சமீபத்திய பதிவுகள்

போட்டுத்தள்ளிய போலீஸ்

>> Monday, November 8, 2010


கோவை : கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்; துணிக்கடை உரிமையாளர். இவருக்கு முஸ்கின் (11), ரித்திக் (9) ஆகிய குழந்தைகள் இருந்தனர்.


இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி:கோவை பெற்றோர்கள் பேட்டி: குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என குழந்தைகளை பறிகொடுத்த தாய்- தந்தையர் கூறியுள்ளனர். இன்று போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் மேலும் கூறியதாவது: எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி.


கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்றைய என்கவுன்டர் நடந்ததையடுத்து ரங்கேகவுடர் தெருவில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். குற்றவாளிக்கு சரியான தண்டவை வழங்கப்பட்டிருக்கிறது என போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.


குழந்தைகள் கடத்தல் எப்படி நடந்தது ? : அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த முஸ்கினும், ரித்திக்கும் கடந்த 29ம்தேதி காலை வழக்கம்போல வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பினர். வழக்கமாக குழந்தைகளை அழைத்துச் செல்லும் கால் ‌டாக்ஸிக்கு பதிலாக வேறு ஒரு கால் டாக்சி வந்தது. அதனை ஓட்டிய டிரைவர் இதற்கு முன்பு முஸ்கினையும், ரித்திக்கையும் பள்ளிக்கு அழைத்து சென்ற டிரைவர் என்பதால் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு அழைத்து செல்லத்தான் கால்டாக்ஸி வந்திருப்பதாக எண்ணி அதில் ஏறினார்கள். ஆனால் அந்த வேன் பள்ளிக்கு செல்லாமல் வேறு பாதையில் சென்றது.


குழந்தைகள் இருவரையும் கடத்தி, தந்தை ரஞ்சித்குமாரிடம் பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்துடன் கால்டாக்ஸி டிரைவர் அவர்களை கடத்திச் சென்றான். போகும் வழியில் தனக்கு துணையாக தனது நண்பனையும் அழைத்துக் கொண்ட அந்த டிரைவர், சிறுமி முஸ்கினை நண்பனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் போலீசில் மாட்டிக் கொள்வோமோ என பயந்த அவர்கள், குழந்தைகளை கொடூரமாக தண்ணீரில் தள்ளி விட்டு கொலை செய்தான்.


கோவையை உலுக்கிய சம்பவம் : கோவை நகரையே உலுக்கிய இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அரக்க கொலையாளிகளான ‌கால்டாக்ஸி டிரைவர் மோகன்ராஜ் (33), அவரது நண்பன் மனோகரன் (23) ஆகியோரை போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். ஒன்றுமே அறியாத குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளிகள் என கேள்விப்பட்டதும், சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள், அவர்களை அடிக்க பாய்ந்த சம்பவமும் நடந்தது.


போலீசுடன் செல்ல தயார் : இந்நிலையில் கொலை குற்றவாளிகளான மோகன்ராஜையும், மனோகரனையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது குற்றவாளிகளை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், சம்பவம் குறித்து விசாரித்ததுடன், போலீஸ் காவலில் செல்ல சம்மதமா? என குற்றவாளிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ‌போலீசுடன் செல்ல தயாராக இருப்பதாக ‌தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.

சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான்: கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து இன்று அதிகாலை போலீசார் குற்றவாளிகள் இருவரையும் விசாரனைக்காக செட்டிபாளையம் அழைத்து சென்றனர். வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே சென்றபோது, ‌கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான். அவன் சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகிய போலீசார் காயம் அடைந்தனர். குற்றவாளி தப்பி ஓடுவதை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மோகன்ராஜை சுட்டார். இதில் மோகன்ராஜ் தலையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்தது. மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தான்.   

மோகன்ராஜ் சுட்டதில் காயமடைந்த போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மோகன்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோகரன் ‌போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ் கஸ்டடியில் இருக்கின்றான். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்து ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளி மோகன்ராஜையும், அவனது நண்பனையும் விசாரணை இன்றி தூக்கில் போட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். முஸ்கின் மற்றும் ரித்திக்கின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பலரும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது ; குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், வழக்கில் உ‌டனடியாக தீர்ப்பு வழங்கி தூக்கில் போட வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோகன்ராஜ் போலீசாரால் சுட்டுக்கொன்ற சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்

 



பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்

இயேசு, கிறிஸ்தவம் மற்றும் பாவம் பற்றிய ஆய்வு

முஹம்மது ஒரு பாவியா? என்ற தொடர் கட்டுரைகளின் இரண்டு பாகங்களை கீழ் கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்.

பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி

இந்த தற்போதைய கட்டுரை மூன்றாம் பாகமாக வெளியிடப்படுகின்றது

இயேசு பரிசுத்தராவார், அவர் பாவியல்ல‌

இயேசு பாவமில்லாதவர் என்று இஸ்லாமும், கிறிஸ்தவமும் போதிக்கின்றன. இயேசு பாவம் செய்யவில்லை, அவரிடம் பாவம் இல்லை என்று பைபிள் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது.

பைபிளிலிருந்து சில வசனங்கள்:

வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபிரேயர் 4:14-15).

ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2 கொரிந்தியர் 5:20).

"அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை" (1 பேதுரு 2:22).

பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை (1 யோவான் 3:4-5).

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து சில வசனங்கள்:

இயேசுவின் பிறப்பு பற்றி மரியாளுக்கு நற்செய்தியை அறிவிக்க காபிரியேல் தூதன் வந்தார் என்று குர்ஆன் போதிக்கிறது. குர்ஆன் 19:19ம் வசனத்தில் காபிரியேல் தூதன் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"He said: "Nay I am only a messenger from thy Lord (to announce) to thee the gift of a holy son."

முஹம்மது ஜான் குர்‍ஆன் தமிழாக்கம்

"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்.

பீஜே குர்‍ஆன் தமிழாக்கம்

நான் உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்.

"பரிசுத்த" என்ற வார்த்தை அரபி மொழியில் "ஜகியா (zakiyya)" என்பதாகும், இதன் மூல அர்த்தம் "பரிசுத்தம்" என்பதாகும். இந்த வார்த்தையானது முக்கியமாக "சுத்தமுள்ள, குற்றமில்லாத, பரிசுத்த, குறையில்லாத" என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

இயேசு பாவத்தை அறிக்கையிடவில்லை என்று சஹீஹ் புகாரி கூறுகிறது.

….அவ்வாறே மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் சென்று, 'ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனுடைய வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஈசா(அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை - (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் ...  

ஆக, ஆரம்பகால இஸ்லாம் இயேசுவிடம் பாவம் இல்லை என்று கூறுகிறது. இருந்தபோதிலும், ஏற்கனவே சொன்னது போல, பிறகு வந்த இஸ்லாமியர்கள் முஹம்மது இயேசுவை விட தரம் தாழ்ந்த நிலையில் (பாவ சுபாவமுள்ளவராக) இருக்கிறார் என்ற உண்மையை சகித்துக்கொள்ள அவர்களால் முடியவில்லை. எனவே, முஹம்மதுவை இயேசுவிற்கு நிகராக பாவமில்லாதவராக இருக்கிறார் என்பதை காட்டும் படி பல முயற்சிகளை எடுத்தார்கள்.

"முஸ்லீம் ஸ்டடீஸ்" பாகம் 2, பக்கம் 346ல், ஐ. கோல்டுசைஹெர் (Goldziher) கீழ்கண்ட விதமாக கூறுகிறார்:

"An unconscious tendency prevailed to draw a picture of Muhammad that should not be inferior to the Christian picture of Jesus."

முஹம்மதுவின் சுபாவம் இயேசுவின் சுபாவத்திற்கு நிகராக இருக்கிறது என்று காட்டுவதற்கு பல சுயநினைவு இல்லாத கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன‌.

இந்த கோட்பாடு, குர்ஆனில் சொல்லப்பட்ட முஹம்மதுவின் வார்த்தைகளுக்கு எதிர்மறையாக உள்ளது.

பாவம் மற்றும் பாவம் செய்பவர்கள் பற்றிய கிறிஸ்தவ கோட்பாடு: THE CHRISTIAN DOCTRINE OF SIN AND SINNER

கில்கிறைஸ்ட் அவர்களின் புத்தகம் இந்த விவாதம் பற்றி அதிகபடியான விளக்கத்தைக் கொடுக்கிறது.

இங்கு ஒரு விவரத்தை குறிப்பிடவேண்டும், அதாவது "பாவங்களிலிருந்து நபிகளுக்கு பாதுகாப்பு" என்ற இஸ்லாமிய கோட்பாடு என்பது, நபிகள் தவறுகள் செய்யாமல் அல்லது தவறான முடிவுகளை எடுக்காமல் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை மட்டுமே குறிக்கிறது. இந்த இஸ்லாமிய கோட்பாடு, பாவம் பற்றி பைபிள் சொல்லும் கோட்பாட்டோடு எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். "பாவமின்மை" என்று பைபிள் சொல்லும் கோட்பாடு இஸ்லாம் சொல்லும் "பாவத்திலிருந்து பாதுகாப்பு" என்ற கோட்பாட்டை விட வித்தியாசமானது. அதாவது, பைபிள் சொல்லும் "பாவமின்மை" என்ற கோட்பாடு என்பது பாவம் செய்யாமல் இருக்கும் நிலை மட்டுமல்ல, அது தேவனின் பரிசுத்தம், அன்பு மற்றும் நீதியை முழுவதுமாக வெளிப்படுத்தும் உள்ளத்தின் நிலையாகும். பைபிளின் படி "பாவம்" செய்பவர்கள், தேவனின் மகிமையை விட்டுவிட்டவர்கள் ஆவார்கள் (ரோமர் 3:23), மற்றும் அவர்கள் தேவனின் நீதியை அடையாதவர்களாக இருக்கிறார்கள்.

முஹம்மதுவின் "பாவத்திலிருந்து பாதுகாப்பு" என்ற கோட்பாடிற்கும், இயேசுவின் பாவமின்மை என்ற கோட்பாட்டிற்கும் வித்தியாசம் உள்ளது. முஹம்மதுவின் பாவத்திலிருந்து பாதுகாப்பு என்பது அவருக்கு வெளிப்பட்ட வசனங்கள் உண்மையானவைகள் என்பதை காட்ட சொல்லப்படுகிறது. ஆனால், இயேசுவின் பாவமின்மை என்பது அவரது தெய்வீகத்தன்மைக்கு அது ஆதாரமாக உள்ளது, மற்றும் ம‌னிதனின் உண்மை மனநிலை பற்றி கிறிஸ்தவ கோட்பாட்டிற்கு ஆதாரமாக உள்ளது. பாவ‌த்திலிருந்து விடுத‌லை அல்ல‌து இஸ்மாஹ் என்ற‌ இஸ்லாமிய‌ கோட்பாடு, முஹ‌ம்ம‌துவிற்கு வெளிப்ப‌ட்ட‌ வெளிப்பாடுக‌ளுக்கு ஆதார‌மாக‌ கொடுக்க‌ப்ப‌ட்ட‌தே த‌விர‌, முஹ‌ம்ம‌து "ஒரு பாவ‌மும் அறியாத‌, க‌றைதிரை இல்லாத‌ மாச‌ற்ற‌ ம‌னித‌ர்" என்ப‌த‌ற்கு ஆதார‌மாக‌ கொடுக்க‌ப்ப‌ட்ட‌து அல்ல‌. (Thomson, "Muhammad: His Life and Person", "The Muslim World", Vol. 34, p. 115.")

கிறிஸ்தவத்தின் "பாவமின்மை" என்பது பாவமில்லாத பரிசுத்தமாகும். இதன் படி இந்த குணத்தை பெறாதவர்கள் தேவனின் நீதியை விட்டுவிட்டவர்களாக கருதப்படுவார்கள், அதாவது பாவிகளாக கருதப்படுவார்கள். இதற்கு எதிர்மறையாக, இஸ்லாமுக்கு தெரிந்த பாவத்திலிருந்து பாதுகாப்பு என்பது, மனித வழக்கத்தின்படி, மறுபடியும் பாவம் செய்யக்கூடிய நிலையை உடைய மனநிலையை குறிக்கிறது. மீட்கப்படவேண்டிய "விழுந்துவிட்ட மனித நிலையைப் பற்றி" இஸ்லாமுக்கு ஒன்றுமே தெரியாது. இஸ்லாமிய கோட்பாடு "வேண்டுமென்றே தெரிந்தே செய்யும் தவறுகளிலிருந்து பாதுகாப்பு" என்பது பற்றி மட்டும் கூறுகிறது. ஆனால், இறைவனின் பரிசுத்தத்தை தன் இதயத்தில் கொண்டு இருக்கும் மனிதனின் நிலையைப் பற்றி இஸ்லாமிய கோட்பாடு கூறுவதில்லை. இதனால், தான் இஸ்லாம், நபிகள் செய்யும் பாவங்களுக்கு முலாம் பூசி அவைகள் "சிறிய தவறுகள்" என்றும், மறதியில் செய்யப்படும் "தவறுகள்" என்றும் கூறுகிறது. (Gilchrist, op cit, page 275)

எதிரொலி: முஹம்மது எப்படிப்பட்ட பாவியாக இருந்தார்?

மனிதன் பாவசுபாமுள்ளவன் அல்ல, ஆனால், பாவத்தின் பக்கம் அதிகமாக சாய்கின்றவனாக இருக்கிறான் என்று இஸ்லாம் போதிக்கின்றது. மனிதன் பாவசுபாமுள்ளவன் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இயேசுக் கிறிஸ்து கூறும் போது,மனிதன் இயற்கையாகவே தீயவனாக இருக்கிறான் என்று கூறினார்.

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். (மத்தேயு 7:9-12)

தேவனுடைய விருப்பத்திற்கு எதிராக போராடும் மனித சுபாவம் பற்றி மற்றோரு இடத்தில் பவுல் கூறுகிறார்:

"ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்…." "ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது" (ரோமர் 7:19,23.)

எல்லா மனிதர்களும் பாவம் செய்து தெய்வ மகிமை அற்றவர்களாக இருக்கிறார்கள் (ரோமர் 3:23) என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். நாம் நம்முடைய உள்ளத்திலும், சரீரத்திலும் நம்முடைய ஆத்துமாவிற்கு எதிராக ஒரு யுத்தத்தை அனுதினமும் செய்துக்கொண்டு இருக்கிறோம். இந்த பாவ சுபாவமானது நாம் இறைவனின் விருப்பத்தின் படி எதுவும் செய்யக்கூடாது என்று போராடிக்கொண்டு இருக்கிறது.

இப்போது, முஹம்மதுவின் விண்ணப்பத்திற்கு நேராக நம் கவனத்தை திருப்புவோம்.

அல்லாஹ்! நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை. என் பாவங்களை மன்னிப்ப்பாயாக, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக. நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. வேடிக்கையாகவோ அல்லது தெரிந்தே செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக. நான் செய்த எல்லா தீய செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகின்றேன். அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக.

முஹம்மதுவின் இந்த பாவமன்னிப்பு பற்றிய விண்ணம், அவர் ஒரு பாவம் செய்கின்ற கலங்கமுள்ள சுபாவமுள்ளவர் என்பதை காட்டுகின்றதல்லவா? தன் பாவங்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்ற இந்த விண்ணப்பத்தை முஹம்மது அடிக்கடி செய்துள்ளார். ஏன் இவர் அடிக்கடி இந்த ஜெபத்தை செய்யவேண்டும்? அவரின் இந்த விண்ணப்பமானது ஏதோ ஒருசில சாதாரண பாவங்களை தெரியாமல் செய்யும் மனிதனின் விண்ணப்பமல்ல. இது பயத்தோடு கூடிய, ஒரு முக்கியமான (சீரியஸான) விண்ணப்பமாகும், அதாவது தன்னுடைய செயல்கள் மிகவும் மோசமானவைகளாக தீயவைகளாக இருக்கின்றன என்ற உணர்வுள்ள மனிதன் செய்யும் விண்ணப்பம் தான் இந்த முஹம்மது செய்த விண்ணப்பம். அவர் தன்னுடைய பாவங்களுக்காக கல்லரையில் துன்பம் அனுபவிக்கவேண்டி வரும் என்பதை நம்பியவராக இந்த விண்ணப்பத்தை செய்துள்ளார். தன்னுடைய சுபாவத்தில் இருக்கும் பாவ உணர்வுகள் பற்றிய ஓர் சரியான உணர்வு உள்ளவாராக இவர் வேண்டுதல் செய்துள்ளார். தான் என்னென்ன தவறுகள் செய்தார் என்ற பட்டியலை இந்த வேண்டுதலில் அவர் குறிப்பிடவில்லையானாலும், அவருடைய இந்த ஜெபமானது அவர் பாவ சுபாவமுள்ள ஒரு சாதாரண மனிதன் தான் என்பதைக் காட்டுகிறது. இந்த பாவசுபாவம் அவருக்குள் இருந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது, அதனை இவர் சமாளித்தே ஆகவேண்டும். அவர் தன்னைத் தான் ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொண்டு செய்த அனைத்து செயல்களும் இந்த பாவசுபாவத்தினால் தான். எதிர்காலத்திலும் கூட தான் பாவம் செய்யப்போகிறார் என்பதை முஹம்மது அறிந்திருந்தார். தன்னுடைய எதிர்கால பாவங்களை மன்னிக்கும்படி அவர் இறைவனிடம் வேண்டுதல் செய்கிறார். அதுமட்டுமல்ல, அப்படியே தன் பாவங்களை இறைவன் மன்னிப்பார் என்பதற்கு ஒரு வசனத்தையும் சொல்லிவிட்டார் (குர்ஆன் 48:1,2). அவர் தன் உள்ளத்தின் ஆழத்தில் "தான் ஒரு பாவி" என்பதை அறிந்திருந்தார், அதனால் அவர் பாவமன்னிப்பிற்காக வேண்டுதல் செய்யவேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது.

பாகம் மூன்றின் முடிவுரை: எல்லா மனிதர்களுக்கும் இருந்த பாவ சுபாவமே முஹம்மதுவிற்கும் இருந்தது.

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய போதனைகளின்படி இயேசு பரிசுத்தமுள்ளவரும், பாவமில்லாதவருமாக இருக்கிறார். மனிதனின் பாவ சுபாவம் பற்றி மார்க்க போதனைகள் வித்தியாசமாக இருந்தாலும், முஹம்மதுவின் நடத்தைகள் மற்றும் அவரது தனிப்பட்ட ஜெபங்களை நாம் கூர்ந்து கவனித்தால், கிறிஸ்தவ‌ போதனைகளின் படி, "பாவி" என்ற தலைப்பிற்கு முஹம்மது பொருத்தமானவராக இருக்கிறார் என்பதை அறியலாம்.

பாவத்திலிருந்து மீட்பு (இரட்சிப்பு) என்பது இயேசுக் கிறிஸ்து மூலமாக வருகிறது. முஹம்மதுவிற்கு இது தெரியவில்லை. உண்மையான மன்னிப்பை பெறுவதற்கு பதிலாக, முஹம்மது கல்லரையில் தனக்கு காத்திருக்கும் வேதனையை நினைத்தவராக பயத்துடனே தன் வாழ்க்கையை வாழ்ந்தார். முஹம்மது தனக்கு தானாகவே ஒரு வித்தியாசமான கலவையுடன் கூடிய மற்றும் பல சம்பிரதாயங்கள், மூடபழக்கவழக்கங்கள் வன்முறைகளைக் கொண்ட மதத்தை உருவாக்கிவிட்டார். இவையெல்லாம் அவர் செய்தது, தனக்கு தெரியாத அந்த இறைவனை திருப்திபடுத்த அவர் எடுத்த முயற்சியாகும்.

இந்த வேண்டுதலை செய்யுங்கள்:

"இறைவனாகிய இயேசுவே, நான் ஒரு பாவி என்பதை அறிக்கையிடுகிறேன். என் ஆத்துமாவில் பாவம் உண்டென்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். தயவு செய்து என் பாவங்களை மன்னியும். இப்பாவங்கள் உம்முடைய பார்வையில் மிகவும் கொடுமையானவைகள் என்பதை நான் அறிவேன். என் பாவங்களுக்காக நீர் மரித்தீர் என்பதை நம்புகிறேன். நீர் மறுபடியும் உயிரோடு எழுந்தீர் என்பதை விசுவாசிக்கிறேன். நீர் என் இருதயத்தில் வரும்படி நான் அழைக்கிறேன், என் பாவங்களை கழுவும் படியும் என்னை உம்மிடம் சேர்த்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறேன். நீர் தேவ குமாரன் என்பதையும், நீர் எனக்காக காட்டிய அன்பை நான் பெற்றுக்கொள்கிறேன். உமக்கு முழுவதுமாக கீழ்படிவேன் என்று உறுதிகூறுகிறேன்."

BIBLIOGRAPHY

[1] "Sahih Bukhari", translated into English by Dr. Muhammad Muhsin Khan, at the Islamic University in Medina, published by Kitab Bhavan, New Delhi, India.
[2] "Muhammad and the Religion of Islam", by John Gilchrist, page 273, published by Jesus to the Muslims, Durban, South Africa. It can be found on the web at:http://answering-islam.org/Gilchrist/Vol1/
[3] "The Koran", by N. J. Dawood, published by Penguin, London England
[4] "The Meaning of the Glorious Koran", by M. Pickthall. published by Mentor, NY, NY.
[5] "The Koran", by A. J. Arberry, published by Oxford University Press, Oxford, England.
[6] "The Koran", by J. M. Rodwell, published by Everyman, London, England.
[7] "The Holy Quran", by Yusef Ali, published by Amana, Beltsville, Maryland.
[8] The Hughes Encyclopedic Dictionary of Islam"
[9] "Ency. of Islam", pub. by Brill, Netherlands.
[10] "Sahih Muslim", translated by A. Siddiqi, published by International Islamic Publishing House, Riyadh, KSA.
mo-sinner.htm
Rev A: 4/26/00

ஆங்கில மூலம்: Was Muhammad a Sinner?

சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

முஹம்மது பற்றிய இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2010. All rights reserved.


 
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

Answering PJ: பிஜேயின் மிகப்பெரிய பாவம்: இறைவனுக்கு இணை வைத்தல்

 

பிஜேயின் மிகப்பெரிய பாவம்: இறைவனுக்கு இணை வைத்தல்

முன்னுரை: "பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம் இறைவனுக்கு இணை வைத்தலாகும்", அதாவது, ஒரு மனிதனை இறைவனுக்கு சமமாக கருதுவது, அல்லது தொழுதுக்கொள்வது. பிஜே அவர்கள் இதைப் பற்றி தன் குர்-ஆன் மொழியாக்கத்தில் என்ன கூறியுள்ளார் என்பதை முதலில் காண்போம், அதன் பிறகு ஏன் இந்த கட்டுரை எழுதப்படுகின்றது என்பதை விளக்குகிறேன்.

பிஜே குர்-ஆன் மொழியாக்கம், தமிழ் கலைச் சொற்கள், பக்கம் 71:

இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கையிலிருந்து திருந்திக்கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றேன்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

பிஜே குர்-ஆன் மொழியாக்கம், பொருள் அட்டவணை, தலைப்பு: "11. அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கக் கூடாது", பக்கம் 109:

. . . அல்லாஹ்விற்கு இணை கற்பித்தல் பெரும் பாவமாகும் – 4:48

அல்லாஹ்விற்கு இணை கற்பித்தல் பெரும் வழிகேடு – 4:116

அல்லாஹ்விற்கு இணை கற்பித்தல் மிகப்பெரும் அநியாயம் – 31:13 . .

பிஜே அவர்கள் ஒரு புதிய தளத்தை கிறிஸ்தவர்களுக்கு பதில்கள் தருவதற்காகவே ஆரம்பித்துள்ளார், அந்த தளம் பற்றி நான் கொடுத்த அறிமுக கட்டுரையை கீழே படிக்கவும்.

கிறிஸ்தவத்திற்கு பதில்: பீஜேயின் புதிய தளம் ஆரம்பம்

இந்த புதிய தளத்தில், அவர் முதலாவது முகப்பு பக்கத்தில் பதித்து இருந்த ஒரு கட்டுரை: "மறுக்க முடியுமா, இதை மறைக்க முடியுமா?" என்பதாகும். இந்த கட்டுரைக்கு நாம் இப்போது பதிலை காணலாம்.

பிஜே அவர்கள் தம்முடைய புதிய தளத்தில்(http://jesusinvites.com/) எழுதியவைகளை முதலாவது படிப்போம்:

பாரான் (ஹிரா) மலையின் பிரகாசம்

கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி,சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்,பாரான் மலையிலிருந்து பரிசுத்தவான்கள் நடுவிலிருந்து பிரசன்னமானார். அவர் வலதுபுறத்தில் அக்கினிமயமான பிரமானம் அவர்களுக்கு வெளிப்பட்டது.

(உபகாமம் 33:1,2)

"பாரான் மலையிலிருந்து பிரகாசமாய்த் தோன்றி" என்பதன் பொருள் என்ன? பாரான் மலை என்பது மோசே வாழ்ந்த பகுதியிலும் இல்லை. இயேசு வாழ்ந்த பகுதியிலும் இல்லை. மாறாக அது மக்காவில் அமைந்துள்ள மலைகளில் ஒரு மலையின் பெயராகும். அவன் வளர்ந்து வனாந்திரத்தில் குடியிருந்தான். அவன் வளர வளர வில் வித்தையிலும் வல்லவனானான். பாரான் வனாந்தரத்தில் அவன் குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்துப் பெண் ஒருத்தியை அவனுக்கு விவாகஞ் செய்வித்தான்

(ஆதியாகமம் 21:12-21)

சீனாய் மலையில் தோன்றிய பிரகாரசம் மோசேவின் வேதம் என்றால், சீயேரில் தோன்றிய ஒளி இயேசுவின் வேதம் என்றால், பாரானில் தோன்றிய பிரகாசம் எது?

மோசே காலம் முதல் நபிகள் நாயகம் காலம் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அப்பகுதியில் எவரும் கர்த்தரின் தூதர் என அறியப்படவில்லை.

எனவே, பாரான் (ஹிரா) மலையிலிருந்து தோன்றிய பிரகாசம் என்பது நபிகள் நாயகத்தையும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தையும் குறிக்கிறது , மறுக்க முடியுமா, இதை மறைக்க முடியுமா?

பிஜே அவர்களுக்கு தமிழ் கிறிஸ்தவனின் பதில்:

பிஜே அவர்களின் மேற்கண்ட வரிகளின்படி, அவர் கீழ்கண்ட விவரங்களை முன் வைக்கின்றார்:

1) உபாகமம் 33:1-2 வசனங்களில் முஹம்மது பற்றிய தீர்க்கதரிசனம் உள்ளது.

2) இவ்வசனங்களில் வரும் "பாரான்" மலை என்பது, மக்காவில் இருக்கும் ஒரு மலையாகும் (ஹிரா).

3) பாரான் மலையிலிருந்து தோன்றிய பிரகாசம் என்பது முஹம்மதுவையும், குர்-ஆனையும் குறிக்கும்.



பிஜே அவர்களின் மேற்கண்ட கூற்றுகளுக்கு நாம் பதிலைக் காண்போம்.

1) உபாகமம் 33:1-2ம் வசனங்களின் பின்னணி:

மோசே தன் மரண தருவாயில் இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கின்றார், அந்த ஆசீர்வாதத்தில் இஸ்ரவேல் வம்சங்களின் பெயர்களை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு ஆசீர்வதிக்கிறார். இதனை உபாகமத்தின் 33ம் அதிகாரத்தை முழுவதுமாக படித்து தெரிந்துக்கொள்ளலாம். முதலாம் வசனத்திலேயே இதனை சுருக்கமாக காணலாம்.

பிஜே அவர்கள் வசன குறிப்பில் உபாகமம் 33:1,2 என்று குறிப்பிட்டாலும், முதல் வசனத்தை பதிக்கவில்லை, என்ன காரணமோ நமக்குத் தெரியாது. முதல் வசனத்தை பதித்தால், தாம் சொல்லவந்த பொய்யை சொல்லமுடியாது என்று நினைத்தாரோ என்னவோ? இது ஆசீர்வாதம் பற்றி பேசுகின்றதே, தீர்க்கதரிசனம் பற்றி இல்லையே என்று வாசகர்கள் புரிந்துக்கொள்வார்கள் என்று பயந்தாரோ?

இப்போது உபாகமம் 33:1-2ம் வசனங்களை படிப்போம்:

33:1 தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:

33:2: கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி,
      சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்;
         பாரான் மலையிலிருந்து பிரகாசித்து,
            பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்;
              அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.

இந்த இரண்டு வசனங்கள் சொல்லும் செய்திகள் என்ன?

• முதலாவதாக, இந்த வசனங்களில் சொல்லப்பட்டது "ஆசீர்வாதங்களாகும், இவைகள் எதிர்காலத்தில் வரவிருக்கும் ஒரு நபரைப் பற்றிய தீர்க்கதரிசனமல்ல". இதனை முதல் வசனத்திலேயே நாம் கண்டு கொள்ளலாம்.

• இரண்டாவதாக, இங்கு மோசே குறிப்பிடுவது நடந்து முடிந்துவிட்ட நிகழ்ச்சியைப் பற்றியதாகும், எதிர் காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அல்ல. அதாவது இறந்தகால நிகழ்ச்சியைப் பற்றி இரண்டாம் வசனத்தில் குறிப்பிடுகின்றார். இவ்வசனத்தில் வரும் "உதயமானார், பிரசன்னமானார், புறப்பட்டது" என்ற வார்த்தைகள் இறந்த கால வார்த்தைகளாகும். இதில் பிஜே அவர்களுக்கு எந்த சந்தேகமும் இருக்காது என்று நம்புகிறேன்.

• மூன்றாவதாக, மிகவும் முக்கியமான விவரம் என்னவென்றால், இரண்டாம் வசனம் "கர்த்தர் சீனாயிலிருந்து. . ." என்று ஆரம்பிக்கிறது, இரண்டாம் வசனத்தில் சொல்லப்பட்ட அனைத்து விவரங்களும் கர்த்தராகிய யேகோவா தேவன் செய்த விவரங்கள் பற்றி பேசுகின்றது. கர்த்தர் என்பது பைபிளின் தேவனை குறிக்கும் என்று பீஜே அவர்களுக்கு மிக மிக நன்றாகத் தெரியும்.

இதைப் பற்றி விவரமாக இப்போது காண்போம்.

2) கர்த்தர் என்றால் யார்?

குர்-ஆனின் இறைவனுக்கு எப்படி "அல்லாஹ்" என்ற தனிப்பட்ட பெயர் உள்ளதோ, அதே போல, பைபிளின் இறைவனுக்கு தனிப்பட்ட பெயர் "யேகோவா" என்பதாகும். [சிலர் குர்-ஆனின் அல்லாஹ்வும், பைபிளின் தேவனும் ஒருவர் தான் என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள், இது தவறானதாகும். அல்லாஹ்வும் யேகோவா தேவனும் ஒருவரல்ல என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்].

இந்த உபாகமம் 33:2ம் வசனத்தில் "கர்த்தர்" என்று தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்கள், ஆனால், "யேகோவா" என்று தான் எபிரேய மொழியில் வருகிறது.

இந்த சிறிய விவரத்தை அறிய நாம் மூல மொழிக்கும் போகத் தேவையில்லை, தமிழில் படித்தாலே போதும் புரிந்துக்கொள்ளலாம். பழைய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்று வரும் இடங்களில் எல்லாம் "யேகோவா" என்ற தனிப்பட்ட பெயர் தான் உள்ளது.

கர்த்தர் என்று வந்தால் அது "மனிதனை அல்ல, இறைவனைக் குறிக்கும்" என்று பிஜே அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆக, கர்த்தரைப் பற்றி சொல்லியுள்ள வசனத்தில், யேகோவா தேவன் பற்றி சொல்லிய விவரத்தில் பிஜே தன் கை வரிசையை காட்டியுள்ளார்.

உபாகமம் 33:2: கர்த்தர் . . . எழுந்தருளி, . . . உதயமானார்; . . . . பிரகாசித்து, . . . பிரசன்னமானார்; அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.

அறிவுள்ள ஒரு மனிதன் மேற்கண்ட வசனத்தை படித்தால், கீழே தரப்பட்ட விதமாகத் தான் புரிந்துக்கொள்வான்.

கர்த்தர் எழுந்தருளினார்

கர்த்தர் உதயமானார்

கர்த்தர் பிரகாசித்தார்

கர்த்தர் பிரசன்னமானார்

கர்த்தருடைய கரத்திலிருந்து பிரமாணம் (சட்டம்) புறப்பட்டது.

இது தான் இந்த வசனம் கூறும் செய்தியாகும், இதனை திருத்தி பிஜே அவர்கள் கூறியுள்ளார், சரி இதன் விளைவுகள் என்ன? மேற்கொண்டு படிக்கவும்.

3) பிஜே அவர்களின் இணைவைத்தல் என்ற பாவம்

பிஜே அவர்கள் தங்கள் குர்-ஆன் மொழியாக்கத்தில் சொல்லியபடி இணைவைத்தல் என்பது மிகப்பெரிய குற்றமாகும். இந்த பாவத்தை அவரே செய்துள்ளார் என்று நினைக்கும் போது வேதனையாகத் தான் உள்ளது. இவர் இதனை "தெரிந்து" செய்தாரோ அல்லது "தெரியாமல் அறியாமையில்" செய்தாரோ நமக்குத் தெரியாது, ஆனால் சுட்டிக்காட்டும் போது திருந்திவிடவேண்டும்.

இஸ்லாம் பற்றி நன்கு தெரிந்த கிறிஸ்தவர்கள் "யேகோவா தேவனும், அல்லாஹ்வும் ஒருவரே" என்று சொல்லமாட்டார்கள்", ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும், பைபிளின் தேவனும் அல்லாஹ்வும் ஒருவரே என்று நம்புகின்றனர், அப்படித்தான் குர்-ஆன் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. ஆனால், யேகோவா தேவனை அல்லாஹ்வோடு ஒப்பிடக்கூடாது என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது, அதாவது அந்நிய தெய்வங்களை எனக்கு சமமாக்கக்கூடாது என்று தேவன் கூறியுள்ளார்.

"கர்த்தர்" தான் "அல்லாஹ்" என்று பிஜே நம்புகிறார். (இப்படி கிறிஸ்தவர்கள் நம்ப மாட்டார்கள், அப்படி நம்பினால் இது யேகோவா தேவனுக்கு விரோதமான பாவமாகும், அல்லாஹ் என்ற ஒரு பழங்குடி கற்பனையை, உயிருள்ள தேவனுக்கு ஈடாக கற்பனைக் கூட செய்து பார்க்கமாட்டார்கள் கிறிஸ்தவர்கள்)

பீஜே அவர்கள் இயேசு இறைமகனா என்ற புத்தகத்தின் முன்னுரையில் என்ன எழுதியுள்ளார் என்பதை ஒரு முறை படிக்கலாம்.

முன்னுரை

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல கர்த்தரின் திருநாமத்தால்...

இயேசு அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும் ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டும் மக்கள் வணங்க வேண்டும் என்று போதனை செய்த சீர்திருத்த வாதிகளில் ஒருவர் என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

ஆக, "கர்த்தர்" என்றால் "அல்லாஹ்" என்று பிஜே அவர்கள் நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட நம்பிக்கையுள்ள பீஜே அவர்கள் ஏன், "அல்லாஹ்வைப் பற்றி" சொல்லிய இடத்தில் முஹம்மதுவை நுழைத்து "இணை வைத்தல்" என்ற பாவத்தை செய்துள்ளார்.

ஒருவேளை மேலே நான் எழுதியவைகளை பீஜே அவர்கள் எழுதுவதாக இருந்திருந்தால் கீழ்கண்டவாறு எழுதியிருப்பார்:

அல்லாஹ் எழுந்தருளினார்

அல்லாஹ் உதயமானார்

அல்லாஹ் பிரகாசித்தார்

அல்லாஹ் பிரசன்னமானார்

அல்லாஹ்வின் கரத்திலிருந்து பிரமாணம் (சட்டம்) புறப்பட்டது.

ஆக, பீஜே அவர்கள் தன் அறியாமையினால், அல்லாஹ்விற்கு சொல்லப்பட்ட வசனத்தில், "அல்லாஹ் பிரகாசித்தார்… அல்லாஹ் பிரசன்னமானார்" என்று இருப்பதை, "முஹம்மதுவிற்கு சம்மந்தப்படுத்தி" கூறியுள்ளார். இது இறைவனுக்கு கோபத்தை உண்டாக்கும் பாவமில்லையா? இதை பீஜே போன்ற மார்க்க அறிவாளிகள் செய்யலாமா?

பீஜே அவர்கள் செய்த பிழையை நான் சுட்டிக்காட்டியுள்ளேன், அவர் இறைவனிடம் இந்த இணைவைத்தல் என்ற பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு தன் தவறை உணர்ந்தால் சரி, இல்லையானால் முடிவு என்ன என்று அவருக்குத் தெரியும். பிஜே அவர்கள் வசனத்தை உருப்படியாக படித்து, யாரைப் பற்றி இவ்வசனம் பேசுகின்றது, என்ன பேசுகின்றது என்று சிறிது சிந்தித்து இருந்திருந்தால், இப்படி நடந்திருக்காது. உண்மையை தெரிந்துக்கொண்டும், ஏதோ கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சுமத்தவேண்டும், நாங்களும் பதில் சொல்கின்றோம் என்று நினைத்துவிட்டு எழுதினால், முடிவு மிகவும் சோகமாக இருக்கும். பீஜே அவர்களே நீங்கள் செய்த குற்றம் மிகப்பெரிய குற்றமாகும், வாதம் புரிவதும், விவாதம் புரிவதும் நல்லது தான், அதற்காக நீங்கள் சொன்ன கோட்பாட்டையே தகர்த்து விட்டு, வாதம் புரிவது சரியானது அல்ல.

இனியாவது ஒழுங்காக பைபிள் வசனங்களை படித்து விளக்கம் அளியுங்கள். கிறிஸ்தவர்களுக்கு பதில் அளிக்கிறேன் என்றுச் சொல்லி, உங்கள் மீட்பை நழுவ விட்டுவிடப்போகிறீரகள் பீஜே அவர்களே...

முடிவுரை:

சரி, சீனாய், சேயீர் மற்றும் பாரான் என்பவைகள் பற்றி என்ன? என்று சிலர் கேட்கக்கூடும். இதற்கு விளக்கம் அவசியமே இல்லை, காரணம் அவர் முன்வைத்த அந்த ஒரு வசனத்தின் அடிப்படையையே அவர் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை, இறைவனைப் பற்றி சொல்லப்பட்ட விபரத்தை அவர் முஹம்மதுவைப் பற்றி என்றுச் சொல்லி தவறு செய்துவிட்டார். எனவே, அதே வசனத்திற்கு அவர் கொடுத்த இதர விளக்கம் தவறானதாக மாறிவிட்டது.

தற்போதைய கட்டுரையிலேயே பிஜே முன்வைத்த ஆதாரங்கள் பொய்யானவைகள் என்று தெரிந்துவிட்டது, இனியும் இன்னொரு பதில் வேண்டுமா? இருந்தாலும், இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில், "பாரான்", பற்றிய விளக்கத்தை நாம் காண்போம்.

இரண்டாம் பாகம் வருவதற்குள்ளாக இந்த என் பதில் பற்றி அவர் கருத்து என்ன என்று தன் தளத்தில் (ஆன்லைன் பிஜே தளத்திலோ அல்லது ஜூசஸ் இன்வைட்ஸ் என்ற தளத்திலோ) எழுதுவாரா? இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள விளக்கத்தை ஏற்பதாக இருந்தால் தன் தளத்திலிருந்து மேலே குறிப்பிட்ட வசனத்தை நீக்குவாரா? அல்லது தனிமையில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை கேட்டு பெற்றுவிட்டு மறுபடியும், பழைய குருடி கதவை திறடி என்பதற்கு ஏற்ப பழைய நிலையை மாற்றிக்கொள்ளாமல் இருப்பாரா… யானறியேன் பராபரமே!

மறுக்கமுடியுமா? இதை மறைக்கமுடியுமா? என்று கேள்வி கேட்டு இருந்தீர்கள், ஆனால், நாங்கள் எதையும் மறைக்காமல் உங்கள் வாதத்தை மறுத்துவிட்டோம். இனி மறுத்து மறைப்பதோ அல்லது மறைக்காமல் மறுப்பதோ உங்கள் கையில் உள்ளது.

எசேக்கியேல் 3:17-19

17 மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. 18 சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். 19 நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.




--
11/06/2010 12:36:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது




--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

மிஷால் அல்காதி அவர்களுக்கு மறுப்பு: எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?

 

மிஷால் அல்காதி அவர்களுக்கு மறுப்பு: எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?

நம்முடைய "எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?" என்ற கட்டுரைக்கு அல்காதி என்பவர் பதில் கொடுத்துள்ளார், அவரது மறுப்பிற்கு நம் பதிலை இக்கட்டுரையில் காண்போம்.

மிஷால் அல் காதி என்பவர் நம்முடைய "எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?" என்ற கட்டுரைக்கு பதில் கூறியுள்ளார்.

மரியம் சூரா (19):17ம் வசனத்தை நபி அவரக்ளும்(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) மற்றும் இதர நபித்தோழர்களாகிய இபின் மஸூத், சுலைமான் இபின் முரா போன்றவர்களும் விளக்கியுள்ளார்கள். உலக மக்கள் அனைவரும் எப்படி நரக நெருப்பின் மீது அமைக்கப்பட்ட "சிரத்" என்ற பாதையின் மீதாக சொர்க்கத்தை அடைகிறார்கள் என்பதை இவ்வசனம் விளக்குகிறது. அதிகமாக பயபக்தியுடையவர்கள் மட்டுமே அந்த பாதையை கடக்கமுடியும். நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் சுலைமான் இபின் முரா கூறியதாவது: "அதிகமாக பக்தியுடையவர்களை இந்த பாதையின் பயணம் எந்த பாதிப்பையும் உண்டாக்காது, இப்ராஹிம் நபியவர்களை எப்படி இறைவன் நெருப்பிலிருந்து காப்பாற்றினானோ அதுபோல, இவர்களையும் காப்பாற்றுவான். ஒரு நபரின் பக்திக்கு ஏற்றாற்போல, உவ்வுலகில் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்திற்கு ஏற்றாற்போல, இந்த பாதையின் பயணம் இருக்கும் இருக்கும். சிலர் மின்னல் வேகத்தில் கடப்பார்கள், சிலர் புயலைப்போல வேகமாக கடப்பார்கள், சிலர் ஓடுவார்கள், சிலர் நடப்பார்கள் சிலர் தவழ்ந்துச் செல்வார்கள். இந்த விவரங்கள் அனைத்தும் நபியவர்களின் அனேக ஹதீஸ்களில் உள்ளது.

திரு அல்காதி அவர்கள் கூறியதை நான் மறுபடியும் சொல்லட்டும், அதாவது அவரின் கூற்றுப்படி, நல்ல பக்தியுள்ள இஸ்லாமியர்கள் நரகத்திற்குள் நுழையமாட்டார்களாம், ஆனால், ஒரு பாலம் போல இருக்கும் ஒரு பாதையின் வழியாக கடந்துச் செல்வார்களாம். இந்த பயணமானது அவர்களை பாதிக்காது என்று கூறுகிறார்.

திரு அல்காதி அவர்கள், சில ஹதீஸ்கள் மீது ஆதாரப்பட்டு இந்த விளக்கத்தைக் கூறுகிறார் (ஆனால், அவர் அந்த ஹதீஸ்களின் எண்களைத் தரவில்லை, அப்படி கொடுத்து இருந்தால், நாம் சரி பார்த்து இருந்திருப்போம்). ஆனால், ஹதீஸ்களை விட குர்‍ஆன் மிகவும் தெளிவாக கீழ்கண்டவாறு கூறுகிறது.

மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.
(குர்‍ஆன் 19:71-72)

There will be no one of you who will not enter it (Hell). This was an inevitable decree of your Lord. Afterwards he may save some of the pious, God-fearing Muslims out of the burning fire.
-- Sura 19:71-72

ஆர்பெரி என்பவர் இன்னும் துள்ளியமாக பொருள் வரும்படி மொழியாக்கம் செய்துள்ளார், இதனை கீழே படிக்கவும்:

No one of you there is, but he shall go down to it; That for thy Lord is a thing decreed, determined. Then We shall deliver those that were god-fearing; and the evildoers We shall leave there, hobbling on their knees.
-- Sura 19:71-72

மேலே கண்ட இரண்டு ஆங்கில மொழியாக்கங்களும் சூரா 19:71ம் வசனம் "நரகத்திற்குள் நுழைகிறார்கள்" அல்லது "நரகத்திற்குள் செல்கிறார்கள்" என்றும் கூறுகிறது, இது நரகத்தின் மீது எந்த ஆபத்தும் இல்லாமல் கடப்பது பற்றி கூறவில்லை. இந்த வசனத்தை திரு அல் காதி அவர்கள் கூர்ந்து படித்து இருப்பார்களா என்று எனக்கு சந்தேகம் வருகிறது.

இந்த குர்‍ஆனின் முரண்பாடு பற்றி இஸ்லாமியர்கள் கொடுத்த இதர‌ பதில்களையும், அதற்கான எங்கள் மறுப்புக்களையும் கீழே காணலாம்.

1) மோயிஜ் அம்ஜத் அவர்களின் கட்டுரையும் எங்கள் பதிலும்

2) எல்லா இஸ்லாமியரக்ளும் நரகத்திற்குச் செல்வார்களா? பாகம் 1, பாகம் 2

3) Karim in Hell

ஆங்கில மூலம்: Response to Mishaal Al-Kadhi

இதர குர்‍ஆன் முரண்பாடுகள்


© Answering Islam, 1999 - 2010. All rights reserved.



 




--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

தன்னை நாயெனக் கருதும் பசுக்கன்று

 

பிரிட்டனில், பசுக்கன்று ஒன்று தன்னை நாய் எனக் கருதி நாயைப் போல் நடந்துகொள்கிறது. நாயைப் போன்று அது குரைக்கவும் செய்கிறது.

 

4 மாத வயதான இந்த பசுக்கன்றை அது பிறந்தவுடன்  பண்ணையாளர் பென் பொவர்மன் என்பவர் தனது வீட்டிற்கு கொண்டுவந்து அதை இரு நாய்களுடன் வளர்க்க ஆரம்பித்தார்.

ஹென்றி எனப் பெயரிடப்பட்ட இப்பசுக்கன்று, மந்தைக் கூட்டத்திலிருந்து விலகி, வீட்டில் தன்னுடன் வளர்க்கப்பட்ட  நாய்களுடன்  விளையாடுவதற்கே விரும்புகின்றது.

பென் பொவர்மனின் வீட்டின் அருகிலுள்ள குடிசையில்  இப்பசுக்கன்று உறங்குவதுடன் ஒவ்வொரு காலைவேளையும் சமையலறையின் ஜன்னல் வழியே தனது தலையை விட்டு டோஸ்டரிலிருந்து உணவுப்பொருட்களை களவாடி உண்கிறதாம்.

அக்கன்றானது பென் மற்றும் அவரது மனைவி கெத்தரின் (42) ஆகிய இருவராலும் டோர்ஸெட் பிராந்தியத்திலுள்ள 450 ஏக்கர் நிலத்திலுள்ள பண்ணையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதனது தாய் அதற்கு ஒழுங்கான முறையில் பாலூட்டாமையே இதற்குக் காரணம்.

தற்போது அக்கன்று அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கமாக இருப்பதுடன் தன்னை நாயென  நினைத்துக்கொண்டு வீட்டிலுள்ள நாய்களுடன் விளையாடுகின்றது.

தற்போது அந்தக் கன்று குறித்த வீடியோ, இணையத்தளங்களிலும் வெளியாகி பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர்.

இது தொடர்பாக பென் குறிப்பிடுகையில் 'அது உண்மையில் தன்னை நாயென நினைத்துக்கொண்டுள்ளது. காரணம் அது எங்கள் ஏனைய இரு நாய்களுடன் வளர்ந்தது. அது நாய்களை துரத்தி விளையாடுகின்றது.

அப்பசுக்கன்று எனது பின்னால் வந்து நின்று அதனது தலையை எனது கால்களுக்கிடைய போட்டு என்னைத் தூக்குவது அதற்கு மிகவும் பிடிக்கும்.

எமது பிள்ளைகள் ஹென்றி மீது மிகுந்த அன்புக்கொண்டவர்கள். எங்களால் அதனை விற்கமுடியாது.  எனவே அது இன்னும்  10 அல்லது 15 வருடங்களுக்கு எம்முடன் இருக்கமுடியும்' எனத் தெரிவித்துள்ளார்.



























source:pathivu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP