சமீபத்திய பதிவுகள்

பிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட்டது டெல்லி

>> Friday, November 20, 2009


பிரபாகரனை சுட்டு பொசுக்கி விடுங்கள் என்று உத்தரவிட்டது டெல்லி: வைகோ

விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.


இதுகு‌றி‌த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில்,''இந்திய அரசுக்கு எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கலைஞர் கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா? ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா? அப்படிக் காட்டினால், நான் கருணாநிதியைக் குற்றம் சாட்டுவதை விட்டுவிடுகிறேன்.

தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார்.

தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா? ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார். 

கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

ரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா?

 ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்;தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார்.

 ரனில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலகீனப்படுத்துவது என்பதைத் தான் புரிந்து கொண்டதாக டோக்கியோ பேச்சுவார்த்தை குறித்து 2005 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவசர மனிதாபிமான பிரச்சனைகளையும்கூட, ரனிலின் ஆட்சிப் பீடத்தால் தீர்த்து வைக்கமுடியவில்லை. 

ரனிலின் அரசாங்கமானது பேச்சுகளை இழுத்தடித்து காலத்தைக் கடத்தியதோடு உலக வல்லரசு நாடுகளுடன் ரகசிய கூட்டு சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் சூழ்ச்சிகர சதிவலையை பின்னுவதில் முழுக்கவனத்தையும் செலுத்தியது. 

இந்த சதித்திட்டத்தின் முக்கிய ஏற்படாகவே 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேற இருந்தது. இதனை அறிந்து கொண்ட நான் டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்தோம். பேச்சுகளில் இருந்தும் நாம் விலகிக் கொண்டோம்.'

'தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை' அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி.

கருணாவைத் துரோகியாக ஆக்கியதே, ரனில் விக்கிரமசிங்கேதான். அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் செய்து, சகல பாதுகாப்பும் கொடுத்து, கருணாவைத் துரோகியாக ஆக்கினார். 

அப்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், இதோ பார், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்; கருணாவைப் பிரித்து விட்டோம்' என்று ரனில் விக்கிரமசிங்கே கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகர

ன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.

கருணாநிதி ராஜீவ் காந்தியைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். 

இந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத் சிங்கிடம், பிரபாகரன் உங்களைச் சந்திக்க வரும்போது சுட்டுப் பொசுக்கி விடுங்கள் என்று இந்தியத் தூதர் தீட்சித் சொன்னபோது, இந்தத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று மறுத்தபோது, இது என் உத்தரவு அல்ல; டெல்லியின் உத்தரவு என்று தீட்சித் சொன்னதாக ஹர்கிரத் சிங் தன் நூலில் எழுதி இருக்கிறாரே? டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு? அது ராஜீவ் காந்தியின் உத்தரவுதான்.

 கருணாநிதியின் குடும்பத்தாருக்குப் பதவிகளைப் பெற, சோனியா குடும்பத்தாரின் ஆதரவு தேவை. ஆகையால், தமிழ் இனத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப்போவது இல்லை.

காலம் நியாயங்களை நிரந்தரமாக மறைத்துவிடாது.
 
தமிழ் இனத்துக்குத் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு, பத்துப் பதினைந்து நிலைய வித்துவான்களை வைத்துக்கொண்டு, நாள்தோறும், பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்; விழாக்கள், அடைமொழிகள் மூலமாகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழ் இனத்துக்கு தான் செய்த கேடுகளை மறைத்து தமிழர்களை திசைதிருப்ப படாதபாடுபடுகிறார்.

2009 ஈழப்போரில் இந்தியாவின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மெளனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மெளனத்தின் குதூகலம் யார் அறிவார்?

மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலைபாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது.

 தமிழ் இனம், ஒருபோதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது''என்று தெரிவித்துள்ளார்.


source:nakkheeran

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

காதலை ஒப்புக் கொண்ட கர்ப்பிணி பெண் கல்லால் அடித்து கொலை

காதலை ஒப்புக் கொண்ட கர்ப்பிணி பெண் கல்லால் அடித்து கொலை சோமாலியா நாட்டு மத கோர்ட்டு தண்டனை மொகாதீசு, நவ.21- சோமாலியா நாட்டின் தெற்கு பகுதிகளில் மத தீவிரவாதிகளின் கோர்ட்டு உள்ளன. இவர்கள் மத கோட்பாடுகளை மீறுவோருக்கு மரண தண்டனை விதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று முன்தினம், வாஜித் என்ற நகரில் 20 வயது பெண் ஒருவரை மத கோர்ட்டு நீதிபதி ஷேக் இப்ராகிம் அப்திரகுமான் கல்லால் அடித்துக் கொல்லும்படி உத்தரவிட்டார். அந்த பெண் 29 வயது இளைஞன் ஒருவனை காதலித்து அவன் மூலம் கர்ப்பிணியாக்கி விட்டாள். இது மத கோட்பாட்டை மீறிய செயல் என்று கூறி அவளுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இதையொட்டி நேற்று அந்த பெண் பொது மக்கள் 200 பேர் முன்னிலையில் கல்லால் அடித்து கொல்லப்பட்டாள். இடுப்பளவு குழி தோண்டி அதற்குள் அவளை புதைத்து வைத்து இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவளது காதலனுக்கு 100 கசையடி கொடுக்கப்பட்டது.


source:dailythanthi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிரபாகரனை கொல்ல வந்த கிருபன்;பாய்ந்து சென்று காப்பாற்றினார் பொட்டு அம்மான்


 : வைகோ 

விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுகு‌றி‌த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில்,  ''பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது.

இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.

பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று திட்டம் வகுத்தவர்கள் துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள்.

 இவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித்திட்டம் அம்பலமானது.

ஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.

இதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார். 

சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப்படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலைசெய்ய சதித்திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப்படமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் கருணாநிதி வருந்துகிறார்.

அது மட்டும் அல்ல, 'பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின' என்று குறிப்பிட்டு உள்ளார்.
 
இதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, 'பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது' என்கிறார்''என்று தெரிவித்துள்ளார்.


source:nakkheeran

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இது போன்ற மனிதர்கள் இந்தக்காலத்திலும் உண்டு!!!!

படத்தை பெரிதாக்கி படிக்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்



StumbleUpon.com Read more...

சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்

 
 


தினந்தோறும் கம்ப்யூட்டர் குறித்த பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் நிறைய இலவச மற்றும் கட்டணம் செலுத்தி வாங்கும் பல புதிய சாப்ட்வேர் தொகுப்புகள் தொடர்பான தகவல்கள் வருகின்றன. நண்பர்களிடமிருந்தும் சிடிக்களில் இவை கிடைக்கின்றன. ஆர்வத்தில் அல்லது நம்முடைய கம்ப்யூட்டர் வேலைகளை எளிதாக்கும் என்ற எண்ணத்தில் நாம் இவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தத் தொடங்குகிறோம். ஆனால் சில வேளைகளில் இந்த சாப்ட்வேர் தொகுப்புகளால் நம் சிஸ்டம் கிராஷ் ஆகிறது. அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வந்த அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்துவதில் புதிய சிக்கல்கள் ஏற்படுகின்றன. பிரச்சினை புதிதாய் இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் என்பதால் தான் என்று உணரும்போது, அடடா இதனை இன்ஸ்டால் செய்யாமல் இருந்திருக்கலாமே; யாராவது காலச் சக்கரத்தை பின் நோக்கிச் சுழற்றி என் கம்ப்யூட்டரை, இந்த சாப்ட்வேர் தொகுப்பு இன்ஸ்டலேஷனுக்கு முன்னால் இருந்த படி வைத்துவிடுங்களேன் என்று கூறும் அளவிற்கு நாம் செல்கிறோம். காலச் சக்கரத்தைச் சுழற்ற முடியுமா? முடியாது ஆனால் முடியும். 


என்ன பார்க்கிறீர்கள்! ஆம், விண்டோஸ் இதற்கான சில வழிகளைத் தந்துள்ளது. நாம் செட் செய்துவிட்டால், நம் கம்ப்யூட்டர் குறிப்பிட்ட காலத்தில் இருந்த நிலைக்குக் கொண்டு செல்லப்படும். அந்த நாளுக்குப் பின்னால் நாம் இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும். அதனால் ஏற்பட்ட விளைவுகளும் நீக்கப்படும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் நாம் உருவாக்கிய புரோகிராம்கள் பத்திரமாக ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும். இந்த வசதியைத்தான் ரெஸ்டோர் பாய்ண்ட் (Restore Point) என்கிறார்கள். இதைப் பற்றி இங்கு காணலாம்.
1.ரெஸ்டோர் பாய்ண்ட்: முதலில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம்.Start பட்டன் அழுத்தி, கிடைக்கும் மெனுவில் All Programs தேர்ந்தெடுக்கவும். பின்னர் Accessories என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இந்த சிறிய லிஸ்ட்டில் System Toolsஎன்பதைத் தேர்ந்தெடுத்து அதில் System Tools என்பதில் கிளிக் செய்திடவும். 
2. ரெஸ்டோர் பாய்ண்ட்டை உருவாக்க: இப்போது சிஸ்டம் ரெஸ்டோர் (System Restore)  டயலாக் பாக்ஸ் உங்களுக்குக் கிடைத்திருக்கும். இந்த பாக்ஸ் இரண்டு ஆப்ஷன்ஸ் தரும். இதில் Create a Restore Point என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் Next என்பதைத் தட்டவும். இப்போது நீங்கள் அமைக்க இருக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்கு ஒரு பெயர் தர வேண்டும். இந்த பெயர் குறிப்பிட்ட நாளை அல்லது நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் தேதியை எளிதாக மறந்துவிடுவோம். எனவே இந்த பெயர் Pagemaker instal, Calculator instal, Graphics card instal என்பது போல இருக்கலாம். இந்த பெயருடன் விண்டோஸ் சிஸ்டம் தானாக அந்த நாளை இணைத்துக் கொள்ளும். இதன் பின் கிரியேட் என்ற பட்டனை அழுத்தி பின் குளோஸ் கிளிக் செய்து ரெஸ்டோர் பாய்ண்ட் வேலையை முடிக்கவும்.



3. ரெஸ்டோர் பாய்ண்ட்டை இயக்க: சிஸ்டத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்படுகிறதா? குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்கள் இயங்குவது தடை படுகிறதா? இதை உறுதி செய்து கொண்ட பின், அனைத்து டாகுமெண்ட்களையும் சேவ் செய்து கொள்ளுங்கள். இங்கு பிரிவு 1ல் கூறியது போல ரெஸ்டோர் பாய்ண்ட் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். இனி இதில் 'Restore my computer to an earlier time'என்று இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். அடுத்து புதிய விண்டோ ஒன்று இடது பக்கம் காலண்டருடன் தோன்றும். அதில் சில தேதிகள் மட்டும் சற்றுப் பெரியதாகவும் அழுத்தமாகவும் தெரியும். இந்த தேதிகள் எல்லாம் ரெஸ்டோர் பாய்ண்ட் இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட நாட்கள். அதாவது அதில் கிளிக் செய்தால், எந்த நாளுக்கென அது உருவாக்கப்பட்டுள்ளதோ அந்த நாளில் கம்ப்யூட்டர் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டர் செல்லும். இந்தக் காலண்டரைப் பார்க்கும் போது, அதில் நீங்கள் உருவாக்காத தேதிகளும் இருப்பதைக் காணலாம். அவை எல்லாம் விண்டோஸ் சிஸ்டத்தால் உருவாக்கப்பட்டவையாக இருக்கும். நீங்கள் ஏதேனும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கையில், அதனை விண்டோஸ் உணர்ந்து தானாகவே அவற்றை உருவாக்கி வைக்கும்.
இதில் ஏதேனும் நீங்கள் குறிப்பிடும் நாளைக் கிளிக் செய்திடவும். இப்போது அந்த நாளில் ஏற்படுத்தப்பட்ட சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ் வலது பக்கம் காட்டப்படும். இதில் எந்த பாய்ண்ட்டுக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்துNext  கிளிக் செய்திடவும். சிஸ்டம் ரெஸ்டோர் இயங்கத் தொடங்கும். குறிப்பிட்ட பாய்ண்ட்டுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று, செட்டிங்ஸ் அனைத்தையும் அன்றைய நிலைக்கு மாற்றி, கம்ப்யூட்டரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திடும்.
4. விஸ்டா: நீங்கள் விண்டோஸ் விஸ்டா வைத்திருந்தால், ஸ்டார்ட் பட்டன் அழுத்தி சர்ச் பாக்ஸில்System Restore என்று டைப் செய்திடவும். பின் Open System Protection என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். பின் Create என்ற பட்டனை அழுத்தவும். இதில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், நீங்கள் உருவாக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்கு பெயர் கொடுக்கவும். பின் Create  மீது அழுத்த ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்பட்ட ரெஸ்டோர் பாய்ண்ட்டை இயக்க, ஏறத்தாழ எக்ஸ்பி சிஸ்டத்தில் உள்ளது போன்ற விண்டோ தரப்பட்டு நீங்கள் வழி நடத்தப்படுவீர்கள்.


--

source:dinamalar
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நவம்பர் 26‍ , 27 தேதிகளில் வெளிவர இருப்பவை




source:http://www.pulikalinkural.com/

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP