சமீபத்திய பதிவுகள்

டிப்ஸ் கதம்பம்

>> Thursday, March 25, 2010


 
 

வேர்டில் வரி அழிக்க
வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு வரி டெக்ஸ்ட்டை டைப் செய்துவிட்டீர்கள். அப்புறம் தான் தெரிகிறது. அந்த வரி தேவையில்லையே என்று. உடனே என்ன செய்யலாம்? பின்னால் உள்ள கர்சரை பேக் ஸ்பேஸ் கீ மூலம் தட தட தட் என்று தட்டிக் கொண்டே செல்லுகிறீர்களா? ஏன், சார் இந்த வேலை? வரியின் தொடக்கத்தில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஷிப்ட் + என்ட் கீகளை அழுத்துங்கள். வரியின் முடிவு வரை தேர்ந்தெடுக்கப்படும். அடுத்து பேக் ஸ்பேஸ் அல்லது டெலீட் அழுத்துங்கள். ஏன், ஸ்பேஸ் கீ அழுத்தினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வரி அழிக்கப்படும். மின்னஞ்சல் கடிதங்களை சுருக்கமாகவும் நேரடியாக விஷயத்தைத் தெரிவிப்பதாகவும் அமைத்திடுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை மின்னஞ்சலுடன் இணைப்பாகத் தர எண்ணினால் அவற்றை ஸிப் செய்து அனுப்பவும். அப்போது தான் கடிதத்தினைப் பெறுபவர் அனைத்து பைல்களையும் பெறுவது உறுதிப் படுத்தப்படும். இல்லை என்றால் ஒன்று கிடைத்து ஒன்று கிடைக்காமல் போகலாம். 
* ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் செயலாற்றிக் கொண்டிருக்கையில் திரையில் தோன்றும் விண்டோவினை பின்னுக்குத் தள்ளி மற்றதை முன்னுக்குக் கொண்டு வர Alt+ ESC  அழுத்தவும். 
நம் விருப்ப புல்லட்
வேர்டில் உள்ள வரி ஒன்றின் நடுவே, புல்லட் போல சிறிய புள்ளி ஒன்று அமைக்க விரும்புகிறீர்கள். புல்லட் டூலைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் விரும்பியபடி புல்லட் அமையவில்லை. என்ன செய்யலாம்? எந்த இடத்தில் சிறிய புள்ளியை, புல்லட் ஆக அமைக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் நம்லாக் கீயை ஆன் செய்து, நியூமெரிக் கீ பேடில் ஆல்ட் கீயினை அழுத்தியவாறே 0183 என்ற எண்களை அழுத்தவும். புள்ளி அமைக்கப்படும்.
கண்ட்ரோல் பேனல் உங்கள் கைகளில்
நீங்கள் அடிக்கடி கண்ட்ரோல் பேனல் திறந்து பயன்படுத்துபவரா? ஒவ்வொரு முறையும் ஸ்டார்ட் கிளிக் செய்து பல பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் பின் கண்ட்ரோல் பேனல் செல்கிறீர்களா? நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவராக இருந்தால் இந்த மவுஸ் அலைச்சல் தேவையில்லை. கண்ட்ரோல் பேனலைத் திறக்கும் வழியை உங்கள் டாஸ்க்பாரில் வைத்துக் கொள்ளலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் Control Panel  என டைப் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் ஐகான் காட்டப்படும்போது அப்படியே அதனை இழுத்து வந்து, உங்கள் டாஸ்க் பாரில் விடவும். அடுத்த முறை கண்ட்ரோல் பேனல் செல்ல எண்ணுகையில் இதனைக் கிளிக் செய்தால் போதும். எப்போதாவது இந்த ஐகான் எதற்கு டாஸ்க் பாரில் என்று எண்ணினால் இதன் மீது ரைட் கிளிக் செய்து Unpin this program from Taskbar என்பதில் கிளிக் செய்தால் போதும்.
வேர்டில் பைலைத் திறக்க
வேர்டைத் திறக்கையில் ஏற்கனவே பயன்படுத்திய பைல்களின் பட்டியலில் நாம் செட் செய்ததற் கேற்ப 4 முதல் 9 பைல்கள் வரை காட்டும். இவை 1,2,3 என வரிசைப் படுத்தப்பட்டு மெனுவின் கீழாக இருக்கும். குறிப்பிட்ட பைலைத் திறக்க மவுஸின் கர்சரை அந்த பைலின் பெயர் மீது வைத்து கிளிக் செய்வோம். இன்னொரு குறுக்கு வழியும் உள்ளது. அந்த பைலுக்கு எந்த எண் தரப்பட்டுள்ளதோ அந்த எண்ணுக்கான கீயை (1,2,3 என்றபடி) அழுத்தினால் போதும். அந்த பைல் திறக்கப்படும்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பெண்கள் மார்பில் வெடிகுண்டு-தீவிரவாதிகள் புது திட்டம்


பெண்கள் மார்பில் வெடிகுண்டுகளை வைத்து ஆபரேசன் செய்யும் டாக்டர்கள்!
 
ஆபரேஷன் மூலம் மார்பில் வெடி குண்டை புதைத்து வைத்து விமானங்களை தகர்க்க அல்கொய்தா தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருந்தது தெரிய வந்துள்ளது. 


அல்கொய்தா தீவிரவாதிகள் இப்போது ஏராளமான மனித குண்டுகளை பயன்படுத்த ஏராளமான பெண்களையும் தேர்வு செய்துள்ளனர். 
 
அவர்களை பல்வேறு வகையான தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் உடலில் வெடி குண்டை புதைத்து வைத்து தகர்க்கும் திட்டமும் ஒன்று.
 
பெண் தீவிரவாதிகள் மார்பில் பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன் மூலம் குண்டுகளை புதைத்து வைத்து விமானங்களில் தாக்குதல் நடத்த செய்வது அவர்களது முக்கிய திட்டமாகும். 
 
அல்கொய்தா இயக்கத்தில் பல டாக்டர்களும் இருக்கின்றனர். பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் கிராமங்களில் உள்ள அல்கொய்தா முகாமில் இருக்கும் இந்த டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் மார்பில் குண்டுகளை புதைத்து வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்து உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 
 
மார்பு அல்லது பின்பு சதை பகுதியில் 5 அவுன்சு உள்ள வெடி மருந்தை பிளாஸ்டிக் குப்பியில் அடைத்து புதைத்து வைத்து விடலாம். இதை ஸ்கேனர் கருவிகளால் கண்டு பிடிக்க முடியாது. 
 
விமானத்தில் செல்லும் போது இந்த குண்டை வெடிக்க செய்தால் விமானத்தில் ஓட்டை விழும் அளவுக்கு தாக்கும் சக்தி இருக்கும். ஓட்டை விழுந்தால் மேற்கொண்டு விமானம் பறக்க முடியாமல் கீழே விழுந்துவிடும் இந்த முறையில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். 
 
எனவே இதுபோன்ற தாக்குதல்களை எப்படி தடுப்பது என்பது குறித்து வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது


source:nakkheeran.

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு மே 2-ந்தேதி தேர்தல்: ருத்திரகுமாரன் அறிவிப்பு

 
 
 
 
நாடு கடந்த    தமிழீழ அரசுக்கு    மே 2-ந்தேதி தேர்தல்:         ருத்திரகுமாரன் அறிவிப்பு
 
கொழும்பு, மார்ச்.16-
 
தமிழ் ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து தமிழ்ஈழ ஆதரவாளர்கள நாடு கடந்த தமிழ்ஈழ அரசை அமைக்க முடிவு செய்தனர்.
 
இதன் ஒருங்கிணைப்பாளராக ருத்திரகுமாரன் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-
 
ஒரு இனம், இன அழிப்புக்கு உள்ளாகிறது என நிரூபிக்கப்படும்பொழுது சர்வதேச சட்டக்கோட்பாடுகளான தற்பாதுகாப்பு, தற்காப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஈடுசெய் நடவடிக்கையாக சுதந்திர நாட்டினைக் கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமுண்டு. தற்போது இலங்¢கை அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த இனஅழிப்பு இன்று ஓரளவுக்கு உலக அரங்கில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை மே 2-ந்தேதி அனைத்து நாடுகளிலும் நடத்துவற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல்களை நடத்தி முடித்து, பிரதிநிதிகளை தெரிவு செய்து, மே 17, 19-க்கு இடைப்பட்ட காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வை கூட்டலாம் என எண்ணியுள்ளோம்.
 
இது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாக கூறி மார்தட்டும் இலங்கை அரசுக்கு ஈழத்தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.
 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை ஒழுங்கு செய்து நடத்துவதற்கான செயற்பாட்டுக் குழுக்களை இதுவரை அறிவிக்கப்படாத நாடுகளுக்கு இம்மாத இறுதிக்குள் இவை அறிவிக்கப்படும்.
 
இத்தேர்தல்களில் போட்டியிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு எம் தேச விடுதலைக்காக உழைத்திட முன்வருமாறு தகமையும் ஆர்வமும் உடைய அனைவரையும் அழைக்கிறோம்.
 
இத்தேர்தல்களை வெற்றிகரமாக நடத்த இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவரையும் தொண்டர்களாக பதிவு செய்து கொள்ளுமாறு கோருகிறோம்.
 
திட்டமிட்டவாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்களை நடத்தி முடிப்பதற்கான முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு அனைத்து தமிழர் அமைப்புகளையும் தமிழ்பேசும் மக்களையும் உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
 
source:maalaimalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

5650 நகரங்கள் 141 நாடுகள் இரண்டு லட்சத்துக்கு மேல் வருகையாளர்கள்



 5650 நகரங்கள் 141 நாடுகள் இரண்டு லட்சத்துக்கு மேல் வருகையாளர்களை கொண்ட பிளாக்கராக www.thamilislam.blogspot.com பிளாக்கரை உருவாக்கிய பெருமை வாசகர்களான உங்களையே சாரும்.கரம் கொடுத்த அத்துனை திரட்டிகளுக்கும் நன்றி. 


Congratulations! Your NeoCounter has reached:


cities.


 



 


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP