சமீபத்திய பதிவுகள்

உலகின் அதி தீவிரவாத ரசாயன குண்டுகளை பயன்படுத்திய இலங்கை

>> Wednesday, April 8, 2009

StumbleUpon.com Read more...

சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பாவித்து சிறிலங்கா தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பாவித்து சிறிலங்கா தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


கடந்த வாரம் புதுக்குடியிருப்பில் சிறிலங்கா இவ்வகையான தாக்குதலை நடத்தியதாக விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான லோறன்ஸ் தமிழ்நெட் இணையத் தளத்திற்கு தெரிவித்துள்ளார்.


கடந்த வாரம் புதுக்குடியிருப்பில் தமது தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் பலர் கொல்லப்பட்டதாகவும், அதில் உயர்மட்டத் தலைவர்கள் பலர் அடங்கியிருந்ததாகவும் அவர்களது உடல்களையும் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா தகவல் வெளியிட்டிருந்தது.


இந்நிலையில் இந்தத் தாக்குதலில் இருந்து தப்பியதாகத் தெரிவித்துள்ள தளபதி லோறன்ஸ், இரசாயனத் தாக்குதலே நடத்தப்பட்டதாக தமிழ் நெட் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
>(சிறிலங்கா இராணுவத்தினரால் அண்மையில் திட்டமிட்டு வெளியிடப்பட்ட படம் இது. விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப் பட்டதாகத் தெரிவித்து வெளியிடப் பட்ட இந்தப் படம் கணனி வரைகலை மூலம் உருவாக்கப் பட்டது என்பதை தமிழ் நெட் இணையத்தளம் ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது)

சர்வதேச ரீதியாகத் தடை செய்யப்பட்ட கொத்தணிக் (கிளஸ்ரர்) குண்டுகளைப் பாவித்தவரும் சிறிலங்கா அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் இரசாயனத் தாக்குதல்களை நடத்தவுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து அதற்கான முகமூடிகள் போன்ற பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் பிரச்சாரங்களை செய்து வந்தது.


இந்நிலையில், அவ்வாறான ஆயுதங்களை சிறிலங்காவே வைத்திருப்பதும், அதனைத் தற்போது பாவித்துள்ளமையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இரசாயன ஆயுதங்கள் பாவிப்பதற்கு முதலாம் உலகப் போருக்கு பின்னர் சர்வதேச ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான இரசாயன ஆயுதங்கள் ஈராக் வசம் இருப்பதாகத் தெரிவித்தே அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்து அந்நாட்டு அரசை ஆட்சியை விட்டு அகற்றியது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


விடுதலைப் புலிகள் மீது இவ்வாறான தாக்குதலை நடத்தியுள்ள சிறிலங்கா அடுத்த கட்டமாக தமிழ் மக்கள் மீது இவ்வாறான இரசாயண ஆயுதத் தாக்குதலை நடத்தலாம் என்ற பேரச்சம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP