சமீபத்திய பதிவுகள்

ராஜசேகர ரெட்டியின் மரணத்தில் சதியா?பற்றி எரியும் ஆந்திரா !!!

>> Thursday, January 7, 2010

 
 

Top world news stories and headlines detail ஐதராபாத் : "ராஜசேகர ரெட்டியின் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்திற்கு, பிரபல நிறுவனத்தின் சதியே' என, "டிவி' சேனல் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டதால், ஆந்திராவில் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பெட்ரோல் "பங்க்'களை அடித்து நொறுக்கினர்.



ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலுங்கு செய்தி சேனலான "டிவி-5' நேற்று பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதிகம் பிரபலமாகாத வெப்சைட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்தச் செய்தியை வெளியிட்டது. அதில், ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதற்கு பிரபல தனியார் நிறுவனத்தின் சதியே காரணம் என, தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான, "சாக்ஷி டிவி' உட்பட வேறு சில "டிவி' சேனல்களும் இதே செய்தியை வெளியிட்டன.



இந்த விவகாரம், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத், கடப்பா, விஜயவாடா, எலுரு உட்பட ஆந்திராவின் பல பகுதிகளில் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சில்லறை விற்பனைக் கடைகள், பெட்ரோல் "பங்க்'கள் மற்றும் மொபைல் டவர்களை அடித்து நொறுக்கி, சூறையாடினர். அதுமட்டுமின்றி, ராஜசேகர ரெட்டியின் மரணத்தில் சதி இருப்பதாகக் கூறி, இன்று "பந்த்' நடத்தப் போவதாக கடப்பா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. ""ரெட்டியின் மரணத்தில் உள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டும். அவரின் மரணம் தொடர்பான விசாரணை மெதுவாக நடக்கிறது. அதை விரைவுபடுத்த வேண்டும். உண்மையை வெளிக்கொண்டுவர வலியுறுத்தி நாளை (இன்று) "பந்த்'திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்,'' என கடப்பா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ் பாபு கூறினார்.


source:dinamalar




--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வேலுப்பிள்ளை அவர்களின் உடலத்தை வல்வெட்டித்துறைக்கு எடுத்துச்செல்ல முடிவு

 

பனாகொடை இராணுவ முகாமில் நேற்றிரவு(06.01.2010 இலங்கை நேரப்படி சுமார் 8.00 மணியளவில் தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தை மாரணமானார். இருப்பினும் இச் செய்தி இன்று காலை 5 மணியலவிலேயே (07.01.2010) இலங்கை இராணுவத்தால் வெளியிடப்பட்டது. அவசரமாக இவரது உடலை தகனம்செய்யும் முயற்சிகள் நடைபெறும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக, இவ் விடையத்தில் தலையிட்ட சிவாஜிலிங்கம் எம்.பி, தலைவரின் தந்தையாரின் உடலத்தை தாமே பொறுப்பேற்று அதனை வல்வெட்டித் துறைக்கு எடுத்துச் சென்று தகுந்த மரியாதையுடன் தகனம்செய்ய இருப்பதாக அதிர்வு இணையத்திற்கு ஒரு சிறப்பு நேர்காணல் மூலம் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒலி வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.









source:athirvu
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மொபைலுக்கு வயது 26

 
lankasri.com
மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி ஐ–போன் வரையில் வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது26.

ஆம், 1983ல் முதன்முதலாக மோட்டாரோலா நிறுவனத்தின் பிரிக் ("BRICK") என்ற மொபைல் போன் மூலம் வர்த்தக ரீதியான மொபைல் விற்பனைக்கு வந்தது. மொபைலில் முதன் முதல் அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா? தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல் உறவினரே அவர். அமெரிக்கன் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாப் பார்னெட் தான் இந்த அழைப்பை ஏற்படுத்தினார்.

அப்போதெல்லாம் வெகுநாட்கள் வரை பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக மொபைல் இருந்துவந்தது. இப்போது நம் அன்றாடவாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அமைந்துவிட்டது. 2007 ஆம் ஆண்டில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–போன் வடிவமைப்பிலும் இன்டர்பேஸ் இணைப்பிலும் மொபைல் போன் அதன் பயன்பாட்டில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் போன் முதன் முதலில் வந்த பின் ஓராண்டு கழிந்த பின்னர் மொத்தம் ஏறத்தாழ 12 ஆயிரம் பேரே இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களாகப் பதிந்திருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கான பேர் மொபைல் போனைப் பயன்படுத்தி வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக லேண்ட் லைன் போனை மொபைல் நீக்கிவருகிறது.

பேசுவதற்கு மட்டும் வந்த போன் இன்று டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா பரிமாற்றத்தை ஏற்படுத்த ஏற்பட்டதே இன்றைய 3ஜி மற்றும் வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த புயல் வேக மாற்றங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் மொபைல் போனில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதைக் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலவில்லை.
 
 
source:lankansri
--
www.thamilislam.co.cc
 

StumbleUpon.com Read more...

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகம் இரங்கல் அறிக்கை

 

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

07.01.2010

இரங்கற் செய்தி 


தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் ஆசையோடு இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தார். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தனது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார். 


இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுஇ சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' 



தலைமைச் செயலகம்இ 
தமிழீழ விடுதலைப் புலிகள்.


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தேசிய தலைவரின் தந்தை காலமானார்

 

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை கொழும்பில் காலமானார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் பிரத்தியேகமான இடம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய தலைவரின் தாய் மற்றும் தந்தை இருவரும் இராணுவத்தால் கொழும்பில் பல மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி இவர்கள் இருவரும் 4 ம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 4 ம் மாடியில் இருந்தே வேலுப்பிள்ளை அவர்கள் இறந்துள்ளார் என்ற ஊர்ஜிதமற்ற தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும் பிறிதொரு தகவலின் படி இலங்கை இராணுவத்தின் பனாகொட இராணுவத்தடுப்பு முகாமில் வைத்தே இவர் மரணமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

86 வயதுடைய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் எந்த நோய்த்தாக்கம் காரணமாக இறந்தார் என்பது குறித்தோ, அல்லது அவருக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது என்பது குறித்தோ இராணுவம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. வெறுமனவே இயற்கை மரணம் எய்தினார் என்று கூறியுள்ளது.


தேசிய தலைவரின் தந்தையின் பூத உடலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பேற்று, தக்க மரியாதையுடன் அவர் உடலைத் தகனம்செய்வதே தமிழ் மக்களாகிய நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாகும். இதனைச் செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தயாரா என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது. இந்த வரலாற்றுக் கடமையை தமிழ் தேசிய கூடமைப்பினர் காலத்தின் கட்டாயம் கருதி மேற்கொள்வார்கள் என நம்புகிறோம்.




source:athirvu
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்திய இன்டர்நெட் சந்தையில் போட்டி


 


தொடர்ந்து வளர்ந்து வரும் இன்டர்நெட் பயன்பாட்டில், இந்திய வாடிக்கையாளர்களைப் பிடித்துப் போட முன்னணி நிறுவனங்களிடையே போட்டி தொடங்கி, நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. 
கூகுள் தன்னுடைய சோசியல் நெட்வொர்க் ஆர்குட் தளத்தினை முழுவதுமாகப் புதுப்பித்துள்ளது. யாஹூ மிகப் பெரிய அளவில் முன்னணி ஆங்கில செய்தித்தாளில் முதல் பக்க விளம்பரம் அளித்துள்ளது. இதெல்லாம் எதற்காக? எப்படி இவர்களுக்கு வருமானம் வரும்? 
ஒரு இன்டர்நெட் தளத்தின் பெருமை அதில் மேற்கொள்ளப்படும் கிளிக்குகளின் எண்ணிக்கையில் தான் உள்ளது. எவ்வளவுக்கெவ்வளவு ஹிட்களும் கிளிக்குகளும் அதிகரிக்கின்றனவோ, அந்த அளவிற்கு விளம்பரம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். எனவே வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க இந்த தளங்களில் நாள்தோறும் ஏதேனும் புதுமை வந்து கொண்டே இருக்கிறது. 
ஆர்குட் தளத்தில் புதிய வடிவமைப்பு வரக்காரணம், அதன் போட்டியாளரான பேஸ் புக் மாற்றம் பெற்றதாகும். இதை அந்த நிறுவனம் மறுத்தாலும் உண்மை அதுதான். 
புதிய ஆர்குட் தளம் முழுக்க முழுக்க கூகுள் வெப் டூல் கிட் பயன்படுத்தி அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தளத்தில் பதிந்து இதனைப் பயன்படுத்தி வருபவர்கள், மிக எளிதாக ஹோம் பேஜ் மூலமாகவே தங்கள் பைல்களை அப்லோட் செய்திட முடியும் என கூகுள் இந்திய பிரிவு தலைமை அலுவலர் வினய் கோயல் கூறி உள்ளார். தளத்தின் உள்ளாக அமைந்த சேட் ரூம் வழி ஒரே நேரத்தில் பலருடன் அரட்டை அடிக்கும் வசதி உள்ளது. தானாக போட்டோ முகம் அறிந்து உணரும் வசதி. போட்டோ ஆல்பம் பகிர்ந்து கொள்ளும் வழிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. இவற்றால் ஆர்குட் தளம் பலரை ஈர்க்கத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் விளம்பரங்கள் அதிகரிக்கும் என கூகுள் எதிர்பார்க்கிறது. நுகர்வோர் பொருட்களுக்கான விளம்பரங்கள் இப்போது இதில் வரத் தொடங்கி உள்ளன. இந்தியாவில் நுகர்வோர் பொருட்களுக்கு மட்டுமின்றி, பொதுவாகவே விளம்பரங்களைத் தருவதிலும், அவற்றைப் படிப்பதிலும் மக்களுக்கு ஆர்வம் உள்ளது. இதுவே இப்போதைக்கு ஆர்குட் தளத்தினை நஷ்டத்தில் இல்லாமல் இயங்க வைக்கிறது என்று கூகுள் அலுவலர்கள் கூறுகின்றனர். கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் தளத்தினை பத்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். பிரேசில் நாட்டுக்கு அடுத்தபடியாக அதிக நேயர்களை இந்தியாவிலிருந்து ஆர்குட் பெற்றுள்ளது. 
இன்டர்நெட் வெப்சைட்டையும் பயன்பாட்டையும் தனி ஒருவனுடையதாக்க முடியும் என மக்களிடையே செய்தியைக் கொண்டு செல்ல இந்த சோஷியல் தளங்கள் முயற்சிக்கின்றன. யாஹூ வின் விளம்பரமும் பெரிய அளவில் இதனைத்தான் சொன்னது. உலக அளவில் இந்த விளம்பரத்திற்கு 10 கோடி டாலர் செலவழிக்கப்பட்டது. 
இந்த தளங்களில் இப்போது இன்டர்நெட் வீடியோவினைப் பதிந்து மக்களைக் கவரும் வழிகளும் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக ஆர்குட் இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் 20 கோடி பேர் இன்டர்நெட் பிராட்பேண்ட் பயன்படுத்துவார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே அவர்களை மையமாக வைத்து இந்த தளங்கள் தங்கள் வர்த்தகத்தை வளப்படுத்துகின்றன. ஆனால் வருமானம் என்னவோ மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இன்னும் இருக்கிறது என்று ஒத்துக் கொள்ள வேண்டும். ஆர்குட் மற்றும் பேஸ்புக் ஒரு பயனாளர் வழி ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே ஈட்டுகின்றன. ஆனால் கூகுள் 25 டாலர் ஈட்டுகிறது. இருப்பினும் இந்த சோஷியல் நெட்வொர்க் தளங்கள் தங்கள் முயற்சிகளில் சற்றும் தளராமல் தொடர்ந்து முயன்று வருகின்றன.


source:dinmalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

55 வயதில் கிடைத்தது அரசு பள்ளி ஆசிரியை பணி

 
 

Front page news and headlines todayசென்னை: அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரிய, 55 வயதில் வாய்ப்பு கிடைத்துள்ள ஆசிரியை மேக்டலின் சாவித்ரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னை அனகாபுத்தூர் அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் அந்த ஆசிரியை மேக்டலின் சாவித்ரி; சொந்த ஊர் தூத்துக்குடி. தென்காசியில் பள்ளி படிப்பை முடித்த சாவித்ரி, தூத்துக்குடியில் கல்லூரி படிப்பை முடித்தார். கடந்த 1981ம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொலைதூர கல்வி திட் டத்தில் பி.எட்., பட்டம் பெற்றார். கடந்த 1984ம் ஆண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தார். படிப்பை முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியை வேலை பார்த்து வந் தாலும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நாளில் இருந்து சாவித்திரி அரசு பள்ளியில் ஆசிரியை வேலையையும் எதிர்பார்த்து காத்திருந்தார். அவரது எதிர்பார்ப்பு 24 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது.



கடந்த 2007ம் ஆண்டு, இறுதியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து ஆசிரியர் பணிக்கான நேர்முக தேர்வுக்கான அழைப்பு சாவித்திரிக்கு அனுப்பப் பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேக்டலின் சாவித்திரி, அனகாபுத் தூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 55. வரும் 2011ம் ஆண்டு மே மாதம் அவர் பணி ஓய்வு பெற உள்ளார். மொத்தம் 3 ஆண்டுகள் 3 மாதம் மட்டுமே அரசு பள்ளியில் அவர் பணியாற்றுவார்.



இது குறித்து, ஆசிரியை மேக்டலின் சாவித்திரி கூறுகையில், "செங்குன்றத்தில் வசித்து வருகிறேன். கணவர் அரசு பள்ளி ஆசிரியர். நான் பி.எட்., முடித்த பின், தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந் தேன். ஒரே பள்ளியில் 20 ஆண்டுகளாக பணிபுரிந் தேன். பொதுவாக, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், படித்த பெற்றோர் களை பெற்றிருப்பர்; வசதியான வீட்டு குழந்தைகளாகவும் இருப்பர். அரசு பள்ளியில் தான் ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் படிக்கின்றனர். இதனால், ஒரு சில ஆண்டுகளாவது அரசு பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு. இதனால் தான் தவறாது வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று, என் பதிவை புதுப்பித்து வந் தேன். அதன் பலனாக கடந்த ஆண்டு பணி கிடைத்தது' என்கிறார் பெருமையாக.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற அதிவேக ரயில்


 
 

Top global news updateஇந்த ரயிலில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் கழிப்பறையில் கூட புகை பிடிக்க அனுமதியில்லை. இந்த விதியை மீறி பயணி ஒருவர் கடந்த வாரம் சிகரெட் பிடித்துள்ளார். சீனாவில் கடும் பனி வாட்டி வருகிறது. குளிரை தாங்க முடியாத ஒரு பயணி சிகரெட்டை பற்ற வைத்து புகைத்து கொண்டிருந்தார். புகை மூட்டத்தால் ரயிலில் இருந்த சென்சார் கருவி, தீப்பற்றியதாக நினைத்து எச்சரிக்கை மணி ஒலித்தது. 

இதனால், இந்த ரயிலின் டிரைவர்கள் வண்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டனர். இதை தொடர்ந்து, அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2.30 மணி நேர சோதனைக்கு பிறகு ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. ரயிலில் சிகரெட் பிடித்த பயணி நடுவழியில் இறங்கி ஓடிவிட்டார்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP