சமீபத்திய பதிவுகள்

தலைவர் பிரபாகரனை கொன்றது தளபதி பொட்டு அம்மான்?புதுத்தகவல்

>> Monday, June 22, 2009

தலைவர் பிரபாகரனை கொன்றது தளபதி பொட்டு அம்மான்?புதுத்தகவல் பரப்பப்பட்டு உள்ளது.இது போன்ற இன்னும் சிந்துபாத் கதைகள் நிறையவே வரும்.உறவுகள் படித்து இந்த கிறுக்கர்களின் கிறுக்கு தனத்தை அறிந்துகொள்ளுங்கள்.நாள் வரும் அன்று இதற்கெல்லாம் பதில் சொல்லுவோம்
 
 


கொழும்பு, ஜுன்.23-

பிரபாகரன் மரணம் அடைந்தது எப்படி? என்பது குறித்து இலங்கை ராணுவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

பிரபாகரன் மரணம்

இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள வெள்ளமுல்லி வாய்க்கால் பகுதியில் கடந்த மாதம் 18, 19 தேதிகளில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. இதில் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர்.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் பிணமாக கிடக்கும் படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டது.

அதன் பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடல்புலிகள் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டு விட்டதாக ராணுவம் அறிவித்தது. அவர்களில் பிரபாகரனின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் உடல் கைப்பற்றப்பட்ட காட்சிகளை வீடியோவாக எடுத்து ஒளிபரப்பியது.

பின்னர் பிரபாகரனின் முன்னாள் நண்பரான கருணாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து ராணுவத்திடம் சரண் அடைந்தவருமான தயா மாஸ்டர் ஆகியோர் கொழும்பில் இருந்து வன்னி பகுதிக்கு சென்று பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டினார்கள். இதையடுத்து அவர் உடல் பரிசோதனைக்கு பிறகு எரிக்கப்பட்டு சாம்பல் வங்காள கடலில் கரைக்கப்பட்டு விட்டதாக ராணுவ தளபதி பொன்சேகா அறிவித்தார்.

பிரபாகரன் சாகவில்லை என்று முதலில் கூறிவந்த விடுதலைப்புலி இயக்கமும் சமீபத்தில் தனது அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டு, பிரபாகரன் போரில் வீரமரணம் அடைந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டது.

சந்தேகங்கள்

இதையடுத்து பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை ஓய்ந்து விட்டதாக கருதப்படும் நிலையில் இப்போது ராணுவத்தின் தரப்பில் புதிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. பிரபாகரன் எப்படி இறந்தார்? என்பதில் பலவிதமான கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்றும் அவர் ராணுவ தாக்குதலில் உயிர் இழக்க வில்லை, அவருடன் கூடவே இருந்த ஒரு நபர்தான் அவரை சுட்டுக்கொன்று இருக்க வேண்டும் என்றும் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் `ஏசியன் டிரிபிïன்' என்ற ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

நெருக்கமான நபர்

"பிரபாகரனின் மரணம் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக இறுதி கட்ட போரில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளிடம் விசாரித்த போது அவர்கள் சில சந்தேகங்களை வெளியிட்டனர்.

பிரபாகரன் மிக நெருக்கத்தில் இருந்து சுடப்பட்டுள்ளார். அவரை சுட்ட நபர் முன்பக்கத்தில் நின்று சுடவில்லை. பிரபாகரனின் பின் பக்கத்தில் நின்று அவருடைய தலையின் பின்பகுதியில் சுட்டு இருக்கிறார். பிரபாகரன் ராணுவத்துடன் நேருக்குநேர் நடந்த சண்டையில் இறந்து இருந்தால் அவருடைய தலையின் பின் பகுதியில் குண்டு பாய்ந்து இருக்க வாய்ப்பு இல்லை.

பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான, அவருடைய முழுநம்பிக்கைக்கு உரிய, எந்தவித சந்தேகத்துக்கும் உள்ளாகாத ஒரு நபர்தான் இப்படி நெருக்கத்தில் நின்று அவரை சுட்டு இருக்க முடியும்.

கமாண்டோ வீரர்களின் பாதுகாப்பு அரண்

ஏனென்றால் பிரபாகரனை சுற்றி 300 பேர் அடங்கிய தற்கொலை படை எப்போதும் காவல் நிற்கும். அவர்களை தாண்டி எந்த நபரும் பிரபாகரனை நெருங்கவே முடியாது. அந்த படையில் உள்ள அனைவரும் பிரபாகரனால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள். அவருடைய முழு நம்பிக்கைக்கு உரிய கமாண்டோ வீரர்கள். அவர்களுடைய செயல்பாட்டில் பிரபாகரன் எள்ளளவுக்கு கூட சந்தேகப்பட்டது இல்லை. எனவே கொலைகாரன் வெளிநபராக இருக்க வாய்ப்பே இல்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள ஒரு நபரால்தான் பிரபாகரன் கொல்லப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும் முன்பின் தெரியாத ஒரு நபர் பிரபாகரனின் பின் பக்கத்தில் நின்று அவரை சுட்டுக்கொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கமாண்டோ வீரர்களை தாண்டி சென்று பிரபாகரனை நெருங்கக்கூடிய அளவுக்கு அதிகார பலம் உள்ளதோடு பிரபாகரனுக்கு நிழலாக இருக்கக்கூடிய அளவுக்கு செல்வாக்கு பெற்ற ஒருவரால்தான் இப்படி மிகமிக நெருக்கமாக நின்று தலையின் பின்பக்கத்தில் சுட்டு இருக்க முடியும்.

யார் அவர்?

இவ்வளவு தகுதிக்கும் உரிய நபர் யார் என்று ஆய்வு செய்ததில் அவர் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மானாகத்தான் இருக்க முடியும் என்று தெரிய வருகிறது.

பொட்டு அம்மானின் உண்மையான பெயர் சண்முகநாதன் சிவசங்கரன். இவர் உளவுப்பிரிவுக்கு வரும் முன்பு கரும்புலிகள் அமைப்பின் தலைவராக இருந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எத்தனையோ தளபதிகள் இருந்தாலும் பிரபாகரன் பொட்டு அம்மான் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருந்தார். பிரபாகரன் எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதை பொட்டு அம்மான் மூலமாகத்தான் செய்து முடிப்பது வழக்கம்.

ஏப்ரல் மாத இறுதியில் விடுதலைப்புலிகளின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், `தமிழ் ஈழ கனவு சீர்குலைந்து போய் விட்டதே' என்று பொட்டு அம்மான் மன வெறுப்பு அடைந்து இருக்க வேண்டும். அந்த கோபத்தில் இருந்த அவர் கடைசி நேரத்தில் தன்னை காப்பாற்றி கொள்ளும் நோக்கத்தில் பிரபாகரனை பின்பக்கத்தில் நின்று சுட்டுக்கொன்று இருக்க வேண்டும். அதன்பிறகு அங்கிருந்து தப்பி சென்று இருக்க வேண்டும். தன்னை காப்பாற்றி கொள்வதற்காக அவர் துரோகியாக மாறி இருக்கிறார்.

ராணுவத்துக்கு தகவல்

பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு யாரோ ஒரு நபர் ராணுவத்துடன் தொடர்பு கொண்டு பிரபாகரன் இறந்து விட்ட தகவலை தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமின்றி பிரபாகரன் உடல் எந்த இடத்தில் கிடக்கிறது என்ற விவரத்தையும் கூறியிருக்கிறார்.

உடனடியாக ராணுவம் சம்பவ இடத்துக்கு சென்று பிரபாகரன் உடலை கைப்பற்றி இருக்கிறது. அப்போது கூட ராணுவம் அது பிரபாகரன் உடல்தான் என்பதை நம்பவில்லை. கருணாவை வரவழைத்து அவர் கருத்தை கேட்ட பிறகே பிரபாகரன் உடலை உறுதி செய்தது.

பொட்டு அம்மான் எங்கே?

பொட்டு அம்மான் போரில் இறந்து விட்டதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அவருடைய உடல் இதுவரை கைப்பற்றப்பட வில்லை. அவர் இறந்து விட்டாரா? அல்லது உயிரோடு இருக்கிறாரா? உயிரோடு இருந்தால் எங்கே இருக்கிறார்? அவருடைய நோக்கம் என்ன? என்பது விடை காண முடியாத கேள்விகளாக உள்ளன.''

இவ்வாறு ஏசியன் டிரிபிïன் தனது செய்தியில் கூறியிருக்கிறது.

 

StumbleUpon.com Read more...

ராணுவம் பரபரப்பு தகவல்:விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மக்களுடன் மக்களாக உள்ளனர்

விடுதலைப் புலிகளின் கிழக்கு தலைவர்கள் ராம் மற்றும் நகுலன் மக்களுடன் மக்களாக – பாதுகாப்பு தரப்பு

விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அணிகளுக்கு தலைமை தாங்கிய ராம் மற்றும் நகுலன் ஆகியோர் மக்களுடன் மக்களாக மறைந்திருப்பது குறித்து தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக இராணுவப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளி பிரதேசத்திற்குள் சென்றுள்ள இந்த தலைவர்களுடன் 5 அல்லது 6 பேர் கொண்ட அணியே எஞ்சியிருப்பதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புலிகளின் இந்த தலைவர்களின் தொலைபேசி உரையாடல் ஒன்றையும் படையினர் செவிமடுத்துள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

StumbleUpon.com Read more...

போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. (தமிழீழ தேசியத் தலைவர்.)

தமிழீழ உறவுகளே ஒரு நிமிடம்.

 

இந்த 2009ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எம்மினத்தின் அழிவு அதிகரிக்கத் தொடங்கி, இருபதாயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளுடனும், கணக்கிடமுடியா சொத்திழப்புகளுடனும் போர் முடிவுக்குவந்ததாக சிறிலங்கா பேரினவாத அரசு அறிவித்தது. அத்தோடு முப்பதாயிரம் வரையானவர்கள் உடலுறுப்புக்களை இழந்திருக்கிறார்கள்.

ஆனால் எத்தனை பேர் இது வரை காணாமல் போனார்கள், எத்தனைபேர் பாலியல்; வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்கள், இன்னும் எத்தனைபேர் உளநலம் பாதிப்படைந்தார்கள் என்பதெல்லாம் தெரியாத கணக்காகவே இருக்க!

தமிழன் தன் தாய் மண்ணையும், பல மாவீரர்களையும் இழந்திருக்கும் நிலையில் இருக்க!

உலகமோ, அழிக்கும் பௌத்த அரசின் பின்னால் நிற்க!

காந்தீயம் காசு நோட்டில் மட்டும் இருந்து சிரிக்க!

புலம் பெயர் நாடுகளிலெல்லாம் உண்ணாவிரதங்களும் வழி மறிப்புப் போராட்டங்களும் நடந்து கொண்டிருக்க!

சில மனிதர்கள் மட்டும் தாங்கள் ஏதோ வேற்றுக்கிரக மனிதர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்.

தமிழனுக்கு 2009ம் ஆண்டே ஒரு துக்க ஆண்டாகத்தான் இருக்கவேண்டும்.

ஆறாத துன்பத்தில் ஈழத்தில் மக்கள் இருக்க, புலம் பெயர் நாடுகளில் தமிழன் தனக்கு நடந்ததை எல்லாம் மறக்கத் தொடங்கிவிட்டான்.
மீண்டும் கோடைகாலக் கொண்டாட்டங்கள், களியாட்டங்கள் ,மலிவு விற்பனை என்பன கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்துவிட்டன.

சிறிலங்கா அரசால் படு கொலைசெய்யப்பட்ட உடலங்கள் எரிக்கப்படவோ தாக்கப்படவோ இல்லாமல் அழுகிக் கொண்டிருக்க,

எரி குண்டுகளால் எரிந்தும் எரியாத பிணங்களின் புகைப்படங்கள் இன்னும் கண்களில் தெரிய! மருந்தும், பாலும், ஏன் நீர் கூட இல்லாமல் இறந்த குழந்தைகளின் ஒளிப்படங்கள் இன்னும் கண்களில் மறையாமல் இருக்க, எப்படித் உறவுகளே உங்களால் கொண்டாட்டங்கள் செய்ய முடிகின்றன.

"ஊர் கூடித் தேர் இழுத்து" என்ற ஓர் வாசகம் தமிழில் உண்டு. ஈழத்தில் ஊர் ஊராய் தமிழன் இறந்து போனான். இன்னும் இறந்து கொண்டிருக்கிறான், இன்னும் இறப்பான். பெண்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படியான சூழ் நிலையில் எப்படி உங்களால் தேர் இழுக்க முடிகிறது புலம் பெயர் தேசத்தில்!

ஏதோ மனச்சாந்தி, இறந்தவர் ஆத்ம சாந்தி என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே காரணம் சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால் தமழிர்களே!

மன்னிப்பதும் மறப்பதும் மனித குணம் என்றும் சொல்லலாம். ஆனால் எமது எதிரி எம்மை என்றும் மறந்தது கிடையாது.

அவன் ஆட்சிக்கு வந்தாலும் மறக்காமல் எம்மைக் கொல்கிறான். எம் இனத்தை அழிக்கும் விடயத்தில் தங்கள் பேதங்கள் பகைமைகள் எல்லாவற்றையும் மறந்து ஒற்றுமையாக இருக்கிறான். ஆனால் அழிவின் பின்பும் நாம் தான் பிழவு பட்டு நிற்கிறோம்;.
இன்னும் ஒரு படி மேலே போய் சந்தோசமாக இருக்க நாம் முயற்சியும் செய்கிறோம். அடிவிழுந்த காயம் ஆறுமுன்னே! திருவிழாவும், தேரும் இழுக்கத் தொடங்கிவிட்டோம். நம்மைப் பார்க்கும் வேற்றினத்தவன் நம்மைப்பற்றி என்ன விளக்கம் கொள்வான்! போனவாரம் பட்டினிப் போராட்டம், இந்த வாரம் கோவிலில் அன்னதானம்.

என்ன இனம் இந்த இனம் என்று எண்ணமாட்டானா?

போனவாரம் வரை மக்கள் அழுத-அலறிய ஒளிக்காட்சிகளைப் பார்த்தமக்கள், இன்று விழாக்கோலம் போடத் தொடங்கிவிட்டனர்.

போர் முடிந்தது என்ற எண்ணிவிட்டோமா? அல்லது ஈழம் தான் கிடைத்துவிட்டது என்று எண்ணிவிட்டோமா?

மறைந்த தமிழன் எத்தனை என்று இன்னமும் தெரியவில்லை. தன்னுயிர் ஈர்ந்த மாவீரர்களின் விபரங்கள் இன்னமும் தெரியவில்லை. முகாம்களில் கைதாகும் இளவயதினர் எங்கு எடுத்துச் செல்லப்படுகின்றார்கள், என்ன ஆகின்றார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை. காயமடைந்து வந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதும் தெரியவில்லை.

இப்படி எதுவுமே வெளிவராமல் இருக்க எப்படி எம்மால் எல்லாவற்றையும் மறக்க முடிகிறது.

உறவுகளே அழும் காலமல்ல இது?
நீங்கள் அழுது அழுது உங்கள் துயரங்களை ஆற்றிக் கொள்ள வேண்டாம்.

"அந்நியன்"; என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி.

பிரகாஷ்ராஜின் தமையனை கொதிக்கும் எண்ணையில் போட்டு கொன்று விடுவான் அந்நியன். இதை அறிந்த பிரகாஷ்ராஜ் அழாமலேயே இருப்பார். தாய் சொல்லுவாள் நீ அழவே இல்லையே என்று. அதற்கு அவர் சொல்லுவார் "அழுதால் துக்கம் வெளியில் போய்விடும் – துக்கம் வெளியில் போனால் கோபம் கலைந்து விடும் – துக்கம் வெளியில் போகக் கூடாது – மனதுக்குள்ளேயே தேக்கிவைக்கிறேன் என்று"

அதே போல் உங்கள் கோபங்கள் வெறியாக மாறவேண்டும். அது இந்த சர்வதேச மௌனிகளின் இதயத்தை திறக்கவேண்டும்.
இனப்படுகொலை நடந்தது என்பதை, நடக்கிறது என்பதை இங்குள்ள மக்களுக்கும், மந்திரிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். மக்கள் துயரங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும். கைதானவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தரப்படவேண்டும். அகதி முகாம்களில் அவதிப்படும் மக்களுக்கு மறு வாழ்வு வழங்கப்படவேண்டும்.

இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழனுக்கு ஒரு நல்லாட்சி, சுய ஆட்சி, அமைய வேண்டும்.
இப்படி எவ்வளவோ செய்ய இருக்க நாங்கள் எமது கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், தேரோட்டங்கள், மலிவு விற்பனை என்று நமது மனங்களை மாற்றுச் செயல்களில் செல்ல அனுமதிக்க வேண்டாம். அத்தோடு எமது நேரத்தையும் பணத்தையும் அதற்கு செலவு செய்யவும் வேண்டாம்.

நாம் பறி கொடுத்த உயிர்களுக்கு, நாம் வளங்கும் மரியாதை இதுவாகத்தான் இருக்கும்;.
தம் உயிரை ஈகம் தந்த மாவீரருக்குச் செய்யும் வணக்கமும் இதுதான்.

அந்நிய மண்ணில் நாம் மகிழ்ச்சியாக இருந்தால், அதை, எதிரி எடுத்துக் காட்டும் உதாரணமாகவும் மாறக் கூடும்.

ஆகவே உறவுகளே! கொண்டாட்டங்கள் இப்போது வேண்டாம்.
கனவுகள் நனவாகும் காலத்தில் அவற்றை பல மடங்கு பெரிதாகச் செய்வோம்.
அது வரை தமிழீழ தேசத்திற்காக உழைப்போம் உழைப்போம் உழைப்போம்.

போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. (தமிழீழ தேசியத் தலைவர்.)
பிரான்சிலிருந்து ரத்னா.

StumbleUpon.com Read more...

நாடு கடந்த அரசாங்கம்! இலங்கை அரசுக்கு புதிய தலையிடியைக் கொடுத்துள்ளது

 
 
நாடு கடந்த அரசாங்கம் என்ற சொல் தற்போது இலங்கை அரசியலிலும் கேட்கத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டு நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையிலேயே தற்போது இந்த "நாடு கடந்த அரசாங்கம்" என்ற சொல் அரசுக்கு புதிய தலையிடியைக் கொடுத்துள்ளது.

"நாடு கடந்த அரசாங்கம்" என்ற சொற்பதம் குறித்து அறிந்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. "நாடு கடந்த அரசாங்கம்" என்றால் என்ன? அதன் செயற்பாடுகள் எவை? அந்த நாட்டுக்கான அங்கீகாரம் எப்படிக் கிடைக்கும், அந்த நாட்டின் தலைவர் யார்? என்பது போன்ற பல கேள்விகள் இன்று இலங்கை மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

எனவே, நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பாக ஆராவதை விடுத்து பொதுவாக "நாடு கடந்த அரசு' என்றால் என்னவென்பதை பார்ப்போம்.

இன்று உலகில் பல, நாடு கடந்த அரசாங்கங்கள் (Provisional Transnational Government) செயற்பட்டு வருகின்றன. இந்த நாடு கடந்த அரசின் முதல் வித்தாக பெலாரஷ்யன் தேசிய குடியரசு காணப்படுகின்றது.

நாடு கடந்த அரசாங்கம் என்பது அரசியலில் ஈடுபடும் அல்லது ஒரு குழுவினர் சொந்த நாட்டில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசொன்றை நிறுவுவதாகும். காலப்போக்கில் இந்த அரசாங்கமானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று ஆட்சி அதிகாரங்களை மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவதே இந்த நாடு கடந்த அரசாங்கமாகும்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தை பிரயோகிப்பது, சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவது, இன அழிப்பு செவது, பெண்கள் மீதான பாலியல் வன்முறை,சிறுவர்களை கடத்துவது போன்ற கொடூரங்களும் குறிப்பிட்ட இனத்தின் அரசியல் தலைவர்களை புறந்தள்ளல் போன்ற நிகழ்வுகளும் நாடு கடந்த அரசொன்றை நிறுவ சர்வதேச சட்ட மரபு நெறிகளில் இடம் வழங்குகின்றன.

இரண்டாம் உலகப் போரில் பல ஐரோப்பிய நாடுகளை ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிப்படைகள் கைப்பற்றியதனால் பல ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இவ்வாறான நாடு கடந்த அரசாங் கத்தை நடத்தி வந்தனர். இதனால் அவர்களின் தேசியம் பாதுகாக்கப்பட்டது.

1920ஆம் ஆண்டில் பெலாரஷ்யன் என்ற அமைப்பு தனது நாடு பெலாரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்றுவரை நாடுகடந்த அரசாங்கமாகவே இயங்கிவருகின்றது. இதேபோன்று திபெத்தை சீன அரசு ஆக்கிரமிப்பு செதபோது அந்நாட்டின் ஆன்மிகத் தலைவர் தலாலாமா இந்தியா சென்று இன்றுவரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடத்தி வருகின்றார்.

உலகில் இன்றுவரை 11 ற்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன.

அப்காஷியா சுயாட்சிக் குடியரசு (1993), பெலாரஷ்யன் தேசிய குடியரசு (1920), கபின்டா குடியரசு (1975), செச்சென் குடியரசு (2000), எதியோப்பியா அரச சபை (1993), ஈரான் ஏகாதிபத்திய அரசு (1979), லாவோ ஏகாதிபத்திய அரசு (1975), சகாராவி அரபு ஜனநாயகக் குடியரசு (1976), சேர்பியன் கரஜினா குடியரசு (2005), மலுகு செலாற்றன் குடியரசு (1950), மத்திய திபெத்திய நிர்வாகம் (1959) போன்றவை நாடுகடந்த அரசாங்கங்களாக செயற்படுகின்றன.

இந்த நாடு கடந்த அரசாங்கங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நாடுகளாக அப்காஷியா, பெலரெஸ், அங்கோலா, ரஷ்யா, எதியோப்பியா, ஈரான், லாவோ, மொறாக்கோ, குரோஷியா, இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகள் காணப்படுகின்றன.

இவ்வாறான நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளாக, சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது, தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுப்பது, தேசியத்தின் சட்டமுறைகளை பாதுகாப்பது, ஒரு தேசிய இராணுவத்தை பாதுகாப்பது அல்லது கட்டி எழுப்புவது, இராஜதந்திர ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக நாட்டின் தேசியத்தை ஒன்றுபடுத்தல், தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை உருவாக்குதல், தேர்தல் நடத்துதல் போன்றவை உள்ளன.

நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைக்க ஏதாவது ஒரு வெளிநாட்டின் அங்கீகாரம், அல்லது அனுமதி தேவை. அவ்வாறு கிடைக்குமிடத்து அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு பாதிப்போ இடையூறுகளோ ஏற்படாதவிடத்து நாடு கடந்த அரசாங்கமொன்றை அந்த நாட்டில் நிறுவ முடியும்.

இவ்வாறு வெளிநாடுகளில் அமைக்கப்படும் நாடு கடந்த அரசாங்கமொன்றினால் தமது அரசின் தூதுவர்களை நியமிக்க முடியும். வெளிநாட்டு அரசாங்கங்களுடன் ஒரு நாட்டு அரசாங்கம் என்ற தகுதியுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடமுடியும். ஒரு நாட்டுக்குரிய சகல அதிகாரங்கள், நடைமுறைகளும் இந்த நாடு கடந்த அரசாங்கங்களுக்கும் உண்டு.

பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமது சமுதாயத்தினை அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, பண்பாட்டு ரீதியில் பலப்படுத்தவும் தமது சொந்தமண்ணில் அரசுரிமையை பெறுவதற்கும் சர்வதேச சவால்களை அதே ரீதியில் அணுகுவதற்கும் இந்த நாடு கடந்த அரசாங்கம் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இதேவேளை ஒரு நாடு கடந்த அரசாங்கமானது சிறப்பாக செயற்பட ஒரு நாட்டின் அனுமதி அல்லது அங்கீகாரம் தேவை. அனுமதி அல்லது அங்கீகாரம் தரும் நாடு சில வேளைகளில் அவற்றை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் அதிகாரம் இழக்கப்படக் கூடும்.

இவ்வாறானதொரு அரசாங்கத்தையே அமைக்கப் போவதாக தற்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரெனக் கூறப்படும் கே.பத்மநாதன் அறிவித்துள்ளதுடன் நாடுகடந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கான செயற்குழு ஒன்றையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராகவிருந்த விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் அமைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

1976 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனத்தினதும் 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும் பின்னர் 1985 ஆம் ஆண்டில் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும் 2003 ஆம் ஆண்டில் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப் பகிர்வின் தளமாக அமைந்துள்ளதுமாகிய தமிழர் ஓர் தேசிய இனம், வடக்கு, கிழக்கு தமிழரின் தாயக நிலம், ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை, ஈழத்தமிழரின் அரசியல் அபிலாஷைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ்மக்களையும் ஓரணியில் ஒன்றிணைப்பதே இந்த "நாடு கடந்த அரசாங்கம்' என்ற அறிவிப்பின் நோக்கமாகவுள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கமோ " இது ஒரு கற்பனை'யென்றும் இதனை கற்பனையில் வைத்தே தாம் அழித்துவிடுவோம் என்றும் கூறியுள்ளது. அத்துடன் சகலநாடுகளிலுமுள்ள தமது வெளிநாட்டுத் தூதுவர்களை இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளதுடன் இத்திட்டத்தை முறியடிக்க சகலவித இராஜதந்திர நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

source:http://www.tamilwin.com/view.php?2aSWnLe0dHj060ecQG7D3b4t9EE4d3g2h2cc2DpY2d426QV3b02ZLu2e

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP