சமீபத்திய பதிவுகள்

வீட்டு வேலை பார்ப்போர் அடிமைகளா? ஐ.நா., கடும் கவலை

>> Tuesday, December 8, 2009

 
 

Front page news and headlines today நியூயார்க் : "உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் வீட்டு வேலைகள் செய்வோர், தங்கள் எஜமானர்களால் அடிமைகளைப் போல் நடத்தப்படும் அவலம் நீடிக்கிறது. எனவே, அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது' என, ஐ.நா., தெரிவித்துள்ளது.



ஐ.நா., மற்றும் மனித உரிமை அமைப்புகள் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சர்வதேச அளவில் கடுமையான சட்டங்கள் இயற்றி, அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறி வருகிறோம். ஆனால், பல்வேறு நாடுகளில் வீட்டு வேலைகள் செய்வோர், தங்கள் எஜமானர்களால் அடிமைகளைப் போல் நடத்தப்படுகின்றனர். எனவே, அடிமை முறை ஒழிக்கப் பட்டு விட்டதாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. குறிப்பாக, வீடுகளில் வேலை செய்யும் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



இதுகுறித்து, ஐ.நா., சிறப்பு அதிகாரி குல்னரா ஷாகினியான் கூறியதாவது:வீட்டு வேலை செய்வோர், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல் வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அங்கு அவர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. மனித நேயத் துக்கு எதிரான செயல்கள் அரங்கேற்றப் படுகின்றன.இதுபோன்ற அடிமை முறை பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, குழந்தை தொழிலாளர்கள், தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு, எஜமானர்களிடம் நிரந்தரமாக வேலை பார்க்கும் அவலம் உள்ளது.



இதனால், அவர்கள் எந்த ஒரு சிறிய விஷயத்திற்கும் எஜமானர்களையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.வீடுகளில் வேலை பார்க்கும் ஆண்களை அடிப்பது, வீட்டை விட்டு வெளியேற முடியாமல், வீட்டுக்குள்ளேயே தங்க வைப்பது, மற்றவர்களிடம் பேசுவதற்கு அனுமதி மறுப்பது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். பெண்கள், உடல் ரீதியான பாதிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். குடும்ப சூழ்நிலை, கடன், வேலை போய்விடுமோ என்ற பயம் போன்ற காரணங்களால், இவர்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை வெளியில் கூறுவது இல்லை.ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு சென்று, வீட்டு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தான், அதிகபட்ச கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.



மொழி தெரியாதது, வெளிநாட்டு சட்ட திட்டங்கள் தெரியாதது போன்றவற்றால் இவர்கள் அதிகம் பாதிப்புக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, தொழிலாளர்களின் பாஸ்போர்ட்களை, எஜமானர்கள் கைப்பற்றி வைத்துக் கொள்வதால், அவர்களால் நாடு திரும்ப முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.இவ்வாறு குல்னரா கூறினார்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசுக்குத் தமிழ்மக்கள் வாக்களிப்பு? : ஆய்வு

 
 
வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்ற கேள்வி எழுகிறது. தமிழ்மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தவரும் இருந்து வருபவருமான மகிந்த ராசபக்சவுக்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. எனவே அவருக்கு எதிராக தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்.......

இது குறித்து நக்கீரன் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை:-

இரண்டு ஆண்டுகாலம் பதவியில் நீடிக்கச் சட்டப்படி வாய்ப்பிருந்தும் ஆட்சித்தலைவர் மகிந்தா ராசபச்ச ஆட்சித்தலைவருக்கான தேர்தலை முன்கூட்டி நடத்த முடிவு செய்துள்ளார். 

தேர்தலுக்கான வேட்பு மனு இம் மாதம் 16 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் எதிர்வரும் சனவரி 26 ல் நடைபெற இருக்கிறது. 

ஆட்சித்தலைவர் தேர்தலை இரண்டு ஆண்டுகாலம் கழித்து நடத்தாமல் இப்போது ராசபக்ச நடத்துவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியை வாக்குகளாக மாற்றி அதனை அறுவடை செய்யலாம் என மகிந்தா ராசபக்ச நினைக்கிறார். 

விடுதலைப் புலிகளைப் போரில் அழித்தொழித்த காரணத்தால் ராசபக்ச சிங்கள மக்களிடம் தான் ஒரு நவீன துட்ட கைமுனு என்ற மிதப்போடு வலம் வருகிறார். அரச சார்பு ஊடகங்களும் அரசு கட்டுப்பாடு ஊடகங்களும் ராசபக்சவை அப்படித்தான் வருணிக்கின்றன. அவர்தான் நாட்டின் அரசன் என்றுகூட சில ஊடகங்கள் புகழாரம் சூட்டி மகிழ்கின்றன. 

மூன்று சகாப்தங்களுக்கும் மேலான "பயங்கரவாதத்தை" முறியடித்த சிங்கள – பெளத்த வீரர் என்ற முறையில் மகிந்த ராசபக்ச மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் தேர்தலில் வெற்றிவாகை சூட வேண்டும். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணம் நீங்கலாக சிங்கள மாகாணங்களில் மகிந்த ராசபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரு வெற்றி பெற்றிருக்கிறது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என ஒரு காலத்தில் கருதப்பட்ட மேல்மாகாணத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் ராசபக்சவின் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த வெற்றி முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் அரசியல் வருகையால் கைக்கு எட்டாத தூரத்திற்குப் போயிருக்கிறது. 

ராசபக்சவும் சரத் பொன்சேகாவும் ஆளை ஆள் சரமாரியாக விமர்ச்சிக்கத் தொடங்கியுள்ளார்கள். 

"நேற்றைய கதாநாயகர்கள் இன்றைய துரோகிகளாக மாறுகிறார்கள்" ("yesterday's heroes turning today's traitors") என சரத் பொன்சேகாவை ராசபக்ச சாடியுள்ளார். 

ஒரு இராணுவப் புரட்சி மூலம் தனது ஆட்சியைக் கவிழ்க்க பொன்சேகா திட்டம் தீட்டினார் என்று ராசபச்ச குற்றம் சாட்டினார். இராணுவப் புரட்சியா? அப்படியொன்றும் இல்லை, இது வெறும் புரளி என்றார் பொன்சேகா. 

சரத் பொன்சேகா தான் ஒருபோதும் தோல்வியைக் கண்டிராத ஒரு இராணுவ தளபதி என்று மார்தட்டுகிறார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தன்னை உலகிலேயே சிறந்த இராணுவ தளபதி என்று குறிப்பிட்டிருந்ததாகவும் பொன்சேகா கூறுகிறார். 

"இல்லை அவர் இதற்கு முன்னர் வி.புலிகளுக்கு எதிரான போரில் பல களமுனைகளில் தோல்வி கண்டவர்" என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராசபக்ச ஏளனம் செய்கிறார்.

முகமாலைப் போர்முனையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மூன்று முறை படையெடுத்து மூன்று முறையும் தோல்வி கண்டவர் என்றும், 500 சிங்கள இராணுவத்தினரைப் பலி கொடுத்தவர் என்றும் அவர் ஒரு இராணுவ மேதாவி என்றோ யுத்த கதாநாயகன் என்றோ உரிமை கோர முடியாது என்று கோத்தபாய ராசபக்ச கூறுகிறார். 

ஆட்சித்தலைவி சந்திரிகா குமாரதுங்காவுக்கு 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த 40,000 சிங்கள இராணுவத்தினரை திருப்பி எடுக்குமாறு பரிந்துரை செய்தவர்களில் பொன்சேகாவும் ஒருவர் என்ற குற்றசாட்டும் பொன்சேகா மீது வீசப்படுகிறது. 

இப்படி மாறி மாறி ராசபக்சவும் பொன்சேகாவும் ஆளுக்கு ஆள் சேற்றை வாரி இறைக்கிறார்கள். 

மகிந்த ராபக்சவைப் பொறுத்தளவில் தன்பக்கம் நிற்காத அனைவருமே துரோகிகள் என்பது அவரது சிந்தனையாகும். 

போர்க்காலத்தில் தோளோடு தோள் நின்று போர்க்கள வெற்றியை வெடிகொளுத்தி நாடு முழுதும் பறையறைந்து கொண்டாடிய இந்த இரண்டு "போர்க் கதாநாயகர்" களும் எப்படி பரம எதிரிகளாக மாறினார்கள்? 

எல்லாம் போர்க்கள வெற்றிக்கு யார் காரணம்? அந்தப் பெருமை யாருக்கு உரியது? என்ற சண்டைதான். 

போர் வெற்றிக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவா அல்லது அரசியல் தலைவர் மகிந்தா ராசபக்சவா என்பதில்தான் சண்டை! இந்தச் சண்டை குழாயடிச் சண்டையாக இன்று மாறியிருக்கிறது. அது கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கிறது! 

எது எப்படியிருப்பினும் மகிந்த ராசபக்ச சரி, சரத் பொன்சேகா சரி இருவருமே தமிழ்மக்களைப் பொறுத்தளவில் கொலைகாரர்களே! முன்னவர் வன்னி மக்களை கொல்லச் சொன்னார், பின்னவர் அவர்களைக் கொன்று முடித்தார். 

போர் முடிந்த பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சரத் பொன்சேகா வெளிப்படையாகவே பயமுறுத்தியிருக்கிறார். 

இந்த நிலையில் தமிழ்மக்கள் யாரை ஆதரிப்பது என்ற கேள்வி எழுகிறது. தமிழ்மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தவரும் இருந்து வருபவருமான மகிந்த ராசபக்சவுக்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. எனவே அவருக்கு எதிராக தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் இருவித கருத்துக்கு இடமில்லை. அப்படியென்றால் தமிழ்மக்கள் அடுத்து யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் முன்னுள்ள தேர்வு என்ன? 

(1) இரண்டும் பிசாசுகள் அல்லது பாம்புகள் அல்லது கொள்ளிக் கட்டைகள் இதில் நல்லது கெட்டது என்ற ஆராயாமல் தேர்தலைப் புறக்கணிப்பது. 

(2) தமிழ்மக்களின் முக்கிய எதிரியான ராசபக்சவை வீழ்த்த பொன்சேகாவுக்கு வாக்களிப்பது. 

(3) தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தேர்தலில் போட்டியிட வைப்பது. 

(4) இரா.சம்பந்தனை ஆதரித்து வாக்களிக்கும் தமிழ் வாக்காளர்கள் விருப்பு வாக்கை ராசபக்ச இரண்டாவது சுற்றில் வெற்றிபெறுவதைத் தடுக்கும் பொருட்டு பொன்சேகாவுக்கு அளிப்பது. 

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது சம்பந்தனை தேர்தலில் போட்டியிட நிறுத்துவதா இல்லையா என்பது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் கூடி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. முடிவு அறிவிக்கப்படவில்லை. 

தேர்தலில் மகிந்த ராசபக்ச 50 விழுக்காட்டுக்கு மேலான வாக்குகளைப் பெற்றால் தமிழ்மக்கள் பொன்சேகாவுக்குப் போட்டாலும் சரி சம்பந்தனுக்குப் போராட்டாலும் சரி தேர்தல் முடிவில் மாற்றம் இருக்காது. 

தேர்தலில் ராசபக்சவும் பொன்சேகாவும் 50 விழுக்காட்டுக்குக் குறைவான வாக்குகளைப் பெற்றால் மட்டுமே சம்பந்தனுக்குப் போட்ட வாக்குகள் முதல் சுற்றில் பொன்சாகாவின் வெற்றியைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. 

இந்தத் தேர்தல் 2008 இல் எடுத்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 14,088,500 ஆகும். இதில் இன்று குறைந்த பட்ச தமிழ் வாக்காளர்களது (வடகிழக்கு, மலையகம், மேல்மாகாணம் உட்பட முழு இலங்கையிலும்) விழுக்காடு 15 என எடுத்துக்கொள்ளலாம். 

(1981 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணிப்பின் படி இலங்கைத் தமிழர் 12.71 மலையகத்தமிழர் 5.51 (1971 - 9.26) மொத்தம் 18.22 விழுக்காடு). 

மொத்தம் 14 மில்லியன் வாக்குகளில் 70 விழுக்காட்டினரே தேர்தலில் கலந்து கொள்வார்கள் என்று எடுத்துக் கொண்டால் 9.8 மில்லியன் வாக்காளர்களே (2005 - 9,717,039) தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் 15 விழுக்காடு வாக்குகளின் தொகை 1.47 மில்லியன் (14.7 இலட்சம்) ஆகும். 

தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமையலாம் என ஒரு எதிர்வு கூறலாம். 

மகிந்த ராசபக்ச - 47 விழுக்காடு 

சரத் பொன்சேகா - 45 விழுக்காடு 

இரா. சம்பந்தன் - 7 விழுக்காடு 

மற்றவர்கள் - 1 விழுக்காடு 

இப்படியான முடிவு இரா. சம்பந்தனுக்கு போட்ட வாக்குகள் பொன்சேகாவின் வெற்றியைப் பாதித்து விட்டது என்பது சரியாகி விடும். சம்பந்தன் கேட்காது இருந்திருந்தால் பொன்சேகா 52 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதல் சுற்றிலேயே வெற்றி பெற்றிருப்பார் என்று எண்ணத் தோன்றும். 

ஆனால் கதை இதோடு முடிந்து விடாது. எந்த வேட்பாளருக்கும் 50 + விழுக்காடு வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் வெற்றி தோல்வி முதல் இரண்டு வேட்பாளருக்கும் கிடைத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையே முடிவு செய்யும். அதாவது தேர்தலில் ஒருவர் இரண்டு வாக்குகளைப் போடமுடியும். இரா. சம்பந்தருக்குப் போட்ட 7 விழுக்காடு (மொத்த தமிழ்வாக்களர்களது வாக்குகளில் பாதி) வாக்காளர் தங்களது விருப்பு வாக்குகளை பொன்சேகாவுக்கு போட்டிருந்தால் அவர் வெற்றிபெறுவார். ஆனால் இதிலும் ஒரு சிக்கல். சிங்கள வாக்காளர்களது விருப்பு வாக்குகள் யாருக்கு அதிகம் என்பதில் இருந்தே இறுதி வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும். 

இரா.சம்பந்தனை வேட்பாளராக நிறுத்துவதால் தமிழர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? 

(1) தமிழ்மக்கள் சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட இனம் என்பதையம் அவர்களது அரசியல் வேட்கை வேறு என்பதையும் உலகுக்கு எடுத்துக் காட்டலாம். 

(2) அனைத்துலக நாடுகளுக்கு போர் முடிந்தாலும் தமிழர்களது அரசியல் போராட்டம் தொடர்கிறது என்பதை எடுத்துக் காட்டலாம். 

(3) தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் வேட்கைகளுக்குத் தீர்வு காண்பதற்கான எந்தத் திட்டமும் ராசபக்ச சரி, பொன்சேகா சரி இருவரிடமும் இல்லை என்பதை ஊருக்கும் உலகுக்கும் அம்பலப்படுத்தலாம். 

(4) 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு உட்பட்ட எந்தத் தீர்வையும் தமிழ்மக்கள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்ற உண்மையை உலகுக்குக் குறிப்பாக இந்தியாவுக்கு உறைப்பாக உணர்த்தலாம். 

(5) தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை மீண்டும் வலியுறுத்தி அதற்கு வலுச் சேர்க்கலாம். 

( 6) ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா, புளட் சித்தார்த்தன், கருணா, பிள்ளையான், ஆறுமுகன் தொண்டமான், சந்திரசேகரன, ஆனந்தசங்கரி போன்றோரை தமிழ்மக்களை சிங்களவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும் அல்லது கூட்டிக் கொடுக்கும் அற்ப சலுகைகளுக்காக முழங்காலில் கையேந்தி நிற்கும் எட்டப்பர்கள், காக்கை வன்னியர்கள் எனச் சித்திரித்துக் காட்டி கொடுங்கோலன் ராசபக்சவுக்கு அவர்கள் வழங்க இருக்கும் நிபந்தனையற்ற ஆதரவை மழுங்கடிக்கலாம். 

(7) 2010 ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கு இந்தத் தேர்தல் முன்னோடியாக அமையலாம். 

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் எதிர்வரும் ஆட்சித்தலைவர் தேர்தலில் தமிழ் வாக்காகளர்கள் தமிழினத்தின் முதல் எதிரியான ராசபக்சவைத் தோற்கடிக்க இரண்டாவது எதிரியான சரத் பொன்சேகாவுக்கு இடது கையால் வாக்களிக்க வேண்டும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் இரா. சம்பந்தன் நிறுத்தப்பட்டால் அவருக்கு முதல் வாக்கையும் இரண்டாவது விருப்பு வாக்கை பொன்சேகாவுக்கும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.

நக்கீரன் 

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஆக்ஸ்போர்டில் உறங்கும் தமிழ் மாணவர்!

 

ஜே.எம்.சாலி

யாம் அறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினார், பல மொழி கற்ற பாரதியார். அதற்கு முன்பே, அந்தச் சிறப்பை பறை சாற்றினார், ஓர் ஆங்கிலேயப் பாதிரியார். தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை, பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உலகறியச் செய்தார், இங்கிலாந்து நாட்டில் பிறந்த அவர். பல மொழி கற்றவர்களால் தான், ஒரு மொழியின் உயர்வையும், தனிச் சிறப்பையும் எடுத்துரைக்க முடியும். ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட அவர், லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளும் கற்றவர். எனினும், தமிழ் மீது அவருக்கு தணியாத காதல். 66 ஆண்டு, தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்காக, வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழ் இலக்கியங்களை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்காக, சொந்த சேமிப்பு அனைத்தையும் செலவிட்டார்.

"தேமதுரத் தமிழோசை, உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்று பாரதியார் பாடுவதற்கு முன்பே, அந்தப் பணியைச் செய்தார் அவர். யார் அவர் என்ற கேள்விக்கு விடை தேவையா? டாக்டர். ஜி.யூ.போப். எந்தத் தமிழனும் சொல்லாத ஒன்றைச் சொல்லி, அதை நிறைவேறச் செய்தவர் அவர். "நான் காலமானதும், தமிழ் மாணவனின் கல்லறை இது என்று எழுதி வைக்கப்பட வேண்டும்!' என்றார்.

"ஒரு தமிழ் மாணவன் இங்கே உறங்குகிறான்...' என்று, நினைவுச் சின்னத்தில் வரையப்பட வேண்டும் என்று விரும்பினார்.

ஆக்ஸ்போர்டில், அந்த நினைவுச் சின்னத்தைக் கண்டு நெகிழும் அரிய வாய்ப்பு கிடைத்தது. தென்னிந்தியாவின் எஸ்.எம்.ஜார்ஜ் உக்லோ போப், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தேவாலய கல்லூரியின் தமிழ், தெலுங்கு விரிவுரையாளர்.

பிறப்பு: ஏப்ரல் 24, 1820. மறைவு: பிப்ரவரி 11, 1908. வாழ்நாள் முழுவதும், அவர் ஆற்றிய கீழ்த்திசை இலக்கிய, தத்துவ ஆய்வுப் பணிகளின் நினைவாக, அவருடைய குடும்பத்தினரும், தென்னக தமிழ் நண்பர்களும் நாட்டி வைத்த நினைவுச் சின்னம்.

தமிழ் மாணவர் எனும் பெருமிதத்துடன், இறுதி வரை தொண்டாற்றி மறைந்த ஜி.யூ.போப்பின் கல்லறையை, ஆங்கில வாசகங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அமைதி தவழும் அந்த இடத்தில் மரியாதை செலுத்திய நேரத்தில், மாணவப் பருவத்திலும், அதற்குப் பிறகும், அவரைப் பற்றி படித்தறிந்தவை நினைவில் திரை விரித்தன.

தஞ்சையில் ஜி.யூ.போப்பை அறியாத தமிழ் மாணவர்கள் அன்று இருந்ததில்லை; அறியாத தலைமுறையினருக்கு, அவரைப் பற்றிய அறிமுகம் அவசியம் தான். ஜான் போப் - கேத்தரின் உக்லோ தம்பதியரின் இரண்டாம் மகனாக, 1820ல் பிறந்தார் ஜார்ஜ் உக்லோ போப். கிறிஸ்தவ சமயப் பணிபுரிய, 19 வயதில் சென்னைக்குப் பயணமானார். தமிழும், சமஸ்கிருதமும் கற்கத் துவங்கினார். இங்கிலாந்து திருச்சபையில் இணைந்து பாதிரியார் ஆன அவர், தஞ்சாவூரில், 1845ல் பணியைத் துவங்கினார்.

தமிழக மக்களிடம், சமய போதனை செய்வதற்கு, தமிழ்ப் பயிற்சி தேவை என்பதை உணர்ந்தார்.உரையாடுவதற்காக தமிழ் கற்கத் துவங்கியவர், அது ஒரு இலக்கியக் கடல் என்பதை உணர்ந்தார். தமிழ் இலக்கியங்களில் ஊறித் திளைக்கத் துவங்கினார். தஞ்சையில், ஒரு தொடக்கப் பள்ளியை சீரமைத்தார். உயர்நிலைப் பள்ளியாக மேம்படுத்தி, அதன் முதல்வர் பொறுப்பையும் ஏற்றார். 1884ல், கல்லூரியாக அதை மாற்றி, சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில், ஊட்டியில் ஆங்கிலப் பள்ளியையும், பெங்களூரூவில் ஒரு பள்ளியையும் நிறுவினார்.
ஜி.யூ.போப், தன் 62ம் வயதில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், இங்கிலாந்துக்குத் திரும்பினார். மான்செஸ்டரிலும், ஆக்ஸ்போர்டிலும், கல்விப் பணி தொடர்ந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், 1890 வரை, தமிழ், தெலுங்கு மொழி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அந்த காலக் கட்டத்தில் தான், 1886ல், சிலருடன் சேர்ந்து, திருக்குறளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்த நூலுக்கு அவர் வழங்கிய முன்னுரை, திருக்குறள் விளக்கவுரைகள், வியப்பில் ஆழ்த்துகின்றன.

அடுத்து, நாலடியார் ஆங்கில மொழிபெயர்ப்பை, 1893ல் வெளியிட்டார். திருவாசகத்துக்கு உருகியவர் போப். மாணிக்க வாசகர் மீது, அவருக்கு அதிக மதிப்பு. திருவாசக மொழி பெயர்ப்பும், ஆய்வும், அவருக்கு சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.

ஜி.யூ.போப், அந்த ஆய்வை 1903ல் வெளியிட்ட போது, "ராயல் ஏஷியாடிக் சொசைட்டி' எனும் அரச ஆசியக் கழகம், அவருடைய கீழ்த்திசை மொழி அறிவாற்றலைப் பாராட்டி, தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது.

பிப்., 11, 1908ல், தன் 88வது வயதில் இறப்பெய்தினார் போப். ஆக்ஸ்போர்டு நகரில், அவர் உலா வந்த இடங்களைக் காணவும், அவரைப் பற்றிய அரிய தகவல்களைக் கேட்டு அறியவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நகரின் தமிழ்ச் சங்கம், பல குறிப்புகளைத் தந்தது. அவரைப் போன்ற கடின உழைப்பாளியைக் காண்பது அரிது. முழு நேர போதனையுடன், தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம், பிரிட்டிஷ் அரும்பொருளக நூலகத்திற்காக, தமிழ் இலக்கியங்களின் அட்டவணைப் பட்டியலைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். கல்வி நிதி திரட்டி உதவுவதற்காக, ஆக்ஸ்போர்டில் சொற் பொழிவுகளை நடத்தி வந்தார்.

போப்பின் பேத்தி டோரத்தி போப் அவரைப்பற்றி விவரிக்கிறார்...

கிறிஸ்துவத்தைச் சார்ந்த அவர், சைவம், வைணவம், புத்தம், சமணம், யூதம், இஸ்லாம் அனைத்தையும் ஆய்ந்து தெளிந்தவர். எண்பது வயதை எட்டிய பிறகு, திருவாசகத்தை மொழி பெயர்க்கத் துவங்கி, ஆய்வுக் கட்டுரை வரைந்தார்.

போப், தமிழ் ஆய்வுப் பணிகளைப் பார்த்த பிறகு, படித்தறிந்த பிறகு தமிழக அறிஞர்கள் புத்தெழுச்சி பெற்று, ஆய்வுப் பணிகளில் இறங்கினர் என்று திராவிட மொழி அறிஞர் கால்டுவெல் கூறுகிறார்.

சைவ சித்தாந்த ஆய்வில், போப் துறைபோனவர் என எழுதுகிறார் ஆங்கில அறிஞர் பிரேசர். ஆசிரியர், சமய போதகர், ஆய்வாளர் என பல துறை ஈடுபாடுடையவர் ஜி.யூ.போப். ஆங்கிலம் பேசும் உலகில், குறிப்பாக, ஐரோப்பாவில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும் பரப்பிய முன்னோடி அறிஞர் அவர்.


source:nakkeran-- 

www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்த வார டவுண்லோட்

 
 

ஷ்யூர் டெலீட்
கம்ப்யூட்டரிலிருந்து நீங்கள் உருவாக்கிய பைல் ஒன்றை டெலீட் செய்துவிட்டீர்கள். அது அழிந்து போய்விட்டதா? நீக்கப்பட்டுவிட்டதா? யாரும் பார்க்க முடியாதபடி காணாமல் போய்விட்டதா? இல்லை, இல்லவே இல்லை. அந்த பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் சென்று தங்கலாம். நீங்கள் புத்திசாலியாய் இருந்தால், அதிலிருந்தும் அழித்துவிட்டிருக்கலாம். ஆனால் அப்போதும் அது கம்ப்யூட்டரிலிருந்து அழிவதில்லை. உங்கள் கம்ப்யூட்டர் அதனை அழிப்பதில்லை. அதற்குப் பதிலாக, அந்த பைல் இருந்த இடத்தை, அடுத்த பைல் வந்து தங்கலாம் என்று அறிவிக்கிறது. எனவே திறமையாக எழுதப்பட்ட ஒரு புரோகிராம் அந்த பைல் இருக்கும் இடத்தை, விதத்தை அறிந்து. பின் மீண்டும் மீட்டு உங்களுக்குத் தரலாம். அல்லது அடுத்தவர்கள் அதனைக் கண்டறியலாம். குறிப்பாக இந்த பைல்களில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களான, பேங்க் அக்கவுண்ட் எண், பாஸ்வேர்ட் ஆகியவை இருந்தால் அவை எந்த நிலையிலும் மற்றவர்களுக்குச் சென்றுவிடக்கூடாது. 
எப்படி ரகசியசெய்தி எழுதிய தாள் ஒன்றை நாம் கிழித்துப் போட்டாலும், பொறுமையான நபர் ஒருவர் அந்த துண்டுகளைப் பொறுக்கி எடுத்து, ஒட்டி தகவலைத் தெரிந்து கொள்ளலாமோ, அதே போல கம்ப்யூட்டரில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட ஒரு பைலை யார் வேண்டுமானாலும், சரியான புரோகிராம்கள் வழியாக எடுத்துக் கொள்ளலாம்.
தாள்களை, ஜஸ்ட் கிழிக்காமல் கடுகளவு துண்டுகளாக வெட்டி எறியும் ஷ்ரெடர் போல, நான் அழிக்கும் கம்ப்யூட்டர் பைல்கள் ஆக வேண்டும் என விரும்புகிறீர்களா! கவலையே வேண்டாம். அதற்கெனவே ஒரு சிறந்த புரோகிராம் உள்ளது. அதன் பெயர் Sure Delete. இதன் பதிப்பு 5.1.1., அண்மையில் வெளியானது. இந்த புரோகிராம் பைல்களில் உள்ள டேட்டாவினை நுணுக்கமாக அழிக்கிறது. பைல்களை மட்டுமின்றி ஒரு போல்டர் முழுவதையும் இதே போல் அழிக்க வேண்டும் என விரும்பினாலும் அழிக்கலாம். இந்த புரோகிராம் அழிக்கப்படும் ஒரு பைலின் மீது மாறான தகவல்களை குயிக் வைப் (Quick Wipe) என்ற திட்டத்தில் நான்கு முறை, டிபன்ஸ் துறை என்ற வகையில் ஏழு முறை மற்றும் சூப்பர் செக்யூர் வகையில் 24 முறை என மூன்று வகைகளில் எழுதுகிறது. இதனால் எந்த ரெகவரி பைல் மூலம் முயற்சி செய்தாலும், பைல்களை மீண்டும் எடுக்க முடியாது. ஷ்யூர் டெலீட்FAT12, FAT16, FAT32, and NTFS மற்றும் ஆகிய பைல் பார்மட்டுகளில் முழுமையான முறையில் செயல்படுவது உறுதி செய்யப் பட்டுள்ளது. எனவே விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரை இதனைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பைல் விரைவில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கும். இதனை இன்ஸ்டால் செய்து இயக்குவதும் எளிதானதாகும். தேவை இல்லை என்றால் கம்ப்யூட்டரிலிருந்து இதனை எடுத்துவிடலாம்.



விண்டோஸ் ஆன்லைன் டிரைவ்
என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக்கடியான வேளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடைகிறோம். இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். 
குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஆன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும். 
இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகையில் கிடைப்பதுதான் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் (Windows Live SkyDrive) வசதியாகும். 
இந்த டிரைவில் பைல்களை சேவ் செய்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேவ் செய்திடலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 போட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு உண்டு. அத்துடன் இந்த பைல்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட்(Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு (Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக் (Public) என வகைப்படுத்த வேண்டும். 
இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்? http://skydrive.live.com  என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி, ஒரு மெம்பர் ஆக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று பைல்களை அப்லோட் செய்திடலாம். உங்கள் பைல்கள் வைத்திடும் டிரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற ஹார்ட் டிஸ்க் டிரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம். இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைக்காமல் ஆன்லைன் டிரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இராணுவ நடவடிக்கைகளினால் தமிழீழத்தில் ஏற்பட்ட இயற்கைவள அழிவுகள்


 

vanni_azhivu20ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சக்கட்டமாக வளர்ந்து வரும் உற்பத்தி தொழில் நுட்ப முன்னேற்றம் என்பன உலகின் இயற்கைச் சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவதனைக் காணமுடிகின்றது. இதனால் அழிக்கப்படுகின்ற அல்லது குழப்பமடைகின்ற இயற்கைச் சூழலின் எதிர்வினை காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. இதனால் புவியின் வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு வடதுருவப் பனிப்பாறைகள் உருகுவதனால் உலகின் சில நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சமூக ஆர்வலர்கள் 21ஆம் நூற்றாண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பெரும் பிரயத்தனம் மேற்கொண்டிருக்கின்றனர்

இந்த வகையில் இலங்கையின் சுற்றுச் சூழல்ப் பாதுகாப்பு என்பது அரசினைப் பொறுத்தவரை மிகக் கசப்பானதொன்றாகவே கணிக்கப்படுகின்றது. கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையின் வடக்குக் கிழக்கில் ஏற்பட்ட தீவிரமான யுத்தம் அப்பகுதியின் மக்களை மாத்திரமல்ல இயற்கை வளத்தையும், மிகப்பாரதூரமாகவே சீரழி;த்துவிட்டிருக்கிறது.

வட – கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரமாண்டமான இராணுவ நடவடிக்கைகள் வட – கிழக்கின் இயற்கை காடுகளையும், பயன்தரு மரங்களையும் பெருமளவில் அழித்து இப்பிரதேசங்களின் சுற்றுச் சூழலை பெருமளவில் பாதித்திருக்கும் வகையினை நோக்குவோம்.

இலங்கையின் வட – கிழக்கு காடழிப்பு என்று பெரும்படியாகக் குறிப்பிட்டாலும் வடக்கில் நிகழ்ந்த காடழிப்புக்களே உத்தேச மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டதாக அல்லது அறியப்பட்டதாக உள்ளது. கிழக்கில் நிகழ்ந்த அழிவுகள் இத்தொடரில் ஆராயப்படவில்லை. ஆகவே வடக்கில் நிகழ்ந்த பெருமெடுப்பிலான காடழிப்பு நடவடிக்கையை நோக்குவோமாயின் 1996 இல் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி மேற்கொள்ளப்பட்ட எடிபல இராணுவ நடவடிக்கை மூலம் ஏ30, ஏ14 ஆகிய இரு வீதிகளின் இரு மருங்கிலும் சராசரி 50 தொடக்கம் 100 மீற்றர் வரையான அகலமாக உள்ள காடுகள் அழிக்கப்பட்டு அவை இராணுவ பாதுகாப்பு வேலிகளுக்குள் விழுங்கப்பட்டு விட்டன.

இதில் மதவாச்சியிலிருந்து மன்னார் செல்லும் ஏ14 வீதியில் செட்டிகுளத்திலிருந்து பறையனாலங்குளம் ஊடாக கட்டையடம்பன் வரை கிட்டத்தட்ட 30 கிலோ மீற்றர் தூரத்திற்கு வீதியின் இருமருங்கிலும் உள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே வவுனியா – மன்னார் ஏ30 வீதியில் பூவரசங்குளத்திலிருந்து பறையனாலங்குளம் வரையாக கிட்டத்தட்ட 25 கிலோ மீற்றர் நீளமான பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் சராசரி கிட்டத்தட்ட 50 தொடக்கம் 100 மீற்றர் வரையாக உள்ள காடுகள் அழிக்கப்பட்டன. அத்தோடு ஏ30 வீதியின் வடபுறத்தே அமைக்கப்பட்ட பாதுகாப்பு மண்அணையும் பெருமளவு இயற்கைக் காடுகளை அழிக்கவைத்ததோடு சிற்றாறுகளின் நீரோட்டத்திசையினை மாற்றியமைத்து பயிற்செய்கைக்குப் பயன்படுத்தப்படுகின்ற குளங்களின் நீர் வரத்தினை குளத்தின் நீரேந்துப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தியதோடு அவற்றின் போக்கினை திசைதிருப்பி விட்டுள்ளது. மொத்தத்தில் எடிபல இராணுவ நடவடிக்கை வவுனியா – மன்னார் மாவட்டங்களின் இயற்கைக் காடுகளின் ஏறக்குறைய 1300 ஏக்கர் பரப்பளவு அழிக்கப்பட்டு விட்டது. இதற்கான மீள்நடுகை இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை.

அடுத்து 1997 – 1999 வரையான காலப்பகுதிகளில் இடம்பெற்ற ஜயசிக்குறூய் இராணுவ நடவடிக்கை மிகப்பெரியளவிலான காடழிவுக்கு காரணமாயிற்று. ஏ9 வீதிவழியே ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் மாங்குளம் வரையான பகுதிகளில் வீதியின் இரு மருங்கிலும் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதோடு ஓமந்தையிலிருந்து – மாங்குளம் வரையான 40 கிலோ மீற்றர் நீளமான பகுதிகளில் ஆங்காங்கே காணப்படுகின்ற குடியிருப்புக்கள் தவிர்ந்த பகுதிகளில் உள்ள காட்டு மரங்கள் அழிக்கப்பட்டதோடு இப்பிரதேசத்திலிருந்த பயன் தரு தென்னைமரங்கள் முற்றுமுழுதாக இராணுவத் தேவைகளுக்கான இராணுவத்தால் அழிக்கபட்டுள்ளது.

ஜயசிக்குறூய் நடவடிக்கையின் இறுதிக்கட்ட எல்லையாக விளங்கிய மாங்குளத்;திலிருந்து கிழக்காக முல்லைத்தீவு செல்லும் ஏ34 வீதியில் ஒட்டுசுட்டான் வரையான 27 கிலோ மீற்றர் நீளப்பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் உள்ள காடுகள் 50 – தொடக்கம் 100 மீற்றர் வரையான காட்டுமரங்கள் அழிக்கப்பட்டது. அத்தோடு வீதியின் வடபுறத்தே அமைக்கப்பட்ட மண் அணை பாதுகாப்பு அரணுக்காகவும் காடுகள் அழி;க்கப்பட்டன.

மாங்குளப் பிரதேசத்தில் மாங்குளம் – மூன்றுமுறிப்பு – வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, காடுவளர்ப்புத் திட்டத்தினால் வளர்க்கப்பட்ட தேக்கங் காடுகளும், மற்றும்புதூர் பகுதியிலும், புளியங்குளம் பகுதியிலும், பன்றிக்கெய்தகுளம் பகுதியிலும் இருந்த தேக்கம் காடுகளும் முற்று முழுதாக தறித்து எடுக்கப்பட்டு தென்னிலங்கைக்கு திருட்டுத்தனமாக இராணுவ அதிகாரிகளாலும், அரசியல் வாதிகளாலும் கொண்டு செல்லப்பட்டது. அதே போல மாங்குளத்திற்குக் கிழக்கே ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள தேக்கம் காடுகளும் முற்றுமுழுதாக வெட்டிச் செல்லப்பட்டு விட்டது. இதன்மூலம் மாங்குளம் பிரதேசத்தில் வளர்க்கப்பட்ட கிட்டத்தட்;ட 1000 ஏக்கர் தேக்கங்காடுகள் அழியுண்டு போயின.

ஜயசிக்குறூய் நடவடிக்கையின் கிழக்கு முனை இராணுவ நகர்வின் மூலம் மணலாற்றிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வீதியிலும், நெடுங்கேணி – வெடிவைத்தகல்லு வீதியிலும் இருமருங்;கிலும் இருந்த காடுகளை அழித்ததோடு நெடுங்கேணியிலிருந்து – குளவிசுட்டான் – கோடாலி பறிச்சான் ஊடாக ஏ34 வீதியில் உள்ள மணவாளன்பட்டமுறிப்பு வரை காடுகளுக்கூடாக

30 கிலோ மீற்றர் நீளமுடைய ஒரு புதிய பாதையை அமைத்து அதன் இருமருங்கிலும் உள்ள காடுகளை அழித்திருக்கின்றனர். ஒட்டுசுட்டான் – நெடுங்கேணியூடாக மணலாற்றிலுள்ள டொலர், கென்ற் பண்ணைகள் வரை கிட்டத்தட்ட 40 கிலோமீற்றர்களுக்கு தொடர் மண்அணைப் பாதுகாப்பை அமைப்பதற்காகவும் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஏ9 வீதிக்குக் கிழக்கே 2500 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக உத்தேச மதிப்பீடுகள் கூறுகின்றன. ஆனால் இதன் பரப்பு மேலும் அதிகம்.

அடுத்து ஜயசிக்குறூய் இராணுவ நடவடிக்கையில் ஏ9 வீதியின் மேற்குப்புறத்தே அமைந்திருந்த யாழ் புகையிரதப் பாதையை கிரவல் பாதையாக மாற்றி போக்குவரத்திற்கு பயன்படுத்தியதோடு அதன் மேற்குப்புறம் ஒரு பாதுகாப்பு மண்அணையை நொச்சிமோட்டையிலிருந்து – புளியங்குளம் வரை இரும்புப் பாதைக்குச் சமாந்தரமாகவும் பின்பு சற்று மேற்கு நோக்கி வளைந்து புதூர் – புதுவிளாங்குளம் ஊடாக வன்னிவிளாங்குளம் வரை காடுகளுக்கூடாக கிட்டத்தட்ட 50 கிலோமீற்றர்கள் நீளத்திற்கு மண்அணை உருவாக்கப்பட்டது. இதன்மூலம் 1300 ஏக்கர் நிலப்பரப்புக் காடுகள் அழியுண்டன.

இவ்வாறே பிரமலானங்குளத்திலிருந்து – மடு, – பாலம்பிட்டி, – பெரியமடு, – பள்ளமடு வீதியிலும் இராணுவப் பாதுகாப்பிற்காக இருமருங்கிலும் உள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அத்தோடு பள்ளமடுவிலிருந்து காடுகளுக்கூடாக சிறாட்டிகுளம் – பனங்காமம் – மூன்றுமுறிப்பு – வன்னிவிளாங்குளம் – மாங்குளம் ஆகிய இடங்கள் வரை தொடுத்து உருவாக்கப்பட்ட மண்அணைப் பாதுகாப்பு வேலியும், மண் அணைக்கு வெளியே பாதுகாப்புக்கென 50 தொடக்கம் 100 மீற்றர் வரையான காட்டுமரங்கள் தறித்தழிக்கப்பட்டதனால் ஏற்பட்ட இழப்பு 1000 ஏக்கர்களுக்கு மேல்.

மொத்தத்தில் ஜயசிக்குறூய் நடவடிக்கையில் மண்அணைப்பாதுகாப்பு வேலைகளுக்காகவும், வீதிப்போக்குவரத்துக்காகவும் அழிக்கப்பட்ட பல ஆயிரம் ஏக்கர்கள் பரப்பளவுக் காடுகள் அழிக்கப்பட்தோடு மணலாற்றிலிருந்து – மாங்குளம் ஊடாக – பள்ளமடு வரை அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரணுக்குத் தென்புறத்தே இருந்த பெறுமதி வாய்ந்த வைரமரங்களான பாலை, முதிரை, யாவரணை, சமண்டலை ஆகிய மரங்கள் வகைதொகையின்றி அரிந்தெடுக்கப்பட்டு தென்னிலங்கைக்கு திருட்டுத்தனமாகக் கடத்தப்பட்டன. இது தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பொருளாதாரத் திருடல் என்றே சொல்லலாம் மேற்படி மரங்கள் மீண்டும் வளர்வதற்கு 150 வருடங்கள் தேவைப்படும்.

மேற்குறிப்பிடப்பட்ட பிரதேசத்தில் 1999 விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாதஅலைகள் நடவடிக்கை மூன்றின் மூலம் ஜயசிக்குறூய் பின்வாங்கி தமது பழைய நிலைக்குச் சென்றவுடன் ஏ9 வீதியிலும், வன்னிவிளாங்குளத்திலிருந்து – மாங்குளம் – ஒட்டுசுட்டான் வீதியிலும், நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வீதியிலும் இராணுவத்தால் காடுகள் அழிக்கப்ட்ட நிலங்களில் தேக்கு, மகோகனி (மலைவேம்பு), வேம்பு ஆகிய மரங்கள் 2000 – 2004 ஆகிய காலப்பகுதிகளில் மீள்நடுகை செய்யப்பட்டது. ஆனால் இறுதியாக நடந்த யுத்தத்தின் போது மீள்நடுகை செய்யப்பட்ட மரங்கள் மீண்டும் அழிக்கப்பட்டுவிட்டது.

அடுத்து யாழ்க்குடாநாட்டின் நுழைவாயிலான ஆனையிறவு தொடக்கம் – பளை வரையான பகுதியிலுள்ள இயற்கைத் தாவரம் சதுப்புநில முட்புதற்காடுகளும் பனை மரங்களுமே. இப் பளைப்பிரதேசத்தில் பெரும்பகுதி தென்னைமரப் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பளைக்கு அப்பாலுள்ள முகமாலைப் பகுதியில் கிளாலி தொடக்கம் – முகமாலை – நாகர் கோயில்வரை அமைக்கப்பட்ட இராணுவத் தொடர் வேலியும் மண் அணையும் இராணுவத் தேவைக்காக தறித்தெடுக்கப்பட்ட தென்னை மரங்களின் எண்ணிக்கை 2004 இல் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி 12,000 இற்கும் மேல் சென்றுவிட்;டது. அதன்பின் இறுதி யுத்தத்தின் போது. மேலும் பல ஆயிரம் தென்னைமரங்கள் அழிந்து போயின.

அத்தோடு இப்பிரதேசத்தின் இயற்கைத் தாவரங்களான கண்டல்க் காட்டுத் தாவரங்களும், பனை, மரங்களும் பெருமளவில் இராணுவ பீரங்கி, விமானத் தாக்குதல்களினாலும், பாதுகாப்புத் தேவைகளுக்காகவும் தறித்தழிக்கப்பட்டன. இறுதி யுத்தத்தின் போது இப்பிரதேசத்தின் அழிவுகள் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இன்னும் உத்தேச மதிப்பீடு செய்யப்படவில்லை.

இறுதியாக நடந்த யுத்தத்தின் போது வன்னியி;ன் மேற்குப்புறத்தே நாச்சிக்குடா – அக்கராயன் – முறிகண்டி ஊடான தொடர் பாதுகாப்பு முன்னரண் பகுதி தொடர்ச்சியாக நீண்டநாட்கள் சண்டைகள் இடம்பெற்றதனால் இப்பகுதியில் உருவாக்கப்பட்ட மண் அணைக்காகவும், அகோரக் குண்டுத் தாக்குதல்களினாலும் இராணுவத்திற்கு பாதுகாப்பான போக்குவரத்திற்காக துணுக்காயிலிருந்து அக்கராயன் வரையான வீதிகளின் இருமருங்கிலும் உள்ள பெருமளவிலான காட்டுமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இப்பகுதியின் அழிவுகள் பற்றிய மதிப்பீடு செய்யமுடியாதுள்ளது.

மற்றும் கிளிநொச்சி நகரத்தைக் கைப்பற்றுவதற்காக நடந்த உக்கிர மோதல்களின் போது இராணுவம் பயன்படுத்திய பிரமாண்டமான வெடிபொருள் பயன்பாடு (ஆட்லரி, விமானத்தாக்குதல்) அப்பிரதேசத்தின் பயன்தரு பல்லாண்டுப் பயிர்களான மா, பலா, தென்னை மரங்களை பெருமளவில் அழிவடையச் செய்துவிட்டது. அவ்வாறே பரந்தனிலிருந்து ஏ35 வீதிவழியே புதுக்குடியிருப்புவரை படையினர் பயன்படுத்திய மிகப் பிரமாண்டமான விமானக் குண்டுகள் இப்பிரதேசத்தின் இயற்கைக் காடுகளை மாத்திரமல்ல மக்கள் குடியிருப்பி;ன் பயன்தரு பல்லாண்டுப் பயிர்களையும் அழிவடையச் செய்துவிட்டது.

மேலும் மணலாற்றிலிருந்து – முல்லைத்தீவை நோக்கி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இராணுவம் பயன்படுத்திய பிரமாண்டமான வெடிபொருள் பயன்பாடு அளம்பில் – செம்மலை – முள்ளியவளை பிரதேசங்களை உள்ளடக்கிய தென்னைப்பயிர்ச்செய்கை நிலங்களை அழிவடையச் செய்துவிட்டது. இப்பிரதேசத்தி;ன் அழிவை உயர் பாதுகாப்பு வலயம்;;;;;; காரணமாக உத்தேச மதிப்பீடு செய்ய முடியவில்லை. அத்தோடு இப்பிரதேசத்திலுள்ள களிக்காட்டுப் பகுதியிலிருந்த தேக்கு மரக்காடுகளும் திருட்டுத்தனமாக தற்போது அரசியல்ச் செல்வாக்கு மிக்கோரினால் தறித்தெடுக்கப்படுவதாக சுயாதீனத் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

இது மட்டுமல்லாது இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியிருந்து இடம் பெயர்ந்த மக்களை அடைப்பதற்காக அகதி முகாம்களை உருவாக்கவென மதவாச்சி – மன்னார் வீதியில் செட்டிகுளம் பிரதேசத்தில் ஏ14 வீதிக்கும் அதன் மேற்குப் புறத்தில் உள்ள அருவி ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியிலும், வீதியின் கிழக்குப் புறத்திலும் கிட்டத்தட்ட 2000 ஏக்கர் பரப்பளவான இயற்கைக் காடுகள் எவ்வித மாற்று நடவடிக்கையும் எடுக்காமல் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அழித்தொழிக்கப்பட்ட காடுகளில் அமைக்கப்பட்ட முகாம்களான மினிக்பாம், அருணாச்சலம், கதிர்காமர், ஆனந்தக்குமாரசுவாமி முகாம், ஆகியவற்றோடு இணைந்த உப முகாம்களும் அமைந்துள்ள பிரதேசம் இன்று பாலைவனமாகத் தோற்றமளிக்கின்றது.

ஆகவே வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது உருவாக்கப்பட்ட மண் அணை, வீதிப்பாதுகாப்பு, புதிய பாதைகளை அமைத்தல், இராணுவ ஆட்லறிப் பீரங்கித் தளங்களை உருவாக்குதல், புதிய இராணுவ முகாம்களை அமைத்தல் போன்றவற்றிற்காக பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள இயற்கைக் காடுகள் அழி;க்கப்பட்டதோடு காட்டுச் சண்டைகளின் போது மேற்கொள்ளப்பட்ட விமானம் மற்றும் ஆட்லறித் தாக்குதல்களினால் பெருங்காட்டுப் பகுதியின் உட்பகுதிக் காட்டுமரங்கள் அழிந்து காட்டின் செறிவு ஐதாக்கப்பட்டுள்ளது.

வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் மழையைப் பெறுகின்ற வன்னிப் பெருநிலப்பரப்பு காடுகளின் உயர்மரங்களும், இப்பிரதேசத்தின் உயரமான பனை, தென்னை மரங்களும் அழிக்கப்பட்டதனால் எதிர் காலத்தில் பருவமழை பொய்த்து அல்லது மழைவீழ்ச்சி குன்றுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள. இப்படைநடவடிக்கையி;ன் போது வன்னியின் காட்டுவளம் மாத்திரம் அல்ல பெருமளவிலான வன விலங்குகளும் மற்றும் விவசாயிகளின் பெருந்தொகையான கால்நடைகளும் அழிவடைந்து இப்பிரதேசத்தின் இயற்கைச் சமநிலை முற்றுமுழுதாக மாற்றமடைந்து சென்றுள்ளது. இதன்மூலம் எதிர் காலத்தில் இப்பிரதேசத்தின் இயற்கை அனர்த்தங்கள் மிகப் பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்த வல்லது. இதனை உலகின் சமூகநல ஆர்வலர்கள் இன்றுவரை கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை.

te

நன்றி.

ஆக்கம்
தி.திபாகரன்.


source:puthinamnews

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

"அக்காள், தங்கையை மணமுடித்தது முஸ்லிம் சட்டப்படி செல்லும்'

இந்தியா
 
 . "அக்காள், தங்கையை மணமுடித்தது முஸ்லிம் சட்டப்படி செல்லும்'

புதுடில்லி: "முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர், தனது மனைவியின் சகோதரியை திருமணம் செய்துவிட்டு, பின்னர் முஸ்லிம் சட்டத்தை காரணம் காட்டி, அந்த திருமணம் செல்லாது என கூற முடியாது. இரண்டாவது மனைவியை புறக்கணிக்கவும் முடியாது' என சுப்ரீம் கோர்ட், தீர்ப்பளித்துள்ளது.

முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் சாந்த் படேல். இவரது மனைவி முஸ்தா பீவி. சாந்த் படேல், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே, முஸ்தா பீவியின் சகோதரி பிஸ்மில்லா பேகத்தை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. சிறிது நாட்களிலேயே, சாந்த் படேலுக்கும், பிஸ்மில்லா பேகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிஸ்மில்லா பேகத்துக் கும், அவரது மகளுக்கும் செலவுக்கு பணம் கொடுப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டார், படேல். பிழைப்பு நடத்த வழி இல்லாத பிஸ்மில்லா பேகம், உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்,"பிஸ்மில்லா பேகத்துக்கும், அவரது மகளுக்கும் மாதம், ஆயிரம் ரூபாயை, சாந்த் படேல், ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சாந்த் படேல், மாவட்ட கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் தொடர்ந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

சாந்த் படேல் தனது மனுவில்,"முஸ்லிம் சட்டப்படி, மனைவியின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்து கொள்வது செல்லாது. இதனால், இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், ஜே.எம்.பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. விரிவான சட்ட ஆலோசனைக்கு பின், நீதிபதிகள்,"முதல் மனைவியுடனான திருமண உறவு தொடரும் நிலையிலும், மனைவியின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்து கொள்வது முறையற்ற செயல் மட்டுமே. மனைவியின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்து கொள்வது சட்டப்படி செல்லத்தக் கதே. இரண்டாவது மனைவிக்கு, உரிய ஜீவனாம்சத்தை, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125 பிரிவின்படி செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டனர்.
 
http://www.dinamalar.com/2008MAR19/events_ind5.asp

StumbleUpon.com Read more...

டூரிஸ்ட்களின் சொர்க்கப் பூமி லாவோஸ், புத்தர்

இந்தியாவுக்கு நேபாளம் எப்படியோ, அதே போல் தாய்லாந்துக்கு, லாவோஸ். ஆனால், இந்தியாவைப் போல் லாவோசை பரிவுடன் நடத்தவில்லை தாய்லாந்து; நூற்றுக்கணக்கான தடவை லாவோஸ் மீது போர் தொடுத்து, லாவோசின் விலை மதிக்க முடியாத பொருட்களை எல்லாம் அபகரித்துக் கொண்டுவிட்டது.
அப்படி லாவோஸ் பறி கொடுத்த ஒரு பொருள் எமரால்டினால் செய்யப்பட்ட பெரிய புத்தர் சிலை. உங்களிடமிருந்து, கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் அபகரித்ததைப் போல் லாவோசுக்கு எமரால்ட் புத்தர் சிலை.
லாவோசில், ஆயிரக்கணக்கான புத்தர் கோவில்கள் உள்ளன. ஒரு கோவிலில் 10 ஆயிரத்து 136 புத்தர் சிலைகள் இருக்கின்றன. தலைநகர் வியங்காங்-ல் 150 இந்தியர்கள் வசிக்கிறோம்; அனைவரும் கீழ் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம்கள் தான். எல்லாரும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் ஆங்கில, "தினசரி' வெளியாகிறது.
பிரான்சின் காலனியாக இருந்த லாவோஸ், 1975ல் தான் சுதந்திரம் அடைந்தது. லாவோசை ஆண்ட ராஜாக்கள் தான் நாட்டின் இன்றைய வறுமைக்குக் காரணம்... என்று, இன்றைய கம்யூனிஸ்ட் அரசு கருதுகிறது. லாவோசை சுற்றிலும் நாடுகள் தான்; நிலத்தால் சூழ்ந்த நாடு இது. கடல் இல்லாத குறையைப் போக்க கடல் அளவு நதி இருக்கிறது. மேகாங்க் நதி- உங்களது பிரம்ம புத்திரா நதியைப் போல் பெரியது.
இலங்கைத் தமிழர்கள் லவோசில் அதிகம்; அதேபோல், ஆயுதங்களும், சரளமாகக் கிடைக்கின்றன. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப் பவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான நாடாக இருக்கிறது. லாவோஸ் பற்றி மற்றொரு சுவாரசியமான விஷயம் - உலகத்திலேயே அதிகமான குண்டுகள் இந்த நாட்டில் தான் போடப்பட்டிருக்கின்றன.
வியட்நாம் போரின்போது, அமெரிக்க வீரர்கள் லாவோசில்தான் முதலில் குண்டுகளைப் போட்டுப் பார்த்தனர் - ரிகர்சல் மாதிரி. ஒரு லாவோஸ் பிரஜைக்கு 1.5 டன் குண்டு வீதம் போடப்பட்டிருக்கிறது!
இவ்வளவு ஆகியும், டூரிஸ்ட்களின் சொர்க்கப் பூமியாகவே காட்சி அளிக்கிறது லாவோஸ்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இஸ்லாமினால் ஆய பயனென் கொல்......


இஸ்லாமினால் ஆய பயனென் கொல்......

பில் வார்னர் தமிழாக்கம் - நல்லான்


[இக்கட்டுரை, பில் வார்னர் (By Bill Warner) என்பவரால் Fruit of Islam, என எழுதப்பட்ட ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்].

தமிழாக்கம் - நல்லான்

எந்த கனியும் அந்தந்த மரத்தின் அடியில்தானே விழும். அத்தகைய இனிப்பு மிகு இஸ்லாம் என்று முஸ்லிம்களால் புகழப்படும் இஸ்லாமிய இயக்கத்தில் பொதிந்துள்ள இனிப்புப் பழத்திற்கு இணையான கோட்பாடுகள் எவை? இஸ்லாமிய அரசியல், கலாச்சார கோட்பாடுகளால் விளைந்தவைகள் என்னென்ன? கல்வி கேள்விகளால் பெற்ற அறிவு, அறிவியல், அரசியல், மேலாண்மை, முன்னேற்றம், மனித சமுதாய நல உரிமை -- ஆகியவைகளில் இஸ்லாமிய உலகத்தின் வெற்றி அல்லது தோல்வி, எத்தகையது? இங்கே அவைகளைப்பற்றி சற்று ஆராய்வோம்.

இஸ்லாம் ஒரு முழுமைபெற்ற கலாச்சாரம், ஆகவே அது எல்லா கலாச்சாரங்களைக் காட்டிலும் மிகச்சிறந்தது என குரான் வாயிலாகக் கூறிக் கொள்கிறது. [1]

இனி உலகளவில், அரசியல், பெருளியல், கலாச்சாரம், ஆகியவைகளில், மேற்கூறியவாறு மிகச் சிறந்ததாக கருதப்படும், இஸ்லாம் இயக்கத்தைப் பின்பற்றும் நாடுகளை, தற்காலத்தில் முன்னேற்ற மடைந்த நாடுகளாகக் கூறிக்கொள்ளும் நாடுகளுடன், தக்க ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாமா?

குரான் ஒரு முற்றிலும் பரிபூர்ணமான புத்தகம், அதில் உள்ள அரசியல், அறிவியல், சமூகக் கோட்பாடுகளால், இஸ்லாமைப் பின்பற்றும் முஸ்லிம்களை, நுண்ணறிவு சம்பந்தமான தேர்ச்சிகளில், முஸ்லிமல்லாத காஃபிகளைக் காட்டிலும் மிகச்சிறந்தவர்களாக ஆக்கவல்லது என இஸ்லாமின் நிலைப்பாடு. (Islam claims that the Koran is the perfect book with the perfect political and social doctrine that will make Muslims intellectually superior to kafirs). இதைக்கூறுகையில், நம் நினைவில் கொள்ள வேண்டியது, குரான் என்னும் நூல், எல்லோரைக் காட்டிலும், மிக நுண்ணறிவு படைத்த, சர்வ வல்லமையுள்ள, அல்லாஹ் என்ற இறைவனாலேயே அவர் மேற்பார்வையில், எழுதப்பட்டது. [ஆகவே, மிக பரிபூரணத்துவம் பெற்ற ஒரு கடவுளாலேயே எழுத வைக்கப்பட்டது என்பதால், அவரே நிர்மாணித்த இஸ்லாம் என்னும் இயக்கம் பூரணமான கருத்துகளைத் தானே உள்ளடக்கியிருக்க வேண்டும்?] ஆகவே உலகிலேயே முஸ்லிமளே மிகச்சிறந்த அறிவாளிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் இருக்கவேண்டும். உலகளவில் இஸ்லாமே மிகச்சிறந்த, பூர்ணத்வம் நிறைந்தது. (Remember that the Koran is the perfect recording of the mind of infinitely intelligent god, Allah, so Muslims should be the absolute leader in knowledge and ideas. Islam is the finest, most perfect idea that can exist).

[ஜிப்ரீல், அல்லது காப்ரியேல் என்னும் அல்லாஹ்வின் பிரத்யேக இராயபாரியின் துணைகொண்டு முகம்மதுவுக்கு வந்த இறைச்செய்தி (வாஹி) யை, முகம்மது தன் நினைவாற்றலால் சொல்லச்சொல்ல, அப்துல்லா இப்னு ஸாத் அபி ஸாரா (Abdullah Ibn Sa'd Abi Sarah) என்ற எழுத்தாளரால் எழுதிவைக்கப்பட்டது. ஏனெனில், முகம்மதுவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது]. [MUSLIMS BELIEF; (19:65); (2:255); (59:22-4); (42:49-50); (11:6); (6:59); (31:34); Mosesà(4:164); (7:143); (19:52); --- (31 :27); (6:115); (4:87); Gabriel à(16:102); Arabic (26:192-95); (2:22); (6:18); (10:-3) ; (42:11); Day of Judgment (89:21-23); (2:253); (11:34); 4:22; 95.8; 5.50 à who is better than Allah; 6.103 incomprehensible; 42:11 all hearing and seeing; 36:83, he commands, desires, says be and it is; 50:38 created heaven and earth in just 6 days;]

[ஆதலால், மேற்கூறிய அடிப்படைகளில், இஸ்லாமே, மிகவும் தலை சிறந்த, முழுமைபெற்ற தத்துவம் என முதல் நிலையாக எடுத்துக் கொள்ளலாமா? கீழ்க் கூறும் இடை நிலை ஆய்வுகளுக்குப் பிறகு, முடிவில் முதல் நிலை ஊகம் சரிதானா என கடை நிலையில் சீர்தூக்கிப்பார்த்துக் கூறலாமா?]

கல்வி கேள்விகளால் பெற்ற அறிவு

அரேபியர்கள் உலக முஸ்லிம்களுக்குள் சிறுபான்மையோர். முஸ்லிம்கள் உலக மக்களுக்குள் சிறுபான்மையோர்.

இஸ்லாமிய கலாச்சாரதைப்பற்றி, ஒட்டுமொத்தமாக முழு விவரத்துடன் அரேபியர்களே உலக முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருக்கத் தகுதி பெற்றவர்கள் என எடுத்துக் கூற, நம்மிடம் முடிவான தரவுகள் மிகக் குறைந்த அளவில் உள்ளன. [ஏனெனில், முஸ்லிம்கள் உலகிலுள்ள அனேக நாடுகளிலும் பரவி உள்ளனர். எந்த ஒரு நாட்டை முழுவதாக ஒப்பபீட்டுக்கு எடுத்துக் கொள்வது?] அரபு மக்கள் மிகத் தொன்மையான முஸ்லிம்கள்தான்; இதில், எள்ளளவும் சந்தேகமில்லை. இதற்குள், குறிப்பாக, சவுதி அரேபியா, தங்களை ஒரு முழு இஸ்லாமிய நாடாக உரிமையுடன் அழைத்துக் கொள்ளலாம். ஏனெனில், முகம்மதே, சவுதியில் உள்ள மெக்காவில் பிறந்த பூர்வீக உரிமையாலும், அவருக்கு உறவான அரேபிய இனத்தைப் பற்றியும் குறிப்பாக குரானில் உணர்த்திச் சொல்வதாலும், இவ்வாறாகக் கொள்ளலாம். பொத்தம் பொதுவாக அரேபியர்களைத் தனித்தன்மையுள்ள முழுமையான உலக முஸ்லிம்களின் பிரதிநிதித்வ-அளவுகோலாகவும் கொள்ளவும் இயலாது, ஆனால், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், அரபு நாடுகளை ஒரளவிற்கு சம நிலை (பர்யாய) அளவுகோலாகக் கொள்ளலாம்.

அரேபிய சமூகத்தைப்பற்றி உலக நாடுகளுடன் ஆய்வுசெய்து, மதிப்பிட்டு, ஐக்கிய நாடுகள் சபை நான்கு வெளியீடுகளை, (UN Publications) வரிசையாக தொகுத்துள்ளது.

இன்று, தகவல்களை துரிதமாக எடுத்துச் செல்ல பரவலாகத் தெரிந்த புகழ்பெற்ற சாதனம் இணயம் (internet). இங்கிலாந்து மக்கட்தொகையில் 48% சதவீதம் இணயத்துடன் தொடர்புடையவர்கள், அதேசமயம், சவுதி அரேபியாவிலோ, 2% விழுக்காடு மட்டும் தான். [2]

மிக அதிக வருவாய் உள்ள நாடுகளில், ஆயிரத்திற்கு 380 நபர்களிடம் கணினி உள்ளது, மிக அதிக வருவாய் உள்ள அரேபிய நாடுகளில் ஆயிரத்திற்கு 20 பேர்களிடம்தான் கணினி உள்ளது. உலகமுழுவதும் மொத்தமாக எடுத்துக்கொண்டால், 1000 பேர்களுக்கு, சராசரியக 80 பேரிடம் கணினி உள்ளது.

மேற்கூறிய விவரப்படி, வேண்டிய தகவலுக்காக இணயத்துடன் தொடர்பு கொள்ள, மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், சராசரி அரேபிய முஸ்லிம்களுக்கு கணினி உபயோகம் அவ்வளவு கிடையாது. ஏனெனில்,"குழந்தைப் பருவத்திலிருந்தே, அவர்களுக்கு, ஏனைய உலகக் குழந்தைகள் போலல்லாமல், ஒவ்வொரு அரேபியக் குழந்தைக்கும், அறியவேண்டுமென்ற ஆவலை, அல்லது, ஒன்றைப்பற்றி கண்டறிதலுக்காகப் பூர்வாங்க பயணத்தை, ஆராய்தலுக்காக மேற்கொள்ள, வெளிப்படையாக செயலாற்ற முடியாமல், தங்கள் சுய உள்ளுணர்வை, இஸ்லாமிய (கிடுக்கிப்பிடி) கோட்பாடுகளால், அடக்கிவைக்க வேண்டிய நிர்ப்பந்ததில் உள்ளனர்". [3]

கல்வி கற்கவேண்டிய பாட திட்டங்களும்,"பகுத்தறிகின்ற, ஆராயும் திறனுடன் சொந்த சிந்தனா சக்தியைக்கொண்டு சுதந்திரமாக, செயல்பட முடியாமல், அதே சமயத்தில், கீழ்ப்படிதல், உத்தரவுப்படி நடத்தல், தாழ்ந்திருத்தல், உட்படுதல், அல்லது இணங்குதல், போன்ற தடுப்புகளால் முடக்கப்பட்டுள்ளன". [4]

சொந்த சிந்தனா சக்தியில் ஆராயும் திறன் முடக்கப்பட்டதால், காப்பிரிமைப் பட்டயங்களில் (Patents) இந்த போக்கு, பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சவுதி அரேபியா, 171 காப்பிரிமைப் பட்டயங்களைப் பெற்றிருக்கிறது, ஆனால், தென் கொரியா என்ற ஒரு (புதிய) சிறு நாடு மட்டுமே, 16328 காப்பிரிமைப் பட்டயங்களை அடைந்திருக்கிறது. [5]

இது ஆராய்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் செலவிடும் நிதி முதலீட்டிலுள்ள குறைபாடுகளால் உண்டான, இயற்கையான விளைவாகும். ஸ்வீடன் ஆராய்ச்சிக்காக, தேசீய மொத்த உற்பத்தித் தொகையில் (GNP), 3.1% செலவிடுகிறது, அரபு நாடுகளோ, 0.2% மட்டுமே செலவிடுகின்றன. [6]

அடிக்கடி மேற்கோளாகக்காட்டப்படும் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1000 குடிமக்களுக்கு, சுவிட்சர்லாந்திலிருந்து 79.9 கட்டுரைகள் என்றும், சவுதி அரேபியாவிலிருந்து, 0.07 கட்டுரைகள் மட்டுமே மேற்கோள் காட்டப்படுகின்றன. [7] அதாவது சவுதி அரேபியாவிலிருந்து ஒரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை மட்டுமே மேற்கோள் காட்டப்படுகிறது.

கல்வி கேள்விகளில் இருக்கவேண்டிய பேராவல், 1970-75 என்ற ஐந்தாண்டு கால வரம்பில், உலகளவில், பிற மொழிகளிலிருந்து 330 புதுப்புதுப் புத்தகங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டன, ஆனால், சவுதி அரேபியாவில், 1200 ஆண்டுகளாக 1000 புதுப் புத்தகங்கள் மட்டுமே பிற மொழிகளிலிருந்து அரபு மொழியில், மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. [8]

அதாவது, கடந்த நூற்றாண்டுகளில், ஆண்டொன்றுக்கு ஒரே ஒரு புதுபுத்தகத்திற்கும் கீழாகத்தான் பிற மொழியிலிருந்து அரேபிய மொழியில் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது. சவுதிகளை ஒப்பிடும்போது, ஸ்பெயின் நாட்டில் மட்டுமே, 10000 புத்தகங்கள் ஆண்டொன்றுக்கு பிற மொழிகளிலிருந்து மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது. தொழில் துறையில் முன்னேற்றமடைந்த நாடுகளிலிருந்து, 10 மில்லியன் மக்கள் (ஒரு கோடி மக்கள்) என்ற அளவில், ஆறு (6) அறிவியல் வெளியீடுகள் உண்டாக்கப் படுகின்றன. ஆனால், அரபு நாடுகளில் 0.1 மட்டுமே அறிவியல் வெளியீடுகள் உண்டாக்கப் படுகின்றன. [9]

முஸ்லிமல்லாத காஃபிர் கலாச்சாரத்தைப்பற்றி உயர்வாகச் சுட்டிக்காட்ட பொதுவான எவ்வித சுட்டிக்காட்டும் மானியோ, அல்லது அடையாளமோ, இருப்பதாகத் தெரியவில்லை; ஆனால், ஒன்றே ஒன்று உள்ளது, அதாவது மத சம்பந்த வெளியீடுகள். மொத்தமாக உலக வெளியீடுகளில், 5% வெளியீடுகள், மத சம்பந்தமாக வெளியிடப்படுகின்றன; ஆனால், அரபு நாட்டு மொத்த வெளியீடுகளில், 17% இஸ்லாமிய மத சம்பந்தமாக வெளியிடப் படுகின்றன; அதாவது காஃபிர் நாடுகளைக் காட்டிலும், அரபு நாடுகளில் 340% இஸ்லாமிய மதத்திற் கென்றே புத்தகங்கள் வெளியிட்டாலும், காஃபிர் நாடுகளைக்காட்டிலும் பொதுவாக நுண்ணறிவு சம்பந்தமாக 10% பலன் தான் மற்ற விஷயங்களால் கிடைக்கின்றன.

இதனால், காஃபிர் நாடுகள், முஸ்லிம் நாடுகளைக் காட்டிலும், சிறப்பாக உள்ளன என்று கொண்டாடிக்கொள்ள வேண்டாம், ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், முஸ்லிம் நாடுகளோ, காஃபிர் நாடுகளைக் காட்டிலும், இன்னும் மிக மிக சீர்கேடான வகையில் தான் எல்லா விதத்தில் உள்ளன. இஸ்லாமிய நுண்ணறிவு தத்துவம் என்பது, முகம்மதுவை கண்மூடித்தனமாக பின்பற்றுதலே யாகும், மேலும் இஸ்லாமிய நுண்ணறிவென்பது, முடுக்கிவிட்ட இயந்திரங்கள் போல இஸ்லாமிய நூல்களில் உள்ளதை திரும்பத் திரும்ப மனனம் செய்வது மட்டுமே. சுய சிந்தனையில் இது ஒன்றே, நுண்ணறிவு போட்டிக்குரிய தகுதியில், காஃபிர் நாடுகளைக் காட்டிலும் மாதிரி தரத்தில் மிகக் குறைந்து (sub-standard) காணப்படுகிறது. இஸ்லாமிய இயக்கத்தில், எந்த முஸ்லிமும், மிகக் கடினமான, ஆட்சேபகரமான கேள்விகளைக் கேட்கலாகாது, மேலும் இஸ்லாமிய இமாம்களின் அதிகாரத்தை ஆட்சேபிக்கவோ, இஸ்லாம் சம்பந்தமாக எந்த விஷயத்திலும் இமாம்களுக்கு மறுப்பு கூறி, சவால் விடுவதோ நடக்காத காரியம். (Even in religious matters, a Muslim is not supposed to ask difficult questions or challenge the imam).

[இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக, அசவுகரிய கேள்விகளைக் (inconvenient questions) கேட்பதை கனவிலும் நினைக்கக் கூடாதது. அது அல்லாஹ்வின் நிந்தனையில் (Blasphemy) முடியக்கூடாது. அப்படி நடந்தால், சவால் விட்டவர் கதி, அதோ கதிதான்..... பஃத்வா வழங்கப்பட்டு, எதுவும் செய்யப்படலாம். ஆமாம்....உயிருக்கு உத்திரவாதமில்லை. இந்த சங்கடங்களை அனுபவிக்க விரும்பாவிட்டால், அதற்கு ஒரே வழி, வாய்ப்பூட்டை அணிந்து கொள்வது ஒன்றே சாலச்சிறந்தது. So, speak only spoken to.].

அரசாங்க செயலாற்றில் பயனளிக்கும் சக்தி:

"அரசாங்க செயலாற்றில் பயனளிக்கும் சக்தியில், லஞ்ச லாவண்யத்தை சுட்டிக்காட்டும் மானி" ("indicator of government effectiveness and corruption") என்ற ஒரு தலைப்பு, ஐக்கிய நாட்டு சபை அறிக்கையில் உள்ளது. இந்த சுட்டிக்காட்டும் குறிப்பு, 18 மாபெரும் நிருவனங்களிலிருந்து நூற்றுக்கணக்காக அடிக்கடி மாறுதலடைகின்ற 25 அடிப்படைகளில் விசேஷத்வம் நிறைந்த கண்டுணர்தலைக் கொண்டன. அதன்படி, 61% பதிலளித்தவர்கள் அளித்த தகவல்படி, பாரபட்சம் (கனிவு) நிச்சயமாகக் காட்டப்பட்டது எனவும், இதில் குறைந்த பட்சமாக அரசாங்கத்தைச் சேர்ந்த 50% நபர்களுக்காவது, சென்ற ஆண்டில், நடந்த கையூட்டுகளைப்பற்றித் தெரியுமென கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தவிர, இதில் அமையும் சலுகைகளால் விளைந்த லஞ்ச லாவண்யத்தின் முக்கிய வழிகளும் கண்டறியப் பட்டுள்ளன. [10]

சமூக, அரசியல் உரிமைகளை ஒரு அளவுகோல் வாயிலாகக் காட்ட -- செல்வாக்கு, பதில் கூறவேண்டிய பொறுப்புடைமை (Accountability-சான்றாண்மை) போன்ற தொகுப்புகளும் உள்ளன. இதன்படி, வட அமெரிக்கா, உடன்பாடாக (Positive) 1.3 எனவும், அரபு அரசாங்களுக்கெதிராக, எதிர்மறையில் (negative) 1.2 எனவும் காட்டுகிறது. [11]

இந்த சராசரி, எப்போதுமே எதிலும், பட்டியலில் கடைசியாக வரும் ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் மிகக் இழிவாக உள்ளது.

அரசாங்கம் கவிழும் சாத்திய-நிலையைக்காட்ட, (Political stability) அரசியல் ஸ்திரத்வத்தைச் (உறுதி நிலையைச்) சுட்டிக்காட்டும் மானி, ஐரோப்பாவுக்காக, (Positive) 0.7 எனவும், அரபு நாடுகளுக்கெதிராக எதிர்மறையில் (negative) 0.8 எனவும் காட்டுகிறது. [12]

ஒரு அரசாங்கத்தின் செயலாற்றும் சக்தி, அது புரியும் தரமான சேவையைப் பொருத்தது. இதன்படி, வட அமெரிக்காவுக்காக (Positive) 1.7 என்றும், அரபு அரசாங்கங்களுக் கெதிராக எதிர்மறையில் (negative) 0.6 எனவும், மானி காட்டுகிறது. [13]

தொன்றுதொட்டு இருக்கும் அரசாங்க சட்டங்கள் (Rule of Law) சரியாகக் கடைபிடிக்கப்படுகின்றன என்பதின் காரணம், அவைகளில் மக்களுக்கு உள்ள நம்பிக்கை, மேலும் இந்த சட்ட விதிகள்தான் அதிகாரத்தில் உள்ளதென நமக்கெண்பிக்கின்றன. இந்த சட்ட விதியைச்சுட்டிக் காட்டும் மானி, வட அமெரிக்காவுக்காக (Positive) 1.7 என்றும், அரபு அரசாங்கங்களுக்கெதிராக எதிர்மறையில் (negative) 0.4 எனவும் காட்டுகிறது. [14]

லஞ்ச லாவண்யம் ஒரு கட்டுப்பாட்டில் உள்ளதென தெரிவிக்கும் மானி, வட அமெரிக்காவுக்காக (Positive) 1.8 எனவும், அரபு நாடுகளுக்கெதிராக எதிமறையில் (negative) 0.4 எனவும் காட்டுகிறது. [15]

இதில், ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகளைக்காட்டிலும் இன்னும் மோசம்.

அரபு நாடுகளில் லஞ்சமும், தகுதிக் குறைவும் உள்ளதென்பது எதிர்பாராத திகைப்பாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், முகம்மதுவே அரசாங்க நீதி நெறிகளையும், அதன் அடிப்படைக் கொள்கைகளையும் [1400 வருடங்களுக்கு முன்னரே] அரபு மக்களுக்களித்துள்ளார். அவரே ஒரு பழங்குடி இனத்தின் தலைவராக, மக்களை வருத்தும் வரம்பற்ற முழுமையான கொடுங்கோலனாக இருந்தார். இவரே, ஒத்துபோகாத எவரையும் கொலை செய்யவும், பொய் உரைத்தலையும், பித்தலாட்டங்களைப் புரியவும், பிறரை ஏமாற்றுவதே தன் அரசாங்க அடிப்படைக் கொள்கையாக பரிந்துரைத்து, இவைகளை நிலை நாட்டினார். (None of this corruption and incompetence should be a surprise. Mohammed laid down the ethics and philosophy of government. He was a tribal chief who was an absolute tyrant. He advised others to kill, lie and deceive as a basis for establishment of government). ['தக்கியா' என்னும் இஸ்லாமிய புனித ஏமாற்றுதல் – சில குரான் 'தக்கியா' வசனங்கள்:சுராக்கள்- 2:225; 3:28; 16:106; 40:28; 66:02; சில ஹடிஸ்-சுன்னா வசனங்கள் - Al Bukhari -Volume 4, Book 52, Number 271; Al Bukhari -Volume 5, Book 59, Number 369; Al-Bukhari -Volume 3, Book 49, Number 857; Al-Bukhari -Volume 4, Book 52, Number 269; Al-Bukhari-Volume 9, Book 84, Number 64 & 65;] பிறரை அடக்கி ஆள வன்முறையையே ஒரு கருவியாகக் கொண்டார். எவரெவர் முகம்மதுவுடைய தற்காலத் தேவைகளை நிறைவேற்று கிறார்களோ அவர்களுக்கு சலுகைகள் தாராளமாக வழங்கப்பட்டன. அவர் எவ்வாறு தனக்குகந்தவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் செல்வத்தை அள்ளித் தந்தார் என அவர்மீது பல குற்றச்சாட்டுகள் அபரிமிதமாக உள்ளன. அவரை எதிர்த்தவர்களைக் கூசாமல் சதிசெய்து படுகொலை புரிந்தார். இஸ்லாமில் சேரும் எண்ணமுள்ளோருக்கு பணத்தைக்கொடுப்பது அவர் வழக்கம். செல்வாக்கை செல்வம் கொடுத்தே விலைக்கு வாங்கினார். ஆகவே, கையூட்டும், சலுகைகளும் அரசாங்க வழிமுறை என முஸ்லிம்களுக்கு இருக்கும் போது இவைகள் நமக்கு எப்படி வியப்பை அளிக்க முடியும்?. முகம்மதுவே முன்னோடியாக வழிகாட்டினார், இஸ்லாமில் சுன்னா என்பதும் ஒருவித லஞ்சக் களஞ்சியமே. எந்த கனியும் அந்தந்த மரத்தின் அடியில்தான் விழும்.

மனிதவள முன்னேற்றம்.

ஐக்கிய நாட்டு சபை மனிதவள முன்னேற்றத்திற்கு இவ்வாறு வரையறுத்துள்ளது. அதாவது கிடைக்கும் பொருளாதார, அரசியல், சமூக வாய்ப்புகளை மிக நல்லமுறையில் உபயோகித்து தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படச்செய்து கொள்ளுதல் என்பதாகும். உயர்நிலையில் உள்ள நாடுகளில், மிக அதிக மனிதவள முன்னேற்றத்தைக் கண்கூறாகக் காணலாம்.

சமூக அறிவியல் நிபுணர்கள் மனிதவள மேம்பாட்டை ஒரு மதிப்பெண் வாயிலாக (அறிகுறியாக) உபயோகிக்கிறார்கள். இதன்படி, HDI இல், வாழ்வதில் எதிர்பார்ப்பு, கல்வி, சுதந்திரம், செல்வம் இவையத்தனையும் அடங்கும். இதில் நல்ல மதிப்பெண் பூஜ்யம், மிக மோசமான மதிப்பெண் 100. வட அமெரிக்காவின் HDI – 8, அரபு நாடுகளின் மதிப்பெண் 75. [16]

சுதந்திர மதிப்பெண்ணை, அந்தந்த நாட்டு அரசியலில் உள்ள சுதந்திரப்பாங்கை சுட்டிக்காட்ட இதை ஒரு அளவுகோலாக ஐக்கியநாட்டு சபை உபயோகிக்கிறது. இதில் மிக சிறப்பான மதிப்பெண் 1, பூஜ்யம் என்பது மிக மோசமான மதிப்பெண்ணாகும். இதன்படி, வட அமெரிக்கா மதிப்பெண் 0.9, அரபு நாடுகளின் மதிப்பெண் 0.15, ஆகும் [17]

பெண்டிர்:

அரபு நாடுகளில்தான் பெண்டிர் கல்வி மிக குறைந்த அளவு உள்ளது. அரபு நாட்டில் சரிபாதி பெண்களும், ஆண்கள் மூன்றில் ஒருபங்கும், கல்வி அறிவற்றவர்கள், [18] முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் நாடுகளின் சராசரியைக் காட்டிலும், அரபு நாடுகளில், கல்வி அறிவற்றவர்கள் மிக அதிகமாகவே உள்ளனர் [19]

பெண்களின் பண சம்பாதிப்பு மற்ற உலக நாடுகளின் அளவைக்காட்டிலும் குறைந்து காணப்படுகிறது, இதில் 33% அரபு நாட்டுப் பெண்களின் பண சம்பாதிப்பு, சஹாராவுக்குக் கீழ் பிரதேச ஆப்பிரிக்க பெண்டிரைக்காட்டிலும் குறைந்து காணப்படுகிறது. (சஹாரா பாலைவனத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் உலகளவில் மிகத் தாழ்ந்ததாகக் கருதப்படுகிறது). [20]

பாராளுமன்றத்தில் அரபு நாட்டுப் பெண்கள் பங்கேற்பு, உலக நாடுகளின் சதவீதத்தைக்காட்டிலும் தாழ்ந்தே காணப்படுகிறது. [21]

மேற்கூறிய முடிவுகள் யாவுமே இஸ்லாமினால் விளைந்த விபரீத பலன்கள். இம்முடிவுகள் யாவும் எதிபார்த்தது தான். முடிவுகளால் எவரும் வியப்படைய முடியாது.

இஸ்லாம் கோட்பாடுகளின்படி, எந்த பெண்ணும், இஸ்லாமுக்காக குழந்தைகளைப் பெற்றுத் தரவும், ஆண்களுக்கு வேண்டும் போதெல்லாம் சுக போகத்திற்காக மட்டுமே.

முடிவுரை:

எந்த கலாச்சாரத்தையும் ஓர் அளவுகோலால் சீர்தூக்கிப்பார்க்கும்போது, அரேபியர்கள், கடைசியிலோ, அல்லது கடைசியிலிருந்து ஒருபடி இன்னும் கீழேதான் மதிப்பிட முடியும். இதற்கு ஒரு நல்ல காரணம் உண்டு – இஸ்லாம்தான். இஸ்லாமின் கலாச்சாரக் கோட்பாடே எல்லாவற்றையும் உருவமைக்கிறது. இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் கல்வி முறை --அறியாமையையும், புதிதாக எதையும் திறமையுடன் உண்டாக்க இயலாமையையும், குறுகிய மனப்பாங்கையும், மற்றவர்களைப்பற்றி முழு உண்மையும் தெரிந்து கொள்வதற்கு முன்பே, அவர்களைப்பற்றி, தப்பெண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், ஆகியவைகளுடன் கூடிய கலவைதான். இஸ்லாமிய மத கொள்கை, அந்த கோட்பாட்டுக்கே தங்களை முழுமையாக சமர்ப்பித்துக் கொள்ளுதலைக் கற்றுக்கொடுக்கிறது. முழுமையாகச் சமர்ப்பித்துக் கொள்ளுதல் என்பது திரும்பத் திரும்ப சொன்னவைகளையே மீண்டும் கற்பதுதான். இஸ்லாமியர்களால் புனிதமாக்கருதப்படும் ஹடிஸ் இஸ்லாமைப்பற்றி எந்த கேள்வியையும் கேட்பதற்கு அனுமதிக்காது. இஸ்லாமிய கோட்பாடு--இஸ்லாமே எல்லா விஷயத்திலும் மிகச் சிறந்தது, முடிவில் இஸ்லாம் தான் மிக முக்கியம், உலகிலுள்ள மற்ற எதுவும், எவரும் முக்கியமில்லை. மேலாக, காஃபிர்கள் எல்லாவற்றிலும், எப்போதுமே, குற்றவாளிகள், ஆகவே அல்லாவால், வெறுக்கப் படுபவர்கள், என கற்றுக்கொடுக்கிறது. காஃபிர்களிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளக்கூடாது, முக்கியமாக, தொழில் நுட்பக்கலையப் பற்றி ஆராயும் விஞ்ஞானத்தை எதிர்க்கிறது. ஆகவே கற்றுக் கொள்ளக்கூடாது. இஸ்லாமிய அரசியல் கொள்கை என்பது, ஒட்டுமொத்தமாக மக்கள் எல்லோருமே இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு அடிமைகள். அப்படி தன்னை இஸ்லாமின் அடிமை என ஒப்புக்கொள்பவனே சிறந்த (இஸ்லாமிய) முஸ்லிம் குடிமகன். இஸ்லாமியத்தால் புனிதமாகக் கருதப்படும் சுன்னாவில் சாராம்சமாக இருப்பது முகம்மது தனது கத்தியால்தான் மிகசக்திமானாக ஆகி, தன் இஷ்டப்படி ஆளத்தகுதிபடைத்தவர் ஆனார். ஆகவே கத்தியே, புத்தியைக் காட்டிலும் சாலச்சிறந்தது. [முகம்மது கூறியது, "எனது வெற்றிகள் அனைத்தும் பயங்கர வன்முறையால் தான் விளைந்தவை". (Hadith: Al-Bukhari, 4.52.220 - Narrated Abu Huraira: Allah's Apostle said, "I have been sent with the shortest expressions bearing the widest meanings, and I have been made victorious with terror (cast in the hearts of the enemy), ..............].

ஆயிரக்கணக்கான பக்கங்களைக்கொண்ட இஸ்லாமியக் கொள்கைகள் அனைத்திலும், தலைவர் முகம்மதுவுக்கே எல்லோரும் கீழ்ப்படியவேண்டும், எனவும் கற்று கொடுக்கிறது. ஆயிரக்கணக்கான இப்பக்கங்களில், மக்களாட்சியைப்பற்றி, மற்றவர்களைக் கலந்தாலோசித்துத் தீர்மானம் எடுப்பதுபற்றி ஒருபக்கத்தின் ஒரு சிறுபகுதியில் உதாரணமாக உள்ளது. (உதாரணம் எப்படி இருக்குமென கூறத் தேவையா?!!) முடிவாக முகம்மது பேசினார், எல்லோரும் கீழ்ப்படிந்தனர். [இனி உலகளவில், அரசியல், பெருளியல், கலாச்சாரம், ஆகியவைகளில், மேற்கூறியவாறு தற்காலத்தில் மிகச்சிறந்ததாக கருதப்படும் முன்னேற்றமடைந்த நாடுகளுடன், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் நாடுகளை, போதிய ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் உங்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் அல்லவா? அம்முடிவை உங்களுக்கே இனி விட்டு விடுகிறேன்].

[இந்த [....] அடைப்புக்குறியில் (Bracket) உள்ளவைகள் தமிழாக்கத்தின்போது கூடுதல் விளக்கங்களாக தமிழ் மொழியாக்கத்தில் சேர்க்கப்பட்டன.

--


source:http://www.thinnai.com/?module=displaystory&story_id=20910293&format=html-- 

www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வருகிறது பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

 
 

Front page news and headlines todayசாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.



இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.



வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட் டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று கொண் டிருக்கும் போது, தேவைப் பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப் பட்டுள் ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



                                                                         - நமது சிறப்பு நிருபர் -



source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP