சமீபத்திய பதிவுகள்

பிரபாகரன் முன்னாலே சென்றவரா? அதிர்வின் ஆவேச பதில்

>> Thursday, June 11, 2009






அதிர்வு

StumbleUpon.com Read more...

ராஜபக்செவின் அரசை கண்டித்து சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் சிங்கள கட்சி!

ராஜபக்செவின் அரசை கண்டித்து சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் சிங்கள கட்சி!

nerudal-tamil-news120 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்செ செய்த தவறுதான் இன்றை இலங்கையின் பேரழிவுக்கு காரணம் என்று இலங்கையின் முக்கிய சிங்கள கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

ராஜபக்செவின் இந்த போக்கை கண்டித்து இலங்கை அரசு சுதந்திர தின கொண்டாட்டங்களை புறக்கணிக்கப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க செய்தியாளர்களிடம் கூறியது,'  கடந்த 1987 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி அரசினால் கொண்டவரப்பட்ட 13வது சட்டத்திருத்ததை அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து இன்றைய இலங்கை அதிபர் ராஜபக்செ எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

ஆனால் இப்போது அந்த திருத்தத்தை ஏற்க இருப்பதாக கூறியுள்ளார்.  இந்த சட்ட திருத்தத்தை 20ஆண்டுக்கு முன்பே ஏற்றுக்கொண்டிருந்தால் அதை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் ஏற்றுக்கொண்டிருப்பார்.

20 ஆண்டுகளாக நாட்டில் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளன.  இந்த அழிவுகளுக்கு முழுப்பொறுப்பையும் ஏற்று நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்வரும் பிப்பிரவரி 4 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் அதில் ஐ. தே.கட்சி கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கவுள்ளோம்.  ஐ.தே.கட்சி பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை ராஜபக்செ  இல்லாமல் செய்திருக்கிறார் இதை கண்டித்தே சுதந்திர தினத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்." என்றார்.

StumbleUpon.com Read more...

குளியலறையில் ரகசிய காமிரா பொருத்தி பெண் கைதிகள் குளிப்பதை அதிகாரிகள் படம் பிடிப்பதாகள்

குளியலறையில் ரகசிய காமிரா பொருத்தி பெண் கைதிகள் குளிப்பதை அதிகாரிகள் படம் பிடிப்பதாகள் என்று பெண் கைதி ஜெயந்தி புகார்
 
 
பெண் கைதிகள் குளித்ததை அதிகாரிகள் படம் பிடித்தார்களா?நாளை விசாரணை
 

கேரள மாநிலம் மூவாற்றுபுழா அருகே உள்ள சேர்ந்தமங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் ஒரு வழக்கில் கைதாகி மூவாற்றுப்புழா கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

அந்த ஜெயிலின் குளியலறையில் ரகசிய காமிரா பொருத்தி பெண் கைதிகள் குளிப்பதை அதிகாரிகள் படம் பிடிப்பதாக ஜெயந்தி புகார் கூறினார்.  படம் பிடிப்பதை தட்டிக்கேட்ட தன்னை அதிகாரிகள் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் ஆலுவா கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு நாளை (12-ந் தேதி) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
 
அப்போது ஜெயந்தி தனது மனுவில் சாட்சிகளாக சேர்த்துள்ள பெண் கைதிகள் சிலர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். இதற்கிடையே ஜெயந்தி புகார் தொடர்பாக ஜெயில் உயர் அதிகாரிகள் மூவாற்றுப்புழா ஜெயிலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
இதுபற்றி மூவாற்றுப்புழா ஜெயில் இன்ஸ்பெக்டர் பாபுகுமார்,   "ஜெயந்தி கூறுவதுபோல் ஜெயிலில் காமிரா பொருத்தி படம் எதுவும் எடுக்கவில்லை.


 பல்புகள் பொருத்தக்கூடிய ஹோல்டரில் காமிரா பொருத்தி வைத்திருந்ததாக அவர் கூறி உள்ளார். அதுபோல் ஹோல்டரில் காமிரா பொருத்த வாய்ப்பே இல்லை. எனவே ஜெயந்தி கூறுவது அப்பட்டமான பொய்" என்றார்

StumbleUpon.com Read more...

பிரபாகரன் கண் எதிரே பாலச்சந்திரன் சித்ரவதை :இலங்கை அரசுக்கு மனித உரிமை அமைப்பு வைத்த ஆப்பு

இதுவரை இலங்கை அரசாங்கம் ஊரை ஏமாற்றி தேசிய தலைவர் பிரபாகரனை கொன்று விட்டோம்.அவரது மூத மகன் சார்லஸ் ஆண்டணியையும் கொன்றுவிட்டோம் என்று ஊதிவந்தனர்.ஆனால் அதற்கும் ஒரு படி மேலே போய் இலங்கை அரசாங்கத்
தையும் விட அழகாக பொய் சொல்ல முடியும் என்பதை மனித
உரிமை அமைப்பு நிருபித்து உள்ளது.
அதாவது தேசிய தலைவரின் மூத்த மகனை மட்டும் அல்ல அவரின்
இளைய மகனையும் கொன்றீர்கள்.அதுவும் தலைவரின் கண் முன்பாகவே
கொன்றீர்கள் என்று உதார் விட்டு உள்ளது.
முதலில் தலைவர் அவர்களை உயிருடன் பிடித்திருந்தால் இந்த சிங்கள
காட்டு மிராண்டிகள் அவரை பூபோலவா கொன்றிருப்பார்கள்.அவரின் உடல்
என்று அடையாளம் காட்டப்பட்ட உடலில் ஒரு சிறிய கீரல் கூட இல்லை.
ஒன்றுமே அறிவு இல்லாத பையித்தியக்காரர்களிடம் போய் சொன்னால்
கூட இதை பற்றிக் கேள்வி கேட்பார்கள்.
ஆனால் இணையத்தில் ஒரு சில பைத்தியங்கள் அதையே திரும்ப
திரும்ப ஓதிவருகிறார்கள்.இந்த சாத்தான்கள் இதே வேதத்தை ஓதட்டும்.
ஆனால் காலம் ஒரு நாள் பதில் சொல்லும் அதுவரை காத்திருப்போம்.
பிடித்து வைத்து சித்ரவதை பிரபாகரன் கண் முன்பு மகனை சுட்டு
கொன்றனர் மனித உரிமை அமைப்பு பரபரப்பு தகவல்
ஆனால் பிரபாகரனை சிங்கள ராணுவத்தினர் உயிருடன் பிடித்து வைத்து சித்ரவதை செய்து கொன்றதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. ராணுவ தளபதிகளிடம் இருந்து திரட்டிய தகவல் அடிப்படையில் இதை கூறுவதாக கூறும் அவர்கள் இது தொடர்பாக 48 பக்க அறிக்கை ஒன்றையும் தயாரித்து உள்ளனர்.
பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன்பே அவரை ராணுவத்தினர் உயிருடன் பிடித்தனர். அதேபோல அவருடைய 12 வயது இளைய மகன் பாலச்சந்திரனையும் உயிருடன் பிடித்தனர். பிரபாகரனை ராணுவத்தினர் சித்ரவதை செய்தார்கள். பிரபாகரன் கண் எதிரே பாலச்சந்திரனையும் சித்ரவதை செய்தனர். பின்னர் அவர் கண் முன்பே பாலச்சந்திரனை சுட்டுக்கொன்றனர். அடுத்து பிரபாகரனையும் கொன்றனர்.
ராணுவ மூத்த அதிகாரிகள் நேரடி பார்வையிலேயே இந்த சித்ரவதைகள் நடந்தன. ஆனால் ராணுவ அதிகாரிகள் இதை மறுத்து விட்டனர்.பிரபாகரன் பிடிபட்ட பிறகு மீதம் உள்ள அனைத்து விடுதலைப்புலிகளையும் கைது செய்து பின்னர் அவர்களை ஒட்டு மொத்தமாக சுட்டுக்கொன்றனர்.
பிரபாகரன் மனைவி மதிவதனி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை ராணுவம் மறைக்கிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பேபி சுப்பிரமணியன், கரிகாலன், யோகி, லாரன்ஸ் திலகர், பாலகுமார், இளம்பரிதி, ஈழன் ஆகியோர் ராணுவத்திடம் சரண் அடைந்தனர். அவர்கள் தற்போது அரசு கட்டுப்பாட்டில் உள்ளனர்.


StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP