சமீபத்திய பதிவுகள்

அல்லாஹ் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல

>> Sunday, January 24, 2010

அல்லாஹ் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல: மலேசிய நீதிமன்றம்

E-mailPrintPDF

"அல்லாஹ்" என்ற வார்த்தையை கிறிஸ்தவர்களும் பயன்படுத்தலாம் என்று மலேசிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அல்லாஹ் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான வார்த்தை அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

   முஸ்லிம்கள் தவிர மற்றவர்கள் அல்லாஹ் என்ற வார்த்தையைப் பிரயோகிக்க அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பாக நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   கத்தோலிக்க வார இதழ் ஒன்று இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. அல்லாஹ் என்ற வார்த்தையை தங்களது இதழில் குறிப்பிடக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் தடை விதித்திருப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.

   நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, இது தொடர்பாக அரசிடம் ஆலோசனை செய்து, மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

   நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இனி தனது செய்திகளில் அல்லாஹ் என்ற வார்த்தையை ஹெரால்ட் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

   அரசியல் நிர்ணய சட்டப் பிரிவு 31-ன் கீழ் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக நீதிபதி லா பீ லான் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த அல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்க உள்துறை அமைச்சருக்கு அதிகாரம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  பத்திரிகைகளுக்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் உண்டு. அப்படிப்பட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையைப் பிரயோகிக்கக் கூடாது என்று தடை விதிக்க முடியாது.

   அல்லாஹ் என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதன் மூலம் அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அது எவ்விதத்தில் என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும் நீதிபதி கூறினார்.

  கடந்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி ஹெரால்டு பத்திரிகைக்கு அனுமதி அளித்தது. ஆனால் அல்லாஹ் என்ற வார்த்தையைப் பிரயோகிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது. இதை எதிர்த்து அப்பத்திரிகை உரிமையாளர் பிப்ரவரி 16-ம் தேதி வழக்கு தொடர்ந்தார். அதில் அல்லாஹ் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான வார்த்தை அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்

source:tamilkural


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கூகிள் இணைய தளத்துக்கு கிடைத்த வெற்றி : பணிந்து விட்டது சீனா

போகாதே போகாதே கூகுள்... : பணிந்து விட்டது சீனா
 

Front page news and headlines today  பீஜிங் : "கூகுள் பிரச்னையை அரசியலாக்க விரும்பவில்லை. நெட் திருடர்கள் கூகுளை மட்டுமல்லாமல் சீனாவின் சில இணையதளங்களையும் விட்டுவைக்கவில்லை; இதை கூகுள் உணர வேண்டும்' என்று சீன தரப்பில் பதில் அளிக்கப் பட்டுள்ளது.



மனித உரிமை பற்றிய விஷயங்கள் குறித்து சீனர்கள், கூகுளில் அதிகமாகத் தேடத் தொடங்கியது மட்டுமல்ல, கருத் துக்களையும் பகிரங்கமாக "ப்ளோக்' மூலம் தெரிவித்ததால், சீனா எரிச்சல் அடைந்தது. தனது சர்வாதிகாரத்துக்கு இவர்கள் மூலம் சிக்கல் வந்துவிடுமோ என்று பயந்த சீன அரசு, கூகுளைத் தணிக்கை செய்து வெளியிடத் தொடங்கியது. மனித உரிமை கருத்துக்களை மறைத்தது. அது மட்டுமல்லாமல் நெட் திருடர்கள், கூகுளுக்குள் புகுந்து முக்கிய இணையதளங்களைத் திருடிச் செல்வதும் தொடர்ந்து நடந்தது. இதன் பின்னணியில் சீனாவே இருக்கக் கூடும் என்று எரிச்சலடைந்த கூகுள், "சீனாவை விட்டு கூகுள் வெளியேறுவது குறித்து ஆலோசிக்கப்படும்' என்று அறிவித்திருந்தது. கூகுள் சீன இணையச் சந்தையிலிருந்து வெளியேறிவிட்டால் அதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது தான்தான் என்பதை உணர்ந்து கொண்ட சீனா இப்போது தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்துள்ளது.



சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான "ஜின்ஹுவா' கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கூகுளுடனான வணிகப் பிரச்னையை அரசியல் பிரச்னையாக உருமாற்ற எவ்வித உள்நோக்கமும் இல்லை. கூகுள் மட்டுமல்லாமல், சீனாவின் பல தேடல் இயந்திர நிறுவனங்களும் நெட் திருடர்களின் கொள்ளைக்கு ஆளாகியிருக்கின்றன. கூகுளுக்கு அடுத்தப் பெரிய சீன நிறுவனமாக "பைடு'வும் நெட் திருடர்களால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும், தற்போது சீனாவில் இணையதளங்களைப் பயன்படுத்துவோர் எண் ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2009 இறுதியில் 38 கோடி பேர் இணையதளங்களைப் பயன்படுத்துகின்றனர். இது கடந்த ஆண் டை விட அதிகமானதாகும். மொத்தத்தில் ஒரே ஆண்டில் 28 சதவீதம் அதிகரித் துள் ளது. குறிப்பாக, மொபைல் போன் மூலம் இணையதளங்களைப் பயன்படுத்துவோர் சதவீதமும் 10 கோடியிலிருந்து 23 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



இதனால், ஏற்கனவே உலகில் இணையதளங்களை அதிகமாகப் பயன்படுத்துவோர் இருக்கும் சீனாவில், தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கூகுள் வெளியேறுமானால், அதனால் ஏற்படப் போகும் நஷ்டம் சீனப் பொருளாதாரத்தில் பெருத்த அடியை உண்டுபண்ணும் என்பதால் சீனா பணிந்துள்ளது.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP