சமீபத்திய பதிவுகள்

புதிய காலனித்துவ தலைவர்களுக்காக தயாராகும் யாழ் கோட்டை

>> Sunday, October 11, 2009


 

 


தொல்பொருள் சாஸ்திரம் என்ற பெயரில் யாழ் டச்சுக் கோட்டை தொல்பொருள் சாஸ்திர திணைக்களத்தினரால் புனரமைக்கப்படவுள்ளது. இது யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் உயர் அதிகாரிகள் மற்றும் சிங்கள பௌத்த யாத்திரிகர்களின் தங்குமிடமாக அமையப்போவதாக அறிக்கைகள் கூறுகின்றன. யாழ் கோட்டையானது உண்மையில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டபோதும், பின்னர் டச்சுக் காரர்களால் மாற்றியமைக்கப்பட்டது. இப்போது உள்ள கட்டடம் டச்சுக் காரர்களால் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடமாகும். யாழ் மக்களை கொடுங்கோலர்கள் ஆட்சி செய்ததற்கான அடையாளமே அது என்பதை எப்போதும் மறுக்க முடியாது. ஆனால் அக்கோட்டைக்கு செந்தக்காரர்களான தமிழர்களின் நாகரிக சொத்தாக என்றுமே அது ஆகமுடியாது. 

சுதந்திரம் கொடுக்கப்பட்டது எனக் கூறப்படும் காலத்தின் பின்னர் அக்கட்டடம் மாகாண சிறைச்சாலையாக, சிங்கள பாதுகாப்புப் படைக்கான தங்குமிடமாக இருந்தது. டச்சு கோட்டையின் உள்ளே இருந்த அரச அரண்மனை கொழும்பு அரசியல்வாதிகளின் விருந்தினர் மாளிகையாக இருந்தது. 1981 இல் யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அரசியல்வாதிகள் இந்த அரண்மனைக்குள் இருந்தே அதைச் செய்துமுடித்தனர். மேலும் பார்வையாளர்களைச் சுட்டுக்கொன்ற மற்றும் 1974 இல் நடைபெற்ற 4 ஆவது சர்வதேச தமிழ் மாநாட்டை குழப்பியவர்களும் அந்த கோட்டைக்குள்ளிருந்தே வந்தனர்.

கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நெதர்லாந்து தூதர் கோட்டைக்கும் சென்று வந்தார். யாழ் மக்களின் பரம்பரைச் சொத்து மீண்டும் அவர்களுக்கு கிடைத்துள்ளதா எனப் பார்க்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்பதை இந்த கோட்டை அவருக்கு நினைவூட்டுகிறது. அதாவது டச்சுக்காரர் ஆட்சியின்போது யாழ்ப்பாணம் 'சிறிய ஹொலண்ட்' என அழைக்கப்பட்டது என யாழ் கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். 

நெதர்லாந்தின் பொல்பொருள் சின்னத்தைப் பேணவும், சுற்றுலாத்துறைக்கான உட்கட்டமைப்புகளுக்கும் நெதர்லாந்து அரசு நிதியுதவி தரவேண்டும் எனக் கேட்பதில் கொழும்பு உறுதியாக உள்ளது.

இலங்கையிலுள்ள தொல்பொருள் சாஸ்திர திணைக்களத்திலோ அல்லது தேசிய காப்பகத்திலோ ஒரு தமிழ் அதிகாரிகளும் இல்லை. பசில் ராஜபக்ஷ போன்ற பெரிய பதவிகளிலுள்ளவர்களால் தரவிறக்கத்துக்கு ஆளாவதால், வெளி ஆட்கள் அல்லது வெளி இனத்தினருக்கு வரலாறோ அல்லது பாரம்பரியமோ இலங்கையில் இல்லை என்பதே இதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என கொழும்பிலுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இவர்கள் கூட காப்பகங்களில் சேமிக்கப்பட்டுள்ள பொருட்களை அணுகுவது மிகவும் கடினமாக உள்ளது.

தொல்பொருள் சாஸ்திர திணைக்களத்திலிருந்து பல அதிகாரிகள், அவர்கள் எல்லோரும் சிங்களவர்கள், அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தனர். அவர்கள் வெளிப்படைத் தோற்றத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தின் 'அபிவிருத்திக்கு' யாழில் உள்ள 'ஞாபகச் சின்னங்களில்' ஆர்வம் காட்டினர், ஆனால் உண்மையில் அவர்கள் ஆர்வம் யாழ் மக்களின் கலாச்சார இன அழிப்புதான் என்கிறார் யாழ்ப்பாணத்தின் கல்வியாளர்.

1960 களில் பென்ஸ்சில்வானியா பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சி நடந்தபோது கண்டறியப்பட்டது போல, யாழ்ப்பாணத்தின் ஆகப்பழைய முக்கிய தொல்பொருள் சாஸ்திர தளமான கந்தரோடை சாதாரண சகாப்தத்துக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது, இது பழங்காலத்தில் கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பெரிய கற்களால் ஆனது. கந்தரோடை இலங்கையின் அதிபழைய நகரங்களில் அதாவது அனுராதபுரம் நகரமாக இருந்த காலத்தில் ஒன்றாக இருந்துள்ளது, உலகின் பல பகுதிகளுடனும் தொடர்புள்ளதாக இருந்தது. இங்கிருந்த நாகரிகம் இலங்கையின் தீவிலும், தென்னிந்தியாவிலும் இருந்த திராவிட மக்களின் நாகரிகத்தை வெளிக்காட்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் பௌத்த காலகட்டம் கருப்பொருளிலும், சிற்ப சாஸ்திரத்திலும் தனிப்பட்ட வெளிப்படுத்தலை உடையது, இலங்கையின் தென்பகுதியில் இருந்து முற்றுமுழுதாக வேறுபடுகின்றது, அதோடு தமிழ் பௌத்தத்தின் பாரம்பரியம் என்றே பெரும்பாலும் அடையாளம் காணப்படுகிறது. சாதாரண சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டில் வெளிவந்த தமிழ் பௌத்த காப்பியமான மணிமேகலையில் கூறப்பட்டுள்ள பௌத்த வகையுடன் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியம் நெருங்கிய தொடர்புள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

கந்தரோடை (கந்தர் - ஓடை) என்பது எளிதாக கந்தரின் ஓடை அல்லது குளம் எனப் பொருள்படும். இது பெரும்பாலும் பிந்தி வந்த பெயராக இருக்கக்கூடும். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் யாழ்ப்பாணத்தில் சேவையாற்றிய சிங்கள நீதிபதி போல் ஈ. பீரிஸ், இந்த இடத்தில் அடிப்படை அகழ்வாராய்ச்சியைச் செய்தார். இந்த ஆராய்ச்சியானது, அந்த காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் வரலாற்றை எழுதிய முதலியார் ராசநாயகத்தின் இலக்கியத்தில் ராச்சியத்தின் தலைநகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ள கதிரை- மலை என்ற இடம் கந்தரோடையில் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கும் படி செய்கிறது.

கதிரை-மலை சிங்களத்தில் கடுரு-கொட என மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு முன்னர் சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் யாழ் குடாநாட்டில் இப்போதுள்ள தொல்பொருட்களை ஆபத்திலிருந்து காத்தல் என்ற கட்டுரையில் "செய்து வைக்கப்பட்டுள்ள தொல்பொருட்களிடையே 40 சிறிய மற்றும் நடுத்தர அளவான தூபிகள் இருப்பதால் கந்தரோடை என அழைக்கப்படும் கடுருகொட புத்த கோயில் சமயமுக்கியத்துவம் வாய்ந்தது" எனக் கூறப்பட்டுள்ளது.

இப்போதுள்ள கொழும்பு அரசாங்கமானது,13 ஆம் நூற்றண்டிலிருந்து 1618 இல் போர்த்துக்கேயரால் வெற்றிகொள்ளப்பட்டது வரை யாழ்ப்பாணத்தில் ஈழ தமிழ் ராச்சியமானது இருந்தது என அடையாளம் காட்டவே விரும்பவில்லை. பாடப்புத்தகங்களிலுள்ள வரலாற்றை அகற்றும் ஒரு நடவடிக்கையில் கூட அண்மையில் அரசாங்கம் ஈடுபட்டது.

தமிழர்களுக்கு தமது 'சமநிலையைக்' காண்பிக்கவும், தமிழர்களை ஏமாற்றவும் இப்போது சிங்கள தொல்பொருள் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ள 'மந்திரி வலவுவ' (அமைச்சரின் மாளிகை அல்லது வளாகம்) என்ற அமைப்பை புனரமைக்க விரும்புவதாகக் கூறியுள்ளனர். இந்த அமைப்பு யாழ்ப்பாண மன்னர்கள் காலத்துக்குரியது எனக் கூறப்படுகிறது.

இந்த அமைப்புக்கு 'மந்திரி மனை' என்ற பெயரை தமிழர்களிடையே உள்ள சில போலி சரித்திர ஆசிரியர்கள் கண்டுபிடித்து சூட்டினர். இப்போது இது கொழும்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது யாழ் வண்ணார்பண்ணை சமூக கொடையாளியால் சட்டநாதர் கோவிலுக்கு அருகில் கட்டப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்துடன் ஒன்றாகச்சேர்த்து 19 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கட்டடமாகும்.

இதேவேளை, இந்த காலத்துக்குரிய யாழ்ப்பாண மன்னரினது எனக் கருதப்படும் யமுனா - ஏரி என்ற குளம் யாழ்ப்பாணத்தின் வரலாற்று இலக்கியத்தில் காணப்படுகிறது. இது இப்போது கொழும்பு தொல்பொருள் சீன அதிகாரிகளால் யமுனா - பொக்குனா என அழைக்கப்படுகின்றது.

இவ்வாறே இலங்கை அரசானது தமிழ் மக்களுக்கு அவர்கள் தொல்பொருள் சாஸ்திர பாரம்பரியத்தை 'கற்பித்து' வருகிறது, அதோடு இதை மற்றவர்களுக்கு 'விற்றும்' வருகிறது என்கிறார் யாழ்ப்பாணத்தில் கல்வியாளர் ஒருவர். அவர் தமது பெயரை வெளியில் சொல்லக்கூடியளவேனும் தமது கல்வியியல் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை. 

கிளிநொச்சியில் மிகப் பெரிய பௌத்த கோயில் கட்டப்பட்டு வருவதாக கடந்த திங்கட்கிழமை, த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார். இது பழங்கால கோயில் எனவும் கூறியிருந்தார். அதோடு சிங்கள பௌத்தர்களை வடக்கில் குடியேற்றுவதற்கு ஏதுவாக ஏ 9 சாலைமருங்கே பல சிறிய பௌத்த தூபிகள் கட்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.

தமிழர்கள் பாத்யாத்திரை செய்து இலங்கையின் தென்முனையிலுள்ள தேவேந்திர முனையில் ஒரு குடியேற்றம் அமைத்துக்கொள்ள இலங்கையர்கள் அனுமதிப்பார்களா என கொழும்பிலுள்ள மத செயற்பாட்டாளர்களைக் கேளுங்கள். அங்கேயும் தேனாவரை நாயனார் என அழைக்கப்படும் பழங்கால சிவன் கோவிலொன்று உள்ளது. காலியிலுள்ள தமிழ் கல்வெட்டு ஒன்றில் இது குறிக்கப்பட்டுள்ளது. 

மலைநாட்டிலுள்ள இந்துக் கோயிலின் திருவிழா நடந்தால் அது சிங்கள பௌத்தர்களை கிளர்ச்சியடையச் செய்யும் எனக் கூறி சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு அந்த இந்துக் கோயில் திருவிழாவைத் தடை செய்தது. ஆனால் லட்சக்கணக்கான மக்களைச் சிறையில் அடைத்து வைத்துக்கொண்டு, இந்து மாநாடொன்றை கடந்த மாதம் நடத்தியுள்ளது கொழும்பு. இதற்கு இந்தியாவிலிருந்து வந்தும் சிலர் பங்குபற்றியிருந்தனர்.



source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பரமேஸ்வரன் குறித்த சர்ச்சை

 

பரமேஸ்வரன் உண்ணாவிரதச் சர்ச்சை தொடர்பாக அதிர்வு இணையம் இச் செய்தியை சரிவரக் கையாளவில்லை என அதிர்வு இணையம் மீது குறைகூறி இணையத்தளம் ஒன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் சில வாசகர்கள் இச் செய்தி தொடர்பாக தமது ஆதரவையும் , எதிர்ப்பையும் வெளிப்படுத்தி இருந்தனர். நாம் அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கியுள்ளோம். பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் நாம் அதற்கு பதில்கூறக் கடமைப்பட்டுள்ளோம். தமிழ் வெல்க என்ற பொருட்பட இயங்கும் பிரபல இணையத்தளம் ஒன்றில் மதிப்பிற்குரிய அன்பர் கீர்த்திகன் என்பவர் அதிர்வு இணையம் குறித்த ஒரு கட்டுரை ஒன்றை நேற்றைய தினம் எழுதியிருந்தார். அதில் அவர் மிகவும் நாகரீகமாகவும், பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடித்து, எழுதி இருக்கிறார். இச் செய்தியை நாம் சரிவரக் கையாளவில்லை என்பதே அவர் குற்றச்சாட்டு. இருப்பினும் ஒரு படி மேலே சென்று நாம் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகிறோம் என அவர் கூறி இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

முதலாவதாக முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டு: பரமேஸ்வரன் சாப்பிட்ட பேகரின் விலை 7.1 மில்லியன் பவுண்டுகள் என நாம் இட்ட தலையங்கம் பிழை என்பதாகும். இந்தத் தலையங்கம் ஆங்கில வடிவத்தில் இருந்து அப்படியே மொழிமாற்றப்பட்டது, காரணம் பிரித்தானியாவிலும் சரி, ஏனைய நாடுகளிலும் சரி , பிரித்தானியச் செய்திகள் எவ்வாறு கூறியிருக்கின்றது என்பதை அப்படியே மக்களுக்கு கொண்டுசெல்ல நாம் முற்பட்டதால் ஏற்பட்டது. பிரித்தானிய இணையத்தளங்கள் பரமேஸ்வரன் உண்ட மக்டொனால்ட்சின் விலை 7.1 மில்லியன் பவுண்டுகள் என்று செய்திவெளியிட்டால், அதன் கருப்பொருளை மாற்றி வெளியிடவோ, அல்லது அந்தச் செய்தியை மாற்றி எமக்குச் சாதகமாக முறையில் வெளியிடுவது மாபெரும் தவறு. தமிழ் மக்களுக்கு பிரித்தானிய ஆங்கில ஊடகங்கள் எவ்வாறு செய்திகளை வெளியிட்டுள்ளன எனக் கோடிட்டுக் காட்ட நாம் விரும்பினோம்.

அதனால் விழித்துக்கொண்டனர் தமிழர்கள். தம்மீது சுமத்தப்பட்டுள்ள பழிகளை உணர்ந்தனர். இச் செய்தி வெளியாகி சில மணிநேரத்திலேயே நாம் பரமேஸ்வரனுடன் தொடர்புகொள்ள முற்பட்டோம், என்பதை அவர் நன்கு அறிவார். நாம் ஸ்கொட்லன் யாட் பொலிசாரிடம் தொடர்புகொண்டபோது, இது குறித்து தகவல்கள் எதுவும் தமக்குத் தெரியாது என மறுத்த பொலிசார், சனிக்கிழமை காலை எம்மைத் தொடர்புகொள்வதாகத் தெரிவித்தனர். சனிக்கிழமை தொடர்புகொண்ட பொலிசாரிடம், கண்ட நேர்காணலை நாம் நேற்றைய தினம் பிரசுரித்திருந்தோம்.

குற்றச்சாட்டு 2: பரமேஸ்வரன் உண்ணாவிரத முடிவின்போது, பிரித்தானிய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் தாம் உண்ணா விரதத்தைக் கைவிடுவதாகச் சொல்லியிருந்தார். ஏராளமான வாசகர்கள் அது என்ன என அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருந்தனர், இருக்கின்றனர். எமக்கு வந்த மின்னஞ்சல்களில் பெரும்பாலான மின்னஞ்சலில் இதனைத்தான் வினவியிருந்தனர் மக்கள்( அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்ட நேரத்தில்) அதனால் இந்தக் கேள்விக்கு அவர் என்றோ ஒரு நாள் பதில்கூறக் கடமைப்பட்டுள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. இது தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை, முள்ளிவாய்க்காலில் 25,000 பொதுமக்களும் ஆயிரக்கணக்கான மாவீரரும் மரணித்த பின்னர் என்றோ ஒரு நாள் அதை அவர் கூறித்தான் ஆகவேண்டும், அதனை அறியும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. பரமேஸ்வரன் உண்ணாவிரதத்தால் மட்டும்தான் பிரித்தானியத் தமிழர்கள் போராடத் தொடங்கினார்கள் என்று எவராலும் கூறிவிடமுடியாது. 

குற்றச்சாட்டு 3: மெனிக்பாம் முகாமில் 96 இளைஞர்களை இராணுவம் கடத்திச் சென்றது குறித்த செய்திகள் ஏன் அதிர்வு இணையத்தில் வரவில்லை? இச் செய்தி எமக்கு கொழும்பில் உள்ள ஊர்ஜிதமற்ற செய்திச் சேவை ஒன்றின் முலம் வழங்கப்பட்டது. நம்பத்தகுந்த செய்தியாளர்கள் தரும் செய்திகளையே நாம் மேலும் ஒருமுறை ஊர்ஜிதம் செய்து போடவேண்டிய நிலையில் இருக்கிறோம். இச் சம்பவத்தை நாம் முதலில் பிரசுரித்து பின்னர் இது பொய்யான சம்பவம் என்று நிருபணமானால் தற்போது எம்மைப் பற்றி விமர்சித்திருக்கும் கீர்த்திகனே அதிர்வு இப்படி ஒரு நடக்காததை நடந்தது என்று கூறியிருக்கிறது என்று இதற்கும் ஒரு விமர்சனம் எழுதியிருப்பார். என்ன செய்வது விமர்சகர்கள் எண்ணிக்கை கூடிவிட்டது..

மதிப்பிற்குரிய கீர்த்திகன் அவர்களே! நாம் பிரசுரித்த செய்திகளில் தவறு இருக்கிறது அல்லது இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் சில சில செய்திகளை நாம் பிரசுரிக்கவில்லை என்றால் நாம் அரசாங்கத்துடன் சேர்ந்துவிடோம் என்ற தொனியில் எழுதுவது மிகவும் நாகரீகம் அற்ற செயல். இலங்கை அரசும் அதன் கைக்கூலிகளும் அதிர்வு இணையத்தின் வலையத் தளத்தில் சமீபத்தில் ஏற்படுத்திய தடங்கல்களை யாவரும் அறிவர். நாளாந்தம் எமக்கு வரும் தடைகள், சிங்கள எதிர்ப்புகள் என்பனவற்றை நாம் நேரடியாக அனுபவித்தவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 

எனவே நாம் எமது வாதப் பிரதிவாதங்களை முன்வைத்துவிட்டோம். இல்லை பரமேஸ்வரன் செய்தியை நாம் கையாண்டவிதம் தவறு என்று மக்களாகிய நீங்கள் இன்னமும் நினைப்பீர்களாக இருந்தால் அதிர்வு இணையம் தமிழர்களிடம் பகிரங்கமாகவே மன்னிப்புக் கோருகிறது!!!!. யார் நீங்கள்? எமது தமிழீழ உறவுகள் , உங்களிடம் தமிழீழத்தை நேசிக்கும் நாம் மன்னிப்புக் கோருவதில் வெட்கப்படவில்லை. அதிர்வு இணையம் தமிழீழ மக்களின் இணையம். தமிழீழ மக்களின் உணர்வுகளை மதிக்கும் ஓர் இணையம். தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க பாடுபடும் ஓர் இணையம். இதனையே நாம் தொடர்ந்தும் செய்வோம் எமது இலக்கான தமிழீழம் மலரும்வரை! மாவீரர் கனவு பலிக்கும் வரை.

இன்று எம்மை போற்றியோர் இனிவரும் காலத்தில் போற்றுவர், புழுதிவாரி தூற்றியோர் இனிவரும் காலத்தில் எம்மை நேசிப்பர். 

நன்றி,


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழா நீ எழுந்தாயே ஒரு தாயின் விதையாக

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP