சமீபத்திய பதிவுகள்

சமுதாய தளங்களின் இலக்கு மாறிய 2009

>> Friday, February 19, 2010


 
 

 நடந்து முடிந்த 2009 ஆம் ஆண்டு, இணையத்தில் சமுதாய தளங்கள் என்று அழைக்கப்படும் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் (twitter)  போன்ற தளங்களின் அமைப்பிலும், உட்பொருளிலும் பெருத்த மாற்றங்களும் முன்னேற்றமும் ஏற்பட்டன.
அதுவரை என்ன பீட்ஸா சாப்பிட்டேன்; எந்த தேர்வில் பிரச்னை அதிகம் இருந்தது; தீம் பார்க்கில் ஏன் பெண்கள் கூட்டம் அதிகம் போன்ற கதைகள் இல்லாமல், உலகத்தைப் பாதித்த, பாதிக்கின்ற விஷயங்கள், அரசியல் மாற்றங்கள், விமான விபத்துக்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவை அதிக இடம் பெற்றன. 
பொதுவாக இளைஞர்களும், டீன் ஏஜ் கல்லூரி மாணவர்களும் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருந்த இந்த சோஷியல் தளங்களில் பல அனுபவஸ்தர்களும் எழுதத் தொடங்கினார்கள். இதனால் பழைய தலைமுறை அனுபவ வாதிகளுக்கும், புதிய இளைய தலைமுறைக்கும் இடையே நல்ல ஆரோக்கியமான நட்பு ஏற்பட்டது. ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் அம்மா, அப்பா ஏன் பாட்டி கூட ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் இடம் பிடித்து கருத்துக்களைப் பரிமாறத் தொடங்கினர்.
இந்த தளங்களைப் பயன்படுத்தும் இணைய நேயர்களின் எண்ணிக்கை 2009ல் அதிகமாகியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேஸ்புக் தன் 35 ஆவது கோடி பயனாளியை அடையாளம் காட்டியது. ஏப்ரல் மாதத்தில் இந்த தளத்தின் பயனாளர்கள் 1390 கோடி நிமிடங்கள் தளத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இது சென்ற 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும் 700 சதவீதம் கூடுதலாகும். 
பேஸ்புக் நேயர்கள் எண்ணிக்கை உயர்ந்தது என்றால், நிச்சயம் வேறு ஒரு தளத்திலிருந்து இங்கு வந்தவர்களா கத்தான் இவர்கள் இருப்பார்கள். இவர்களில் பலர் மை ஸ்பேஸ் (space)  தளத்திலிருந்து வந்தனர். சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் முன்னணி தளமாக, முதலில் வந்த சிலவற்றில் ஒன்றாகும் இது. ஆனால் 2009 ஆம் ஆண்டில், இதன் பங்கு 55 சதவிதத்திலிருந்து 30.26 சதவீதம் ஆகக் குறைந்தது. 
இந்த ஆண்டில் இந்த இரு தளங்களும் தங்கள் வருமானத்தைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடும் எனத் தெரிகிறது. அதற்கான முயற்சிகளில் பல ஒப்பந்தங்களில் இவை ஈடுபட்டு வருகின்றன. 

370 பாஸ்வேர்டுகளுக்கு ட்விட்டர் தடை
சோஷியல் நெட்வொர்க் தளமான ட்விட்டர் 370 பாஸ்வேர்டுகளுக்குத் தடை விதித்துள்ளது. எளிதாக யாரும் கண்டுகொள்ளத்தக்க வகையில் உள்ள பாஸ்வேர்டுகளாகச் சிலவற்றை ஒதுக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக 123456 மற்றும் Password என்பவை எல்லாம் மற்றவர்கள் எளிதில் கண்டுகொள்ளத்தக்க சொற்களாகும். இதே போல பிரபலமான கார்களின் பெயர்கள் மற்றும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் சொற்களையும் இந்த பட்டியலில் கொடுத்துள்ளது. நல்ல பாஸ்வேர்ட் ஒன்று எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் ஆகியவை கலந்ததாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது


source:dinamaalr

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடித்தது;

  20 பேர் பலி
பாகிஸ்தானில்     மசூதியில் குண்டு     வெடித்தது; 20 பேர் பலிஇஸ்லாமாபாத், பிப். 19-
 
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்களை ஒழிக்கும் பணியில் அமெரிக்கா உதவியுடன் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
 
இந்த நிலையில் கைபர் பகுதியில் உள்ள அப்பர்திரா பள்ளத்தாக்கில் உள்ள தார்ஸ் கிராமத்தில் உள்ள ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. அதன் அருகே மார்க்கெட் மற்றும் கடைகள் உள்ளன.
 
இதில் 20 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த மசூதியில் அதை சுற்றியுள்ள பகுதியிலும் 100-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
 
கைபர் பகுதியில் லஸ்கர்-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு தலிபான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது.
 
இந்த சம்பவத்தில் லஸ்கர்-இ-இஸ்லாம் அமைப்பினர் துணை தலைவர் அசாம்கான் உயிரிழந்தார். எனவே, அந்த இயக்கத்தினர் தற்கொலை தாக்குதல் நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 
இதற்கிடையே வடக்கு வர்சிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தின் மீது ஆளில்லா விமானம் அமெரிக்க ராணுவம் மூலம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.
 
இதில் தீவிரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மைக்ரோசாப்ட் வழங்கும் அஸுர்

 

வெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஆன்லைன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சேவையினை மைக்ரோசாப்ட் வரும் புத்தாண்டு முதல் தர முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் விண்டோஸ் அஸூர் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்ற பெயரில் இந்த சேவை கிடைக்கும். 
இன்டர்நெட் மூலம் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளையும், பைல்கள் சேவ் செய்து வைக்க டிஸ்க் இடத்தையும் பெற தற்போது மக்கள் விரும்பு கின்றனர். இதனால் பல தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். எனவே இன்டர்நெட் சேவையினைக் கட்டணம் செலுத்திப் பெறுவது போல, இந்த சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுப் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு, ஓராண்டுக்கு முன் பரீட்சார்த்த அடிப்படையில் தந்து வந்தது. தற்போது இதனை முழுமையான கட்டமைப்பில் தர முடிவு செய்து, ஜனவரி 1 முதல் இதில் இறங்குகிறது. சென்ற வாரம் நடைபெற்ற மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் வல்லுநர்களின் ஆண்டுக் கூட்டத்தில், அப்பிரிவின் தலைவர் ரே ஓஸி அறிவித்தார். 
முதல் மாதத்தில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். பிப்ரவரி முதல் பயன்படுத்தப்படும் சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த ஆன்லைன் சாப்ட்வேர் மற்றும் சேவை துறையில் மைக்ரோசாப்ட் நிச்சயம் பெரிய அளவில் இயங்க முடியும். தாமதமாகத்தான் இதனை மைக்ரோசாப்ட் இயக்க முன் வந்துள்ளது. ஏற்கனவே அமேஸான் (Amazon.com Inc) கட்டணம் பெற்றும் கூகுள் இலவசமாகவும் இந்த சேவையினை ஓரளவிற்கு வழங்கி வருகின்றனர்.



பாதுகாப்பான கம்ப்சயூட்டிங் வழிகள்
1. திடீர் திடீரென எழுந்து வரும் பாப் அப் விளம்பரங்களிலிருந்து பொருட்களை வாங்க முயற்சிக்க வேண்டாம். ஸ்பேம் மெயில்களில் வரும் விளம்பரங்கள் எல்லாம் வேறு எதற்கோ உங்களை மாட்ட வைத்திடும் விளம்பரங்களே.
2. உங்களுடைய இமெயில் முகவரி, இல்ல முகவரி, பேங்க் அக்கவுண்ட் எண், அதன் இணையதளத்தில் நீங்கள் பயன்படுத்தும் பெயர், பாஸ்வேர்ட் மட்டுமின்றி, உங்களுக்குத் தெரிந்த மற்றவர்களின் மேற்படி தகவல்களையும் வெப்சைட்டில் தரும் முன் பலமுறை யோசிக்கவும். உங்கள் பணம் சார்ந்த தகவல்களை தரவே வேண்டாம். 
3. மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க் கிழமையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வெப்சைட்டில் தரும் பேட்ச் பைல்களைக் கொண்டு, உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திட மறக்க வேண்டாம்.
4. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்து இயக்காமல் இன்டர்நெட் தளங்களை பிரவுஸ் செய்திட வேண்டவே வேண்டாம். அண்மைக் காலத்திய அப்டேட் வரை பெற்ற பின்னரே,கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடவும்.
5. பயர்வால் ஒன்றை இன்ஸ்டால் செய்திடாமல் இன்டர்நெட் பிரவுசிங் மேற்கொள்ள வேண்டாம்.
6. மற்றவர்களின் கிரெடிட் கார்ட் எண், பேங்க் அக்கவுண்ட் எண் இவற்றைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம். இது வீணான பழியையும் கொண்டு வந்து சேர்க்கும்.
7. இணையத்தில் உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைப் பயன்படுத்துகையில், அந்த தளம் தோன்றுகையில் டாஸ்க் பாரின் சிறிய பேட் லாக் போன்ற படம் தெரிந்தால் மட்டுமே தரவும். அல்லது அதன் முகவரியில் அந்த தளம் பாதுகாப்பானது என்பதற்கான அடையாளத்தைத் தேடவும். பெரும்பாலும் இதன் முகவரிகள் https: என எஸ் (s) என்ற எழுத்தையும் சேர்த்துக் கொண்டு தொடங்கும். 
8.நைஜீரியா அல்லது மற்ற பிரபலமாகாத நாடுகளின் பேங்கர்கள் அல்லது பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு உங்களுக்கு வரும் இமெயில்களைப் படிக்காமலேயே நீக்கிவிடுங்கள்.
9.இதனை பார்வேர்ட் செய்திடுங்கள் என்று வரும் மெயில்களை அலட்சியம் செய்துவிடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி கெட்ட பெயர் எடுக்காதீர்கள். எல்லாம் ஏமாற்றுவேலை.
10. உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் மற்றும் முக்கிய நாட்களின் தேதிகளை பாஸ்வேர்டாகப் பயன்படுத்த வேண்டாம்.
இது என்ன பத்து கட்டளையா? என்று கேட்கிறீர்களா! இன்னமும் சில பாதுகாப்பிற்கான வழிகள் உள்ளன. ஆனால் குறைந்த பட்சம் இதனைப் பின்பற்றவும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஆண் வயிற்றில் குழந்தை .இந்த மாதம் 'டெலிவரி!'



 
 

லண்டன்: கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு ஆண் விரைவில் குழந்தை பெறப் போகிறார்.அமெரிக்கா, ஓரிகான் மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன் பீட்டில் என்ற ஒரு ஆணுக்கு, குழந்தை பிறந்தது. அவரை அடுத்து தற்போது, கலிபோர்னியா மாநிலத்தில், ஸ்காட் மூர் என்ற ஆண், கர்ப்படைந்துள்ளார்.பெண்ணாகப் பிறந்து, லாரா என்ற பெயருடன் இருந்த ஸ்காட் மூர், சில ஆண்டுகளுக்கு முன் ஆணாக மாற விரும்பி, அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 

எனினும், உடலில் பெண்ணுக்கான உள்ளுறுப்புகள் எதுவும் நீக்கப்படவில்லை. இவரைப் போலவே தாமஸ் என்பவரும், பெண்ணாகப் பிறந்து, ஆணாக மாறினார். ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவரும், 2007ல் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.இவர்களில் ஸ்காட் மூருக்கு, உடல் உள் உறுப்புகள், பெண்ணுக்கு இருப்பது போலவே உள்ளதால், செயற்கை கருவூட்டல் முறையில், கடந்த ஜூனில், மகப்பேறு கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, ஸ்காட் மூர் வயிற்றில் குழந்தை வளர்கிறது.இந்த மாதம், அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது.இது குறித்து, ஸ்காட் மூர் கூறுகையில், ""நாங்கள் இருவரும், ஆவலுடன் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். மிக மகிழ்ச்சியாக உள்ளது. நான் கருவுற்ற செய்தியை முதன்முதலில் கேட்டதும், உச்சகட்ட மகிழ்ச்சியாக, "ஷாப்பிங்' செய்தோம்,'' என்றார்.இச்செய்தியை, பிரிட்டனிலிருந்து வெளியாகும், "டெய்லி மெயில்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.



source:dinamalar

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP