சமீபத்திய பதிவுகள்

துரோகங்களும் உளவியற்போரும்.

>> Wednesday, January 27, 2010

 தேசியத்தலைவர்

எமது அன்பார்ந்த தமிழீழ மக்களே கடந்த காலத்தில் ஏற்பட்ட கடும் நெருக்கடிகளையும் இடர்களையும் கடந்து நாம் இன்று புதிய வடிவில் விடுதலைப்பயணத்தில் பயணிக்கும் வகையில் எமது மக்களை ஓர் நெறியில் அணிதிரட்டும் சவாலான இந்த நேரத்தில் எமது மவுனத்தின் பின் வெளிவந்துள்ளோம்.

இந்த நேரத்தில் எமது மக்கள் எம்முடன் இணைந்து அடுத்த கட்ட நகர்வினை முன்னெடுக்க விடாது பல தீய சக்திகள் எமது மக்களை எம்மிடம் இருந்து அந்நியப்படுத்தும் நோக்கில் விசமத்தனமான பிரச்சாரங்களையும் கருத்து என்ற பெயரில் பெரும் உளவியற் போரையும் நடத்தி வருகின்றன.

இவ் உளவியற் போரை பின்நின்று நடத்தும் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு துணைபோய் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஒடுக்கும் வகையில் செயற்படும் எமது இயக்க உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு இன்றும் செயற்படுவோர் எம்மால் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை அரசின் துணையோடு வெளிநாடுகள் சிலவற்றிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குமரன் பத்மநாதன் [kp]என்பவரை எமக்கு ஆதரவாக செயற்பட்ட சிலரும் சில இயக்க உறுப்பினர்களும் இரகசியமான சந்தித்துள்ளமை எம்மால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச நாடுகளில் கடந்த காலங்களில் எமது அமைப்பு சார்ந்து இயங்கி வந்த அணைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றிய சிலரும் இலங்கை அரசின் துரோகச் செயல்களுக்குள் அகப்பட்டு எமது விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதும் எம்மால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த வடிவில் எமது இயக்கம் வெளிப்பட்டாலும் அதை இல்லாதொளிப்பாதற்கான அனைத்து பிரயத்தனங்களிலும் இவர்கள் ஈடுபடுவதும், தேசியத் தலைவர் சம்மந்தமான அவதூறுகளை பரப்புவதும், பிரதேச வேறுபாடுகளை தூண்டிவிடுவதும், எமது இயக்க சம்பந்தமான தகவல்களை வெளியிடுவதும் போன்ற துரோகச் செயல்களை இவர்கள் செய்வதும் எம்மால் கண்டறியப்பட்டுள்ளது.

அணைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றிய பலர் உண்மையாக இன்றும் தமிழீழ விடுதலைப்போருக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இருக்கும் வேளையில் இவ்வாறான இனத்துரோகம் புரிபவர்களை மண்ணின் மைந்தர்களான எமது மக்கள் முன் இனங்காட்டுவது அவசியம் என கருதி அவர்களின் விபரங்களை இன்று வெளியிடக் கூடிய ஆதாரங்கள் இருந்தும் அவ்வாறானவர்கள் தடம் மாறியுள்ள தங்கள் தடத்தை விட்டு மனம் திருந்தி வருவதோடு தமிழீழ தேசியத்தலைவர் பாதையில் விடுதலைப்பயணத்தில் எமது மாவீரர்களின் குருதியில் உருவான எமது ஒரே கொடியான தேசியக்கொடியின் கீழ் எம்மோடு அணிவகுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேம்.

ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடுகளில் ஈடுபடுவதும் தனித்தனியே செயற்படுவதும் நம் பிரதான எதிரிக்கு வழியமைத்துக் கொடுத்துவிடும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது தீராத இலட்சியம் தமிழீழ விடுதலையின் தமிழ்த்தேசியம் என்பதை மனதிற் கொண்டு செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்ளும் இவ்வேளையில் அனைவரும் ஒன்றுபட்டு நாம் யாரென்பதை சிங்கள பேரினவாதத்திற்கு தெரியப்படுத்துவதோடு, தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்தை மனதில் நிறுத்தி தனிநபர் விமர்சனங்களை தவிர்த்து ஈழத்தமிழர் அனைவரையும் ஒரே அணியில் அணிதிரட்டுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழீழ விடுதலைப்புலிகள்
தலைமைச் செயலகம்
தமிழீழம்
 .


source:lttepress


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சானியா மிர்சாவின் நிச்சயதார்த்தம் ரத்து

 

டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸாவுக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகம்மது சொராப்புக்கும் இடையே நடந்த நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சானியா மிர்ஸா அளித்துள்ள பேட்டியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஆனால் திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முடியாது என்பதை புரிந்து கொண்டோம். சொராப் தனது வாழ்க்கையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் சானியா

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில்தான் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. சமீபத்தில் கூட கல்யாணத்திற்குப் பிறகு டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று சானியா கூறியிருந்தார்.

இந்த நிலையில் திடீரென நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை இரு தரப்புமே தெரிவிக்கவில்லை.

சானியாவின் குடும்பமும், சொராப்பின் குடும்பமும் நீண்ட கால நட்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா?

உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா? பாயும் குதிரையாய் பல மாதங்களுக்கு முன் ஓடிய விண்டோஸ் இப்போது தவழ்கிறதா? ஒவ்வொரு டாகுமெண்ட்டும், ஒர்க்ஷீட்டும் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கும் முன் போதும் போதும் என்றாகிறதா? கவலைப்படாதீர்கள். சில விஷயங்களைக் கவனித்தால் போதும். வேகமாக ஓடாவிட்டாலும், நமக்கு எரிச்சல் தராத வேகத்தில் விண்டோஸ் இயங்கும். அவற்றை இங்கு காண்போம்.

கம்ப்யூட்டர் வேகமாகவும் அனைத்து திறனுடனும் இயங்க வேண்டும் என்றால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் மீண்டும் மீண்டும் ட்யூன் செய்து பயனில்லை. அதிக வேகம் தரக்கூடிய ஹார்ட்வேர் பாகங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த வகையில் நாம் முன்னுரிமை தர வேண்டியது ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் கார்டு ஆகும். இவற்றை நாமே இணைப்பதாக இருந்தால், நம் உடலில் இருக்கும் ஸ்டேடிக் மின்சாரம் கம்ப்யூட்டரின் நுண்ணிய பாகங்களுக்குக் கடத்தாமல் இருக்கும் வகையில் அதனை வேறு உலோகங்களைத் தொடுவதன் மூலம் டிஸ்சார்ஜ் செய்திடலாம்.

ராம் மெமரி பலவகைகளில் கிடைக்கிறது. டி.டி.ஆர்2, டி.டி.ஆர்.3 மற்றும் பல பழைய வகைகளில் உள்ளது. தற்போது வரும் கம்ப்யூட்டர்களின் மதர்போர்டுகள் குறிப்பிட்ட வகை ராம் சிப்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். எனவே கம்ப்யூட்டருடன் தரப்பட்ட குறிப்பேட்டினைப் பார்த்து, எந்த வகை ராம் சிப்பினை மதர் போர்டு ஏற்றுக் கொள்ளும் எனப் பார்க்கவும். உங்கள் மெமரியினை 4 ஜிபிக்கு மேல் உயர்த்துவதாக இருந்தால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 64 பிட் சிஸ்டமாக இருக்க வேண்டும். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 64 பிட் வகையில் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் கம்ப்யூட்டரை அடிக்கடி கேம்ஸ் விளையாடப் பயன்படுத்தாமல் இருந்தாலும், அதிக திறன் கொண்ட கிராபிக்ஸ் கார்டு ஒன்றை கம்ப்யூட்டரில் நிறுவுவது நல்லது. குறிப்பாக விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா அவற்றின் யூசர் இன்டர்பேஸ் திரைகளின் காட்சித் தோற்றங்களைச் சிறப்பாக அமைத்திருப்பதால், கிராபிக்ஸ் கார்டு அதிக திறனுடன் இருப்பது இவற்றின் பயனை நன்கு நமக்குத் தரும். 
உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ் பி, விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 என எதுவாக இருந்தாலும், இதனுடன் ஒட்டிக் கொள்ளும் தேவையற்றவைகளை, அவ்வப்போது நீக்குவது, இவற்றின் வேகமான செயல்பாட்டை உறுதி செய்திடும்.

தேவையற்ற செயல்பாடுகள், செயல்படுத்தாத ஸ்டார்ட் அப் புரோகிராம்களை நீக்கவேண்டும். இதனால் விண்டோஸ் தன் சக்தியை இவற்றில் ஈடுபடுத்தாமல், தேவைப்படும் புரோகிராம்களில் மட்டுமே பயன்படுத்த வழி கிடைக்கும்.

விண்டோஸ் எக்ஸ்பியில், சிஸ்டம் கண்ட்ரோல் பேனலைத் திறந்திடவும். அதில் அட்வான்ஸ்டு (Advanced) டேப்பில் கிளிக் செய்திடவும். பின் செட்டிங்ஸ் (Settings) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் அட்ஜஸ்ட் பார் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் என்ற ரேடியோ பட்டனைக் கிளிக் செய்திடவும். இதனால் மெனுவின் கீழாக ட்ராப் ஷேடோ போன்ற அலங்கார வேலைப்பாடுகள் நீக்கப்படும்.

விஸ்டாவில் சைட் பார் செயல் இழக்கச் செய்வதன் மூலம், இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் ஏரோ (Aero) சூழ்நிலையை நிறுத்துவதன் மூலம், கம்ப்யூட்டரின் மெமரியையும், செயல்திறன் சக்தியையும் (Processing Power) மேம்படுத்தலாம். இதற்கு டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, காண்டெக்ஸ்ட் மெனுவில் பெர்சனலைஸ் (Personalize) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். விஸ்டாவில் விண்டோ கலர் அண்ட் அப்பியரன்ஸ் (Window Color and appearance) என்பதை கிளிக் செய்து அதில் எனேபில் ட்ரான்ஸ்பரன்ஸி (Enable Transparency) என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் விண்டோஸ் 7 பேசிக் (Windows 7 Basic) என்ற தீமைத் தேர்ந்தெடுக்கவும்.

நாம் அடிக்கடி இணையத்தில் பார்க்கும் பல புரோகிராம்களை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடுகிறோம். இவற்றை இன்ஸ்டால் செய்கையில், சிஸ்டம் தொடங்கும்போதே, அவற்றைத் தொடங்கும் வகையிலும் அமைத்துவிடுகிறோம். இதனால் நமக்குத் தேவையான, அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற (எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், போட்டோ ஷாப் போல) புரோகிராம்களின் இயக்க வேகம் பாதிக்கப்படுகிறது. முதலில் சொல்லப்பட்ட பயன்படுத்தாத பல புரோகிராம்கள், இவற்றின் பின்னணியில் இயங்குவதே இதற்குக் காரணம்.

விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில், ஸ்டார்ட் கிளிக் செய்து சர்ச் புரோகிராம்ஸ் அண்ட் பைல்ஸ் (Search Programs and Files) என்ற பீல்டில் msconfig என டைப் செய்து என்டர் தட்டவும். சிஸ்டம் கான்பிகரேஷன் (System Configuration) விண்டோ இப்போது கிடைக்கும். இவற்றில் உள்ள டேப்களில் Startup என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இனி கட்டளை (Command) பிரிவில் உங்களுக்குத் தேவைப்படாத புரோகிராம் உள்ளதா எனப் பார்க்கவும். எடுத்துக் காட்டாக, ஐட்யூன்ஸ் (iTunes) வந்த காலத்தில் அதனைப் பதிந்திருக்கலாம். இதனால் iTuneshelper.exe மற்றும் QTTask.exe என்ற இரு பைல்கள் இயங்கியவாறு இருக்கும். இவற்றினால் எந்த பயனும் தனியாக இல்லை. இது போன்ற தேவையற்ற புரோகிராம்கள் ஸ்டார்ட் அப்பில் இயக்கப்படுவதைத் தடுக்கலாம். இதனால் ராம் மெமரி இடம் காலியாகி, அவசியமான புரோகிராம்கள் வேகமாக இயங்க வழி கிடைக்கும்.

சிஸ்டம் இன்னும் சுறுசுறுப்பாக இயங்க, அடிக்கடி சி டிரைவின் விண்டோஸ் டைரக்டரியில், டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களைக் காலி செய்திட வேண்டும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கியவுடன் இவற்றைக் காலி செய்திட வேண்டும். அல்லது சேப் மோடில் சென்று இவற்றைக் காலி செய்திடலாம். இதனால் பயன்படுத்தாத பைல்கள் பட்டியலில் உள்ள கடைசி பைல் வரை நீக்க முடியும். இதற்கு ஏற்கனவே இந்த பகுதியில் விரிவாகச் சொல்லப்பட்ட சிகிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம்.

இதில் இன்னும் ஒன்றைக் கவனிக்கலாம். ஏதேனும் ஒரு புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கத்திலிருந்து அறவே நீக்க, அதனுடன் தரப்பட்டிருக்கும் அன் இன்ஸ்டால் பைலைப் பயன்படுத்துகிறோம். விண்டோஸ் 7ல் அன் இன்ஸ்டால் செயல்பாட்டுக்கென ஒரு சிறிய புரோகிராம் பைல் தரப்பட்டுள்ளது. ஆனால் இவற்றைப் பயன்படுத்தினாலும் சில பைல்கள் கம்ப்யூட்டரில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். அறவே அனைத்து பைல்களை நீக்க சில தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller from http://www.pcworld.com/downloads/file/fid,66703order,6page,1/description.html) என்னும் புரோகிராம் சிறப்பானதாகும். இதனை இலவசமாக இறக்கிப் பயன்படுத்தலாம். இந்த புரோகிராம், குறிப்பிட்ட புரோகிராமின் அன் இன்ஸ்டால் பைலைப் பயன்படுத்தியே அனைத்து பைல்களையும் நீக்குகிறது. பின் மேலும் ஒரு படி சென்று சிஸ்டத்தை ஸ்கேன் செய்து, ரெஜிஸ்ட்ரியைத் தேடிப் பார்த்து, நீக்கப்படும் புரோகிராம் சார்பான அனைத்தையும் நீக்குகிறது.

ஆன்லைன் கேம்ஸ், ஸ்ட்ரீமிங் மீடியா புரோகிராம்கள், இன்டர்நெட் போன் சர்வீசஸ், பிட் டாரண்ட் போன்ற டவுண்லோடிங் புரோகிராம்கள் ஆகியவை அதிக அளவில் டேட்டாவினைக் கையாளுவதால், நெட்வொர்க் பேண்ட் அளவில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன. எனவே இவற்றைத் தேவைப்படும்போது மட்டும் இயக்கி, மற்ற நேரத்தில் இயங்கா நிலையில் வைத்திட வேண்டும்.

ஹார்ட் டிரைவ் ஒன்றை, அது உள்ளே இணைப்பதாயினும் அல்லது வெளியே வைத்து இயக்குவதாயினும், தேர்ந்தெடுக்கையில் அதன் இயக்க வேகம் அதிக பட்சம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளவும். உள்ளே வைத்து இயக்கும் இன்டர்னல் டிரைவ் மற்றும் வெளியே வைத்து, இணைத்து இயக்கும் எக்ஸ்டெர்னல் டிரைவ் என இரு வகைகள் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

வெளியில் வைத்து பயன்படுத்தும் டிஸ்க் டிரைவ்களில் பல நன்மைகள் உண்டு. உங்கள் டேட்டாவினை நீங்களே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். டேட்டா பேக்அப் செய்வதற்கு பாதுகாப்பானதாகும். உள்ளிருந்து இயக்கக் கூடிய டிஸ்க்குகளில் சடா (SATA) வகை இணைப்புகள் சிறந்தவை ஆகும். அடுத்ததாக eSATA எனச் சொல்லப்படும் வேகம் கொண்டவை, யு.எஸ்.பி. அல்லது பயர்வேர் டிரைவ்களைக் காட்டிலும் வேகம் கொண்டவையாகும். ஆனால் இவற்றைப் பயன்படுத்த ஒரு ஆட் ஆன் கார்ட் தேவைப்படும். தற்போது 7,200 ஆர்.பி.எம். வேகத்திற்குக் குறைவாக எந்த ஹார்ட் டிஸ்க்கும் இயங்குவதில்லை. 10,000 மற்றும் 15,000 ஆர்.பி.எம். வேக டிரைவ்கள் கிடைக்கின்றன. ஆனால் சற்று கூடுதலாகப் பணம் கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். தற்போது அறிமுகமாகிப் பரவி வரும் சாலிட் ஸ்டேட் டிஸ்க், கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு அதிக வேகம் தரும். ஆனால் இவை இன்னும் குறைவான விலையில் கிடைப்பதில்லை.

கம்ப்யூட்டர் செயல்படும் வேகத்தினை பிரிண்டர்களும் தாமதப்படுத்துகின்றன. அச்சின் தன்மையைச் சற்றுக் குறைவாக வைத்துக் கொண்டால், கம்ப்யூட்டரின் செயல்பாடு வேகம் அதிகரிப்பதோடு, அச்சிடும் மையும் மிச்சப்படும்.

இணைய தளங்களை அச்சிடுகையில், அந்த பக்கத்தில் காணப்படும் விளம்பரங்கள், கிராபிக்ஸ் படங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்தும். எனவே இந்த படங்கள் இல்லாமல் அச்சிடுவதே நல்லது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், அதில் டூல்ஸ், இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் (Tools, Internet Options) தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் அட்வான்ஸ்டு (Advanced) டேப் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் விண்டோவில் மல்ட்டிமீடியா பிரிவிற்குச் செல்லவும். அதில் �ஷா பிக்சர்ஸ் (Show Pictures) என்று இருப்பதன் எதிரே உள்ள பெட்டியில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். 
பயர்பாக்ஸ் பிரவுசரில் டூல்ஸ், ஆப்ஷன்ஸ் (Tools, Options) தேர்ந்தெடுத்து, கிடைக்கும் விண்டோவில் கண்டென்ட் (Content) டேப்பில் கிளிக் செய்திடவும். Load Images Automatically என்று இருப்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். இந்த இரண்டு பிரவுசர்களிலும் ரெப்ரெஷ் பட்டனை அழுத்தி இணையப் பக்கங்களை படங்கள் இல்லாமல் இறங்கும்படி பெற்று, பின் பிரிண்ட் கட்டளை கொடுக்க வேண்டும். அச்சடித்து முடித்த பின் மீண்டும் மேலே காட்டியுள்ள இடங்களுக்குச் சென்று மீண்டும் கிராபிக்ஸ் படங்களைப் பெறுவதற்கான மாற்றங்களை ஏற்படுத்தவும். குறிப்பிட்டுள்ள வழிகள் அனைத்தும் கம்ப்யூட்டரின் செயல்பாட்டின் வேகம் குறைகையில் நாம் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளாகும். இவற்றை ஓரிரு முறை எடுத்தால் மட்டும் போதாது. தொடர்ந்து அடிக்கடி இந்த செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வேகம் இழந்த கம்ப்யூட்டர் தொடர்ந்து பழைய கூடுதல் வேகத்தில் இயங்கும்.


source:z9tech


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கணினி கற்கலாம் வா நீ !


 

ஈனியாக், யூனிவாக்... இப்படி எழுபது வருடத்துக்கு முந்தி கம்ப்யூட்டர் முதல் முதலாக உருவாக்கின போதே அதை என்ன வேலைக்கு பயன்படுத்த வேணும்னு தீர்மானம் செஞ்சுட்டாங்க. துப்பாக்கி, குண்டு, டாங்க் மாதிரி அதுவும் யுத்தத்துக்கு தேவைப்படும் ஒரு ஆயுதம். அவ்வளவுதான். ஆகாயத்துல இந்த வேகத்துல இந்த உயரத்துலே பறந்து இங்கே இருந்து குண்டு போட்டால், அது எங்கே விழும் என்று துல்லியமாகக் கணிக்க இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது கம்ப்யூட்டர் ரொம்ப உதவியா இருந்தது.

மனிதகுல முன்னேற்றத்துக்கு கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பிச்சது அதுக்கு அப்புறம்தான். டன் கணக்கிலே எடையோடு ஒரு பெரிய அறை அளவு இடத்தை ஆக்கிரமிச்ச பழைய கம்ப்யூட்டர் போய், இப்போ அதைவிட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சின்னச் சின்ன கம்ப்யூட்டர் எல்லாம் வந்துடுச்சு. முக்கியமா, நாம் போகிற இடமெல்லாம் கொண்டு போகும் லேப் டாப் கம்ப்யூட்டர். மடியிலே அதை இருத்தி வேலை செய்யறதாலே மடிக் கணினின்னு பெயர். மொபைல் தொலைபேசி மாதிரி லேப் டாப் இப்போ சர்வ சாதாரணமாகிட்டு இருக்கு. அப்பப்ப சார்ஜ் பண்ணி வச்சுக்கிட்டா, எங்கேயும் இருந்து கணக்கு போடலாம். இன்டர்நெட்டுலே மேயலாம். சினிமா பார்க்கலாம்.

லேப் டாப் அறிமுகமானது 1973-ல். இன்று வரை கம்ப்யூட்டர் உற்பத்தியில் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் ஐ.பி.எம் கம்பெனிதான் இதையும் செய்தது. முதல் லேப் டாப்புக்கு ஸ்கேம்ப்னு பெயர். எதுக்கு இது யூஸ் ஆகும்னு கேட்டபோது எதிர்பார்த்த மாதிரி பதில் - 'அதிகம் அலைச்சல் இருக்கற ராணுவ அதிகாரி, இன்கம்டாக்ஸ் அதிகாரி, மருந்து கம்பெனி ரெப்ரசென்டேடிவ் இவங்களுக்காகத்தான் இந்த லேப்டாப்'. ஆனால், எல்லா தரப்பினர் கையிலும் போய்ச் சேர அடுத்த பத்து வருஷம்தான் பிடிச்சது. மேசையில் வெச்சு வேலை பார்க்கிற டெஸ்க் டாப்பை விட, இப்போ லேப்டாப்தான் அதிகம்.

லேப்டாப் உருவாக்கணும்னு முடிவு செய்ததுமே அதுக்கு அடிப்படையா ரெண்டு விஷயங்களை எடுத்துக்கிட்டாங்க. டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்லே இருக்கற மானிடர், பிராசஸர், ஹார்ட் டிஸ்க் டிரைவ், கீ போர்ட், ஸ்பீக்கர் இப்படி எல்லாமே லேப்டாப்பிலும் இருக்கணும். ஆனால், இடத்தை அடைக்காமல், கையிலே தூக்கிட்டுப் போகிற ஒரு சின்ன பெட்டி மாதிரி இருந்தா போதும். பெட்டியைத் திறந்ததும் மூடியோட அந்தப் பக்கம் எல்.சி.டி திரையை வச்சுட்டா மானிட்டருக்கு மானிட்டர், பெட்டிக்கும் உறுதியான மூடி. சரி, கீ போர்ட்? மேல் மூடி மானிட்டர் அப்படீன்னா, கீழ்ப் பாகம் கீ போர்ட். அதோடு கூட ஒரு மௌஸ் இணைச்சுக்க வசதி. அல்லது ட்ராக் பால் என்று சின்ன உருண்டை கீ போர்ட் நடுவிலே இருக்கும். கூடவே, டச் பேட் என்ற சிறு சதுரத்தில் விரலை நகர்த்தினால் மௌஸ் மாதிரி அது இயங்கி, விரல் அசைத்தபடி லேப்டாப் மானிட்டரில் நகர்வு ஏற்படும். மானிட்டர், கீ போர்ட் போக, பெட்டியில் மீதி பாகத்துலே, அதாவது கீ போர்டுக்குக் கீழே பத்திரமான தடுப்புக்கு கீழே சி.பி.யூ மதர் போர்ட், ரேண்டம் அக்சஸ் மெமரி, ஹார்ட் டிஸ்க், வெப்பம் கூடாமல் தடுக்க குட்டியூண்டு மின்விசிறி இதெல்லாம். கம்ப்யூட்டர் பெட்டி ரெடி!

ஓ.கே. இந்தப் பெட்டி குழந்தை தூக்கற மாதிரி கனமில்லாமல் இருக்கணும். ஆனாலும், விற்பனைக்கு வந்த முதல் லேப்டாப் ஐபிஎம் 5100-ன் எடை பத்து கிலோவுக்கு கொஞ்சம் அதிகம். இத்தனைக்கும் உள்ளே பேட்டரி கூட கிடையாது. பெரியவங்களே கொஞ்சம் கஷ்டப்பட்டு தூக்க வேண்டியிருந்தது.

பொறுங்க ப்ளீஸ்னு திரும்ப டிசைனை திருத்தினாங்க. 1982-ல் மெல்லிய லேப்டாப் கிரிட் காம்பாஸ் விற்பனைக்கு வந்தபோது முதல்லே அதை வாங்கியது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா. விலை கிட்டத்தட்ட நாலரை லட்சம் ரூபாய். இப்போ முப்பதாயிரம் ரூபாய்க்கு நல்ல லேப்டாப் கிடைக்குது. அதுவும் கேமரா, டிவிடி போட்டு படம் பார்க்க வசதி, நாள் முழுக்க பயன்படுத்தப் போதுமான லித்தியம் அயன் பேட்டரி சார்ஜ் இப்படி ஏகப்பட்ட விஷயங்களோடு. எடையும் வெறும் நாலு அல்லது ஐந்து கிலோ தான் இருக்கும். இது கூட அதிகமான எடையாச்சே? அப்போ சப் நோட்புக் கம்ப்யூட்டர் வாங்கிக்குங்க. எடை ரெண்டே ரெண்டு கிலோதான். என்ன, மானிட்டர் கொஞ்சம் குட்டியா, 13 இஞ்ச்தான் இருக்கும். பாட்டரி பத்து மணி நேரம் வரும்.

லேப்டாப் கம்ப்யூட்டரில் பெட்டியைத் திறந்ததும் திரை. அதை அப்படியே பதிச்சு வைக்காமல், கீ போர்டைச் சுற்றி நமக்குத் தேவையான கோணத்திலே திருப்பி நிறுத்த, கொஞ்சம் கொஞ்சமா சுழற்ற வழி செய்யறது டேப்லட் கம்ப்யூட்டர்.

உட்கார்ந்துதான் லேப்டாப்பை பயன்படுத்த முடியும். நின்னுக்கிட்டு அல்லது நடந்துக்கிட்டு ஒரு கையால் இயக்கி கணக்கு போட அமெரிக்காவிலே ஹீவ்லெட் பாக்கார்ட் கம்பெனியிலே இந்த சேலஞ்சை சமாளிக்க குஷியாக கிளம்பினாங்க. அவங்க 1991-ல் விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் கைப்பிடி கம்ப்யூட்டர்(ஹேண்ட் ஹெல்ட் கம்ப்யூட்டர்) ஹெச்பி 95 எல்.எக்ஸ். இதை பொதுவாக பி.டி.ஏ.-ன்னு அழைப்பது வழக்கம்.

நீங்க கல்லூரியிலே படிக்கும்போது கைக் கடியார கம்ப்யூட்டர் கூட எடுத்துப் போகலாம். அதைவிடச் சின்னதா, மோதிரக் கம்ப்யூட்டர் கூட வர வாய்ப்பிருக்கு. முடியாதுன்னு என்ன இருக்கு கம்ப்யூட்டர் உலகத்திலே?


source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP