சமீபத்திய பதிவுகள்

இஸ்ரேல் தோழமை நாடு: ஒபாமா

>> Thursday, March 18, 2010

ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க கூடாது:இஸ்ரேல் தோழமை நாடு: ஒபாமா

Top global news update

வாஷிங்டன்:ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுத போட்டி உருவாகி விடும். எனவே, அந்நாட்டிடம் அணு ஆயுதம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள கடுமையாக உழைத்து வருகிறேன் என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.'டிவி' பேட்டி ஒன்றில் அதிபர் ஒபாமா கூறியதாவது:ஈரான், அந்நாட்டு மக்களை ஜனநாயக நடைமுறைப்படி நடக்க விடுவதில்லை. மனித உரிமைகள் மீறப்படுகின்றன. எனவே, தூதரக அளவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம். அந்நாட்டை வழிக்கு கொண்டு வருவதற்காகத்தான் பொருளாதார தடைகளை விதித்துள்ளோம்.

ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதை, அமெரிக்கா முக்கிய குறிக்கோளாக கருதுகிறது. ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுத போட்டியை ஏற்படுத்தி விடும். இதனால், நமது தேசிய பாதுகாப்பு நலன் கடுமையாக பாதிக்கும்.ஈரானிடம் அணு ஆயுதம் இருந்து விடக்கூடாது என்பதற்காக கடும் முயற்சி எடுத்து வருகிறேன். இதற்காக மற்ற நாடுகளை ஒன்று திரட்டி, ஈரானை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.நண்பர்களுக்கிடையே கருத்து பேதம் இருப்பது போல இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் சில விஷயங்களில் வேறுபாடு இருந்தாலும் கூட, நம்முடைய தோழமை நாடாக இஸ்ரேல் உள்ளது.இவ்வாறு ஒபாமா கூறினார்.

source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பொட்டு அம்மான் தற்கொலை

பொட்டு அம்மான், மனைவி தற்கொலை என்கிறது இலங்கை அரசு: இன்டெர்போல் தொடர்ந்தும் தேடுதல்

இறுதி யுத்தத்தின் போது பொட்டம்மானும் அவரது மனைவியும் தம்மை தாமே தற்கொலை தாக்குதல் மூலம் அழித்ததாகவும், அதனால் தான் அவர்களது உடல்களை மீட்க முடியவில்லை எனவும் சிங்கள் கூறியுள்ளது. ஆனால் தற்போது பொட்டம்மானை சர்வேதேச பொலிஸார் (இன்டெர்போல்) மீண்டும் தேடி வருகின்றனர் .

இது பற்றி தெரிவித்திருப்பதாவது:-

கடந்த வைகாசி மாதம் பதினெட்டாம் திகதி தமிழர் தாயகத்தில் புலிகளின் பலம் சிதைக்கப்பட்டது ஆனால் கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச காவல்துறையான
இன்டெர்போல் பொட்டம்மானையும் அவருடன் இணைத்து இருவரையும் தேடியது.

இறுதி யுத்தத்தின் போது பொட்டம்மானும் அவரது மனைவியும் தம்மை தாமே தற்கொலை தாக்குதல் மூலம் அழித்ததாக தற்போது சிங்கள் அரசு கூறியுள்ளது.

அதனால் தான் அவர்களது உடல்களை மீட்க முடியவில்லை எனவும் பிரபாகரனின் உடலை தாம் மீட்டு அவரது மரண சான்றிதழை வழங்கியதாக இலங்கை தெரிவித்துள்ள நிலையில் தற்போது பொட்டம்மானை சர்வேதேச பொலிஸார் மீண்டும் தேடி வருகின்றனர்.

இந்த புதிய தேடுதலை இன்டெர் போல் தமது இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இலங்கை பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது .

பொட்டம்மானும் அவரது மனைவியும் தற்கொலை தாக்குதல் மூலம் தம்மை தாமே அழித்ததினால் அவர்களது மரண சான்றிதழ் பத்திரத்தை தம்மால் தர முடியவிலையென இலங்கை கூறியுள்ளது. ஆனல் ராஜிவ் காந்தியின் படுகொலையில் தொடர்பு உடைய பொட்டம்மான் இறந்து விட்டார் என இலங்கை தெரிவித்த நிலையில் தற்போது இன்டெர் போல் தேடுவது ஏன் என இராஜதந்திரிகள் கேள்விகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

அப்படியானால் அவர் இன்னும் உயிருடன் உள்ளார் என்ற செய்தி சர்வேதேச மற்றும் இந்தியா றோவிற்கு தெரிந்த நிலையிலேயே இந்த தேடுதல் படலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி பெரும் பரப்பரப்பை இலங்கை அரசியல் வட்டத்தில் உருவாக்கியுள்ளது. என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
source:uyarvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP