சமீபத்திய பதிவுகள்

முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27

>> Tuesday, November 17, 2009

 

Pulikal.netநீக்ரோக்களுக்கு அடுத்தபடியாக, ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட ஓர் இனம் தமிழினம் தான். மலேசியா(சிங்கப்பூர்,) பர்மா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பிஜி போன்ற பல காலனியாதிக்க பிரதேசங்களை வளப்படுத்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் அங்கெல்லாம் "ஓட்டிச்" சொல்லப்பட்டனர்.

இந்திய இனங்களிலேயே இந்தச் "சிறப்பைப்" பெற்ற ஒரே இனம் தமிழினம் தான். எனவே, இந்திய இனங்களிலேயே, கணிசமான அளவு பல வெளிநாடுகளில் வாழும் ஒரே இனம், தமிழினம் தான். இலங்கையிலே வந்தேறி சிங்களவர், மண்ணின் மைந்தர்களான தொல்குடித் தமிழர்களை வதை செய்ய, இந்தியா தனது விடுதலை நாள் முதல் இன்றுவரை, உதவியது என்பது வரலாறாய் உள்ளபோது, மேற்குறிப்பிட்ட தேசங்களில் வாழும் தமிழர்களைக் காக்க, இந்தியாவிடம் நாம் இனியும் மன்றாடி நிற்க இயலாது. அந்நாடுகளிலுள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க தமிழர்களுக்கான ஒரு தேசம் தேவை.

தமிழர்களுக்கான ஒரு வலுவான தேசம் இன்றியமையாதது. இந்தியா என்ற ஒற்றை நாட்டில், 544 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 40 தமிழ் உறுப்பனர்களால் தமது இன உரிமைகளைக் காத்துக் கொள்ள இயலாது. கச்சத்தீவை நம்மால் காக்க இயலவில்லை. இந்தியாவின் தெற்கே தமிழ்நாடு. இலங்கையின் வடக்கே தமிழீழம். இடைப்பட்ட பாக் நீரிணை தமிழனுக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால், சம்மந்தமே இல்லாத சிங்களவன் அங்கு தமிழக மீனவர்களைத் துரத்துகிறான், கொல்கிறான். வெட்கக்கேடு 150 ஆண்டுகளாக, ஆங்கிலேயர்களால் அடிமைகளாக அழைத்துச் சொல்லப்பட்டு, இலங்கையைப் பொன்னாக்கிய இந்தியத் தமிழர்களை சிங்களன் நாடற்றவராக்கிய போது, இந்தியா அதை ஆமோதித்தது.

6,00,000 இந்தியத் தமிழர்களை அது அகதிகளாக இந்தியாவிற்கு அழைத்துக் கொண்டது. அதைத் தடுக்க நம்மால் இயலவில்லை. அமைதிப்படை என்ற பேரில் ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களை வேட்டையாடியது. நம்மால் தடுக்க இயலவில்லை. தற்போது தமிழ் மக்களின் ஒரே அரணாக இருந்த புலிகளையும் வீழ்த்தி, அம்மண்ணின் மைந்தர்களான தமிழர்களை, வந்தேறிகளான சிங்களவருக்கு அடிமையாக, நாதியற்ற இனமாக இலங்கையில் இந்தியா தான் வைத்திருக்கிறது. அனைத்து இந்திய ஒத்துழைப்போடு நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில், கடந்த ஓராண்டில் மடிந்தவர் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள். இந்தக் கொடும் பழியிலிருந்து இந்தியாவால் மீள இயலாது! இலங்கையில் இரண்டே இனங்கள்.

தமிழ் சிறுபான்மை இனம். சிங்களப் பேரினம். அங்கு தமிழனை, சிங்களவன் நேரிடையாகத் தாக்குகிறான். தமிழர் நிலத்தை அபகரிக்கிறான். அது போன்று பல்லின இந்தியாவால் செய்ய இயலாது. இங்கே அது மறைமுகமாக பல்வேறு முகங்களில் நடைபெறுகிறது. சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, தமிழனின் சொந்தக் கடலில், தமிழ் மீனவர்களைப் படுகொலை செய்ய இந்தியா உதவுகிறது. கருணாநிதி போன்ற எட்டப்பர்களை பணத்தையும், பதவியையும் காட்டி உருவாக்கி அவர்களின் மூலமாக நமது வளங்களை ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியா விற்கிறது. பார்ப்பன, பனியா இந்தியாவும் ஒரு ஏகாதிபத்திய நாடு தான். அது தமிழரது உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கிறது. டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற எண்ணற்ற ஏகாதிபத்தியங்களை வளர்த்துவிடத் தான் இந்திய சட்டங்கள் பயன்படுகின்றன.

இங்குள்ள பெரும்பான்மை ஏழை மக்களை இலவசங்களை எதிர்நோக்கும் பிச்சைக்கார இனமாக வைத்திருக்கத்தான் அதன் சட்டங்கள் பயன்படுகின்றன. தமிழர்கள் தமது அறிவாலும். கடின உழைப்பாலும் ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர். அத்தகைய நமது நிலத்தை நோக்கி மற்ற இனமக்கள் கும்பல் கும்பலாகப் பிழைக்க வருகிறார்கள். இங்கே வரும் அம்மக்கள், வந்த மாத்திரத்திலேயே வாக்குரிமை பெற்று, இங்குள்ள அரசை அமைப்பதிலும் பங்கு வகிக்கின்றனர். இது நீண்ட காலத்தில் நமது தாயகத்தை இழப்பதில் கொண்டு போய் முடிக்கும். நமது வளங்களை அவர்கள் சுவீகரித்துக் கொள்வார்கள், கொண்டிருக்கிறார்கள். தமிழரின் பெருமை பேசும் தஞ்சை பெரிய கோயிலிலுக்கு அறங்காவலர், இன்றும் ஒரு மராத்தியன் என்பது ஒரு சிறு சான்று.

தமிழ்ப்பகுதியில் தஞ்சம் புகுந்த ஆரியன் தமிழரின் இசையைக் களவாடி கர்நாடக சங்கீதம் என்றது மட்டுமில்லாமல் தமிழ் என்ற தீட்டு மொழியில் பாடல் பாடக்கூடாதென்று சொன்னான். பலநூறு வருடங்களாக நடத்தியும் காண்பித்தான். தமிழரின் நாட்டியக்கலையை, தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகு கைப்பற்றி, தமது பாரம்பரியக் கலையாக ஆக்கிக் கொண்டனர் ஆரியர்கள். பார்ப்பனீயத்தால் தமிழருக்கு ஏற்பட்ட நசிவுகளை முழுமையாக விளக்க, இக்கட்டுரையில் இடமில்லை. மாற்றானை நமது மண்ணிலே அனுமதித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு இவை சில ஆணித்தரமான சான்றுகள். ஈழத்தில் வந்தேறிய சிங்களன், அம்மண்ணின் மைந்தர்களைப் படுகொலை செய்து, அவர்களின் தாயகத்தைப் பறிப்பது மற்றுமொரு ஆணித்தரமான சான்று.

இந்தியாவிலேயே தமிழினம் மட்டும் தான் தனித்துவமான மொழியும், பண்பாடும் கொண்ட இனம். ஆரியம் அன்றிலிருந்து இன்று வரை தமிழரின் மீது அளவில்லா பொறாமை கொண்டு நம்மை ஒரு பகையினமாகக் கருதுகிறது. தமிழ் மொழியை அழிப்பதிலும், தமிழரின் தாயகத்தை விழுங்குவதிலும் அது நீண்ட கால செயல்திட்டத்தோடு செயல்படுகிறது. உலகம் தழுவிய தமிழர்களின் நலன்களைப் பேணவும், தமிழரின் நிலம், மொழி, பண்பாடு இவற்றைக் காக்கவும், பேணவும் நமக்கான தேசங்கள் இன்றியமையாதன. இதை உணரும் நாம் தமிழ் தேசியத்தை அடைய, இனி என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டும். பாரதி, இந்திய விடுதலை அடைவதற்கு முன்பே, " ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" பாடியது போல, தற்போதே நாம் தன்னுரிமை பெற்றுவிட்டதாகக் கொண்டாடத் தொடங்க வேண்டும்.

அத்தகைய கொண்டாட்டங்கள் மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். தன்னுரிமைப் போராட்டங்களுக்கு மக்களைத் தயார் படுத்தவும் உதவும். கொண்டாட்டம் என்றாலே அதற்கான ஒரு அடையாள நாள் தேவை. அந்தப் பொன்னான நாளைக் கண்டறிய வேண்டியது அடுத்த கடமை. சுதந்திரத்திற்குப் பிறகு, பொட்டி ஷ்ரீராமுலு என்ற தெலுங்கரின், தெலுங்கு மொழி மக்களுக்கு தனிமாநிலம் வேண்டி பட்டினிப் போராட்டம் செய்து உயிர்நீத்த பின்னணியில், 1956 நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, சென்னை மாகாணமாயிருந்த பகுதிகள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டன. இந்த நாளை கர்நாடகா ராஜ்யோத்சவா நாளாகக் கொண்டாடுகிறது. நவம்பர் 1ல் தொடங்கும் அவர்களது கொண்டாட்டம் ஒரு மாதம் முழுக்க சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில், மாநிலத்திற்கான கொடியும் உள்ளது. அந்தக் கொடியை, பெரிய சாலைகளிலிருந்து பிரியும் தெருக்களின் முச்சந்திகளில், நிரந்தரக் கொடிக்கம்பம் கட்டி, பறக்க விடுகின்றனர். இது போன்ற விழாக்கள் ஆந்திரா, கேரளாவிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படுகின்றன. அங்கும் மாநிலங்களுக்கான கொடிகளும் உள்ளன. இந்த மாநிலங்களிலெல்லாம் அரசு விடுமுறையும் விடப்படுகிறது. ஆனால், நாசமாய்ப்போன தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கட்சிகள், இந்த நாளைக் கொண்டாடுவதும் இல்லை, இவர்கள் தமிழகத்திற்கான ஒரு கொடியையும் இன்றுவரை உருவாக்கவில்லை. தமிழகத்தில் தான், இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் கட்சிகள் உள்ளன, சாதிக் கட்சிகளையும் சேர்த்து.

ஆனால், இந்த அரம்பர்கள் கூட்டம், இதுவரை தமிழ் மக்களுக்கான ஒரு பொதுக் கொடியை உருவாக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. இதிலே மனதைப் பதறவைக்கும் முரண் என்னவென்றால், தமிழ் நாட்டில் மட்டும் தான் "திராவிட தேசம்" கோரப்பட்டது. பிரிவினை கோரும் அமைப்புகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை ஜவகர்லால் நேரு கொண்டுவரப் போகிறார் என்றவுடன் தி. மு. க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது, அண்ணாவின் காலத்திலேயே தான். பிறகு வந்த கருணாநிநி மாநில சுயாட்சி கோஷமிட்டார். இதை ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்திய கருணாநிதி, ஒரு கொடியையாவது உருவாக்கி இருக்க வேண்டாமா? மற்ற மாநிலங்களைப் போல, நவம்பர் 1ல் மாநில விடுமுறை விட்டிருக்க வேண்டாமா? இந்த நாளை மற்ற மாநிலங்களைப் போல, ஒரு சிறப்பான நாளாகக் கொண்டாடி இருக்க வேண்டாமா? ஆனால், இந்த "மஹா புருஷன்" ஓணம் பண்டிகைக்கு தமிழ் நாட்டில் விடுமுறை விடுகிறார்.

ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறார். இதையெல்லாம் செய்து மாற்றானிடம் ஓட்டுப் "பொறுக்கும்" இவர், தமிழுக்காக செய்ததெல்லாம் வெற்று ஆரவாரம் தான்! கருணாநிதியின் "நச்சு" அரசியல் இப்போது தான் பலருக்கும் தெளிவாகப் புரிகிறது! இந்த மஹாபுருஷன், தான் ஒரு (இந்திய) அடிமை, தன்னால் என்ன செய்ய முடியும் என்பார். அதேநேரம், இந்தியாவின் கொள்கைதான் தனது கொள்கை என்றும் சொல்லுவார். ஒரு அடிமை தனது ஆண்டையின் கொள்கையை ஏற்கிறார் என்றால், அந்த அடிமையின் தராதரம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சரி……! இனி செய்வதைக் காண்போம்!! மேற்சொன்னது போல, நவர்பர் 27 ஐ நாமும் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாடலாம். தமிழரைப் பொருத்தவரை நவம்பர் மாதம் ஒரு சிறப்பான மாதமும் கூட.

இந்த மாதத்தில் தான் மாவீரர் தினமும் கொண்டாடப்படுகிறது. தமிழரின் தீப ஒளித்திருநாளான "கார்த்திகை தீபமும்" இந்த மாதத்தில் தான். உலகத்தில் தமிழினத்தின் பெருமையை சொன்ன தமிழ்த் தேசியத்தை உருவாக்கித்தந்த மேதகு பிரபாகரன் அவதரித்ததுவும் இந்த புனித மாதத்தில்தான். நவம்பர் "தமிழ்த் தேசிய நாள்" நவம்பர் தொடங்கும் இந்தத் "தமிழ்த்தேசிய நாள்" கொண்டாட்டத்தை நவம்பர் மாதம் முழுக்க, அரங்கக் கூட்டங்களாகவும், பொதுக்கூட்டங்களாகவும் கொண்டாட வேண்டும். அதில் தமிழரின் மாண்புமிகு வரலாறு, பண்பாடு, மொழிச் சிறப்பு, பண்டைய இலக்கியங்கள், பண்டைய அறவியல், பண்டைய அறிவியல், பண்டைய சமூதாயவியல் என்ற தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப் படவேண்டும்.

எதிர்காலத் திட்டமிடல் கருத்தரங்குகளும் நடத்த வேண்டும். மரபியல் அடிப்படையில், தென்னிந்தியர்கள் அனைவருமே தமிழர்களே! ஆனால், தமிழ் என்பதை உச்சரிக்கத் தெரியாத ஆரியர்களால் தான் தற்போதைய "திராவிடம்" என்ற சொல் படிப்படியாக உருப்பெற்றது. ஆனால், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் ஆரியரால் திட்டமிட்டு, இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட மொழிகள். தங்களின் அடையாளங்களை இழந்த இம்மக்களை இனி தமிழர்கள் என்று அழைக்க இயலாததால், திராவிடம் என்ற தமிழர் மரபினத்தை அன்று ஆரியரால் பிழையாக அழைக்கப்பட்ட, பொதுப் பெயராலேயே அழைக்கின்றனர். பெரியார் அவர்கள் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து உருவான மொழிகள் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம், எனவே அவர்கள் எல்லோருமே தமிழர்கள் தான் என்றும், இம்மக்கள் அனைவரும் தமிழர்களாகவே தங்களை உணரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஆனால், அவ்வம்மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களை திராவிடர்கள் என்று கூடக் கருதாமல், தங்களைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என்றே கருதுகின்றனர். (அங்கெல்லாம் திராவிடம் என்ற சொல்லாட்சி கொண்ட ஒரு அரசியல் கட்சிகூட இல்லை.) இது அவர்களின் அறியாமையைக் காண்பிக்கிறது. அவர்கள் வருங்காலத்தில் தங்களைத் தமிழர்களாக உணர்வார்களா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. அதை ஆரியம் அனுமதிக்காது! ஆனால், தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் இத்தகைய மக்கள் மட்டும் தங்களை திராவிடர் என்று அழைத்துக் கொண்டுள்ளனர். அறியாமையால், தமிழகத் தமிழனும் தன்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்கிறான். திராவிடர் என்று, ஒரு அரசியல் உத்தியாக, பெரியார் பயன்படுத்திப் பிரபலப் படுத்திய சொல்லாட்சி அவராலேயே கைவிடப்பட்டு, "தனித் தழிழ்நாடு" கேட்டு தனது இறுதிக் காலம் வரை போராடினார்.

அவர் ஒரு அப்பட்டமான தமிழத்தேசியர்! எனவே, தமிழரை வீழத்திய திராவிடம் என்ற சொல்லாட்சியை இனிக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். திராவிட அரசியல் பச்சோந்திகள் தங்களை "தேசத்தால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன்" என்று தமிழனைக் காயடிப்பதை இனித் தடுத்தே ஆகவேண்டும். தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் அனைத்து திராவிடர்களும் தமிழர்களே! எனவே, திராவிடம் என்ற சொல்லை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம்! கர்நாடக, ஆந்திர, கேரள மக்கள் மட்டுமே தங்களை திராவிட இனம் என்று, விரும்பினால், இன்று அழைத்துக் கொள்ளட்டும். ஆதியிலிருந்து தமிழர்கள் தமிழர்களே! இவர்களைத் திராவிடர்கள் என்றழைப்பது அடிப்படையிலேயே பிழையானது.

அப்படிப் பிழையாக அழைத்துக் கொண்டதால் தான் தமிழர்கள், தங்களைத் தமிழர்கள் என்று உணரமுடியாமல் வந்தேறிகளின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்கின்றனர். அனைத்து திராவிட அரசியலையும் முற்றுமாக வீழ்த்துவோம்! உலகின் தாயினமான நமக்கு ஒரு தேசம் இன்றியமையாதது! அது இன்றுவரை இல்லாதிருப்பது கேவலமானது. ஒப்பற்ற தமிழ் மொழியையும், பண்பாட்டையும், பண்டைய தமிழிலக்கியங்களையும் உலகெலாம் பரப்புவோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், தூய நல்வழி (சுத்த சன்மார்கம்) சொன்ன தமிழருக்கு இந்த உலகை நல்வழிப் படுத்தும் இன்றியாமையாத கடமையும் உள்ளது! அது நம்மால் மட்டுமே முடியும். அதற்கான கருவிகள் நம்மிடம் தான் உள்ளன! இதற்கு அடிப்படைத் தேவை தமிழ்த் தேசியம்! அதன் முதற்படி தமிழ்த்தேசிய அடையாள நாள் கொண்டாட்டங்கள்! அதற்கான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்குவோம்.

நவம்பர் 27

வெல்க தமிழ்த் தேசம்!


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மைக்ரோசப்ட் வேர்டு டிப்ஸ்

 டிப்ஸ் கதம்பம்
 

வேர்டில் பாரா ஒன்றில் கர்சரை வைத்துக் கொண்டு கண்ட்ரோல் +சைபர் அழுத்துங்கள். உடனே அந்த பாராவிற்கு மேலாக 12 பாய்ண்ட் அளவிற்கு ஸ்பேஸ் தரப்படும். மீண்டும் அழுத்தினால் அந்த ஸ்பேஸ் நீக்கப்படும். இது எதற்கு என நீங்கள் எண்ணலாம். டாகுமெண்ட்டில் ஒரு பாரா அடைத்துக் கொண்டு இடம் பிடிப்பதாக நீங்கள் உணர்ந்தால், இந்த கீ தொகுப்பைப் பயன்படுத்தி இடைவெளி உருவாக்கி அதனை நன்றாகப் படிக்கும் வகையில் உருவாக்கலாமே. மேலும் டேபிள்களை உருவாக்குகையில் செல்களைப் பிரிக்கும் கோடுகளுக்கு அருகே டெக்ஸ்ட்களை அமைத்து இருப்போம். இங்கும் தொடக்கத்தில் ஸ்பேஸ் அமைத்தால் அவற்றைப் படிப்பது எளிதாகும். மேலும் பார்ப்பதற்கு அட்டவணை யும் நன்றாக இருக்கும். இதற்கு டேபிளில் அந்த செல்லைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + ஸீரோ அழுத்தினால் போதும். தேவை இல்லை என எண்ணினால் மீண்டும் அழுத்தி நீக்கிவிடலாம்.


வேர்டில் இன்னொருவர் உருவாக்கிய டெக்ஸ்ட்டைப் படித்துக் கொண்டிருக் கிறீர்கள். அதனை அமைத்தவர் அவர் மனம் போன போக்கில் பல ஸ்டைல்களை அதில் திணித்திருக்கிறார். கண்ட இடத்தில் அடிக்கோடு, சாய்வெழுத்து என பார்மட் செய்துள்ளார். உங்களுக்கு இது பிடிக்கவில்லை; நார்மல் டெக்ஸ்ட் இருந்தால் போதும் என்று எண்ணுகிறீர்கள். இதற்காக ஒவ்வொரு சொல்லாகச் சென்று, பார்மட்டிங் நீக்க வேண்டியதில்லை. மொத்தமாக செலக்ட் செய்து கண்ட்ரோல் + ஷிப்ட் +என் அழுத்துங்கள். அனைத்து பார்மட் சமாச்சாரங்களும் நீக்கப்பட்டு, நார்மல் ஸ்டைலில் டெக்ஸ்ட் கிடைக்கும்.


வேர்டில் கண்ட்ரோல்+ சி அழுத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் காப்பி ஆகும் என்பது நமக்குத் தெரியும். கண்ட்ரோல்+ ஷிப்ட்+ சி அழுத்தினால் என்னவாகும்? தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டில் உள்ள பார்மட்டிங் ஸ்டைல் மட்டும் காப்பி ஆகும். இதனால் என்ன பிரயோஜனம் என்று எண்ணுகிறீர்களா? இதே ஸ்டைலை இன்னொரு டெக்ஸ்ட்டில் அமைக்கலாம். அந்த டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து, ஜஸ்ட் கண்ட்ரோல் + ஷிப்ட் + வி அழுத்துங்கள். அப்படியே தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் இருந்த ஸ்டைல் இங்கு ஒட்டிக் கொள்ளும். இந்த வேலையை பார்மட் பெயிண்டர் வழியும் செய்யலாம். ஆனால் இரண்டுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. பார்மட் பெயிண்டர் வழி செய்தால், காரியம் முடிந்தவுடன், அதாவது பேஸ்ட் செய்தவுடன், பார்மட் பெயிண்டர் காப்பி செய்த ஸ்டைல் பார்மட்டை மறந்துவிடும். ஆனால் கண்ட்ரோல் + ஷிப்ட்+ சி அழுத்தி செய்தால், வேர்ட் தொகுப்பினை மூடும் வரை அப்படியே இருக்கும். இதனைப் பயன்படுத்தி எந்த டாகுமெண்ட்டில் உள்ள டெக்ஸ்ட்டையும் தேர்ந்தெடுத்து பார்மட்டிங் பேஸ்ட் செய்திடலாம். 


எக்ஸெல் தொகுப்பில் Ctrl + Shift + !  என்ற கீகள் இரண்டு டெசிமல்களில் எண்களைக் காட்டும். எண்களுக்கு இந்திய முறைப்படி கமாக்களை (1,000) அமைக்கும்.
ஒர்க் ஷீட் ஒன்றில் செல்களில் உள்ள டேட்டாவினை பார்மட் செய்திட் எண்ணமா? மெனு சென்று பார்மட் செல் விண்டோ பெற்று பார்மட்டிங் செய்கிறீர்களா? அல்லது செல்களில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் பார்மட் செல்ஸ் தேர்ந்தெடுக்கிறீர்களா! எதுவும் வேண்டாம். முதலில் மாற்றம் மேற்கொள்ளும் செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங் கள். அதன்பின் மெனுவெல்லாம் செல்லாமல் கண்ட்ரோல் ப்ளஸ் 1 (Ctrl+1) கீகளை அழுத்துங்கள். உடனே நீங்கள் இந்த மாற்றங்களை மேற்கொள்ள வழி வகுக்கும் பார்மட் செல்ஸ் விண்டோவிற்கு கூட்டிச் செல்லப்படுவீர்கள்.



இணைய தளம் ஒன்றிலிருந்து டெக்ஸ்ட் ஒன்றைக் காப்பி செய்த பின், அதில் உள்ள இணைய தள முகவரிகள் மற்றும் சில சொற்கள் தொகுதி நெளிவுகள் உள்ள அடைப்புக் குறிக்குள் HYPERLINK எனப் போட்டு வருகிறதா? இது படிப்பதற்கு இடையூறாக உள்ளதா? இவை டெக்ஸ்ட்டில் உள்ள பீல்டு மார்க்கர்களே. அந்த சொற்கள் இன்னொரு இடத்திற்கானத் தொடர்பினை ஹைப்பர் லிங்க் எனக் குறிக்கின்றன. அந்த சொற்களை அடைப்புக்குறியோடு தேர்ந்தெடுத்து ஷிப்ட்+ எப்9 அழுத்துங்கள்; உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் கூடுதல் தகவல்கள் மறைந்து நீல வண்ணத்தில் ஹைப்பர்லிங்க் ஆகக் கிடைக்கும்.
வேர்டில் குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன் படுத்துங்கள்.
உங்களிடம் ஸ்குரோல் வீல் உள்ள மவுஸ் இருக்கிறதா? அப்படியானால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் தொகுப்பில் இருக்கையில் ஷிப்ட் கீயை அழுத்திப் பிடித்துக் கொண்டு வீலை உருட்டவும். ஒரு திசையில் உருட்டுகையில், ஒரு பக்கம் முன்னால் செல்லும். இன்னொரு திசையில் உருட்டு கையில் ஒரு பக்கம் பின்னால் செல்லும். இதைச் சோதனை செய்திட ஏதேனும் ஒரு பிரவுசரைத் திறக்கவும். இணையப் பக்கம் ஒன்றுக்குச் சென்று அதில் உள்ள சில லிங்க்குகளைக் கிளிக் செய்து பல பக்கங்கள் செல்லவும். பின் இந்த சோதனையை மேற்கொள்ளவும்.



டிப்ஸ்... டிப்ஸ்...
உங்கள் கம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரி தெரியவேண்டுமா? இணைய இணைப்பில் இருக் கையில், உங்கள் கம்ப்யூட்டர் மிகப் பெரிய நெட்வொர்க்கின் ஓர் அங்கமாக இயங்குகிறது. அது ஒரு தனிப்பட்ட முகவரி மூலம் அடையாளம் காணப்படுகிறது. இதனையே ஐ. பி. முகவரி என அழைக்கிறார்கள். இதனை உங்களுக்கு இன்டர் நெட் இணைப்பு தரும் சேவை நிறுவனம் வழங்குகிறது. இந்த முகவரி என்ன என்று அறிய, Start  பட்டன் அழுத்தி அதில் Run கட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். அதில் cmd  என டைப் செய்து என்டர் அழுத்தவும். உங்களுக்கு டாஸ் விண்டோ சிறியதாகக் கருப்பாகத் தெரியும். அதில் டிரைவின் பெயர் அருகே ஒரு கட்டளைப் புள்ளி துடித்துக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் ipconfig  என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் உங்கள் இணைய முகவரி என்ன என்று தெரிய வரும். உடன் மேலும் பல தகவல்களும் காட்டப்படும்.



* வேர்டில் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஷிப்ட் + எப்3 அழுத்தினால் அந்த சொல் மூன்று வகைகளில் எழுத்தில் மாற்றம் பெறும். அவை: சொல் முழுவதும் கேப்பிடல் லெட்டர்களாக மாறும்; அல்லது சிறிய எழுத்துக்களாக மாறும்; அல்லது முதல் எழுத்து மட்டும் கேப்பிடல் லெட்டராகவும் மற்றவை சிறிய எழுத்துக்களாகவும் மாறும்.



பல புரோகிராம்களில் டூல் பார் சொற்களில் ஓர் எழுத்தில் மட்டும் அடிக்கோடு இடப்பட்டி ருக்கும். இதன் பொருள் என்ன தெரியுமா? ஆல்ட் கீயுடன் இந்த எழுத்திற்கான கீயை அழுத்தினால், அந்த சொல்லுக்கான, கட்டளைக்கான செயல்பாடு மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக பைல் மெனுவில்"E" என்ற எழுத்தில் அடிக்கோடு இட்டபடி எடிட் கட்டளை இருக்கும். Alt + "E" அழுத்தினால் எடிட் செயல்பாடு மேற்கொள்ளப்படும். இத்துடன் இது நிற்கவில்லை. அந்த மெனுவிலும் கட்டளைக் சொற்களில் ஓர் எழுத்தில் அடிக்கோடு இருக்கும். அந்த மெனு சென்ற பின்னர், அதில் உள்ள சொற்களுக்கான கட்டளை நிறைவேற்ற, அந்த எழுத்தை மட்டும அழுத்தினால் போதும். மீண்டும் ஆல்ட் அழுத்தி, அந்த கீயினை அழுத்த வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக Alt + E அழுத்த Edit மெனு கிடைக்கும். பின் மீண்டும் பேஸ்ட் ஸ்பெஷல் கிடைக்க மட்டும் அழுத்தினால் போதும்


source:dinamalar

StumbleUpon.com Read more...

ரோபாட்களுக்கு கைகொடுக்கும் எறும்புகள் : பேராசிரியர் தகவல்


 

General India news in detail 

பெங்களூரு : "மூளையில், உருவங்களை பதிய வைத்துக் கொள்ளும் எறும்புகளின் திறன், தானே இயங்கும் வகையிலான ரோபாட்கள் செய்ய உதவிகரமாக இருக்கும்' என, சூரிச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூரில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரிச் பல்கலைக்கழகத்தின் மூளைகள் பற்றி ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த பேராசிரியர் ருடிகர் வென்னர் கூறியதாவது: எறும்புகளுக்கு சிறப்பான பார்வை திறன் உள்ளது. இதனால், அவை வானத்தை மிக தெளிவாக பார்க்க முடிகிறது. வானம் தான், அந்த எறும்புகளுக்கு திசைகாட்டும் கருவியாக பயன்படுகிறது.


எறும்புகள் இரை தேடி தன் இருப்பிடத்தை விட்டு வெளியில் வருகின்றன. உணவு கிடைத்ததும், வானத்தில் இருந்து வரும் ஒளிக்கற்றைகளை அடிப்படையாக கொண்டு தான் வந்த பாதையிலேயே, ஒரே நேர்கோட்டில் மீண்டும் தன் இருப்பிடத்தை சென்றடைகின்றன. அந்த எறும்புகளுக்கு பார்வை கோளாறு ஏற்பட்டால், அவை தன் பாதையில் தவறு செய்கின்றன. வானத்தின் ஒளிக்கற்றைகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தான் வந்த பாதையின் அடிக் கணக்கையும் அவை கணக்கில் கொள்கின்றன.


எறும்புகளுக்கு மிகச்சிறிய அளவிலேயே மூளை இருக்கின்றன. ஆனால், அவை உணவு தேடி இருப்பிடத்தில் இருந்து செல்லும் போது வழியில் உள்ள அடையாளங்களை தன் மூளையில் பதிய வைத்துக் கொள்கின்றன. மீண்டும் இருப்பிடத்திற்கு திரும்பும் போது அந்த அடையாளங்களை சரிபார்த்துக் கொள்கின்றன. இவ்வாறு படங்கள் போன்று, அடையாளங்களை எறும்புகள் பதிய வைத்துக் கொள்ளும் இந்த திறன், ரோபாட்கள் தானே இயங்கும் வகையில் வடிவமைக்க உதவிகரமாக இருக்கும். இவ்வாறு ருடிகர் வென்னர் கூறினார்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இரத்தக்கறை படிந்த 1000 ரூபா தாள் மகிந்த படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது

 

கடந்த 37 வருடங்களாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கேட்டு நடந்த போராட்டத்தைத் தாம் முறியடித்துவிட்டதாகக் கூறுகின்ற அரசானது, இன்று ஞாபகார்த்த தாள் காசை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட இந்த 1000 ரூபா ஞாபகார்த்த தாளானது முதன்முதலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த தாளின் பின்பக்கத்தில், போரில் ஈடுபட்ட தமது ராணுவம் மற்றும் போலீசாரைக் கருப்பொருளாகப் பயன்படுத்திய வாசகம் காணப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் இலங்கை தேசியக் கொடியை ஏற்றுவது போன்ற படமும் காணப்படுகின்றதாம். இதில் வேடிக்கையான விடையம் என்ன என்றால் அதில் மகிந்தவின் படமும் அச்சிடப்பட்டுள்ளது. இன அழிப்பில் இவர் ஈடுபட்டதாகக் கூறி சர்வதேச நீதிமன்றத்தில் எந்த நேரமும் வழக்கு தொடரப்படும் நிலையில் உள்ள இவரின் படத்தை 1000 ரூபா தாளில் அச்சிட்டுள்ளனர்

இரத்தக்கறை படிந்த கைகளை உயர்த்தி நாட்டு மக்களுக்கு ஆசி வழங்குவது போல இப் புகைப்படம் அமைந்துள்ளது. இரத்தக்கறைபடிந்த இந்த தாள்களை தமிழர்கள் ஏரெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 2328

  
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

போர் பற்றி மாவீரர் தினத்தில் அறிவிப்போம்: விடுதலைப்புலிகள் அறிக்கை


தமிழ் ஈழப்போராட்டம் அடுத்த கட்ட போர் பற்றி மாவீரர் தினத்தில் அறிவிப்போம்: விடுதலைப்புலிகள் அறிக்கை
 கொழும்பு, நவ. 17-
 
விடுதலைப்புலிகள் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
 
அன்பார்ந்த தமிழ் ஈழ மக்களுக்கும், புலம் பெயர் வாழ் தமிழ் உறவுகளுக்கும்....
 
கடந்த 18-5-2009 அன்று தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காக போராடிய எமது இயக்கம் சந்தித்த பெரிய பின்னடைவை தொடர்ந்து நாம் மீண்டும் எமது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் மீண்டும் கட்டியமைத்து வருகிறோம். இதை அறிந்த இலங்கை பேரினவாத அரசும், அரசு துணை குழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
 
இது போன்ற பிரசார போரை கடந்த 30 ஆண்டு பேராட்ட வரலாற்றில் இலங்கை அரசு பல தடவை நிகழ்த்தியுள்ளது. இதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே இவ்வாறான போலி பிரசாரங்களை நம்பவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
 
அதே வேளையில் எமது விடுதலை போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு பற்றி கொள்கை விளக்க உரை வழக்கம் போல எதிர்வரும் மாவீரர் நாள் அன்று நிகழ்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
விடுதலைப்புலிகள் லெட்டர் பேடில், இணைய தளம் மூலம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. எங்கிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது என்ற தகவல் எதுவும் அதில் இல்லை.
 
விடுதலைப்புலிகள் மாவீரர் தினம் வருகிற 27-ந்தேதி நடைபெறும். அப்போது இந்த அறிவிப்பை வெளியிட இருக்கின்றனர்

source:maalaimalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இணையதளங்களில் சைபர் கிரிமினல்கள்

 
 

Front page news and headlines todayஇந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இணையதளங்களை பயங்கரவாதிகள் கள்ளத்தனமாக பயன்படுத்துவதாக, சைபர் பாதுகாப்பு நிபுணர் ஆங்கிட் பாடியா தெரிவித்தார்.



பாதுகாப்பு கவலை: இதுகுறித்து ஆங்கிட் பாடியா கூறியதாவது: உலகளவில் தகவல் தொழில் நுட்பத் துறையில், இந்தியா மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதன் பாதுகாப்பு கவலையளிப்பதாக உள்ளது. அதில் நாம் பின்தங்கி உள்ளோம்.பயங்கரவாதிகள், வாய்ஸ் ஓவர் புரோட்டகால், சாட்ஸ், புகைப்படங்களுக்குள் மறைந்திருக்கும் தகவல், டிராப்ட் இ-மெயில் மற்றும் பென் டிரைவ் உட்பட தகவல் தொடர்பு துறையின் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.



இந்தியாவில் சைபர் சட்டங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. ஆனால், அந்த சட்டங்களை அமலாக்கும் போலீசார் பற்றாக்குறை மற்றும் அவர்களுக்கு முறையான பயிற்சியின்மை ஆகியன காணப்படுகிறது.பயங்கரவாதிகள், நிலவியல் அடையாளங்கள் தெரியாத வகையில் புத்திசாலித்தனமாக இணையதளங்களை பயன்படுத்துவது, உலகளவிலான போலீசாருக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.



சமீபத்தில், வைரஸ்கள், ஸ்பைவேர் மற்றும் மால்வேர் ஆகியவை, சமூக நெட்வொர்க்களான ட்விட்டர், பேஸ்புக், ஆர்குட் மற்றும் மை ஸ்பேஸ் ஆகியவை மூலம் பரப்பப்படுகின்றன.இந்த சமூக நெட்வொர்க்களில், பல்வேறு பணமோசடிகளும் நடைபெறுகின்றன.இவ்வாறு ஆங்கிட் பாடியா கூறினார்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஜால்ரா ஒலியில் பல் இளிக்குது சீனா :திபெத் மேடை; தாளம் போடுகிறார் ஒபாமா:

 

Top world news stories and headlines detail 

பீஜீங்: திபெத், சீனாவின் ஒரு பகுதியே,  இது சீனாவின் ஒருங்கிணைக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும் திபெத் புத்த தலைவர் தலாய்லாமா பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணலாம் என சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இவரது பேச்சு சீனாவுக்கு நல்ல மகிழ்ச்சியை தந்துள்ளது என்றால் மிகையல்ல.



சர்வதேச உரிமை : ஆசிய பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா சீனாவில் 2 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நேற்று மாணவர்களுடன் உரையாற்றினார். இப்போது இரு நாட்டு உறவுகள் மேம்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்து பேசினார். இலை மறை காயாக சீனாவை சாடும் வகையில் உலகளவில் யாருடைய உரிமையும் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்றார். சர்வதேச உரிமை என்று குறிப்பிட்டிருந்தார். சர்வதேச உரிமை என்பது மக்களின் சுதந்திரம், கலாச்சாரம், வழிபாடு, மற்றும் தகவல் தொடர்பு பெறுவதில தலையிடு இல்லாமை ஆகும். இது போன்ற விஷயங்களில் சுதந்திரம் யாருக்கும் பாதிக்கக்கூடாது என கூறினார்.



சிவப்பு கம்பள வரவேற்பு : இரண்டாவது நாளாக ஒபாமா சீன அதிபர் ஹூ ஜிண்டோவை சந்தித்து பேசினார். முன்னதாக அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். ஒபாமா நிருபர்களிடம் பேசுகையில் ; தற்போதைய நிலையில் சீனாவின் உறவு அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாட்டு உறவும் வலுப்பட வேண்டும். சீன அமெரிக்க உறவுகள் உற்பத்தி மந்த நிலையில் இருந்து எழுந்திருக்க உதவும் . ஏற்றுமதி மற்றும் பணி வாய்ப்புகள் பெருகும். என்றார்.



திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் சீனாவின் ஒன் சீனா கொள்கையில் தாமும் உடன்படுவதாக கூறினார். இருப்பினும் தலாய்லாமாவின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு ஒபாமா கூறினார்.



பிள்ளையை கிள்ளி விட்டு : திபெத்திய தலைவர் தலாய்லாமா 1959 ல் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இவரது சமீபத்திய அருணாசல பிரதேச வருகைக்கு சீனா கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திபெத் குறித்து ஒபாமா சீனாவுக்கு ஆதரவாக பேசியதாக அந்நாட்டு அதிபர் ஹூ ஜிண்டோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சர்வதேச உரிமை குறித்து பேசிவிட்டு திபெத் விவகாரம் குறித்து ஆணித்தரமான கருத்து ஏதும் சொல்லவில்லை. சீனாவில் ஒபாமாவின் பேச்சு பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் விதமாகவே உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP