சமீபத்திய பதிவுகள்

மின்சார மனிதன் - Shockproof Man — Video

>> Wednesday, March 3, 2010





Is 29 வயதான சரோஜ் குமார் உண்மையாகவே மின்சார மனிதரோ? really immune to electrocution?

StumbleUpon.com Read more...

நித்தியானந்தா வீடியோ கிராப்பிக்ஸ்

வீடியோவில் கிராப்பிக்ஸ் நித்தியானந்தா: சிவசேனா தலைவரின் காமெடி பேட்டி

TalkiesHomeபிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும், நித்தியானந்தாவின் உருவப்படங்கள் எரிப்பும், ஆசிரமங்கள் சூறையாடுவதும் என நித்தியானந்தாவின் மீதான கோபம் வெளிப்படுகின்றன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சிவசேனா கட்சித் தலைவர் குமாரராஜா, நித்தியானந்தர் வளர்ச்சியை பிடிக்காமல் சில சக்திகள், கிராப்பிக்ஸ் மூலம் பொய்யான மனிதரை நித்தியானந்தர் போல உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு பகுதிதான் நடிகையுடன் இருக்கும் வீடியோ காட்சி என்று தனது கையில் வைத்திருந்த அறிக்கையை படித்தார். 

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் குமாரராஜா. எந்த ஆதாரத்தை வைத்து வீடியோவில் உள்ள காட்சிகளை கிராப்பிக்ஸ் என்று சொல்லுகிறிர்கள்? இதுபற்றி நித்தியானந்தத்திடம் தொடர்பு கொண்டு பேசினீர்களா? உங்களுக்கும் நித்தியானந்தாவிற்கும் எங்த வகை தொடர்பு? அவரை நீங்கள் சந்தித்துள்ளீர்களா? அவருக்கு உங்களை தெரியுமா? இந்து மக்கள் கட்சி உள்பட நித்தியானந்தாவின் பக்தர்களும் இந்த வீடியோ காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அப்படி இருக்க நீங்கள் மட்டும் ஏன் அவருக்கு ஆதரவாக பேசுகிறீர்கள்? இது உங்களுடைய விளம்பரத்துக்காகவா? அல்லது அவரோடு உங்களுக்கு வேறு ஒப்பந்தம் உள்ளதா? என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் காமெடியாக அளித்த ஒரே பதில், வீடியோவில் இருப்பது நித்தியானந்தாவின் கிராப்பிக்ஸ் உருவம் என்பதுதான். 

பாதிக்கப்பட்டவர் நித்தியானந்தா, பத்திரிகையாளர்களை அவர் சந்திக்காமல் உங்களை ஏன் அனுப்பி வைத்துள்ளார்? ஏன் நித்தியானந்தா தலைமறைவாகி உள்ளார்? அவர் எப்போது பத்திரிகையாளர்களை சந்திப்பார்? என்ற கேள்விக்கு, நித்தியானந்தா தலைமறைவாகவில்லை. விரைவில் பெங்களூரில் செய்தியாளர்களை சந்திப்பார் என்றார். 

செய்தியாளர்களின் எந்த கேள்விக்கு சரியான பதில் சொல்லாமல், முன்னுக்குப் பின் முரணாக பேசிய குமாரராஜாவை, மீண்டும் ஒருமுறை வீடியோவையும், படங்கள் வெளிவந்த புத்தகத்தையும் பார்த்துவிட்டு பின்னர் எங்களை சந்தியுங்கள் என்று சொல்லி விடைப்பெற்றனர் பத்திரிகையாளர்கள்.


source:nakkheeran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

“கல்கி” ஆசிரமத்தில் செக்ஸ் லீலையா?வீடியோ

"கல்கி" ஆசிரமத்தில் செக்ஸ் லீலையா? போதை மருந்து கொடுத்து பெண்களை மயக்குவதாக புகார்
 ஐதராபாத், மார்ச். 3-
 
ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் கோவில் உள்ளது. விஜயகுமார் என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டு சாமியாராக மாறி இந்த ஆசிரமத்தை அமைத்தார். தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்ட அவர் ஆசிரமத்துக்கும் கல்கி ஆசிரமம் என்று பெயர் சூட்டினார்.
 
தமிழ்நாடு, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கல்கி பகவானுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
 
பிரபல தொழில் அதிபர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், கம்ப்யூட்டர் என் ஜினீயர்கள் என உயர் அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இதில் பக்தர்களாக இருக்கின்றனர்.
 
இவர்களில் பலர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கி இருக்கின்றனர்.
 
இந்த நிலையில் கல்கி ஆசிரமம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆந்திராவில் ஒளிபரப்பாகும் டி.வி.-9 செய்தி சானல் ஆசிரமத்தில் விசாரணைகளை மேற் கொண்டு சில வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது.
 
அதில் ஆசிரமத்தில் கல்கி பகவான் முன்னிலையில் ஏராளமான ஆண்-பெண் பக்தர்கள் அரைகுறை மயக்கத்தில் இருப்பது போல உட்கார்ந்து இருக்கிறார்கள்.
 
ஆண்-பெண் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொள்கின்றனர். இத்தனைக்கும் அவர்களில் பலர் இளம் ஆண்-பெண்கள். இவர்களில் சிலர் அரை குறை உடையுடன் இருக்கிறார்கள்.
 
இந்த காட்சிகளை ஒளி பரப்பிய டி.வி.சானல் இதற்கு மேலும் ஒளிபரப்ப முடியாத ஆபாச காட்சிகள் தங்களிடம் சிக்கி இருப்பதாகவும், அங்கு செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.
 
தனது நிருபர்கள் குழு 6 மாதமாக கஷ்டப்பட்டு இந்த படங்களை எடுத்ததாகவும் அந்த செய்தி சானல் தெரிவிக்கிறது.
 
ஆசிரமத்தில் கொடுக்கும் பிரசாதத்தில் பக்தர்களுக்கு போதை மருந்து கலந்து கொடுப்பதாகவும், இதை சாப்பிடும் பக்தர்கள் கிறக்கம் ஏற்பட்டு இப்படி ஆபாச செயல்களில் ஈடுபடுவ தாகவும் பக்தர்கள் சிலர் கூறி இருக்கின்றனர்.
 
இந்த ஆசிரமத்தில் ஏராளமான பணக்கார இளம் பெண்களும் சேர்ந்து உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் அவர்களை அழைத்த போது அங்கிருந்து வரமறுத்த சம்பவங்கள் பல ஏற்கனவே நடந்தன.
 
இப்போது வெளியாகி இருக்கும் டி.வி. காட்சியை பார்க்கும் போது அவர்கள் ஏதோ ஒரு விவகாரத்தில் அடிமையாகி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
 
இந்த காட்சி ஒளிபரப்பானதும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கல்கி பகவான் ஆசிரமத்தை தாக்கினார்கள். டி.வி. காட்சி தொடர்பாக கல்கி ஆசிரமத்தில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.

source:maalaimalar





--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP