சமீபத்திய பதிவுகள்

'ஐஎஸ்ஐயிடம் பணம் வாங்கிய ஆர்எஸ்எஸ் தலைவர்கள்'

>> Thursday, February 19, 2009

மும்பை: ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முஸ்லீம் பிரிவு தலைவர் இந்த்ரேஷ் குமார் ஆகியோர் ஐ.எஸ்.ஐயிடமிருந்து பணம் பெற்றதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஷியாம் ஆப்தே தன்னிடம் கூறியதாக மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள தயானந்த பாண்டே கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மும்பை துணை ஆணையரிடம் பாண்டே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் ..

2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் புனே சென்று ஷியாம் ஆப்தேவை சந்தித்தேன். அப்போது என்னிடம், இந்த்ரேஷ் குமார் மற்றும் பகவத் ஆகியோர் ஐ.எஸ்.ஐ.யிடமிருந்து பணம் வாங்கி விட்டனர் என்று ஆப்தே வருத்தப்பட்டுக் கூறினார்.

இதுகுறித்து லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்துக்குத் தெரிய வந்தது. இதையடுத்து கேப்டன் ஜோஷி என்பவரிடம், அந்த இரு தலைவர்களையும் கொலை செய்து விடுமாறு உத்தரவிட்டார் புரோஹித்.

புரோஹித் சொன்னபடி இரு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களையும் கொல்லவில்லை ஜோஷி. இதனால் ஆப்தே கோபமடைந்தார்.

மாலேகான் குண்டுவெடிப்பு சதி முழுவதையும் தீட்டி, திட்டமிட்டது புரோஹித் மற்றும் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் ஆகியோர்தான். நாடு முழுவதும் முஸ்லீம்களால் இந்துக்கள் பாதிக்கப்படுவதற்கு பழி வாங்கும் வகையில் இந்தத் திட்டத்தை அவர்கள் தீட்டினர்.

2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் நாசிக் அருகே உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று புரோஹித்தை சந்தித்தேன். அப்போதுதான் தான் அபினவ் பாரத் அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும், இந்துத்வாவை இந்த அமைப்பின் மூலம் காக்கப் போவதாகவும் கூறினார் புரோஹித்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரீதாபாத்தில் நடந்த அபினவ் பாரத் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு மாலேகான் குண்டுவெடிப்பில் கைதாகியுள்ள சுதாகர் சதுர்வேதி, ஓய்வு பெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாய் ஆகியோரும் வந்திருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் இந்து ராஷ்டிரத்தை அமைப்பது குறித்தும், இந்துக்களின் நலனைக் காக்க தனி அரசியல் சாசனத்தை உருவாக்குவது குறித்தும் புரோஹித் விரிவாகப் பேசினார்.

மேலும், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்குத் தேவையான வெடிபொருட்களை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றும் கூறினார். அப்போது குறுக்கிட்ட உபாத்யாய், வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் ஆட்களை நான் ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், நான் இந்தூருக்குச் சென்று துறவி பிரக்யா சிங் தாக்கூரை சந்தித்தேன். அப்போது, இந்துக்களைக் காக்க வெடிபொருட்களையும், வெடிகுண்டுகளையும் ஏற்பாடு செய்யுமாறு புரோஹித்திடம் கூறுங்கள் என்று என்னை பிரக்யா சிங் தாக்கூர் கேட்டுக் கொண்டார்.

புரோஹித் தான் சொன்ன சொல்லில் சீரியஸாக இல்லை. அவருக்கு எடுத்துக் கூறி வெடிகுண்டுகள உடனடியாக தயார் செய்யுமாறு அவரிடம் கூறும்படி என்னைக் கேட்டுக் கொண்டார் பிரக்யா சிங் என்று கூறியுள்ளார் பாண்டே.

இதுவரை மாலேகான் வழக்கில் பாண்டே மற்றும் ராகேஷ் தாவ்தே ஆகிய இருவர் மட்டுமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 

StumbleUpon.com Read more...

ஈழம் உண்மையை வெளியிடும் ஒரு தமிழ் தொலைக்காட்சி

StumbleUpon.com Read more...

சார்லஸ் என்கிற 23 வயது இளம் புலியைத்தான் உலக நாடுகளும் உற்று கவனித்துக்கொண்டு இருக்கிறது

 

2007032712010101"புலிகளுக்குக் கூடுதல் நெருக்கடிகள் ஏற்பட்டால், சிங்கள ராணுவத்துக்குப் பேயடி கொடுக்க நினைக்கும் தன் மகன் சார்லஸ் ஆண்டனிக்கு பிரபாகரன் அனுமதி வழங்குவார். அதனால் இன்றைக்கு சிங்கள ராணுவம் மட்டுமல்லாது உலக நாடுகளும் உற்று கவனித்துக்கொண்டு இருப்பது சார்லஸ் என்கிற 23 வயது இளம் புலியைத்தான்!" -கடந்த 28.01.09 தேதியிட்ட ஜூ.வி-யில் 'பதுங்குவதா, பாய்வதா… மகனோடு புலித்தலைவரின் பாசப் போராட்டம்!' என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருந்த கவர் ஸ்டோரியின் இறுதி வரிகள் இவை.

இன்றைக்கு அனைத்து மீடியாக்களிலும் சார்லஸ் ஆண்டனி பற்றிய செய்திகள் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. தற்போது புலிகளின் படைகளுக்கு சார்லஸ் ஆண்டனிதான் தலைமை தாங்கி நடத்துகிறார் என்றும், சிங்கள ராணுவத்தை வீழ்த்த பல வியூகங்களை அவர் வகுத்திருக்கிறார் என்றும் அடுத்தடுத்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

தற்போது பதிலடித் தாக்குதலில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் புலிகள் தரப்பின் கருத்தறிய கொழும்புவில் வசிக்கும் விவரமறிந்தவர்களிடம் பேசினோம். "சார்லஸ் ஆண்டனி, புலிகளின் தொழில்நுட்பக் குழுவின் தலைவர். சென்னையில் பயிற்சி பெற்ற கர்னல் சங்கர்தான் ஆரம்பத்தில் விமானப் படைக்குத் தலைவராக இருந்தார். 2001-ல் அவர் இறந்துபோனார்.

அந்த இடத்தில் சார்லஸ் நியமிக்கப்பட்டார். பிரபாகரனை ஒழித்துக்கட்டிவிட்டால் புலிகள் அமைப்பே அவ்வளவுதான் என்று நினைத்த சிங்கள ராணுவம், விமானத் தாக்குதல்களை வன்னிப் பகுதியில் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தது. அதி நவீன ரேடார்கள் மூலமாகவும், போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்பதன் மூலமாகவும் பிரபாகரனின் இருப்பிடத்தை அறிய சிங்கள அதிகாரிகள் பல்முனை முயற்சிகளையும் எடுத்தார்கள். ஆனால், அவை கொஞ்சமும் பலனளிக்கவில்லை.

அதனால் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக பிரபாகரன் தலைமறைவாகி விட்டதாகவும், அவர் பதுங்கியிருந்த இடங்களை வளைத்துவிட்டதாகவும் கற்பனைக் கதைகளைக் கட்டிவிட்டார்கள். இதன்மூலமாக பிரபாகரனைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களை உருவாக்கி, தமிழ் மக்களின் நம்பிக்கையைக் குலைக்கவேண்டும் என்பதுதான் சிங்கள அதிகாரிகளின் திட்டம். இந்நிலையில், இப்போது பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனியைப் பற்றி சிலதகவல் களைப் பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே போரில் சார்லஸ் களமாடிக் கொண்டிருக்கிறார். கிளிநொச்சி புலிகளின் வசமிருந்தபோது விமானங்கள் மூலமாக சிங்கள ராணுவத்துக்குப் பேரடி கொடுக்கும் திட்டம் சார்லஸ் வசமிருந்தது. ஆனால், சிங்கள மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கரும்புலிகள் படைதான் சிங்கள ராணுவத்துக்கு எப்போதுமே பெரும் பயத்தைக் கொடுக்கும் படையணி.

இப்போது அவர்களுக்கு புலிகளின் விமானப்படையும் சிம்ம சொப்பனமாக கிலியூட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் சிங்கள அரசின் மொத்தக் குறியும் இப்போது சார்லஸை நோக்கித்தான். சிங்கள ராணுவத்தின் டாங்கிகளை துவம்சம் செய்து தாக்குதல் நடத்திய நாளில், புலிகளின் விமானப்படையும் வானில் சிறுவலம் வந்தது.

மொத்த ஓடுதளங்களையும் கைப்பற்றிவிட்டதாக சிங்கள ராணுவம் கொக்கரித்துக்கொண்டிருந்த நிலையில் புலிகளின் விமானம் எப்படிப் பறந்தது என்று சிங்கள சாதுர்யங்களுக்குப் புலப்படவில்லை. இந்நிலையில், சங்கர், தமிழ் அலை என்கிற இரு கரும்புலிகள் தங்களிடம் சரணடைந்ததாகவும், அவர்கள் சார்லஸின் அபாயத் திட்டங்கள் குறித்துச் சொன்னதாகவும் சிங்கள ராணுவம் தங்கள் தரப்பு பத்திரிகைகள் மூலமாக செய்தி பரப்பத் தொடங்கியது.

தங்களுக்கு எதிராகக் குலை நடுங்கவைக்கும் திட்டங்களை சார்லஸ் தீட்டி இருப்பதாகவும், அதற்காக அப்பாவி மக்களை அவர் மூளைச்சலவை செய்துகொண்டிருப்பதாகவும் சிங்கள ராணுவம் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறது. சார்லஸ் பற்றிய செய்திகளைப் பரப்புவதன் பின்னணியில் சிங்கள ராணுவத்தின் பெரிய அளவிலான சதிகள் இருக்கின்றன!" என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

புலிகள் தரப்பில் நெருக்கமானவர்களிடம் இதுகுறித்துக் கேட்டோம். "வன்னியில் வாழும் மக்கள், சிங்கள அரசை நம்பி அவர்கள் வசம் போக விரும்பவில்லை. அதனால் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலேயே அடுத்தடுத்து பீரங்கி தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ராணுவம் கொன்று அழித்திருக்கிறது.

ராணுவ வற்புறுத்தலால் வன்னியிலிருந்து வவுனியாவுக்குப் போன கர்ப்பிணிகள் கொடுந்துயரத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். கொடூர ஆயுதங்களின் மூலமாக மக்களைக் கொத்துக் கொத்தாக அழிக்கத் திட்டமிட்டிருக்கும் சிங்கள அரசு, மீடியாக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே சார்லஸ் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.

மக்களுக்கு வேண்டிய விழிப்பையும் ஆறுதலையும் ஏற்படுத்த புலிகள் தரப்பிலிருக்கும் தலைவர்கள் மக்கள்வாழ் பகுதிகளுக்கே சென்று பேசுவார்கள். பாலகுமார், கவிஞர் ரத்தினதுரை ஆகியோர் வன்னிவாழ் தமிழ் மக்களிடம் ஆறுதலையும் அன்பையும் பகரும் பணியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் பாலகுமாருக்கு ராணுவத் தாக்குதலில் காயம் ஏற்பட்டது.

இப்போது சார்லஸ் ஆண்டனியே மக்களைச் சந்தித்துப் பேசுகிறார். சிங்கள ராணுவத்தின் ஆயுத வீச்சுக்கு ஆளாகாதபடி தப்பிக்கும் வழிகளையும், அவர்களுக்கு வேண்டிய ஆறுதலையும் தைரியத்தையும் சார்லஸ்தான் எடுத்துரைக்கிறார். அவருடைய வார்த்தைகள் ஈழ மக்களை வீறுகொள்ள வைத்திருக்கின்றன.

இதையெல்லாம் முறியடிக்கும் விதமாகவும், சார்லஸ§க்கு முடிவுகட்டும் விதமாகவும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மீதே ராணுவம் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. பிரபாகரனுக்கு அடுத்தபடியாக சார்லஸ் சகல பணிகளிலும் உச்சம் காட்டுவதை சிங்கள அரசால் ஜீரணித்துக்கொள்ள இயலவில்லை. மொத்த படையணிகளையும் ஒருசேரத் திரட்டி தாக்குதல் நடத்தினால் முல்லைத் தீவு மாவட்டத்தையே கணநேரத்தில் மீட்டெடுக்க புலிகளால் முடியும். இதற்கான திட்டங்களை சார்லஸ்தான் வகுக்கிறார் என்பதுதான் சிங்கள ராணுவத்தின் எண்ணம். அதோடு, புலிகளின் விமானங்கள் மேற்கொண்டு எவ்விதத் தாக்குதலும் நடத்தாதது ஏன் என்றும் அவர்கள் குழம்பிக் கிடக்கிறார்கள். ராணுவத்திடம் வெப்பம், சத்தம், வேகம் ஆகியவற்றை கணித்து இயங்கும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் கைவசமிருக்கின்றன.

புலிகள் பயன்படுத்தும் 'ஸ்லின் -143′ ரக செக் நாட்டு விமானங்களை இனம் கண்டு அழிக்கும் ஃபார்முலாக்களோடு விமான எதிர்ப்பு பீரங்கிகளை சிங்கள ராணுவம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால், அந்த ஃபார்முலாக்களுக்கு நேரெதிரான திட்டமிடலோடு புலிகளின் விமானங்கள் மாற்றி உருவாக்கப்பட்டு வருகின்றன. சார்லஸின் இத்தகைய யுக்திகள்தான் சிங்கள ராணுவத்தைப் பதறவைத்துக் கொண்டிருக்கின்றன. விமானப்படை தாக்குதலை மறுபடியும் புலிகள் தொடங்கும் நாளில்தான் சார்லஸின் மொத்த பலமும் சிங்கள ராணுவத்துக்குப் புரியும்!" என்கிறார்கள் புலிகளின் அனுமான, அனுபவங்களை அறிந்தவர்கள்.

ஈழ ஆர்வலர்கள் தரப்பில் சார்லஸ் ஆண்டனி குறித்து இப்படிச் சொல்லப்பட்டாலும், இலங்கை அரசோ "சார்லஸ் செயல்பாடுகள் குறித்த தகவல்களை நாங்கள் பரப்ப வேண்டிய அவசியமில்லை!" என சொல்லிக் கொண்டிருக்கிறது.

 

http://www.nerudal.com/nerudal.803.html

StumbleUpon.com Read more...

சார்லஸ் என்கிற 23 வயது இளம் புலியைத்தான் உலக நாடுகளும் உற்று கவனித்துக்கொண்டு இருக்கிறது

 

2007032712010101"புலிகளுக்குக் கூடுதல் நெருக்கடிகள் ஏற்பட்டால், சிங்கள ராணுவத்துக்குப் பேயடி கொடுக்க நினைக்கும் தன் மகன் சார்லஸ் ஆண்டனிக்கு பிரபாகரன் அனுமதி வழங்குவார். அதனால் இன்றைக்கு சிங்கள ராணுவம் மட்டுமல்லாது உலக நாடுகளும் உற்று கவனித்துக்கொண்டு இருப்பது சார்லஸ் என்கிற 23 வயது இளம் புலியைத்தான்!" -கடந்த 28.01.09 தேதியிட்ட ஜூ.வி-யில் 'பதுங்குவதா, பாய்வதா… மகனோடு புலித்தலைவரின் பாசப் போராட்டம்!' என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருந்த கவர் ஸ்டோரியின் இறுதி வரிகள் இவை.

இன்றைக்கு அனைத்து மீடியாக்களிலும் சார்லஸ் ஆண்டனி பற்றிய செய்திகள் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. தற்போது புலிகளின் படைகளுக்கு சார்லஸ் ஆண்டனிதான் தலைமை தாங்கி நடத்துகிறார் என்றும், சிங்கள ராணுவத்தை வீழ்த்த பல வியூகங்களை அவர் வகுத்திருக்கிறார் என்றும் அடுத்தடுத்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

தற்போது பதிலடித் தாக்குதலில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் புலிகள் தரப்பின் கருத்தறிய கொழும்புவில் வசிக்கும் விவரமறிந்தவர்களிடம் பேசினோம். "சார்லஸ் ஆண்டனி, புலிகளின் தொழில்நுட்பக் குழுவின் தலைவர். சென்னையில் பயிற்சி பெற்ற கர்னல் சங்கர்தான் ஆரம்பத்தில் விமானப் படைக்குத் தலைவராக இருந்தார். 2001-ல் அவர் இறந்துபோனார்.

அந்த இடத்தில் சார்லஸ் நியமிக்கப்பட்டார். பிரபாகரனை ஒழித்துக்கட்டிவிட்டால் புலிகள் அமைப்பே அவ்வளவுதான் என்று நினைத்த சிங்கள ராணுவம், விமானத் தாக்குதல்களை வன்னிப் பகுதியில் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தது. அதி நவீன ரேடார்கள் மூலமாகவும், போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்பதன் மூலமாகவும் பிரபாகரனின் இருப்பிடத்தை அறிய சிங்கள அதிகாரிகள் பல்முனை முயற்சிகளையும் எடுத்தார்கள். ஆனால், அவை கொஞ்சமும் பலனளிக்கவில்லை.

அதனால் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக பிரபாகரன் தலைமறைவாகி விட்டதாகவும், அவர் பதுங்கியிருந்த இடங்களை வளைத்துவிட்டதாகவும் கற்பனைக் கதைகளைக் கட்டிவிட்டார்கள். இதன்மூலமாக பிரபாகரனைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களை உருவாக்கி, தமிழ் மக்களின் நம்பிக்கையைக் குலைக்கவேண்டும் என்பதுதான் சிங்கள அதிகாரிகளின் திட்டம். இந்நிலையில், இப்போது பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனியைப் பற்றி சிலதகவல் களைப் பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே போரில் சார்லஸ் களமாடிக் கொண்டிருக்கிறார். கிளிநொச்சி புலிகளின் வசமிருந்தபோது விமானங்கள் மூலமாக சிங்கள ராணுவத்துக்குப் பேரடி கொடுக்கும் திட்டம் சார்லஸ் வசமிருந்தது. ஆனால், சிங்கள மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கரும்புலிகள் படைதான் சிங்கள ராணுவத்துக்கு எப்போதுமே பெரும் பயத்தைக் கொடுக்கும் படையணி.

இப்போது அவர்களுக்கு புலிகளின் விமானப்படையும் சிம்ம சொப்பனமாக கிலியூட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் சிங்கள அரசின் மொத்தக் குறியும் இப்போது சார்லஸை நோக்கித்தான். சிங்கள ராணுவத்தின் டாங்கிகளை துவம்சம் செய்து தாக்குதல் நடத்திய நாளில், புலிகளின் விமானப்படையும் வானில் சிறுவலம் வந்தது.

மொத்த ஓடுதளங்களையும் கைப்பற்றிவிட்டதாக சிங்கள ராணுவம் கொக்கரித்துக்கொண்டிருந்த நிலையில் புலிகளின் விமானம் எப்படிப் பறந்தது என்று சிங்கள சாதுர்யங்களுக்குப் புலப்படவில்லை. இந்நிலையில், சங்கர், தமிழ் அலை என்கிற இரு கரும்புலிகள் தங்களிடம் சரணடைந்ததாகவும், அவர்கள் சார்லஸின் அபாயத் திட்டங்கள் குறித்துச் சொன்னதாகவும் சிங்கள ராணுவம் தங்கள் தரப்பு பத்திரிகைகள் மூலமாக செய்தி பரப்பத் தொடங்கியது.

தங்களுக்கு எதிராகக் குலை நடுங்கவைக்கும் திட்டங்களை சார்லஸ் தீட்டி இருப்பதாகவும், அதற்காக அப்பாவி மக்களை அவர் மூளைச்சலவை செய்துகொண்டிருப்பதாகவும் சிங்கள ராணுவம் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறது. சார்லஸ் பற்றிய செய்திகளைப் பரப்புவதன் பின்னணியில் சிங்கள ராணுவத்தின் பெரிய அளவிலான சதிகள் இருக்கின்றன!" என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

புலிகள் தரப்பில் நெருக்கமானவர்களிடம் இதுகுறித்துக் கேட்டோம். "வன்னியில் வாழும் மக்கள், சிங்கள அரசை நம்பி அவர்கள் வசம் போக விரும்பவில்லை. அதனால் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலேயே அடுத்தடுத்து பீரங்கி தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ராணுவம் கொன்று அழித்திருக்கிறது.

ராணுவ வற்புறுத்தலால் வன்னியிலிருந்து வவுனியாவுக்குப் போன கர்ப்பிணிகள் கொடுந்துயரத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். கொடூர ஆயுதங்களின் மூலமாக மக்களைக் கொத்துக் கொத்தாக அழிக்கத் திட்டமிட்டிருக்கும் சிங்கள அரசு, மீடியாக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே சார்லஸ் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.

மக்களுக்கு வேண்டிய விழிப்பையும் ஆறுதலையும் ஏற்படுத்த புலிகள் தரப்பிலிருக்கும் தலைவர்கள் மக்கள்வாழ் பகுதிகளுக்கே சென்று பேசுவார்கள். பாலகுமார், கவிஞர் ரத்தினதுரை ஆகியோர் வன்னிவாழ் தமிழ் மக்களிடம் ஆறுதலையும் அன்பையும் பகரும் பணியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் பாலகுமாருக்கு ராணுவத் தாக்குதலில் காயம் ஏற்பட்டது.

இப்போது சார்லஸ் ஆண்டனியே மக்களைச் சந்தித்துப் பேசுகிறார். சிங்கள ராணுவத்தின் ஆயுத வீச்சுக்கு ஆளாகாதபடி தப்பிக்கும் வழிகளையும், அவர்களுக்கு வேண்டிய ஆறுதலையும் தைரியத்தையும் சார்லஸ்தான் எடுத்துரைக்கிறார். அவருடைய வார்த்தைகள் ஈழ மக்களை வீறுகொள்ள வைத்திருக்கின்றன.

இதையெல்லாம் முறியடிக்கும் விதமாகவும், சார்லஸ§க்கு முடிவுகட்டும் விதமாகவும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மீதே ராணுவம் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. பிரபாகரனுக்கு அடுத்தபடியாக சார்லஸ் சகல பணிகளிலும் உச்சம் காட்டுவதை சிங்கள அரசால் ஜீரணித்துக்கொள்ள இயலவில்லை. மொத்த படையணிகளையும் ஒருசேரத் திரட்டி தாக்குதல் நடத்தினால் முல்லைத் தீவு மாவட்டத்தையே கணநேரத்தில் மீட்டெடுக்க புலிகளால் முடியும். இதற்கான திட்டங்களை சார்லஸ்தான் வகுக்கிறார் என்பதுதான் சிங்கள ராணுவத்தின் எண்ணம். அதோடு, புலிகளின் விமானங்கள் மேற்கொண்டு எவ்விதத் தாக்குதலும் நடத்தாதது ஏன் என்றும் அவர்கள் குழம்பிக் கிடக்கிறார்கள். ராணுவத்திடம் வெப்பம், சத்தம், வேகம் ஆகியவற்றை கணித்து இயங்கும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் கைவசமிருக்கின்றன.

புலிகள் பயன்படுத்தும் 'ஸ்லின் -143′ ரக செக் நாட்டு விமானங்களை இனம் கண்டு அழிக்கும் ஃபார்முலாக்களோடு விமான எதிர்ப்பு பீரங்கிகளை சிங்கள ராணுவம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால், அந்த ஃபார்முலாக்களுக்கு நேரெதிரான திட்டமிடலோடு புலிகளின் விமானங்கள் மாற்றி உருவாக்கப்பட்டு வருகின்றன. சார்லஸின் இத்தகைய யுக்திகள்தான் சிங்கள ராணுவத்தைப் பதறவைத்துக் கொண்டிருக்கின்றன. விமானப்படை தாக்குதலை மறுபடியும் புலிகள் தொடங்கும் நாளில்தான் சார்லஸின் மொத்த பலமும் சிங்கள ராணுவத்துக்குப் புரியும்!" என்கிறார்கள் புலிகளின் அனுமான, அனுபவங்களை அறிந்தவர்கள்.

ஈழ ஆர்வலர்கள் தரப்பில் சார்லஸ் ஆண்டனி குறித்து இப்படிச் சொல்லப்பட்டாலும், இலங்கை அரசோ "சார்லஸ் செயல்பாடுகள் குறித்த தகவல்களை நாங்கள் பரப்ப வேண்டிய அவசியமில்லை!" என சொல்லிக் கொண்டிருக்கிறது.

 

http://www.nerudal.com/nerudal.803.html

StumbleUpon.com Read more...

சாத்தான் படை (IPKF)மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஈழத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது

 

khcal03ijtcak3pp6acaz9idc9caciic39cag2kzcfcaf0scjdca3ra6cbca3slxx1caar7kaqcasos0hdca1s73yzca7tu7kwcadzvon5caftcom9caehkehgca64k0kjcazlyt69* அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். [குறிப்பாக உங்களுக்குத் தெரிந்த தமிழக நண்பர்களுக்கு, மக்களுக்கு, ஊடகங்களுக்கு, அரசியற் கட்சியனருக்கு, அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கவும்.]*

* flash:
http://ebook.yarl.com/ipkf/

* pdf zipped:
Part 1
http://www.mediafire.com/?emj0zigyjyu

Part 2
http://www.mediafire.com/?i5tzkzyjfny

Part 3
http://www.mediafire.com/?tz1mvzdgggz

* pdf:
Part 1
http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part1.pdf

Part 2
http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part2.pdf

Part 3
http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part3.pdf

அன்பான உறவுகளே,

தற்போதைய இலங்கையின் போர்ச்சூழல் பற்றி நீங்கள் அறிவீர்கள். திட்டமிட்ட வகையில் நடத்தப்படும் இனவழிப்பு / இனக்கருவறுப்புப் போரில் - ஒவ்வொரு நாளும் - குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் - எந்தவிதப் பாகுபாடுமின்றி - கொத்துக்கொத்தாக கொத்தணிக் குண்டுகளாலும், பொஸ்பரஸ் அடங்கிய எரிகுண்டுகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். "பாதுகாப்பு வலயம்" என அறிவித்து - அங்கும் மக்களை அரக்கத்தனமாகக் கொல்கிறார்கள். சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி - ஆண்கள் பெண்களென வகைபிரித்து - பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிப் பின் கொன்று புதைக்கிறார்கள். புதிய ஆண்டும் அவர்களுக்கு கொலைக்களமாகத்தான் பிறந்தது. இந்த ஆண்டின் இரண்டு மாத காலத்தில் மட்டும் - 1500 க்கும் அதிகமான மக்கள் சிறிலங்கா பேரினவாத அரசால் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஒரு இளம் சந்ததியே - ஒரு புதிய தலைமுறையே - கை, கால் இல்லாத சந்ததியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் - இந்த இன்னல் நிறைந்த காலகட்டத்தில் - தமிழகத்திலிருந்து எழும் ஒவ்வொரு ஆதரவுக் குரலும் புலம்பெயர் மக்களாகிய எமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறதென்பதை நீங்கள் அறீவீர்களோ தெரியாது. உங்களின் ஆதரவான ஒவ்வொரு சொல்லும் எங்கள் கண்ணீரைத் துடைக்க வல்லன. எமக்கு ஆதரவாக நீங்கள் வீதியில் இறங்கும் போதும் - உரக்கக் குரல் கொடுக்கும் போதும் - நாம் நம்பிக்கை கொள்கிறோம். சாதாரண நம்பிக்கையல்ல - சரித்திரம் படைக்கிற நம்பிக்கை.

ஆனாலும் உறவுகளே - இன்னொரு கசப்பான உண்மையையும் நாம் உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம். உங்கள் ஆதரவான நம்பிக்கை தரும் குரல்களுக்கும் மத்தியிலிருந்து - தமிழகத்திலிருந்து - எம்மீது வெறுப்பைக் கக்குகிற சில குரல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை, மீண்டும் மீண்டும் எம்மைக் காயப்படுத்துகின்றன. நாம் காயப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அந்தக் குரல்கள் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவுக் குரலையும் பலவீனப்படுத்திவிடும் என்றே பயப்படுகிறோம். உலகத் தமிழினமே இன்று ஒன்றுபட்டு நிற்கையில் - பகைவளர்க்கும் இந்தச் சில குரல்கள் - தமிழினத்தின் விடுதலையில் கீறல்களை ஏற்படுத்திவிடக் கூடாதென்றே விரும்புகிறோம்.

ஈழத்தமிழர் பிரச்சனை/அவலம் பற்றி நீங்கள் பேசுகிற போதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - உங்களின் வாயை அடைக்கப் பார்க்கிறார்கள். ஈழத்தின் விடுதலை பற்றிப் பேசுகிறபோதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - கொச்சைப்படுத்துகிறார்கள். உங்களின் எழுச்சியை அவர்கள் ஒற்றை வார்த்தை கொண்டு ஒதுக்கிவிடப் பார்க்கிறார்கள். உலகத் தமிழரின் ஒற்றுமையை ஒற்றைவார்த்தையால், சாத்தியமற்றதாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எனவே அன்பான உறவுகளே, எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் சோர்ந்துவிடக்கூடாது - எவருக்கு முன்னும் நீங்கள் தலைகுனியக்கூடாது - உண்மைகளை உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கோடு இந்தப் புத்தகத்தை மின்னூல் வடிவில் உங்கள் முன் வைக்கிறோம்.

ராஜீவ்காந்தியின் கொலையை யார் செய்தார்கள்? அவர் கொலை செய்யப்பட்டது சரியா பிழையா? யார் யாருக்கு அதில் பங்குள்ளது என்பது பற்றியெல்லாம் நாம் இங்கு பேச முனையவில்லை. அவற்றை ஒருபுறம் நாம் ஒதுக்கிவைத்துவிட்டு - எங்கிருந்து எல்லாம் தொடங்கியது என்று பார்த்தால் - சிலவேளை உண்மைகள் புரியக்கூடும். அமைதிப்படை என்கிற பேரில் ஈழத்து மண்ணில் கால்வைத்த இந்திய சாத்தான் படை - எப்படியெல்லாம் ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொலை செய்ததென்பதைப் பாருங்கள். ஈழத்தமிழரின் விடுதலைப் போரைச் சிதைக்க எப்படியெல்லாம் துணைநின்றார்கள் என்பதைப் பாருங்கள். மீண்டும், அதே கொடுமையையும் துரோகத்தையும் - சிங்கள அரசுக்கு உதவுவதினூடாக/சிங்கள இராணுவத்தின் பின்னாலிருந்து யுத்தத்தை நடத்துவதினூடாக - இந்தியா செய்கிறது.

இப்படியான சூழலில் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்புகிற குரலை நசுக்க ராஜீவ்காந்தியின் கொலையைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இதை தொடர்ந்து கவனிக்கிற போது, ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் பேசப்படக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர்களுக்கு தமிழகம் உதவக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படுகிறபோது ராஜீவ்காந்தி கொலை கண்ணுக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவும் - யாரோ திட்டமிட்டு நீண்டகால அரசியல் இலாபத்தோடு இதைச் செய்திருக்கிறார்கள் என்றே உணர முடிகிறது.

இந்திய/தமிழக நண்பர்களே, உறவுகளே, ஊடகங்களே நாம் பழையதை நினைவுபடுத்தி, எமக்குள் உள்ள உறவைக் காயப்படுத்த விரும்பவில்லை. எனினும், உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். உங்களின் ஆதரவுக் குரல்கள் "ராஜீவ்காந்தியின் கொலை" என்கிற ஒற்றை வார்த்தையைக் கொண்டு அடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்புகிறோம். நாம் மீண்டும் மீண்டும் எல்லோராலும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

* அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

http://www.nerudal.com/nerudal.768.html

StumbleUpon.com Read more...

புலிகள் மக்களை வெளிவிடாமல் கேடயமாக வைத்துள்ளார்கள்...?

 
புலிகள் மக்களை வெளிவிடாமல் கேடயமாக வைத்துள்ளார்கள்...? இராஜிவை கொன்றதால்தானே இவ்வளவு பிரச்சினையும்...?
 
இலங்கை இராணுவத்தால் கொடூரமான‌ இன அழிப்பு யுத்தம் ஒரு பக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற‌ அதே வேளையில் இலங்கை அரசு அதிகாரிகளால் ஒரு பெரும் பொய் பரப்புரை யுத்தம் செய்யப்பட்டு வருகிறது. போதாத குறைக்கு இந்திய மத்திய, மாநில அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக மக்களை பல்வேறு வழிகளில் திசை திருப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றனர்.
ஆனால் மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் இலங்கை பிரச்சினையை பற்றித்தான் பேசி தர்க்கம் நடக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர்.களத்தில் நிகழும் போரை விட இந்தக் கருத்துப் போர் மிகவும் அபாயகரமானதாக உள்ளது.
மக்களின் மனதில் எழுகின்ற சந்தேகங்களை தீர்ப்பது அல்லது விளக்கிச் சொல்வது இப்போது மிகவும் அவசியமாகிறது.
புலிகள் ஏன் அப்பாவி மக்களை வெளியே விடாமல் மனித கேடயமாக வைத்துள்ளார்கள்?
ஒன்றை மட்டும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த இடத்தில் நாம் பெண்டாட்டி, பிள்ளைகளுடன் இருந்தால் புலிகளுடன் இருப்போமா? இல்லை இராணுவத்திடம் செல்வோமா? இன்றைக்கு வன்னி மக்களின் உறவினர்கள் உலகம் முழுவதும் 130 நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் போராட்டங்களில் புலிக்கொடியையும், பிரபாகரனின் படத்தையும் வைத்துத்தான் போராட்டம் செய்கிறார்கள். மனித கேடயமாக பயன்படுத்தினால் உலகத்தமிழர்கள் ஒரே நாளில் புலிகளுக்கு எதிராக திரும்பி விடுவார்கள். எதிரியிடம் சிக்கி சின்னாபின்னாமாவதை காட்டிலும் உள்ளே இருப்பதே மேல் என்று மக்கள் நினைக்கிறார்கள். ராஜபுத்திரர்கள் தோல்வியை தழுவும் சூழ்நிலை வந்தால் பெண்கள் அனைவரும் தீயில் குதித்து உயிரை விடுவார்கள். ஆண்கள் பிறந்த மேனியுடன் போராடி வீரமரணம் அடைவார்கள். தமிழினமும் அவர்களை விட வீரத்தில் குறைந்தவர்கள் அல்ல. இந்தியாவும், உலக நாடுகளும்தான் அவர்களுக்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும்.
புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டியதுதானே?
முன்னர் இராஜிவ்காந்தியை நம்பி புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு அமைதிப்படை அவர்களை தாக்கியழிக்க நினைத்தது. ஒரு ஜனநாயக தீர்வு முன் வைக்கப்பட்டு அது இரு தரப்பினராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட பின்புதான் ஆயுதங்களை ஒப்படைப்பார்கள். ஆயுதங்கள் ஒப்படைப்பு என்பது பேச்சுவார்த்தையின் முடிவில் நடப்பது. அதை இப்போதே செய் என்பது மூலம் கட்டாயமாக போரை திணிக்கிறார்கள்.
பாதுகாப்பு வலயத்திற்கு வரும் மக்கள் மீது புலிகள் ஏன் தற்கொலை தாக்குதல் நடத்துகிறார்கள்?
ப‌டையின‌ர் வெளியிட்ட‌ காணொளியில் த‌ற்கொலை குண்டுதாரியின் உட‌லோ, ப‌டையின‌ரின் உட‌லோ காண்பிக்க‌ப்ப‌ட‌வில்லை. இராணுவமே வேண்டுமென்று பெண்களையும், குழந்தைகளையும் குறிவைத்துக் கொன்று விட்டு பழி போடுகிறார்கள். எல்லா தற்கொலைத் தாக்குதல்களிலும் குண்டுதாரியின் உடலையும், படை வீரர்களின் உடலையும் காண்பிப்பவர்கள் இப்போது மட்டும் ஏன் காண்பிக்க வில்லை?
புலிகள் ஏன் சகோதர போராளிகளையும் கொலை செய்கிறார்கள்?
பிர‌பாக‌ர‌ன் 18 அகவையில் இய‌க்க‌த்தை ஆர‌ம்பித்தார். இன்று வ‌ரை 30 ஆண்டு கால‌மாக‌ ம‌க்க‌ளுக்காக‌தான் போராடுகிறார். அவ‌ர் நினைத்திருந்தால் ஏதாவ‌து ஒரு நாட்டுக்குச் சென்று சுக‌மாக‌ வாழ்ந்திருக்க‌லாம். பிற போராளிகள் இலங்கை இராணுவத்துடனும், இந்திய உளவு அமைப்பான 'ரா' வுடனும் கைகோர்த்துக் கொண்டு புலிப் போராளிகளை கடத்துவது , கொலை செய்வது, காட்டிக் கொடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டதால்தான் அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த சண்டையை வளர்த்து விட்டதே இந்திய 'ரா' நிறுவனம்தான். இலட்சக்கணக்கான மக்களையும், ஆயிரக்கணக்கான போராளிகளையும் இழந்து விட்டு சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் போது அதற்கு தடைக்கற்களாக இருந்து குழப்புபவர்களை ஒழிக்காமல் என்ன செய்வது?
இராஜிவ் காந்தியை கொன்றதால்தானே இவ்வளவு பிரச்சினையும் வந்தது?
ப‌ஞ்சு மெத்தையில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌ இராஜிவ் வ‌ர‌லாறு தெரியாம‌ல் ஜெய‌வ‌ர்த்த‌னாவின் பேச்சையும், கூட‌ இருந்த‌ அதி மேதாவிக‌ளின் பேச்சையும் ந‌ம்பி ஈழப் பிரச்சினையில் காலை விட்ட‌தால்தான் இவ்வளவு பிரச்சினையும்.  இந்தியாவில் இராஜிவ் காந்தி ஹீரோ என்றால், இலங்கையில் அவர் வில்லனாகவே நடந்து கொண்டார். சிங்கள வீரன் அடித்த சரியாக பட்டிருந்தால் அவருடைய உயிர் அப்போதே போயிருக்கும்? சிங்களர், தமிழர் இருவருக்குமே அவருடைய நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. இரு தரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமரசம் செய்து வைத்தால் அது நியாயம்.
அதை விடுத்து ஒரு பக்கம் சாய்ந்து இன்னொருவரை அடித்தால் அடிபட்டவன் சும்மா விடுவானா? சமாதானம் செய்து வைக்காமல் இராஜிவ்காந்தி இலங்கைக்கு ஒரு இலட்சம் பேர் கொண்ட படையை அனுப்பினார். அவர்கள் அங்கு 10,000 தமிழர்களை கொன்று குவித்தார்கள். பெண்களின் மார்புகளை அறுத்தெறிந்து, பாலியல் வெறியாட்டம் ஆடினார்கள். புலிகளிடம் அடைந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொன்றுக் குவித்தார்கள். பெண்களும் குழந்தைகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட போது இராஜிவ் காந்தி தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று தனது படைகளுக்கு உத்தரவிட வேண்டியதுதானே? படை வீரர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எதற்குப் படை நடவடிக்கையை எடுக்க வேண்டும்?
உண்ணாநிலைப்போராட்டம் இருந்த‌ திலீபன் 5 சாதாரண கோரிக்கைகளைத்தான் முன் வைத்து அறப்போராட்டம் நடத்தினார். தனி ஈழ கோரிக்கை கூட அவர் அப்போது வலியுறுத்தவில்லை. சிங்களர்களை தமிழர் பகுதியில் குடியேற்ற வேண்டாம், தமிழர்களை சிங்கள காவலர்கள் துன்புறுத்தக் கூடாது என்பனவற்றைத்தான் கேட்டார். இந்திய அரசு நினைத்திருந்தால் ஒரு நொடிப்பொழுதில் அவற்றை நிறைவேற்றி திலீபனை காப்பாற்றி
இருக்க‌லாம். கண்டு கொள்ளாமல் இருந்து அவரை சாகடித்தார்கள். சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த புலித்தளபதிகளை இலங்கை அரசு பிடித்து வைத்த போது காப்பாற்றச் சொல்லி இந்திய அரசை கெஞ்சிய போதும் காப்பாற்ற முன்வரவில்லை. 12 தளபதிகள் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்தார்கள். அமைதிப்படை இலங்கையில் தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை ஈழத்தமிழர்கள் என்றைக்கும் மறக்க மாட்டர்கள்.
இலங்கையின் இறையாண்மையில் இந்தியா எப்படி தலையிட முடியும்?
கிழக்கு பாகிஸ்தானை பிரித்து பங்களாதேஷ் என்ற தனி நாட்டை இந்தியா உருவாக்கவில்லையா? திபெத் மக்களுக்கு மற்றும் தலாய்லாமாவுக்கு அடைக்கலம் தரவில்லையா? அவையெல்லாம் முடியும் போது ஈழம் உருவாக தலையிட முடியாதா? இலங்கை அரசு புலிகளை பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றும் சொல்கிறதே? அதில் எப்படி இந்தியா தலையிட முடியும்? காஸா படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசு இலங்கையை இதுவரை கண்டிக்கவில்லை. ஏனென்றால் இந்திய அரசுதான் போரை நடத்துகிறது.
தனி ஈழம் உருவானால் தமிழக மக்களும் ஈழத்துடன் சேர விரும்ப மாட்டார்களா?
மத்திய அரசு தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஏன் தமிழக மக்கள் வேறு பக்கம் போகிறார்கள். ஆயிரத்தெட்டு போராட்டங்கள், தீக்குளிப்புகள் செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புலிகளை பிடிக்கவில்லையென்றால் அப்பாவி மக்களையாவது காப்பாற்றலாமே? அதுவும் இல்லையென்றால் தமிழக மீனவர்களை தினமும் சுடுகிறதே இலங்கை கடற்படை? அதையாவது தட்டிக் கேட்கலாமே? ஒரு சுண்டைக்காய் நாட்டிற்கு ஒரு வல்லரசின் குடிமக்களை சுடும் அதிகாரத்தை மத்திய அரசுதானே வழங்கி இருக்கிறது. இந்தியாவில் இருந்து கொண்டு இவ்வளவு கத்தியும் ஒரு பயனும் இல்லையென்றால் மக்கள் அவ்வாறுதான் முடிவெடுப்பார்கள்? தமிழர்களின் உயிரை வட இந்தியர்கள் மதிப்பதே இல்லை. செத்த பிறகு கொடுத்த நட்ட ஈடு பணத்தை முன்னமே கொடுத்திருந்தால் ஆப்கனில் கடத்தப்பட்ட தமிழன் சைமன் உயிரை காப்பாற்றி இருக்கலாமல்லவா.........

 

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dPj060ecGG7h3b4P9EW4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP