சமீபத்திய பதிவுகள்

இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி ராஜபக்ச உண்ணாவிரதம்.

>> Wednesday, April 22, 2009

 

 



வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தை நிறுத்தவும்.இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டியும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடாத்தி வருகிறார்கள்.குறிப்பாக ஜரோப்பிய நாடுகளான இங்கிலாந்து. பிரான்ஸ்.ஜெர்மனி.சுவிஸ்.நெதர்லாந்து.ஆகிய நாடுகளிலும். கனடாவிலும் தொடர்போராட்டங்கள் நடைபெறுவதைத் தொடர்ந்து உலக நாடுகளின் போக்கில் சிறிது மாற்றம் வந்திருக்கின்றது. இந்த நாடுகளும் போரை நிறுத்தச் சொல்லி இலங்கையரசிற்கு அழுத்தமற்ற ஒரு வேண்டுகோளை இலங்கையரசிற்கு வைத்திருக்கின்றன.அதே நேரம் ஜ.நா சபையும் தன்பங்கிற்கு கவலை தெரிவித்துள்ளது. அது தவிர்ந்து மனிதவுரிமை மையம். மற்றும் வேறு மனிதவுரிமை ஆர்வலர்களும் அமைப்புக்களும். ஜ.நா சபையிடமும் இலங்கையரசிடமும் நேரடியாகவே தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.. இதே நேரம் உலகநாடுகள் நேரடியாக தலையிடவிடாமல் தடுத்து தானே நேரடியாக இலங்கையரசுடன் சேர்ந்து இந்த யுத்தத்தினை நடாத்தும் இந்திய அதிகாரத்திடமிருந்து பிரணாப் முகர்ஜியும்..நாராயணனும்... மேனனும் கூட போரை நிறுத்தச்சொல்லி அறிக்கை விட்டுவிட்டார்கள். அதே நேரம் படுகொலை செய்யப்படும் தமிழர்களை நினைத்து சோனியவும்.. மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்து விட்டார்கள். இவர்களையெல்லாம் விடுங்கள் வேற்று நாட்டவர்கள் வேற்று இனத்தவர்கள் வேற்று மொழிக்காரர்கள். ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்.ஆனால் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த முதன்மையான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய கலைஞர் கரணாநிதி அவர்கள்கூட அவரிடம் தொலைபேசி வசதியோ..தொலைநகல் வசதியோ.. மின்னஞ்சல் வசதியோ.. எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூட ஒரு கைத்தொலைபேசி வசதிகூட இல்லாத நிலையில்... இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி இதுவரை மூன்று தந்திகளை சோனியாவிற்கும். மன்மோகன் சிங்கிற்கும். அனுப்பியுள்ளார்.. அதற்கடுத்ததாய் வருகிற 23 ந்திகதி நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் கடந்தமாதம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது ..பொது வேலைநிறுத்தம் என்பது இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது என்று கருணாநிதி சொன்னது யாரிற்காவது நினைவிற்கு வந்தால் அதனை தயவு செய்து மறந்து விடுங்கள்..ஏனென்றால் மக்களின் மறதிதானே தமிழ்நாட்டு அரசியலின் வெற்றி.. இனியென்ன அடுத்ததாக உலகத்தமிழர்கள் அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு செய்தி என்னவெனில் இலங்கையில் போரை நிறுத்தச்சொல்லி மகிந்தராஜபச்சா உண்ணாவிரதப்போராட்டம் என்கிற ஒரேயொரு செய்திதான். அப்படி ஒரு செய்தி வந்தாலும் நாங்கள் ஆச்சரியப்படமாட்டோம்.. ஏனென்றால் அதனையும் போட்டி போட்டு வரவேற்க நம்ம கலைஞர் இருக்கிறார்..

StumbleUpon.com Read more...

கிரகங்களை கண்டறிய டெலஸ்கோப்

கிரகங்களை கண்டறிய டெலஸ்கோப்

சூரிய குடும்பத்தில் இடம் பெறாத 300—--க்கும் மேற்பட்ட கிரகங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஏற்கனவே கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் பூமியைப் போன்ற புதிய கிரகம் ஏதாவது இருக்கிறதா என்று கண்டறிய நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக கெப்ளர் என்ற டெலஸ்கோப் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் விமானப்படை நிலையத்தில் இருந்து ஆளில்லாத ராக்கெட்டில் இது அனுப்பி வைக்கப்பட்டது. இது நட்சத்திர கூட்டமான பால்வீதி மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டு புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும்.

அமெரிக்காவின் புதன் கிரக ஆராய்ச்சி

அமெரிக்கா சூரிய மண்டலத்திலுள்ள வெள்ளி, செவ்வாய் கிரகங்களுக்கும், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கும் விண்கலங்களை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. பூமியும் மற்ற கிரகங்களும் எப்படி உருவாகியது என்பதை அறிய ஆர்வமாக உள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் அதன் ஒரு கட்டமாக 1970--ம்ஆண்டில் சூரியன் அருகிலுள்ள புதன் கிரகத்துக்கு மரீனர்-—10 என்ற விண்கலத்தினை அனுப்பினார்கள். அது அனுப்பிய தகவல்களைக் கொண்டு புதன் கிரகத்தைச் சுற்றிலும் காந்த களம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது மெசஞ்சர் என்ற பெயர் கொண்ட விண்கலம் புதன் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது புதன் கிரகத்தின் மேல்பகுதியில் 200 கி.மீ தொலைவில் இருந்தபடி ஆராய்ந்து தகவல்களை அனுப்பி வைக்கும்.

உலகிலேயே மிக வயதான உயிரினம்

உலகின் மிக வயதான வாழும் உயிரினம் ஒன்று ஐஸ்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 400—-——க்கும் மேல் வயதான அந்த உயிரினம் சிப்பி வகையைச் சேர்ந்த ஒருவகை மீன் (ஷெல் பிஷ்) ஆகும். இது ஐஸ்லாந்து கடலோரப் பகுதியில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உயிரினத்தின் வயதை அதன் ஷெல் மீதுள்ள வளையங்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான ரகசியம் என்ன என்பதையும் வயதாகும் முறையையும் புரிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவில் உருகும் பனிமலை

அண்டார்டிகாவில் அதிக வெப்பம் காரணமாக அதிகளவு பனி உருகி வருவதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. அண்டார்டிகாவை கண்காணித்து வரும் நாசாவின் செயற்கைக்கோள் அனுப்பியுள்ள தகவலின் மூலம் கலிபோர்னியா மாகாணத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புதிதாக அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள் அண்டார்டிகாவில் பனி உருகி வருவதாக 2005--ம் ஆண்டே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

StumbleUpon.com Read more...

ஓ இப்படிக்கூட திருடுவாங்களா?

சென்னை: இதுவரை இல்லாத வகையில் ஏடிஎம் இயந்திரத்தையே சிலர் வேனில் போட்டு திருடிச் சென்று விட்டனர். அந்த இயந்திரத்தில் ரூ. 80,000 பணம் இருந்தது.

இந்தியாவில் எங்குமே நடந்திராத இந்த துணிகர திருட்டு சென்னையில் நடந்துள்ளது.

கீழ்ப்பாக்கம் கார்டன் ஆர்ம்ஸ் ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இதற்கான ஏடிஎம் மையம் சற்று அருகில் உள்ளது.

வங்கிக்கும், ஏடிஎம் மையத்துக்கும் சேர்த்து ஒரே காவலாளிதான் பணியில் இருந்ததாகவும், ஏடிஎம் மையத்தில் காமிரா இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏடிஎம் மையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் வேனில் வந்து உள்ளனர். ஏடிஎம் மையத்துக்கு சென்ற அவர்கள் மையத்தில் பணம் நிரப்பவோ, பழுது பார்க்கவோ வந்தவர்களாக இருக்கலாம் என்று கருதியதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

சிறிது நேரத்தில் இயந்திரத்தின் ஒவ்வொரு பாகத்தையும், அந்த நபர்கள் கழற்றி உள்ளனர்.

பின்னர் ஏடிஎம் பணப் பெட்டியை தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தப்பினர். காலையில் பணம் எடுக்க வந்தவர்கள், ஏடிஎம் மையத்தில் இயந்திரம் இல்லாமல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏடிஎம் இயந்திரம் திருடு போனது குறித்து வங்கியின் கிளை மேலாளர் ஸ்ரீதரன், கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.80 ஆயிரம் இருந்ததாக தெரிகிறது.

வழக்கமாக போலி கார்டுகளைப் போட்டு ஏடிஎம்மில்லிருந்து பணம் திருடுவார்கள். அதிகபட்சமாக வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஆனால் படு துணிச்சலாக ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற சம்பவம் இப்போதுதான் முதல் முறையாக நடந்திருப்பது வங்கிகளையும், பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

StumbleUpon.com Read more...

News 22-04-2009 Deepam TV

StumbleUpon.com Read more...

வலைஞர்மடம் தேவாலயம் மீது சிறிலங்கா படையினர் எறிகணை தாக்குதல்: ஆலய பங்குத்தந்தை படுகாயம்

 
 
வலைஞர்மடம் தேவாலயப்பகுதியை நோக்கி இன்று புதன்கிழமை மதியம் சிறிலங்கா படையினர் வீசிய ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் தேவாலய வளவில் இருந்த பங்குத்தந்தை வண. பிதா ஜேம்ஸ் பத்திநாதர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது:-

இன்று புதன்கிழமை நண்பகல் 12மணியளவில் வலைஞர் மடம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் வாழ்விடங்களையும் தேவவாலயப் பகுதியையும் நோக்கி சிறிலங்கா படையினர் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.

இத்தாக்குதல்களின்போதே குறித்த பங்குத் தந்தை படுகாயமடைந்துள்ளார். இவர் ஒரு பிரபல்யமான கத்தோலிக்க மதகுரு என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக காயமடைந்த மதகுருவை முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமையும் வலைஞர் மடம் தற்காலிக மருத்துவமனை பகுதியை இலக்கு வைத்து  சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் மருத்துவமனை வைத்தியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உட்பட எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் படையினர் பொதுமக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வை மேற்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் படையினரின் தாக்குதல்களில் ஏற்பட்ட ஏனைய  இழப்புகள் பற்றிய விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP