சமீபத்திய பதிவுகள்

உலகத்தில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிதர்சனாமாக நிருபித்துவருகிறது.

>> Monday, February 16, 2009

எக்கப்பன் குதருக்குள் இல்லை என்பதை போல ஒரு சில பதிவர்கள் மேலே உள்ள தலைப்பை எதோ கிறிஸ்தவர்கள் உருவாக்கியதாக நினைத்து அதற்கு பக்கம் பக்கமாக பதில் எழுதிவரும் இந்த வேளையில் அவர்கள் முகம் வெட்க்கப்படும் படிக்கு இஸ்லாமிய இணைய தளங்கள் வெளியிட்ட வார்த்தையே இது என்று சுட்டிக்காட்டி சவுக்கால் அடிக்கிறார் இந்தக்கட்டுரையின் ஆசிரியர் உமர்


 
 
 
முன்னுரை:

கடந்த இரண்டாண்டுகளாக தமிழ் இணைய தளங்கள் முக்கியமாக இஸ்லாமிய கிறிஸ்தவ இணைய தளங்கள் அதிகமாக பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு அனேக காரணங்கள் இருந்தாலும், அவைகளில் மிகவும் முக்கியமான காரணம், "இஸ்லாமை கேள்வி கேட்க" கிறிஸ்தவர்கள் ஆரம்பித்தது தான்.
தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான் (நீதிமொழிகள் 18:17)

இஸ்லாமியர்கள் சொல்லும் அனைத்திற்கும், எழுதும் எல்லாவற்றிற்கும் தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்டாமல் கிறிஸ்தவர்கள் கேள்விகள் கேட்டு, பதில்கள் சொல்வதினால், தளங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

நேர்மையானவர்களின் நேர்மையின்மை:

இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ தளங்கள் ஆரம்பிப்பது தவறில்லை, அவைகளில் தங்கள் கருத்தை, விமர்சனத்தை எழுதுவதும் தவறில்லை(இந்த நாடு, இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகள் போல் இல்லாமல், ஜனநாயக நாடாக இருப்பதால், எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு). ஆனால், நேர்மையான முறையில் செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

கிறிஸ்த தளங்கள் தாங்கள் பதிக்கும் கட்டுரைகளின் தொடுப்புக்களை தருகிறார்கள். எந்த தள கட்டுரைக்கு பதில் தருகிறோம் என்பதை தொடுப்புக்களோடு பதிக்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமியர்கள்...? இஸ்லாமிய அறிஞர்கள்....? உலகத்திலேயே தங்கள் மதம் தான் உண்மையானது, நாங்கள் தான் நேர்மையானவர்கள் என மார்தட்டி ஆவேசமாக எழுதும் அறிஞர்கள் இப்படி நியாயமான முறையில் நடந்துக் கொள்கிறார்களா? என்று கேட்டால், இல்லை என்பது தான் பதில்.

இஸ்லாமிய தளங்களுக்கு வேண்டுகோள்:

ஈஸா குர்‍ஆன் தளத்தில் இரண்டு வகையான கட்டுரைகள் வெளியாகின்றன.

1) நான்(உமர்) எழுதும் கட்டுரைகள்

2) ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள்

இவைகளில், நான் எழுதும் கட்டுரைகளை நீங்கள் உங்கள் தளங்களில் பதிக்கும் போது, அல்லது சில வரிகளை மேற்கோள் காட்டும் போது என் தளத்தின் தொடுப்பை தரவேண்டியது அவசியம். ஆனால் நீங்கள் தருவதில்லை ஏனென்றால், நீங்கள் உங்கள் முஹம்மது நடந்த வழியில் நடப்பவர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள், அல்லாஹ் காட்டிய வழியில் நடப்பவர்கள் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்கள், உங்களுக்கு வழிகாட்டியவர்கள் இப்படித் தான் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்களா என்று எல்லாரும் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அநாகரீகமாக தளத்தின் மூல தொடுப்புக்களை தருவதில்லை.

இப்படி நீங்கள் என் தளத்தின் தொடுப்பை பதிப்பதில்லை என்று பல முறை சொல்லியாகிவிட்டது. நீங்கள் திருந்துவதாக தெரியவில்லை. ஆகையால் விட்டுவிட்டேன்.

ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள் பதிப்பு காப்புரிமை(Copy Right) பெற்ற கட்டுரைகள், ஆகையால், அவைகளை பதிக்கும் போது கட்டாயமாக நீங்கள் தொடுப்பை கொடுத்தே ஆகவேண்டும். அப்படி தரவில்லையானால், அது சட்டவிரோத செயலாகும். இஸ்லாமியர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவர்கள் என்ற உணர்வை மக்களின் மனதில் உண்டாக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள கட்டுரைகளை அல்லது அதன் ஒரு சில வரிகளை பதிக்கும்போது மூல தொடுப்பை தாருங்கள். இதனை செய்ய மறுத்தால், சட்டப்படி என்ன செய்ய வேண்டியதோ அதனை நான் செய்யவேண்டி வரும்.

உங்களுக்கு ஒரு மாதம் அவகாசம் தருகிறேன்(இன்று தேதி 13 பிப்ரவரி). அதற்குள் ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரைகளுக்கு தொடுப்பை கொடுங்கள், இல்லையானால், நான் ஆன்சரிங் இஸ்லாம் தள நிர்வாகத்திற்கு இதனை தெரிவிக்க வேண்டி வரும். இந்த எச்சரிக்கையை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரையை பதிக்கும் அனைத்து இஸ்லாமிய தளங்களுக்கும் முன்வைக்கிறேன்.

இதனை நீங்கள் வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு காபிர் ஒரு இஸ்லாமியரை எச்சரிக்கை செய்யும் அளவிற்கு நீங்கள் தாழ்ந்துப் போக வேண்டாமென்றுச் சொல்கிறேன்.

முக்கியமாக அபூநூறா தள நிர்வாகிகளே,

உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், "உளறல்பேஜ் (http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html)" என்ற பிளாக்கரில் பதித்த கட்டுரை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையாகும், அது காப்புரிமை பெற்ற கட்டுரை, எனவே அக்கட்டுரையின் கடைசியில் மூல தொடுப்பாகிய‌ ஆன்சரிங் இஸ்லாம் தள தொடுப்பை தாருங்கள், அல்லது கட்டுரையை எடுத்துவிடுங்கள்.

என் இஸ்லாமிய பதில்/மறுப்பு கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை நான் பயன்படுத்தும் போது, பின்பற்ற வேண்டிய காப்புரிமை விவரங்களை எனக்குச் சொல்லவேண்டுமானாலும் சொல்லுங்கள், நானும் அதற்கு கட்டுப்படுவேன். காப்புரிமை சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு மட்டுமே கட்டுப்படுவேன். என் கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை மேற்கோள் காட்டி, அதன் தொடுப்பை தராமல் மறந்து இருந்தாலும் தெரிவித்தால், நான் திருத்திக்கொள்வேன்.

இனி, அபூநூறா தளத்தில் பதித்த கட்டுரைப் பற்றி கவனிப்போம்

(http://abu-noora.blogspot.com/2009/02/blog-post.html)

என்னை திட்டி தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளும் அமைதி மார்க்கத்தார்கள்:

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று பல முறைச் சொல்லியும், இஸ்லாமியர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் அனேக முறை சொல்லி சொல்லி சோர்ந்துவிட்டேன். அபூநூறா தளம் எழுதுவதை கவனியுங்கள்.

அதில் ஒருவகையான மனோவியாதிக்கு அடிமையாகிவிட்ட உமர் என்பவரின் சமீபத்திய உளறல் ஒன்றை படிக்க நேர்ந்தது. (அதைப் படிக்க இதைச் சொடுக்கவும்.)



"உலகின் பல பாகங்களில் இஸ்லாம் வேகமாக பரவுவதை" முஸ்லிம்கள், "இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டுகிறார்களாம். அது தவறாம்".

ஒரே கேள்வி:

அவ்வாறு முஸ்லிம்கள் எங்கே கூறுகின்றனர்? என்று கேட்டு விட்டாலே கோயபல்ஸ் உமரின் அயோக்கியத்தனம் கழண்டு விழுந்து விடும்.

மனோவியாதி என்றும், அயோக்கியத்தனம் என்றும் இந்த அபூநூறா தளக்காரர் சொல்லியுள்ளார்.

இப்போது இவர்களுக்கு ஒரு கதையைச் சொல்வது தான் சரியானது:

அதாவது ஒரு ஊரில் ஒரு சாது இருந்தாராம், சிலர் அவரை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்களாம். அப்போது அவரது சீடர்கள் "அவர்கள் அப்படி திட்டிக்கொண்டு இருக்கும்போது ஏன் சும்மா இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த சாது, "உங்களுக்கு பிடிக்காத ஒரு பொருளை யாராவது உங்களுக்கு கொடுத்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு அவர்கள், "கொடுத்த நபரிடமே திருப்பி கொடுத்துவிடுவோம்" என்றார்களாம். அப்போது, அந்த சாது அதைத் தான் நாம் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறேன், எனக்கு தேவையில்லாத பொருளை எனக்கு வேண்டாம் என்றுச் சொல்லி அவர்களிடமே கொடுத்துவிடுகிறேன் என்றாராம்.

இந்த கதையில் வருவது போல, நான் செய்யமாட்டேன். நான் இவர்கள் தருபவற்றை அப்படியே இவர்களின் நபியிடம் கொடுத்துவிட விரும்புகிறேன். அவரிடம் கொடுத்து, இதோ பாருங்க இஸ்லாமிய நபி அவர்களே, உங்கள் சீடர்கள் இவைகளை என்னிடம் கொடுத்தார்கள், அவைகள் எனக்கு தேவையில்லாதது, எனவே, உங்களிடம் தருகிறேன், நீங்களாவது வைத்துக்கொள்ளுங்கள், அல்லது வேறு என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள் என்று சொல்லி கொடுத்துவிடுகிறேன்.

ஆகையால், இனி எந்த இஸ்லாமியராவது என்னை "மனோவியாதிக்காரன்" என்றுச் சொன்னால், அது அவர்களின் நபிக்கு அவர்கள் சொல்வதாக ஆகிவிடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள் இஸ்லாமியர்களே! என்னை அயோக்கியன் என்றுச் சொன்னால், அது அவர்களது நபிக்கு அவர்களே தருவதாக அர்த்தமாகி விடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள்
.

இஸ்லாமியர்கள் அடிக்கடி சொல்லும் வாதங்கள்:

இஸ்லாமியர்கள் ஒரு சில வாதங்களை திரும்ப திரும்ப கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டே இருப்பவர்கள். அவைகளில் சில வாதங்கள் கீழ் கண்டவிதமாக இருக்கும்.

1) இஸ்லாம் தான் உயர்ந்தது, சிறந்தது, இதனை விமர்சிப்பவர்கள் எப்போதும் வெற்றியடைய மாட்டார்கள்.

2) உலகத்தின் பல நாடுகளில் இஸ்லாம் தான் வேகமாக வளரும் மதமாக உள்ளது, இதற்கு இஸ்லாமின் கோட்பாடுகள் தான் காரணம், இஸ்லாம் சத்தியமார்க்கம் என்பதை இதனால் அறியலாம்..

3) இஸ்லாமுக்கு மக்கள் அலையலையாக வருகிறார்கள். இஸ்லாம் தான் பெண்களுக்கு உரிமைகளை அதிகமாக தருகிறது.

4) தலைசிறந்த தலைவர்கள் 100 பேர்களில் முஹம்மது தான் முதலில் இருக்கிறார் (The 100: A Ranking of the Most Influential Persons in History- http://en.wikipedia.org/wiki/The_100)

இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். இவைகளை கண்டிப்பாக நாம் அடிக்கடி நம்முடைய இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக கேட்டிருப்போம்.

ஆனால், அபூநூறா தளத்தின் கட்டுரையில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்தால் அது உண்மையானதாக இருப்பதாக பொருள் என்று முஸ்லிம்கள் கூறாத ஒன்றை தானே உருவாக்கி, அதற்குத் தானே பதில் கூறி திருப்திபட்டுக் கொள்ளும் இவரைக் கண்டுகொள்ளாமல் விடுவது தான் சிறந்தது என்றாலும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை "பொய்களின் கூடாரமான" கிறிஸ்தவத்தின் தூதர்கள் பரப்பும் பொழுது "அவ்வாறு இல்லை" என்று கூற வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு உருவாகிறது.

இஸ்லாம் வேகமாக வளருகிறது, இது எதை காட்டுகிறது, இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதைக் காட்டுகிறது என்று எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லையாம்.

ஒரு வேளை இந்த கட்டுரையை படிப்பவர்கள் இஸ்லாமியரல்லாதவராக இருப்பீர்களானால், நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது, உங்கள் இஸ்லாமிய நண்பரிமிருந்து கேட்பீர்கள், அல்லது கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஒரு வேளை இதை படிப்பவர்கள் இஸ்லாமியராக இருப்பீர்களானால், நீங்கள் சாதாரணமாக இணையத்தை பயன்படுத்துபவராக இருப்பீர்களானால், இப்படி சொல்லியிருப்பீர்கள் அல்லது உங்களிடம் மற்ற இஸ்லாமியர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள்.

ஆனால், அபூநூறா தளம் சொல்கிறது, இப்படி இஸ்லாமியர்கள் சொல்வதில்லையாம்.

உளறல்களிலெல்லாம் மிகப்பெரிய உளறல்:

மேலே உள்ளது போல, "இஸ்லாமியர்கள் சொல்லமாட்டார்கள் என்று" மறுத்துவிட்டு, தன் கட்டுரையிலேயே இன்னொரு இடத்தில் அருமை சகோதரர் அபூநூறா அவர்கள் கீழ் கண்டவாறு எழுதுகிறார்கள்:

ஆக உலகில் யாரேனும் ஒருவர் அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒரே குரலில் 'இஸ்லாம் வேகமாக வளருகின்றது' என்று சொல்வார்களாயின் அது தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துவதேயன்றி வேறில்லை.

அருமையான சகோதரரே, அந்த மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மூழ்கிவிட்டு, இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் தான் என் கட்டுரையில் தரப்பட்டு இருந்தது.

கட்டுரையின் ஆரம்பத்தில், இப்படி எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லை என்று சொல்லிவிட்டு, பிறகு உலக இஸ்லாமியர்கள் இப்படி சொல்வார்களானால், அது உணர்ச்சிப் பெருக்கு என்கிறார்.

இதனை எங்கே சென்று முறையிடுவது?

இதை என்னவென்றுச் சொல்வது?

உளறல் என்பதா அல்லது "உளறல்களின் சிகரம்" என்றுச் சொல்வதா?


இதை வாசிக்கும் வாசகர்களே சிந்திக்கட்டும்.

ஆக, இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும் யார் உளறுகிறார்கள் அல்லது யார் உளறுகிறோம் என்பதை அறியாமலேயே உளறுகிறார்கள் என்று?

வேகமாக வளருகிறது என்பதைப் பற்றி இஸ்லாமிய தளத்திலிருந்து சில வரிகள்:

இஸ்லாம் இணைய பேரவையின் கட்டுரை:

....உண்மையில் இன்று உலகத்தில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிதர்சனாமாக நிருபித்துவருகிறது.

சர்வதேச அளவில் இஸ்லாம் மக்கள் உள்ளத்தில் எந்தளவு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலகின் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இஸ்லாம் பற்றிய செய்திகளே, இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும். உலக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பி இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது எனலாம்....

Source: http://www.tmpolitics.net/iip/Articles/sathiyam.htm
Formats mine

மேலே அடிக் கோடிட்ட வரிகளைப் பாருங்கள்.

"இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும்."

எது சரியான எடுத்துக்காட்டு என்று இஸ்லாம் இணைய பேரவைச் சொல்கிறது?

அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளருவது தான் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை எடுத்துக்காட்டுகிறதாம். இப்படி இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் என்று தானே நான் எழுதினேன்( http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html ).

என்ன அபூநூறா அவர்களே, இஸ்லாம் இணைய பேரவைத் தள அறிஞர்களும் என்னைப் போல "மனோ வியாதியால்" பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

அவர்களே உங்களை நியாயம் தீர்க்கட்டும்.

உளறல் தள நிர்வாகி அவர்களுக்கு உமரின் வேண்டுகோள்கள்:

நான் எழுதியது உளறல் என்றுச் சொல்லி, ஒரு தளத்தை ஆரம்பித்து, அதில் என் கட்டுரையை பதித்துள்ளீர்கள், மிக்க நன்றி. ஆனால் மூல தொடுப்பு கொடுக்கும் படி நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் உங்களை கேட்டுள்ளேன்(அல்லது) எச்சரிக்கை செய்துள்ளேன். நீங்கள் கட்டுரையின் மூலத்தை(ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தொடுப்பை) தருவீர்கள் என்று நம்புகிறேன்.

முன்னுரையாக‌ ஒரு வரியும் சொந்தமாக கொடுக்காமல் நான் எழுதிய கட்டுரையை அப்படியே பதித்துள்ளீர்கள், அதே போல என் மற்ற கட்டுரைகளையும் (மன்னிக்கவும், உளறல்களையும்) பதிக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கின்றதா?

அதாவது, குர்‍ஆன் சம்மந்தப்பட்டு, உங்கள் நபி சம்மந்தப்பட்டு அனேக கட்டுரைகள் என் ஈஸா குர்‍ஆன்(http://www.geocities.com/isa_koran) தளத்திலும், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்(http://www.answering-islam.org/tamil)தளத்திலும் இருக்கின்றனவே, அவைகளை பதிப்பீர்களா?

அப்படி பதிக்கமாட்டேன் என்று நீங்கள் அடம் பிடித்தால், இந்த ஒரு கட்டுரைத் தவிர மற்ற அனைத்து கட்டுரைகளும் "உமரின் உளறல்கள் அல்ல, அவைகள் இஸ்லாமின் உண்மை முகங்கள்" என்று எல்லாரும் முடிவு செய்துக்கொள்ளலாமா?

அதாவது, "உளறல் பக்கம்" என்றுச் சொல்லி, ஒரு கட்டுரையை மட்டுமே பதித்துள்ளீர்கள், இதுவரை இந்த ஒரு கட்டுரையை மட்டுமே "உளறல்" என்று நீங்கள் கருதுகிறீர்களா?

அல்லது எங்களுடைய அனைத்து கட்டுரைகளும்(முஹம்மதுவின் கொலைகள், குர்‍ஆனில் உள்ள எழுத்துபிழைகள், முரண்பாடுகள், etc…) உளறல்கள் என்று கருதுகிறீர்களா?

அப்படி என் எல்லா கட்டுரையும் உளறல் என்று நீங்கள் சொன்னால், அவைகளை உங்கள் (மன்னிக்கவும் என் உளறல் பக்கம்) தளத்தில் எப்போது பதிக்கப்போகிறீர்கள்?

ஈஸா குர்‍ஆனின் அனைத்து கட்டுரைகளை நீங்கள் அந்த தளத்தில் பதிக்க நான் அனுமதி அளிக்கிறேன். அவைகளுக்கு நீங்கள் உங்கள் வழக்கப்படி பயந்துப்போய் தொடுப்புக்களை கொடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளுக்கு மட்டும் மூல தொடுப்பை கொடுத்துவிடுங்கள்.

எப்படி வசதி?

எனக்கு ஒரு விவரம் தெரிந்தாக வேண்டும், நீங்கள் என் இந்த ஒரு கட்டுரையை மட்டும் உளறல் என்று கருதுகிறீர்களா அல்லது என் எல்லா கட்டுரைகளையும் உளறல்கள் என்று கருதுகிறீர்களா?

நான் எழுதுவது எல்லாம் உளறல் என்றுச் சொன்னால், அந்த எல்லா உளறல்களை எப்போது பதிப்பீர்கள்?

ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது

நான் ஒரு முறை படித்த ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது, அதனை கீழே தருகிறேன், படிக்கவும்:

There was a Christian lady who lived next door to an atheist. Every day, when the lady prayed, the atheist guy could hear her. He thought to himself, "She sure is crazy, praying all the time like that. Doesn't she know there isn't a God?"

Many times while she was praying, he would go to her house and harass her, saying "Lady, why do you pray all the time? Don't you know there is no God?" But she kept on praying.

One day, she ran out of groceries. As usual, she was praying to the Lord explaining her situation and thanking Him for what He was gonna do. As usual, the atheist heard her praying and thought to himself, "Humph! I'll fix her."

He went to the grocery store, bought a whole bunch of groceries, took them to her house, dropped them off on the front porch, rang the door bell and then hid in the bushes to see what she would do. When she opened the door and saw the groceries, she began to praise the Lord with all her heart, jumping, singing and shouting everywhere! The atheist then jumped out of the bushes and told her, "You ol' crazy lady, God didn't buy you those groceries, I bought those groceries!" At hearing this, she broke out and started running down the street, shouting and praising the Lord.

When he finally caught her, he asked what her problem was. She said, "
I knew the Lord would provide me with some groceries, but I didn't know he was gonna make the devil pay for them!" Source: http://www.basicjokes.com/djoke.php?id=2446

முடிவுரை:

அன்பான சகோதரரே (நீங்கள் கிறிஸ்தவம் பார்வை தள அறிஞர் அபூ அப்திர்ரஹ்மான் என்று நான் கருதுகிறேன்)

உங்களுக்கு உங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்ற நம்பிக்கை இருந்தால்,

நான் எழுதுகின்ற கட்டுரைகள் உளறல்கள் என்று கருதினால்,

என் அனைத்து கட்டுரைகளையும் பதியுங்கள். இப்போது பதித்தீர்களே, அது போல, அதாவது கட்டுரையை அப்படியே காபி பேஸ்ட் செய்துவிடுங்கள். நான் பதிக்கமாட்டேன் என்றுச் சொன்னால், மற்ற கட்டுரைகளை நீங்கள் உளறல்கள் அல்ல என்று ஒப்புக்கொண்டீர்கள் என்று பொருளாகிவிடும்.

References:

1) http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html
2) http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html
3) http://abunoora.com/




Isa Koran Home Page
 
 
1 http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/AbuNoora/AbuNoora-Umar1.html

StumbleUpon.com Read more...

உலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போரை முறியடிப்போம் விரைவீர்

 
 
அன்பார்ந்த தமிழ் உறவுகளே தற்காலத்தில் இணையதளமானது ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த ஊடகமாக உள்ளது. தற்பொழுது நமது இனத்தினை தாயகத்தில் அழித்துக்கொண்டிருக்கும் சிங்களர்கள் இணையதளத்தின் மூலமாக தவறான கருத்துக்களை இவ்வுலகிற்கு பரப்பிவருகின்றனர். நம்மீதான இணையதள கருத்தியல் போரினை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
சர்வதேச ஊடகவியலாளர்கள் இணையத்தில் நம் நிலவரங்களை தெரிவித்து வரும் வேளையில் சிங்களர்கள் அக்கருத்துக்கள் தவறானது என்று பரப்பி வருகின்றார்கள்.  தமிழீழத்துக்கு ஆதரவாக எழுதியுள்ள சர்வதேச எழுத்தாளர்களின் கட்டுரைகளில் மறுப்பு தெரிவித்து தவறென்று சிங்களவர்கள் அதிகளவு கருத்து தெரிவித்துள்ளனர். ஆயுதப்போராட்டம் , அரசியல் போராட்டம் ஆகியவற்றுக்கு இடையே புலம்பெயர் மக்களாகிய நாம் இணையதள ஊடகப்போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
நாம் செய்யவேண்டிய வேலை நமக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரும் சர்வதேச ஊடகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நன்றி தெரிவித்து நம் ஆதரவு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். புலம்பெயர் வாழ்மக்களாகிய நாம் தாயக விடுதலைப்போராட்டத்துக்கு இவ்வகையான கருத்தியல் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
உலகத்தமிழர்கள் அனைவரும் கீழ்க்காணும் தளங்களில் உங்களின் கருத்துக்களை தெரிவிக்க விரைந்து தெரிவிக்குமாறு உணர்வுகளுடன் கேட்டுக்கொள்கிறோம்.
 

 

 
 

StumbleUpon.com Read more...

இந்த உலகு; சிங்கள காட்டுமிராண்டியிடம் கொலைபடும் எமது மக்களுக்காக கவலை கூட படவில்லை: யோகி ஆதங்கம்

அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் இறந்தோருக்காக கதறிய இந்த உலகு; சிங்கள காட்டுமிராண்டியிடம் கொலைபடும் எமது மக்களுக்காக கவலை கூட படவில்லை: யோகி ஆதங்கம்
 
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாக்கி அழுகின்றன. ஆனால், ஹிட்லரிலும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை - காட்டுமிராண்டியைப் போல மக்களை கொலை செய்கின்ற ஒரு மனிதனை - அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். ஆனால், இந்த உலகம் எந்த அக்கறையும் காட்டவில்லை. அவனுக்குப் பின்னால் அது மனசாட்சியற்று நிற்கின்றது என்று  தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலில் ஒலிப்பரப்பாகிய கருத்துப் பகிர்வு நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளதாவது:
 
நீண்ட நெடிய எங்களுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாங்கள் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்திலே நிற்கின்றோம். நாங்கள் நம்பிக்கை இழந்து, உளவுரண் உடைந்து எதிரியிடம் சரணடைய  வேண்டும் என்பது எதிரியின் விருப்பம் மட்டுமல்ல; இந்த உலகத்தின் விருப்பமும் கூட. நாங்கள் மில்லரை, திலீபனை, அன்னை பூபதியை எல்லாம் ஒரு குறியீடாகத்தான் பார்க்கின்றோம். அந்த குறியீடு என்பது நெருக்கடி வர வர நாங்கள் நிமிர்ந்து நின்று போராடுவோம்; எந்த நெருக்கடிக்குள்ளும் நாங்கள் போராடுவோம்; இறுதிவரை போராடுவோம் என்பதை சுட்டி நிற்கின்றது.
 
ஈற்றில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் வாழ்ந்திருக்கின்றோம்; போராடியிருக்கின்றோம்; இன்றும் போராடி கொண்டிருக்கின்றோம். இந்த நம்பிக்கையை நாங்கள் இழந்துவிடக் கூடாது.
வடமராட்சியில் 'ஒப்ரேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போதும், இந்தியப் படை வந்த போதும் விடுதலைப் போராட்டம் அழிந்து விட்டது என்றுதான் குறிப்பிட்டார்கள். 'ஜெயசிக்குறு' காலத்திலும் இதே கருத்தைதான் முன்வைத்தார்கள்.
 
ஆனால் போராட்டம் இந்த நெருக்கடிகளைச் சந்தித்த போதும் எழுந்தது; வளர்ந்தது; வீறுகொண்டு பெரிய எல்லைகளைத் தொட்டது. இதனை நாங்கள் மறந்து விடக்கூடாது.
 
இன்று - உலகம் முழுவதிலும் - ஒரு திட்டத்தின் அடிப்படையில், போராடுகின்ற அமைப்பை செயலிழக்கச் செய்து, பலமிழக்கச் செய்து பிறகு ஒரு தீர்வை வைக்க முற்பட்டால் அந்த தீர்வு நிலைக்கும் என்ற நம்பிக்கையோடு - அந்த கோட்பாட்டோடு எப்போதுமே இப்படியான கோட்பாடுகள் பிழையானவைதான் என்று தெரிந்தும் - செயற்பட்டு வருகின்றன. அவர்களுக்குச் சிங்கள அரசு சில நம்பிக்கைகளைக் கொடுக்கின்றது.
 
இவர்கள் எல்லாம் திட்டம் போட்டு செயற்படுகின்றனர். இன்னும் சில காலங்களில், ஒரு பத்து நாளிலோ அல்லது 15 நாளிலோ புலிகள் அழிந்து விடுவார்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தான் சொன்னதையே சிங்கள அரசு நம்புகிறது. அதனையே வெளிநாட்டவர்களும் நம்புகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றது. தான் சொன்னதையே நம்பிக் கொள்வது சிங்கள தேசம்தான்.
அண்மைய காலமாக நாங்கள் எதிர்த்து ஒரு வலிந்த தாக்குதலை தொடங்கிய போது கூட ஆடிப் போய் நிற்கின்றது. பெரிய அளவில் ஒரு வலிந்த தாக்குதலை நடத்த வேண்டுமாக இருந்தால் எங்களோடு எல்லா மக்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.
இந்த உலகத் திட்டம் என்பது எங்களைச் செயலிழக்கச் செய்து பலமிழக்கச் செய்த பின் ஒரு தீர்வை வைப்பது என்பதாகும். ஆனால், அப்படி ஒரு தீர்வு வைக்கப்படாது எங்களுக்குத் தெரியும்; அது நடைமுறைப்படுத்தப்படாது என்பதும்  எங்களுக்குத் தெரியும்.
 
புலிகள் பலமாக இருக்கின்ற ஒரு நிலையில்தான் தமிழர்களுக்காக தீர்வு குறித்து சிங்கள தேசம் பேசும். உலகம் பேசும். இல்லையேல் யாருமே இதைப்பற்றி இனி பேச மாட்டார்கள். புலிகள் பலமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மற்றவர்கள் உதவ வேண்டும் என்றில்லை. இன்றைக்கு இருக்கின்ற மக்களில் வலுவுள்ளவர்கள் எல்லாரும் ஒன்று திரண்டு நின்றால் போதும். 
 
நாங்கள் போராட முடியும்; அதிசயிக்கத்தக்க வகையில் வெற்றிகளைச் சாதிக்க முடியும்.
எங்களுக்குப் பின்னால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எல்லோரும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் எல்லாரும், ஒரு குறிப்பிட்டவர்களைத் தவிர எங்களோடுதான் நிற்கின்றனர். இவர்கள் எல்லோரும் உலகு எங்கும் வாழ்கின்ற மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும். அரசோடு பேசி பிரயோசனமில்லை. அரசுகளை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்த மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும்.
 
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்து போன போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாகச் சொல்லி அழுகின்றன. உலகம் முழுவதும் அழுகின்றன.
 
இன்று தமிழீழத்தில் மருத்துவமனைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகள் போடப்பட்டு, உணவுகள் தடுத்தப்பட்டு, மருந்துப் பொருட்கள் தடுக்கப்பட்டு நான்கு லட்சம் மக்களுக்கு மேல் ஒரு பாதுகாப்பு வலயம் என்று பொய்க்காக ஒன்றை உருவாக்கி, அந்த வலயத்திற்குள்ளே நாளாந்தம் குண்டுகளை வீசி, 50-இலிருந்து 60-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் நிலையில், நாளாந்தம் 100-க்கும் அதிகமான மக்கள் காயப்படுகின்ற நிலை காணக்கூடியதாய் இருக்கின்றது.
 
கிட்டதட்ட ஒரு கிழமைக்குள்ளே 500-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயப்பட்டிருக்கிறார்கள். அதில் பல குழந்தைகளும் அடங்கும். அதனைப்பற்றியெல்லாம் இந்த உலகம் கருத்தில் கொள்ளாமல் கண்மூடி நிற்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.
 
இருந்தபோதும் நாங்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துகளைச் சொல்லி வைப்போம். அதன் மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம்.
 
ஒன்றில் நாங்கள் உறுதியாக இருப்போம். இன்றைக்கு உலக நாடுகள் எல்லாமே இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன; குறிப்பாக தேசிய தலைவரை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன. அவரை, அழித்து விட்டால் இந்த போராட்டத்தில் நாங்கள் நினைக்கின்ற எதனையுமே செய்துவிட முடியும் என்றும் எங்களை அழித்து எங்கள் போராட்டத்தை இல்லாமல் செய்த தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என நினைக்கின்றன.
 
அது நடக்காது என்பதே வெளிச்சம். இந்த போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று சொல்லி வைப்போம். தேசியத் தலைவரின் வழித்தடத்தில் நாங்கள் எல்லாரும் ஒன்றுபட்டு உறுதியாக நின்று போராடுவோம் என்று சொல்லி வைப்போம்.
 
இன்று காலம் குறித்து நிற்கிறது சிங்கள அரசு. அந்த காலம் சரிவராது என எடுத்துக் காட்டுவோம். அதற்கும் மேலாக எங்கள் போராட்டம் தொடரும் என எடுத்துக்காட்டுவோம். அவற்றுக்கு எல்லாம் மேலாக இந்த முற்றுகையினை உடைத்து எங்கள் மண்ணை மீட்கின்ற வகையில் ஒரு போராட்டத்தை எங்களால் தொடர முடியும் என்பதை நாங்கள் எடுத்துக் காட்டுவோம்.
 
ஹிட்லர் போன்றவர்கள் கூட படையெடுத்த போது இந்த உலகம் அழிந்து விடும்; உலகத்தில் உள்ள எல்லாமே ஹிட்லரிடம் வீழ்ந்துவிடும் என்றபோது கூட பலர் தொடர்ந்து போராடினர். அழிவுக்குள் நின்று போராடினர். அந்த அழிவுக்குள்ளும் நம்பிக்கையோடு போராடினர்.
 
ஹிட்லரினும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை, காட்டுமிராண்டியை, மக்களை கொலை செய்கின்ற ஒரு மக்களைக் கொலை செய்கின்ற ஒரு மனிதனை அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். அவனுக்குப் பின்னால் மனசாட்சியற்று நிற்கின்றவர்களை நாங்கள் ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்த மனசாட்சியை அவர்களுக்குள் ஆழ புதைத்து எங்கள் குரலைக் கேட்கச் செய்ய வேண்டும்.
 
அதற்காக நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்த போராட்டம் ஒரு குறுகிய காலத்தில் அழிந்துவிடும், அழிக்கப்பட்டு விடும் என்று சிங்கள தேசம் சொல்வதை நம்பிக் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்து நிற்கின்ற உலகத்தின் திட்டத்தை மாற்றுவோம். எங்கள் வெற்றிகள், நாங்கள் செய்கின்ற  சாதனைகள் மீண்டும் இந்த உலகத்தை எங்களை நோக்கி வரவழைக்கும்.
 
நாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத தோற்றது கிடையாது. தேசியத் தலைவர் அவர்கள் எங்கள் மீது வளர்த்தது இந்த ஓர்மத்தைதான். நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் என்றார் யோகி.

 

 

StumbleUpon.com Read more...

ஜோக்கர் சோவும்,பிஜேபியும், மோடியின் புத்தக விழாவில் நடத்திய கூத்து

ஈழத்தமிழர்களுக்கு எதிராக பேசிய சோவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு: அரங்கத்தில் பரபரப்பு
சோ இப்புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது கொஞ்சமும் இவ்விழாவுக்கு சம்பந்தம் இல்லாமல் ஈழப்பிரச்சனை பற்றி பேசினார்.

இலங்கை பிரச்சனையில் தமிழக பிஜேபியினருக்கு புதுப்பாசம் வந்திருக்கிறது. இந்த விசயத்தை பற்றி பேச எனக்கு சரியான இடம் அமையவில்லை. இந்த மேடைதான் அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதை பயன்படுத்திக்கொண்டு பேசுகிறேன்.

பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று காஷ்மீர் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் குண்டுகள் வீசி தாக்குகிறது. அதைப்போய் ஏன் குண்டு வீசுகிறீர்கள் என்று கேட்க முடியுமா? அப்படித்தான்...இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை ராணுவம் போரிடுகிறது. அதை நிறுத்துங்கள் என்று சொல்லமுடியாது. எப்படித்தான் சொல்ல முடியும்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கை பிரச்சனை குறித்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருகிறார். அதே போல் தான் நானும் எனது இந்த கருத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறேன்..

தமிழக பிஜேபியினர்தான் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை என்று சோ ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்க, தமிழில் பேசு என்று பிஜேபியினர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.தொடர்ந்து சோ ஆங்கிலத்திலேயே பேச, புத்தக சம்பந்தமா மட்டும் பேசு, சம்பந்தம் இல்லாம இலங்கை பிரச்சனை பற்றி பேசாதே என்று பிஜேபியினர் எதிர்ப்புக்குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.

சோ பேச்சை நிறுத்தாமல் நான் இப்போதும் சொல்கிறேன் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன்' என்று பேசினார். கடைசியில் எதிர்ப்புக்குரல் வலுக்கவும், பிஜேபியினர் எழுந்து நின்று கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் நன்றி,வணக்கம் என்று உரையை முடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

இதனால் அரங்கத்தில் பெரும் சலசலப்பு உண்டானது.

நரேந்திர மோடி பேசும் போது சோ பேச்சைப் பற்றியும், அதனால் எழுந்த சலசலப்பு பற்றியும் எதுவும் பேசவில்லை. தனது புத்தகத்தைப் பற்றியும் தனது ஆட்சியின் சாதனைகள் பற்றியும் மட்டும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார்.

நன்றி நக்கீரன்
http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

இன்றைக்கு கை வேற,கால் வேற,தலை வேற துண்டாயிருக்கு சரியா

StumbleUpon.com Read more...

இலங்கையின் கடைசி யுத்தம் கடலில்தான்!

பல ஆண்டுகளுக்கு முன் முல்லைத்தீவு கடல்பகுதி சிங்கள ராணுவத்தின் கையில்தான் இருந்தது. இதனால் புலிகளின் கடல் போக்குவரத்துக்கு தடைப்பட்டது. 'ஓயாத அலைகள்-1′ என்ற போரின் மூலம் முல்லைத்தீவை மீட்டார்கள் புலிகள். ஆறு மாத காலம் முல்லைத்தீவு கடற்படைத் தளத்தைப் புலிகளின் புலனாய்வுப் படை வேவு பார்த்து அதன் மொத்த பிளானையும் பிரபாகரனுக்குச் சொன்னது.

ஒருபக்கம் இந்து மகா சமுத்திரம், இன்னொரு பக்கம் நந்திக்கடல், அடுத்த பக்கம் வட்டவாகல் ஆறு என மொத்தமும் தண்ணீர்தான். இந்தப் பகுதியில் மொத்தம் 1,600 சிங்கள ராணுவ வீரர்கள் இருந்தார்கள். எட்டு முனைகளில் இந்த முனைகளைப் புலிகள் தாக்கினார்கள்.

இரண்டு முனைகளைக் கடற்புலி தாக்கியது. உடனே, பல்வேறு இடங்களில் இருந்து முல்லைத்தீவை நோக்கி ராணுவம் வந்தது. அவர்கள் அத்தனை பேரையும் பல இடங்களில் வழிமறித்தார்கள் புலிகள். சிக்கலில் மாட்டிக் கொண்ட சிங்கள ராணுவம், வான்படை வீரர்களை உள்ளே இறக்கியது. அவர்களையும் புலிகள் பிடித்தார்கள்.

காலை 9 மணிக்கு ஆரம்பித்த சண்டை மாலை 5 மணிக்கு முடிந்தது. புலிகள் பக்கம் 315 பேரும் ராணுவத்தினர் 1,500 பேரும் ஒரே நாளில் பலியான பெரிய சண்டை அது.

அங்குதான் 12 ஆண்டுகள் கழித்து இப்போது சண்டை நடக்கப் போகிறது. இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட அமைதிப்படை உள்ளே நுழைய முடியாத இடத்தில், சிங்கள ராணுவம் ஒரு நாள் சண்டையில் பறிகொடுத்த இடத்தில் நடக்கப் போகிறது கடைசி யுத்தம்!
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP