சமீபத்திய பதிவுகள்

ஈராக் மிஷன் முடிந்தது : அதிபர் ஒபாமா அதிகராப்பூர்வ அறிவிப்பு

>> Tuesday, August 31, 2010


பாக்தாத் : ஈராக்கில் இருந்த அமெரிக்க ‌தாக்குதல் படை செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலுமாக முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஈராக்கில், சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டபின், அமெரிக்க படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அமெரிக்க ராணுவம் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் இருந்து நெருக்கடி எழுந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபின், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் அனைத்தும், 2010 ஆகஸ்ட் 31க்குள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என, அறிவித்தார். இதன்படி, ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறின. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ராணுவம், ஈராக்கில் முகாமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒபாமா பெருமதிம் : ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறும் முடிவு ஈராக்கின் நலன் கருதி மட்டும் எடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் நலன் கருதியும் எடுக்கப்பட்டது. ஈராக்கின் எதிர்காலத்தை வலுப்படுத்தி ஒரு ஸ்திரமான அரசாக அதை அதன் மக்கள் கைகளில் ஒப்படைக்க அமெரிக்க விலைமதிக்கமுடியாத தியாகத்தை செய்துள்ளது. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும் ஈராக்கில் அமைதிய‌ை நிலைநாட்ட பெரிய அளவில் செலவழிக்கப்பட்டது. அமெரிக்காவின் இளைஙர்களும், இளம் பெண்களும், ஈராக்கில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.போரினால் பாதிக்கப்பட்ட ஈராக்கில் , ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் தான் அமெரிக்கா ஈராக்குக்கு இவ்வளவு காலம் துணை நின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி: ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி; ஈரானில் தண்டனை நிறைவேற்றம்

தெக்ரான், ஆக.30-
 
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27).
 
இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார்.
 
அப்போது கறுப்பு மினி ஸ்கர்ட, டி-சர்ட் மற்றும் ஹை கீல்ஸ் செருப்பு அணிந்திருந்தார். அதற்கு மேல் கறுப்பு நிற கவச உடை அணிந்திருந்தார். இது தங்கள் நாட்டு சட்டத்துக்கு எதிரானது என கூறி அவரையும், அவரது தோழிகளையும் போலீசார் கைது செய்தனர்.
 
ஆண்கள் அணியும் உடையை அவர் அணிந்திருந்ததாக குற்றம் சாட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் செய்த குற்றத்துக்காக 40 சவுக்கடி வழங்கி தீர்ப்பு கூறப்பட்டது.
 
இதை தொடர்ந்து 5 நாட்கள் கழித்து தெக்ரானில் ராச்சிக்கு சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரு தனி அறையில் வைத்து ராச்சியை சவுக்கால் அடித்தனர்.
 
அந்த அறைக்கு முன்பு அவரது பெற்றோர் காத்து நின்றனர். சவுக்கடியை தாங்காமல் அவர் அலறியதை கேட்டும் சத்தமின்றி மவுனமாக கண்ணீர் வடித்தபடி நின்றனர்.

source:maalaimalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்-

>> Monday, August 30, 2010

23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா
(பெண்ணியத்திற்காக மூலக் கட்டுரையை சிங்களத்தில் அனுப்பியவர் 
வெறோனிக்கா - தமிழில் என்.சரவணன்.)




                  ந்த வாரம் இலங்கை மக்களை மட்டுமல்ல உலகில் பலரையும் உலுக்கிய செய்தியாக இலங்கையை சேர்ந்த ஆரியவதியின் கதை அமைந்திருக்கிறது.

இயேசுநாதர் சிலுவையில் ஆணி அறையப்பட்டு கொல்லப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். உயிருடன் உள்ள பெண்ணை அதுவும் மனிதவுலகம் நாகரிகமடைந்தாக கூறப்படும் இந்த காலத்தில் ஒரு பெண் சுத்தியால் ஆணிகள் அடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டுள்ளார்.

உடலில் எட்டு ஆணிகள் உள்ளே ஏற்றப்பட்ட நிலையில் சவுதியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஆரியவதி என்கிற பெண்.

தனது வாழ்நாளுக்குள் தனது 3 பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ சொந்தமாக ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொள்வதற்காக பிழைப்பு தேடி பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றவர் ஆரியவதி (வயது 49).

இவர் இலங்கையின் தெற்குப் பகுதியில் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர் ஒருவர் இலவசமாக அனுப்புகிறார் என்று கேள்வியுற்று அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 நாள் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டார்.

சவுதியில் ரியாத் நகரத்தில் இறங்கியதும் அவரை இருவர் காரொன்றில் அன்பாக வேலைக்காக அழைத்துச் சென்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடைகள் செய்வதும் வீட்டை சுத்தமாக பராமரிப்பதும் அவருக்கு வழங்கப்பட்ட பிரதான வேலைகள். இதனைத் தவிர உடுதுணி துவைத்தல், அவற்றை ஸ்திரிசெய்து மடித்து வைத்தல், வாகனங்களை கழுவுதல் போன்ற வேலைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.

ஒரே வாரத்தில் அந்த வீட்டினர் தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர். சிறு சிறு தற்செயல் பிழைகளுக்காக அவரை கட்டையைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

தற்செயலாக ஒரு கிளாஸ்' கைதவறி விழுந்து உடைந்த சம்பவத்திலிருந்தே இந்த வன்முறைகள் தொடங்கின.

உரிமையாளரின் மனைவி (எஜமானி அம்மா) ஆரியவதியின் கைகளை இறுக்கிப் பிடித்திருக்க கணவர் சூடாக்கிய ஆணிகளை உடலில் சுத்தியலால் அடித்திருக்கிறார். அதே நாள் இரண்டரை இஞ்ச் உயர ஆணிகள் ஐந்து இவ்வாறு ஆரியவதியின் உடலில் ஏற்றப்பட்டுள்ளன.

அன்றைய தினம் ஆரியவதியின் ஓவென்ற அவலக்குரல் எவர் காதுகளிலும் விழவுமில்லை. அந்த வீட்டில் ஆரியவதியின் அன்புப் பணிவிடைகளை அதுவரை பெற்றுக்கொண்ட அந்த வீட்டின் பிள்ளைகள் கூட காப்பாற்ற முன்வரவில்லை.

தொடர்ந்து கத்தினால் கழுத்தை வெட்டி எறிவோம் என்று மிரட்டப்பட்டுள்ளார். தனது அன்புக்குரிய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்துள்ளார்.

ஆரியவதி தாய்மண்ணுக்கு திரும்பியதும் அவர் கண்களில் நீர்பெருக பகிர்ந்துகொண்ட விபரங்கள் அனைவரது நெஞ்சையும் உலுக்கச் செய்யும் கதைகள்.

"ஒரு தடவை கோப்பை நழுவி விழுந்தது. இன்று தொலைந்தேன்.. என்று பதறிக்கெணடிருக்கையில் வீட்டு எஜமானி அம்மா "உன் கண்கள் என்ன குருடா.. இரு... குருடாக்கி விடுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆணியை எடுத்து கண்களில் சொருகுவதற்காக கிட்ட கொண்டு வந்தார். என் கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்தேன். எவ்வளவோ கதறியும் அந்த ஆணிகளை எனது புருவ இமைகளின் மேல் பகுதியில் இறுக்கிச் சொருகினார்.... " என்று இன்னமும் நீக்கப்படாத நிலையில் உள்ள அந்த ஆணி சொருகப்பட்ட இடத்தைக் காண்பித்தார் ஆரியவதி..

அவரது கால் பாதங்களுக்குள் இரு ஆணிகளை ஏற்றியுள்ளனர். இவ்வாறு சிறுசிறு பிழைகளுக்கெல்லாம் உடலின் ஏதாவது ஒருபகுதியில் ஆணியை செருகினார்கள். வெளியில் இழுக்கக்கூடிய ஆணிகளை இழுத்துவிட்டேன். அகற்ற கடினமானவற்றை அப்படியே விட்டுவிட்டேன். காய்ச்சல் ஏற்ப்பட்டபோது என்னை சிகிச்சையளிக்க அனுமதிக்கவில்லை. இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று மன்றாடியபோது, அவர்கள் கிடைத்ததைக் கொண்டு என்னைத் தாக்கினர்.

இறுதியில் எனது உடலில் ஆணிகள் உள்ள பகுதிகளில் இருந்து புண் முற்றி சீழ் வடிய ஆரம்பித்தது. இருக்கின்ற உடு துணிகளைக் கொண்டு சுத்தப்படுத்தி கட்டு போட்டுக்கொண்டே இருந்தேன். கடந்த மாதம் அவர்கள் என்னைப் பார்த்து அசிங்கப்பட்டனர். ஆணி உள்ள இடங்களில் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் சித்திரவதை செய்வார்கள் என்று பயந்து வேலைகளை செய்து வந்தேன்..." எனறார்.

இதற்கிடையில் தொடர்பு இல்லாத நிலையில் ஆரியவதியின் குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆரியவதியுடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரியவதியால் சுதந்திரமாக விபரமாக நிலைமைகளை எடுத்துரைக்க முடியவில்லை. "...எனக்கு இங்கு பிரச்சினை என்னை உடனடியாக இலங்கை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்.." எனக்கூறி வைத்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆரியவதியின் கணவர் மீண்டும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அவர் திருப்பி அழைக்கப்பட்டார். இது குறித்து ஆரியவதி தெரிவிக்கையில்

"..கடந்த 20ஆம் திகதி வீட்டு எஜமானி அம்மா ஒரு பையைக் கொண்டுவந்து தந்து ஒரு காரில் என்னை ஏற்றிக்கொண்டுவந்து விமான நிலையத்தில் ஏஜென்சியிடம் ஒப்படைத்தார். அந்த ஏஜென்சி, நாடு திரும்புவதற்கு டிக்கெட் செலவுக்காக 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு எஞ்சிய இரு மாத சம்பளத்தை என் கைகளில் வைத்தார். ஏன் நடப்பதற்கு கஸ்டப்படுகிறாய் என்று அவர் என்னிடம் கேடடார். காலில் வருத்தமுள்ளது என்று மட்டும் கூறினேன். இருந்த பண்த்தில் எனது கணவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் நாடு திரும்புவதை அறிவித்தேன். 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல எனது கணவர் வந்திருந்தார்." என்றார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் நடந்து வந்த விதத்தை வைத்து ஒரு துன்புறுத்தப்பட்ட நிலையில் திரும்புகிற ஒரு பெண் என்பதை யாரும் புரிந்து கொள்வர். அது குறித்து விமான நிலைய அதிகாரிகள் பலர் ஆரியவதியிடம் விசாரித்த போதும், தனக்கு காலில் நோ உள்ளதாக மட்டுமே கூறியுள்ளார். தனத பாதங்களில் ஆணிகள் ஏற்றப்பட்டுள்ளன என்கிற உண்மையை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் அவர் இருக்கவில்லை. ஒரு அதிகாரி 700 ரூபாவை வைத்தியச் செலவுக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.

நான் நாடு திரும்பிய மகழ்ச்சி எனக்கு போதும். உடலில் உள்ள வலிகூட தெரியவில்லை. உண்மையை எங்காவது சொன்னால் என்னை பிடித்து வைத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் நான் எங்கும் உண்மை கூறவில்லை.." என்று அப்பாவித்தனமாக பின்னர் அவர் ஊடகங்களுக்கு கூறினார். விமான நிலையங்களின் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள் எதுவுமே இவரது உடலின் ஆணிகளைக் கண்டு பிடிக்காதது பலருக்கும் வியப்பைத் தந்திருக்கிறது.

வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கூட அவர் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ தான் பட்ட வேதனைகளை அவர் கூறவில்லை. சிறு ஊசியொன்று ஏறியிருப்பதால் தனக்கு கால் வலிப்பதாகக் கூறியியிருக்கிறார். அவரது 25 மகன் சமில் பிரியதர்சன தனது தாயை அழைத்துக்கொண்டு கும்புறுபிட்டி நகர வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதுதான் முதற்தடவையாக வைத்தியரிடம் உண்மைகளைக் கூறியிருக்கிறார்.



வைத்தியர் நிமல் ஜயசிங்க உடனடியாகவே அவருக்கு ஏற்பு ஊசி ஏற்றியிருக்கிறார். பின்னர் அவரது உடலை முழுவதும் எக்ஸ்ரே எடுத்து மேலதிக அறிக்கைகளை சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை அங்குள்ள எல்லோரையும் திடுக்கிடச் செய்துள்ளது. மொத்தம் 23 ஆணிகள் உடல் முழுவதும் ஆங்காங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது போன்றதொரு சம்பவம் இதற்கு முதல் இடம்பெற்றதில்லை என ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்த வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி தெரிவித்தார். இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆரியவதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய அனைத்தையும் மேறகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது குடிசையை சரிசெய்து குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமாக வாழவென புறப்பட்டுச் சென்று 5 மாதங்களின் பின் தனது கிராமத்துக்குத் திரும்பியபோது ஆரியவதிக்கு எஞ்சியிருந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னர் இருந்த குடிசையும் கடும் மழையினால் உடைந்து உருக்குலைந்து இருந்தது. ஆணிகள் ஏற்றப்பட்ட போது கிடைத்த வலியை விட அது வேதனைமிக்கது என அவர் கண்ணீர்மல்க பலர் முன்னிலையில் தேம்பினார்.

27அன்று நடந்த ஒப்பரேசனில் 5 ஆணிகளை நீக்க முடியவில்லை.

ஆரியவதியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அந்த 23 ஆணிகளில் முக்கிய 18 ஆணிகளை இன்று (ஓகஸ்ட் 27) நீக்கப்பட்டுள்ளது. ஏழு சிரேஸ்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 15 பேரைக் கொண்ட குழு இரண்டரை மணித்தியாலங்களாக செய்த ஓப்பரேசனில் 13 இடங்களை வெட்டி ஆணிகளை நீக்கியுள்ளனர். எஞ்சிய 5இல் குண்டு ஊசிகளும் உண்டு என்றும் அவற்றை நீக்குவது ஆபத்து மிகுந்ததென்றும். அவற்றை நீக்கும் போது நரம்புகளுக்கு பாதிப்பை கொண்டுவரக்கூடும் என்றும். அதை விட அவற்றை நீக்காமல் விடுவது பாதுகாப்பானது எனது வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.



நீக்கப்பட்ட ஆணிகள்

கண் இமை நெற்றிக்கருகில் - 1 கம்பி
வலது கையில் - 5 ஆணிகள், 1 கம்பி
இடது கையில் - 3 ஆணிகள், 2 கம்பிகள்
வலது காலில் - 4 ஆணிகள்
இடது காலில் - 2 ஆணிகள்

ஆகக் கூடிய நீளமுள்ள ஆணி 6.6 சென்றிமீற்றர் கொண்டது என வைத்தியர்கள் அறிவித்தனர்.

குறிப்பு

மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களின் சராசரி 20 சடலங்கள் மாதாந்தம் இலங்கை கொண்டுவரப்படுகின்றன. இயற்கை மரணங்கள், ஏனைய விபத்துக்களினால் மரணித்தவர்கள் அதில் அடக்கம்.


வெளிநாடுகளில் நாடுகளில் 1.8 மில்லியன் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களில் 70 வீதத்தினர் பெண்களாவர்.

சவுதியில் மட்டும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர்.

இதில் 4 லட்சம் பேர் இலங்கையர்கள்.

இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

மாதாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கின்றனர்.

இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் வெளிநாட்டு பணிப்பெண்கள் முக்கிய இடத்தில் உள்ளனர்.


source:nakkheeran-- 

StumbleUpon.com Read more...

மொபைலில் ஆபாச படம் எடுத்த கணவன்

>> Saturday, August 28, 2010


தஞ்சாவூர் : கொலை மிரட்டல் விடும் டாக்டரிடமிருந்து காப்பாற்றும்படி இளம் பெண், தஞ்சை எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளார்.


தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த மனோஜ் மனைவி அனுராதா (25), தஞ்சை எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சிறு வயதில் தாயார் இறந்து விட்டதால், என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமை தாங்காமல், 15 வயதில் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், மதுரை நிறுவனம் ஒன்றில், புகார் செய்தேன். அவர்கள், "என் திருமணம் செல்லாது' என அறிவித்தனர். தனியே குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தேன். மதுரை ஐ.சி.ஐ.சி.ஐ., இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, திருச்சி கண்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையை சேர்ந்த, மனோஜுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், மதுரை மருத்துவக் கல்லூரியில் மூன்றாம்ஆண்டு படித்து வந்தார்.


மனோஜ் ஒருநாள், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அனுபவித்துவிட்டு, நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாசப் படங்களை மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். தொடர்ந்து அந்த படங்களை காட்டி, மிரட்டி அனுபவித்தார். இப்பிரச்னை பெரிதாகாமல் இருக்க, திருமணம் செய்துகொண்டு அவருடன், மதுரை டி.வி.எஸ்., நகரில் குடும்பம் நடத்தினோம். படித்து முடித்தவுடன், தஞ்சை பொன்னகர் ஒன்றாம் தெருவில் வசித்து வந்தோம். ஒருநாள், அவரது மொபைல்போன் மெமரி கார்டை பார்த்தேன். அதில், பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டராக அவர் இருந்தபோது, கருக்கலைப்புக்கு வந்த பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். அவரிடம் கேட்டதற்கு, "இதை வெளியில் சொன்னால் உன்னையும், உன் குழந்தைகளையும் கொன்று விடுவேன். உன் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன்' என, மிரட்டுகிறார். போலீசார் அவரிடம் உள்ள மொபைல்போன் மெமரி கார்டை பறிமுதல் செய்து, அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர்


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கம்பியூட்டர் கேள்வி பதில்கள்



 



கேள்வி: என்னுடைய இமெயிலில் ஒரு பகுதியை மட்டும் பிரிண்ட் செய்திட வேண்டியுள்ளது. இதனை எப்படி பிரிண்டருக்கு பிரிண்ட் செய்திடக் கொண்டு போவது?
–வினுகிருபா, வில்லியனூர்
பதில்: எந்த பகுதியைப் பிரிண்ட் செய்திட விருப்பமோ, அதனை முதலில் செலக்ட் செய்திடவும். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனு மூலம் காப்பி செய்திடவும். இப்போது கிளிப் போர்டுக்கு உங்கள் டெக்ஸ்ட் வந்துவிட்டது. இதனை வேர்ட் புரோகிராம் அல்லது பேஜ் மேக்கர் போன்ற புரோகிராம்களில் பைல் ஒன்றைத் திறந்து பேஸ்ட் செய்திடலாம். பின் அந்த பைலை பிரிண்ட் செய்திடலாம். அல்லது ஏற்கனவே இருக்கும் டாகுமெண்ட்டில் இதனைப் புது பக்கமாக பேஸ்ட் செய்து, அந்தப் பக்கத்தினை மட்டும் பிரிண்ட் செய்திடலாம். பிரிண்ட் செய்த பின்னர் அந்த டெக்ஸ்ட் தனி பைலாகத் தேவை இல்லை என்றாலோ, அல்லது பைல் ஒன்றில் இடம் பெறுவது தேவை இல்லை என்று கருதினாலோ, அதனை நீக்கிவிடலாம்.

கேள்வி: இணைய பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், கீழாகவும் மேலாகவும் வேகமாகச் செல்ல எந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும்? –சி.மேரிபுஷ்பம், பொள்ளாச்சி
பதில்: பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகளையே இதற்கும் பயன்படுத்தலாம். விரல்களை அதிகம் நகர்த்தாமல் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள ஒரு வழி சொல்லட்டுமா! ஸ்பேஸ் பாரை அழுத்துங்கள், இணைய தளத்தில் ஒரு பக்கம் கீழாக எடுத்துச் செல்லப்படுவீர்கள். ஷிப்ட் கீயையும், ஸ்பேஸ் பாரையும் சேர்த்து அழுத்துங்கள். ஒரு பக்கம் மேலே எடுத்துச் செல்லப்படுவீர்கள். கம்ப்யூட்டர் நம் விருப்பப்படி நடக்கும் செல்லக் குழந்தை.

கேள்வி: கம்ப்யூட்டர் இயங்குவதில் கெர்னல் (kernel)   என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இப்போது வரும் வைரஸ் பிரச்னைகளிலும் இது குறித்து எழுதப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது என்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  –கம்ப்யூட்டர். அறிவியல் மாணவர்கள் சார்பாக –டி. நமசிவாயம், சிவகாசி
பதில்: பலவகையான கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் கெர்னல் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். இது ஒரு கரு போன்றது. ஹார்ட்வேர் அளவில் நடக்கும் டேட்டா கையாளுதல் செயல்பாட்டிற்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பின் செயல்பாட்டிற்கும் இடையே ஒரு பாலமாக, இது இயங்கும். சிஸ்டத்தின் திறன்களை, ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் செயல்பாடு களுக்கெனத் திறமையாக நிர்வாகம் செய்வது கெர்னல் ஒன்றின் பொறுப்பு. சிஸ்டத்தின் திறன் என்பது சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட், ராம் நினைவகம், கீ போர்டு, மானிட்டர்,டிஸ்க் ட்ரைவ் மற்றும் பிரிண்டர் போன்ற உள்ளீடு, வெளியீடு சாதனங்கள் ஆகியவை ஆகும். இவற்றிலிருந்து கிடைக்கும் வேண்டுகோள் கட்டளைகளை, அவற்றின் நிலை அறிந்து, பெற்று இயக்குவது இந்த கெர்னலின் பொறுப்பு.
விண்டோஸ் இயக்கத்தில் இது எப்படி இடம் பெற்றுள்ளது என்றும் பார்க்கலாம். 1985ல், அப்போதிருந்த எம்.எஸ். டாஸ் இயக்கத்தின் ஆட் ஆன் தொகுப்பாகத்தான் விண்டோஸ் வெளியானது. விண்டோஸ் தன் இயக்கத்திற்கு, டாஸ் இயக்கத்தின் மீது சார்ந்து இருந்ததால், விண்டோஸ் 95 இயக்கத்திற்கு முன் வந்தவை, ஆப்பரேட்டிங் சுற்றுவட்டம் (என்விரான்மென்ட்) (கவனிக்க: ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லை) என அழைக்கப்பட்டது. இப்படியே விண்டோஸ் இயக்கம் 1980 முதல் 2000 வரை இருந்தது. பின்னர் படிப்படியாக கெர்னலிலேயே பயன்பாட்டு செயல்பாடுகளும் தரப்பட்டு, முழுமையான கெர்னல் இயக்கத்தில் விண்டோஸ் பயனாளர் பயன்பாடு அமைந்தது.
அண்மைக் காலத்தில் இந்த கெர்னல் செயல்பாட்டில், விண்டோஸ் 7 உட்பட, அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பிழை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அவற்றைத் தீர்க்கும் பேட்ச் பைல்களைத் தருவதில் ஈடுபட்டுள்ளது.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரில் புக்மார்க்கு களுக்கான போல்டரை உருவாக்க முடியுமா? அப்படியானால், அவ்வாறு புதியதாக உருவாக்கிய போல்டரில் புதிய புக்மார்க்குகளை இøணைக்க முடியுமா? –கா. அறிவரசன், மதுரை

பதில்: பயர்பாக்ஸ் பிரவுசரில் புக்மார்க் போல்டரை உருவாக்குவது மிக எளிது. அதேபோல நீங்கள் விரும்புவது போல அதனை மாற்றி அமைப்பதும் எளிது. இணையத்தில் நாம் விரும்பும் தளங்கள் பல வகைப்படும். கல்வி, ஆராய்ச்சி, விளையாட்டு, பாடல்கள், தொழில் நுட்ப தளங்கள் என இவை பலவாரியாக இருக்கும். இவை அனைத்தையும் ஒரே போல்டரில் போட்டு வைத்தால் தேடிப் பெறுவது கடினம். இங்குதான் போல்டர்கள் நமக்கு உதவுகின்றன.
பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து கொள்ளவும். பின்னர் Bookmarks என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவில் Organize Bookmarks  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எங்கு நீங்கள் போல்டரை இணைக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளவும்.  Bookmarks என்பதில் ஒரு முறை கிளிக் செய்தவுடன், நீங்கள் போல்டரைக் காண வேண்டும் என்றால், Bookmark Menu என்பதில் ஒருமுறை கிளிக் செய்திடவும். இங்கு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் New Folder  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு நீங்கள் அடையாளம் காணும் வண்ணம் பெயர் ஒன்றைக் கொடுக்கவும். அதன் பின்  Add  என்பதில் கிளிக் செய்திடவும். புதிய புக்மார்க் ஒன்றை, நீங்கள் உருவாக்கிய புதிய போல்டரில் இணைக்க வேண்டும் எனில், போல்டரில் ரைட் கிளிக் செய்து, New Bookmarkஎன்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ளName பீல்டில் இணைய தளத்தின் பெயரை  (எ.கா Dinamalar ) இடவும். பின்னர்  Locationபீல்டில் இணைய தள முகவரியை (எ.கா http://www.dinamalar.com) டைப் செய்திடவும்.  Keyword  என்னும் இடத்தில் நீங்கள் அடையாளம் காணக் கூடிய சிறிய சொல்லை இடலாம். (எ.கா.malar). இதன் பின் என்டர் தட்டவும். இப்போது நீங்கள் அந்த இணைய தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். Load this bookmark in the sidebar  என்பதற்கு முன் உள்ள செக் பாக்ஸில் கிளிக் செய்தால், View – Sidebar – Bookmarksஎன்று செல்கையில் இந்த புக்மார்க் கிடைக்கும்.
ஏற்கனவே நீங்கள் புக்மார்க் செய்தவற்றின் பெயர்களை எப்படி போல்டருக்குக் கொண்டு வருவது என்று பார்க்கலாம். Bookmarks என்பதில் கிளிக் செய்து பின்னர் Organize Bookmarks என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி புக்மார்க்குகளை அப்படியே இழுத்துச் சென்று போல்டரில் விடலாம். ஒரே நேரத்தில் பல பழைய புக்மார்க்குகளைப் புதிய போல்டரில் கொண்டு சேர்க்க, கண்ட்ரோல் கீ அழுத்தியவாறே, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் போல்டருக்குக் கொண்டு செல்லவும்.

கேள்வி: வேர்ட் தொகுப்பில் மேலாக உள்ள டூல்பாரில் (பைல், எடிட்,வியூ போன்றவை இருப்பது) உள்ள மெனு பெயர்களில், சில எழுத்துக்களில் மட்டும் அடிக்கோடு இடப்பட்டுள்ளது ஏன்? –ஆ. சந்த்ரு, விழுப்புரம் 
பதில்: நீங்கள் குறிப்பிடுவது சரிதான். File என்பதில் F எழுத்திலும், Editஎன்பதில் E  எழுத்திலும் அடிக்கோடு இடப்பட்டுள்ளது. அவை அந்த மெனுவின் ஷார்ட் கட் எழுத்தைக் குறிக்கின்றன. Alt கீயுடன் இந்த எழுத்துக்களை அழுத்தினால், அந்த மெனுக்கள் விரியும். எடுத்துக்காட்டாக View என்ற மெனு பெற Alt+V அழுத்தினால் போதும்.

கேள்வி: பைல்களை அழிக்கும்போது, அவை ரீசைக்கிள் பின்னுக்குச் செல்கின்றன. வேண்டாம் எனில், ஷிப்ட் அழுத்தியவாறு டெலீட் கொடுத்தால், அங்கு செல்லாமல் அழிந்து போகின்றன. நான் அழிக்கும் பைல்கள், எனக்கு உறுதியாகத் தெரியும் பட்சத்தில், எப்போதும் அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என்று அமைக்க முடியுமா?  –கா. மேரி ரெஜினா, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
பதில்: அதாவது பைலை அழிக்கும்போது அது, அழிக்கப்பட்டே ஆக வேண்டும். ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என்று விரும்புகிறீர்கள். அதனாலென்ன! தாராளமாக செட் செய்திடலாம். ரீசைக்கிள் பின் ஐகான் டெஸ்க்டாப் திரையில் உள்ளதல்லவா? அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். இப்போது ரீசைக்கிள் பின் ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு திரை காட்டப்பட்டு, அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க் பிரிவுகள் அனைத்தும், அவற்றின் எழுத்து மற்றும் பெயருடன் தெரியவரும். இதில்  Use one setting for all drivesஎன்று ஒரு ரேடியோ பட்டனுடன் கூடிய வரி இருக்கும். இதனைத் தேர்ந்தெடுங்கள். இப்போது அதன் கீழாக, ஒரு சிறிய கட்டத்துடன், Do not move files to the Recycle Bin. Remove files immediately when deletedஎன்று இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்க டிக் அடையாளம் அமைத்து ஓகே கொடுக்கவும். இனி ஜாலியாக பைல்களை அழிக்கவும். அது குப்பைத் தொட்டிக்குப் போகாது. ஆனால் எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை இந்த ஆப்ஷனை மேற்கொள்ளும் முன் யோசிக்கவும்.

source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கர்பாலாவிலிருந்து கல்வாரிக்கு -Barakat Ullah

>> Friday, August 27, 2010

கர்பாலாவிலிருந்து கல்வாரிக்கு -Barakat Ullah



பாகிஸ்தானைச் சேந்த் மேற்கு பஞ்சாபின் எல்லைப் பிரேதஷ நகராகிய நரோலால் என்னும் ஊரில் ஷியா பிரிவைச் சேந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தில் நான் பிறந்தேன். இக்குடும்பத்தின் நேர்மை, பக்தி, சடங்காச்சாராம் ஆகியவற்றின் கராணமாகச் சமுதாயம் முழுவதும் அதை மிகுதியாக மதித்து வந்தது. என் பாட்டனாhர் தமது சொந்தப் பெயரால் அழைக்கப்படாமல் "ஜனாப்" என்றே அழைக்கப்பட்டார். மசூதி வேறு, அவர் வேறு என்று பிரிக்கப்படாதவராகக் கருதப்பட்டார். அவர் தமது கடையில் காணப்படாவிட்டால், மசூதியில்தான் காணப்படுவார், அவர் தமது மாலை தொழுகையை முடித்து விட்டு, வீட்டுக்குத் திரும்பியபின், குர்ஆனின் வசனங்களை வாசித்துக்கொண்டிருக்கும் போது, அவருடய அணைப்பில் ஆழ்ந்தவனாய் அவர் மடியில் அமர்ந்திருந்ததே, அவரைக் குறித்து எனக்குள்ள ஆதிஞாபகமாகும். என் பாட்டியார் பக்தி மிக்கவராயிருந்தமையால் அவர் மரித்துச் சமாதியடங்கிய பின், பல பெண்கள் தாங்களும் மரித்து அடக்கம் பண்ணப்படும் போது அம்மையாரின் காலடியில் தமக்கு தலைமாடாக வைத்துத் தம்மை அடக்கம் பண்ண வேண்டுமென்று வேண்டினர். இஸ்லாமுடைய நபிநாயகத்தின் பேரனாகிய இமாம் ஹ_சேன் கொல்லப்பட்டபோது திருநகராகிய கர்பாலாவுக்கு, என் பாட்டியாரின் சகோதரர் ஒருவர் யாத்திரை சென்றதுண்டு. 

எங்கள் குடும்பத்தவர் காலையில் தொழுகை செய்து குர்ஆனிலிருந்து சில திருவாசகங்களைச் சொன்ன பின்புதான் அவரவர் வேலையைத் தொடங்குவர். நான் நான்கு வயதாயிருந்தபோது, குர்ஆனை மனப்பாடம் பண்ணும்படியாக ஸைய்யத் ஷாஹ் ஸாகிபிடம் அனுப்பப்பட்டேன். அதே சமயத்தில் அவருடய மகள் என் சகோதரிக்குக் குர்ஆனைக் கற்பித்தாள். இரவு பிரார்த்தனையோடு எங்கள் வீட்டு அன்றாட வேலைகள் முடிவடையும். 

நான் வளர்க்கப்பட்ட வீட்டின் பண்பாடு இவ்விதமாக இருந்தது. நான் நான்கு வயதாயிருக்கும்போதே, கிறிஸ்தவ தொண்டர் நடத்தும் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். தேர்வுகளில் நான் அடைந்த வெற்றியினால் அங்கிருந்து அப்பள்ளியைச் சார்ந்த ஆரம்ப நடுநிலைப் பள்ளிக்கு அனுப்பட்டேன். இவ்விரு பள்ளிகளிலும் கிறிஸ்தவப் போதனைகள் கற்பிக்கப்பட்டதோடன்றிச் சில சமயங்களில் ஏனைய பாடங்களைக் காட்டிலும் வேதபாடமே முக்கியமாகக் கருதப்பட்டது. எனக்கு நல்ல நினைவாற்றல் இருந்தமையால் நான் ஐந்தாம் வகுப்பையடைந்தபோது, பல கிறிஸ்தவர்களைக் காட்டிலும் பரிசுத்த வேதநூலை (பைபிள்) நன்கு அறிந்திருந்தேன் எந்த வருடத்திலும் நான் வேதாகப் பரிசு வாங்காமலிருந்ததாக எனக்கு ஞாபகமேயில்லை. 

என் தகப்பனராகிய ஷேய்க் ரஹ்மத் அலி பரந்த நோக்குடையவராகவும், எல்லா மதத்திற்கும் ஆதரவளிப்பவராகவும் விளங்கினார். ஹிந்துக்களும், கிறிஸத்வர்களும், முஸ்லீம் மதத்தின் எல்லா வகுப்புகளும நண்பர்களாயிருந்தனர். அவர் வாணிபம் செய்து வந்த போதிலும் ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் அவர் பரிசுத்த வேதத்தையும் குர்ஆனையும் எப்படியாவது வாசித்து விடுவார். பாரசீகக் கவிஞர்களின் கவிகளையும், பாரசீக ஆசிரியர்களின் உரைநடை நூல்ககளையும் பெருவிருப்புடன் படிப்பார். அவருடைய தம்பியும் என் சிற்றப்பவுமாகிய மோஹ்ஸின் அலியோ, என் அப்பாவும் முற்றிலும் எதிர்மாறாக ஷீயா முஸ்லீம் கொள்ளகைகளை மிகவும் கண்டிப்பாகவும் வைராக்கியத்தோடும் கடைபிடித்தாh. குர்ஆனையும் அதற்குரிய விளக்க நூல்களையும் தவிர வேறெந்த மதநூல்களையும்  அவர் படிக்கவே மாட்டார். அவர் மெட்ரிக்குலேஷன் வரை கற்றிருந்தார். அக்காலத்தில் அச்சிற்றூரில் அது ஓh அரிய பெரிய படிப்பாக கருதப்பட்டது. அவர் தம் வீட்டில் ஓர் சிறு நூல் நிலையமும் வைத்திருந்தார். கிறிஸ்தவ சமயத்தையுமு; இஸ்லாமிய மதத்தில் வேறு பிரிவுகளையும் கண்டித்தும் மறுத்தும் கூறும் நூல்களே அதில் அடங்கியிருந்தன.

நான் என் பள்ளியில் வருடாவருடம் வேதாகப் பரிசுகள் பெறுவதையும், பல வேத வசனங்களை மனப்பாடமாய்க் கூறுவதையும் என் சிற்ற்ப்பா கண்டபோது, என்சமயப் பயிற்சயை இனி தாமே நடத்தவேண்டுமென்று கருதி எனக்குச் சில நூல்களை வாசிக்கும்படிக்கொடுத்தார். அச்சமயம் எனக்க வயது பன்னிரன்டு நான் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். என் சிற்றப்பா எனக்குக் கொடுத்த புத்தகங்களை நான் எளிதில் வாசித்துப் புரிந்து கொள்ளத்தக்கதாக சாதி " பிர்தௌஸி" என்னும் ஆசிரியர்கள் எழுதிய நூல்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை நான் படித்துக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு வழங்கின புத்தகங்களில் சுப்தத் அல் அக்லாவீல்பீ தர்ஜிஹில் குர்ஆன் அல்லல் அனாஜீல் என்ற புத்தகம்தான் என் மனதை பெரிதும் ஆட்கொண்டது. இஸ்லாம் மத போதனைகளுக்கும் கிறிஸ்தவ மதப் போதனைகளுக்குமிடையேயுள்ள ஒப்புமைகளும் பரிசுத்த வேதநூலைக் கண்டனம் பண்ணும் கூற்றுகளின் எடுத்துக் காட்டுகளும் அந்நூலில் அடங்கியிருந்தன. நூளடைவில் இந்நூல் எனது இணைப்பிhயி நண்பனாகி விட்டது. இதை ஓர் ஆயுதம் போல் நான் தாங்கிக் கொண்டு கிறிஸ்தவர்கள் கடைவீதிகளில் நி;ன்று பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு நான் போவதுண்டு, பல கேள்விகளால் அவர்களைத் தாக்கி, அவர்களுக்கு நான் அடிக்கடி குழப்த்தையுண்டு பண்ணினதுண்டு. 

கிறிஸ்தவ சமயத்தின் மீது வெறுப்பை உண்டுபண்ணும் இத்தகைய புத்தகங்களால் ஆட்கொள்ளப்பட்டவனாய் நான் ஒருமுறை பரிசுத்த மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் பிரதி ஒன்றைச் சுட்டெரித்தேன். எப்பெடியென்றால், ஓர் இரவு மண்ணென்னை விளக்கொளியில் நான் அதை வாசித்துக்கொண்டிரு;தேன். அதில் எப்பகுதியை வாசித்துக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு இப்பொழுது நினைவில்லை, ஆனால் அதை வாசித்துக்கொண்டிருக்கும் போது, விளக்குத் தீயை அதில் மூட்டி அதை எரித்தேன். நான் செய்த செயலைக் கண்டு என் தாயர் திடுக்கிட்டார். ஆனால் நானோ அது இஞ்சில் (சுவிசேஷம்) என்னும் நூலின் ஓர் பிரதிதான் என்று அவருக்குக் கூறினேன். அவர் போட்ட கூச்சலைக் கேட்டு என் தகப்பனார் அங்கு வந்தார். நான் செய்த் செயலைக் கண்டு என்னை மிகவும் திட்டினார். குர்ஆனை ஓர் கிறிஸ்தவன் சுட்டெரி;த்தால் நான் அதைப் பொறுப்பேனா என்று என்னைக் கேட்டார். என் முகத்தில் காணப்பட்ட திகிலை அவர் கண்டபோது, சாதி என்னும் நூலிலிருந்து உனக்கு பிறர் எதைச் செய்ய வேண்டாமென்று நீ கருதுவாயோ, அதை நீயும் பிறருக்குச் செய்யாதே, என்றும் மேற்கோளைக் கூறினார். அவ்வேளையில் என் சிற்றப்பா அங்கு வந்தார். தம் தமையனாருக்கு முன்பாக அவர் எதையும் சொல்லத் துணியவில்லை. என் தகப்பனார் அவ்விடம் விட்டு அகன்றபின், நான் செய்தது தகுதியான செயலென்றும், புகழ்மிக்க செயலென்றும் என்னை வாழ்த்தியதுடன் அது பாவச்செயலாகாதென்றும் வற்புறுத்தினார். 

ஷீயா, பிரிவினருக்கு முஹர்ரம் ஓர் புனித மாதமாகும். ஏனென்றால் இமாம் ஹ_சேன் கொல்லப்பட்ட மாதம் அது. ஒவ்வொரு வருடமும் முஹர்ரம் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஷீயா வகுப்பைச் சேர்ந்த பையன்கள் ஒன்று கூடித் தெருக்களுடே பவனி சென்று கொண்டு, தங்கள் மார்பில் அடித்துக் கொள்வர், அவ்வேளையில் என் நண்பர்கள் நால்வரும் நானும்

    ஹ_சேன்; ஹ_சேன் ஹ_சேன் ஹ_சேன்

    ஷாஹிதே கர்பலா ஹ_சேன்

என்று பாடிக்கொண்டே செல்வோம். ஒருமுறை நாங்கள் ஒரு ஸாக்கிரை (அதாவது ஞாபக்ப்படுத்துவோரை, அல்லது தெய்வத்தைத் துதிப்பவரை) லக்னோவிலிருந்து வரவழைத்தோம் அவர் சிறு கோலைக் கொண்டு வந்திருந்தார். அதன் ஓர் முனையில் பன்னிரண்டு சிறிய கூர்மையான கத்திகள் மாட்டப்பட்டிருந்தன. அவர் அக்கத்திகளைக் கொண்டு தம் தோள்களைக் கிழித்துக் கொண்டார். இதைக் கண்டு நான் ஆவேசமுற்று அக்கோலை அவர் கையிலிருந்து பிடுங்கி என் தோள்களைக் கீறிக்கொள்ள ஆரம்பித்தேன். இதைக் கண்ட என் மாமான்மாரில் ஒருவர் அதை என் கரத்திலிருந்து பறித்துக் கொண்டார். அந்நிகழ்ச்சிக்குப்பின், நான் வைராக்கியமும் பக்தியும் மிக்க சிறுவன் ன்று எனக்குப் பேரும் புகழும் உண்டாகி விட்டது. 

என் வாலிப பருவத்தின் இன்னொரு நிகழ்ச்சி என் மனதை விட்டு அகல்வதேயில்லை. ஒருநாள் கிறிஸ்தவ ஊழியர்கள் சிலர் கடைவீதியில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு திரு. தோமா என்பவர் உத்தரப்பிரேதசத்திலிருந்து வந்திருந்தார். துணிகளுக்கு சாநய்தோய்க்கும் ஒருவனுடைய கடைக்கு அருகில் நின்று அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். முஸ்லீம் சமயத்தைச் சேர்ந்த, பருத்த உடல் கொண்ட அந்தக் கடைக்காரன், கடையிலிருந்து வெளியில் வந்து, பிரசங்கியாருக்கு முன்னால் போய் நின்று அவர் முகத்தில் துப்பி, அவர் கன்னத்தில் பலமாக அறைந்தான். இதன் விளைவாக இருவரும் கைகலந்து சண்டையிடுவர் என்று அங்கு கூடியிருந்த மக்கள் எதிர்பார்த்தனர். ஏனென்றால் திரு. தோமா அவர்களும் நல்ல தேகக் கட்டும் வலிமையும் வாய்ந்தவராயிருந்தார். ஆனால் அவரோ, தமது கைக்குட்டையை வெளியிலெடுத்துப் பொறுமையாகத் தமது முகத்தை துடைத்துக்கொண்டு "கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று கூறிவிட்டுத் தமக்கு யாரும் எத்தீங்கும் இழைத்திராததுபோல் தொடர்ந்து பிரசங்கஞ் செய்தார். சாயக்காரன் தலைகவிழ்ந்து வண்ணமாகத் தன் கடைக்குத் திரும்பினான். திரு. தோமா அவர்கள் அவ்வேளையில் நடந்துகொண்ட விதம் எல்லோரையும் வியக்கச் செய்தது. அது என் உள்ளத்தையோ ஓர் பெரிய அசைப்பு அசைத்து விட்டது. காரணம் யாதெனில, இயேசுவானவர் மலைமீது செய்த பிரசங்கத்தில் " உங்கள் சத்துருக்களில் அன்பு கூருங்கள்" என்று கூறியுள்ளதை மெய்யாகவே யாரும் கைக்கொள்ள முடியாதென்றும், அதனால் அப்பிரசங்கம் யாருக்கும் உடன்பாடாகதென்றும் நான் பலமுறை கூறியிருந்ததுண்டு. 

நான் எட்டாம் வகுப்பை முடித்தவுடன் கிறிஸ்தவத் தொண்டர்கள் நடத்தும் உயர்நிலைப்பள்ளிக்கு என் வீட்டிலிருந்து அனுப்பப்பட்டேன். இப்பள்ளியிலும் ஒவ்வொரு வேதபாடப் பரிசையும் நானே பெற்று வந்தேன். நூர்முகம்மது என்ற பெயர் கொண்ட ஓர் முஸ்லீம் பையன் கிறிஸ்தவனாக விரும்பினான். ஆனால் நானோ அவனிடஞ்சென்று அக்கருத்தை அறவே விட்டுவிடும்படிச் செய்தேன். சமயச் சார்பான காரியங்களில் என்னை ஓர் நிபுணனாக மாணவரும் ஆசிரியரும் மதித்தனர். சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் கடை வீதிகளுக்கெல்லாம் நான் சென்று பிரசங்கிமாரிடம் மனக்குழப்பத்தை தரவல்ல கேள்விகளைக் கேட்டு, இவ்விதமாகக் கூட்டத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிவந்தேன். 

நான் படித்துவந்த உயர்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டிருந்த நகர் எல்லாப் பாவங்களுக்கும் பெயர் பெற்றதாயிருந்தது. ஆதனால் நானும் கறைபடாமலிருக்கவில்லை@ கறைபடாமலிருக்கவுமுடியவில்லை. அப்பொழுது நான் வாலிப் பருவத்தை எட்டிக்கொண்டிருந்தேன். எளிதில் வாலிபரைத் தவறச் செய்யக்கூடிய வயது அது. என் பள்ளியின் சுற்றுச் சார்புகளும், நான் வசித்துவந்த விடுதியின் சூழ்நிலையும் பாவம் நிறைந்தவைகளாயிருந்தன. ஆசிரியத் தொண்டை பலகாலமாக ஆற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்கள் சிலவரும் அவ்விடுதியில் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் துன்மார்க்கத்தில் பெயர் பெற்றவர். இந்தப் பயங்கரமான சூழ்நிலையில் என் பாவத்தைக் குறித்து நான் ஆழ்ந்த உணர்ச்சியடைந்தேன். எப்படியாவது பாவமன்னிப்பைப் பெற வேண்டுமென்றும், செம்மையும் தூய்மையுமான வாழ்க்கையை நான் மீண்டும் அடையவேண்டுமென்றும் உணர்ந்தேன். அருகிலிருந்து மசூதிக்குச் சென்று ஒழுங்காக என் தொழுகையை நிறைவேற்றுவதுடன் பாவத்தின் வல்லமையிலிருந்தும், பிசாசின் அடிமைத்தனத்திலிருந்தும் எனக்கு விடுதலையளிக்கும்படியும கடவுளை வேண்டினேன். ஆனால் என் வேண்டுகோளுக்கோ பதில் அளிக்கப்படவேயில்லை. குர்ஆனைப் படித்துப் பார்த்தேன். எதுவும் எனக்குப்ப பாவத்தினின்று விடுதலையளிக்கவேயில்லை. நாளுக்கு நாள் என் பாவ உணர்ச்சி அதிகரித்தது@ என்னை பாவத்தினின்;று விடுவிக்ககூடியது யாது? என்ற கூக்குரலே என் உள்ளத்திலிருந்து ஓயாது எழுந்து கொண்டிருந்தது. என் படிப்பு வேளை முடிந்த போதெல்லாம் மௌலவிகளிடம் சென்றேன் தீய மனதையுடைய பையன்களின் தொடர்பை அறவே விட்டுவிட்டேன். நல்ல பையன்களோடு நட்புக்கொண்டேன். சிறந்த முஸ்லீம் குருக்களிடமும் கேட்டேன@ நான் என்னதான் பரிகாரம் தேடினபோதிலும் பாவவுணர்ச்சி என்னைவிட்டு நீங்கவேயில்லை. அது என் உள்ளத்தை விடாது அரித்துக் கொண்டேயிருந்தது. 

அப்பொழுதுதான் என் வாழ்க்ககை புதிய பாதையில் திரும்பிற்று. எவ்வாறென்றால், நான் ஒன்பதாம் வகுப்பில் முதல் நிலையில் உயர் மதிப்பெண்களுடன் தேறியிருந்த மகிழ்ச்சிமிக்க செய்தியை என் பெற்றோருக்கு அறிவிக்கப் போய்க்கொண்டிருந்தேன். ஊருக்குள் புகுந்த போது உவகைமலர்ந்த முகத்துடன் காணப்பட்டேன். ஆனால் வீட்டிற்குள் நுழையும் முன்பே, எங்கும் துக்கம் குடிகொண்டிருப்பதைக் கண்டேன். என் சிற்றப்பாவாகிய மோஹ்ஸின் என்பார் தலைவாயிலில் நின்று கொண்டிருந்தார். அவர் என்னை தனியே அழைத்துச் சென்று, என் தந்தை கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிவிட்டார் என்றும், அவ்வளவு காலமும் அவர் அஞ்சுமானே இஸ்லாமியா குழுவின் தலைவராயிருந்தமையால் நகர் முழுவதும் அவருக்காகப் புலம்பிக் கொண்டிருந்ததென்றுங் கூறினார். இதைக் கேட்டவுடன் யானடைந்த மன மடிவினால் கால் தள்ளாடிக் கொண்டே வீட்டினுள் சென்றேன்.



அவ்வேளையில் என் தக்பபனார் வீட்டில் இல்லை, என் தாயரும் என் இரு சகோதரிகளும் இரு சகோதரர்களுமிருந்தனர், அவர்களும் கிறிஸ்தவர்களாயிருந்தனர். அவர்களெல்லாரும் ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்டனர். நாங்கள் ஒன்றுகூடின உவகையில் என் உள்ளத்தை வருத்திய துயரைக் கூட மறந்து விட்டேன். அவ்வேளையில் என் சித்தப்பா வந்து என்னைத் திரும்பவும் தனியே அழைத்துச் சென்று இனி நீ

முஷ்ரிக்குகள் (பொய் மதத்தார்) நிறைந்த இக்குடும்பத்தில் இவர்களோடு ஒன்றுப்பட்டிருக்கக் கூடாது. நான் உன்னை என் புதல்வனாக சுவீகரித்து, என் மக்களைக் காட்டிலும் உன்னை அதிகமாக நேசிப்பேன். நான் உன்னை எம்.ஏ. வகுப்பு வரை படிக்க வைப்பேன். உனக்கு எவ்வித இடர்பாடும் வராதபடி உன்னைக் காத்துக் கொள்வேன், என்றார். அவர் சொன்னபடியெல்லாம் செய்வார் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால் நானோ அதற்கு உடன்படவில்லை. என் தகப்பனார் கிறிஸ்தவராயிருந்தாலும் கூட நான் அவரோடு ஓர் சிறந்த முஸ்லீமாக வாழ்வேன் என்றும் எல்லா நியாயமான முறைகளிலும் ஓர் நல்ல புதல்வனாக அவருக்கு கீழ்படிந்திருப்பேனென்றும் கூறினேன். என் தகப்பனார் வீட்டிற்கு திரும்பின போது என்னைக் கண்டு மகிழ்ச்சியுற்றார். ஆனால் நகரத்தார் அவருக்கு இழைத்திருந்த கொடுமையினால் அவர் முகத்தில் கோடுகள் விழுந்திருப்பதைப் பார்த்தபோதோ, என் உள்ளம் மிகுதியாக வேதனையுற்றது. நான் சித்தப்பாவுக்குக் கூறின விடைய அவர் கேட்டபோதும் பெருமகிழ்ச்சயைடைந்தார். 

இரண்டு நாட்கள் கழிந்தபின் நகரின் முதியோர்களாலாகிய குழுவிற்கு நான் அழைக்கப்பட்டேன். ஓர் பெரியாரின் வீட்டில் அக்குழு கூடிற்று. அவர்தான் பின்னாளிள் எனக்கு மாமனாரானவர், அவர் என் கரத்தைப் பற்றிக் கொண்டு, நான் தகப்பனாரைப் போல் கிறிஸ்தவனாகாவிடில், என்னை எம்.ஏ வகுப்பு வரை படிக்கவைப்பதாகக் குர்ஆனின் மீது சத்தியம் செய்தார். அதற்கு நான் விடையாக அங்குக் கூடியிருந்த எல்லோரையும் நோக்கி, இஸ்லாமிய மதத்தைத் துறக்கும் எண்ணம் எனக்கு இல்லையென்றும், என் பெற்றோர் எவ்வித ஈன லாபத்தையுங் கருதி கிறிஸ்தவ சமயத்தை தழுவியிருக்க முடியாதென்றும், அவ்வுண்மையை முதியோர் அறிவர் என்றும் கூறினேன். அவர்கள் என் தந்தையாரின் கருத்தை சிறிதும் சந்தேகிக்கவில்லை என்று கூறினர், என்ற போதிலும் தங்கள் குழுவின் தலைவர் முஷ்ரிக் (பொய் சமயத்தார்) ஆக மாறுவதைத் தங்களால் சும்மா பார்த்துக்ககொண்டிருக்க முடியாதென்றும், தங்கள் மத்தையும் சமுதாயத்தையும் காப்பது தங்கள் பொறுப்பென்றும் கூறினர். இதைக் கேட்ட நான் அவர்கள் கூற்றினால் வருந்துவதையும் இஸ்லாமிய மதத்தில் நான் நிலைத்திருக்கும்படி அவர்கள் எனக்குக் கையூட்டளிக்க முயன்றார் என்றும் கூறினேன். 

   அன்று நானும் என் தந்தையாரும் எங்கள் உள்ளத்தில் இருந்ததை ஒளிக்காமல் உரையாடினோம். தாம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவித் திருமுழுக்குப் பெற்றதைக் குறித்து தெரிவித்தால் பரீட்சை சமயத்தில் நான் கலவரம்; அடைந்து விடுவேன் என்று அஞ்சித்தான் எனக்குத் தெரியப்படுத்தவில்லை என்று கூறினார். அவர் இருபது ஆண்டுகளாக சத்தியத்தைத் தேடிக்கொண்டிருந்ததாகவும், இறுதியில் கிறிஸ்துவில்தான் அதைத் தாம் கண்டதாகவும்  கூறினார். நான் முதியோர்களிடம் கூறின தீர்மானத்தைக் கேட்டு மகிழ்ந்தார். என் தந்தையாரின்

சாந்தமும், அமைதியும், பெருமிதமும், தமது துன்பங்களையும் அவர் அன்போடும் பொறுமையோடும் சகித்த விதமும்,நகரத்தார் அவருக்கிழைத்த கொடிய துன்பங்களின் செய்தியும் என் மனத்தையுருக்கின. ஏன் தகப்பனாரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட அந்தப் புதிய ஏற்பாட்டில்

(இன்ஜில்) என்ன இருக்கிறது என்பதை வாசித்து அறியும்படித் தீர்மானித்தேன்.



  உடனே, என் தகப்பனார் தாமே என் வாசிப்பை வரையறுத்து நடத்த ஆரம்பித்தார். அவர் எனக்குக் கொடுத்த புத்தகங்களில் ஃபாந்தர் என்பார் எழுதின மிஸானுல் ஹக்கும் திஸதால் எழுதின கிறிஸ்தவ சயத்திற்கு முகம்மதிய மறுப்புரையும், இமாதுத்தின் எழுதின நூல்களும் இருந்தன. அவைகளை நான் கருத்தாகப் படித்தேன் இவற்றின் மூலமாகவும், இவற்றிற்கியைனாயான ஏனைய நூல்கள் மூலமாகவும்,

சுவிசேஷங்கள் கிறிஸ்துவின் உண்மையான கூற்றுகளைக் கொண்ட உண்மையான நூல்கள் என்பதை உணர்ந்தேன். இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவம், சிலுவை பிராயச்சித்தம், திரித்துவம் என்பவற்றினைக் குறித்து என் உள்ளத்தில் எழுந்த கேள்விகள் மட்டும் நான் திருமுழுக்குப் பெறுவதற்குத் தடையாயிருந்தன. என் தந்தையார் எனக்கு வேறு நூல்களும் கொடுத்தார். ஆனால் அவைகளோ நான் புரிந்துகொள்ளக்கூடாத விதமாக உயர்நடையில் எழுதப்பட்டிருந்தன. என்றபோதிலும் எனக்குப் புரியாத தத்துவங்களை எனது விசுவாசப் பிரமாணமாகக் கொள்ளும்படியாகவும், காலம் வரும்போது அவைகளை நான் புரிந்து கொள்ளக் கூடுமென்றும் என் தந்தையார் கூறினார். கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நான் படித்தபோது, என் தந்தையாரை நானும் பின்பற்றிக் கிறிஸ்துவை என் மீட்பராக ஏற்றுக்கொள்ளள வேண்டுமென்ற நாட்டம் என் உள்ளத்தில் உண்டாயிற்று. தீர்க்கதரிசிகள் அனைவரிலும் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டும் பாவத்தை வென்றார் என்றும், அவருடய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் அவ்வுண்மை வெளியாயிற்று என்றும், ஆகவே என்னை விடாது வருத்திக்கொண்டிருந்த என் பாவங்களின்று அவர் ஒருவரே என்னை மீட்கக் கூடுமென்றும் நான் உணர்வை அடைந்தேன். 

திடீரென்று கல்வாரிச் சிலுவையின் திருப்கடவுள் என் பாவங்களை மன்னித்துவிட்டார் என்ற உணர்வடைந்தேன். நான் திருமுழுக்குப் பெற்ற போது பாவப் பெருஞ்சுமை என் தோள்களிலிருந்து நீக்கப்பட்டதாக உணர்ந்தேன். என்ன மகிழ்ச்சி. நான் பாவ மன்னிப்படைந்துவிட்டேன் என்று உணர்ந்துவுடன்  என் வாழ்க்கையில் சாந்தியும் அமைதலும் உண்டாயின. இவ்வனுபவம் எனக்கு புதிதாயும், முழுவதும் விளக்கிக் கூறக்கூடாததாயுமிருந்தது. பொருள் எனக்கு நன்கு புலனாயிற்று, பாவமில்லா ஆண்டவராகிய இயேசு என் பாவங்களுக்காகச் சிலுவையில் மாண்டார் என்ற உண்மையின் மூலம் 

பாவமன்னிப்பையும் கிறிஸ்து இயேவுக்குள் புது வாழ்வையும் நான் கண்டடைந்தபோது, இளைஞனாயிருந்தேன். அதன்பின் இத்தனை ஆண்டுகளாக நான் அனுபவித்த என் கிறிஸ்தவ அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கும் போது நான் தகுதியற்றவனாயிருந்தபோதே கடவுள் எனக்கு எவ்வளவாய்த் திருவருள் புரிந்தார் என்ற உணர்வினால், என் உள்ளம் நன்றியறிதலால் நிறைகிறது. எனக்கு அறிவும் வயதும் அதிகரிக்க அதிகரிக்க, அதோடு என் மனப்பாண்மையும் விரிவடைய  என் வாழ்க்கையில் மெய்யான கிறிஸ்தவ அனுபவமும் அதிகரித்துள்ளது. பாவத்தில் அழிந்துபோன மனுக்குலத்திற்குச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடெழுந்த கிறிஸ்துவினால் மட்டுமே மீட்பின் நம்பிக்கையுண்டு என்ற உணர்வு எனக்கு மிகுதியாய் ஏற்பட்டுள்ளது. பாவத்திலிரு;து விடுதலையும், தூய்மையும் நற்குணமும் பொருந்திய வாழ்க்கையடைதலும், அவாரால் மட்டுமே வாய்க்கக்கூடும்.

என் சிந்தனைகளையும் அனுபவங்களையும் என் முஸ்லீம் சகோதரார்களுக்கு கூற வேண்டுமென்ற ஆவல் எனக்கு எப்பொழுதுமே உண்டு. இயேசுவில் பொருந்தியுள்ள சத்தியத்தை அவர்கள் காண வேண்டுமென்று நான் பல புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்வாரிச் சிலுவையிலிருந்து பெருக்கெடுத்துப் பாயும் மகிழ்ச்சியையும் ஜீவனையும் அவர்களும் என்னோடு அனுபவிக்க வேண்டுமென்பதே என் நோக்கமாகும். என் வயது முதிரும் இக்காலத்தில் நமது ஆண்டவரும் உலக இரட்சகருமாகயிய இயேசு கிறிஸ்துவில் நான் இவ்வளவு காலமும் அனுபவித்த இரட்சிப்பின் சந்தோஷம் அவர்களுக்கு வாய்க்க வேண்டுமென்று விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறேன்.

source:http://iemtindia.blogspot.com 

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

3டி படத்தை இனி தொட்டும் பார்க்கலாம்

 
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

டோக்கியோ: 3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில் வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும் கேமராக்கள் வந்துவிட்டன. 3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன.

இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு, தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில் பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே பார்க்கலாம்.

குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம் மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும். பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின் இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன. சுகுபா நகரில் நேற்று நடந்த அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர். முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.

source:dinakaran
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

காளி கோவில்களில் குவியும் இலங்கை அரசியல்வாதிகள்

>> Thursday, August 26, 2010

 கொழும்பு; இலங்கையில் உள்ள காளி கோவில்களில் திருவிழாக்கள் விமரிசையாக நடக்கின்றன. சிறுபான்மை தமிழர்களை கவருவதற்காகவும், துன்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், காளி கோவில்களில் மனம் உருக வழிபாடு நடத்தி வருகின்றனர், இலங்கை அரசியல்வாதிகள்.

ஆடி மாதம் என்றாலே நம்ம ஊரில் அம்மன் கோவில்கள் களை கட்டும். இங்கு மட்டுமல்ல, இலங்கையிலும் இந்த நடைமுறை உண்டு என்பது தான் ஆச்சர்யமான விஷயம். நம்ம ஊரில் ஆடி முடிந்ததும், அம்மன் கோவில்களில் விசேஷம் முடிந்து விடும். இலங்கையில் ஆடியைத் தாண்டி, ஆவணியிலும் காளி கோவில்களில் ஒரே திருவிழா மயம் தான். காளி கோவில்களில் மிருகங்கள் பலியிடுவதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அதைப் பொருட்படுத்தாமல், கொழும்பு, சின்லா பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் மிருகங்களை பலிகொடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அங்குள்ள தமிழர்களால், இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் இலங்கையில் சிறுபான்மையினர். மேலும், அங்கு நீண்ட காலமாக நடந்து வந்த உள்நாட்டு போர் நடந்து முடிந்த நிலையில், சர்வதேச நாடுகளின் கவனம் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது. தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் முறையாக நடக்கின்றனவா என, கேள்வி எழுப்பப்படுகிறது.


எனவே, காளி கோவில் திருவிழாக்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கி விட்டனர், இலங்கை அரசியல்வாதிகள். துன்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் காளி கோவில்களில் மனம் உருக வழிபாடு நடத்துகின்றனர். தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என, புகார் கூறும் அரசியல் எதிரிகளின் வாயை அடக்குவதற்காக, காளி கோவில்களுக்கு படை எடுக்க துவங்கி விட்டனர். இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லை. இதற்கு அதிபர் ராஜபக்ஷேவும் விதி விலக்கு அல்ல. சமீபத்தில் கொழும்பில் உள்ள மயூர்பதி பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு வந்தார், ராஜபக்ஷே.


கண்களை மூடிய நிலையில், கைகளை கூப்பிக் கொண்டு காளி அம்மன் சிலை முன், பக்தி பரவசத்துடன் மனம் உருக வேண்டினார். தனது நெற்றியில் வைக்கப்பட்ட குங்குமத்தையும் தலையை குணிந்து, அடக்கத்துடன் ஏற்றுக் கொண்டார். ராஜபக்ஷேவின் அரசியல் எதிரியான, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகாவின் மனைவி அனோமாவும், அடுத்த சில நாட்களில் மாதேரோவில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆஜராகி விட்டார். தேங்காய் உடைத்து, பக்தி பரவசத்துடன் காளி அம்மனை வேண்டிக் கொண்டார். தொடர்ந்து காளி அம்மன் கோவில்களை நோக்கி, இலங்கை அரசியல்வாதிகள் படையெடுத்து வருகின்றனர்.


source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

செட்டிநாட்டு இறால் வறுவல்-செட்டிநாட்டுச் சமையல்



தேவையானப் பொருட்கள்:


இறால் - 1/4 கிலோ கிராம்
வெங்காயம் - 2 பெரியது ( நறுக்கிக்கொள்ளவும் )
பூண்டு - 10 பெரிய பல்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 2 பழம்
தேங்காய் - கால் மூடி ( துருவியது)
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு விரலளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கையளவு
வத்தல் மிளகாய் - 20 பெருசு




செய்முறை:



பூண்டையும் இஞ்சியையும் நன்கு அரைத்துக் கொள்ளவும் , வெங்காயம் நீளவாக்கில் வெட்டிக் கொளவும்.தோல்,ஓடு நீக்கிய இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். ( தூயா அளவுக்கு ரொம்ப கழுவினால் இறால் காணாமல் போய்விடும் வாய்ப்புள்ளது  )

தேங்காய் துருவலையும் 15 வத்தல் மிளகாயையும் சோம்பு,சீரகத்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு வெங்காயம் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்தபின் தங்காளியை துண்டங்களாக்கி போட்டு வதக்கவும்.

இறாலையும் மஞ்சள்தூளையும் சேர்த்து பிசறி வாணலியில் போட்டு 5 நிமிடம் வதக்கவும். அப்படியே மறக்காமல் கொஞ்சமா தண்ணிவிட்டு அரைத்து வைத்துள்ள பூண்டு இஞ்சி விழுதையும் தேங்காய், வத்தல் கூட்டணியையும் சேர்த்து நீர் வற்றும் வரை கிளறவும்.

இறாலில் மசால் பிடித்தவுடன் தாளிக்கிற கரண்டியில் சிறிது எண்ணைவிட்டு 5 வத்தல் மிளகாயை வெட்டிபோட்டு கொஞ்சம் கறிவேப்பிலை தூவி தாளிக்கவும், தாளித்தபின் அதனை இறக்கி வைத்துள்ள இறால் வறுவலின் மேல் .ஊற்றி சிறிது நேரம் கழித்து பறிமாறவும்

source:dinakaran

StumbleUpon.com Read more...

எக்ஸெல் டிப்ஸ்

>> Wednesday, August 25, 2010

எக்ஸெல் செல்களை இணைக்க


டேட்டாக்களைக் கொடுத்து எக்ஸெல் தொகுப்பில் அட்டவணைகளை உருவாக்குகையில் நாம் அட்டவணைகளுக்கு தலைப்பு கொடுக்க எண்ணுவோம். அப்போது அட்டவணைகளுக்கு மேலாக ஒரு நீளமான செல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம். அப்படி இல்லாததனால் பலர் டைட்டில் உருவாக்கி அதற்கு முன் ஸ்பேஸ்களைத் திணிப்பார்கள்.  டைட்டிலை சார்ட் முழுவதும் இடம் பிடிக்கும் வரை பெரிதாக்குவார்கள். இந்த கூத்தெல்லாம் இல்லாமல் மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. அதனை மேற்கொண்டுவிட்டால் பெரிதாக்குவது, நடுப்படுத்துவது போன்ற வேலைகளைக் கம்ப்யூட்டரே பார்த்துக் கொள்ளும். என்ன வழி என்று பார்ப்போமா? இந்த வழியைத் தான்   "merging cells"என்று அழைக்கின்றனர். இதற்கு முதலில் நீங்கள் ஒன்றாக ஆக்கிட விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும். இரண்டாவதாக பார்மட்டிங் டூல்பார் (Formatting toolbar)செல்லவும். இங்கே Merge and Center  என்று இருக்கும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.  இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து செல்களும் ஒன்றாகத் தெரியும். இதில் நீங்கள் என்ன டைட்டில் வேண்டுமென்றாலும் அடித்துக் கொள்ளலாம். மிகச் சரியாக எந்தவிதமான எக்ஸ்ட்ரா ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் டைட்டில் உங்கள் டேட்டாக்களுக்கு மேலாக நடுவில் ஜம்மென்று அமர்ந்து விடும். நீங்கள் இன்னொன்றும் எதிர்பார்ப்பது தெரிகிறது!  இப்படி இணைந்ததை வேண்டாம் என்று கருதி மீண்டும் செல்களாக வேண்டுமென்றால் என்ன செய்வது? சிலர் இந்தக் கேள்விக்குப் பதிலாக Merge and Center பட்டனை மீண்டும் கிளிக் செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் அது எதிர்பார்த்த பணியைச் செய்திருக்காது. ஏனென்றால் இந்தப் பிரச்னைக்கு அது வழியல்ல. அப்படியானால் செல்களை எப்படி பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வருவது?  இப்போது மீண்டும் எந்த இணைந்த செல்களைப் பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வர எண்ணுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்  Format Cellsவிண்டோவினைத் திறக்கவும். இதற்கு  Format மெனு சென்று Cells என்ற பிரிவில் கிளிக் செய்திடுக. அல்லது Ctrl + 1என்ற இரண்டு கீகளை அழுத்திடுக. இப்போது கிடைக்கும் விண்டோவில் Alignment  டேப் திறக்கவும். இதில்Merge Cells என்ற பிரிவிற்கு முன்னால் ஒரு டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து மூடவும். ஆஹா!! ஒன்றாக இணைந்த செல்களெல்லாம் இப்போது தனித்தனியே செல்களாகப் பிரிந்து விட்டனவே!
எக்ஸெல்:  ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு
அதிக பக்கங்களில் ஒர்க்ஷீட்டினைத் தயார் செய்துவிட்டால், அதனை அச்சில் பார்க்கையில், வரிசையில் உள்ள டேட்டா  எதனைக் குறிக்கிறது என்ற ஐயம் வரும். ஒவ்வொரு முறையும் முதல் பக்கம் சென்று பார்ப்பது சிரமமான வேலையாக இருக்கும். எடுத்துக் காட்டாக, உங்கள் ஒர்க்ஷீட்டில் 10 நெட்டு வரிசை, 1000 படுக்கை வரிசை உள்ளது என வைத்துக் கொள்வோம். முதல் அல்லது இரண்டாவது வரிசையில், இதற்கான தலைப்பினை அமைத்திருப்போம். மற்ற பக்கங்களில் இந்த தலைப்புகள் இருக்காது, அச்சாகாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், அடுத்தடுத்த பக்கங்களைப் படித்தறிவது நம்மைக் குழப்பமடையச் செய்திடும். இந்த தலைப்புகள் ஒவ்வொரு பக்கத்திலும் தோன்றும்படி அமைத்திடலாம்.
1. ஒர்க்ஷீட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் கிளிக் செய்திடவும். பின்  File | Page Setup எனத் தேர்ந்தெடுத்துச் செல்லவும். 
2. கிடைக்கும் விண்டோவில்Sheet என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Print Titles  என்பதின் கீழ்,  Rows To Repeat At Topஎன்ற வரியின் எதிரே உள்ள கட்டத்தில் கிளிக் செய்தால், Rows To Repeat At Top என மீண்டும் ஒரு நீண்ட சதுர பாக்ஸ் கிடைக்கும். இப்போது படுக்கை வரிசையில் தலைப்பு உள்ள செல்லின் எண் மற்றும் எழுத்தினைத் தரவும். $1:$1 என்ற வகையில் இதனைத் தர வேண்டும். இதே போல நெட்டு வரிசைக்குமாக அமைக்க வழி இருப்பதனைக் காணவும். அதுவும் வேண்டும் எனில், அதனையும் செட் செய்திடவும். ஓகே கொடுத்து வெளியேறவும். இனி அச்செடுக்கையில், ஒவ்வொரு பக்கத்திலும் முதல் படுக்கை வரிசையில், நீங்கள் செட் செய்த செல்களில் உள்ள தலைப்புகள் அச்சாகும்.

 

source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP