சமீபத்திய பதிவுகள்

கடுமையாக போராடும் விடுதலைப்புலிகள்: விரக்தியில் விளிம்பில் சிறிலங்கா இராணுவம்

>> Tuesday, March 31, 2009

இராணுவத்தின் முன்னேற்றத்ததை தடுத்து விடாப்பிடியுடன் விடுதலைப் புலிகள் கடுமையாக போராடி வருவதால், நகர முடியாமல் சிறிலங்கா இராணுவத்தினர் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விடும். இலங்கை முழுவதும் சுதந்திர பூமியாகி விடும். பிரபாகரன் அழிக்கப்பட்டு விடுவார். உயிர் தப்ப அவர் சரணடைவதுதான் புத்திசாலித்தனம் என அதிபர் ராஜபக்ச முழக்கமிட்டு 2 மாதங்களாகி விட்டது.

ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு எந்த இடத்தில் இருந்ததோ கிட்டத்தட்ட அதே இடத்தில்தான் இருக்கிறது இராணுவம். காரணம், விடுதலைப் புலிகள் காட்டி வரும் கடும் எதிர்ப்பு.

ஆமை வேக நகர்வு

சிறிலங்கா ராணுவத்தின் முன்னேற்றம் ஒரு ஆமையின் தினசரி நகர்வை விட மெதுவாக உள்ளதாம். அதாவது ஒரு நாளைக்கு 500 மீற்றர் அளவுக்குத்தான் இராணுவம் முன்னேறி வருகிறதாம். அந்த அளவுக்கு புலிகள் கடும் எதிர் தாக்குதலை தொடுத்து தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றனர் இராணுவத்தினரை.

விடுதலைப் புலிகள் தற்போது 21 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுருக்கப்பட்டு விட்டதாக இராணுவம் கூறுகிறது. ஆனால் அந்த பரப்பளவுக்குள் ஊடுருவ முடியாமல் இராணுவம் திணறிக் கொண்டிருக்கிறதாம்.

மேலும் வாசிக்க அழுத்தவும்

StumbleUpon.com Read more...

ஆங்கிலத்தில் வெளிவந்த அருந்ததிராயின் இந்தக் கட்டுரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, இனவதைமுகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்படுகிற போது, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட  மக்கள் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கும் போது, ஒரு இனப்படுகொலை நடக்க இருக்கும் போது ஒரு மாபெரும் தேசம் மரண அமைதி காக்கிறது.
 
இலங்கையைச் சூழ உள்ளவர்களது மௌனம் அங்கு பயங்கரம் படிப்படியாக அதிகரித்து வருவதற்குக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் பிரதான ஊடகங்களில் அது பற்றிய எவ்வித அறிக்கைகளும் வெளியாவதில்லை. உண்மையில் சர்வதேச ஊடகங்களிலும் நிலைமை அவ்வாறு தான் உள்ளது.  அங்கு என்ன தான் நடைபெறுகிறது?  அவை பற்றி நாம் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்?


அங்கிருந்து வடிகட்டப்பட்டு வெளிவரும் செய்திகளினூடாக இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் நாட்டின் ஜனநாயகத்தையே சிதைத்து அழித்து வருவதை அறிய முடிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மேல் சொல்லுந்தரமற்ற குற்றங்களைப் புரிந்து வருகிறது.




மேலும் வாசிக்க அழுத்தவும்

StumbleUpon.com Read more...

கடந்த ஏழு நாட்களில் புதுக்குடியிருப்புச் சமரில் 1,412 படையினர் பலி; 6,123 பேர் காயம்

புலிகளின் அரண்களை உடைத்து நுழைய 7 நாட்களாக சிங்களப்படை கடும் சமர்: முறியடிக்கப்பட்ட புதுக்குடியிருப்புச் சமரில் 1,412 படையினர் பலி; 6,123 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில், விடுதலைப் புலிகளின் முன்னரங்க அரண்களை உடைத்து நுழைவதற்காக சிறிலங்கா படையினர் கடந்த ஏழு நாட்களாய் எடுத்த பாரிய முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள் காட்டி 'புதினம்' வன்னிச் செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியில் இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளின் ஊடாக பாரிய முன்னேற்ற தாக்குதல் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த முன்னேற்ற முன்நகர்வு நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடத்தி வரும் முறியடிப்புத் தாக்குதல்களில் இதுவரை 1,412 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6,123 படையினர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP