சத்திரத் திட்டமான சேது கால்வாய்த் திட்டத்தையும் இராமருக்குப் பயந்து மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. ஆறு மாதத்தில் சேது கால்வாய்த்திட்டம் முற்றுப் பெறும் என்று அமைச்சர் டி.ஆர். பாலு சென்ற ஓகஸ்டில் மார் தட்டினார். அந்த ஆறு மாதம் இப்போது முடிவடைந்து விட்டது.

இன்று தமிழக முதல்வர் பதவி சுகமா? அல்லது இனமானமா? இதில் இரண்டில் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். முதல்வர் கருணாநிதி சரியான முடிவு எடுத்தால் வரலாற்றில் இடம் பிடிப்பார். இல்லையென்றால் வரலாறு அவரை மன்னிக்காது.

நன்றி: நிலவரம்

http://www.nerudal.com/nerudal.283.html

 

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் உத்தேசம் இல்லை – அமெரிக்கா

 
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவை நீக்குமாறு அமெரிக்க தமிழ் அமைப்பு விடுத்திருந்த வேண்டுகோள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தடை நீக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்கத் தமிழர் அமைப்பு புதிய ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனிடம் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களினால் சிவிலியன்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

StumbleUpon.com Read more...

ஊடக விபச்சாரம்





இந்த கவிதையை எழுதிய நண்பர் இங்கு பதிவிடுவதை விரும்பாத படியினால் அந்தக் கவிதை இங்கிருந்து நீக்குகிறேன்.
கவிதையை படிக்க:
http://veltharma.blogspot.com/2009/02/blog-post.html

StumbleUpon.com Read more...

கடவுளின் சொந்த நாட்டில் 21,000 - பேர் தற்கொலை

 
கடவுளின் சொந்த நாடு என்று அழைக்கப்படுவது கேரளா அதில் 3-ஆண்டுகளில் 21,000-பேர் தற்கொலை
 
கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் வாழும் கேரளத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.அம்மாநிலத்தில் கடந்த 3-ஆண்டுகளில் மட்டும் 21,000-க்கும் அதிமானோர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

இது குறித்து கேரள சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறியது:

மாநிலத்தில் கடந்த 3-ஆண்டுகளில் 21,914-பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2006-ம் ஆண்டில் 5,601-பேரும்,2007-ல் 8,962-பேரும்,நடப்பு ஆண்டில் நவம்பர் மாதம் வரை 7351-பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளாத வழக்குகள் பதிவாகியுள்ளன.

தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பது வருத்தமளிக்கிறது.தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரம் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1228294985&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

உச்சமடையும் தமிழர் பேரவலம்: வன்னி மருத்துவமனைகளில் குவியும் உடலங்கள்; மருத்துவமனை செயலிழப்பு; நேற்றும் 13 தமிழர்கள் படுகொலை(படங்கள் இணைiபு)

 
 
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, தொடர்ச்சியாக இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதன் மூலம் வன்னியில் நெருக்கடிகளுக்குள் மத்தியில் இயங்கிய ஒரே மருத்துமனையான புதுக்குடியிருப்பு மருத்துவமனையை முற்றாகச் செயலிழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது சிறிலங்கா அரசு என நிலைமையை நேரில் அவதானித்த "புதினம்" செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.
அதேவேளை, வன்னியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொல்லப்பட்ட தமிழர்களின் உடலங்கள் தொடர்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
 
மருத்துவமனைகளில் குவியும் தமிழர்களின் உடலங்கள்
 
வன்னி பகுதிகளில் கடந்த சில நாட்களக சிறிலங்கா படையின் பரவலான எறிகணை வீச்சுக்கள் காரணமாக படுகொலையான 22 தமிழர்களின் உடலங்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரத்துறை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தன்னிடம் தெரிவித்ததாக "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
 
இவற்றில், சுதந்திரபுரம் மருத்துவமனைக்கு 12 உடலங்களும் உடையார்கட்டு மருத்துவமனைக்கு 10 உடலங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், பலியான பலரின் உடலங்கள் உறவினர்களால் அந்தந்த இடங்களிலேயே புதைக்கப்படுவதாகவும் பரவலாக எறிகணை வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதனாலும், மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருப்பதாலும் கொல்லப்படுவோரது உடலங்கள் சரியான முறையில் கணக்கெடுக்கப்படுவதோ, அல்லது புதைக்கப்படுவதோ இல்லை எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
 
புதுக்குடியிருப்பு மருத்துவமனை
 
புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நான்காவது நாளாக நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலால் மருத்துவமனையின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டு விட்டன.
 
மருத்துவமனையின் முதன்மைப் பகுதிகளான வெளிநோயாளர் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதிகள் என்பன எறிகணைத் தாக்குதல்களில் நாசமாகிவிட்டன. இதனால் அந்த மருத்துவமனை இனி இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
 
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழுப் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நிலைகொண்டிருந்த போதிலும் கூட மருத்துவமனை மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளைத் தாக்கக்கூடாது என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு மற்றும் அனைத்துலக நாடுகள் வலியுறுத்திய பின்னரும் சிறிலங்கா படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். 300 மீற்றர் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த பின்னரும் மருத்துவமனை மீது தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
நேற்றைய தாக்குதல்களின் போது, ஏற்கனவே சிறிலங்கா படையின் எறிகணைத் தாக்குதலில் உடையார்கட்டில் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரும், அங்கு ஏற்கெனவே நடைபெற்ற எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்து அங்கேயே காயக்கட்டுக்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் நேற்று கொல்லப்பட்டு விட்டனர்.
 
அ.வசந்தகுமார் (வயது 26) மற்றும் ப.மதன்ராஜ் (வயது 19) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.
அறுவைச் சிகிச்சைக்கூடம் மீது வீழ்ந்த சிறிலங்கா படையின் பீரங்கி குண்டிலேயே இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
மேலும், கடந்த ஜனவரி 30 ஆம் நாள் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமலச்செல்வன் கஸ்தூரி (வயது 26) நேற்றைய தாக்குதலின் போது அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
 
காயமடைவோர்

வன்னியில் சிறிலங்கா படையின் எறிகணை வீச்சுக்கள் தொடர்வதால், நேற்று புதன்சிழமை இந்த எறிகணை வீச்சுக்களின் போது காயமடைந்த பெருமளவிலான பொதுமக்கள் ஆங்காங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரபுரம் மருத்துவமனைக்கு நேற்று மாலை 5:00 மணி வரையிலும் காயமடைந்த 44 பொதுமக்களும், உடையார்கட்டு மருத்துவமனைக்கு 14 பொதுமக்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
எனினும், பெரும் அவலமும் குழப்பமும் நிலவுவதால் இவ்வாறு கயமடைந்து வருவோரின் பெயர் விபரங்கள் உரிய முறையில் சேகரிக்க முடியாதிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
 
இவ்வாறு காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஏராளமானோர் சிறுவர்களாய் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதில் ஒரு வயதுடைய குழந்தை ஒன்றும் அடங்குகின்றது. அந்த குழந்தையின் தாய் முன்னரே எறிகணை வீச்சில் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இறந்துவிட்டார்.  அவரது மற்றுமொரு குழந்தையும் ஏற்கெனவே பீரங்கி தாக்குதலில் இறந்து விட்டது எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

 
நேற்றும் படுகொலை

 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அம்பலவன்பொக்கணை பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலின் போது 4 சிறுவர்கள் உட்பட 10 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 36 பேர் காயமடைந்துள்ளனர்.
 
சா.சுதாஸ் (வயது 05)
பாலசேகரம் கஜேந்திரன் (வயது 10)
பாலசேகரம் கஜானா (வயது 13)
செல்வநாயகம் கிளி (வயது 31)
சின்னப்பு இராசமலர் (வயது 56)
சின்னப்பு கெங்காதரன் (வயது 45)
பொ.ஜீவமலர் (வயது 53)
ஆகியோரே படுகொலை செய்யப்பட்டோர் ஆவர்.
 
கொல்லப்பட்ட மேலும் மூவரின் உடலம் சிதறிக் கிடப்பதினாலும், அவர்கள் இடம்பெயர்ந்து வந்தவர்களாய் இருப்பதனாலும் அவர்களின் பெயர் விபரங்களை உடனடியாக பெறமுடியவில்லை.
 
மேலும் இத்தாக்குதலின் போது
 
மதன் மபிசன் (வயது 04)
தமிழ்மாறன் சர்மிகா (வயது 09)
கெங்காதரன் பாலதரணி (வயது 06)
கெங்காதரன் தர்மேஸ் (வயது 08)
சிவநேசன் (வயது 30)
த.சாந்தநேசன் (வயது 37)
கோ.மகேந்திரம் (வயது 47)
மகேந்திரம் இராசமலர் (வயது 47)
சௌந்தரராசா சறோஜினிதேவி (வயது 45)
அன்ரன் மேரிமலர் (வயது 30)
புஸ்பராசா ரேணுகாதேவி (வயது 28)
செல்வராசா புஸ்பராஜா (வயது 30)
தினகரன் சின்னத்தம்பி (வயது 55)
வல்லிபுரம் கோமதி (வயது 30)
தமிழ்மாறன் மேனகா (வயது 29)
தர்மராசா வாகீசன் (வயது 23)
யோசப் டில்லிமலர் (வயது 63)
செபமாலை விக்ரர் (வயது 72)
சின்னத்துரை தனராசா (வயது 50)
தனராசா புஸ்பராணி (வயது 45)
ஆகியோர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்

http://www.puthinam.com/full.php?2b24OO44b33M6Dhe4d45Vo6ca0bc4AO24d2ISmA3e0dM0Mtlce03f1eW0cc3mcYAde

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP