சமீபத்திய பதிவுகள்

மகிந்தாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி!

>> Thursday, October 15, 2009

 

mahiதலைக்கு மேல் தொங்கும் கத்தியாக மகிந்தாவை அச்சுறுத்தும் அழுத்தங்கள்!

என்னதான் அரசாங்கம் நியாயங்களைக் கூறிக் கொண்டிருந்தாலும் மகிந்தாவை ஏற்கின்ற நிலையில் சர்வதேசம் இல்லை

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தடுப்பு முகாம்களில்; நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விவகாரம் அரசாங்கத்துக்கு நாளுக்கு நாள் சிக்கல்களை அதிகமாக்கி வருகிறது. சர்வதேச ரீதியாக இது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், அரசாங்கம் பல்வேறு அழுத்தங்களைச் சுமக்கின்ற நிலையையும் தோற்றுவித்துள்ளது.

என்னதான் அரசாங்கம் நியாயங்களைக் கூறிக் கொண்டிருந்தாலும் அதை ஏற்கின்ற நிலையில் சர்வதேசம் இல்லை என்பது வெளிப்படை. இப்படி பொதுமக்களைத் தடுத்து வைத்திருப்பது ஐ.நா.வின் சர்வதேச உடன்பாடுகளுக்கு விரோதமானது என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் கடந்த வாரம் கூறியிருக்கிறது. அத்துடன் முகாம்களில் உள்ள மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது குறித்தும் கவலையை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஜீன் லம்பேர்ட் இது குறித்துக் கருத்து வெளியிட்ட போது- "இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பொது மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரகடனத்தை மீறுவதாக அமைந்துள்ளது" என்று கூறியிருக்கிறார்.

அதேவேளை, பிரித்தானிய அமைச்சர் மைக் பொஸ்டர் இலங்கைக்கு விஜயம் செய்து இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் குறித்து நேரில் பார்வையிட்ட பின்னர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்த மக்கள் தொடர்பான அரசின் போக்கினால் அதிர்ச்சியடைந்துள்ள பிரித்தானியா, முகாம்களுக்கான அவசர உதவிகளைத் தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் முகாம்களிலிருந்து புதிய முகாம்களுக்கு இடம்பெயர்ந்தவர்களை மாற்றும் நடவடிக்கைகளுக்கு தாம் நிதியுதவி வழங்க முடியாது என்றும் பிரித்தானியா கூறிவிடடடது. ஆனால் சிறீலங்காவோ பிரித்தானியாவின் இந்த எச்சரிக்கையைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

mdog

முகாம்களில் உள்ளவர்களுக்கான உதவியை பிரித்தானியா நிறுத்தினாலும், வேறு பல நாடுகள் இலங்கைக்குத் தொடர்ந்து உதவத் தயாராக இருப்பதாகவும்- இந்த முடிவால் தாம் கவலைப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியான ரஜீவ விஜயசிங்க. அதேவேளை, பிரித்தானியாவின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளியிட்டிருக்கும் கருத்தம் விசனத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

"முகாம்களில் தங்கியுள்ள மக்களை விரைவாக மீள்குடியேற்றுவது தொடர்பாகவோ- அவர்களின் நடமாட்ட சுதந்திரம் தொடர்பாகவோ பிரித்தானியா எமக்கு அறிவுரை கூறவேண்டிய அவசியம் இல்லை." என்று கூறியிருக்கிறார் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதை அமைச்சர் மகிந்த சமரசிங்க ஏற்றுக்கொள்ளும் அதேவேளை- இந்த அழுத்தங்களுக்கு புலம்பெயர் தமிழ்மக்களின் நெருக்குதல்கள் காரணமாக இருக்கலாம் என்று கருத்து வெளியிட்டிருக்கிறார். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களையும் அரசாங்கம் தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறது என்பது இதிலிருந்து வெளிப்படையாகியிருக்கிறது. இதனால் தான், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும், பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் சர்வதேச அழுத்ங்களுக்கு நாடு ஒருபோதும் அடிபணியாது என்று வீராப்பாகப் பேசி வருகின்றனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் விடயத்திலாயினும் சரி -வேறெந்த விடயத்திலாயினும் சரி வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுப்பதில்லை என்ற பிடிவாதத்தில் அரசு இருக்கிறது. கண்ணிவெடிகளினால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் காரணம் காட்டிக் கொண்டு மீள்குடியமர்வை தாமதம் செய்து வருகிறது அரசாங்கம். அதேவேளை முகாம்களில் வடிகாலமைப்பு வசதிகளை மேற்கொள்வது, நீண்டகாலத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் முகாம்களில் சிறிய தோட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது என்பன் மீள்குடியமர்வைக் குறுகிய காலத்துக்குள் நிறைவேற்ற அரசாங்கம் தயாரில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.

மீள்குடியமர்வு, முகாம்களில் உள்ளவர்களின் சுதந்திரமான நடமாட்டம் ஆகியவற்றை சர்வதேச சமூகம் எப்படித்தான் வலியுறுத்தினாலும் அதற்கெல்லாம் அரசு செவிசாய்ப்பதாக தெரியவில்லை. இந்தநிலையில் அரசாங்கம் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆபத்தும் உருவாகி வருகிறது.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில்- அரசாங்கம் இதுகுறித்து ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் ஜோன் ஹோம்ஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்க முடிவு செய்திருக்கிறது. இதற்காக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க அடுத்தவாரம் நியூயோர்க் செல்லவுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறீலஙா அரசாங்கம் சந்திக்கும் அழுத்தங்கள் அதனால் தாங்க முடியாத கட்டத்தை அடைந்திருக்கிறது. சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பது என்பது சாதாரண விடயமல்ல. அதேவேளை சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து மீள்குடியமர்வுக்கு அனுமதி வழங்கவோ-அல்லது முகாம்களில் அடைபட்டுள்ள மக்களுக்கு நடமாட்ட சுதந்திரத்தை வழங்கவோ அரசாங்கம் தயாராகவும் இல்லை.

மாரிகாலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில்- சர்வதேச சமூகத்தை எப்படியாவது திருப்திப்படுதியாக வேண்டிய கட்டம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்கு மாற்றி- அவர்களை விடுவிப்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயன்றது.
ஆனால் இது ஏமாற்று வேலை என்கிறது சர்வதேசம்- இதற்கு நிதி கொடுக்கவும்; அது தயாராக இல்லை. என்னதான் அரசு சர்வதேச சமூகத்தை சமாதானப்படுத்த முயன்றாலும்- முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் விடயத்தில் அரசு நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்க முன்வராத வரைக்கும் அது சாத்தியமாகாது. அதுவரையில் இந்த விவகாரம் இலங்கை அரசுக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே இருக்கப் போகிறது.

-சத்திரியன்-
mdog1


source:tamilspy


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ராஜீவ்வை கொன்றது சோனியாவே

ராஜீவ்வை கொன்றது சோனியாவே - சுப்பிரமண்யன் சுவாமி

 



ரீபெரும்புதூரில் மே 21, 1991 அன்று திரு ராஜீவ் காந்தியைக் கொடூரமாக கொலை செய்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்து அந்த கொலையைச் சாத்தியமாக்கியவர்கள் யார் என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் எப்பொழுதுமே வலியுறுத்தி வந்துள்ளேன். இது சம்பந்தமாக நான் ராஜீவ் கொலையைப் பற்றி சென்ற ஆண்டு(மே 2000) எழுதியிருந்த ஆங்கிலப் பதிப்பில் மூன்று கேள்விகளை எழுப்பியிருக்கிறேன்.

1. முதலாவதாக, ஏப்ரல் 1991இல் தோ்தல் பிரசார துவக்கக் கூட்டத்திற்குப் பின்பே அப்பொழுது ராஜீவ் கட்சியின் கூட்டணி கட்சித் தலைவர்களான செல்வி ஜெயலலிதா மற்றும் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இருவரும் ராஜீவ் மீண்டும் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாடு வர தேவையோஅவசியமோ இல்லை என்று தீர்மானித்திருந்தும், அவரை மீண்டும் தமிழ்நாடு வருவதற்கு (அதுவும் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்கு) வற்புறுத்தியது யார்?

2. ராஜீவை மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரச் செய்தது மட்டுமின்றி, அவரது சுற்றுப் பயண விபரங்களைத் துல்லியமாக கொலையாளிகள் முன்கூட்டியே அறியும்படிச் செய்து அதன்மூலம் கொலை நிகழ்வதை சாத்தியமாக்கியது யார்? வழக்கு விசாரணையில் தண்டனை அளிக்கப்பட்டவர்களே, அம்மாதிரி முன் தகவல் இல்லாமல் தங்களால் கெலை திட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

3. கடைசியாக, பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்த ராஜவ் காந்தியின் மிக அருகில் செல்வதற்கு முன்பு, மனித வெடிகுண்டான தனு, "மெட்டல் டிடெக்டர்" மற்றும் பல சோதனகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஆனால் அம்மாதிரியான சோதனைக்கு உட்படாமலே தணு இருந்ததால் தான் ராஜீவின் மின அருகில் செல்ல முடிந்திருக்கிறது. நான் மத்திய சட்ட அமைச்சராக இருந்த போது(27.05.1991) அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷனின் கூற்றுப்படி கொலை திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதற்கு காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகளின் குறைகள் அல்ல. ஆனால், தகவல்கள் சதிகாரர்களுக்குச் செல்வதைத் தடுக்கப் படாதது என்பதாகும். தணுவிற்கு ராஜீவின் மிக அருகாமையில் செல்ல வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனவே, ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கூட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்ட திடலில் இருந்து எந்த நபரின் உதவியால் தணு அவ்வாறு ராஜீவின் மிக அருகாமையில் செல்ல முடிந்தது?

மேற்கூறிய கேள்விகளுக்கு மிகுந்த ஆராய்ச்சியின் பயனாக எனக்கு இப்பொழுது பதில் காண முடிகறது. என்னுடைய கணிப்பை நிரூபிக்கும் வகையில் தக்க ஆதரங்கள் உள்ளன.

முதலாவதாக ராஜீவ் தமிழ் நாட்டுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியவர் திருமதி சோனியாதான். ராஜீவ் செல்லாவிடடால் தேர்தல் வெற்றிக்கான புகழ் ஜெயலலிதாவுக்கு சென்று விடும் என்பது அவருடைய நிலையாக இருந்தது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது இந்த வாதம் சரியான தானவே படும். ஆனல், சோனியாவின் எண்ணம் பழுதாகவே இருந்தது. இல்லையெனில் அவர் ஏன் ஜெயின் கமிஷனின் விசாரணையில் கொலையாளிகளுக்கு எதிராக இருந்த ஆதாரங்களை அர்ஜூன்சிங் போன்றவர்கள் மூலமாக திரை திருப்ப முயன்றிருக்க வேண்டும்? சோனியாவின் தாயாரான திருமதி பௌலா மைனோவுக்கும் அவருடைய குடும்ப நண்பரான திரு. ஓட்டோவியோ க்வட்ரோச்சிக்கும் கொலையாளிகளுக்கும் நெடு நாளைய தொடர்பு உண்டு என்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் அதுசமயம் ராஜீவ் காந்தியின் சுற்றுப் பயண விபரங்களைத் தயாரிக்கும் பொறுப்பு மார்க்கரெட் அச்வத் நாராயணன் என்பவருடன் நெருக்கமான அரசியல் உறவு உண்டு. இந்த அச்வத் நாராயணின் உதவியாளர் வீட்டில்தான் பிரதான குற்றவாளியான சிவராசன் ஒளிந்து கொண்டார். ஆல்வா, அர்ஜூன்சிங், மணி சங்கர் ஐயர் ஆகியோர்தான் ராஜூவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் செல்ல வேண்டுமென வற்புறுத்தியதாகத் தெரிகிறது. தேர்தல் பிரசார யுக்திகளில் சாதாரணமாக தோ்தல் காலங்களல் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை விட்டுவிட்டு கட்சியின் செல்வாக்குக் குறைவாக உள்ள இடங்களில் மட்டுமே பிரசாரத்தை தீவிரப்படுத்துவது இயல்பு.

இரண்டாவது கேள்வியைப் பொறுத்தமட்டில், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பிரமாணப் பத்திரம்(அஃபிடவிட்) வித்தியாசமாக உள்ளது. அந்த அஃபிடவிட்டில் பெங்களுரைச் சேர்ந்த ஜே.ரங்கநாத், தன்னுடைய வீட்டில் ஒிந்து காண்டிருந்த சிவராசனுக்கு திருமதி மார்க்ரெட் ஆல்வாதான் ராஜீவின் சுற்றுப்பயண விபரத்தை கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார். சாதாரணமாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒரு நபரின் கூற்றை யாவரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ரங்கநாத் விஷயத்திலோ, காங்கிரஸ் காரிய கமிட்டி , அவர் தண்டனையை அனபவித்து வெளியே வந்ததும் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கக் கோரி உள்துறை அமச்சர் எல்.கே.அத்வானிக்குக் கடிதம் எழுத அர்ஜீன் சிங்கிற்கு அதிகாரம் அறித்தது!

அதன் உட்கருத்து என்னவென்றால், காங்கிரஸ் கட்சி ரங்கநாத்தை ஒப்டியானால்ியத்துவம் வாய்ந்த நபராக கருதியது. அப்படியானால், மார்க்கரெட் ஆல்வாவைப் பற்றி அவர் தாக்கல் செய்த வாக்கு பிரமாணம் என்னவாயிற்று? இதற்கு காங்கிரசிடம் பதிலேதுமில்லை. ஆகவே, மார்க்கரெட் ஆல்வாதான் ராஜீவின் சுற்றுப் பயண விபரத்தைத் தெரியப்படுத்தி அதன்மூலம் புலிகள் இயக்கம் கொலையைத் திட்டமிட்டபடி செய்ய முடிந்தது என்பது புலப்படுகின்றது. திருமதி ஆல்வா இன்று சோனியா காந்தியின் பிரதான ஆலோசகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

மேலும், தண்டனை பெற்றவர்களில் ஒருவரான ஆதிரை என்ற பெண்மணியைப் பற்றிய விசாரணை அரைகுறையாகவே இருந்திருக்கிறது. இந்தப் பெண், கைது கைது செய்யப்பட்ட போது தில்லிக்கு அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரைக் கண்பதங்காக வந்திருந்ததாகத் தெரிகிறது. யார் அந்த தலைவர்? மார்க்கரெட் ஆல்வாவா?

மூன்றாவதாக, காங்கிரஸ் தலைவர்களே ஸ்ரீபெரும்புதூரில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குழப்பி விட்டிருந்தனர் என்பது தற்பொழுது ஆதாரப்புர்வமாக நிரூபணமாகியிருக்கிறது. அதனால்தான் மனித வெடிகுண்டான தணு என்ற பெண ராஜீவுக்கு மிக அருகாமையில் சென்று குண்டை வெடிக்கச் செய்ய முடிந்தது. இந்த விஷயத்தில், தணுவின் திட்டத்தை அறியாமலே கூட சம்பந்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குழப்பிவிட்டிருக்கலாம் அல்லது தெரிந்தே கூட செய்திருக்கலாம். நிச்சயமாக இவ்விவகாரத்தில் பணம் புகுந்து விளையாடிருக்க வேண்டும்.

ராஜீவ் கொலை செய்யப்பட்டது தேசத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு நெடிய குற்றமாகும். ஆகவே, கொலையை நிகழ்த்தியவர்கள் தண்டக்கப்ட்டிருந்தாலும், அதற்கு உதவியாக இருந்த நபர்கள் அவருடைய சொத்தில் பாத்தியதை உள்ளவர்களாகவும் உலவி வருகிறார்கள். திருமதி சோனியா, அவருடையை தாயார், அர்ஜூன்சிங் மற்றும் மார்க்கரெட் ஆல்வா ஆகியோருடையை பங்கை மத்திய புலனாய்வுத் துறை
தீவிரமாக விசாரித்தால், பல உண்மைகள் வெளிவரும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.


சுப்ரமணியன் சுவாமி

மார்ச், 23, 2001.
1, லால் பகதூர் சாலை,
பீபீகுளம், மதுரை.

("ராஜீவ் காந்தி கொலை - விடை கிடைக்காத வினாக்களும் கேட்கப்படாத கேள்விகளும்" புத்தகத்திற்காக சுப்ரமணியன் சுவாமி எழுதிய முன்னுரையின் சுருக்கம்)


source:defeatcongress.com

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP