சமீபத்திய பதிவுகள்

போர் முனைக் காயங்களோடு வன்னியிலிருந்து சோகத்தை சுமந்து வந்த மாணவர்கள்!

>> Friday, October 9, 2009

 

stவன்னிப் போருக்குப் பின்னர் அகதிகள் பிரச்சினையே எல்லோருடைய கவனத்திலும் முழு இடத்தையும் பிடித்துள்ளது. இந்த அகதிப் பிரச்சினையினுள்ளே ஏராளம் துயரமிக்க சங்கதிகள் உண்டு. உறவுகளை இழந்தோர், உறவுகளைப் பிரிந்தோர், உடல் உறுப்புகளை இழந்தோர், தொழில் வாய்ப்புகளை இழந்தோர், கல்வியைத் தொடரமுடியாதோர் என பல வகைகளிலும் பாதிப்புகளையும் கவலைகளையுமுடைய சங்கதிகள் இவை. மீள் குடியமர்வின் மூலமே இவற்றில் பலவற்றுக்கான தீர்வினைக்காண முடியும். அது உண்மையே. ஆனால், மீள் குடியமர்வு குறித்து எவராலும் ஒரு சரியான திட்ட வரைபு செய்ய இல்லாதவிடத்து சில தீர்வுகள், சில பரிகாரங்கள் நடப்பது வரவேற்கத்தக்கது.

அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 57 மாணவர்கள் நலன்புரி முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டு கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் கதியும், கதையும் மிகவும் சோகமானதும் வியப்பானதுமாகும்.

இவர்களில் சிலர் ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று இடையில் தொடர முடியாமல் போனவர்கள். சிலர் இறுதி ஆண்டு மாணவர்கள். வேறு சிலர் கடந்த ஆண்டில் கல்வியை ஆரம்பித்திருக்க வேண்டியவர்கள். இன்னும் சிலர் இந்த வருடம் ஆரம்பிக்கவுள்ளவர்கள். எல்லோரும் வன்னிப்போர் மற்றும் அதன் விளைவான நிலைமைகளினால் பெரும் இடைஞ்சற்பாடுகளில் சிக்கியிருந்தவர்கள். போதாக்குறைக்கு இடைத்தங்கல் முகாம் வாழ்க்கை வேறு. இப்போது யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரவும் ஆரம்பிக்கவும் உள்ளனர். இவர்கள் வவுனியா முகாம்களில் இருந்தே வந்துள்ளனர். இதைப்போல இன்னும் பல மாணவர்கள் புல்மோட்டை மற்றும் யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள முகாம்களில் உள்ளனர். அவர்கள் எவரும் இதுவரை அழைத்துவரப்படவும் இல்லை. கல்வியைத் தொடரலாம் என்று உத்தரவாதப்படுத்தப்படவும் இல்லை.

இப்போது வவுனியாவிலிருந்து வந்திருக்கும் 57 மாணவர்கள் கல்வியைத் தொடருவதற்கு வாய்ப்புக் கிடைத்திருந்தாலும் அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் ஏராளம். முதலில் பலர் போர்க்காயங்களுக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள். இந்தக் காயங்கள் இரண்டு வகை. ஒன்று உடற்காயம், இரண்டாவது மனக்காயம். அதாவது உளரீதியான பாதிப்பு. குறிப்பாக மருத்துவ பீடத்துக்குரிய மாணவர் ஒருவர் இரண்டு கால்களுமே இல்லாதிருக்கின்றார். வேறொரு மாணவர் நடக்க முடியாத நிலையிலிருக்கின்றார். வேறொரு மாணவர் பெற்றோரை இழந்திருக்கின்றார். இன்னொருவருக்கு குடும்பத்தில் யாருமே மிஞ்சவில்லை. எல்லோரையும் போர் தின்றுவிட்டது. சித்தங்கலங்கிய நிலையில் வேறுசிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய கடினமான நிலையிலேயே இவர்கள் தமது கல்வியைத் தொடரவுள்ளனர். இதன் பின்னாலுள்ள கதியும் நிலையும்தான் இங்கே முக்கியமானது. போரில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட இவர்கள், பின்னர் அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். போர் எல்லாவற்றையும் ஏற்கனவே தின்றுவிட்டது. போதாக்குறைக்கு அது அவர்களை எவ்வளவுக்கு உறிஞ்ச முடியுமோ அந்த அளவுக்கு உறிஞ்சிவிட்டது. எனவே, "வெறும் நடைபிணமாகி" வெளித்தள்ளப்பட்டுள்ள இவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு பொருளாதார வசதிகள் இல்லை; போதிய உடைகள் இல்லை; உறவினர்களுடன் தொடர்பு கொள்வதற்கான வசதிகள் இல்லை என்ற நிலையில் இருக்கின்றார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் இவர்களுக்கான உதவிகளுக்காக "முதலுதவி" என்ற அளவில் சிறு உதவியை மட்டுமே அளிக்கும் நிலையில் உள்ளது. ஆனால், இவர்களின் தேவையோ பெரியது. நிலைமையோ மிகவும் சோகமானது. எனவே, இவர்களுக்கான உதவிகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.

இந்த மாணவர்களுக்கு பிரத்தியேகமான வகையில் உதவிகளை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். போரின் போதும் சரி, போர் ஓய்ந்த பின்னர் முகாம்களில் இருந்த போதும் சரி இவர்களுடைய குடும்பங்கள் உழைப்போ வருமானமோ இல்லாத நிலையிலேயே கடந்த இரண்டாண்டுகளாக இருந்தன. இப்போதும் அதுதான் நிலைமை. எனவே, குடும்பத்தினரிடமிருந்து எந்த உதவியும் பெற முடியாது. இது பற்றி அரசாங்கத்துக்கு எதுவுமே தெரியாததொன்றல்ல. இதே இடத்தில் சிங்கள மாணவர்கள் இருந்திருந்தால் அவர்களுக்கான உதவிகளையும் பிற ஏற்பாடுகளையும் அரசாங்கம் எவ்வாறு செய்திருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். இந்தவிதமான அணுகுமுறைதான் இலங்கையின் ஐக்கியத்துக்குச் சவாலான விடயங்களாகின்றன.

வருங்காலத் தலைமுறையினரின் இதயங்களை வெல்வதற்கான வழி முறைகளை உருவாக்காத வரையில் வெறும் வார்த்தைகளினால் எந்தப் பயனும் கிட்டிவிடாது. அரசாங்கத்தின் உதவிகள் கிட்டுமா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இந்த மாணவர்களுக்கு உதவுவதற்கு தமிழ்ச் சமூகம் முன்வர வேண்டும். குறிப்பாக இந்த மாணவர்களில் சிலர் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர்கள். போர்காரணமான மிக இளவயது திருமணங்களில் துணையை இழந்த மாணவிகளும் உள்ளனர், மாணவர்களும் உள்ளனர். இவை எல்லாவற்றுக்குமான உதவியாக தமிழ்த் தரப்புகள், தமிழ் அமைப்புகள் ஏதாவது செய்வது அவசியம். புலம் பெயர் மக்களோ மாணவர் தரப்புகளோ கூட இது குறித்து கனதியாக சிந்திப்பது தேவை.

இந்த மாணவர்களைப் போல, இன்னும் வேறு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானோரும் உள்ளனர். அவர்களின் நிலைமையும் இதுதான். இன்னும் பள்ளிக் கல்வி, கல்வியியற் கல்லூரிக் கற்கை என்று அங்கெல்லாம் சென்று படிக்கவேண்டியவர்களின் கதியும் இதேதான். எனவே, கல்வியை மதித்துப் போற்றும் பண்புள்ள நமது சமுதாயம் இவர்களின் கல்விக்கு உதவவேண்டும்.

"ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்" என்ற கோட்பாட்டுடன் இயங்கும் "யுனிசெவ்" அமைப்பிடம் கூட இதற்கான இந்த நிலைமைக்கான தீர்வு நோக்கிய வேலைத்திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறே "சேவ் த சில்ரன்" அமைப்பும் உள்ளது. ஆகவே, பிறரின் கைகளை நம்பியிருக்காமல், அவர்களுடைய கால்கள் எப்போது வருகை தரும் என்று காத்திருக்காமல் இந்த மாணவர்களின் கல்விக்கு உதவும் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இதற்குக் காலதாமதம் கூடாது. விரைவான நடவடிக்கையே அவசியம். தொடரும் துயரங்களிலிருந்து இவர்களை மீட்டெடுக்கும் உதவிப்பணி மீட்புப்பணி தமிழ் மக்கள் அனைவருக்குமுண்டு, அதுவே தமிழ்த்தரப்பைப் பலப்படுத்தும். அதுவே தேவையும். காலத்தே செய்யும் பணியே காலத்தைக் கடந்தும் நிற்கும், காலத்தை உருவாக்கியும் விடும்.

அருள் மனோகரன்.


source:tamilspy


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு



  

ஸ்டாக்ஹோம்: 2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வழங்கப்படுகிறது.அமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பாரக் ஒபாமாவை நோபல் விருதுக் கமிட்டி தேர்வு செய்து அறிவித்துள்ளது.இதுகுறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்க பாடுபட்டமைக்காகவும் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெறும் ஒபாமாவுக்கு 1.4 மில்லியன் டாலர் பரிசும், தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்-- 

source:dinamalar

StumbleUpon.com Read more...

Um Paadham Panindhaen

StumbleUpon.com Read more...

ஆனந்த விகடன்:ஐ.நா.வையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது?

 

ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார ஏடான 'ஆனந்த விகடன்' கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக விகடன் குழுமத்தின் 'ஆனந்த விகடன்' வார ஏட்டில் நிஜ 'வில்'லன் யார்? எனும் தலைப்பில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மன்மோகன்சிங்கும், ஆளும் காங்கிரசின் தலைவி சோனியா காந்தியும் தீமைக்கு எதிராக வில்லேந்தி நின்ற தசரா கொண்டாட்டக் காட்சி - தமிழனைப் பொறுத்தவரை- இந்த வருடத்தின் தலைசிறந்த அவல நகைச்சுவை!

தீமைகளின் உருவமாக இராவணனைச் சித்திரித்து, அவனைக் 'கொடும்பாவி'யாக்கி அம்பு எய்து அருமையான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் இந்தத் தலைவர்கள். அடுத்தவர் மனைவியைக் கவர்ந்து சென்றான் என்பதுதான் இதிகாச இராவணன் மீதான குற்றச்சாட்டு. மற்றபடி அவன் சுத்த வீரன், யுத்த தர்மத்தை ஒருபோதும் மீறாதவன்!

ஆனால், இன்றைக்கு இலங்கையை ஆள்வோர் மீது உலக சமுதாயம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒன்றா, இரண்டா? 'விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது' என்று ஒருபக்கம் மார் தட்டிக்கொண்டே, போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இன்னமும் சித்ரவதைகளைத் தொடர்கிறார்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்குத் துணிச்சலை இவர்களுக்கு யார் தந்தது? ஒருபக்கம் முள்வேலி முகாம்களுக்குள் அப்பாவித் தமிழர்களை வதைத்துக்கொண்டே, மறுபக்கம் தன்னைப் புத்தராகவும் புனிதராகவும் காட்டிக்கொள்ள அங்கே இருப்பவர்கள் வேண்டுமானால் வெட்கம் கெட்டவர்களாக இருக்கலாம். 'தப்பாக எதுவும் நடக்கவில்லை' என்று இந்திய அரசுமா வெட்கம்கெட்டு பக்கவாத்தியம் வாசிக்க வேண்டும்?

அமெரிக்காவோ, ஐ.நா. சபையோ இலங்கை அரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரசுதான் மறைமுகத் தடையாக இருக்கிறது என்று இதுநாள் வரை நிலவிவந்த குற்றச்சாட்டுகளை இப்போதாவது பொய்யாக்க வேண்டாமா?

இன்னலுற்ற தமிழர்கள் வாழ்வில் இனியாவது ஒளி தோன்ற வேண்டுமானால்... உருவகக் கொடும்பாவிகளை விட்டுவிடுங்கள்... உண்மைக் கொடும்பாவிகளை நோக்கி வீரத்தைக் காட்டுங்கள். ஆம், நிஜமாகவே உங்கள் வில்லும் அம்பும் திரும்ப வேண்டியது இலங்கையை நோக்கித்தான்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source:puthinam
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ். அனுப்பி மோசடி

டாலர் தயாரிப்பு மிஷின் கொடுத்து மோசடி : நைஜீரியா ஆசாமி கைது
 

Front page news and headlines today

கோவை : பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ஒரு லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, போலி டாலர் தயாரிப்பு மிஷின் பார்சலைக் கொடுத்த, நைஜீரியாவைச் சேர்ந்த வாலிபரை கோவை போலீசார் கைது செய்தனர். கோவை, சவுரிபாளையத்தைச் சேர்ந்தவர் மகாதேவன்(38); பீளமேட்டில் டெக்ஸ்டைல் மிஷின் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். செப்., 17ல் இவரது மொபைல் போனுக்கு, அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ்., வந்தது.



மகாதேவனுக்கு, இரண்டு லட்சம் பவுண்ட் பரிசு விழுந்திருப்பதாகவும், பரிசுத் தொகையை அலையன்ஸ் அண்ட் லெசிஸ்டர் கிரெடிட் வங்கியில் டிபாசிட் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பரிசுத் தொகையைப் பெற, இ-மெயில் ஐ.டி.,யும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆச்சரியமடைந்த மகாதேவன், எஸ்.எம்.எஸ்., தகவலை உண்மையென நம்பி, நன்றி தெரிவித்து பதில் அனுப்பினார். இதைத் தொடர்ந்து பரிசுத் தொகையை இந்தியா கொண்டு வர, கஸ்டம்ஸ் கிளியரன்சுக்காக ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்த 31 ஆயிரத்து 583 ரூபாயை மர்ம நபர் தெரிவித்த கணக்கில் கட்டியுள்ளார்.



சில நாட்களுக்குப் பின், போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், பரிசுத் தொகையைப் பெற மும்பை வர வேண்டும் என, அழைப்பு விடுத்தார். கடந்த 3ம் தேதி மும்பை சென்ற மகாதேவன், சம்பந்தப்பட்ட நபரை போனில் தொடர்பு கொண்டார். அப்போது, நேரில் பரிசுத்தொகை பெற வேண்டாம் என்றும், பார்சலில் அனுப்பி வைப்பதாகவும், ஸ்கேனரில் தெரியாமல் இருப்பதற்கு மேலும் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயை வங்கியில் செலுத்தும்படியும் தெரிவித்தார். உடனடியாக தொகையை வங்கியில் செலுத்தினார். அதன் பிறகும், போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், பரிசுத் தொகையை நேரடியாக கோவையில் பெற்றுக் கொள்ளுங்கள். எங்கள் ஏஜன்ட் உங்களை காந்திபுரத்தில் சந்திப்பார் என தெரிவித்து, மகாதேவனை கோவைக்கு திரும்ப சொன்னார்.



சந்தேகமடைந்த மகாதேவன், தான் ஏமாற்றப்பட்டது குறித்து கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் சிவனாண்டியிடம் புகார் கொடுத்தார். கோவை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் செல்வராஜ் தலைமையிலான போலீஸ் குழு இம்மோசடி குறித்து விசாரணை நடத்தியது. பரிசுத் தொகையை கொடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஏஜன்ட் நேற்று கோவை வரும் தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், எஸ்.ஐ., சின்னக்கண்ணு தலைமையிலான போலீசார், காந்திபுரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த தனியார் ஆம்னி பஸ்சில் இருந்து இறங்கிய நீக்ரோ வாலிபர், தயாராக நின்றிருந்த மகாதேவனை சந்தித்து, கொண்டு வந்திருந்த பார்சலை கொடுத்தார். மறைந்திருந்த போலீசார் விரைந்து சென்று நீக்ரோ வாலிபரை பிடித்து, அவர் கொண்டு வந்திருந்த பார்சலை பிரித்து சோதனையிட்டனர். பார்சலில் அமெரிக்க டாலர் நோட்டு அளவிலான, ஏழு கட்டு கறுப்பு தாள் மற்றும் காயின் பாக்ஸ் வடிவில் பெட்டி ஒன்றும் இருந்தது.



வாலிபரை விசாரித்தபோது, கறுப்புத் தாளில் ரசாயனத்தை தடவி, பெட்டியில் போட்டால் அமெரிக்க டாலராக மாறும் என தெரிவித்தார். இது ஏமாற்று வேலை என அறிந்த போலீசார், மோசடி பார்சலை கொடுத்த நைஜீரியாவைச் சேர்ந்த ஓடிக்வி ஜூட்(30) என்பவரை கைது செய்தனர். இம்மோசடியில் மேலும் சிலர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்களையும் கைது செய்ய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




source:dinamalar

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP