சமீபத்திய பதிவுகள்

கிரிக்கெட் கேம் ஒரு பொய் கேம்ங்க......புது வித பரபரப்பு தகவல்கள்

>> Saturday, August 22, 2009


  • கையில் ball வைச்சுகிட்டே no ball-னு சொல்லுவாங்க.
  • over-னு சொல்லிட்டு over மேல overa போடுவாங்க.
  • all out-னு சொல்லுவாங்க ஆனா 10 பேருதான் out ஆகி இருப்பாங்க.
  • ஒரு over-க்கு 6 ball-னு சொல்லிட்டு ஒரே ball-தான் வைச்சிருப்பாங்க.
  • ஒரு பேட்ஸ்மேன் out-னா ஒரு கையை துக்குறாங்கா
  • அப்போ இரண்டு கையை தூக்கினா இரண்டு பேட்ஸ்மேன் out தானே? ஆனா six-னு சொல்லுறாங்க


என்ன கொடுமை சார் இது!!

அடிக்க வர்ரதுக்குள்ள... ஓடி போயிடுறேன்..
 
நன்றி:ஈகரை

StumbleUpon.com Read more...

புலிகளுடனான போரில் 14,000 இராணுவத்தினர் கால்களை இழந்துள்ளனர்

 
 

விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைப்பெற்ற போரில் 14 ஆயிரம் படையினர் தமது கால்களை இழந்துள்ளனர் என்று செயற்கைக் கால்களைத் தயாரிக்கும் அவாஸ் இன்டர்நெஷனல் என்ற அமைப்பு சேகரித்துள்ள தரவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. 
 
படையினருக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் பணியினை இந்த அமைப்பு எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. கால்களை இழந்தவர்களில் ஒரு காலை மற்றும் இரண்டு கால்களையும் இழந்தவர்களும் அடங்குவர் என்று தெரிய வருகின்றது. 
 
இது பற்றி இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் வினவியப்பொழுது இந்த எண்ணிக்கை பற்றி உறுதியான தகவலை தெரிவிக்க மறுத்து விட்டார்.
 

StumbleUpon.com Read more...

அமெரிக்கா எச்சரிக்கை:மீள்குடியேற்றத்தில் முன்னேற்றம் இல்லை எனில் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை சிறிலங்கா இழக்கும்

மீள்குடியேற்றத்தில் முன்னேற்றம் இல்லை எனில் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை சிறிலங்கா இழக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை
 
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை சிறிலங்கா இழக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என அமெரிக்கா கடுமையாக எச்சரித்திருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசு தோற்கடித்திருப்பதை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்த அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளரும், சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவருமான றொபேர்ட் ஓ பிளேக், "இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை உடனடியாக சிறிலங்கா அரசு மீளக்குடியமர்த்துவதுடன், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனவும் வலியுறுத்தினார். 
 
அனைத்துலக சமூகத்தினால் சிறிலங்கா மதிக்கப்படுவதாகத் தெரிவித்த பிளேக், அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் மட்டுமன்றி, கடன் வழங்கும் நாடுகள், உதவி நிறுவனங்கள் மற்றும் அனைத்துலக மனிதார்ந்த நிறுவனங்களும் மீள்குடியேற்றம் தாமதமாவதையிட்டு தமது கரிசனையை வெளியிட்டு வருவதாகவும் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 
 
மீள்குடியேற்றத்தில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் சிறிலங்கா அரசு மேற்கொள்ளவில்லை என்றால், சிறிலங்காவுக்கான உதவிகளை அமெரிக்கா தடுக்குமா எனக் கேட்கப்பட்ட போது, சிறிலங்காவுக்கு அதிகளவு மனிதார்ந்த உதவிகளைக் கொடுக்கும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்காவே இருப்பதாகத் தெரிவித்தார். 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
 
"இருந்தபோதிலும் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றில் சிறிலங்கா அரசு எந்தளவுக்கு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பதில் சிறிலங்காவுக்கான எதிர்கால உதவிகள் தங்கியிருக்கலாம்" எனத் தெரிவித்தார்.

  

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP